Jump to content

Tamil Women's Conference - Thaimai


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


    • Saturday, June 9, 2012
    • 9:30am until 6:00pm

    [*]

    The Canadian Tamil Women’s Development Organization (CTWDO) will be hosting a Tamil Women’s Conference on Saturday June 9th, 2012 from 9.30 am – 6 pm at the Town of Markham Civic Centre located at 101 Town Centre Boulevard, Markham, Ontario.

    The conference will include a discussion – open to public – on how to help the rehabilitation process of disabled women and children, as well as displaced civilians in the war-torn and affected areas in Tamil Eelam.

    We cordially invite you to our conference. This conference is open to all those who wish to participate in the discussion. For more information, please email ctwdo87@gmail.com or call 647-825-7661

    We hope to see you there.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Saturday

9:30am until 6:00pm

கனடாத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு வழங்கும் 'தாய்மை'

-தாயகப் பெண்கள் குழந்தைகள் நலன்பேண் காப்போம்-

இது முற்றுமுழுதாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் வலுவிழந்தோரை பராமரிக்க புலம் பெயர் தமிழ்ப் பெண்கள் ஆற்றவேண்டிய கடமைப்பாடு பற்றிய கலந்துரையாடலும் கருத்தரங்கும்.

இடம்: மார்க்கம் நகரசபை மண்டபம்:இல 101 Town Centre Blvd, Markham, Warden & Hy7 சந்திப்பில் அமைந்திருக்கும் Markham Town Centre இல் யூன் 9ம் திகதி சனிக்கிழமை காலை 9:30-மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை நடைபெறும்.

தாயகத்து உறவுகளுக்கு காலமறிந்து கைகொடுக்கவும் உங்கள் கருத்துக்களையும் பரிமாற்க்கொள்ளவும் அனைவரையும் குறிப்பாக கனடா வாழ் எம் தமிழ்ப் பெண்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் கனடாத் தமிழ் பெண்கள் அமைப்பினர்.

_______________________________________________________

The Canadian Tamil Women’s Development Organization (CTWDO) will be hosting a Tamil Women’s Conference on Saturday June 9th, 2012 from 9.30 am – 6 pm at the Town of Markham Civic Centre located at 101 Town Centre Boulevard, Markham, Ontario.

The conference will include a discussion – open to public – on how to help the rehabilitation process of disabled women and children, as well as displaced civilians in the war-torn and affected areas in Tamil Eelam.

We cordially invite you to our conference. This conference is open to all those who wish to participate in the discussion. For more information, please email ctwdo87@gmail.com or call 647-825-7661

We hope to see you there.

நன்றி முகநூல்

https://www.facebook.com/events/362706163795463/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆரோக்கியமானதும், அவசரமானதுமான ஒரு முன்னெடுப்பு, இது!

கனடாப் பெண்கள் அமைப்பின், முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்களும், நல்லாசிகளும்!

இணைப்புக்கு நன்றிகள், சகோதரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள் அக்கா..தாயகத்து உறவுகளுக்கு பிரியோசனமான நிகழ்வாக அமையும் நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சி வெற்றிகர‌மாக நட‌க்கவும்,தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் இவ் அமைப்பினால் உதவி கிடைக்கவும் எனது மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாப் பெண்கள் அமைப்பின், முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்களும், நல்லாசிகளும்!

இணைப்புக்கு நன்றிகள், சகோதரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் நிகழ்வுக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்று முழுதாக பெண்கள் முன்வந்து தாயகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறார்கள், பெண்கள், வலுவிழந்தோர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உதவிகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை காலமும் தனித்தனியாக பலராலும் பலவழிகளாலும் மேற்கொள்ளப்பட்ட உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு கனெடிய தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பினரால் உத்தியோக பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. திறந்த கருத்தரங்காக இன்றைய தினம் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்ட கருத்தாளர்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். மிகவும் நம்பிக்கை ஒளியூட்டுவதாக ஆரம்பித்திருக்கும் இவ்வமைப்பு மிகவும் பலம் வாய்ந்ததாக வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை இணைக்க முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை.

