Jump to content

அந்தநாள் ஞாபகங்கள்


Recommended Posts

கள்ளமாகக் கள்ளுக் குடித்தல்

http://ta.wikipedia....sh&bubbling.jpg

Toddy_fresh%26bubbling.jpg

பல கள்ளு முட்டிகளுக்கு கல் எறிந்து உடைத்த அந்த நாள் ஞாபகங்கள் இன்றும் மனதில்.

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply

மாட்டு வண்டில் சவாரி

28032011parampariyamL.jpg

ஒவ்வொரு வருடமும் தவற விடாது வட்டக்கச்சிக்கு சென்று இந்த மாட்டு வண்டி சவாரியை பார்த்த ஞாபகம் :D

நுங்கு குடித்தல் .

nungku.JPG

http://umarikadu-nad...anai-maram.html

வட்டகச்சியில்

நுங்கு குடித்தது

கள்ளு குடித்தது

மீன் பிடித்தது

முயல் அடித்தது என இன்னும் எத்தனையே அந்த நாள் ஞாபகங்கள்.

நன்றி கோமகன் உங்கள் இணைப்பிற்கு.

கோழிச்சண்டை தீபாவளியில சூடுபறக்கும்.

http://www.google.fr...r:20,s:36,i:252

kaakavalluvarpedu.jpg

Link to comment
Share on other sites

பெடியள் சேர்ந்து களவாக கோழி கறி காச்சி பாணுடன் சாப்பிட்டது அதைவிட சிறியவயசில் கள்ளன் போலிஸ் விளையாடினது கிட்டி பொல்லு விளையாட்டில் பெல்லி நெற்றியில் பட்டு காயம் ஏற்பட்டு பின்னர் அம்மாவிடம் பூவரசம் தடியால் அடிவாங்கியது அதைவிட சிறிய வயசில் மாங்காய் களவெடுத்து சாப்பிடுவது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . :D:lol:

பெடியள் செட் சோ்ந்தாலே சொல்லவா வேனும் தமிழரசு :D அதுவும் மாங்காய களவெடுத்து அதை மதிலிலோ அல்லது களவெடுத்த மரத்திலோ குத்தி உடைச்சு சாப்பிடுறது அது ஒரு தனி டேஸ்ட் தான். :D

Link to comment
Share on other sites

make-simple-sling-shot-800x800.jpg

சிறு வயதிலே கொலைகாரன் என்ற பெயரை எமக்கு வாங்கி தந்த பெருமை இந்த கெட்டப்பொல்லுக்கு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலப் படங்களுக்குப், படத்தின்ர பேரப் பாக்காம ' வயது வந்தவர்களுக்கு' மட்டும், எண்டு எழுதியிருக்கிறத மட்டும், அவசரத்தில பாத்திட்டுத் தியேட்டருக்குள்ள, நண்பர்களோட இருட்டில ஓடிப் போய் இருக்கிறது!

பிறகு, ஒண்டையும் காணாம, மூட்டை கடியும் தாங்க ஏலாமல், விரக்தியுடன் திரும்பி வருவது! :huh:

Link to comment
Share on other sites

கிளித்தட்டு

Game_Kittip-pullu.jpg

http://upload.wikime...ittip-pullu.jpg

தாச்சி மறித்தல்

sarana13.jpg

http://mankavuchi.bl...01_archive.html

இந்த திரி பல சிறுவயது விளையாட்டுகளை நினைவுக்கு கொண்டுவருகிறது.

கிளி தட்டு/ தாச்சி மறித்தல் இரண்டும் ஒன்றில்லையா.

