Jump to content

ஐந்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றெடுக்குக


Recommended Posts

[size=4]ஐந்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றெடுக்குக

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-06-29 10:55:23| யாழ்ப்பாணம்][/size]

[size=4]காரைநகரில் கடந்த நாற்பது வருடங் களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. சேமன் விஸ்வலிங்கம் என்ப வர் காரைநகர் கிராம சபைத் தலைவ ராக இருந்தார்.குடும்பக் கட்டுப்பா ட்டை வலியுறுத்தும் கூட்டமொன்று சுகாதாரத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டத்திற்கு கொழும்பில் இருந்தும் அதிகாரிகள் வந்திருந்தனர். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக நட ந்த அந்தக் கூட்டத்திற்கு சேமன் விஸ்வலிங்கம் தலைமை தாங்கி னார்.தலைமை உரை ஆற்றிய அவர், குடும்பக் கட்டுப்பாடு என்பதை நாம் ஆதரிக்கக் கூடாது. குடும்பக்கட்டுப் பாட்டை ஆதரித்தால் எங்கள் இனம் மிகவும் சிறுபான்மையாகி விடும். எனவே தமிழர்களாகிய நாங்கள் எங்கள் இனத்தைப் பெருக்க வேண்டும் என்று கூறித் தனது உரையை தொடர்ந்தார்.

கூட்டத்தில் ஒரே குழப்பம். குடும்பக் கட்டுப் பாட்டை ஆதரிக்கும் கூட்டத் தில் சேமன் விஸ்வலிங்கம் இவ் வாறு பேசுவது மேடையில் இருந்த சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி விட்டது.உடனடியாக அங்கிருந்த சுகாதாரவைத்திய அதிகாரி ஒரு குறி ப்பை எழுதி சேமனுக்கு அனுப்பி னார்.ஐயா! இது குடும்பக் கட்டுப்பா ட்டை ஆதரிக்கின்ற கூட்டம். ஆனால் நீங்கள் குடும்பக்கட்டுப்பாட்டை எதிர் க்கிறீர்கள். இது கூட்டத்தில் சங்கடத் தை ஏற்படுத்துகின்றது என அந்தக் குறிப்பு அமைந்திருந்தது.

குறிப்பை வாசித்த சேமன் விஸ்வலி ங்கம் கூட்டத்தை குழப்புவது அழகல்ல என்று எண்ணி,அன்பர்களே! இவ்வளவு நேரமும் நான் பேசியது தவறு. இனிமேல் தான் நான் சரியாகப் பேசப் போகிறேன் என்று கூறி குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரித்துப் பேசினார்.சேமன் விஸ்வலிங்கம் தானாக உணர்ந்து பேசியதன் உண் மைத் தன்மையின் அவசியத்தை நாம் உணர்ந்து கொள்வதற்கு நாற்பது வருடங்கள் ஆயிற்று.எனினும் இப்போதாவது எங்கள் இனத்தின் பெருக்கம் குறித்து நாம் அசமந்தமாக இருந்தால் நிலைமை மிகவும் மோசமாகும்.

[size=5]இன விகிதாசாரத்தின் அடிப்படை யில் எல்லாம் நடந்து கொண்டிருக் கும் போது, நாம் இருவர்; நமக்கு ஒருவர் என்ற நிலை நீடித்தால், இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்களா? என்று எப்போதாவது ஒரு காலத்தில் ஆய்வு நடத்த வேண்டியிருக்கும் என் பது உண்மை.[/size][/size]

[size=4]இலங்கையின் ஆதிக் குடிகள் தமிழர்கள் தான் என்ற வரலா ற்று ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும் நாம் இரண்டாம் தரப் பிரஜை களாக ஆக்கப்பட்டிருக்கும் இந்த நாட் டில், எங்கள் இனம் சுருங்கிக் கொள் ளுமாயின் எங்கள் சந்ததிக்கான எதிர் காலம் மிகவும் பாதகமாகவே இருக் கும்.எனவே தமிழ் இளம் குடும்பங் கள் ஐந்து பிள்ளைளுக்குக் குறையாமல் பெற்றெடுக்க வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படுவது அவ சியம்.இதனை ஊக்குவிப்பதற்கான அமைப்புகள் உதயம் பெற்றால் அது தமிழினத்திற்குப் பேருதவியாக அமையும்.[/size]

http://www.valampurii.com/online/viewnews.php?ID=29173

Link to comment
Share on other sites

  • Replies 145
  • Created
  • Last Reply

[size=4]ஐந்து பிள்ளைகளுக்கு குறையாமல் பெற்றெடுக்குக[/size]

