Jump to content

மீள் வடிவமைப்புடன் யாழ் இணையம்


Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் உறவுகளோடு யாழ் இணையம் நீண்டதூரம் பயணிப்பதற்காக, இணையத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு காலத்திற்கு காலம் மாற்றங்களைச் செய்து வந்துள்ளோம். அந்தவகையில் மீண்டும் சில மாற்றங்களைக் கொண்டுவர எண்ணியுள்ளோம். அதன் ஒரு கட்டமாக யாழ் முகப்பு மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வாசகர்களுக்குச் சில வசதிகளைக் கொடுப்பதுடன் நாளுக்கு நாள் பரந்துசெல்லும் இணைய வலையில் யாழின் வளர்ச்சியையும் சீர்செய்யும் என நம்புகிறோம்.

முக்கியமாக யாழ் முகப்பிலிருந்தவாறே பிரதான செய்திகளைச் சுருக்கமாக அறியலாம். அத்துடன் RSS முறையில் http://yarl.com/rss.xml என்ற முகவரியில் இதே செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை செய்தி அறிக்கைப் பகுதியில் பதிவு செய்து கொண்டால் நாள்தோறும் மின்னஞ்சல் மூலம் செய்தித் தொகுப்பைப் பெறலாம். அத்துடன் தேவைப்படும் போது நீங்கள் மின்னஞ்சல் பெறுவதில் இருந்து விலகியும் கொள்ள முடியும்.

அத்துடன் யாழ் உறுப்பினர்களின் சுய ஆக்கங்களை முக்கியத்துவப்படுத்துவதற்காகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருத்துக்களம், சமையல், முற்றம் ஆகிய பிரதான பகுதிகளில் ஆக்கியவர் / பகுதி / திகதி வாரியாக ஆக்கங்கள் இணைக்கப்படும். கருத்துக் களத்தில் பதியப்பட்ட பழைய சுய ஆக்கங்கள் படிப்படியாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இணைக்கப்படும்.

ஏற்கனவே இருந்த நாட்காட்டிப் பகுதி சிறிது மேம்படுத்தப்பட்டுள்ளது. நாட்காட்டிப் பகுதியில் தற்போது இருக்கும் தரவுகளுடன் மேலதிகமான நடந்த முக்கிய நிகழ்வுகள் / நடக்கப்போகும் நிகழ்வுகள் ஆகியவை சேர்க்கப்படும்.

வர்த்தக விளம்பரங்கள் செய்ய விரும்புபவர்கள் 'விளம்பரங்கள் செய்வதற்கு' என்ற இணைப்பில் தமது விண்ணப்பத்தைப் பதியலாம். கீழுள்ள இணைப்பு மூலம் கருத்துக்களம் பற்றி அல்லது வேறு விடயங்கள் தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ள முடியும்.

ஏனைய தகவல்களுக்கு

யாழ் களம் மேலும் நீண்ட காலம் தனது சேவையைத் தொடர இன்றுபோல் என்றும் உங்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.

நன்றி.

- யாழ் நிர்வாகம் -

Link to comment
Share on other sites

மிகவும் வித்தியாசமாக நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

இப்பொழுது தான் பார்த்தேன் . மிகவும் நுணுக்கமாக வடிவமைத்து இருக்கின்றீர்கள் இணையவன் , நிழலி . மேலும் தொடர்ந்து யாழ் வெற்றிக்கொடி நாட்ட மனதார வாழ்த்துகின்றேன் .

நேசமுடன் கோமகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் புதிதாகவும் ஆரம்பத்தில் புரியாமலும் இருக்கு, ஆனால் போகப்போகச் சரிவந்திடும். அனால் ஒண்டு முகப்பு பாக்க ரெம்ப என்ன, ரெம்ப ரெம்ப ந்ல்லாயிருக்கு.

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கு... :D வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே இந்த மாற்றங்கள் எல்லோராலும் வரவேற்கப்படும்.

முகப்பின் வடிவமைப்பு அசத்தலாக உள்ளது.

