Jump to content

எனது ஈழத்துப் பயணம் தொடர்கிறது - இன்று தந்தையர் நாள்


Recommended Posts

இன்றைக்கு தந்தையர் நாள் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. இதிலே இருந்து என்னுடைய ஈழப் பயணக் கட்டுரையை தொடர்கிறேன். பல குழப்பங்களுக்கு மத்தியிலும் நான் ஊருக்குப் போவதற்கு முடிவெடுத்ததற்கு என்னுடைய தாயும் தந்தையும் முக்கிய காரணம்.

என்னுடைய தாய் ஜேர்மனிக்கு வந்து எல்லோரையும் பார்த்து விட்டுப் போய் விட்டார். ஆயினும் அவருக்கு வேறு ஒரு கவலை. அவரை பல விதமான நோய்கள் ஆட்கொண்டிருந்தன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பேயே அவர் இறந்து விடுவார் என்று வேறு அவரிடம் ஒரு சோதிடன் சொல்லியிருந்தான்.

இரண்டு மகன்களும் வெளிநாடுகளில் இருக்கின்ற நிலையில், இருவருமே இதுவரை தாயகத்திற்கு வந்து போகாத நிலையில், அதற்கான வசதிகள் இல்லாத நிலையில், தனக்கு ஒன்று என்றால் யார் எல்லாவற்றையும் செய்வார்கள் என்கின்ற கவலை அவரை வாட்டி வந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவருடைய சிறிய தாயார் இறந்த பொழுது, அவருடைய இரண்டு மகன்களும் வெளிநாட்டில் இருந்து வர முடியாமல் இருந்த நிகழ்வை பார்த்திருந்தார். இது ஈழத்தில் பல தாய்மார்களின் பெரும் துயரமாக இருக்கிறது.

„நீ கூப்பிட்டால் நான் ஓடி வருவேன் அம்மா' என்று சொல்ல வேண்டும். இது பயணத்திற்கான ஒரு காரணம். நான் போய் வந்ததனால் வந்த தெம்பில் இன்றைக்கு என் தாயின் மருத்துவச் செலவு குறைந்திருக்கிறது.

...............

என் தந்தையோ வெளிநாட்டிற்கு வந்ததில் இருந்த இதுவரை எங்களை மீண்டும் நேரில் பார்த்தது இல்லை. அவரையும் நான் பார்க்க வேண்டும். அதை விட உயிர்ப்பான ஒன்றை அவரிடம் கொடுக்க வேண்டும்.

முன்பு எனக்கும் என் தம்பிக்கும் ஒரு தங்கை இருந்தார். எங்களுடைய குடும்பத்தில் எல்லோரும் அவரை தங்கச்சி என்றுதான் அழைப்பாhகள்.

நான் என்னுடைய தம்பியுடன் விளையாடியதை விட தங்கச்சியுடன் விளையாடியதுதான் அதிகம். ஏனக்கு அவர் மீதுதான் அன்பு அதிகம். எனக்கு மட்டும் அல்ல என்னுடைய தந்தைக்கும் எங்கள் இருவரிலும் பார்க்க தங்கச்சியின் மீதுதான் அன்பு அதிகம்.

எனககு ஒரு முன்றரை வயது இருந்த பொழுது, தங்கச்சிக்கு காய்ச்சல் அடிக்கிறது என்று என் பெற்றோர்கள் அவரை மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள். எல்லோருக்கும் „டாட்டா' காட்டி விட்டு சாதரணமாகத்தான் தங்கச்சியும் போனாள்.

சில மணித்தியாலங்கள் கழித்து தங்கச்சியை தூக்கிக் கொண்டு பெரும் குரலெடுத்து கதறியபடி என் பெற்றோர்கள் ஓடி வந்தார்கள். திரும்பி வருகின்ற வழியில் பேருந்துலேயே தங்கச்சி இறந்து விட்டாளாம்.

எனக்கு அப்பொழுது இறப்புப் பற்றி சரியாக தெரியாது. வீட்டில் நிறையப் பேர். எல்லோரும் அழுதார்கள். என்னுடைய அப்பாவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னுடைய தலையை சுவரில் மோதி மோதி அழுதார்.