மூடு மந்திரமாக இல்லாமல் வெளிப்படையாக ஒரு உதவி அமைப்பு அதுவும் கூட்டாக தனியே பெண்கள் மட்டும் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது...கனடாவைப் போல மற்றைய நாடுகளிலும் இந்த "தாய்மை" அமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மை நிகழ்வின் புகைப்படங்களை வேறு ஓர இடத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது..அதனையும் விட இந்த நிகழ்வானது தாயகத்தில் அல்லல்படும் மக்களுக்கு பிரியோசனப்படும் நிகழ்வாக அமைந்திருப்பது என்பது இன்னும் இரட்டிப்பு சந்தோசத்தை தருகிறது..எல்லோரும் ஒரு மித்து நின்று இயன்றளவு ஒற்றுமையாக ஒத்துளைத்து நின்று பாதிக்கபட்ட மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்ய வேணும் என்பதே என் விருப்பம்..மற்றும் நாடுகளி;ல் உள்ள பெண்களின் அமைப்புக்களும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை முன் எடுத்து செல்லவேணும்..

Link to comment
Share on other sites

எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாத் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் முயற்சிக்கு வாழ்த்துகள்

உலகமெங்கும் பரவி ஈழ்த்து அவலங்களுக்கு உதவட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னது தனியே பெண்களுக்கான அமைப்பு என்று சகாறா அக்கா சொன்னார் ஆனால் இதில் ஆண்களும் இருக்கிறார்கள்...மண்டபத்தில் கூட்டத்தையே காணவில்லை குறிப்பாக பெண்களைக் காணவில்லை :unsure:

பி;கு;அந்த இரு குழந்தைகளும் சகாறா அக்காவின் குழந்தைகளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

இது தாயகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் உறவுகளுக்கு உதவுவதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒரு கருத்தரங்கு, இது ஆரம்ப நிகழ்வு இங்கெல்லாம் கிலுக்கிட்டான்களுக்கு இடமில்லை அதனால் அதிகமான மக்கள் வருகை தரமாட்டார்கள். அத்தோடு ஆக்க பூர்வமான கருத்துப்பகிர்வுகளுக்கும் பொறுப்பேற்பதற்கும் இன்றைய நிலையில் பலரை உடனடியாக ஆரம்ப நிகழ்வில் எதிர் பார்க்க முடியாது. முகநூலிலும் வானொலிகளிலும் சவடால் அடிப்பவர்கள் அத்தோடு சரி செயல்வடிவம் கொடுப்பது என்பது எல்லோராலும் இயலாது.. அதுவும் இன்றைய காலத்தில் தட்டிக்கழித்து எட்டப்போவதற்கு ஆயிரம் சாட்டுக்களை சொல்லக்கூடிய நிலையில் இப்படி ஒரு அமைப்பை உருவாக்குவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல... கனெடியச் சட்டங்களுக்கு அமைய முன்னெடுக்கப்படும் இடத்தில் கனெடிய அரசியலில் வெற்றியாளர்களாக இருக்கும் நம்மவர்களின் உதவிகளையும் பெறவேண்டும் அல்லவா... அவர்கள் ஆண்களாக இருந்தால் எப்படி தவிர்க்க முடியும்?.... அத்தோடு இவ்விடயத்தில் ஆர்வமுள்ளவர்கள் வந்து கருத்துத் தெரிவிக்கும் ஒரு பொது நிலையை கொண்டிருந்தது இந்த ஆரம்பம். கடந்த காலங்களில் 2009 இற்கு முன்னான காலங்களில் மகளிர் சக்தியை கனெடிய தமிழ் மக்கள் நன்கே உணர்ந்திருந்தார்கள் பின்னரான காலப்பகுதி மிகுந்த குழப்பங்களுக்கும், பிரிவினைகளுக்கும், தாயக உறவுகளுடனான நேரடித் தொடர்பின்மையாலும் மகளிர் சக்தியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் இப்போது குழப்பங்கள் , பிரிவினைகள் கடந்த மகளிராக தாயக உறவுகளைத் தாங்கும் தாய்களாக மகளிரின் "கனெடியத் தமிழ்பெண்கள் மேம்பாட்டு அமைப்பு" கருக் கொண்டுள்ளது. ஆரம்ப நிலையில் எண்ணிக்கையால் கணக்கிட்டுப்பார்க்காமல் எவ்வகையில் மீண்டும் எழுந்தார்கள் என்று எண்ணமிட்டுப் பாருங்கள். ஒன்று மட்டும் நேற்றைய நிகழ்வில் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. பிரிவினைகளையும் குழப்பங்களையும் பிள்ளைகளுக்குள் நிரந்தரமாக இருக்காதபடி தாய் ஒருத்தியால்தான் அகற்ற முடியும். கடந்த ஓரிரு வருடங்கள் ஏற்பட்ட கருத்துப் பிறழ்வுகளும், குழப்பச்சூழல்களும் நீடிக்காதபடி தாய்மையால் பலர் இணைந்து விட்டார்கள். நிட்சயமாக ஒன்று பத்தாகும் பத்து நூறாகும். அதை ஆக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இருக்கிறது. இங்கு விலகி நின்று குழப்ப எவராலும் முடியாது. அம்மா என்பவள் குழப்பவாதியாகவோ, தத்தாரியாகவோ ஆனதாய் எந்தச் சரித்திரத்திலும் இல்லை. நிட்சயமாக இந்தப் பெண்கள் அமைப்பு மிகப் பாரிய பங்கை புலம் பெயர்ந்த தேசத்திலும், தாயகத்திலும் உருவாக்கும். அப்படியொரு உருவாக்கத்திற்கு நானும் நீங்களும் எல்லோரும் முழுமையான ஆதரவுக் கரங்களைக் கொடுப்போம்.

