Jump to content

Tamil Women's Conference - Thaimai


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


    • Saturday, June 9, 2012
    • 9:30am until 6:00pm

    [*]

    The Canadian Tamil Women’s Development Organization (CTWDO) will be hosting a Tamil Women’s Conference on Saturday June 9th, 2012 from 9.30 am – 6 pm at the Town of Markham Civic Centre located at 101 Town Centre Boulevard, Markham, Ontario.

    The conference will include a discussion – open to public – on how to help the rehabilitation process of disabled women and children, as well as displaced civilians in the war-torn and affected areas in Tamil Eelam.

    We cordially invite you to our conference. This conference is open to all those who wish to participate in the discussion. For more information, please email ctwdo87@gmail.com or call 647-825-7661

    We hope to see you there.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Saturday

9:30am until 6:00pm

கனடாத் தமிழ்ப் பெண்கள் அமைப்பு வழங்கும் 'தாய்மை'

-தாயகப் பெண்கள் குழந்தைகள் நலன்பேண் காப்போம்-

இது முற்றுமுழுதாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் வலுவிழந்தோரை பராமரிக்க புலம் பெயர் தமிழ்ப் பெண்கள் ஆற்றவேண்டிய கடமைப்பாடு பற்றிய கலந்துரையாடலும் கருத்தரங்கும்.

இடம்: மார்க்கம் நகரசபை மண்டபம்:இல 101 Town Centre Blvd, Markham, Warden & Hy7 சந்திப்பில் அமைந்திருக்கும் Markham Town Centre இல் யூன் 9ம் திகதி சனிக்கிழமை காலை 9:30-மணியில் இருந்து மாலை 6:00 மணி வரை நடைபெறும்.

தாயகத்து உறவுகளுக்கு காலமறிந்து கைகொடுக்கவும் உங்கள் கருத்துக்களையும் பரிமாற்க்கொள்ளவும் அனைவரையும் குறிப்பாக கனடா வாழ் எம் தமிழ்ப் பெண்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் கனடாத் தமிழ் பெண்கள் அமைப்பினர்.

_______________________________________________________

The Canadian Tamil Women’s Development Organization (CTWDO) will be hosting a Tamil Women’s Conference on Saturday June 9th, 2012 from 9.30 am – 6 pm at the Town of Markham Civic Centre located at 101 Town Centre Boulevard, Markham, Ontario.

The conference will include a discussion – open to public – on how to help the rehabilitation process of disabled women and children, as well as displaced civilians in the war-torn and affected areas in Tamil Eelam.

We cordially invite you to our conference. This conference is open to all those who wish to participate in the discussion. For more information, please email ctwdo87@gmail.com or call 647-825-7661

We hope to see you there.

நன்றி முகநூல்

https://www.facebook.com/events/362706163795463/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆரோக்கியமானதும், அவசரமானதுமான ஒரு முன்னெடுப்பு, இது!

கனடாப் பெண்கள் அமைப்பின், முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்களும், நல்லாசிகளும்!

இணைப்புக்கு நன்றிகள், சகோதரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சிக்கு நல் வாழ்த்துக்கள் அக்கா..தாயகத்து உறவுகளுக்கு பிரியோசனமான நிகழ்வாக அமையும் நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சி வெற்றிகர‌மாக நட‌க்கவும்,தாயகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்,குழந்தைகளுக்கும் இவ் அமைப்பினால் உதவி கிடைக்கவும் எனது மனப் பூர்வமான வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாப் பெண்கள் அமைப்பின், முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்களும், நல்லாசிகளும்!

இணைப்புக்கு நன்றிகள், சகோதரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்களும் நிகழ்வுக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்று முழுதாக பெண்கள் முன்வந்து தாயகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறார்கள், பெண்கள், வலுவிழந்தோர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உதவிகளை மேற்கொண்டுள்ளனர். இதுவரை காலமும் தனித்தனியாக பலராலும் பலவழிகளாலும் மேற்கொள்ளப்பட்ட உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டு கனெடிய தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பினரால் உத்தியோக பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. திறந்த கருத்தரங்காக இன்றைய தினம் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்ட கருத்தாளர்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். மிகவும் நம்பிக்கை ஒளியூட்டுவதாக ஆரம்பித்திருக்கும் இவ்வமைப்பு மிகவும் பலம் வாய்ந்ததாக வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களை இணைக்க முடியவில்லை ஏன் என்று தெரியவில்லை.