நீங்கள் கிளிதட்டு என்று போட்டிருப்பது கிட்டி புள்ளு/ பொல்லு

Link to comment
Share on other sites

நுங்கு குடித்தல் .

nungku.JPG

http://umarikadu-nad...anai-maram.html

கோமகன் உங்களில் பிழை பிடிக்கவில்லை. மேலே நீங்கள் இணைத்திருக்கும் வலைப்பதிவுக்கு உரியவர் நான் 2007 ஆம் ஆண்டு எழுதிய பனைமரம் பற்றிய பதிவை தனது பதிவாக வரிக்குவரி பிரசுரித்துள்ளார் :o

இது தான் எனது மூல பதிவு

http://viriyumsirakukal.blogspot.ca/2007/05/blog-post_02.html

Link to comment
Share on other sites

இந்த திரி பல சிறுவயது விளையாட்டுகளை நினைவுக்கு கொண்டுவருகிறது.

கிளி தட்டு/ தாச்சி மறித்தல் இரண்டும் ஒன்றில்லையா.

நீங்கள் கிளிதட்டு என்று போட்டிருப்பது கிட்டி புள்ளு/ பொல்லு

தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றிகள் குளக்காட்டான் . திருத்தம் செய்துள்ளேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சின்னல்லை பரிமளத்தோடை சேர்ந்து குரும்பட்டியிலை தேர்செய்து இழுத்தஞாபகம் இப்பவும் கண்ணுக்கு முன்னாலை நிக்குது...அதோடை களிமண்ணிலை புக்கைபொங்கி சிரட்டையுக்கை பரிமாறினதும் கண்ணை கலங்க வைக்குது.......எல்லாத்தையும் விட சும்மா பகிடிக்கு அப்பாஅம்மா விளையாட்டு விளையாட வெளிக்கிட பரிமளத்தின்ரை தாய்க்காரி என்ரை சொத்தையிலை இரண்டு தந்ததும் மறக்கேலாது.

Link to comment
Share on other sites

கோமகன் உங்களில் பிழை பிடிக்கவில்லை. மேலே நீங்கள் இணைத்திருக்கும் வலைப்பதிவுக்கு உரியவர் நான் 2007 ஆம் ஆண்டு எழுதிய பனைமரம் பற்றிய பதிவை தனது பதிவாக வரிக்குவரி பிரசுரித்துள்ளார் :o

இது தான் எனது மூல பதிவு

http://viriyumsiraku...og-post_02.html

இப்படி எனக்கும் சிலமுறை எனது வலைப்பூவில் இருந்து களவு போகுது . கணணி மென்பொருள் வித்துவானுகளிட்டை கேட்டன் அவை வழி சொல்லியிருக்கினம் . ஒரு நண்பனிட்டை தான் கேட்டிருக்கிறன் இனி என்ரை வலைப்பூவிலை களவு போகாது நீங்களும் முயற்சி செய்யுங்கோ .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=91984

இது தான் நான் கேட்ட லிங் இதுலையும் போய் பாருங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*பனையோலை பீப்பீ

பனையோலையை(வடலி) உடையாத பருவத்தில் காயவைத்து சுத்தி முடிவை முள்ளால் குத்தி பனையோலையில் நாக்கு செய்து பீப்பீயின் வாயில் செருகி ஊதுவது.

*ஊமல் கொட்டை காத்தாடி

ஊமல்க்கொட்ட்டையில் நடுவில் துவாரம் வைத்து அதில் தடியை சொருகி(அச்சு) தடியின் மேல் அளவாக சீவி எடுத்த பனம் மட்டையை போட்டு ஊமல் கொட்டையின் பக்கவாட்டில் ஒரு துவாரம் வைத்து அதனூடு நூலை திணித்தி அச்சு தடியுடன் கட்டி இழுக்கும் போது காத்தாடி சுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மூரில் நட்சத்திரம் எனும் ஒருவர் இருந்தார்.

மிகப் பெரும் எம்ஜிஆர் அபிமானி.

எம்ஜிஆர் மேல் யாரேனும் குறை சொன்னால் சண்டைக்கு வந்து விடுவார்.

