Jump to content

"Vijai Tv" சுப்பர்சிங்கர் போட்டி நிகழ்விலிருந்து கனடாக்குயில் "மகிஷா" வெளியேற்றம்!


Recommended Posts

"Vijai" தொலைக்காட்சியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்களிற்கான சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து முதல் 12 போட்டியாளர்கள் வரிசை வரை முன்னேறி வந்த "கனடாக்குயில்" மகிஷா கடந்த 3ந்திகதி இடம்பெற்ற நிகழ்வின்போது வெளியேற்றப் பட்டுள்ளார்.

இதேவேளை இதற்கு முந்திய நிகழ்வின்போது இடம்பெற்ற நிகழ்வில் ஆபத்தான கட்டத்திற்கு வந்த நான்கு போட்டியாளர்கள் சம புள்ளிகளை பெற்றிருப்பதாக காரனம் காட்டி மீண்டும் நிகழ்ச்சியிற்குள் உள்வாங்கப் பட்டிருந்தது.

இதில் எனது சந்தேகம் அல்லது கேள்வி என்னவென்றால் இங்கு நடுநிலை வகிப்பவர்கள் பிழைசரி கண்டுபிடிப்பதிற்காக எந்த கருவிகளும் பயன்படுத்துவதாக தெரியவில்லை அதாவது நடுவர்கள் சுயமாக எடுக்கும் தீர்மானமே தீர்ப்பாக கணிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் நான் கூறவருவது என்னவென்றால் இவர்களால் நடாத்தப்படும் இதைப்போன்ற போட்டி நிகழ்வுகள் இவர்களால் முற்கூட்டியே தங்களிற்கு இசைவாக திட்டமிடப்பட்டு அதன் அடிப்படையிலையே நகர்த்துகின்றார்கள் போலத் தெரிகின்றது.

இதைப்போன்ற பிரபல்யமான ஊடகங்கள் இப்படியான சில கீழ்தரமான நடவடிக்கையினால் தங்களது தரத்தை தாங்களே பின்னகர்த்துவதாக கருத முடிகின்றது.

Link to comment
Share on other sites

எம்மவர் ஒருவர் வெளியேற்றப் பட்டதற்காக நாங்களிப்படி சொல்வது முறையல்ல.

இசையில் ஸ்வர ஸ்தானங்களை எப்படி பாடுகிறார்கள் என்று எப்படி கருவிகளை வைத்து கண்டுபிடிப்பது?

சித்ரா போன்ற சாதனையாளர்கள் இப்படியான கீழ்த்தரமான வேலைகில் ஈடுபடமாட்டார்கள்.

புலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் (எல்லாம் அல்ல ஒரு சில) முன்னரே தெரிவு செய்ப்பட்ட போட்டியாளர்கள் அடுத்த கட்டத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என நடுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கேள்வி.

Link to comment
Share on other sites

அண்மையில் கனடா வந்திருந்த சைலஜா அவர்கள் ரி வி ஐ தொலைக்காட்சியினரின் கேள்வியின் போது எந்த அடிப்படையில் புள்ளிகளை வழங்குவது என்பதை வடிவாக விபரித்திருந்தார்.இதில் ஒரு விடயம் முக்கியமானது.அவர்களின் குரல் வள பயிற்சி மிகவும் முக்கியமானது.

Link to comment
Share on other sites

மாற்று கருத்துக்கள் இருக்கலாம், அதற்காக எம்மவர் மகிசாவை வெளியேற்றிய பின் மத்தியஸ்தர்களை பிழை பிடிப்பது சரியல்ல .

மகிசாவின் அம்மாவே சொன்னார் தான் இருபதிற்குள் மகள் வருவாரோ என்ற சந்தேகத்தில் தான் இருந்ததாகவும் இவ்வளவும் வந்ததே பெரிய சந்தோசம் என்று.

கடந்த சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் இறுதிபோட்டி முடிவு பலரை முகம் சுழிக்க வைத்ததும் நினைவில் கொள்ளவேண்டும் ஆனால் மக்கள் தீர்வு அது என்றால் யாரும் எதுவும் செய்யமுடியாது.

இதை அளவிட கருவி வேறு இருக்கா?

Link to comment
Share on other sites

இங்கு நடுவர்களில் தவறிருப்பதாக நான் கருதுகிறேன்.

மகிஷா இன்னொரு சிறுவன். இருவரில் ஒருவர் நீக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் அவர்களின் முடிவு தவறாக இருந்தது. இன்னொரு திரியில் நான் எழுதிய கருத்தையே இங்கும் தருகிறேன்.