முக்கிய குறிப்பு

ஏற்கனவே தனிப்பட்ட முறையில் பல உதவிகளை இப்பெண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா தகவலுக்கு மண்டபம் வெறுமையாக உள்ளது என்ட ஆதங்கத்தில் கேட்டேன்

Link to comment
Share on other sites

இங்கே உள்ள பெண்கள் அமைப்புக்கள் பற்றி எனக்கு பெருத்த கேள்வி இருக்கின்றது. "பெண்கள் அமைப்பு" என்பதன் பொருள் சரியாக விளங்கப்பட்டிருக்கிறதா?

"பெண்கள் அமைப்பு" என்னும் பெயரில் அமைப்பின் மகளிர் பிரிவாகவே செயற்பட்டு வருகின்றார்கள். சுயமாக இயங்க முடிவதில்லை. சுயமாக இயங்கும் திறன்படைத்தவர்களும் கவனமாக தவிர்க்கப்படுகின்றார்கள்.

ஒரு நகரத்தின் ஆண் பிரதிநிதி அந்த நகரத்திற்கான பெண்கள் அமைப்பின் உறுப்பினரை முன்மொழிகின்றார். ஆண்கள் அந்த அமைப்பின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கின்றார்கள்.

ஒரு விடுதலையை நோக்கிய சுயமான கலகக் குரலை குறிக்கின்ற "பெண்கள் அமைப்பு" என்னும் பெயர் கேலிக்கூத்தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கனடாவின் தாய்மை அமைப்பாவது சுயமாக இயங்கட்டும்

Link to comment
Share on other sites

'தாய்மை' யின் சேவை சிறப்புற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உள்ள பெண்கள் அமைப்புக்கள் பற்றி எனக்கு பெருத்த கேள்வி இருக்கின்றது. "பெண்கள் அமைப்பு" என்பதன் பொருள் சரியாக விளங்கப்பட்டிருக்கிறதா?

"பெண்கள் அமைப்பு" என்னும் பெயரில் அமைப்பின் மகளிர் பிரிவாகவே செயற்பட்டு வருகின்றார்கள். சுயமாக இயங்க முடிவதில்லை. சுயமாக இயங்கும் திறன்படைத்தவர்களும் கவனமாக தவிர்க்கப்படுகின்றார்கள்.

ஒரு நகரத்தின் ஆண் பிரதிநிதி அந்த நகரத்திற்கான பெண்கள் அமைப்பின் உறுப்பினரை முன்மொழிகின்றார். ஆண்கள் அந்த அமைப்பின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கின்றார்கள்.

ஒரு விடுதலையை நோக்கிய சுயமான கலகக் குரலை குறிக்கின்ற "பெண்கள் அமைப்பு" என்னும் பெயர் கேலிக்கூத்தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கனடாவின் தாய் அமைப்பாவது சுயமாக இயங்கட்டும்

சபேசன்,

உங்களைப் போன்றே பலருக்கும் இது குறித்த சந்தேகம் இருக்கிறது. எனக்கும் இருந்தது ஆனால் இப்போது இல்லை

