Jump to content

இலையான்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..”

அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி….” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால் அழிக்கப்பட்டு இருப்பதை கவனிக்கலாம். பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்…

“சேர்”

என்று யாரோ கூப்பிட, மாஸ்டர் திரும்பி பார்க்காமலேயே சொன்னார்.

“ஐஞ்சு நிமிஷம் தான்... டக்கென்று போயிட்டு வரோணும் .. அங்கனக்க இழுபட்டு கொண்டு திரிஞ்சாய் எண்டால் இழுத்துப்போட்டு அறுப்பன்”

சொல்லிக்கொண்டே தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

“உயிரினங்களுக்கு இடையிலான உணவுத்தொடர்பை விளக்குகிறது..”

“சேர்…”

இம்முறை கொஞ்சம் அழுத்தமாகவே கூப்பிட, மாஸ்டர் திரும்பிப்பார்த்தார். மூன்றாவது வரிசையில் இருந்த மயூரன் தான்; மயூரன் வகுப்பில் பெரும் கெட்டிக்காரன் கிடையாது. முதலாம் தவணை என்றால் தட்டுத்தடுமாறி பத்தாம் பிள்ளைக்குள் வந்துவிடுவான். இரண்டாம் மூன்றாம் தவணைகள் கொஞ்சம் டைப்படித்து பன்னிரெண்டு பதினைந்து என்றாகிவிடும். அழுத்தக்காரன். அப்பா வைத்தி, கல்வியங்காட்டு சந்தையில் தேங்காய் கடை வைத்திருக்கிறார். ஞாயிற்றுகிழமையானால் இவனும் போய் கடையில் உட்கார்ந்துவிடுவான். கணக்கு பாடம் கொஞ்சம் செய்வான். அதிலும் சிட்டை கணக்கு ஒருநாளும் பிழைக்காது.

சோக் கட்டியை மேசையில் போட்டுவிட்டு மயூரனிடம் நெருங்கினார் மாஸ்டர்.

“என்ன பிரச்சனை?”

“சேர் வந்து... நேத்து மந்திரி பரீட்சை பேப்பர் திருத்தி தந்தனிங்களல்லோ”

“அதுக்கென்ன?”

மாஸ்டரின் இரண்டு கைகளும் இப்போது இரண்டு பொக்கெட்டுகளிலும் நுழைந்திருந்தது. ஆனையிறவிலிருந்தும் மாங்குளத்திலிருந்தும் இருமுனைகளை திறந்துகொண்டு ஸ்ரீலங்கா இராணுவம் ஜெயசிக்குறு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

“அதில இலையானுக்கு எத்தனை கால்கள்? எண்ட கேள்விக்கு நான் ஆறு எண்டு போட்டிருக்கிறன். நீங்க பிழை போட்டிருக்கிறீங்க”

“எந்த ஊரிலையடா இலையானுக்கு ஆறு கால்? அதுக்கு சரியான ஆன்சர் எட்டு தான்… பேசாம கிட”

“இல்ல சேர்... எனக்கு வடிவா தெரியும் .. இலையானுக்கு ஆறு கால் தான்”

மாஸ்டருக்கு சரக்கென்று கோபம் வந்தது.

“நீ எனக்கு படிப்பிக்கப்போறியோ? அதெல்லாம் எட்டு கால் தான் .. வேணுமெண்டா லைப்ரரில போய் பார்”

“இல்ல சேர் .. அடிச்சு சொல்லுறன் .. ஆறு தான்”

மயூரன் தொடர்ந்து அழும்பு பிடிக்க, மாஸ்டருக்கு இப்போது கோபம் தலைக்கேறி, கட கடவென்று மேசைக்கு போனார். அங்கே இருந்த கிளுவை தடியை எடுத்து வந்து,

“கையை நீட்டு .. எங்க இப்ப சொல்லு .. இலையானுக்கு எத்தனை கால்”

“…. அம்மானை … ஆறு சேர்”

“படீர்” என்று மயூரனின் கையில் அடி விழுந்தது. “அம்மா” என்று கத்திக்கொண்டே சடக்கென்று கையை உதறினான் மயூரன், கண்கள் இலேசாக கலங்கிவிட்டது அவனுக்கு.

“எங்க பார்ப்பம் .. இப்ப எத்தினை கால் எண்டு .. “

“இல்ல … சேர் .. வீட்டில ..”