[size=4]இலங்கையின் ஆதிக் குடிகள் தமிழர்கள் தான் என்ற வரலா ற்று ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும் நாம் இரண்டாம் தரப் பிரஜை களாக ஆக்கப்பட்டிருக்கும் இந்த நாட் டில், எங்கள் இனம் சுருங்கிக் கொள் ளுமாயின் எங்கள் சந்ததிக்கான எதிர் காலம் மிகவும் பாதகமாகவே இருக் கும்.எனவே தமிழ் இளம் குடும்பங் கள் ஐந்து பிள்ளைளுக்குக் குறையாமல் பெற்றெடுக்க வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படுவது அவ சியம்.இதனை ஊக்குவிப்பதற்கான அமைப்புகள் உதயம் பெற்றால் அது தமிழினத்திற்குப் பேருதவியாக அமையும்.[/size]

ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் அவர்களை வளர்க்க பொருளாதார வசதி இருக்க வேண்டும். தமக்கே உணவில்லாத நிலையில் உள்ளவர்கள் 5 பிள்ளைகளை பெற்றால் அனைவரும் பட்டினியால் இறக்கும் நிலை கூட வரலாம்.

எனவே ஓரளவு வசதி உள்ளவர்கள் இவற்றை கருத்தில் கொண்டால் எம் இனம் சுருங்கி செல்வதை தடுக்கலாம்.

ஏனையவர்கள் தாம் சிறிதளவேனும் பொருளாதார ரீதியில் முன்னேறிய பின் இவற்றை கருத்தில் கொள்வது நலம்.

Link to comment
Share on other sites

[size=4]பல மேற்குலக நாடுகளிலும் சரிந்துவரும் சனத்தொகையை ஊக்குவிக்க பலவேறு பொருளாதார உதவித்திட்டங்கள் உள்ளன. [/size]

[size=1]

[size=4]அவைபோன்று தாயகத்திலும் சில அமைப்புக்கள் புலம்பெயர் மக்களின் உதவிகளுடன் ஊக்குவிக்கலாம். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே.......சோத்துப்பண்டாரங்கள் நாய்,பூனைமாதிரி குட்டி போட்டுக்கொண்டு திரியுதுகள் எண்டு நக்கலடிக்கினம்.......இதுக்கை வேறை அஞ்சுபிள்ளை ஆறுபிள்ளை பெத்தெடுங்கோ எண்டு தமாசு பண்ணுறியள் :)

Link to comment
Share on other sites

இப்பவே.......சோத்துப்பண்டாரங்கள் நாய்,பூனைமாதிரி குட்டி போட்டுக்கொண்டு திரியுதுகள் எண்டு நக்கலடிக்கினம்.......இதுக்கை வேறை அஞ்சுபிள்ளை ஆறுபிள்ளை பெத்தெடுங்கோ எண்டு தமாசு பண்ணுறியள் :)

[size=5]அப்படிச் சொல்லுபவர்கள் தமக்கு ஒன்றும் ஏலுதில்லை என்ற ஆதங்கம் தான். [/size][size=5]அவையளைப் பொருட்படுத்தாதையுங்கோ[/size]. [size=5]அவர்கள் தாமாகவே தகுந்த வைத்தியரை நாட வேண்டும்[/size][size=6]!!!!![/size] [size=6]( [size=5]இது யாரையும் குறிபாக எழுதவில்லை[/size])[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய சீலைகள் சில..தாங்கள் தொடர்ந்து கிழியுற கணக்கா தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டு திரியுதுகள். ஏதோ 18ம் நூற்றாண்டில வாழுற நினைப்பில. இது.. 21ம் நூற்றாண்டு..! உலகம்..உலக சனத்தொகையையை கட்டுப்படுத்திறது எப்படின்னு பேசிக்கிட்டு இருக்கிற காலம். உலகம் பெரும் பொருண்மிய நெருக்கடியில் சிக்கி இருக்கும் காலம். நவீன அறிவியல் கொடிகட்டிப் பறக்கும் காலம். முதலில் உதுகளை கொண்டு போய் தகுந்த.. தையல் போட்டு.. கிழியுறதை.. நிறுத்தி.. சமூகவியல் ஆலோசனையும் வழங்கி புனர்வாழ்வு அளிக்க வேண்டி இருக்குது.,.! அப்பதான் உந்தப் பழைய சீலைகளின் கிழியலால் சீரழியும்.. ஊரும் வீடும் திருந்தும்..! (இது யாரையும் குறிக்க எழுதவில்லை.) :lol::D:icon_idea:

Link to comment
Share on other sites

பழைய சீலைகள் சில..தாங்கள் தொடர்ந்து கிழியுற கணக்கா தங்களுக்குள் புறுபுறுத்துக் கொண்டு திரியுதுகள். ஏதோ 18ம் நூற்றாண்டில வாழுற நினைப்பில. இது.. 21ம் நூற்றாண்டு..! உலகம்..உலக சனத்தொகையையை கட்டுப்படுத்திறது எப்படின்னு பேசிக்கிட்டு இருக்கிற காலம். உலகம் பெரும் பொருண்மிய நெருக்கடியில் சிக்கி இருக்கும் காலம். நவீன அறிவியல் கொடிகட்டிப் பறக்கும் காலம். முதலில் உதுகளை கொண்டு போய் தகுந்த.. தையல் போட்டு.. கிழியுறதை.. நிறுத்தி.. சமூகவியல் ஆலோசனையும் வழங்கி புனர்வாழ்வு அளிக்க வேண்டி இருக்குது.,.! அப்பதான் உந்தப் பழைய சீலைகளின் கிழியலால் சீரழியும்.. ஊரும் வீடும் திருந்தும்..! (இது யாரையும் குறிக்க எழுதவில்லை.) :lol::D:icon_idea:

100 கோடி முஸ்லீம்களால் 7 கோடி யூதனை ஒன்றும் செய்ய முடியாது என்ற யதார்த்த பூர்வ உண்மை, அதை உணர்ந்து செயற்படுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பிள்ளைகளை பெற்று எடுத்தாலும் முஸ்லிம் அளவுக்கும் சிங்களவன் அளவுக்கும் முடியுமா ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 கோடி முஸ்லீம்களால் 7 கோடி யூதனை ஒன்றும் செய்ய முடியாது என்ற யதார்த்த பூர்வ உண்மை, அதை உணர்ந்து செயற்படுவோம்

நானும் இதைத் தான் சொல்கிறேன்.. அறிவுபூர்வமான.. வளமான.. வசதி படைத்த... இனப்பற்றுள்ள... விடுதலை உணர்வுள்ள சிறிய இனமாக நாம் இருக்க வேண்டுமே தவிர.. சும்மா குட்டி போட்டு பெருக்கெடுத்த.. வளமற்ற.. அறிவூர்வமற்ற.. வறுமையில் வாடும்.. இனப் பற்று.. விடுதலை உணர்வு இவற்றை தக்க வைக்க முடியாத இனப்பெருக்கம்.. எமக்கு அவசியம் இல்லை.

அத்தோடு.. இன்றைய நிலையில் எம்மவர்களை யூதர்களோடும் ஒப்பிட முடியாது. உலகெங்கும் சிதறிக் கிடந்த யூதர்கள் ஹிட்லரின் கொடுமை கண்டு.. ஒற்றுமைப்பட்டு.. சேதம் உருவாக்கி.. அங்கு போய் குடியேறி அந்த நாட்டை உலகில் பலமிக்க நாடாகவும் மாற்றியுள்ளனர். இது வெளிநாட்டு அகதி வாழ்வில்.. அந்நிய நாடுகளின் பிரஜா உரிமைகளில்.. அவை வழங்கும்.. அரச பணத்தில் வாழத் திருப்திப்படும்.. ஒரு கூட்டத்திடம் எப்படி சாத்தியமாகும் என்பது கேள்விக்குறிதான்..!. அந்த வகையில் எம்மவர்கள் யூதர்களுக்கு ஒப்பிடும் நிலைக்கு இன்னும் பக்குவப்படவில்லை என்பது தான் யதார்த்தம்..! அந்தப் பக்குவத்தை நோக்கி இவர்களை நகர்த்த வேண்டியதே இன்றைய தேவை..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக சனத்தொகை கூடுவதுபற்றி உலக நாடுகள்

சிந்திக்கட்டும்.