அவர் சைக்கிளில் வரும் நேரம் எமக்கு கொண்டாட்டம்.

'எம்ஜிஆர் வீழ்க' என சிறுவர்கள் மறைந்து இருந்து Turn எடுத்து கத்துவார்கள்.

சைக்கிளில் இருந்து வேகமாக இறங்கி 'நடக்காது, வாழ்க எம்ஜிஆர் ' என்பார்.

மீண்டும் சைக்கிள் ஏறும் வரை காத்திருந்து அடுத்த சிறுவன் தொடர்வான். உடனே இறங்கி அவரும் கத்துவார்.

அவரும் விடார். சிறுவர்களும் விடார்.

கடைசி சிறுவன் போதுமடா, ஆளைப் போக விடு என்று சொல்லும் வரை அவ்விடம் விட்டு நகரார் அவர்.

அது ஒரு காலம்.

Link to comment
Share on other sites

.

பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் ஊருக்குப் போவோம். ஊரென்றாலே சந்தோசம் தான்.

கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளில் மண் எடுத்த இடங்களை குண்டு என்பார்கள். கடல் பெருகி வற்றும் பொழுது இந்தக் குண்டுகளில் தங்கும் கடல் நீரில் சிறிய மீன்கள் மாட்டுப் பட்டு நிற்கும். நாங்கள் மா அரிக்கும் அரிக்கன் தட்டு, சிறிய கடகம் போன்றவற்றால் இவற்றை பிடிக்க நாள் முழுக்க முயற்சி செய்வோம். அம்பிட்டால் ஜாம் போத்தலில் பிடித்த மீன்குஞ்சைக் வீட்டுக்கு கொண்டு வருவோம். பெரிய சாதனை!!

ஈச்சம் பற்றைகளுக்கிக் கிட்டப் போகப் பயம். பாம்புகள்!! யாராவது ஈச்சங்காய் குலை வெட்டித்தருவார்கள். உப்பில் ஊறவிட்டு கறுக்கப் பழுத்ததும் சாப்பிடுவோம்.

நுங்குக்கும் பஞ்சமில்லை. பனம் பழம் நெருப்பில சுட்டும் உருக உருக‌ சாப்பிடுவோம். மாரியில அம்மம்மா வீட்டில பனம் பாத்தி போடுவார்கள். பனங்கிழங்கு அவிச்சு மிளகு வெங்காயம் பச்சமிளகாய் எல்லாம் போட்டு இடிச்சு உருட்டித் தருவார்கள்.

ஊரில சுற்றி வர உள்ள குறிச்சி முழுக்க உறவினர்கள். பின் விறாந்தைக்குப் பின்னால மணலில் வாங்குகள் கதிரைகளப் போட்டு இரவிரா கதைதான். பெரிய பானையில கூலும் காய்ச்சுப்படும்.

அம்மம்மாவின் தமக்கை வீட்டில ஒரு பெரிய வேப்பமரம். அதில உயரமான கொப்பொன்றில ஊஞ்சல் கட்டியிருந்தார்கள். அம்மாவும், அவட ஒன்றவிட்ட சகோதரியும் வலிப்பார்கள். நாங்கள் ஊஞ்சலில உயிரக் கையிலபிடிச்சுக்கொண்டு இருப்போம். ஊஞ்சல் பக்கத்தில் உள்ள தேமா மரத்தின் உச்சி அளவிற்கு போய் வரும்.

