Jump to content

வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் !


Recommended Posts

வைகோவிற்கு பகிரங்க கேள்விகள் !

அரசியல் அரங்கில் தாங்கள் தற்போது எடுத்து வைக்கும் விதண்டா வாதங்கள் தாங்கள் இன்னும் ஒரு தலைவராக பக்குவப்படவில்லையோ என எண்ண வைக்கிறது.

உங்களது கட்சியும், கூட்டணியும் வெற்றி பெறவேண்டும் என்பதில் எந்த தவறுமில்லை. அது இயல்பானதே. சமீப காலங்களாக மேடைகளில் உண்மை நிலையை மறைக்கும் விதமாக முழங்குகிறீர்கள். அதன் தொடர்ச்சியாக தான் இந்த கேள்விகள்.

//வல்லரசான அமெரிக்காவில் கூட இயற்கைப் பேரழிவு பாதித்தபோது நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியவில்லை. ஆறு மாத காலத்திற்குப் பின்பே சுனாமி நிவாரணப் பணிகளை அவர்களால் தீவிரப்படுத்த முடிந்தது.

ஆனால் தமிழ்நாட்டில் சுனாமி பாதித்த பகுதிகளில் மறு நாளே நிவாரணப் பணிகளை முதல்வர் தீவிரப்படுத்தி எந்த ஒரு முதல் அமைச்சரும் செய்ய முடியாத சிறப்பான ஆட்சியை செய்துள்ளார்.// என உங்களது மனம் கவர்ந்த தலைவியை குளிர்விக்க முழக்கமிடுகிறீர்கள்.

நீங்கள் அடிக்கடி மனசாட்சி என முழக்கமிடுவீர்களே அந்த மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இது உண்மையா? சுனாமி நேரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றில் கலந்துகொண்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.

மூன்று நாட்களுக்கும் மேலாக அழுகிய மனித உடல்கள் தமிழக கடற்கரைகளில் அவலமாக கிடந்து நாய்கள் கடித்து குதறியது. அரசின் மீட்பு பணிகள் கூட 3 நாட்களுக்கு பிறகு தான் நடந்தன என்பது கண்கூடான உண்மை. அதற்கு முன்னரே மக்களும் அவர்களது தலைவர்களுமே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதும் நாடறிந்தது. மதத்தலைவர்கள் முதல் மக்கள் வரை கண்ணீர் விட்டு கதறிய வேளை அரசு என்ன செய்தது?

அ.தி.மு.க கரைவேட்டிகளிடம் அதிகாரத்தை கொடுத்து அரசு அதிகாரிகளை கட்டுப்பாட்டில் வைத்து தனக்கு வேண்டியவர்களுக்கு 500 ரூபாய் நோட்டுகள், அரிசி, பருப்பு என வழங்கி அரசியல் பார்த்தது அதிமுக அரசு. பாதிக்கப்பட்ட மக்கள் உடனடி உதவிக்காக பல கிலோமீட்டர் தொலைவு அலைக்கழிக்கப்பட்டனர். மன்னர் மாளிகையில் பிறந்த முதலமைச்சர் செல்வி ஹெலிகாப்டரில் பறந்தவாறு ஆறுதல் (!) வழங்கினார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல அரசியல் தலைவர்கள் நேரடியாக தரைவழியாக ஆறுதல் சொல்ல வந்ததை பார்த்து தங்கத்தாரகை (!) பாதிக்கப்பட்ட மக்களை தேர்வு செய்த மையங்களில் பார்த்தார்.

அறிவிக்கப்பட்ட மறுவாழ்வு திட்டங்களை முறைப்படி செயல்படுத்த மக்கள் அமைப்புகள், அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழுக்களை உருவாக்க பலர் அறிவுறுத்தினர். அதை சற்றும் பொருட்படுத்தாமல் மறுபடியும் அ.தி.மு.க கரைவேட்டிகள் சொன்ன ஆட்களுக்குத் தான் நிவாரணம். கணிசமான தொகையை அ.தி.மு.க கட்சியின் கரைவேட்டிகள் கொள்ளையிட்டனர். அதன் பங்கு போயஸ் தோட்டம் முதல் மன்னார்குடி கும்பல் வரை போனதும் மறைக்கமுடியாத உண்மை.