ஈழத்தமிழன் உலகில் நிலைபெறவேண்டுமாயின் இன்றைய காலகட்டத்தில்

40 களில் சேர்மன் விஸ்வலிங்கம் அவர்கள் கூறியது போல

குடும்பத்திற்கு பல பிள்ளைகள் இருக்க வேண்டும்.

ஈழத்தில் இது நடைமுறையில் பல சிக்கல்களைத் தோற்றுவிப்பதால்

புலம்பெயர்ந்தவர்களே இதை சாத்தியப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மண்ணில் பெற்றுத் தள்ளுவதால் சைல்ட் கிரடிட் கூடுமே தவிர.. அதுகள் வளர்ந்து.. தமிழ் உணர்வோடு தமிழர்களாக இருக்குங்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மண்ணில் பெற்றுத் தள்ளுவதால் சைல்ட் கிரடிட் கூடுமே தவிர.. அதுகள் வளர்ந்து.. தமிழ் உணர்வோடு தமிழர்களாக இருக்குங்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை..! :lol::D

பத்துக் குழந்தைகளைப் பெற்று அதில் இரண்டு குழந்தைகளுக்காவதுதமிழ் உணர்வு இருந்தால் காணாதா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு தாக்குமா வாத்தியார். 10 க்கும் சைல்ட் கிரடிட் கொடுத்தே நாடுகள்.. கடனாளியாகிடாது..???! அதுவும் இல்லாமல் ஊதிப் பெருத்த குடும்பத்தில் 10 யும் இன உணர்வூட்டி.. வளர்க்கிறது சிரமம். அந்த வகையில் 10ம் 10 திக்கால போகச் சந்தர்ப்பம் அதிகமே தவிர தமிழர்களாகி நிற்க வாய்ப்புக் குறைவாகவே இருக்கும்..! 2 டை வைச்சுக் கொண்டே சிலர் தமிழ் படிப்பிக்க வெட்கப்படுகினம்... பயனில்லாத படிப்பு என்றினம்... நீங்கள் என்னடான்னா..???! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நாடு எப்படிக் கடனாளியாகினால் நமெக்கென்ன?

அந்தக்காலத்தில் எங்கள் நாட்டின் வளங்களைச்ச் சுரண்டியவர்களே

இப்போது வல்லரசு தொல்லையரசு என முன்னுக்கு நிற்கின்றார்கள்.

எங்களுக்கு அவர்கள் கடனாளியாவதில் எந்த நஸ்டமும் இல்லை.

எங்கள் கடமை தமிழன் உலகில் நிலைத்து நிற்க இன விருத்தி செய்வது.

அத்துடன் காசுக்குக் காசும் வருகின்றது.

அப்படிப் பல பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்க்கும்போது

ஓய்வூதியக் காலமும் அவர்களுக்குக் கூடுகின்றது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மண்ணில் பெற்றுத் தள்ளுவதால் சைல்ட் கிரடிட் கூடுமே தவிர.. அதுகள் வளர்ந்து.. தமிழ் உணர்வோடு தமிழர்களாக இருக்குங்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை..! :lol::D

நான் வளர்த்து வைத்திருக்கின்றேன்

இன உணர்வுள்ள தமிழராக. :icon_idea:

ஏதோ கிடைத்ததுடன் ஒத்துழை ப்புடன் நாலு தான் செய்யமுடிந்தது. :D

இன்னும் ஒன்று தானே பாக்கி.

பார்க்கலாம். :wub:

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் ஊதிப் பெருத்த சமூகங்கள் ஏழ்மைக்கு.. சிரமங்களுக்கு அடிமைப்பட்டது தான் அதிகம்..! இன உணர்வும் விடுதலை உணர்வும் பெற்றது குறைவு..! தமிழர்களும் அதையே நாடினால்.. அவர்களின் அடிமை வாழ்வுக்கு முடிவே இல்லை.. அதைவிடச் சொல்ல ஏதும் இல்லை..! :):icon_idea:

Link to comment
Share on other sites

எமது பிரச்சனைக்கு தீர்வு தேடுவதை விட்டு ஏதோ சம்பந்தம் இல்லாதவற்றில் ஆய்வு நடாத்துகின்றோம்.