மூடு மந்திரமாக இல்லாமல் வெளிப்படையாக ஒரு உதவி அமைப்பு அதுவும் கூட்டாக தனியே பெண்கள் மட்டும் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது...கனடாவைப் போல மற்றைய நாடுகளிலும் இந்த "தாய்மை" அமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு'

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மை நிகழ்வின் புகைப்படங்களை வேறு ஓர இடத்தில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது..அதனையும் விட இந்த நிகழ்வானது தாயகத்தில் அல்லல்படும் மக்களுக்கு பிரியோசனப்படும் நிகழ்வாக அமைந்திருப்பது என்பது இன்னும் இரட்டிப்பு சந்தோசத்தை தருகிறது..எல்லோரும் ஒரு மித்து நின்று இயன்றளவு ஒற்றுமையாக ஒத்துளைத்து நின்று பாதிக்கபட்ட மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்ய வேணும் என்பதே என் விருப்பம்..மற்றும் நாடுகளி;ல் உள்ள பெண்களின் அமைப்புக்களும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை முன் எடுத்து செல்லவேணும்..

Link to comment
Share on other sites

எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாத் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் முயற்சிக்கு வாழ்த்துகள்

உலகமெங்கும் பரவி ஈழ்த்து அவலங்களுக்கு உதவட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னது தனியே பெண்களுக்கான அமைப்பு என்று சகாறா அக்கா சொன்னார் ஆனால் இதில் ஆண்களும் இருக்கிறார்கள்...மண்டபத்தில் கூட்டத்தையே காணவில்லை குறிப்பாக பெண்களைக் காணவில்லை :unsure:

பி;கு;அந்த இரு குழந்தைகளும் சகாறா அக்காவின் குழந்தைகளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

இது தாயகத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் உறவுகளுக்கு உதவுவதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒரு கருத்தரங்கு, இது ஆரம்ப நிகழ்வு இங்கெல்லாம் கிலுக்கிட்டான்களுக்கு இடமில்லை அதனால் அதிகமான மக்கள் வருகை தரமாட்டார்கள். அத்தோடு ஆக்க பூர்வமான கருத்துப்பகிர்வுகளுக்கும் பொறுப்பேற்பதற்கும் இன்றைய நிலையில் பலரை உடனடியாக ஆரம்ப நிகழ்வில் எதிர் பார்க்க முடியாது. முகநூலிலும் வானொலிகளிலும் சவடால் அடிப்பவர்கள் அத்தோடு சரி செயல்வடிவம் கொடுப்பது என்பது எல்லோராலும் இயலாது.. அதுவும் இன்றைய காலத்தில் தட்டிக்கழித்து எட்டப்போவதற்கு ஆயிரம் சாட்டுக்களை சொல்லக்கூடிய நிலையில் இப்படி ஒரு அமைப்பை உருவாக்குவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல... கனெடியச் சட்டங்களுக்கு அமைய முன்னெடுக்கப்படும் இடத்தில் கனெடிய அரசியலில் வெற்றியாளர்களாக இருக்கும் நம்மவர்களின் உதவிகளையும் பெறவேண்டும் அல்லவா... அவர்கள் ஆண்களாக இருந்தால் எப்படி தவிர்க்க முடியும்?.... அத்தோடு இவ்விடயத்தில் ஆர்வமுள்ளவர்கள் வந்து கருத்துத் தெரிவிக்கும் ஒரு பொது நிலையை கொண்டிருந்தது இந்த ஆரம்பம். கடந்த காலங்களில் 2009 இற்கு முன்னான காலங்களில் மகளிர் சக்தியை கனெடிய தமிழ் மக்கள் நன்கே உணர்ந்திருந்தார்கள் பின்னரான காலப்பகுதி மிகுந்த குழப்பங்களுக்கும், பிரிவினைகளுக்கும், தாயக உறவுகளுடனான நேரடித் தொடர்பின்மையாலும் மகளிர் சக்தியில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் இப்போது குழப்பங்கள் , பிரிவினைகள் கடந்த மகளிராக தாயக உறவுகளைத் தாங்கும் தாய்களாக மகளிரின் "கனெடியத் தமிழ்பெண்கள் மேம்பாட்டு அமைப்பு" கருக் கொண்டுள்ளது. ஆரம்ப நிலையில் எண்ணிக்கையால் கணக்கிட்டுப்பார்க்காமல் எவ்வகையில் மீண்டும் எழுந்தார்கள் என்று எண்ணமிட்டுப் பாருங்கள். ஒன்று மட்டும் நேற்றைய நிகழ்வில் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. பிரிவினைகளையும் குழப்பங்களையும் பிள்ளைகளுக்குள் நிரந்தரமாக இருக்காதபடி தாய் ஒருத்தியால்தான் அகற்ற முடியும். கடந்த ஓரிரு வருடங்கள் ஏற்பட்ட கருத்துப் பிறழ்வுகளும், குழப்பச்சூழல்களும் நீடிக்காதபடி தாய்மையால் பலர் இணைந்து விட்டார்கள். நிட்சயமாக ஒன்று பத்தாகும் பத்து நூறாகும். அதை ஆக்கக்கூடிய சக்தி பெண்களிடம் இருக்கிறது. இங்கு விலகி நின்று குழப்ப எவராலும் முடியாது. அம்மா என்பவள் குழப்பவாதியாகவோ, தத்தாரியாகவோ ஆனதாய் எந்தச் சரித்திரத்திலும் இல்லை. நிட்சயமாக இந்தப் பெண்கள் அமைப்பு மிகப் பாரிய பங்கை புலம் பெயர்ந்த தேசத்திலும், தாயகத்திலும் உருவாக்கும். அப்படியொரு உருவாக்கத்திற்கு நானும் நீங்களும் எல்லோரும் முழுமையான ஆதரவுக் கரங்களைக் கொடுப்போம்.