கசுரினா கடலில் குளிக்கிறத்தும் அடிக்கடி நடக்கிற ஒன்று. வண்டிலில் போவோம். நாங்களும் நீண்ட நேரம் குளித்து, வண்டில் நாம்பன் மாடுகளையும் குளிப்பாட்டுவோம். கடல் உப்பு நீரில் குளிப்பாட்டினால் மாடுகளுக்கு இலயான் தொல்லை குறைவு. :icon_idea:

Link to comment
Share on other sites

சின்னிலை ஒழிச்சு பிடிச்சு விழையாடுறது எனக்கு நல்ல விருப்பம். ஏனெண்டால் எப்பவும் நான் ஒழிக்க போகேக்குள்ளை என்ரை ஒரு மச்சளையும் இழுத்தக்கொண்டு போய்தான் ஒழிக்கிறனான். கடைசி வரைக்கும் எங்களை கண்டு பிடிக்கவே ஏலாது ஏணென்டால் நான் ஒழிக்கிற எல்லை தாண்டி எங்கையாவது போய் ஒழிச்சிடுவன். அந்த மச்சாள் இப்ப லண்டனிலை இருக்கிறாள். இப்பவும் ஒழிச்சு பிடிச்சு விழையாடினது ஞாபகம் இருக்கோ எண்டு கேட்டால் சீ போடா சனியன் எண்டு வெக்கத்தோடை திட்டுவாள் அததான் ஏனெண்டு தெரியேல்லை :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னிலை ஒழிச்சு பிடிச்சு விழையாடுறது எனக்கு நல்ல விருப்பம். ஏனெண்டால் எப்பவும் நான் ஒழிக்க போகேக்குள்ளை என்ரை ஒரு மச்சளையும் இழுத்தக்கொண்டு போய்தான் ஒழிக்கிறனான். கடைசி வரைக்கும் எங்களை கண்டு பிடிக்கவே ஏலாது ஏணென்டால் நான் ஒழிக்கிற எல்லை தாண்டி எங்கையாவது போய் ஒழிச்சிடுவன். அந்த மச்சாள் இப்ப லண்டனிலை இருக்கிறாள். இப்பவும் ஒழிச்சு பிடிச்சு விழையாடினது ஞாபகம் இருக்கோ எண்டு கேட்டால் சீ போடா சனியன் எண்டு வெக்கத்தோடை திட்டுவாள் அததான் ஏனெண்டு தெரியேல்லை :( :( :(

சாத்திரியார்...

விசயத்தோடை தான்... ஒளிச்சுப் பிடிச்சு விளையாடியிருக்கிறார். :D :D :lol: :lol:

நீங்கள் (ஒரு) பேப்பரிலை... போட்டுடுவியள் எண்ட பயமாய் இருக்கலாம். :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BritishSet1.jpg

பல தரப்பட்ட ரவைகள்.. ரவைக்கூடுகளுடன். மற்றும் சன்னங்கள்

556%20ammo%20belt%20Large.jpg

ரவைத் தொகுதி: செயின்

defused-mortar-shell.jpg

ஷெல் வால் பகுதியில் பா(f)னுடன்.

1987 இல் இந்தியப் படைகளின் வருகையோடு.. சிறீலங்கா இராணுவம்.. யாழ் தொலைத்தொடர்பு கோபுரப் பகுதியில் இருந்து பின் வாங்கி யாழ்ப்பாணக் கோட்டைக்குள் முடங்கிக் கொண்டது. அந்த வேளையில்.. நண்பர்களின் வீடு பார்க்கப் போறது என்று நண்பர்களோடு.. போய்... மிதிவெடிகள் இருக்கும் என்ற பயத்தில்.. மரங்கள்.. வேலிகளூடு ஏறி விழுந்து... சென்ரி பொயிற் இருந்த இடங்களில் காணப்பட்ட சப்பாத்து அடையாளம் வைத்து நாங்களும் நடந்து.. வெற்று ரவைகளும்.. ரவைக் கூடுகளும் லிங்குகளும் பொறுக்கி.. செயின் செய்வது தான் எங்கள் பொழுது போக்கு.

GRENADE%204%5C%27%5C%27.%202178.jpg

JR கையெறி குண்டு. கிளிப்புடன்.

