Jump to content

"Vijai Tv" சுப்பர்சிங்கர் போட்டி நிகழ்விலிருந்து கனடாக்குயில் "மகிஷா" வெளியேற்றம்!


Recommended Posts

"Vijai" தொலைக்காட்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களிற்கான சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து முதல் 12 போட்டியாளர்கள் வரிசை வரை முன்னேறி வந்த "கனடாக்குயில்" மகிஷா கடந்த 3ந்திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது வெளியேற்றப் பட்டுள்ளார்.

இதேவேளை இதற்கு முந்திய நிகழ்வின்போது இடம்பெற்ற நிகழ்வில் ஆபத்தான கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள் சம புள்ளிகளை பெற்றிருப்பதாக காரனம் காட்டி மீண்டும் நிகழ்ச்சியிற்குள் உள்வாங்கப் பட்டிருந்தது.

இதில் எனது சந்தேகம் அல்லது கேள்வி என்னவென்றால் இங்கு நடுநிலை வகிப்பவர்கள் பிழைசரி கண்டுபிடிப்பதிற்காக எந்த கருவிகளும் பயன்படுத்துவதாக தெரியவில்லை அதாவது நடுவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானமே தீர்ப்பாக கணிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் நான் கூறவருவது என்னவென்றால் இவர்களால் நடாத்தப்படும் இதைப்போன்ற போட்டி நிகழ்வுகள் இவர்களால் முற்கூட்டியே தங்களிற்கு இசைவாக திட்டமிடப்பட்டு அதன் அடிப்படையிலையே நகர்த்துகின்றார்கள் போலத் தெரிகின்றது.

இதைப்போன்ற பிரபல்யமான ஊடகங்கள் இப்படியான சில கீழ்தரமான நடவடிக்கையினால் தங்களது தரத்தை தாங்களே பின்னகர்த்துவதாக கருத முடிகின்றது.

Link to comment
Share on other sites

எம்மவர் ஒருவர் வெளியேற்றப் பட்டதற்காக நாங்களிப்படி சொல்வது முறையல்ல.

இசையில் ஸ்வர ஸ்தானங்களை எப்படி பாடுகிறார்கள் என்று எப்படி கருவிகளை வைத்து கண்டுபிடிப்பது?

சித்ரா போன்ற சாதனையாளர்கள் இப்படியான கீழ்த்தரமான வேலைகில் ஈடுபடமாட்டார்கள்.

புலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் (எல்லாம் அல்ல ஒரு சில) முன்னரே தெரிவு செய்ப்பட்ட போட்டியாளர்கள் அடுத்த கட்டத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என நடுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கேள்வி.

Link to comment
Share on other sites

அண்மையில் கனடா வந்திருந்த சைலஜா அவர்கள் ரி வி ஐ தொலைக்காட்சியினரின் கேள்வியின் போது எந்த அடிப்படையில் புள்ளிகளை வழங்குவது என்பதை வடிவாக விபரித்திருந்தார்.இதில் ஒரு விடயம் முக்கியமானது.அவர்களின் குரல் வள பயிற்சி மிகவும் முக்கியமானது.

Link to comment
Share on other sites

மாற்று கருத்துக்கள் இருக்கலாம், அதற்காக எம்மவர் மகிசாவை வெளியேற்றிய பின் மத்தியஸ்தர்களை பிழை பிடிப்பது சரியல்ல .

மகிசாவின் அம்மாவே சொன்னார் தான் இருபதிற்குள் மகள் வருவாரோ என்ற சந்தேகத்தில் தான் இருந்ததாகவும் இவ்வளவும் வந்ததே பெரிய சந்தோசம் என்று.

கடந்த சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் இறுதிபோட்டி முடிவு பலரை முகம் சுழிக்க வைத்ததும் நினைவில் கொள்ளவேண்டும் ஆனால் மக்கள் தீர்வு அது என்றால் யாரும் எதுவும் செய்யமுடியாது.

இதை அளவிட கருவி வேறு இருக்கா?

Link to comment
Share on other sites

இங்கு நடுவர்களில் தவறிருப்பதாக நான் கருதுகிறேன்.

மகிஷா இன்னொரு சிறுவன். இருவரில் ஒருவர் நீக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் அவர்களின் முடிவு தவறாக இருந்தது. இன்னொரு திரியில் நான் எழுதிய கருத்தையே இங்கும் தருகிறேன்.