கடற்கரை பகுதிகளின் நீண்டகால திட்டமிடலுக்காக தமிழ்நாட்டிற்கு மட்டும் உலக வங்கி கொடுத்த தொகை $434 மில்லியன். தமிழ்நாட்டு, பாண்டிச்சேரி வாழ் கடற்கரை மக்களின் கல்வி மற்றும் பயிற்சிக்காக $2.5 மில்லியன் வழங்கியது. ஆசிய வளர்ச்சி வங்கி (உலக வங்கி கிளை) $143.75 மில்லியன் தொகை மறுவாழ்வு திட்டங்களுக்காக போக்குவரத்து கட்டுமானங்கள், கிராம சீரமைப்பு, வாழ்வாதாரங்களை மீட்கும் திட்டங்களுக்கு தமிழ்நாட்டிற்கு வழங்கியது. ஜப்பான் நிதியிலிருந்து $2.5 மில்லியன் தொகை வழங்கப்பட்டது. இது தவிர மத்திய அரசு நிதி மற்ரும் பொதுமக்கள் கொடுத்த நிதி ஏராளம். இந்த பணத்தின் கணக்கு அல்லது அது சார்ந்த திட்டங்கள் எங்கே? வெளிப்படையான தன்மையே ஒரு நல்லாட்சிக்கு அடிப்படை (ட்ரன்ச்பரன்cய் இச் தெ பசிச் ஒf கோட் கொவெர்னன்cஎ). அதனால் இந்த தகவல்களை உங்களால் ஆதாரத்துடன் விளக்கமுடியுமா? வீரச்சவடால்களை கேட்டு தமிழ்மக்கள் வாழ்வு புண்ணாகியது மட்டுமே மிச்சம்.

( கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமியால் கோடிமுனை பகுதியில் பாதிக்கப்பட்ட மகக்ளுக்காக குளச்சல் களிமார் பகுதியில் உப்பளத்தை நிரப்பி வீடுகட்ட சரிசெய்யப்படுகிற நிலம். படம் எடுக்கப்பட்டது டிசம்பர் 29, 2005ல். இதில் வைகோ சொன்ன படி அரசு வேகமான நடவடிக்கை எடுத்து கட்டிய வீடு எங்கே? வீடு கட்ட பணம் கொடுப்பதும் அரசு அல்ல, காரித்தாஸ் மற்றும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள்)

மக்கள் அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும் திரட்டிய உள்நாட்டு வெளி நாட்டு நிதியில் தான் அதிகமான புனரமைப்புகள் நடந்தன. இன்றும் நடைபெறுகிறது. மக்கள் இன்னும் தகரம், ஓலைக்கிற்று கொட்டகைகளிலும், வெலையில்லாமலும், மனதிடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வாடும் அவலம் இன்றும் கடற்கரை கிராமங்களில் நிதர்சனம். கடந்த டிசம்பரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் ஆய்வு செய்ததில் நான் கண்ட உண்மையும் இதுவே. மக்களின் கண்ணீரை வார்த்தை பசப்புரைகளால் மறைத்துவிட முனைகிறீர்களா?

மக்கள் பசியில், வறுமையில், வேலையில்லாமல், பேரழிவுகளால் செத்துக்கொண்டிருக்கையில் ஹெலிகாப்டரில், குளிர்சாதன மேடைகளில் வலம் வருவது தான் முதல்வரின் சிக்கனமும், மக்கள் பணம் மீதுள்ள அக்கறையா? ரோம் பற்றி எரிந்தவேளை பிடில் வாசித்த சார் மன்னன் வரலாறு நீங்கள் மறந்திருக்கலாம்.