வெளிநாட்டில் இருந்து கொண்டு ஒரு வித்தையும் காட்ட முடியாது .மேடை கிடைத்தால் உடன் நாடகம் போட பலர் ரெடியாக இருப்பது தெரிந்த விடயம் தான் .

ஒருவராவது நாட்டில் போய் எதுவும் செய்வோம் என்று கூறுவாரில்லை.புலத்தில புண்ணாக்கு கடை போடத்தான் ரெடி.

இன உணர்வு என்றால் என்ன ? பிள்ளைகளுக்கு இடியப்பம் கொடுத்து வளர்ப்பதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரச்சனைக்கு தீர்வு தேடுவதை விட்டு ஏதோ சம்பந்தம் இல்லாதவற்றில் ஆய்வு நடாத்துகின்றோம்.

வெளிநாட்டில் இருந்து கொண்டு ஒரு வித்தையும் காட்ட முடியாது .மேடை கிடைத்தால் உடன் நாடகம் போட பலர் ரெடியாக இருப்பது தெரிந்த விடயம் தான் .

ஒருவராவது நாட்டில் போய் எதுவும் செய்வோம் என்று கூறுவாரில்லை.புலத்தில புண்ணாக்கு கடை போடத்தான் ரெடி.

இன உணர்வு என்றால் என்ன ? பிள்ளைகளுக்கு இடியப்பம் கொடுத்து வளர்ப்பதா?

நீங்களும் அப்படிதானே இருக்கின்றீர்கள் இந்த கருத்து உங்களுக்கும் பொருந்தும் . :D

இந்த பிரச்சனைக்கான உங்களின் தீர்வு என்ன அர்ஜுன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் ஒருவர் 15 பிள்ளைகள் பெற்று கொள்ள வேணும்.. அவர்களின்ட வசதிக்கு புலம்பெயர் வாழும் தமிழர்கள் ஓரளவு கற்று வளர அதாவது எஸ் எஸ் எல் சி படிக்கும் வரைக்கும் ஆகவது உதவிசெய்ய வேணும்.. அப்பத்தான் ஈழத்தில் தமிழினம் இருக்கும் .. சொந்தமாக சிந்திக்க குறைந்த அளவாக எஸ் . எஸ் எல் சி படிப்பே போதும்... இன உணர்வு எல்லாம் தானாக வரும்..

ரொம்ப ஓவராக எல்லாம் திங்க் பண்ன கூடாது.. அங்க வந்து அப்பூடியே ஆர்.ஈ.சி காலேஜிலே தமிழர்களுக்கு உடனே அட்மிசன் குடுத்து விடுகிறார் போல...

டிஸ்கி:

இன்று தமிழீழத்திற்கான ஒட்டெடுப்பு என்று கத்துகிறார்கள் .. நீங்கள் வந்து ஓட்டு போடுவீர்களா..முதலில் தமிழ்சமூகம் அறிவார்ந்த சமூகமாக வளருவதற்கு சிங்கள பயங்கரவாதிகள் இடம் கொடுக்க வேணும்... பிள்ளை பிறப்பதற்கு முன்னே பெயர் வைக்க படாது..

ரெல் ரெல் மீ..!!!

எல்லாம்.... பிசா.... சாண்ட்விச்சு என்று கிளம்பிடுவீர்கள்.. அவர்கள் தீர்மானிப்பதற்கு உங்கட உறவுகளுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேணும்.. :) :)

Link to comment
Share on other sites

[size=4]பல மேற்குலக நாடுகளிலும் சரிந்துவரும் சனத்தொகையை ஊக்குவிக்க பலவேறு பொருளாதார உதவித்திட்டங்கள் உள்ளன. [/size]

[size=1][size=4]அவைபோன்று தாயகத்திலும் சில அமைப்புக்கள் புலம்பெயர் மக்களின் உதவிகளுடன் ஊக்குவிக்கலாம். [/size][/size]

ஆம் நிச்சயமாக இப்படியொரு திட்டம் மூலம் தான் மக்களை ஊக்குவிக்க முடியும். அதற்கு புலம்பெயர் மக்கள் உதவி செய்ய வேண்டும். :)

ஈழத்தில் இது நடைமுறையில் பல சிக்கல்களைத் தோற்றுவிப்பதால்

புலம்பெயர்ந்தவர்களே இதை சாத்தியப்படுத்த வேண்டும்.