“சுளீர்” என்று இம்முறை சுருதி மாறியது. கிளுவை நுனி இலேசாக வெடித்து வழுக்கல் சிதறி பக்கத்து கதிரை சஞ்சீவன் முகத்தில் தெறித்தது. மயூரன் இன்னமும் உதறிக்கொண்டே கதறினான்.

“செல்லம் .. இப்ப சொல்லுங்கோ இலையானுக்கு எத்தினை கால்கள்?”

“… ட்டு சேர்..”

“வடிவா கேக்கேல்ல, வகுப்பில எல்லோருக்கும் கேக்கோணும்; எங்க கத்தி சொல்லு பார்ப்போம்.. ஆ இலையானுக்கு”

“…இலையானுக்கு மொத்தமா … எட்டு ..கால்கள் சேர்”

மயூரன் அழுதுகொண்டே சொன்னான்.

“தேங்காய் லோட் ஏத்திறதுகள் எல்லாம் கேள்வி கேட்க வெளிக்கிட்டிதுகள்… இதுகளுக்கு அடி உதவிறது போல அண்ணன் தம்பி உதவாங்கள்”

சொல்லிக்கொண்டே அரியலிங்கம் மாஸ்டர் கரும்பலகைக்கு போனார்.

“சூழலில் ஒரு இனத்திலிருந்து இன்னொன்றுக்கு உணவும் சக்தியும் கடத்திச்செல்லபடுவதை”..

ஜெயசிக்குறு ஒப்ரேஷனில் இராணுவம் மீண்டும் முன்னேற ஆரம்பித்திருந்தது.

-------------------------------------

“என்ன சேர், என்ர பெடியனுக்கு நேற்று அடிச்சுப்போட்டியலாம்?”

அடுத்தநாள் வகுப்பில் வைத்தி திடும் என்று இப்படி வந்து நிற்பார் என்று அரியலிங்கம் மாஸ்டர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார். பாடசாலை வருவதற்காக வைத்தி கட்டியிருந்த புது சாரம் படக் படக் என்று பொங்கியிருந்தது. உரிக்க முயன்றும் முடியாமல் போன ஸ்டிக்கரில் கிப்ஸ் பிராண்ட் இன்னமும் வெளித்தெரிந்தது. மேலுக்கு நீலக்கலரில் மார்டின் சேர்ட், இரண்டு பட்டன்கள் போடாமல் கிடக்க, கழுத்தில் தொங்கிய செயின், தேங்காய் ஏன் எண்பது ரூபாய்? என்பதற்கு விளக்கம் கொடுத்தது. மாஸ்டருக்கும் வைத்தியின் கடையில் தனக்கிருக்கும் அக்கவுண்ட் ஞாபகம் வர,

“என்ன வைத்தி இதுக்கு போய் இவ்வளவு தூரம் வந்தியா? இவன் பெடியன் ஒரு கேள்வி பிழையா சொல்லி..”

“இலையானுக்கு மெய்யாலுமே எத்தினை கால் சேர்?”

“இதென்ன கதை .. பூச்சிக்கு எல்லாம் எட்டு கால் தான் .. இலையான் எண்டா என்ன ..நுளம்பு எண்டா என்ன? எல்லாத்துக்கும் ஒண்டு தான்”

மாஸ்டருக்கு இப்போது தான் முதன்முதலாக டவுட் வந்தாப்போல இருந்தது. மாஸ்டர் புங்குடுதீவில் எஸ்எஸ்ஸி பாஸ் பண்ணி, டொக்டராகும் ஆசையில் ஸ்கந்தாவரோதயாவில் இங்க்லீஷ் மீடியம் சேர்ந்து பார்த்தார். கல்லு நகரவில்லை. மூன்றாம் தடவையில் ஏஎல் மூன்று பாடம் ஒருவழியாக பாஸ் பண்ணி, ஓரெட்டர் சுப்ரமணியம் கொடுத்த சிபாரிசு கடிதத்தால் சைன்ஸ் மாஸ்டர் ஆனவர்.

“டேய் தம்பி .. அந்த இலையானை எடுத்து காட்டுடா”

வைத்தி மயூரனுக்கு சொல்ல, மயூரன் தன் பொக்கெட்டில் இருந்த நெருப்புபெட்டியை எடுத்து கவனமாக திறந்தான். உள்ளே ஒரு இலையான்; ஓரளவுக்கு பெரிய இலையான். அடிபட்டு செத்துப்போய் கிடந்தது.