மக்கள் வாழ்விற்கு செல்ல வேண்டிய வரிப்பணம், உலக வங்கி கடன், மத்திய அரசு நிதி முதல்வர் செல்லும் வழியெங்கும் அலங்காரம் செய்யவும், அவருக்கு பிடித்தமான பச்சை நிறத்தில் கழிப்பறை கட்டவும் என வீணடிப்பது தான் உங்கள் பார்வையில் நல்லாட்சியா?

அய்யாவும், அண்ணாவும் தந்த வழியில் நடப்பதாக முழங்கும் நீங்கள் எங்காவது அய்யாவோ, அண்ணாவோ, மக்கள் தலைவர் காமராசரோ இப்படிப்பட்டவைகளை ஏற்றதாக படித்ததோ பார்த்ததோ உண்டா?

மக்கள் வாழ்வு மீது அக்கறை இருந்தால் கிராமப்புற வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், போக்குவரத்து இவற்றில் கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை புள்ளிவிவர கணக்குடன் வெளியிடுங்களேன். அதில் தமிழகம் வாங்கிய கடன் தொகை, நிவாரண நிதி, மத்திய அரசு நிதி இவற்றையும் அது செலவிடப்பட்ட விதத்தையும் வெளியிடும் தைரியமும், நேர்மையும், யாருக்கும் வணங்காத தன்மையும் உங்களுக்கு உண்டா?

மக்களை ஏமாற்ற உணர்ச்சிகளை வீரச்சவடால்களில் குழைத்து சொல்லெறியும் உங்களுக்கு அரசியலில் நீடிக்க, கட்சியை தக்க வைக்க இதெல்லாம் தேவைப்படுகிறது. என்ன செய்வது, தமிழ்மக்களும் உணர்ச்சி வசப்படும் மக்கள், உங்கள் பேச்சில் மயங்கி விடலாம் என கனவு காண்கிறீர்கள். கனவு பலிக்குமா தேர்தல் பதில் சொல்லும்.

கேள்விகள் தொடரும்...

நன்றி - திரு/ http://aalamaram.blogspot.com/2006/04/blog...og-post_08.html

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

இதையெல்லாம் விட முக்கியமான ஒரு கேள்வி தற்போது அம்மையார் இராமநாதபுரம் பிரச்சாரத்திற்கு வந்த போது அங்கிருந்த ஈழத்தமிழ் அகதிகளெல்லாம் 2 நாட்கள் அகதிமுகாமில் முடக்கப்பட்டு அடையாள அட்டைகள் எல்லாம் பறிக்கப்பட்டனவே. இதைப்பற்றி வை.கோ ஒன்றுமே சொல்லவில்லையே. இவரா இந்த அம்மையார் தலைமையில் ஈழத்தமிழர்களுக்காக பாடுபடப் போகின்றார் :roll: :D

Link to comment
Share on other sites

வைகோ பதில் சொல்லுவது இருக்கட்டும்... இங்கே வைகோவுக்கு ஜால்ரா தட்டுபவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

Link to comment
Share on other sites

பாடா சட்டத்தின் கீழ் கைதாகி, வேலூர் சிறையில் அடைபட்டிருந்தபோது எழுதிய நூலை வைகோ ஒருமுறை வாசித்துப் பார்த்து, அதில் உள்ள கருத்துக்கள், பேச்சுக்கள் உண்மை என்றால் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. அகில இந்தியச் செயலாளர் ராஜா அதை வெளியிட்டார். பின்னர் கட்சி சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் ராஜா பேசுகையில்,

தமிழக பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது, வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயத் துறையின் பங்களிப்பு 18 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு ஜெயலலிதா என்ன பதில் கூறப் போகிறார்?

வைகோவுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். வேலூர் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த காலத்தில் எழுதிய நூலை (ஜெயலலிதா ஆட்சியின் அடக்குமுறை ஆட்சி குறித்த நூல்) அவரே ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.

அதில் எழுதப்பட்டுள்ள பேச்சுக்கள், கருத்துக்கள் உண்மையானவை என்றால், தமிழக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன் என்று பெருமை அடித்த வைகோ இப்போது அந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவோடு சேர்ந்துள்ளார்.

