Jump to content

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலமாதங்களுக்கு முன்னர் எழுதிய ஹைக்கூ பதிவு காட்டில் நிலாவான கதை தனிக்கதை! ஆனாலும் ஆசை யாரை விட்டது. கவிதை வடிவங்களில் ஓரளவுக்கேனும் சுமாராக எழுதுவேன் என்று நம்புவது இந்த ஹைக்கூவை தான். கேதாவின் National Geographic website இல் வந்த படத்தை பார்த்தவுடன் இதற்கு பொருத்தமான கவிதை ஒன்று எழுதவேண்டும் என்று தோன்றியது. இந்த படத்தின் மூடுக்கு வெண்பாவோ, ஐந்து வரி புதுக்கவிதையோ குழப்பிவிடும்! ஹைக்கூ தான் சரிவரும் என்று தோன்றியது.

ஹைக்கூ. ஜப்பானிய கவிதை வடிவம். அதற்கென்று ஒரு வரையறை இருக்கிறது.

The essence of haiku is "cutting". This is often represented by the juxtaposition of two images or ideas and a cutting word between them, a kind of verbal punctuation mark which signals the moment of separation and colours the manner in which the juxtaposed elements are related.

எளிமையாக சொல்லுவதாக என்றால், இரண்டு படிமங்களை முதல் இரண்டு வரிகளிலும் சொல்லி, மூன்றாவது வரி அவற்றை தொடுக்கவேண்டும். அந்த தொடுப்பு, கவிதையை வேறு தளத்துக்கு கொண்டு செல்லவேண்டும். இதிலே எத்தனை சிலபல்கள்(syllables) எல்லாம் வேண்டும் என்றும் ஒரு ரூல் இருக்கிறது. அது தமிழில் எழுதும்போது பொருந்தாது என்பதால் ஹைக்கூவின் ஆதாரமான விஷயத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

இந்த படத்துக்கு ஹைக்கூ எழுதுவது சவாலான விஷயம். படம் ஏற்கனவே பல கதைகள் சொல்லுகிறது. அந்த கருவை சிதைத்துவிட கூடாது. தூண்டில் போடும் சிறுவனும், நீரில் மின்னும் நட்சத்திரங்களும் தான் சாரம். அதை தொடுக்கவேண்டும். தொடுத்துப்பார்த்த முயற்சி தான் இது!

[size=4]IMG_9298_thumb%25255B1%25255D.jpg?imgmax=800[/size]

[size=5]தூண்டில் வீசும் சிறுவன்.

விண்மீன் எல்லாம் கடலில் விழுந்து

மண்புழு தேடி அலைகிறது![/size]

முதல் இரண்டு வரிகளும் படிமங்கள். சட்டத்தை இன்னமுமே மீறவில்லை. மூன்றாவது தான் அந்த கோர்ப்பு. ஏன் விண்மீன்கள் கடலில் விழவேண்டும்? ஐயோ பாவம், இந்த சிறுவன் நீண்ட நேரமாக மீனுக்கு காத்திருக்கிறானே! ஒரு வெளிச்சத்தை கொடுத்து பார்ப்போமே! என்று கடலில் விழுகிறது. விழுந்தது அப்படியே கிடக்கவேண்டியது தானே? இல்லை. அதற்கு அப்பாலே சென்று, அட நாமும் மீன் தானே, அந்த தூண்டிலில் போய் நாமாகவே மாட்டிகொள்வோமா? அப்போது மீன் மாட்டியது என்று அவன் முகத்தில் சின்ன சந்தொஷத்தையாவது பார்க்கலாமே என்ற ஆர்வத்தில், “எங்கே அந்த மண்புழு” என்று அவை தேடி தேடி அலைகின்றனவாம்.

