Jump to content

வழக்கு எண் 18/9 - உண்மையிலேயே உலகத்தரத்திலான படம்தானா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கு எண் 18/9 - உண்மையிலேயே உலகத்தரத்திலான படம்தானா?

அண்மையில் வழக்கு எண் 18/9 ஐப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது(கள்ளமாகத்தான் !!). பலரும் அதை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளியிருந்ததால், அப்படி என்னதான் இயக்குனர் சொல்லியிருக்கிறார் பார்க்கலாம் என்றெண்ணிப் பார்க்கத் தொடங்கினேன்.

படம் முழுவதும் வழமைபோல வறுமை கொடிகட்டிப் பறந்தது. பெற்றோரின் வறுமை, வேலைக்குச் சிறுவயதில் போகும் பிள்ளை, வேலையிடத்தில் முதலாளியின் தொல்லை, திரையில் காட்டாத பெற்றொரின் மரணம், வேலையை விட்டு ஓடும் கதாநாயகனுக்கு உதவி செய்யும் விலை மாது.

இப்படியே கதை நகர்கிறது. இடையிலே வரும் கதாநாயகனின் இன்னொரு ஏழை மீதான காதல். இவர்களின் கதையை ஒட்டியே வளரும் இன்னொரு நடுத்தர வர்க்க மாணவியினதும், அவளை நிர்வாணமாகப் படமெடுக்கவென்றே அலையும் இன்னொரு மேட்டிக்குடி மாணவனிதும் கதை.

மேட்டுக்குடி மாணவனின் உண்மை முகத்தைக் கண்டுகொண்ட நடுத்தர வர்க்க மாணவி அவனை விட்டு விலகியோட, அவளது முகத்தில் திராவகம் ஊற்றவென வந்து அவளது வீட்டில் வேலை பார்க்கும் ஏழை மீது ஊத்தப்படுகிறது ஆஸிட். ஊற்றியவனை போலீஸ் தேட ஏழைக் கதாநாயகன் மாட்டுப்படுகிறான். ஆரம்பத்தில் நல்லவனாகத் தெரிந்த பொலீஸ் அதிகாரிகூட மேட்டுக்குடி காசுக்காக ஏழையக் காட்டிகொடுத்துவிட்டு ஊற்றியவனை விடுதலை செய்கிறான்.

உண்மையை அறிந்த ஏழைப் பெண்ணோ அந்த பொலீஸ் அதிகாரி மீதே ஆஸிட் ஊத்திவிட்டு ஜெயிலிக்குப் போகிறாள்.

இதிலெங்கே உலகத்தரம் வந்தது. ஆளாளுக்கு செம பில்ட் அப் கொடுத்தார்களே, இறுதிவரை அந்த உலகத்தரப் படத்தை காட்டாதபடியால் அந்த இயக்குனர் மேல் கொலைவெறியில் இருக்கிறேன் !@!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வருகின்ற குப்பைப் பட‌ங்களோட‌ ஒப்பிடுகையில் இந்தப் பட‌ம் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட நல்ல பட‌ம் :)

Link to comment
Share on other sites

படத்தின் கதை ரதி சொன்னதை போல இப்போது வரும் படங்களை விட பெட்டெர் என்றாலும் படத்தின் ஸ்க்ரீன் ப்ளே மற்றும் அந்த மென்மையான / உண்மையான காதல், கிளைமாக்ஸ் இல் வரும் பாடல் போன்றன படத்தை மனதில் ஒட்ட வைக்கின்றன. தொழிநுட்ப ரீதியில், இசையில் படத்தில் கொஞ்சம் முன்னேற்றம் தேவை என்று நினைகிறேன். பாலாஜி சக்திவேல் ஒரு திறமையான இயக்குனர் என்ற படியால் தான் நானும் படத்தை பார்த்தேன். எனக்கு படம் பிடித்திருந்தது.

Link to comment
Share on other sites

இதிலெங்கே உலகத்தரம் வந்தது.

அது பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்சியாக உள்ள்ளது சினிமாவிற்கான கருத்திலாவது ஒற்றுமையாக உள்ளார் சகோதரன் அர்ஜுன் . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தரம்?.ஒரு தமிழ்படம் உதாரணம்.

எந்திரன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. இதனைப் பற்றிக் கருத்துக் கூற முடியாது.

அந்தக் காலத்தில் இருந்து அடிக்கடி 'உலகத் தரம்' உலகத் தரம் என்று வியாபாரத்திற்காக எடுத்து விடுவார்கள். படங்கள் திரையிடும் நேரத்தில் கலகலப்பாக இருந்து கல்லாவை நிரப்பும். மற்றும்படி எந்தப் படமும் உலக மக்களின் கவனத்தை ஈர்ந்ததாகத் தெரியவில்லை.

உலகம் பார்த்து ரசித்த சிறந்த படங்களின் தொழில் நுட்பங்களையே பிரதியெடுத்து சீர்படுத்தினால் உலகத் தரம் வாய்ந்ததது என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

பலரின் விமர்சனங்களை படித்த பின்னர் இந்த படத்தை பார்த்தேன் எனக்கென்னமோ அங்காடித்தெரு படம் மனதில் ஒட்டிய அளவிற்கு இந்தப்படம் ஒட்டவில்லை. மற்றபடி உலகத் தரம் என்பதற்கு வெகு தூரம்.. உலக தரத்தில் படமெடுப்பதானால் முதலில் ஈரானிய ..பிரெஞ்சு .. யெர்மன் கலைப்படங்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்தாக வியாபார ரீதியாக அமெரிக்க இங்கிலாந்து படங்களை பார்க்வேண்டும். இல்லாட்டி இரண்டும்கெட்டான்தான்.

Link to comment
Share on other sites

களவாகப்பார்க்காமல் காசுகொடுத்து பார்த்திருப்பின், உலகத்தரத்தை கண்ணுற்றிர சாத்தியம் உள்ளது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.