இப்போது சேது சமுத்திர திட்டத்தை வைகோ ஆதரிக்கிறாரா? இல்லையா? இந்த விஷயத்தில் நெஞ்சைத் தொட்டு உண்மை பேச வைகோ தயாராக இருக்கிறாரா?

பொடாவில் இருந்து வெளியே வந்தாலும் வைகோ இப்போதும் ஒரு கைதி தான். அவர் இப்போது சூழ்நிலைக் கைதியாக ஜெயலலிதாவின் பிடியில் சிக்கியிருக்கிறார்.

தங்கள் கூட்டணிக்கு பலமில்லை என்பதால் தான் தயாநிதி மாறனை விமர்சித்து தனி மனித தாக்குதலில் இறங்கியிருக்கிறார் வைகோ. அதற்கு வைகோவுக்கு கொஞ்சமாவத அருகதை இருக்கிறதா என எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் தேர்தலை ஒத்தி வைக்க எதிர்க் கட்சிகள் சதி செய்வதாக ஜெயலலிதா பேசுவது, அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதையே காட்டுகிறது என்றார்.

புரட்சிப் புயலல்ல.. புழுதிப் புயல்:

இதற்கிடையே தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தமீமுல் அன்சாரி,

ஒரு தனியார் டிவி தன் முகத்தைக் காட்டவில்லை என்ற தரங்கெட்ட அரசியல் நடத்தும் நிலைக்கு வைகோ தள்ளப்பட்டுவிட்டார். புரட்சிப் புயல் என்று சொல்லப்பட்டவர் இப்போது புழுதிப் புயல் ஆகிவிட்டார்.

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனாக இருந்தவர் இப்போது எட்டப்பனாகிவிட்டார். தேர்தல் முடிந்தவுடன் அவரை ஜெயலலிதா கழற்றிவிட்டுவிடுவார். ஜெயலலிதாவைப் போய் நம்பி அங்கு போயிருக்கிறார்.

தனது கல்லூரியை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டியவர் தான் விஜய்காந்த். இவர் எப்படி ஊழலை ஒழிக்க முடியும் என்றார்.

நன்றி - தற்ஸ்தமிழ்

Link to comment
Share on other sites

சிரிப்பு என்ன என்டா அம்மா வைகோ வீட்டுக்கு போனவவாம்....குலோப் ஜம் குடுத்தவராம்...எனக்கு என்ன சந்தோஷம் ன்டா அல்வா குடுக்கலேயே என்டு...நான் நினைக்கிறன் அது கருணாநிதிக்கு மட்டும் தான் குடுப்பார் ஆக்கும்.... :oops: :oops: :D அது சரி அம்மா சொன்னவாவாம்....சகோதரர் நல்லா பிரச்சாரம் பன்னிறாறாம்...உள்ள தூக்கி போடேக்க இந்த சகோதர பாசம் எல்லாம் எங்க போனதுங்க அம்மணி? :lol::lol:

Link to comment
Share on other sites

சுண்டல்

உமக்கு புரியவில்லையா முதலில் ஏன் குலோப் ஜாம் அம்மையார் கொடுத்தவரென்று. குலோப் ஜாம் முதலில் தடவிவிட்டு பிறகு அம்மையார் கொடுக்கப் போற அல்வாவை மென்றால் தான் ஒட்டாமல் சாப்பிடலாம். :P :D

Link to comment
Share on other sites

சிரிப்பு என்ன என்டா அம்மா வைகோ வீட்டுக்கு போனவவாம்....குலோப் ஜம் குடுத்தவராம்...எனக்கு என்ன சந்தோஷம் ன்டா அல்வா குடுக்கலேயே என்டு...நான் நினைக்கிறன் அது கருணாநிதிக்கு மட்டும் தான் குடுப்பார் ஆக்கும்.... :oops: :oops: :D அது சரி அம்மா சொன்னவாவாம்....சகோதரர் நல்லா பிரச்சாரம் பன்னிறாறாம்...உள்ள தூக்கி போடேக்க இந்த சகோதர பாசம் எல்லாம் எங்க போனதுங்க அம்மணி? :lol::lol:
எல்லா பொண்ணுங்களும் ....ஸ்ரார்ட்க்கு...சகோதரம் அப்படி... இப்படி கப்சா காட்டுவாங்க...பிறகு றூட்டை மாத்திப்பாங்க...இல்லைங்களா.....அ

Link to comment
Share on other sites

ஜயா தான் கொடுத்தவராம்......