அத்தோடு ஜே ஆர் கைக்குண்டுக் கிளிப்புகள்.... அரைகுறையாக வெடிக்காத ஷெல்.. வெடித்த ஷெல்லின் பா(f)ன்.. பொறுக்கிறதும் எங்கள் தொழில். நாங்கள் இவற்றை விற்பதில்லை. மாறாக வீட்டில் சேமித்து வைத்திருந்தோம்.

பின்னர் இந்தியப் படை.. அதே ஆண்டு ஒக்டோபரில்.. தனது வெறியாட்டை ஆரம்பித்ததும்.. வீட்டில வைக்கிற பயத்தில வெட்டித் தாட்டது தான் ஞாபகம்.

Konus-Army-Binocular-10-x-50-2172.jpg

யாழ் கொட்டடி காவலரண் பகுதியில் ஒரு இராணுவ பைனர்குலரும் மீட்டிருந்தோம்..! மிக நல்ல நிலையில் இருந்தது. அதையும்.. மண்ணில் தாட்டது தான். இப்பவும் இருக்கும். ஆனால்..... எடுக்க முடியாதே...!

10319038.jpg

நண்பர்களோடு போட்டி போட்டுக் கொண்டு.. இவற்றை சேகரித்ததும்.. யாருடைய செயின் நீட்டு என்று அளந்து திரிந்ததும்.. யாரட்ட கனக்க விதம் விதமான ஷெல் பான் இருக்கு.. என்று பேரம் பேசித் திரிந்ததும்.. டபிள்ஸ் வைச்சிருந்தா மட்டும்... அவற்றை இல்லாதவைக்கு விற்று காசாக்கினதும்...

M2_machine_gun.jpg

50 கலிபர் துப்பாக்கி.

cheechak05x600.jpg

பிப்ரி கலிபர் (50 கலிபர் விமான எதிர்ப்பு துப்பாக்கி) ரவைகளைக் கொடுத்து.. கட்டை மணியத்திடம்.. (யாழ் நாவலர் வீதியில் இருந்தவர்.. அவர் உயரம் கம்மி.. அதோடு சொப்பர் சைக்கிளில் தான் ஓடித் திரிவார்.. ஆனால் நடுத்தர வயதானவர்..)... வளர்க்கிற மீன் வாங்கினதும் இன்றும் பசுமையான நினைவுகளாய். :):icon_idea:

3219297908_d432ce34f6.jpg

வளர்க்கிற மீன்களில் ஒரு வகை..! (கோல்ட் பிஸ் வகை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Indian+parrot+wallpaper+1.jpg

நான் வளர்த்த பச்சைக்கிளி

azukuvannaathi(myna).jpg

நான் வளர்த்த மைனா

நினைவுகள் தொடரும் ......

Link to comment
Share on other sites

இப்படி எனக்கும் சிலமுறை எனது வலைப்பூவில் இருந்து களவு போகுது . கணணி மென்பொருள் வித்துவானுகளிட்டை கேட்டன் அவை வழி சொல்லியிருக்கினம் . ஒரு நண்பனிட்டை தான் கேட்டிருக்கிறன் இனி என்ரை வலைப்பூவிலை களவு போகாது நீங்களும் முயற்சி செய்யுங்கோ .

http://www.yarl.com/...showtopic=91984

இது தான் நான் கேட்ட லிங் இதுலையும் போய் பாருங்கோ .

நன்றி கோமகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில் கனகநாயகம் எனும் ஒரு உப அதிபர் இருந்தார். வகுப்பு monitor யாரையாவது முறைப் பாட்டுடன் கூட்டிப் போனால் முதல் சாத்து, பிறகு விசாரணை. செய்த குளப்படிக்கு போட்டது போதுமா என பிறகு ஒரு யோசனை. போதும் என்றால் 'ஓடு நாயே'. போதாவிட்டால், வேற என்ன மீண்டும் சாத்துப்படி.