இதில் முழுமையாக எனக்கு உடன்பாடில்லை.

இலங்கையில் எம் இனம் சுருங்குவதை தடுக்க வேண்டும் என்றால் அதிக பிள்ளைகளை இலங்கையில் உள்ளவர்கள் அதிலும் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் பெற்றுக்கொள்வது தான் சிறந்தது. அவர்களுக்கு புலம்பெயர் மக்கள் பண உதவி வழங்க வேண்டும்.(கொழும்பில் உள்ளவர்களில் கூட ஒருபகுதியினர் தற்பொழுது சிங்கள மொழி மூலத்தில் படித்து சிங்கள மொழியை கதைக்கிறார்கள். தமிழ் கதைத்தாலும் தமிழில் எழுத தெரியாதவர்களும் உள்ளனர்.)

அத்துடன் புலம்பெயர் தேசத்தில் வளரும் பிள்ளைகளுக்கு தமிழுணர்வை, மொழியை ஊட்டி வளர்ப்பவர்கள் (விசுகு அண்ணா போன்ற) ஒரு குறிப்பிட்ட வீதத்தினரே.

மற்றவர்கள் பிள்ளைகளுடன் தமிழில் கதைத்தாலும் நாளைக்கு தமிழீழம் என்று ஒன்று கிடைக்கும் போது அப்பிள்ளைகள் இலங்கையில் தமிழீழத்தில் சென்று வாழ தயங்குவார்கள். புலம்பெயர் தேசத்திலேயே தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்.

எனவே ஈழத்தில் எம் இனம் சுருங்கி விடும். அதை தவிர்க்க ஈழத்தில் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை முன்னெடுப்பது தான் மிக அவசியம். :rolleyes:

எனினும் உலகத்தில் எம் இனம் தழைக்க வேண்டும் என்றால் புலம்பெயர் தமிழர்களும் இதில் பங்கு கொள்வது நலம். :)

எந்த நாடு எப்படிக் கடனாளியாகினால் நமெக்கென்ன?

அந்தக்காலத்தில் எங்கள் நாட்டின் வளங்களைச்ச் சுரண்டியவர்களே

இப்போது வல்லரசு தொல்லையரசு என முன்னுக்கு நிற்கின்றார்கள்.

எங்களுக்கு அவர்கள் கடனாளியாவதில் எந்த நஸ்டமும் இல்லை.

ஆம்.

அத்துடன்,

நான் அரச பணத்தை எடுக்கிறனோ இல்லையோ அது என் விருப்பம்.

ஆனால் எம்மவர்கள் வெளிநாட்டில் அரச பணத்தை பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்பது தான் என் கருத்து. ஏனென்றால் வெளிநாட்டு அரசாங்கம் என்பது தனியே தமிழர்களுக்கு மட்டும் இந்த உதவியை வழங்கவில்லை. வேறு பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் பண உதவி வழங்குகிறார்கள்.

எனவே எம்மவர்கள் அரச பணத்தை பெற்றுக்கொள்ளாமல் தவிர்த்தாலும் அந்த பணத்தை வேறு மக்களுக்கு கொடுக்கப்போகிறார்கள். அவர்களுக்கு எப்படியோ நட்டம் நட்டம் தான். எனவே அதை பாதிக்கப்பட்ட எம்மக்கள் பயன்படுத்துவதில் தவறில்லை.

அரச பணத்தை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பும் ஒருசிலரையும் நான் சந்தித்துள்ளேன். :)

எமது உயிர் போகும் போது கவலைப்படாதவர்களின் பணம் செலவாகுவது பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை. :rolleyes:

Link to comment
Share on other sites

நான் வளர்த்து வைத்திருக்கின்றேன்

இன உணர்வுள்ள தமிழராக. :icon_idea:

ஏதோ கிடைத்ததுடன் ஒத்துழை ப்புடன் நாலு தான் செய்யமுடிந்தது. :D

இன்னும் ஒன்று தானே பாக்கி.