இது விடயத்தில் மற்றவர்கள் எதை வைத்து பிழை பிடித்தார்களோ தெரியாது. ஆனால் நான் ஜட்சில் பிழை பிடித்ததன் காரணம் அவர்கள் ஜட்ச் பண்ண வந்த பின்னர் மருத்துவ காரணங்களை ஒரு காரணமாக வைத்து உரியவர் மேல் இரக்கப்பட்டு அவருக்கு சலுகை அளித்ததன் காரணமாக.

அன்று அந்த சிறுவனுக்கு பாட முடியாமல் இருந்ததற்கு இவர்கள் இரக்கப்பட்டால் அன்று எவரையும் வெளியேற்றாமல் இன்னொருநாள் மீண்டும் போட்டியை வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த சிறுவன் மேல் கொண்ட இரக்கத்தால் மகிஷாவை வெளியேற்றினார்கள்.

மேலதிக தகவலுக்கு இத்திரியிலுள்ள காணொளியை பாருங்கள். (48.14 இலிருந்து பாருங்கள்)

http://www.yarl.com/...=20#entry773267

Link to comment
Share on other sites

இதை ஒரு போட்டியாக மட்டும் பாருங்கள். கனடா சிறீ லங்கா இந்தியா என்று பிரித்து பார்ப்பதானால்... போட்டியில் கலந்துகொண்டதே முதற்தவறு.

நான் கிரமாக போட்டியை பார்க்கவில்லையாயினும் குறிப்பிடத்தக்களவு பார்த்துள்ளேன். எனது பார்வையில் மகீஷாவுடன் ஆபத்தான கட்டத்தில் நின்ற குண்டு சிறுவன் மிகுந்த திறமைசாலி. குறிப்பிட்ட இந்தச்சுற்றின் கலகலப்பில் அவன் முக்கியதோர் பார்த்திரம். ஒட்டுமொத்த குழாமில் அவன் சிறந்த Entertainer எனவும் கூறலாம்.

நடுவர்கள் முகமன் பார்த்து முடிவுகளை தெரிவு செய்கின்றார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

நடுவர்கள் முகமன் பார்த்து முடிவுகளை கூறுவதானால்.. உலகறிந்த வித்துவான் ராஜேஷ் வைத்யாவின் புதல்வி வெளியேற்றப்பட்டிருக்க மாட்டாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இசையைப் பற்றி அதிகம் தெரியாது.

யாரும் நன்றாகப் பாடினால் அவர்களை மனதாரப் பாராட்டுவேன்.

நடுவர்கள் முடிவை ஏற்பதில் நான் என்றும் பின்வாங்கியதில்லை.

காரணம் என்னைவிட இசையின் அறிவு அவர்களுக்கு அதிகம்

இருக்கும் என்ற நிச்சயமான நம்பிக்கை.

Link to comment
Share on other sites

மிகவும் நன்றாக பாட கூடிய ஒரு பாடகி ஆடி,பாடுவது ரவுண்டில் ஆடாமல் பாடியதற்கு நீக்கப்பட்டார்.அவரை நான் இறுதி மூன்றிற்குள் வைத்திருந்தேன் .அவருக்கு திரும்ப கொடுத்த சந்தர்பந்தத்திலும் அவர் ஆடவே இல்லை .வெளியேற்றி விட்டார்கள்,மிக நல்ல பாடகர் .அவர் பெயர் நினைவில்லை சுருட்டை மயிர் சிறுமி .

அப்போது ஏன் எமது உறவுகள் கொந்தளிக்கவில்

வெளிநாடு வந்துதான் நான் தோல்வியையும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கற்றுக்கொண்டேன் .அதை எம்மவர் எல்லோரும் கற்று கொள்ள வேண்டுகின்றேன் .

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணா சொல்லும் பாடகி பற்றி எனக்கு தெரியவில்லை.

பாடகர்களுக்கு ஆடல் தேவையில்லை தான். இருந்தாலும் ரவுண்டின் பெயரே ஆடிப்பாடும் ரவுண்ட் என்னும் போது அவர்கள் ஆடலையும் கருத்தில் கொள்வார்கள் என்று சொல்லும் போது எதுவும் கூற முடியாது. வேண்டுமென்றால் பாடுவதை மட்டும் கருத்தில் கொள்ளுமாறும் ஆடுவதை கருத்தில் கொள்ள வேண்டாமென்றும் நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் யாராவது கேட்க வேண்டும்.