“சேர் வடிவா பாருங்கோ .. அடிச்ச அடில ஒரு கால் உடைஞ்சு தொங்குது. ஆனாலும் ஆறுகால் தான்”

மயூரன் சொல்ல சொல்ல, மாஸ்டருக்கு சாதுவாக வியர்க்க ஆரம்பித்தது. கையை பொக்கட்டில் இருந்து வெளியே எடுத்தார். இந்த இருபத்தி ஐந்து வருட எக்ஸ்பீரியன்ஸில் ஒரு இலையான் கூட இந்த காட்டு காட்டியதில்லை. இன்றைக்கு செத்த இலையான் ஒன்று மாஸ்டருக்கு தண்ணி காட்டுகிறது.

“இல்ல .. இது வந்து .. நீங்க அடிச்ச அடில மற்ற ரெண்டு காலும் அடிச்ச இடத்திலேயே உடைஞ்சு ஒட்டியிருக்கும்..அதோட இந்த இலையான் உண்மையிலேயே இலையான் வகை இல்லை .. இது ஒரு பூச்சி வகை .. தென்னை மரத்தில ….”

மாஸ்டர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மயூரன் தன் பையிலிருந்து ஒரு ஷொப்பிங் பாக்கை இப்போது வெளியே எடுத்தான். பாக்கின் உள்ளே இருபது முப்பது இலையான்கள். குற்றியுரும் குலையுயிருமாய் ஊர்ந்துகொண்டிருந்தது. சின்னதும் பெரிதுமாய்;

“நேற்று பின்னேரம் முழுக்க இவனுக்கு இதான் வேலை சேர். டியூஷனுக்கும் போக இல்லை. ஒரு அடி மட்டத்தை எடுத்து கண்ட இலையான் எல்லாத்தையும் அடி அடி என்று அடிச்சு, பத்தாம தேங்காய் கடைக்கும் வந்திட்டான். சந்தையடியிலையும் விசாரிச்சம் சேர் .. ஆறு கால் தானாம்..”

மாஸ்டர் தான் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார். இனி தப்ப முடியாது. “இலையானுக்கு நிஜமாகவே ஆறுகால் தான் போல. ஐயோ, இவன் வைத்தி கொம்ப்ளைன் பண்ணினால் பிரின்சி நாயாய் குலைக்குமே” என்று யோசிக்க மாஸ்டருக்கு கொஞ்சம் நடுக்கமும் தொடங்கியது.

“இல்லை வைத்தி அது மார்க்கிங் ஸ்கீம்ல அப்பிடித்தான் இருக்கு. இலையான் எண்டுறது டிப்டேரா எண்ட விஞ்ஞான குடும்பத்தை சேர்ந்த பூச்சி .. எட்டு கால் தான் இருக்கோணும். எதுக்கும் நான் மற்ற சயன்ஸ் டீச்சர்மாரோடையும் கதைச்சிட்டு செய்யுறன். உண்மையிலேயே இலையானுக்கு ஆறுகால் தான் என்றால் கோட்டக்கல்வித்திணைக்களத்துக்கு அனுப்பி எடுக்கோணும். சிலபஸும் மாத்தோணும். நீ யோசியாத .. நான் சரியா திருத்தி கொடுக்கிறன்”

மாஸ்டர் டிப்டேரா, கோட்டக்கல்வி, சிலபஸ் என்று வைத்திக்கு புரியாத பாஷையில் விளக்கம் கொடுத்து சமாளித்தார்.

“என்னத்த சீலம்பா டிப்பரோ, அறுந்த இலையானுக்கு எத்தினை கால் எண்டு கூட தெரியாத படிப்பு… ”

புலம்பிக்கொண்டே வைத்தி புறப்பட, மாஸ்டர் வகுப்பறையை திரும்பிக்கூட பார்க்காமல் நேரே கரும்பலகைக்கு போனார்.

கதையை விட்டிட்டு எழுதுங்கடா… விலங்குகளில் தாவர உண்ணி, விலங்கு உண்ணி, அனைத்தும் உண்ணி என்று ..”

ஜெயசிக்குறு நடவடிக்கை மீள ஆரம்பிக்க தொடங்கியது. மெதுவாகவும் பலமாகவும். வறு..வறு…வறு….

படீர்”

“என்னடா அங்க சத்தம்?”

..