வடிவங்கள் மாறவேண்டும்.

வண்ணங்கள் தீட்டவேண்டும்

எங்கள் இலட்சியம் மட்டும் மாறக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் மிகவும் நன்றாக வடிவமைக்கபட்டு இருக்கிறது எங்கட யாழ்.நான் இப்போ ஒரு 1மணிநேரம் இதற்குள் இருக் இல்லை அந்த நேரத்திற்குள் மாற்றம் வந்து இருக்கு ரொம்ப,ரொம்ப சந்தோசம்..என்னுடைய முக்கால் வாசிப் பொழுதை யாழோடும்,முகநூலோடும் தான் களிப்பது வளக்கம். அந்த வகையில் யாழின் ஒவ்வொரு வளர்ச்சியும் கண்டு மிகுந்த சந்தோசப்படுபவர்களில் நானும் ஒருத்தியாக என்றும் இருப்பேன்.யாழ் என்றும் நாணல் தான்.மாற்றங்கள் என்னும் போது முகப்பில் தெரியக் கூடியதாக இருக்கும் தடை பற்றிய சில வற்றை நீக்கி விடலாம் என்று நினைக்கிறன்..கண்டிப்பாக விளம்பரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேணும்..மிகுதி சொல்ல அப்புறம் வாறன்...:)மாற்றத்தைக் கொண்டு வந்த அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

யாழ் நங்கையின் பூத்துக்குலுங்கும் புது பொலிவு நன்றாக இருக்கிறது. பருவத்தோடு வளர்ந்து பார்வையிலேயே வசிகரிக்கும் எழில்.

நிர்வாகத்துக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

மிக மிக அழகாக இருக்கிறது. யாழ் நிர்வாகத்திற்கு வாழ்த்துகள். முகப்பின் அழகு மக்களை கவரும் விதத்தில் உள்ளது. இனி யாழுக்கு மக்கள் வருவதும் அதிகரிக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது ,

வாழ்த்துக்கள் ! :)

Link to comment
Share on other sites

யாழ்களத்தின் முகப்பு மிக அழகாக உள்ளது. வடிவமைத்தவர்களுக்கும் கள நிர்வாகத்தினருக்கும் வாழ்த்துக்கள். மேன்மேலும் புதுப்பொலிவுடன், புதிய பல ஆக்கங்களை தரும் ஒரு களமாக யாழ் திகழும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்

- ஈழத்திருமகன் -

Link to comment
Share on other sites

யாழ் முகப்பு சூப்பரா இருக்கு. :) :) :)

Link to comment
Share on other sites

[size=5]மாற்றங்கள்... வாழ்வின் நியதிகள். நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள். [/size]

Link to comment
Share on other sites

அழகாகவும் புதிராகவும் இருக்கிறது.

பழகப் பழக முடிச்சுக்கள் அவிழும்

Link to comment
Share on other sites

வணக்கம்,

தமக்கு கிடைக்கும் சொற்ப ஓய்வு நேரங்களை யாழுக்கென அர்ப்பணித்து யாழின் புதிய பொலிவுக்கும் வடிவமைப்புக்கும் அயராமல் இயங்கியவர்கள் இணையவனும், மோகன் அண்ணாவும் தான். புலம் பெயர் வாழ்வில் கிடைக்கும் ஒவ்வொரு வினாடியும் பொருளாதார வளத்தை மேம்படுத்த செலவழிக்க வேண்டிய தேவையைக் கொண்ட எம் வாழ்வு முறையில், எந்த எதிர்பார்ப்பும் இன்றி இருவரும் செய்த பங்களிப்பு மிகவும் நன்றியுடன் நினைவில் வைக்க வேண்டிய ஒன்று.