:D:lol: சரி அதுல அப்பிடியும் ஒரு வழி இருக்கா? :lol::lol:

Link to comment
Share on other sites

எல்லா பொண்ணுங்களும் ....ஸ்ரார்ட்க்கு...சகோதரம் அப்படி... இப்படி கப்சா காட்டுவாங்க...பிறகு றூட்டை மாத்திப்பாங்க...இல்லைங்களா.....அ

Link to comment
Share on other sites

வை கோ சாமி சுனாமி நிதியை அம்மாவிடம் கொடுக்கச் சென்று அவமானப் பட்டதை அப்போது பத்திரிகைகளிலெல்லாம் முழங்கினாரே. :oops: :oops: அதற்கிடையில் மறந்து விட்டாரா?? ஒரு வேளை முன்பு அத்வாணிக்கு வந்ததாக ஜெயலலிதா சொன்ன ஞாபகமறதி நோய் இப்போ வை கோ விற்கு வந்து விட்டதா?? :roll: :cry: :roll: :cry:

Link to comment
Share on other sites

அது சரி - வை கோ - தமிழக அரசியலில்- ஒரு - - செல்லா காசு என்று - சொன்ன தமிழக உறவுகள்...... ( உண்மையா நீங்க அதுதான் என்றால்) . தீவிர கவனம்- வை கோ - பற்றி எடுப்பது ஏன்?

சரி அது அவர்கள் பிரச்சினை - செந்தில் - 'கலை 'குடும்பம் விஜயகுமார் - முரளி - !

மற்றது - எங்க உறவுகள் கிட்ட !

சிங்களவன் - எங்க குடும்பத்தை சீரழிக்கிறான் - என்று தெரிந்ததும் - ஓடி வந்து குரல் கொடுத்த ஒரு மனிதனை சீண்டி பார்க்கும் உறவுகள் கிட்ட கேட்க நினைப்பது-

நாளைக்கு - உங்க சிஸ்டர் -சிங்களவனால - உடம்பில துணி இல்லாம இருக்கும் போது - அடுத்தவன் வந்து காப்பாத்தினால் -

காப்பாத்தினவன் குடும்பம் எப்பிடி இருக்கும் என்றா ஜோசிப்பிங்க?

நல்ல கருத்துகளடா சாமிங்க! 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மேலைததேயன் சொன்ன வசனம் ஞாபகத்துக்கு வருகின்றது.

அவர்கள் முதலில் யுதரைத் தேடி வந்தார்கள்

நான் வாய் திறக்கவில்லை- ஏனென்றால் நான் யுூதன் இல்லை

அவர்கள் கம்னூசிகளைத் தேடி வந்தார்கள்

நான் வாய் திறக்கவில்லை- ஏனென்றால் நான் கம்னீசியவாதியல்ல

என்னைத் தேடி வந்தார்கள்

யாரும் வாய்திறக்கவில்லை-ஏனென்றால் ..........

இது தான் வர்ணன் சொன்னதற்கு எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ தேவையில்லாமல் நாம் சாதிப்போம் என்று மார்தட்டிப் போனவர்கள் எல்லாம் கடைசியில் வைக்கோவை வசைபாடித்தான் தங்கள் பலத்தை காட்டவேண்டிய நிலைக்கு போனது துப்புக் கெட்ட நிலையில் இருக்கும் இவர்களது அரசியல் வங்குரோத்து நிலையைக் காட்டுகின்றது.