உயர்திணை நிகழ்ச்சியில் கோகிலா மகேந்திரன் கேதாவின் “காற்றில் ஒடிந்த தளிர்கள்” என்ற சிறுகதையை வெகுவாக சிலாகித்து, ஒரு கவிதை என்பது காலம் கடந்து, சொல்லும் விஷயம் கடந்து, மேலும் மேலும் பலதை சொல்லவேண்டும் என்றார். இப்போது இங்கே எழுதிய ஹைக்கூ வேறு என்ன விஷயம் சொல்லுகிறது? இது கூட உருவகம் தான். யோசித்துப்பாருங்கள். இந்த விண்மீன்கள், தங்களை மீன்களாக காட்டி ஏமாற்றி, சிவனே என்று மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் சிறுவனை தூண்டி விட்டு, அவனுக்கு மெல்லிய சந்தோஷத்தை கொடுக்க முயன்று, இறுதியில் அவனுக்கு ஏமாற்றம் தானே கிடைக்கும்? தூரத்தில் இருந்து மின்னுவதற்கு மட்டுமே லாயக்கான விண்மீன்களுக்கு எதற்கு இந்த விபரீத ஆசை? ஏன் இந்த மோசம்? இந்த உருவகத்தை நம்முடைய வெளிநாட்டு தமிழர்களோடு பொருத்தினால்… ப்ச்ச் .. அந்த சிறுவனை மீன் பிடிக்கவிடுங்கள் ப்ளீஸ்!

இதே கேதாவின் இன்னுமொரு படத்துக்கு ஒரு ஹைக்கூ முயற்சி.

Jaffna%252520fort%252520093_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

[size=5]சூரியன் மறையும் சமயம்[/size]

[size=5]காத்திருக்கும் காவலரண்[/size]

[size=5]உள்ளே சீருடை![/size]

நானே எழுதி நானே ரசிக்கும் வங்குரோத்து வேலையை திரும்பவும் செய்யப்போவதில்லை! ஆனால் சீருடை யார் யாரெல்லாம் அணிவார்கள்?.

[size=1]பிற்குறிப்பு : முதலில் ஹைக்கூவில் ஆரம்பத்தில் “தூண்டில் போடும் சிறுவன்” என்றே எழுதினேன். கேதா தான் அதை “வீசும்” என்று மாற்றினால் கொஞ்சம் சந்தம் கூட வரும் என்றான். That’s what called attention to details![/size]

[size=3]மூலம் : http://www.padalay.com/2012/06/blog-post_16.html[/size]

Link to comment
Share on other sites

  • Replies 348
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size="4"]பசுமையான வயல்கள் [/size][size=1]

[size="4"]நெல்நாற்றுக்குப்பதில் களைகள் [/size][/size][size=1]

[size="4"]வன்னி [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானே எழுதி நானே ரசிக்கும் வங்குரோத்து வேலையை திரும்பவும்

யாழில் போட வேண்டியதுதானே

எண்ணதை எழுதி

கூவி கூப்பாடு போட

யாழ்

எப்படி இருக்கு நம்மட ஹைக்கூ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna%252520fort%252520093_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

கதிரவன் கண்ணயரும் வேளை,

கண்விழிக்கிறது காவலரண்!

அநியாயங்களை அரங்கேற்ற!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_9298_thumb%25255B1%25255D.jpg?imgmax=800

வயிற்றுப் பசிக்காக,,

வீசப்படுகிறது தூண்டில்!

விம்பங்கள் மட்டுமே சிக்குகின்றன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் கலக்கிட்டிங்க.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size="4"]தாயில்லாமல் நானில்லை [/size][size=1]

[size="4"]ஆசியா [/size][/size][size=1]

[size="4"]நாயில்லாமல் நானில்லை [/size][/size][size=1]

[size="4"]ஐரோப்பா [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லியோ .. அழகான ஹைக்கூ .. உங்கள் அனுமதியில்லாமல் கொஞ்சம் மாற்ற முயற்சிக்கிறேன்!

பசுமையான வயல்கள்

[size=1][size=4]அறுவடைக்கு தயாராகும் களைகள்[/size][/size]

[size=1][size=4]வன்னி [/size][/size]

[size=1][size=4]நன்றி[/size][/size]

ஹ ஹ ஹ ..

நன்றி புத்தன்!