எனக்கு சரியாக விளங்காத அந்த வயதில் ஓரிரு நாள் கழித்து விளையாடுவதற்கு தங்கச்சியை தேடினேன் „தங்கச்சி செத்துப் போனா, அவவை தாட்டுப் போட்டோம்' என்று அம்மம்மா சொன்னது நினைவில் இருக்கிறது. தங்கச்சி இல்லாமல் போனது பற்றி எனக்கு விளங்கிய வகையில் என்னை பாதித்தது.

என்னுடைய தந்தை நீண்ட காலம் தங்கச்சியி;ன் இழப்பில் இருந்து விடுபடவில்லை. அடிக்கடி தங்கச்சியைப் பற்றிப் பேசுவார்.

தங்கச்சியி;ன் இழப்பை ஈடுசெய்ய ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க என் தந்தை விரும்பினார். ஆனால் என் தாய் கடுமையாக மறுத்து விட்டார். என் தந்தை சில நாட்கள் வாதாடிப் பார்த்தார். தன்னால் தங்கச்சியின் இடத்தில் இன்னொரு பெண் குழந்தையை தன்னால் பார்க்க முடியாது என்று என் தாய் சொல்லி விட்டார்.

பெருத்த ஏமாற்றத்தோடு என் தந்தையும் பேசாது இருந்து விட்டார். அவர் பெண் குழந்தைகளை பார்க்கின்ற பொழுது மிகவும் அன்பாக பேசுவார். தூக்கி கொஞ்சி மகிழ்வார் தங்கச்சி பற்றிய ஏக்கம் அவர் கண்களில் தெரியும்.

காலம் ஓடி விட்டது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். பார்ப்பதற்கு தங்கச்சி மாதிரியே இருப்பார்கள். „இதோ, ஒன்றுக்குப் பதிலாக இரண்டு தங்கச்சிகள்' என்று என் குழந்தைகளை தூக்கி அவர் கைகளில் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

ஊருக்குப் போய் என் தந்தையிடம் என் குழந்தைகளை கொடுத்தேன். அள்ளி அணைத்துக் கொண்டார். என்னோடு நேரம் செலவிட்டதை விட, அவர் தன் பேத்திகளோடுதான் அதிக நேரம் செலவிட்டார்.

தன்னுடைய மோட்டர்சைக்கிளில் இருவரையும் ஏற்றிக் கொண்டு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் ஊரை சுற்றி வந்தார். கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்.

என் தந்தையின் நீண்ட கால ஏக்கத்தை தீர்த்து வைத்த மகிழ்ச்சி எனக்கு

...............

ஈழத்துப் பயணம் மேற்கொண்டதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் என்னுடைய அழகிய கிராமம். குரும்பசிட்டி என்கின்ற அந்தக் கிராமம் வடக்கே யாழ்குடாவில் பலாலி விமானத் தளத்திற்கு அருகில் இருக்கின்றது. உயரமான மரத்தில் ஏறி நின்று பார்த்தால் படைத்தளம் தெரியும்.

ஈழப் போரில் பல இழப்புக்களை குரும்பசிட்டி சந்தித்திருக்கிறது. விடுதலை இயக்கங்களால் தனியார் வீட்டில் நடத்தப்பட்ட முதலாவது கொள்ளை குரும்பசிட்டியில்தான் நடத்தப்பட்டது.

வன்னியசிங்கம் என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட அந்தக் கொள்ளைக்கு ரெலோ இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. வன்னியசிங்கம் வீட்டில் முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டதாக ரெலோ இயக்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இயக்கங்கள் பற்றி சரியாகத் தெரியாத அன்று குரும்பசிட்டி இளைஞர்கள் பலர் கொள்ளையர்கள் வந்து விட்டார்கள் என்று ஆயுதங்களோடு வந்தவர்கள் மீது கற்களை எறிந்தாhகள். பதிலுக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளம் குடும்பஸ்தர்கள் கொல்லப்பட்டார்கள்.

இப்படி ஆரம்பித்த குரும்பசிட்டியின் இழப்பு பின்பு நிறையச் செல்வீச்சுக்கள், குண்டு வீச்சுக்கள், இராணுவத்தின் கொலை வெறியாட்டங்கள் என்று போய் கடைசயில் முழுக் கிராமம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் வந்தது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் அந்தக் கிராமத்தை பார்க்க முடியவில்லை. தற்பொழுதுதான் ஒரு சிறிய பகுதியை மீளக் குடியேறுவதற்கு அனுமதித்திருக்கிறார்கள்.

