Jump to content

ஒரு திருட்டு, பல கொலைகள்; முறிந்த சவூதி அரேபியா, தாய்லாந்து ராஜாங்க உறவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணைவளம் மிக்க சவூதி அரேபியா, அரசராலும் அவரது சொந்த பந்தங்களாலும் ஆளப்படும் ஒரு முடியரசு நாடு. அரச அமைச்சர்களும், முக்கிய அதிகாரிகளும் அரச குடும்பத்தினை சேர்ந்தவர்கள்.

பல பெண்களை மணக்கும் அரச குடும்ப ஆண்மக்களால் உருவாகப் பட்ட கணக்கு இல்லா வாரிசுகளினால், பெரும்பாலும் அமைச்சர்கள் எல்லோரும் இளவரசர்கள் தான்.

சவூதியின் மொத்த செல்வமும் இந்த அரச குடும்ப, மற்றும் இளவரசர்கள் வசம் தான் சிக்கி உள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போல தாய்லாந்திலிருந்தும் மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இவ்வாறாக இளவரசர் ஒருவரின் வீட்டுக்கு 23 -24 வருடங்களின் முன்னர் சுத்தம் செய்யும் பணியாளர் ஆக வந்து சேர்ந்தார் ஒரு தாய்லாந்து கிராமவாசி.

அவரைப் போல் கிட்டத் தட்ட 250,000 தாய்லாந்துக்காரர்கள் அப்போது சவுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

இரு வருடங்கள் கடந்து விட்டன. விடுமுறைக்கு தாயகத்துக்கு செல்வதற்கு அனுமதியும், கடவுச் சீட்டினையும் கேட்டு இருந்தார் தாய்லாந்துக்காரர்.

குடும்பத்துடன் விடுமுறைக்கு ஐரோப்பாவிற்கு சென்று வந்தபின் அவர் செல்லலாம் என சொல்லி விட்டார் இளவரசர்.

அவரது படுக்கை அறையில் ஒரு இருப்புப் பெட்டி இருந்தது. அதன் கதவு பூட்டிக் கொள்ளும் 'சங்கேத இலக்கம்' ஒழுங்காக வேலை செய்யாததால், அங்கிருந்த நகைகள் எல்லாம் வேறு இடத்திற்கு நகர்த்தப் பட்டு அந்தப் பெட்டி திருத்துனர் வரவுக்காக காத்திருந்தது.

திருத்துனர், குடும்பத்தின் விடுமுறைக் காலத்தில் வருவதற்கு ஏற்பாடு ஆகி இருந்தது.

திருத்துனர் வரும் போது, படுக்கை அறையில், குளியல் அறையினை சுத்தம் செய்து கொண்டிருந்தார் தாய்லாந்துக்காரர். அங்கிருந்த படியே, கதவு இடுக்கு வழியே திருத்துனர் உபயோகப் படுத்திய 'Master Code' இணை மிகக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டார் கில்லாடியான அவர்.

நடக்கப் போகும் மிக மிகப் பெரிய விபரீதத்துக்கும் மூன்று சுழி போட்டுவைத்தார்!!!

தொடரும்

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எக்கச்சக்கமான நேரத்தில, கதைகளுக்குத் தொடரும் போடுறது, சில பேருக்கு, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்! - புதிய ஆய்வறிக்கை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி திரட்டியிலும்..... தொடருமா?

ரொம்ப.... கடுப்பேத்துறீங்க, நாதமுனி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தமிழ்சிறி,

குறிப்பு வைத்துக் கொள்வதில்லை.

வாசித்த, நல்ல, சுவாரசியமான, விடயங்கள், நினைவில் இருந்து வருவதால் அவற்றினைத் தருகின்றேன். வேலை இடையே நேரம் கிடைக்கும் போது, டைப் செய்வதால் 'தொடரும்' வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வசதியை பொறுத்து, எழுதுங்கள் நாதமுனி.

மிச்சம் என்ன நடந்திருக்கும், என்று அறிய, அடக்கமாட்டாத ஆவலாக உள்ளது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் குடும்பமும் விடுமுறை முடிந்து திரும்பியது. வெளியே வங்கியில் இருந்த நகைகள் பெட்டிக்கு திரும்பி வந்தன.

திரும்பி வந்ததை கவனமாக உறுதி செய்து கொண்டார் தாய்லாந்துக்காரர். அவரது பெயர் Kriangkrai Techamong.

வசதியாக 'தேக்கா' என அழைப்போம்.

மிகக் கவனமாக திட்டமிட்டார், தேக்கா. தனது தாயக பயணத்தினை சிறிது காலம் தள்ளி வைத்திருப்பதாக தெரிவித்துக் கொண்டார். தொடர் கவனிப்பின் மூலம் இரும்புப் பெட்டி அடிக்கடி திறக்கப் படுவதில்லை என்பதனையும் முக்கிய குடும்ப நிகழ்வுகள் வந்தால் மட்டுமே பெட்டியில் உள்ள ஒரு சில நகைகள் அணியப் படுவதனையும் கவனித்துக் கொண்டார்.