இவர்களின் அர்ப்பணிப்பு தன் உச்ச பலனை அடைய உங்களின் அன்பும், ஆதரவும், உதவியும் எமக்கு தேவை. கள உறவுகள் அனைவரும் உங்களால் ஆன வழியில் யாழை பலருக்கு அறிமுகப்படுத்துவதிலும், விளம்பரங்களை வாங்கி அல்லது தந்து உதவுவதிலும் யாழின் எதிர்கால வளர்ச்சிக்கு உங்களின் பங்களிப்பை வழங்க முடியும். யாழின் எதிர்கால வளர்சிக்கும், வாழ்வுக்கும் பொருளாதார வசதி என்பதும் மிகவும் முக்கியமான தேவை. இன்று வரைக்கும் பொருளாதார விடயத்தில் மிகவும் பின் தங்கியே யாழ் இணையம் இருக்கின்றது. இந்த நிலையை மாற்றியமைக்க விளம்பரங்கள் எமக்கு பெரும் உதவி செய்யும். விளம்பரங்களை வழங்க முன்வருபவர்கள், யாழின் பிரபல்யம் எந்தளவுக்கு இருக்கு என்பதை கண்டிப்பாக ஆராய்வர். எனவே யாழை பிரபல்யப்படுத்துவது உங்களின் கைகளிலும் இருக்கின்றது. யாழுக்குரிய முகநூல் பக்கத்தில் (http://www.facebook.com/yarlcom?ref=mf) உங்களையும் இணைத்து உங்கள் உறவுகள், நண்பர்களையும் இணைத்து கொள்வது போன்ற விடயங்களை இன்றே நீங்கள் தொடங்கலாம். விரைவில் டுவிட்டரிலும் அதிக கவனம் செலுத்த இருக்கின்றோம். அதே போன்று Google + இலும் கவனம் செலுத்து இருக்கின்றோம். இவை அனைத்துக்கும் உங்களின் பங்களிப்புதான் மிகத் தேவையான ஒன்று. யாழ் கருத்துக்களத்தில் சிறந்த விடயங்களை இணைப்பது, விவாதிப்பது, நாகரீகமாக உரையாடுவது போன்ற விடயங்களும் மிகவும் முக்கியமானவை.

என்றும் போல் யாழ் இணையம் உங்களின் உற்ற உறவாக இருக்க உங்களின் பங்களிப்பையும், அன்பையும், ஆதரவையும் நாடுகின்றோம்

நன்றி

Link to comment
Share on other sites

யாழ்களத்தின் முகப்பு பார்ப்பதற்கு மிகவும்அழகாக இருக்கிறது இதற்காக உழைத்த மோகன் அண்ணா இணையவன் ஆகியோருக்கு யாழ்கள சார்பில் எனது வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பு நன்றாக வடிவமைக்கப் பட்டுள்ளது.

அதற்கு பாடுபட்ட இணையவனுக்கு நன்றிகள்.

விளம்பரம் என்னும் போது... தனியே வியாபார நிலையங்களின் விளம்பரம் மட்டும் தான் பிரசுரிக்கப்படுமா?

அல்லது சாமத்தியச் சடங்கு, திருமண அழைப்பிதழ், பிறந்தநாள் அழைப்பிதழ், காது குத்தல், பல்லுக் கொழுக்கட்டை அவித்தல், மரண அறிவித்தல் போன்றவற்றையும் ஏற்றுக் கொள்வீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் மாற்றம் காலத்தின் தேவை

முகப்பு இவ்வளவு நாளும் இருந்ததைக்காட்டிலும் வண்ணக்கோலங்களாய் மிளிர்கிறது. முகப்புப்பக்கம் அனைவரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.... இன்றுதான் முகப்பு மாற்றம் வந்திருக்கிறது தொழில் நுட்பம் எப்படி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்க்கவில்லை எப்படியும் ஒரு வாரம் இதற்குள் உழுது திரிந்துவிட்டுத்தான் மிகுதியை எழுதலாம். வாழ்த்துக்கள் கனடாவின் 145 ஆவது பிறந்ததினத்தில் யாழின் புதிய வடிவம் பிறப்பெடுத்திருக்கிறது எப்போதும் ஞாபகத்தில் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் முகப்பு நல்லா இருக்கு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி இணையவன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அழகாக இருக்கிறது. யாழ் நிர்வாகத்திற்கு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