அந்த இடங்களையாவது பார்த்து வருவோம் என்று வவுனியாவில் இருந்து குரும்பசிட்டியை நோக்கிப் பயணமானேன்.

ஓமந்தையில் எங்களின் வாகனம் நிறுத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய படையினர் வாகனத்தை சோதனையிடுகிறார்கள். ஒரு படையினன் நான் கட்டியிருந்த விலை உயர்ந்த கடிகாரத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்

தொடரும்.....

Link to comment
Share on other sites

ஒரு படையினன் நான் கட்டியிருந்த விலை உயர்ந்த கடிகாரத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் .

உதெல்லாம் தேவையோ ? கொழும்பிலை இறங்கினாலே உந்த நசலுகளை எல்லாம் கழட்டி வைச்சுப்போட்டு , சாறத்தை இழுத்து சண்டிக்கட்டுக் கட்டிக்கொண்டு, பாட்டா சிலிப்பறோட சீ ரீ பி பஸ்சில( 600 ரூபாய் ரிக்கற் ) சனத்தோடை சனமாய் பம்மினால் ஏன் நாயே எண்டும் கேக்கமாட்டாங்கள் . இது என்ரை அனுபவம் சபேசன் அண்ணோய்........ இந்த தொடராவது நிக்காமல் , ஒழுங்காய் இதே விறு விறுப்போடை கொண்டு போகவேணும் சொல்லிப்போட்டன் .

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது சரிதான். பஸ்ஸில் போவது மிகவும் மலிவானது. ஆனால் நான் ஊர் முழுவதும் வான் பிடித்துத்தான் சுற்றி வந்தேன். கடைசியில் கணக்குப் பார்த்த பொழுது தலை சுற்றியது. அடுத்த முறை போனால் பஸ்தான்.

கட்டாயம் தொடரை எழுதி முடிப்பேன்.

Link to comment
Share on other sites

தொடருங்கள் உங்கள் பயணக் கதையை .

குரும்பசிட்டி முதலாளி வன்னியசிங்கம் வீட்டில் குட்டி மணி தலைமையில் கொள்ளை அடித்தார்கள் .டெலோ என்ற பெயர் ,அறிக்கை விடுவதேல்லாம் எல்லாம் அந்த நேரத்தில் இல்லையென நினைக்கின்றேன்.

நான் உதைப்பந்து விளையாடும் போது எனது இடது கை இரு எலும்புகளும் முறிந்ததால் யாழ்பாண ஆஸ்பத்திரியில் இருந்தேன் அப்போதுதான் காலில் சூடு வாங்கிய வன்னியசிங்கத்தின் மகன் உட்பட இன்னும் சிலரை கொண்டுவந்தார்கள் .சில நாட்களில் அவர்களுடன் கதைத்து பழக சந்தர்ப்பம் கிடைத்தது.குட்டிமணியை அவர்களுக்கு நன்குதேரியும் .வன்னியசிங்கத்துடன் சேர்ந்து தொழில் செய்தவராம் .

கூடுதல் தகவல் இந்த கொள்ளைக்கு இன்னொரு மாபெரும் பிரபலமும் போனவர் .

முறிந்த எனது கை பிளாஸ்டர் ஒப் பரிஸ் போட்டு சரிவராது என்று டாக்டர் சிவஞான சுந்தரம் எட்டு ஸ்குருவ் வைத்து எலும்புகளை பொருத்தினார் .இப்பவும் ஸ்குருவ் கையிற்குள் இருக்கு .கனடாவில் ஒருமுறை அதை எக்ஸ்ரெய் எடுத்தார்கள் .ஒப்பரேசன் செய்த டாக்டரை மிக திறமாக செய்திருக்கின்றார் என சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூடுதல் தகவல் இந்த கொள்ளைக்கு இன்னொரு மாபெரும் பிரபலமும் போனவர் .