“சரியான இலையான் சேர்”

------------------------------------------ முற்றும் -------------------------------------------------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]மிக அற்புதமாக எழுதப்பட்டுள்ளது [/size]

Link to comment
Share on other sites

சோக் கட்டியை மேசையில் போட்டுவிட்டு மயூரனிடம் நெருங்கினார் மாஸ்டர்.

“என்ன பிரச்சனை?”

“சேர் வந்து... நேத்து மந்திரி பரீட்சை பேப்பர் திருத்தி தந்தனிங்களல்லோ”

“அதுக்கென்ன?”

மாஸ்டரின் இரண்டு கைகளும் இப்போது இரண்டு பொக்கெட்டுகளிலும் நுழைந்திருந்தது. ஆனையிறவிலிருந்தும் மாங்குளத்திலிருந்தும் இருமுனைகளை திறந்துகொண்டு ஸ்ரீலங்கா இராணுவம் ஜெயசிக்குறு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

ஜே கே ஒரு இலையானை இவ்வளவு வடிவாக அடித்து நான் பார்க்கவில்லை . நீங்களும் சாத்திரியும் பல களங்களைத் திறந்து பொக்ஸ் அடிப்பதில் வித்தகர்கள் . உங்களைப் போன்றவர்கள் வந்தால் தான் " கதை " வாசித்த உணர்வு எனக்கு வருகின்றது . நீங்கள் அடிக்கடி வந்து கதை எழுதவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..”

. மாஸ்டர் புங்குடுதீவில் எஸ்எஸ்ஸி பாஸ் பண்ணி, டொக்டராகும் ஆசையில் ஸ்கந்தாவரோதயாவில் இங்க்லீஷ் மீடியம் சேர்ந்து பார்த்தார். கல்லு நகரவில்லை. மூன்றாம் தடவையில் ஏஎல் மூன்று பாடம் ஒருவழியாக பாஸ் பண்ணி, ஓரெட்டர் சுப்ரமணியம் கொடுத்த சிபாரிசு கடிதத்தால் சைன்ஸ் மாஸ்டர் ஆனவர்.

------------------------------------------ முற்றும் -------------------------------------------------

கதை அருமை :icon_idea:

ஆனால்டபச்சைபோட முமுடிடியவில்லை

இதில் ஏதோ உள்க்குத்து இருக்கு போல தெரியுது

பொல்லைக்கொடுத்து அடி வாங்கக்கூடாதல்லவா? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்....

இவ்வளவு விசயம் இலையானுக்குள்ள மறைஞ்சிருக்கு!

வாத்தியாரும் பிரணவத்திற்கு, அர்த்தம் கேட்ட சிவனின் திரிசங்கு நிலையில்!

சிவனாவது வாய் பொத்தி, முருகனிடம் பாடம் கேட்டார்!

வாத்தியும், காற்சட்டைப் பொக்கற்றுக்குள்ள கையும்... கதை நல்லா இருக்கு, படலை!

புங்குடுதீவு என்ன, மரக்கறி வகைகளில் புடலங்காயா?

கல்வியில் அவ்வளவுக்குப் பின்தங்கி விட்டதா, புங்குடுதீவு இப்போது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்டர் டிப்டேரா, கோட்டக்கல்வி, சிலபஸ் என்று வைத்திக்கு புரியாத பாஷையில் விளக்கம் கொடுத்து சமாளித்தார்.

“என்னத்த சீலம்பா டிப்பரோ, அறுந்த இலையானுக்கு எத்தினை கால் எண்டு கூட தெரியாத படிப்பு… ”

புலம்பிக்கொண்டே வைத்தி புறப்பட, மாஸ்டர் வகுப்பறையை திரும்பிக்கூட பார்க்காமல் நேரே கரும்பலகைக்கு போனார்.

கதையை விட்டிட்டு எழுதுங்கடா… விலங்குகளில் தாவர உண்ணி, விலங்கு உண்ணி, அனைத்தும் உண்ணி என்று ..”

ஜெயசிக்குறு நடவடிக்கை மீள ஆரம்பிக்க தொடங்கியது. மெதுவாகவும் பலமாகவும். வறு..வறு…வறு….

படீர்”

“என்னடா அங்க சத்தம்?”

நல்ல அருமையான, நகைச்சுவைக் கதையை எழுதிய Jkக்கு நன்றிகள்.