முக்கிய குறிப்பு

ஏற்கனவே தனிப்பட்ட முறையில் பல உதவிகளை இப்பெண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அக்கா தகவலுக்கு மண்டபம் வெறுமையாக உள்ளது என்ட ஆதங்கத்தில் கேட்டேன்

Link to comment
Share on other sites

இங்கே உள்ள பெண்கள் அமைப்புக்கள் பற்றி எனக்கு பெருத்த கேள்வி இருக்கின்றது. "பெண்கள் அமைப்பு" என்பதன் பொருள் சரியாக விளங்கப்பட்டிருக்கிறதா?

"பெண்கள் அமைப்பு" என்னும் பெயரில் அமைப்பின் மகளிர் பிரிவாகவே செயற்பட்டு வருகின்றார்கள். சுயமாக இயங்க முடிவதில்லை. சுயமாக இயங்கும் திறன்படைத்தவர்களும் கவனமாக தவிர்க்கப்படுகின்றார்கள்.

ஒரு நகரத்தின் ஆண் பிரதிநிதி அந்த நகரத்திற்கான பெண்கள் அமைப்பின் உறுப்பினரை முன்மொழிகின்றார். ஆண்கள் அந்த அமைப்பின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கின்றார்கள்.

ஒரு விடுதலையை நோக்கிய சுயமான கலகக் குரலை குறிக்கின்ற "பெண்கள் அமைப்பு" என்னும் பெயர் கேலிக்கூத்தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கனடாவின் தாய்மை அமைப்பாவது சுயமாக இயங்கட்டும்

Link to comment
Share on other sites

'தாய்மை' யின் சேவை சிறப்புற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே உள்ள பெண்கள் அமைப்புக்கள் பற்றி எனக்கு பெருத்த கேள்வி இருக்கின்றது. "பெண்கள் அமைப்பு" என்பதன் பொருள் சரியாக விளங்கப்பட்டிருக்கிறதா?

"பெண்கள் அமைப்பு" என்னும் பெயரில் அமைப்பின் மகளிர் பிரிவாகவே செயற்பட்டு வருகின்றார்கள். சுயமாக இயங்க முடிவதில்லை. சுயமாக இயங்கும் திறன்படைத்தவர்களும் கவனமாக தவிர்க்கப்படுகின்றார்கள்.

ஒரு நகரத்தின் ஆண் பிரதிநிதி அந்த நகரத்திற்கான பெண்கள் அமைப்பின் உறுப்பினரை முன்மொழிகின்றார். ஆண்கள் அந்த அமைப்பின் நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கின்றார்கள்.

ஒரு விடுதலையை நோக்கிய சுயமான கலகக் குரலை குறிக்கின்ற "பெண்கள் அமைப்பு" என்னும் பெயர் கேலிக்கூத்தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கனடாவின் தாய் அமைப்பாவது சுயமாக இயங்கட்டும்

சபேசன்,

உங்களைப் போன்றே பலருக்கும் இது குறித்த சந்தேகம் இருக்கிறது. எனக்கும் இருந்தது ஆனால் இப்போது இல்லை