முறிந்த எனது கை பிளாஸ்டர் ஒப் பரிஸ் போட்டு சரிவராது என்று டாக்டர் சிவஞான சுந்தரம் எட்டு ஸ்குருவ் வைத்து எலும்புகளை பொருத்தினார் .இப்பவும் ஸ்குருவ் கையிற்குள் இருக்கு .கனடாவில் ஒருமுறை அதை எக்ஸ்ரெய் எடுத்தார்கள் .ஒப்பரேசன் செய்த டாக்டரை மிக திறமாக செய்திருக்கின்றார் என சொன்னார்கள்.

நான் நினைக்கிறேன் உங்களுக்கு இனி MRI எடுக்க ஏலாது என்று..(??) MRI என்பது

காந்த புலத்தினால்/கதிர்களினால் உடலின் பகுதிகளை படம் பிடிக்கும் முறை. தசை, இழைய அமைப்புகளை பார்ப்பதர்ற்கு CT ஸ்கேன் விட துல்லியமானது. MRI எடுக்க முன்பு ஒரு பத்திரம் நிரப்ப வேண்டும், அதில் கேட்பார்கள், இப்படியான உலோக பாகங்கள் உடலில் உண்டா என. இப்படி சிறிய ஸ்க்றேவ் போன்றவற்றை ஏதேனும் முறைகளால் கவர் பண்ணி MRI எடுக்கலாமோ தெரியவில்லை...

மற்றது யார் அந்த பிரபலம்?

Link to comment
Share on other sites

நான் நினைக்கிறேன் உங்களுக்கு இனி MRI எடுக்க ஏலாது என்று..(??) MRI என்பது

காந்த புலத்தினால்/கதிர்களினால் உடலின் பகுதிகளை படம் பிடிக்கும் முறை. தசை, இழைய அமைப்புகளை பார்ப்பதர்ற்கு CT ஸ்கேன் விட துல்லியமானது. MRI எடுக்க முன்பு ஒரு பத்திரம் நிரப்ப வேண்டும், அதில் கேட்பார்கள், இப்படியான உலோக பாகங்கள் உடலில் உண்டா என. இப்படி சிறிய ஸ்க்றேவ் போன்றவற்றை ஏதேனும் முறைகளால் கவர் பண்ணி MRI எடுக்கலாமோ தெரியவில்லை...

மற்றது யார் அந்த பிரபலம்?

இதைத்தான் லொள்ளு எண்டுறதோ??

Link to comment
Share on other sites

ஊரில் பெரியவர்களைக் கெட்ட பொழுது ரெலோ இயக்கம் அதற்கு உத்தியோகபூர்வமாக உரிமை கோரியதாகத்தான் சொன்னார்கள். குட்டிமணியும் அதில் பங்கேற்றிருந்தார்.

அப்பொழுது குட்டிமணியோடு இருந்த பிரபாகரனும் இதில் பங்கெடுத்துக் கொண்டதாக ஓரிருவர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இது சரியான முறையில் உறுதிப்படுத்தவில்லை.

முன்பு வெளிநாடுகளில் ரெலோ இயக்கத்தினர் நிதி சேகரித்த பொழுது, பெரும்பாலான குரும்பசிட்டி மக்கள் அவர்களுக்கு நிதி வழங்கவில்லை. நீங்கள் எங்கள் ஊரில் கொள்ளையடித்தீர்கள், இரண்டு பேரை சுட்டுக் கொன்றீர்கள் என்று குற்றம் சாட்டினார்கள். அதற்கு ரெலோ இயக்கத்திற்காக நிதி சேகரித்தவர்கள் "ஏன், பிரபாகரனும்தான் அங்கே நின்றார், அப்படியென்றால் நீங்கள் புலிகளுக்கும்தான் கொடுக்கக்கூடாது" என்று சொன்ன சம்பவங்கள் உண்டு.

ஆனால் போராட்டத்தின் ஆரம்பகால சம்பவங்கள் பற்றி எழுதியவர்கள் இந்தக் கொள்ளையில் தேசியத் தலைவரின் நேரடிப் பங்களிப்பு இருந்ததாக எழுதியிருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்னொரு காலத்தில் சபேசனை நான்கும் நன்கறிந்தவர் என நினைத்தேன்.அவரின் தற்போதைய எழுத்து நடைகள் எனக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டது.இவரைப்போன்றவர்கள்

திரும்பத்திரும்ப பழைய புராணத்திலேயே நின்று பொழுதை கழிக்கின்றார்கள்.