இது விடயத்தில் மற்றவர்கள் எதை வைத்து பிழை பிடித்தார்களோ தெரியாது. ஆனால் நான் ஜட்சில் பிழை பிடித்ததன் காரணம் அவர்கள் ஜட்ச் பண்ண வந்த பின்னர் மருத்துவ காரணங்களை ஒரு காரணமாக வைத்து உரியவர் மேல் இரக்கப்பட்டு அவருக்கு சலுகை அளித்ததன் காரணமாக.

அன்று அந்த சிறுவனுக்கு பாட முடியாமல் இருந்ததற்கு இவர்கள் இரக்கப்பட்டால் அன்று எவரையும் வெளியேற்றாமல் இன்னொருநாள் மீண்டும் போட்டியை வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த சிறுவன் மேல் கொண்ட இரக்கத்தால் மகிஷாவை வெளியேற்றினார்கள்.

மேலதிக தகவலுக்கு இத்திரியிலுள்ள காணொளியை பாருங்கள். (48.14 இலிருந்து பாருங்கள்)

http://www.yarl.com/...=20#entry773267

Link to comment
Share on other sites

இதை ஒரு போட்டியாக மட்டும் பாருங்கள். கனடா சிறீ லங்கா இந்தியா என்று பிரித்து பார்ப்பதானால்... போட்டியில் கலந்துகொண்டதே முதற்தவறு.

நான் கிரமாக போட்டியை பார்க்கவில்லையாயினும் குறிப்பிடத்தக்களவு பார்த்துள்ளேன். எனது பார்வையில் மகீஷாவுடன் ஆபத்தான கட்டத்தில் நின்ற குண்டு சிறுவன் மிகுந்த திறமைசாலி. குறிப்பிட்ட இந்தச்சுற்றின் கலகலப்பில் அவன் முக்கியதோர் பார்த்திரம். ஒட்டுமொத்த குழாமில் அவன் சிறந்த Entertainer எனவும் கூறலாம்.

நடுவர்கள் முகமன் பார்த்து முடிவுகளை தெரிவு செய்கின்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

நடுவர்கள் முகமன் பார்த்து முடிவுகளை கூறுவதானால்.. உலகறிந்த வித்துவான் ராஜேஷ் வைத்யாவின் புதல்வி வெளியேற்றப்பட்டிருக்க மாட்டாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இசையைப் பற்றி அதிகம் தெரியாது.

யாரும் நன்றாகப் பாடினால் அவர்களை மனதாரப் பாராட்டுவேன்.

நடுவர்கள் முடிவை ஏற்பதில் நான் என்றும் பின்வாங்கியதில்லை.

காரணம் என்னைவிட இசையின் அறிவு அவர்களுக்கு அதிகம்

இருக்கும் என்ற நிச்சயமான நம்பிக்கை.

Link to comment
Share on other sites

மிகவும் நன்றாக பாட கூடிய ஒரு பாடகி ஆடி,பாடுவது ரவுண்டில் ஆடாமல் பாடியதற்கு நீக்கப்பட்டார்.அவரை நான் இறுதி மூன்றிற்குள் வைத்திருந்தேன் .அவருக்கு திரும்ப கொடுத்த சந்தர்பந்தத்திலும் அவர் ஆடவே இல்லை .வெளியேற்றி விட்டார்கள்,மிக நல்ல பாடகர் .அவர் பெயர் நினைவில்லை சுருட்டை மயிர் சிறுமி .

அப்போது ஏன் எமது உறவுகள் கொந்தளிக்கவில்

வெளிநாடு வந்துதான் நான் தோல்வியையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கற்றுக்கொண்டேன் .அதை எம்மவர் எல்லோரும் கற்று கொள்ள வேண்டுகின்றேன் .

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா சொல்லும் பாடகி பற்றி எனக்கு தெரியவில்லை.

பாடகர்களுக்கு ஆடல் தேவையில்லை தான். இருந்தாலும் ரவுண்டின் பெயரே ஆடிப்பாடும் ரவுண்ட் என்னும் போது அவர்கள் ஆடலையும் கருத்தில் கொள்வார்கள் என்று சொல்லும் போது எதுவும் கூற முடியாது. வேண்டுமென்றால் பாடுவதை மட்டும் கருத்தில் கொள்ளுமாறும் ஆடுவதை கருத்தில் கொள்ள வேண்டாமென்றும் நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் யாராவது கேட்க வேண்டும்.