கரணம் தப்பினால் கத்தியினால் மரணம் என தெரிந்திருந்தாலும், அவரது சிந்தனை முழுவதும் பெட்டியின் உள்ளே உள்ளதை ஆட்டையை போடுவது குறித்து தான் இருந்தது.

அதே வேளை ஏனைய பணியாளர்களுக்கும் சந்தேகம் வராதவாறு கவனமாக பார்த்துக் கொண்டார்.

தேக்கா, எதிர் பார்த்து இருந்த தருணமும் வந்தது. குடும்பத்தினர் சில நாள் பயணமாக பக்கத்துக்கு ஊருக்கு கிளம்பிச் சென்றனர்.

வழக்கம் போல படுக்கை அறையினை சுத்தம் செய்ய vacuum cleaner உடன் சென்றார் தேக்கா.

திட்டமிட்டவாறே vacum clearnar றினை, மறந்தது போல் அங்கேயே வைத்து விட்டு வெளியே வந்து விட்டார். சிறிய விடயம் ஆகையினால் யாரும் சந்தேகிக்கவில்லை.

அன்று மாலை தோட்டத்தில் வேலையில் இருந்தார் தேக்கா.

இரவும் வந்தது. ஆனால் அன்று வானத்தில் நிலவு இல்லை.

தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

கரணம் தப்பினால் கத்தியினால் மரணம் என தெரிந்திருந்தாலும், அவரது சிந்தனை முழுவதும் பெட்டியின் உள்ளே உள்ளதை ஆட்டையை போடுவது குறித்து தான் இருந்தது.

------

தேக்கா ஆட்டையப் போட்டாரா?

அல்லது சவூதி அரேபியாக்காரர் தேக்காவை, உப்புக் கண்டம் போட்டார்களா? :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தலைப்பினைப் பாருங்கள், தமிழ்சிறி

Link to comment
Share on other sites

:rolleyes: :rolleyes: :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான வெக்கை காலங்களில், சூரிய மறைவிற்கு பின்னர் முன்னிரவு நேரங்களில் தோட்ட வேலை செய்வது வழக்கம் ஆகையால், இன்றும் தனது திட்டப்படி வேலை, ம்... வேலை செய்வது போல் ஏதோ செய்து கொண்டிருந்தார் தேக்கா.

சரியான தருணம் வந்ததும், சுற்று முற்றும் பார்த்து தன்னை யாரும் கவனிக்கப் போவதில்லை என உறுதி செய்து கொண்டு சத்த மில்லாமல் ஆனால் வேகமாக நகர்ந்தார்.

மழை நீர் குழாய் வழியாக வேகமாக ஏறி இரண்டாவது மாடியினை அடைந்து, ஏற்கனவே உள்ளாக திட்டமிட்டு பூட்டாமல் வைத்திருந்த யன்னல் வழியாக நுழைந்து படுக்கை அறையினுள் புகுந்து கொண்டார்.

பரிச்சயமான இடமாகையினால் வேகமாக இயங்கினார். கதவினை உள்ளாக தாளிட்டுக் கொண்டார்.

இரும்புப் பெட்டியினைத் திறந்து உள்ளே இருந்த அனைத்தையும், vacuum cleaner உள்ளே இருந்த bag உள் போட்டு நிரப்பிய பின்னர், தாளிட்ட கதவினைத் திறந்து விட்டு, பின்னர் வந்த வழியே வேகமாக வெளியேறி விட்டார்.

மறுநாள் vacuum cleaner தேடுவது போல் ஏனையோருக்கு பாசாங்கு செய்து, பின்னர் படுக்கை அறைக்கு சென்று அதனை எடுத்து வந்தார்.

மறக்காமல் 'dust மற்றும் குப்பையினால்' நிறைந்திருந்த bag கினை மாத்திக் கொண்டு சாதாரணமாக வேலைகளைத் தொடர்ந்தார்.

ஊருக்கு அனுப்ப பல பொருட்களை வாங்கி இருந்தார் தேக்கா. அவற்றில் ஒன்று ஒரு பெரிய fridge.

Vacuum Bag, ஏனைய பொருட்களுடன் fridge உள்ளே வைத்து கட்டப்பட்டு, shipping agents வசம் கை அளிக்கப்பட்டு விட்டது.

சரக்கு கப்பல் ஏறியதனை உறுதி செய்து கொண்டு, சில நாட்களின் பின் தேக்கா ஊருக்கு கிளம்பி விட்டார்.

விமானம் வானம் ஏறியதும், இது வரை எந்த பிரச்னையும் இல்லாது காத்த, புத்த பகவானுக்கு நன்றி சொல்லிக் கொண்டார் தேக்கா.

ஆனால் வரப் போகும் விபரீதங்கள் எல்லாம் பௌத்த தேசத்தில் தான் என்பது புத்தரின் சித்தமோ?

புத்தரின் தேசத்தில் பார்க்கலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரையுமே காணவில்லை.

ரொம்ப அறுக்கிறேனோ?