இன்றைய காலகட்டத்திற்கு வெளிநாட்டு தமிழர்கள் எப்படி அல்லது என்ன செய்ய வேண்டும்...முதலில் அதை சொல்லுங்கள்.

வடையுடன் தேனீர் அருந்திய கதைகள் இனியும் வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய காலகட்டத்திற்கு வெளிநாட்டு தமிழர்கள் எப்படி அல்லது என்ன செய்ய வேண்டும்...முதலில் அதை சொல்லுங்கள்.

வடையுடன் தேனீர் அருந்திய கதைகள் இனியும் வேண்டாம்.

சபேசன்;

வாசகர்கள் விபரமானவர்கள்...பாணும் சம்பலும் சாப்பிட்ட கதை வேண்டாம்-- டிரைவ் துறுவில கோபி குடித்துவிட்டு வேலைக்கு போற காலம்- நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் ...

சாத்திரி தெரியாமல்தான் கேட்டேன்-பல்பு எரியுற மாதிரி சிமிலி போடத்தெரியாது -:)

Link to comment
Share on other sites

எனக்கும் ஊருக்கு போய் வந்து ஒரு பயணக்கட்டுரை எழுத வேணும் எண்ட ஆர்வம் இருக்கு... ஒருவேளை போய் வந்தால் கட்டாயம் எழுதுவன்...

அர்ச்சுண் அண்ணாவுக்கு தெரியாத விசயம் எண்டு ஒண்டும் இல்லாததால அவரை கேட்டு சில புனைவுகளையும் சேர்க்கலாம் எண்டு இருக்கிறன்... சபேசன் கவனிக்கவும்...

Link to comment
Share on other sites

தொடருங்கள் உங்கள் பயணக் கதையை .

குரும்பசிட்டி முதலாளி வன்னியசிங்கம் வீட்டில் குட்டி மணி தலைமையில் கொள்ளை அடித்தார்கள் .டெலோ என்ற பெயர் ,அறிக்கை விடுவதேல்லாம் எல்லாம் அந்த நேரத்தில் இல்லையென நினைக்கின்றேன்.

நான் உதைப்பந்து விளையாடும் போது எனது இடது கை இரு எலும்புகளும் முறிந்ததால் யாழ்பாண ஆஸ்பத்திரியில் இருந்தேன் அப்போதுதான் காலில் சூடு வாங்கிய வன்னியசிங்கத்தின் மகன் உட்பட இன்னும் சிலரை கொண்டுவந்தார்கள் .சில நாட்களில் அவர்களுடன் கதைத்து பழக சந்தர்ப்பம் கிடைத்தது.குட்டிமணியை அவர்களுக்கு நன்குதேரியும் .வன்னியசிங்கத்துடன் சேர்ந்து தொழில் செய்தவராம் .

கூடுதல் தகவல் இந்த கொள்ளைக்கு இன்னொரு மாபெரும் பிரபலமும் போனவர் .

முறிந்த எனது கை பிளாஸ்டர் ஒப் பரிஸ் போட்டு சரிவராது என்று டாக்டர் சிவஞான சுந்தரம் எட்டு ஸ்குருவ் வைத்து எலும்புகளை பொருத்தினார் .இப்பவும் ஸ்குருவ் கையிற்குள் இருக்கு .கனடாவில் ஒருமுறை அதை எக்ஸ்ரெய் எடுத்தார்கள் .ஒப்பரேசன் செய்த டாக்டரை மிக திறமாக செய்திருக்கின்றார் என சொன்னார்கள்.

எட்டு ஸ்குருவிலை இரண்டை கழட்டி விடவும். பின்பு என்ன நடக்கும் என்று அறிய ஆவல். :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் 80களில் அதிக ஆசிரியர்கள் உள்ள ஊர்களில் அளவெட்டியையும் குரும்பசிட்டியையும் சொல்லுவார்கள். புகழ்பெற்ற இரசாயனவியல் ஆசிரியர் மகாதேவா குரும்பசிட்டியைச் சேர்ந்தவர். அண்மையில் காலமான நடராஜா ஆசிரியர், காளிதாசன், மணியம் மாஸ்டர் உட்பட புகழ்பெற்ற ஆசிரியர்கள் பிறந்த கிராமம் குரும்பசிட்டி.