பார்க்கலாம். :wub:

:lol: :lol:

நீங்கள் விரும்பினால் இன்னும் ஒன்றுடன் நிறுத்தாமல் இன்னும் ஆறு பெற்றாலும் எம் அனைவருக்கும் சந்தோசம் தான். :lol::icon_idea:

உங்கள் பிள்ளைகளின் இன உணர்வு பற்றி உங்களை வைத்தே நான் சொல்வேன். :D

எமது பிரச்சனைக்கு தீர்வு தேடுவதை விட்டு ஏதோ சம்பந்தம் இல்லாதவற்றில் ஆய்வு நடாத்துகின்றோம்.

வெளிநாட்டில் இருந்து கொண்டு ஒரு வித்தையும் காட்ட முடியாது .மேடை கிடைத்தால் உடன் நாடகம் போட பலர் ரெடியாக இருப்பது தெரிந்த விடயம் தான் .

ஒருவராவது நாட்டில் போய் எதுவும் செய்வோம் என்று கூறுவாரில்லை.புலத்தில புண்ணாக்கு கடை போடத்தான் ரெடி.

இன உணர்வு என்றால் என்ன ? பிள்ளைகளுக்கு இடியப்பம் கொடுத்து வளர்ப்பதா?

உங்கள் பிள்ளைகள் இருவரும் நன்றாக இடியப்பம் சாப்பிடுகிறார்கள் என்று மட்டும் தெரியுது. :lol: :lol:

Link to comment
Share on other sites

இடியப்பம் இல்லை பாஸ்டா .இத்தாலி உணர்வு வந்தாலும் வந்துவிடும் போல கிடக்கு .

இஞ்ச வந்திருந்து உணர்வு என்பதிலேல்லாம் எனக்கு உடன் பாடில்லை .நல்ல மனிதர்களாக இருந்தால் காணும் .எந்த சமூகத்திற்கும் தமிழ் உட்பட பயன் பட்டால் சந்தோசமே.

எனக்கு தெரிந்த சிலஇளைஞர்கள் காது காதும் வைத்த மாதிரி நாட்டில் போய் சேவை செய்துவிட்டு வருகின்றார்கள் . அதைத்தான் நானும் விரும்புகின்றேன் ஒழிய, வெறுமன இங்கிருந்து கொடி பிடிக்க அல்ல .

Link to comment
Share on other sites

இடியப்பம் இல்லை பாஸ்டா .இத்தாலி உணர்வு வந்தாலும் வந்துவிடும் போல கிடக்கு .

:lol: :lol:

கொஸ் கொஸ் (cous cous) ஐயும் சேர்த்து குடுங்கோ. :lol: அப்ப ஆபிரிக்க, பிரான்ஸ் உணர்வையும் சேர்த்து ஊட்டி வளர்க்கலாம். :icon_idea:

இஞ்ச வந்திருந்து உணர்வு என்பதிலேல்லாம் எனக்கு உடன் பாடில்லை .நல்ல மனிதர்களாக இருந்தால் காணும் .எந்த சமூகத்திற்கும் தமிழ் உட்பட பயன் பட்டால் சந்தோசமே.

எனக்கு தெரிந்த சிலஇளைஞர்கள் காது காதும் வைத்த மாதிரி நாட்டில் போய் சேவை செய்துவிட்டு வருகின்றார்கள். அதைத்தான் நானும் விரும்புகின்றேன் ஒழிய, வெறுமன இங்கிருந்து கொடி பிடிக்க அல்ல .

நன்றி.

நீங்களும் காதும் காதும் வைத்த மாதிரி எம்மக்களுக்கு (உங்கள் அர்த்தத்தில் புலிகளுக்கல்ல. சாதாரண மக்கள்) உதவி செய்தால் நிச்சயம் நானும் சந்தோசப்படுவேன். :)

காதும் காதும் வைத்த மாதிரி உதவி செய்வதன் மூலம் அவர்கள் மட்டும் தான் உதவி செய்ய முடியும். ஆனால் இங்கு புலம்பெயர்ந்த ஒரு சிலரால் எடுக்கப்படும் முன்னெடுப்புகள் மூலம் மற்றவர்களையும் உதவி செய்யுமாறு ஊக்குவிக்க முடியும் என்று நான் கருதுகிறேன். (உங்கள் பார்வைக்கு அது பிழையாக தோன்றும் என்றும் எனக்கு தெரியும் :))

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.