இங்கு எல்லோரையும் விட மகிஷா தான் கெட்டிக்காரி என்று சொல்லி நான் சண்டை பிடிக்க வர மாட்டன். ஆனால் அந்த சுற்றில் அவர் நன்றாக பாடியிருந்தார். நன்றாக பாடாத ஒரு சுற்றில் அவரை வெளியேற்றி இருந்தால் நடுவரில் பிழை பிடித்திருக்க மாட்டேன்.

அதே நேரம் அந்த சிறுவனுக்கு காய்ச்சல் இருந்தது என்றும் அதனால் சரியாக பாட முடியவில்லை என்றும் அவர் தாயார் குறிப்பிட்டார். இப்படியொரு சம்பவம் நடக்காத சுற்றில் அந்த சிறுவன் நன்றாக பாடி மகிஷா பாடாமல் விட்டு அவரை வெளியேற்றி இருந்தாலும் நான் நடுவரில் பிழை பிடித்திருக்க மாட்டன்.

Link to comment
Share on other sites

பிரேம்கோபால் பிரேமினி கூட நல்ல நடனக்கலைஞர்கள் தான். ஆனால் பல சுற்றில் மற்றவர்களை விட நன்றாக ஆடிய போதும் கிடைக்காத பரிசு இந்த சுற்றில் அவர்களை விட வேறு சிலர் நன்றாக ஆடியும் பிரேம்கோபால் பிரேமினிக்கு கிடைத்தது.

காரணம் பிரேமினி accident பட்டதால் கொண்ட இரக்கம். வேறு சுற்றில் கிடைத்திருந்தால் அவர்கள் சந்தோசப்பட்டிருப்பார்கள்.

நடனம் மாஸசாக இருக்க வேண்டுமென்றும் அவர்கள் பயன்படுத்தும் பாடலும் (தனியே இசை அல்ல, பாடல்) மற்றவர்கள் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டுமென்றும் அப்பொழுது தான் பார்வையாளர்களின் ஆவலை அது பூர்த்தி செய்யும் என்றும் முதல் ஒரு நாள் நடுவர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால் இந்த சுற்றில் இரண்டும் இவர்கள் நடனத்தில் இல்லை. ஆனால் இவர்களுக்கு பரிசு கிடைத்தது.

நிச்சயம் அவர்கள் நன்றாக நடனம் ஆடக்கூடியவர்கள். வலியின் மத்தியிலும் அவர்கள் நன்றாக ஆடியிருந்தார்கள். அதையும் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு பிடித்த நடன கலைஞர்கள் கூட. ஆனால் நடுவர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது இந்த நடனத்தில் இல்லை.

இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் எம் நாட்டவரை போட்டியில் வெளியேற்றி விட்டதால் தான் நாங்கள் ஜட்சில் பிழை பிடிக்கிறோம் என்று சொன்னதால்.

உண்மையில் அப்படியல்ல எம் நாட்டவருக்கு நல்லது நடந்ததற்கும் ஜட்சில் பிழை என்றால் நாம் ஜட்சில் பிழை பிடிக்கிறோம் என்று நான் கூற தான்.

5.03 இலிருந்து இந்த காணொளியை பாருங்கள்.

1.07 இலிருந்து இந்த காணொளியை பாருங்கள்.

[media=]

Link to comment
Share on other sites

உண்மையில் நான் விரும்பிப் பார்க்கும், ரசிக்கும் ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் "சுப்பர்சிங்கர்" நிகழ்ச்சி மட்டும்தான்.

இதற்கு முதல்தடவையும் சில ஈழத்தமிழர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தது அறிந்ததே.

நான் தெளிவுபடுத்த விரும்பும் விடயம் என்னவென்றால் "மகிஷா"வை வெளியேற்றும் அளவிற்கு இந்த தடவை சரியான முறையில் நடுவர்கள் நடுநிலை வகிக்கவில்லை என்பது தான் எனது கருத்தாகும்.

மற்றும்படி நடுவர்களில் எனக்கு எந்தவிதமான தப்பான அபிப்பிராயமும் கிடையாது.

இதில் நான் எந்தவிதமான பாகுபாடும் நினைப்பதில்லை, இன்னும் வெளிப்படையாக கூறப்போனால் இதுவரை இடம்பெற்ற "சுப்பர்சிங்கர்" நிகழ்ச்சியில் பங்குபற்றியவர்களில் எனது மனதில் இப்போதும் நிலைத்திருப்பவர்கள் "நித்தியசிறி" "சிறிநிஷா" "பிரியங்கா" போன்றவர்கள் தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.