Jump to content

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!


Recommended Posts

  • Replies 348
  • Created
  • Last Reply

17955840150716321848695.jpg

இன்று இவன் கையில்

ஒன்றாக!

நாளை எவர் கையிலோ

தனித்தனியாக!

வியாபாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17955840150716321848695.jpg

உள்ளங்கைகளில்,

நீங்கள், கொள்ளை அழகு!

உழவர் வயல்களில்,

நீங்கள்,கொள்ளை அழிவு!

Link to comment
Share on other sites

301549_149287141827590_100002389156438_258335_202278441_n.jpg

விழியை விழி மேவியதால்

இமையில் உருவான காட்சிப் பிழையோ ! !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17955840150716321848695.jpg

பத்து விரல்களால்

பவித்திரமாய் சிறை

இன்னும் எத்தனை நாளைக்கு

என் விடுதலை

உன் கையிலில்லை.....

Link to comment
Share on other sites

54103743879920615067551.jpg

நீ சலசல

நான் கலகல

சிரிப்பு

உன் சலசல

பாறையை அரிக்கும்

என் கலகல

அம்மா மனதைக்

கிள்ளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

54103743879920615067551.jpg

உனக்கும் எந்த உள் நோக்கமும்

இல்லை ....

எனக்கும் எந்த உள் நோக்கமும்

இல்லை ....

நீயும் மற்றவர்களை மகிழ் வைக்கின்றாய்,

நானும் மகிழ வைக்கின்றேன் .

மொத்தத்தில் நீயும் நானும்

ஒன்றுதான் .

Link to comment
Share on other sites

54103743879920615067551.jpg

உனக்கும் எந்த உள் நோக்கமும்

இல்லை ....

எனக்கும் எந்த உள் நோக்கமும்

இல்லை ....

நீயும் மற்றவர்களை மகிழ் வைக்கின்றாய்,

நானும் மகிழ வைக்கின்றேன் .

மொத்தத்தில் நீயும் நானும்

ஒன்றுதான் .

விரும்பினால் மட்டும் சிறு திருத்தம்.

உனக்கும் உள் நோக்கம்

இல்லை ....

எனக்கும் உள் நோக்கம்

இல்லை ....

நீயும் மற்றவர்களை

மகிழ வைக்கின்றாய்,

நானும் மற்றவர்களை

மகிழ வைக்கின்றேன் .

நீயும் நானும்

ஒன்று நோக்கத்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

54103743879920615067551.jpg

பாவி மகனே

இவ்வளவு விடுவியா?

பாலுக்கு பதிலாக

எதைக்குடித்தாயோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

54103743879920615067551.jpg

[size=4]உனக்கும் உள் நோக்கம்

இல்லை ....

எனக்கும் உள் நோக்கம்

இல்லை ....

நீயும் மற்றவர்களை

மகிழ வைக்கின்றாய்,

நானும் மற்றவர்களை

மகிழ வைக்கின்றேன் .

நீயும் நானும்

ஒன்று நோக்கத்தில். [/size]

[size=4]*திருத்தி அமைத்த சகோதரன் கோமகனுக்கு நன்றிகள் . :)[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன் சிரிப்பு வண்ணப்

பூக்களுக்கும் ஈடாகாது

வைகை நதிக்கும்

ஈடாகாது...ஏன்

எவ்வளவு பணம்

கொடுத்தாலும்

வாங்க முடியாது..கல்

நெஞ்சையும் கரைத்திடும்

சாகசக் காரன் நீ.

;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தா

அரவணைப்பா என

அறியா குழந்தை சிரிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

54103743879920615067551.jpg

சல சலக்கும் சிற்றாறு,

கல கலக்கும் குழந்தை,

சங்கீதம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உன்பருவத்துக்கு

பசி தூக்கம்

பிரதானம்...

ஆனால் நீயோ

சிற்றாறோடு சிரித்து

மகிழ்கிறாய்,

இதுவும் கொள்ளை

அழகு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பொங்கும் நுரையும் [/size]

[size=4]சிரிக்கும் குழந்தையும் [/size]

[size=4]கொள்ளை அழகு [/size]

Link to comment
Share on other sites

37939724952315177412710.jpg

சின்னவளை விட்டுவிட்டு

எங்கே சென்றாய் ?

நீதான் ஒளிவீசும் நிலவோ ?

எங்கே சென்றாய் சொல்லம்மா?

நீதான் கண்சிமிட்டும் நட்சத்திரமோ ?

எங்கே சென்றாய் சொல்லம்மா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் விண்

மீன்களின் இரவின்

மடியில் உலா வரும்

முழுமதி.

சோறு ஊட்டும்

குழந்தைக்கு

இரண்டாவது

தாய் நிலா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]அம்மா குழைத்துத்தரும் [/size][size=1]

[size=5]சோற்றுருண்டை அல்லது [/size][/size][size=1]

[size=5]முட்டைப்பொரியல் [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எல்லோரும் ஒரளவுக்கு பரவாயில்லாமல் கவிதை எழுதுகிறீர்கள் ஆனால் புங்கையூரான் போன்ற சிலர் தான் ஹக்கூ கவிதை எழுத முயற்சித்து எழுதியிருக்கிறார்கள்...அனைவருக்கும் பாராட்டுக்கள் தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானத்திலும் திரையிலும்

மின்னுகின்றன தொடமுடியாதவை

நட்சத்திரங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] நிலாக் காட்டி சோறூட்டிய அம்மா .......[/size][size=1]

[size=4]....சாமியிடம் சென்று விட்டாள் [/size]

[size=4]என் கவலை தீர மீண்டும் [/size]

[size=4]அனுப்பி வைப்பாயா வெண்ணிலவே [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

37939724952315177412710.jpg

முகம் காட்ட மறந்தாலும்

ஒரு இரவில்

இரு நிலா....

Link to comment
Share on other sites

37939724952315177412710.jpg

நிலவின் உருவம்.

பெண்ணின் முகம்.

பௌர்ணமி.

----------------------------

எனக்கு நீ

உனக்கு நட்சத்திரம்

துணை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.