நன்றி புங்கையூரான் .. அழகிய முயற்சி ... மூன்றாவது வரியை கொஞ்சம் செப்பனிடலாமோ?

@புங்கையூரான் .. அந்த இரண்டாவது கைக்கூ .. உங்களுடைய ஆதாரம் சிதறாமால் இப்படி மாற்றலாமா?

பசியில் சிறுவன்

வீசும் தூண்டில்!

விம்பங்கள் மட்டுமே சிக்குகின்றன!

என்று எழுதுகையில் .. சிறுவன் பசியில் களைத்து போய் பொறுமை கெட்டதால் மீன் கிடைக்கவில்லை .. மீன் சிக்க பொறுமை வேண்டும் என்ற பொருளும் சேருகிறது ...

அட இந்த டிஸ்கஷன் நல்லா இருக்கே!

//தாயில்லாமல் நானில்லை

[size=1][size=4]ஆசியா [/size][/size]

[size=1][size=4]நாயில்லாமல் நானில்லை [/size][/size]

[size=1][size=4]ஐரோப்பா //[/size][/size]

[size=1][size=4]அருமை. அதை நாயில்லாமல் தாயில்லை என்றும் மாற்றலாம் .. இங்கே அம்மாமார் எல்லா பிள்ளையை டே கயாரில் விட்டு விட்டு நாயை தான் walking கூட்டிபோகிறார்கள் ... எல்லோரையும் சொல்லவில்லை.[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசியில் சிறுவன்

வீசும் தூண்டில்!

விம்பங்கள் மட்டுமே சிக்குகின்றன!

நன்றாக இருக்கின்றது, படலை!

வரிகளை மாற்றும்போது, புதிய தளங்கள் உருவாகின்றன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான் கலக்கிட்டிங்க.....

புத்தனே, உந்தன்,

புன்முறுவல் காண்பதற்காய்,,

ஆயிரம் கவிதைகள்,

அலுக்காமல் எழுதுவேன்!

நீ மட்டும்,

உனது கோபுரங்களை,

உடனே உடைப்பதாய்,

உறுதிமொழி தந்தால்!

நன்றிகள், புத்தன்! :D

,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடைப்பதற்க்கு ஏன்

உறுதிமொழி

உடைத்திடு

கோபுரங்களை துறந்து

கோவணத்துடன் வந்தேன்

கோமாளிகள் என்னை

புனிதன் என்றார்கள்

புத்தன் என்றார்கள்

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது. :) இதில் இன்னும் பல ஹைக்கூக்களை தொடருங்கள். :)

புங்கையூரன் அண்ணாவும் புத்தன் அண்ணாவும் சளைக்காமல் எழுதுகிறீர்கள். :) நீங்களும் இத்திரியில் பல ஹைக்கூக்களை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா .. கவிதைகள் எல்லாம் அழகாக இருக்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

resize_20100703110137.jpg

கனவுக் கூடுகள் கலைந்து,

தனிமைக் கூட்டினுள் ஒதுங்கும்!

கரையேறாத காதல்!

Link to comment
Share on other sites

Mono_Mononucleosis_Kissing_Disease.jpg

http://www.nationaln...ing_Disease.jpg

உதடும் உதடும் பற்றிக்கொள்ள

கயல்விழி படபடக்கும்

மௌனம் அங்கு குடிகொள்ளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகப் பெரிய ஒற்றைப் பாறாங்கல் இதுவாகும்!

இதன் பெரும்பகுதி நிலத்தின் கீழ் மறைந்துள்ளது!

அவுஸ்திரேலியாவின் மத்தியில் உள்ள, இதன் ஆங்கிலப் பெயர் 'Ayers Rock:'. இதனை Uluru என அவுஸ்திரேலியப் பூர்வீக குடிகள் அழைக்கின்றனர்!

இந்தப் படம் 'உலுறு' வின் சூரிய உதயமாகும்!

நீங்கள், இந்தக் காட்சிக்கு ஒரு 'ஹைக்கூ' கவிதை எழுதுங்களேன்!