கதையை வாசித்த பின்பும்.. சிரிப்பை, அடக்கமுடியவில்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி லியோ

நன்றி கோமகன்

நன்றி @விசுகு! .. ஐயையோ .. எதுக்கப்பா இந்த நாரதர் வேலை எல்லாம் .. நான் சும்மா flowவில எழுதினது .. ஊர் பேர் பாவிச்சா தான் ஒரு முழுமை கிடைக்கும் இல்லையா ... சிக்கல் என்றா ஒரு மெசேஜ் தாங்க .. அத அப்பிடியே நயினாதீவு ஆக்கிடுவோம்!

அன்பின் புங்கையூரான்!

//கல்வியில் அவ்வளவுக்குப் பின்தங்கி விட்டதா, புங்குடுதீவு இப்போது? //.

நான் அப்பிடி எழுதவில்லை .. ஏதாவது ஊர் பெயர் போட்டா தான் நல்லா இருக்கும் என்று தோன்றியது. நயினாதீவு, வட்டக்கச்சி, கோண்டாவில் என்று பழைய கதைகளில் ஏற்கனவே கனக்க பெயர்கள் பாவித்துவிட்டதால் இம்முறை புங்குடுதீவு என்று எழுதிவிட்டேன்.

சர்ச்சை அதிகமாகும் என்றால் இப்படி மாற்றிவிடுவோம்.

" மாஸ்டர் ஜூபிட்டர் கிரகத்தில் எஸ்எஸ்ஸி பாஸ் பண்ணி, டொக்டராகும் ஆசையில் யுரேனஸ் மத்திய மகாவித்தியாலயத்தில் இங்க்லீஷ் மீடியம் சேர்ந்து " ...

:)

நன்றி தமிழ் சிறி ..

தொடர்ந்து ஊக்கம் தாருங்க யாழ் கள நண்பர்களே.

Link to comment
Share on other sites

" மாஸ்டர் ஜூபிட்டர் கிரகத்தில் எஸ்எஸ்ஸி பாஸ் பண்ணி, டொக்டராகும் ஆசையில் யுரேனஸ் மத்திய மகாவித்தியாலயத்தில் இங்க்லீஷ் மீடியம் சேர்ந்து " ...

தொடர்ந்து ஊக்கம் தாருங்க யாழ் கள நண்பர்களே.

இதில ஒரு பீலிங் இருக்காது !!! நீர் சும்மா சலசலப்புக்கு பயப்படாம, உண்ர்வுபூர்வமாக (நேட்டிவிட்டியோட) வெழுத்து வாங்கும்.!!!

தொடர்ந்து ஊக்கம் தாருங்க யாழ் கள நண்பர்களே.

எப்பிடி வேணும்?. குளிகையாயோ ? பொடியாயோ ? :wub: சும்மா அடிச்சா ஒரே ஊக்கமாயிருக்கும் :D

அடுத்த கதைக்கு காத்திருக்கிறேன் <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//..எப்பிடி வேணும்?. குளிகையாயோ ? பொடியாயோ ? :wub: சும்மா அடிச்சா ஒரே ஊக்கமாயிருக்கும்//

அதான் சொல்லீட்டிங்க இல்ல .. அடி இனி தூள் தான் தலைவரே! எழுதிடுவோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

<p>

தொடர்ந்து ஊக்கம் தாருங்க யாழ் கள நண்பர்களே.

நாமிருக்க பயமென்?தொடருங்கோ....சிட்னிக்கு வந்திருக்கிறீயள் போல?சந்திக்கமுடியாமல் போய்விட்டது
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெக்கைக்கு, இலையான் வருவது இயல்பு தானே....

காகம் இல்லாத ஊரும் இல்லை, இலையான் இல்லாத நாடும் இல்லை.

Link to comment
Share on other sites

[size=5]கதையை வாசிக்கும் போதே எமது வகுப்பறை தான் நினைவுக்கு வருகிறது . [/size]

[size=5]அழகான கதை .[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பற்பசையில் போதைப்பொருள்: கொழும்பு சிறைச்சாலையில் சம்பவம். கொழும்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை பார்வையிட வந்த நபரொருவர் பற்பசை டியூபுக்குள்(Tube)  போதைப்பொருளை மறைத்துவைத்துக் கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்களைத் சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த நபர் கொண்டுவந்த பொருட்களைச் சோதனையிடும் போதே  போதைப்பொருள் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் அந்நபரைக் கைது செய்த பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1378656
    • இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26!   போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.