இங்கு எல்லோரையும் விட மகிஷா தான் கெட்டிக்காரி என்று சொல்லி நான் சண்டை பிடிக்க வர மாட்டன். ஆனால் அந்த சுற்றில் அவர் நன்றாக பாடியிருந்தார். நன்றாக பாடாத ஒரு சுற்றில் அவரை வெளியேற்றி இருந்தால் நடுவரில் பிழை பிடித்திருக்க மாட்டேன்.

அதே நேரம் அந்த சிறுவனுக்கு காய்ச்சல் இருந்தது என்றும் அதனால் சரியாக பாட முடியவில்லை என்றும் அவர் தாயார் குறிப்பிட்டார். இப்படியொரு சம்பவம் நடக்காத சுற்றில் அந்த சிறுவன் நன்றாக பாடி மகிஷா பாடாமல் விட்டு அவரை வெளியேற்றி இருந்தாலும் நான் நடுவரில் பிழை பிடித்திருக்க மாட்டன்.

Link to comment
Share on other sites

பிரேம்கோபால் பிரேமினி கூட நல்ல நடனக்கலைஞர்கள் தான். ஆனால் பல சுற்றில் மற்றவர்களை விட நன்றாக ஆடிய போதும் கிடைக்காத பரிசு இந்த சுற்றில் அவர்களை விட வேறு சிலர் நன்றாக ஆடியும் பிரேம்கோபால் பிரேமினிக்கு கிடைத்தது.

காரணம் பிரேமினி accident பட்டதால் கொண்ட இரக்கம். வேறு சுற்றில் கிடைத்திருந்தால் அவர்கள் சந்தோசப்பட்டிருப்பார்கள்.

நடனம் மாஸசாக இருக்க வேண்டுமென்றும் அவர்கள் பயன்படுத்தும் பாடலும் (தனியே இசை அல்ல, பாடல்) மற்றவர்கள் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டுமென்றும் அப்பொழுது தான் பார்வையாளர்களின் ஆவலை அது பூர்த்தி செய்யும் என்றும் முதல் ஒரு நாள் நடுவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால் இந்த சுற்றில் இரண்டும் இவர்கள் நடனத்தில் இல்லை. ஆனால் இவர்களுக்கு பரிசு கிடைத்தது.

நிச்சயம் அவர்கள் நன்றாக நடனம் ஆடக்கூடியவர்கள். வலியின் மத்தியிலும் அவர்கள் நன்றாக ஆடியிருந்தார்கள். அதையும் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு பிடித்த நடன கலைஞர்கள் கூட. ஆனால் நடுவர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது இந்த நடனத்தில் இல்லை.

இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் எம் நாட்டவரை போட்டியில் வெளியேற்றி விட்டதால் தான் நாங்கள் ஜட்சில் பிழை பிடிக்கிறோம் என்று சொன்னதால்.

உண்மையில் அப்படியல்ல எம் நாட்டவருக்கு நல்லது நடந்ததற்கும் ஜட்சில் பிழை என்றால் நாம் ஜட்சில் பிழை பிடிக்கிறோம் என்று நான் கூற தான்.

5.03 இலிருந்து இந்த காணொளியை பாருங்கள்.

1.07 இலிருந்து இந்த காணொளியை பாருங்கள்.

[media=]

Link to comment
Share on other sites

உண்மையில் நான் விரும்பிப் பார்க்கும், ரசிக்கும் ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் "சுப்பர்சிங்கர்" நிகழ்ச்சி மட்டும்தான்.

இதற்கு முதல்தடவையும் சில ஈழத்தமிழர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தது அறிந்ததே.

நான் தெளிவுபடுத்த விரும்பும் விடயம் என்னவென்றால் "மகிஷா"வை வெளியேற்றும் அளவிற்கு இந்த தடவை சரியான முறையில் நடுவர்கள் நடுநிலை வகிக்கவில்லை என்பது தான் எனது கருத்தாகும்.

மற்றும்படி நடுவர்களில் எனக்கு எந்தவிதமான தப்பான அபிப்பிராயமும் கிடையாது.

இதில் நான் எந்தவிதமான பாகுபாடும் நினைப்பதில்லை, இன்னும் வெளிப்படையாக கூறப்போனால் இதுவரை இடம்பெற்ற "சுப்பர்சிங்கர்" நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களில் எனது மனதில் இப்போதும் நிலைத்திருப்பவர்கள் "நித்தியசிறி" "சிறிநிஷா" "பிரியங்கா" போன்றவர்கள் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.