தாங்கள் என்னவோ நல்லவர்கள் போலவும், நேர்மை, நீதிக்கும் தலைவணங்குவது போலவும் உரைக்க சிலர் இங்கே வக்களாத்து வாங்குவது மூக்கு முட்டப்பிடித்த புரியாணியின் வசனையை எமக்கு அடையாளப்படுத்தி சொல்லித் தருகின்றது.

ஒரு காலத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று வீராப்பு பேசியவர்களையும், பின்பு கூடிக் கொஞ்சிக் குலாவியவர்களையும், அல்லது மதவாத பிஜேபியோடு கூட்டணியே வைக்கமாட்டோம் என்று விட்டு பின் பதவி சுகத்திற்காக மூட்டணி அமைத்த திமுகாவைப் பற்றி எமக்க நக்றாகத் தெரியும்.

கருணாநிதியின் மகனும், மதுரை பேட்டை ரவுடியுமான அழகிரி செய்த கொலையை மறைப்பதற்காக எத்தனை கோடிகள் போயஸ் காடினுக்கு பரிமாறப்பட்டன என்பதும் நாம் அறிவோம்.

இவை எல்லாம் இராச தந்திரம் என்று மார்தட்டினாலும், மற்றவர்கள் செய்யும் போது தான் ஏனோ உறைக்கின்றது கண்டியளோ??

:wink:

Link to comment
Share on other sites

சரிப்ப தான் வருது..வைகோ க்கு மட்டும் பதவி ஆசை .ல்லையாக்கும்..வைகோ மட்டும் தன்னோட ஆரம்ப கால கொள்கைகளை தானே கடைபிடிச்சிட்டு வாரார் ஆக்கும்....வை கோ க்கு மட்டும் கோடிக்கனக்கில போகலையாக்கும்...

வைகோ க்கு காச பார்த்தாலே அலர்ஜியாக்கும்..வைகோவா உள்ள தூக்கி போட்டா அம்மாவ திட்டிவிங்க..அப்புறம் அனைச்ச கிட்டா அம்மா நல்லவவா மாறிடுவா இது எல்லாம் சந்தர்ப வாதம் இல்லையாக்கும்...செம ஜோக் பா.........

வைகோக்கு தனித்து நிற்க வக்கில்ல .....விஜயகாந் தனித்து நிற்க வில்லையா..இரண்டு கட்சிகளையும் வமர்சித்து வட்டு..வைகொ இரண்டையும் விமர்சிபார்..அப்புறம் ஒன்டோட போய் ஒட்டி கிட்டு ஒட்டு அரசியல் நடத்திட்டு இருப்பார்.....

Link to comment
Share on other sites

சுண்டல் வீம்புக்கு தனித்து நின்று தோக்க வைக்கோ ஒன்ரூம் முட்டாள் அல்ல, அவர் படித்தவர் நாலும் தெரிந்தவர், ஏற்கனவே தனித்து நின்று போட்டியிண்டு தனது பலத்தின் அளவை பார்த்தவர், அவ்ருக்கு தெரியும் தனித்து நின்றால் எவ்வளவு இடம் கிடைக்கும், திமுகவுடன் நின்றால் என்ன கிடைக்கும், அதிமுகவுடன் நின்றால் எவ்வளவு இடம் கிடைக்கும், இப்போது தேவையானது அவரது கட்சியை பலப்படுத்துவதே, அதுவே அவரது குறிக்கோல். எதிர்காலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கான காத்திருப்பு இது, "ஓடு மீன் ஓட ஓடவிட்டு உறு மீன் வர காத்திருக்குமாம் கொக்கு" புத்திசாலி எப்போதும் திட்டமிட்டுத்தான் காய் நகர்த்துவான். வைகோ புத்திசாலி, அப்ப நீங்க?

Link to comment
Share on other sites

வைகோ புத்திசாலியா இல்லை அடி முட்டாளா என்று தமிழகத்தில் இருப்பவனுக்கு தான் தெரியும்.... ஆம்பளையா என்று அறிவுகெட்டத்தனமாக கேட்டு ஒரு சின்னப்பையன் அதையே திருப்பிக் கேட்டவுடன் கண்ணீர் விடுபவர் தான் இந்த வைகோ....