சும்மா சொல்லக் கூடாது, சொல்லி செய்வித்த, விதம் விதமான பிரம்புகள் வைத்திருப்பார். சோடாப் புட்டி கண்ணாடியால் பார்த்தாலே வயித்த கலக்கும். பட்டம் வைப்பதில் திறமை வாய்ந்த யாழ் இந்து மாணவர்கள் வைத்த பட்டம்: 'மர-நாய்'.

வாரத்தில் ஒரு நாள் வகுப்பு இரண்டாகப் பிரிந்து அரைவாசி ஓவிய வகுப்புக்கும், அரைவாசி சங்கீத வகுப்புக்கும் செல்ல வேண்டும். Lunch பின்னால் வரும் மூன்று பாடங்களில் முதல் இரண்டும் ஸ்ரீதரர் எனும் ஓவிய வாத்தியார் வகுப்பு. அவரது அறைக்குப் போக வேண்டும்.

நண்பன் ஒரு மாயாவி கொமிக்ஸ் புக் வைத்திருந்தான். இரவல் தர முடியாத நிலை. மச்சான் லஞ்ச் டைம் வாசித்துப் போட்டுத் தா என சொல்லி இருந்தான். சாப்பாட்டினை மறந்து மேசையில் இடது கையினை வைத்தபடி, அதில் தலை வைத்து மடியில் புத்தகத்தினை வைத்து வாசித்துக் கொண்டிருந்த எனக்கு லஞ்ச் டைம் முடிந்தது தெரிய வில்லை.

மைதானத்தில் Lunch time விளையாடி நேராக ஓவிய, சங்கீத வகுப்புகளுக்கு எல்லோரும் போனதால் ஒருவரும் alert பண்ணவில்லை.

வகுப்பு monitor ஆக இருந்தவன் மூக்கு அடைப்பு உள்ளவன், பேசும் போது புதியவர்களுக்கு புரியாது. இதனை வைத்தே அவனுக்கும் ஒரு பட்டம் கொடுக்கப் பட்டு இருந்தது. பிரிட்டிஷ் காலனியாக இருந்து சீனாவிடம் கைமாறிய ஒரு சிறு நாட்டின் பேரே அந்த பட்டம்.

கழிவறை செல்ல வந்த நாதாரி என்னை கண்டு விட்டான். 'டோய், வகுப்புக்கு வராமல் புத்தகமா வாசிக்கிறாய் எண்டு பக்கத்தில் வந்து தட்டிய போது தான், அதிர்ந்து போனேன்.

'Art வாத்தி சாத்துவான் மச்சான், சொல்லாத மச்சான் நான் இப்படியே வீட்ட போறான். காச்சல் எண்டு நாளைக்கு சொல்லுவேன்' என்று அவனுடன் போட்ட deal எதுக்குமே அவன் மசிய வில்லை.

எனது பதிலுக்கு காத்திராமல் நேர ஓடிப்போய் Art வாத்தி இடம் கருமமே கண்ணாக வத்தி வைக்க, இருவருமே நான் இருந்த வகுப்பு அறைக்கு, நடுங்கிக் கொண்டிருந்த என்னிடம் வந்தனர்.

Art வாத்தி அண்டைக்கு சாத்தும் மூடில் இல்லை. அதனை 'out source' பண்ண யோசித்தார் போல. ஒரு பார்வை பார்த்து விட்டு, இவனை vice principal இடம் கொண்டு போ என்று சொல்லி விட்டு போய் விட்டார்.

கழிவறை போக வேண்டியதனையும் மறந்து என்னை வெகு சிரத்தையாக பலி ஆடு ஒன்றாய் மர-நாய் இடம் கொண்டு போனான் 'Monitor'.

அறைக்குள் போன உடன், பாய்ந்து எழும்பிய மர-நாய், என்னடா செய்தனி என்று கேட்டுக் கொண்டே பிரம்பை எடுக்க, monitor நாதாரி வாயை திறக்க, மர-நாய் ஒன்றும் புரியாமல் என்னை பார்த்து என்னடா பிரச்சனை என்றார்.