கடந்த காலங்களில் பெண்களின் திரள்வான சக்தியை வரம்புகளுக்குள் உள்ளடக்கி, அச்சக்தியை எல்லா முனைகளுக்கும் பாய்ச்ச வேண்டிய தேவை இருந்தது. அதன் நிமித்தம் செயற்படவேண்டிய நிலைப்பாடு பெண்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது முற்றிலும் மாறான சூழலில் பெண்களின் திரள்வான சக்தியை ஒரு திசையை நோக்கியதாகவே அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு புலம் பெயர்ந்த தமிழ்பெண்கள் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. பெண்கள் சமூகத்திற்கே நிமிர்வைக் கொடுத்த பெண்கள் ஆதரவற்றவர்களாகவும், அலங்கோலப்பட்டவர்களாகவும் சிங்களத்தால் திட்டமிட்டு அடக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு எங்கள் சமூகமும் பல இடங்களில் பலவான்களுக்கு முன்னால் நிற்கும் முடமாக, மௌனித்ததாக, உடந்தையாக நிற்க நிர்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டத்தினை உலகில் எத்தனை அதர்மங்கள் இருக்கின்றனவோ அத்தனை அதர்மங்களைக் கொண்டும் நசுக்கிப் போட இந்த உலகமும் உடந்தையாகவே இருந்துவிட்டது. தீர்ப்புகளைத் தரக்கூடிய நீதி எந்த வல்லமைகளிடமும் இல்லை. நசுக்கப்பட்டவர்கள் நசுக்கப்பட்டவர்களாகவே இருக்கவேண்டும் என்னும் இனவாத எண்ணங்களுக்கு எம்மினம் இரையாகக்கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் பாதிக்கப்படக்கூடாது. நாங்கள் தாங்க வேண்டும்.

இவர்கள் சுயமாக இயங்கும் சக்தி படைத்தவர்கள் என்பது நான் அறிந்த ஒன்று. கடந்த காலங்கள் போலல்லாது இவர்கள் தெளிவானவர்களாக இருப்பார்கள் என்று நம்புவோம். அநேகமாக கூடுமானவரைக்கும் இவர்களுடன் பேசியதில் யாரும் இவர்களிடம் எத்தீர்மானத்தையும் புகுத்த முடியாது என்பதை உணர முடிகிறது.

அப்படியே யாரேனும் இவர்களுடைய சக்தியை எழுந்த மானத்தில் தம்முடைய அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்த எத்தனித்தால் அதற்கு முதல் எதிரி கண்டிப்பாக நானாகத்தான் இருப்பேன் என்பதை இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மை நிறுவனம் தாய் நிறுவனமாக உரு பெற்று இருக்கிறது என்று நினைக்கிறன்..அனைவரது கருத்துக்களையும் உள் வாங்கிக் கொண்டு எவ்வளவு திறம்பட செயல் பட முடியுமோ அந்தளவுக்கு திறமையாக செயல் பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,

தாய்மை நிறுவனம் தாய் நிறுவனம் என்ற கருத்திற்கு இந்த இடத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இத்தகைய சொற்பிரயோகங்கள் வீணே பலரின் வெறுப்பிற்கு உட்படுத்தப்பட்டுவிடக்கூடியது. ஏனெனில் இந்தச் சொல் பல சூட்சுமப் பொருட்களை வெளிப்படுத்தக்கூடியது. ஆதலால் இத்தகைய சொற்பிரயோகத்தை நாம் உச்சரித்து அதனால் ஒன்றுபட்ட செயற்பாட்டில் இறங்கியிருக்கும் மகளிரின் பணிகளைக் கடினப்படுத்திவிடக்கூடாது.

இந்தத் திரியில் ரதி, சபேசன் போன்றோர் கேட்ட கேள்விகளை அவர்கள் பார்க்கும் வண்ணம் அவர்களுக்கு இந்த இணைப்பை அனுப்பியுள்ளேன். இந்தத்திரியில் அவர்களைச் செம்மைப்படுத்தும் கருத்துக்களைப்பதிந்தால் அது அவர்களைச் சென்றடையும்.

உங்கள் பார்வையில் உங்கள் கருத்துக்களை அவர்களை நோக்கிய உங்கள் எதிர்பார்ப்புகளை முன் வையுங்கள்.

Link to comment
Share on other sites

உங்கள் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும். :)

இதில் எந்த படத்தில் சகாறா அக்கா இருக்கிறார் என்று யாராவது சொல்லுங்கோப்பா.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் முயற்சிற்கு வாழ்த்துக்களும்

நன்றிகளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்காவில் பெண் தாதிகள் சங்கத்திற்கு புத்த பிக்கு தலைவராக இருந்தது போல் இருக்கிறது இந்த கூத்து

உலகத் தமிழர் இயக்கம் மீண்டும் தலை எடுக்க மகளிரை கொண்டு தொடங்கும் புதிய நாடகம் தான் இது.

தங்களின் சொந்த லாபத்திற்காக பெண்கள் செண்டிமெண்டை பாவித்து கஜானாவை மீண்டும் நிரப்பும் முயற்சியே இது . அமைப்பின் பெயரிலேயே இது தெளிவாக தெரிகிறது.

மூன்று வருடங்களுக்குள் கஜானா காலியாகி விட்டது போலும். இந்த நாட்டிலாவது பெண்களை மனிதர்களாக வாழ விடுங்களேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.