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்களுக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுப்பவர் தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளுக்கு மௌனம் காப்பது ஏனோ?? இந்த இலட்சனத்தில் இவர் ஜெயலலிதா அரசில் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாக அறிக்கை விடுவதும் ஏனோ?? ஓஓஓ இதுவா புத்திசாலித்தனம. :roll: :roll: :P

Link to comment
Share on other sites

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது - இந்த அறிவுரை வைகோவுக்கு இந்த நேரத்தில் சரியாகப் பொருந்தும்....

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்களுக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுப்பவர் தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளுக்கு மௌனம் காப்பது ஏனோ?? இந்த இலட்சனத்தில் இவர் ஜெயலலிதா அரசில் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கப் போவதாக அறிக்கை விடுவதும் ஏனோ?? ஓஓஓ இதுவா புத்திசாலித்தனம. :roll: :roll: :P

அவர் எந்த அரசில் இருந்தாலும் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பார், ஒரு ஈழத்தமிழரான உமக்கு அவர் குரல்கொடுப்பதில் என்ன பிரச்சினை? :shock: :shock: :shock:

Link to comment
Share on other sites

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது - இந்த அறிவுரை வைகோவுக்கு இந்த நேரத்தில் சரியாகப் பொருந்தும்....

அப்ப என்ன ஜே யோட ஒட்டி உறவாட சொல்லுகிறீர்களா...???? :P :P :P

உங்களுக்கு ஓண்று தெரியுமா.? வைகோ கலைஞரோடு இருப்பதைவிட ஜே யோடு இருப்பதுதான் அவருக்கு பாதுகாப்பு.... காரணம் கலைஞர் அவரை உள்ள போட மாட்டார்.... :(:D:lol:

Link to comment
Share on other sites

Birundan wrote:

அவர் எந்த அரசில் இருந்தாலும் ஈழத்தமிழருக்காக குரல் கொடுப்பார், ஒரு ஈழத்தமிழரான உமக்கு அவர் குரல்கொடுப்பதில் என்ன பிரச்சினை?

நான் கேட்டது

தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளுக்கு மௌனம் காப்பது ஏனோ??

Link to comment
Share on other sites

நான் கேட்டது

தமிழ் நாட்டிலேயே ஜெயலலிதா அரசால் ஈழத்தமிழர்களுக்கு நடந்த நடக்கின்ற கொடுமைகளுக்கு மௌனம் காப்பது ஏனோ??

தமிழ்நாட்டில் ஈழத்தவருக்கு எதிராக கொடுமைகள் நடப்பதே இல்லை எண்று சொல்லும் லக்கிதான் இதுக்கு பதில் சொல்லவேணும்.... :P :P :P

Link to comment
Share on other sites

ஏன் வை கோ விற்கு வக்காலத்து வாங்குவோரும் பதிலளிக்கலாமே

Link to comment
Share on other sites

ஏன் வை கோ விற்கு வக்காலத்து வாங்குவோரும் பதிலளிக்கலாமே

ஏன் நாங்களும் பதில் அளிக்கலாம்தான்..... ஆனால் தமிழகத்தில் ஈழத்தவர் மகிழ்வாய் வாழ்கிறார்கள், நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை... எண்று கதை அளக்கும் உங்கள் நண்பர் பார்த்து மன வேதனைப்படுவார்... இதுக்கு அவரே பதில் சொல்லட்டுமே....! :(:D:lol:

Link to comment
Share on other sites

"நாங்கள் கொடுமைப்படுத்துவதே இல்லை" என்று நான் சொல்லியது உண்மை தான்... இப்போது இங்கே ஆட்சி செய்து கொண்டிருப்பது "நாங்கள்" அல்ல "நீங்கள்"

புரியவில்லையா வைகோ உங்களைச் சேர்ந்தவர் தானே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.