Art class போகாமல் கதைப் புத்தகம்... சொல்லி முடிப்பதற்குள் சாத்துப் படி தொடங்கியது. எனக்கு இல்லை, நம்ம மொனிட்டருக்கு.

'நான் இல்லை சேர்', 'நான் இல்லை....

அடோய், வாயை மூடுடா, பள்ளிக்கூடம் வந்தா படி, கதைப் புத்தகம் வாசிக் கிறதெண்டா வீட்டை ஒடு நாயே'

ஒன்னுக்கு போக வேண்டிய தேவை இல்லாமல் அங்கேயே நாறப் பண்ணும் அளவுக்கு பேச்சாத்து.

'ஓடடா நாயே' கத்திய படியே, என்னை பார்த்து இவன் எதாவது இந்த மாதிரி குழப்படி திருப்பியும் விட்டால் இங்க கொண்டு வா' என்றார்.

பிரச்சனை தனது மூக்கடைப்பில் என புரிந்து அப்பவாவது சும்மா இருந்திருக்கலாம். திரும்பவும் 'அது... நான் .... என தொடங்க, நாயே உன்னை எல்லா வாய் திறக்கக் கூடாது எண்டு சொன்னனான்'. என மேலும் இரண்டொன்று போட, வாங்கிக் கொண்டு வெளியே வந்து 'மச்சான் ஒருத்தருக்கும் சொல்லாத என்டு வடிவேலு ஸ்டைல போட்டான் பாருங்க ஒரு deal.

உங்களுக்கு சொல்லிப் போட்டன் எண்டு அவனுக்கு சொல்லாதீங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, நால்லாய்க் கிட்ட வந்திட்டியள் போல கிடக்கு!

அந்த ஆர் வாத்தி, சோமசுந்தரம் மாஸ்டர் தானே! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூண்டாவது பந்தியில் பேர் இருக்குதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி, நால்லாய்க் கிட்ட வந்திட்டியள் போல கிடக்கு!

அந்த ஆர் வாத்தி, சோமசுந்தரம் மாஸ்டர் தானே! :D

நான் அது அவற்றை பட்டமாக்கும் என நினைத்துவிட்டேன்!

அந்தக் காலங்கள்ல, சொந்தப் பேர் பாவிச்சது குறைவு தானே! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பட்டங்கள்

மொங்குஸ் - பரமநாதன் - கணக்கு வாத்தி

சொதி - பரமநாதன் - தமிழ் வாத்தி

சக்கரை அம்மான் - பரமநாதன் - சமூகக் கல்வி வாத்தி

:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் போர்க்கால சந்ததி. எமக்கு எதிரியான சிங்களவனும்.. இந்தியப் படையினரும்.. கற்றுத் தந்த பாடங்கள் முக்கியமானவை. அதில் முக்கியமானது மின்சாரத் தடை.. எரிவாயுத் தடை.. எரிவாயுச் சிலிண்டர் தடை.. எரிபொருள் கட்டுப்பாடு..மண்ணெண்ணை மட்டுமே அளவோடு விநியோகிக்கப்பட்டது.. பெற்றோலுக்கு முற்றாகத் தடை.. டீசலுக்கும் தடை.. மருந்துக்குத் தடை.. சீமெந்துக்குத் தடை... உலோகக் கம்பிகள்.. உரவகைகளுக்குத் தடை... ஏன் சீனி (சக்கரை).. சாப்பாட்டுக்குக் கூடத் தடை. இதைப் பற்றி எல்லாம் வெளி உலகம் பெரிதாக அலட்டிக் கொண்டதும் இல்லை..! புலிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தியோர்.. சிறீலங்கா சிங்கள அரசு தமிழ் பிராந்தியங்கள் மீது திணித்த இந்தப் பொருண்மியத் தடைகளை கண்டும் காணாமலும்.. அன்றும் வாழாதிருந்தனர்.