அத்துடன் புகழ்பெற்ற ஈழத்து நாடக்கலைஞர் ஏ.ரி. பொன்னுத்துறை அவர்களும் குரும்பசிட்டியைச் சேர்ந்தவர்.

முதலாம் ஈழப்போரில் 86ல் சனவரி மாதம் மூன்று முறை பலாலியில் இருந்து புன்னாலைக்கட்டுவன், கட்டுவன், குரும்பசிட்டி ஊடாக இராணுவம் வெளியேற முயற்சித்து விடுதலைப்புலிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மக்கள் வெளியேறத் தொடங்கிவிட்டார்கள். விடுதலைப்புலிகளினால் குரும்பசிட்டியில் இருந்த மினிமுகாம் 87ல் தாக்கப்பட்டது. ஆனால் அத்தாக்குதல் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்திய இராணுவ வருகையின் பிறகு மீண்டும் மக்கள் குரும்பசிட்டிக்கு திரும்பினார்கள். 2ம் ஈழப்போரின் ஆரம்பிக்க மக்கள் குரும்பசிட்டியை வெடிக்க வெளியேறி இடம் பெயர்ந்தார்கள். என்னுடைய நண்பர் கிருஸ்ணகுமார் குரும்பசிட்டியைச் சேர்ந்த மாவீரர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் அருமையாகப் போகின்றது, சபேசன்! தொடருங்கள்!

எனது வாழ்க்கையை, இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கின்றேன்!

ஊருக்குப் போய், பெற்றோருடனும், சகோதரர்களுடனும், அவர்கள் குடும்பங்களுடனும், நண்பர்களுடனும், அந்த நாளைய வாழ்வை திரும்ப வாழ்ந்து பாரப்பது ! (இதை எனக்காக வாழ்வதாகக் கருதுகின்றேன்)!

மற்றது புலத்தில் வாழ்வது! (இதை என்மீது, நானே வலிந்து திணித்துக்கொண்ட வாழ்க்கை! ( இதை பணத்துக்காக வாழ்வதாகக் கருதுகின்றேன்!)

எனக்காக வாழும் வாழ்வில், வாழ்ந்த காலங்கள் மிகவும் குறைவு எனினும், அது அள்ளித் தந்த மகிழ்ச்சியும், திருப்தியும் அளவில்லாதவை! பெறுமதி வாய்ந்தவை!

பணத்துக்காக வாழும் வாழ்வில், மற்றவர்களுக்கு நன்றாக இருக்கிறேன் போல் தெரிகின்றது! ஒரு விலாசத்தைத் தருகின்றது! அவ்வளவு தான்!

Link to comment
Share on other sites

ஆம் புங்கையூரான், என்னுடைய மண்ணில் நிற்கும் போதோ நான் முழுமையாக உணர்கின்றேன். விரைவில் வீடு திரும்ப வேண்டும்.

குமாரசாமி மற்றும் வொல்கானோ,

தாயகத்தில் சில இடங்களுக்கு போனது பற்றி எழுதுகின்ற பொழுது, அந்த இடங்களில் நடந்த சில முக்கிய சம்பவங்களை எழுதுவது இயல்பானது. ஆனால் கட்டாயமாக என்ன செய்ய வேண்டும் என்பதை, எனக்கு சரி என்று படுவதை எழுதுவேன். தொடரில் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமும் வரும்.

Link to comment
Share on other sites

சபேசன்,

குத்திகாட்டுவதற்காக கூறவில்லை, இரண்டு விடயங்கள், ஒன்று-

நீங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்து சென்றதாகவும் அதை இராணு சிப்பாய் வைத்த கண் வாங்காமல் பார்த்ததாகவும் எழுதினீர்கள். நீங்கள் படித்தவர், விடயங்களை பகுத்தாராயத்தெரிந்தவர். தாயகத்தை தரிசிப்பதற்கு நீங்களே இப்படிச்சென்றால் சாதாரண பொதுமக்கள் எப்படிச்செல்வார்கள்? ஆபத்துக்கள் எங்கிருந்தும் வரலாம், அவ்வாறான சூழ்நிலையில் விலையுயர்ந்த பொருட்களைக்கொண்டுசெல்வது தேவைதானா?