கடந்த காலங்களில் பெண்களின் திரள்வான சக்தியை வரம்புகளுக்குள் உள்ளடக்கி, அச்சக்தியை எல்லா முனைகளுக்கும் பாய்ச்ச வேண்டிய தேவை இருந்தது. அதன் நிமித்தம் செயற்படவேண்டிய நிலைப்பாடு பெண்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது முற்றிலும் மாறான சூழலில் பெண்களின் திரள்வான சக்தியை ஒரு திசையை நோக்கியதாகவே அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு புலம் பெயர்ந்த தமிழ்பெண்கள் சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது. பெண்கள் சமூகத்திற்கே நிமிர்வைக் கொடுத்த பெண்கள் ஆதரவற்றவர்களாகவும், அலங்கோலப்பட்டவர்களாகவும் சிங்களத்தால் திட்டமிட்டு அடக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு எங்கள் சமூகமும் பல இடங்களில் பலவான்களுக்கு முன்னால் நிற்கும் முடமாக, மௌனித்ததாக, உடந்தையாக நிற்க நிர்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டத்தினை உலகில் எத்தனை அதர்மங்கள் இருக்கின்றனவோ அத்தனை அதர்மங்களைக் கொண்டும் நசுக்கிப் போட இந்த உலகமும் உடந்தையாகவே இருந்துவிட்டது. தீர்ப்புகளைத் தரக்கூடிய நீதி எந்த வல்லமைகளிடமும் இல்லை. நசுக்கப்பட்டவர்கள் நசுக்கப்பட்டவர்களாகவே இருக்கவேண்டும் என்னும் இனவாத எண்ணங்களுக்கு எம்மினம் இரையாகக்கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் பாதிக்கப்படக்கூடாது. நாங்கள் தாங்க வேண்டும்.

இவர்கள் சுயமாக இயங்கும் சக்தி படைத்தவர்கள் என்பது நான் அறிந்த ஒன்று. கடந்த காலங்கள் போலல்லாது இவர்கள் தெளிவானவர்களாக இருப்பார்கள் என்று நம்புவோம். அநேகமாக கூடுமானவரைக்கும் இவர்களுடன் பேசியதில் யாரும் இவர்களிடம் எத்தீர்மானத்தையும் புகுத்த முடியாது என்பதை உணர முடிகிறது.

அப்படியே யாரேனும் இவர்களுடைய சக்தியை எழுந்த மானத்தில் தம்முடைய அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்த எத்தனித்தால் அதற்கு முதல் எதிரி கண்டிப்பாக நானாகத்தான் இருப்பேன் என்பதை இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மை நிறுவனம் தாய் நிறுவனமாக உரு பெற்று இருக்கிறது என்று நினைக்கிறன்..அனைவரது கருத்துக்களையும் உள் வாங்கிக் கொண்டு எவ்வளவு திறம்பட செயல் பட முடியுமோ அந்தளவுக்கு திறமையாக செயல் பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி,

தாய்மை நிறுவனம் தாய் நிறுவனம் என்ற கருத்திற்கு இந்த இடத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இத்தகைய சொற்பிரயோகங்கள் வீணே பலரின் வெறுப்பிற்கு உட்படுத்தப்பட்டுவிடக்கூடியது. ஏனெனில் இந்தச் சொல் பல சூட்சுமப் பொருட்களை வெளிப்படுத்தக்கூடியது. ஆதலால் இத்தகைய சொற்பிரயோகத்தை நாம் உச்சரித்து அதனால் ஒன்றுபட்ட செயற்பாட்டில் இறங்கியிருக்கும் மகளிரின் பணிகளைக் கடினப்படுத்திவிடக்கூடாது.

இந்தத் திரியில் ரதி, சபேசன் போன்றோர் கேட்ட கேள்விகளை அவர்கள் பார்க்கும் வண்ணம் அவர்களுக்கு இந்த இணைப்பை அனுப்பியுள்ளேன். இந்தத்திரியில் அவர்களைச் செம்மைப்படுத்தும் கருத்துக்களைப்பதிந்தால் அது அவர்களைச் சென்றடையும்.

உங்கள் பார்வையில் உங்கள் கருத்துக்களை அவர்களை நோக்கிய உங்கள் எதிர்பார்ப்புகளை முன் வையுங்கள்.

Link to comment
Share on other sites

உங்கள் முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும். :)

இதில் எந்த படத்தில் சகாறா அக்கா இருக்கிறார் என்று யாராவது சொல்லுங்கோப்பா.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் முயற்சிற்கு வாழ்த்துக்களும்

நன்றிகளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்காவில் பெண் தாதிகள் சங்கத்திற்கு புத்த பிக்கு தலைவராக இருந்தது போல் இருக்கிறது இந்த கூத்து

உலகத் தமிழர் இயக்கம் மீண்டும் தலை எடுக்க மகளிரை கொண்டு தொடங்கும் புதிய நாடகம் தான் இது.

தங்களின் சொந்த லாபத்திற்காக பெண்கள் செண்டிமெண்டை பாவித்து கஜானாவை மீண்டும் நிரப்பும் முயற்சியே இது . அமைப்பின் பெயரிலேயே இது தெளிவாக தெரிகிறது.

மூன்று வருடங்களுக்குள் கஜானா காலியாகி விட்டது போலும். இந்த நாட்டிலாவது பெண்களை மனிதர்களாக வாழ விடுங்களேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • உங்களைத் தவிர இங்கு யாருக்குமே விளக்கமில்லை உறவே! 74=52, இது யாருக்கு விளங்கும்😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.