இந்தத் தடைகள் சிறீலங்காவில் 1990 களில்.. குறிப்பாக ரணசிங்க பிரேமதாச என்ற... ஐக்கிய தேசியக் கட்சி என்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான கட்சியை பிரதிநிதிப்படுத்திய..ஜனாதிபதியின் காலத்தில்.. அறிமுகமான தடைகளில் முக்கியமானவை.பிரேமதாச 1993 மே 1 இல் குண்டு வெடிப்பில் கொல்லப்பட... டிங்கிரி பண்டா விஜதுங்கா என்ற இன்னொரு ஐக்கிய தேசியக் கட்சி இனவாதி.. ஜனாதிபதியாகி.. இத்தடைகளைத் தொடர்ந்தார்.

அத்தோடு அவர் ஒரு கண்டுபிடிப்பையும் செய்தார். தமிழ் மக்கள்.. சிங்கள மக்கள் என்ற பெருவிருட்சத்தை சுற்றிப் படர்ந்து வாழும் கொடிகள் என்றார். அதனையே பின்னர் சந்திரிக்கா.. ராஜபக்ச போன்றவர்கள் மெய்ப்பித்தும் காட்டினர்... காட்டி வருகின்றனர்.

இந்த தடைகள் எம்மை கிட்டத்தட்ட இரண்டு.. மூன்று.. தலைமுறைகள் பின்னோக்கிச் சென்று வாழ வைத்தன. குறிப்பாக மின்சாரத் தடையும் எரிபொருள் கட்டுப்பாடும்.. உணவுத் தட்டுப்பாடும்.. எம்மை எம் மூதாதையோரின் வாழ்வியல் நோக்கி... போர் சூழலில் இருந்தும்.. பொருண்மியத் தடைகளில் இருந்தும்.. தப்பிப் பிழைத்து.. வாழ உந்தித் தள்ளின.

அதன் பயனாக மீண்டும் பாவனைக்கு வந்தன... கீழ் வருவன. குறிப்பாக மின்சாரத் தடை.. எரிபொருள் தடை மற்றும் கட்டுப்பாடுகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தால்.. மக்கள் பரண்களில் கட்டி வைத்திருந்தவற்றை.. தூசி தட்டி எடுத்தும்.. மற்றும்.. உள்ளூரில் தயாரிக்கப்பட்டு விற்றவற்றை.. வாங்கியும் பாவித்தனர்..!

8-Kerosene-Hurricane-Camp-Lantern-Light-lamp-Storm-Yellow-balck-blue-red.jpg

லாந்தர் விளக்குகள்...

Kerosene_Lamps.jpg

மேசை இலாம்பு.. அல்லது சிமினி விளக்கு

1213388180.jpg

போத்தல் விளக்கு

757454393_4b6fd355a8_o.jpg

குப்பி விளக்கு

candle_2.JPG

மெழுகுதிரி வகைகள்

oil+lamp.jpg

பெற்றோல்மக்ஸ்

lightcap-200-solar-powered-water-bottle-lamp.jpg

உப்பு + மண்ணெண்ணை + தேங்காண்ணெய் விளக்கு

2222209584_5666a16803.jpg

தேங்காய் எண்ணெய் போத்தல் விளக்கு

oil-lamp.jpg

சி(சு)ட்டி விளக்கு

grenade1.jpg

கிரனேட் விளக்கு

www.jpg

குத்து விளக்கு

NR44_Kerosene_Stove.jpg

138_Kerosene_Stoves.jpg

Enders-alcohol-stove.jpg

மண்ணெண்ணை அடுப்புகள்

aTuppu_4.JPG

கல் அடுப்பு

aTuppu_3.JPG

வீட்டடுப்பு

Aduppu5.jpg

மண் அடுப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.