இரண்டு-

இதற்கு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சம்மந்தப்படுத்தாமல் தர்க்கரீதியாக பதில் தாருங்கள். அதாவது, அண்மைக்காலங்களில் உங்கள் கருத்தியல் சித்தாந்தங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தினீர்கள். இலங்கை சென்றது பற்றி கடந்தவருடம் என்று நினைக்கின்றேன் ஓர் பதிவை வழங்கினீர்கள். அதில் அந்த மாற்றம்பற்றி கூறப்பட்டது.

உங்கள் இந்த மாற்றங்களிற்கான காரணம் யதார்த்த சூழ்நிலைகள், தனிப்பட்ட பாதுகாப்பின் அடிப்படையில் (அழுத்தங்கள்) தோன்றியவைதானே? இப்படியான யதார்த்தம் ஒன்றை முள்ளிவாய்க்கால் அவலத்தின் முன்பு புரிந்துகொள்வதற்கு நீங்கள் முயற்சிக்கவில்லையா? உங்கள் பெற்றோரை சந்திப்பதற்கு ஏன் முன்னைய காலங்களில் முயற்சிக்கவில்லை? அதற்கு தனிப்பட்ட பாதுகாப்பே தடங்கலாக அமைந்ததா? தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் மிகுந்த பயத்தின், பீதி காரணமாகவே பல்வேறு விடயங்கள்பற்றி பேசாமெளனிகளாக உள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கைக் கடிகாரம் பற்றி நான் உண்மையில் சிந்திக்கவில்லை.இங்கே அணிவது போன்று தாயகத்திலும் அணிந்திருந்தேன். இதைப் பற்றி தொடர்ந்து இன்று எழுதுகின்றேன்

கடந்த ஆண்டு ஆரம்பித்ததன் தொடர்ச்சிதான் இது. ஒவ்வொரு தொடரையும் தனித் தலைப்பாக எழுதலாம் என்று நினைக்கிறேன். சமரச அரசியல் பற்றி தாயகப் பயணம் ஏற்படுத்திய சிந்தனைகள் பற்றியும் தொடரில் இடையிடை சொல்லிக் கொண்டு போவேன்.

கரும்பு சொல்வது சரிதான். சமரசம் என்பதே விருப்பம் இன்றி தமது பாதுகாப்பின் பொருட்டும், தொடர்ச்சியான இருப்பின் பொருட்டும் செய்வதுதான். எமது கோரிக்கைக்கு எதிராக அகபுறச் சூழ்நிலைகள் விளங்குகின்ற பொழுது, அந்த யதார்த்தத்தை உணர்ந்து கொண்டு, செய்வதுதான் சமரசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைக் கடிகாரம் பற்றி நான் உண்மையில் சிந்திக்கவில்லை.இங்கே அணிவது போன்று தாயகத்திலும் அணிந்திருந்தேன்.

உண்மைதான்

இப்ப பலரும் இப்படித்தான் மற்றவரது அனுபவங்களை பாடமாக எடுப்பதை விட்டு

பட்டுத்தான் தீருவோம் என அடம்பிடிக்கின்றனர்

காலம் போனானும் முடிவு ஒன்றுதான்.

பட்டு வருக..

:lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]எனக்கும் ஊர் போக ஆசையாயிருக்கு என்ன செய்யுறது [/size][size=1]

மனச்சாட்சி விடுகுதில்லை எங்கட வகுப்பிலை முப்பது [/size][size=1]

பேர் இருந்திருப்பம் ஆனால் ஒருத்தன் மாவீரன் இன்னொருத்தனுக்கு [/size][size=1]

என்ன நடந்ததோ தெரியாது மிச்சப்பேர் ஒருத்தரும் போராட்டத்திட்குப்போகவில்லை [/size][size=1]

போராட்டத்திற்கு எப்பவுமே ஆளணிதான் பிரச்சனை.எனக்கு [/size][size=1]

வீட்டுப்பிரச்சனை ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் [/size][size=1]

சொல்லுவம் மாவீரர் கல்லறை இருந்தாலும் அதற்கு [/size][size=1]

மரியாதை செலுத்தப்போகலாம்.[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.