Uluru-at-sunrise-sun-on-top-by-ID-Photography-Alice-Springs.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]1,[/size]

[size=4]ஈழத்தில் [/size]

[size=1][size=4]எல்லாம் விலை கூடிற்று [/size][/size]

[size=1][size=4]மனித உயிர்களினைத்தவிர [/size][/size]

2,

ஈழத்தில் - அகாலமாய்

[size=1][size=4]தாயும் செத்திற்று சேயும் செத்திற்று[/size][/size]

[size=1][size=4]நாயும்[/size][size=4]செத்திற்று - " சமத்துவம்"[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விவசாயிகள் நிறைந்த உலகின்

அறுவடை

பட்டினி.

கல்லறையில் உறங்கும்

அம்மா போட்ட பின்னல்கள்.

தலைவாரும் போதுவலி.

(எங்கேயோ வாசித்தது.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jaffnalttebulding004.jpg

இத்தனை

இத்தனை

இழந்த பின்பும்

இதற்கே

என் மனம்

இப்படி

இடிக்குதே........

Link to comment
Share on other sites

உலகின் மிகப் பெரிய ஒற்றைப் பாறாங்கல் இதுவாகும்!

இதன் பெரும்பகுதி நிலத்தின் கீழ் மறைந்துள்ளது!

அவுஸ்திரேலியாவின் மத்தியில் உள்ள, இதன் ஆங்கிலப் பெயர் 'Ayers Rock:'. இதனை Uluru என அவுஸ்திரேலியப் பூர்வீக குடிகள் அழைக்கின்றனர்!

இந்தப் படம் 'உலுறு' வின் சூரிய உதயமாகும்!

நீங்கள், இந்தக் காட்சிக்கு ஒரு 'ஹைக்கூ' கவிதை எழுதுங்களேன்!

Uluru-at-sunrise-sun-on-top-by-ID-Photography-Alice-Springs.jpg

மறையும் ஆதவன்

உதிக்கும் ஆதவன்

பார்வையில் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அருமை, யோக்கர்!

கல்லின் தனித்துவத்தையும் உள்ளே கொண்டு வாருங்களேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

உலகின் மிகப் பெரிய ஒற்றைப் பாறாங்கல் இதுவாகும்!

இதன் பெரும்பகுதி நிலத்தின் கீழ் மறைந்துள்ளது!

அவுஸ்திரேலியாவின் மத்தியில் உள்ள, இதன் ஆங்கிலப் பெயர் 'Ayers Rock:'. இதனை Uluru என அவுஸ்திரேலியப் பூர்வீக குடிகள் அழைக்கின்றனர்!

இந்தப் படம் 'உலுறு' வின் சூரிய உதயமாகும்!

நீங்கள், இந்தக் காட்சிக்கு ஒரு 'ஹைக்கூ' கவிதை எழுதுங்களேன்!

Uluru-at-sunrise-sun-on-top-by-ID-Photography-Alice-Springs.jpg

nice pic..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Uluru-at-sunrise-sun-on-top-by-ID-Photography-Alice-Springs.jpg

பகலவனின் நுனிவிரல்கள்,

பெருங்கல் மேனி தழுவும்!

இரவில் போர்த்த பனியாடை,

விரகத்தில் நழுவும்!

சூரிய உதயம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் கிழக்கே உதித்தல்

மேற்கே மறைதல்-இயற்கை

என்றால்.....

இது என்ன உலகின்

பெரியதற்குள் இருந்து ஓர்

வரவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன் கிழக்கே உதித்தல்

மேற்கே மறைதல்-இயற்கை

என்றால்.....

இது என்ன உலகின்

பெரியதற்குள் இருந்து ஓர்

வரவு.

யாயினி,

உங்களுக்குள் மறைந்திருக்கும், ஒரு வருங்காலக் கவிதாயினி, வெளி உலகத்தைப் பார்க்கத் துடிக்கின்றாள்!

அவளது சுதந்திரத்தை மறுப்பதற்கு, உங்கள் உரிமைக்காகப் போராடும், உங்களுக்கு உரிமையில்லை என்பது எனது, கருத்து! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.