ம்..ம்.. ஆவது போடுங்களேன் கண்ணுகளா!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய உறுப்பினர் ஆகையினால் அரிச்சுவடியில் ஆரம்பித்தேன்.

நிருவாகம் இந்த பகுதியில் போட்டு விட்டது என நினைக்கின்றேன். அவர்கள் தான் மாறிப் போட வேண்டுமா அல்லது நான் மாற்ற முடியுமா என தெரிய வில்லை.

Link to comment
Share on other sites

நிருவாகம் இந்த பகுதியில் போட்டு விட்டது என நினைக்கின்றேன். அவர்கள் தான் மாறிப் போட வேண்டுமா அல்லது நான் மாற்ற முடியுமா என தெரிய வில்லை.

கதை கதையாம் பகுதிக்கு நகர்த்தி விட்டாச்சு...இனி மிச்சம் உங்கள் கையில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்னர், மனத் தவிப்பு, பயம் நீங்கி, ஒரு வித நிம்மதியுடன் கண்ணயர்ந்தார் தேக்கா.

அதேவேளை 35,000 அடிகள் கீழே, vacuum cleaner bag ன் உள்ளே அன்றைய திகதிக்கு $20 million மதிப்புடைய பெருந்திரவியம் கொண்ட கொள்கலனைக் தாங்கிய அந்த பாரிய கப்பல் அரபிய கடலில் இருந்து இந்து சமுத்திரத்தினுள் நுழைந்து கொண்டிருந்தது.

அந்த பெருந்திரவியதினுள்ளே, இளவரசர் பைசால் பாத் அப்துல் அஸிஸ் ஆசையாக வாங்கிய கிடைத்தற்கரிய ஒரு Blue Sapphire' வைரமும் இருந்தது.

பின்னர் நடந்த விபரீதங்களை வைத்து சபிக்கப்பட்ட வைரம் ('The Cursed Diamond') என பெயர் பெற்ற, அந்த வைரம் தாய்லாந்து நோக்கிய தனது பல உயிர் குடிக்கப் போகும் கடல் வழிப் பயணத்தில் இருந்தது.

வடக்கு தாய்லாந்தினைச் சேர்ந்த மலைப் பிரதேசமான பரே எனும் ஊரினைச் சேர்ந்த தேக்கா, பெரும் புத்திசாலி அல்ல. அசட்டுத் துணிச்சல் கொண்டதோர் சந்தர்ப்ப வாத திருடன்.

இரும்புப் பெட்டி திருத்தும் போது, குளியல் அறையில் இருந்திருக்காவிடில் இந்த திருட்டு நடந்து இருக்க முடியாது.

ஊர் வந்து இருந்த பணத்தில் மகிழ்வுடன் குடும்பத்தாருடன் சந்தோசமாக கழித்தார் தேக்கா.

கப்பல் வரட்டும், ஊரிலேயே மிகப் பெரிய வீடு கட்டலாம் என சொல்லிக் கொண்டிருந்தார்.

கப்பலும் வந்தது. அதில் இருந்த fridge ம் கொள்ளைத் திரவியத்துடன் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தது.

முக்கியமான விடயம் என்னவெனில் தனது கொள்ளையின் மதிப்பு என்ன என அவன் ஒரு போதும் சிந்தித்ததில்லை. ஒரு சாதாரண கிராம வாசிக்கு இருக்கக் கூடிய அற்பமான தொடர்பு வசதிகளே தேக்காவுக்கும் இருந்தன.

இன்னும் தெளிவாக சொல்வதாயின், தலைநகர் Bankok இல் இருக்கக் கூடிய, அவரது திரவியத்துக்கு நல்ல விலை கொடுக்கக் கூடிய உயர் தொடர்பு அவருக்கு இருக்கவில்லை.

இதனால், உள்ளூரில் இருந்த நகை கடையில் முதலில் ஒரு சிறு நகையினை அடைவு வைத்தார் தேக்கா.

மேலும் ஒன்று, இரண்டு விலைக்கு வந்த போது, அடி மாட்டு விலைக்கு வாங்கிய சந்தி (Santi Sithanakan) எனும் அந்த நகை கடைக்காரர் சீக்கிரமே, ஒரு பெரிய மீன் சிக்கி இருப்பதனைப் புரிந்து கொண்டார்.

சந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நடையும்,கதை தொடரும் விதமும் நன்றாக உள்ளது தொருங்கள்

Link to comment
Share on other sites

நாதமுனி சஸ்பென்ஸ் தாங்கேலாம ,ஒரியினல தேடிப்பிட்டிச்சு வாசிச்சன் ஒரு திரில்லர் படமா எடுக்காலம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆ...ம்ம்ம்ம்ம்.....தொடருங்கோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி சஸ்பென்ஸ் தாங்கேலாம ,ஒரியினல தேடிப்பிட்டிச்சு வாசிச்சன் ஒரு திரில்லர் படமா எடுக்காலம் !!!

நாதமுனி விரைவாக வந்து கதையை எழுதி முடிக்கவும் அல்லது எல்லோரும் போய் மூலக் கதையை வாசித்து விடுவார்கள் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.