அனைவருக்கும் வணக்கம்,

தமிழ் உறவுகளோடு யாழ் இணையம் நீண்டதூரம் பயணிப்பதற்காக, இணையத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு காலத்திற்கு காலம் மாற்றங்களைச் செய்து வந்துள்ளோம். அந்தவகையில் மீண்டும் சில மாற்றங்களைக் கொண்டுவர எண்ணியுள்ளோம். அதன் ஒரு கட்டமாக யாழ் முகப்பு மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வாசகர்களுக்குச் சில வசதிகளைக் கொடுப்பதுடன் நாளுக்கு நாள் பரந்துசெல்லும் இணைய வலையில் யாழின் வளர்ச்சியையும் சீர்செய்யும் என நம்புகிறோம்.

முக்கியமாக யாழ் முகப்பிலிருந்தவாறே பிரதான செய்திகளைச் சுருக்கமாக அறியலாம். அத்துடன் RSS முறையில் http://yarl.com/rss.xml என்ற முகவரியில் இதே செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை செய்தி அறிக்கைப் பகுதியில் பதிவு செய்து கொண்டால் நாள்தோறும் மின்னஞ்சல் மூலம் செய்தித் தொகுப்பைப் பெறலாம். அத்துடன் தேவைப்படும் போது நீங்கள் மின்னஞ்சல் பெறுவதில் இருந்து விலகியும் கொள்ள முடியும்.

அத்துடன் யாழ் உறுப்பினர்களின் சுய ஆக்கங்களை முக்கியத்துவப்படுத்துவதற்காகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கருத்துக்களம், சமையல், முற்றம் ஆகிய பிரதான பகுதிகளில் ஆக்கியவர் / பகுதி / திகதி வாரியாக ஆக்கங்கள் இணைக்கப்படும். கருத்துக் களத்தில் பதியப்பட்ட பழைய சுய ஆக்கங்கள் படிப்படியாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இணைக்கப்படும்.

ஏற்கனவே இருந்த நாட்காட்டிப் பகுதி சிறிது மேம்படுத்தப்பட்டுள்ளது. நாட்காட்டிப் பகுதியில் தற்போது இருக்கும் தரவுகளுடன் மேலதிகமான நடந்த முக்கிய நிகழ்வுகள் / நடக்கப்போகும் நிகழ்வுகள் ஆகியவை சேர்க்கப்படும்.

வர்த்தக விளம்பரங்கள் செய்ய விரும்புபவர்கள் 'விளம்பரங்கள் செய்வதற்கு' என்ற இணைப்பில் தமது விண்ணப்பத்தைப் பதியலாம். கீழுள்ள இணைப்பு மூலம் கருத்துக்களம் பற்றி அல்லது வேறு விடயங்கள் தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ள முடியும்.

ஏனைய தகவல்களுக்கு

யாழ் களம் மேலும் நீண்ட காலம் தனது சேவையைத் தொடர இன்றுபோல் என்றும் உங்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.

நன்றி.

- யாழ் நிர்வாகம் -

வணக்கம் நண்பர்களே..

யாழ் குழுமத்தின் புதிய வடிவம் அருமையாக இருக்கிறது. தொடர்ந்தும் தனித்துவமான பாணியில் யாழ் தன் பணியை தொடர்ந்து இன்னும் அதிகளவான வாசகர்களின் உள்ளங்களில் இடம் பிடிக்கட்டும்.

தொடரட்டும் யாழின் பணி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும், தோற்றந்தரும், யாழ் நங்கை, தனது தனித்துவத்தையும், மிடுக்கையும் இழந்து விடாது, புதுப் பொலிவுடன் மிளிர்கிறாள்!

இந்தத் தோற்றத்தை, அவளுக்கு அளித்த, மோகன் அண்ணா, இணையவன், மற்றும் நிழலி, ஆகிய உறவுகளுக்கு, மனமார்ந்த நன்றிகள்!

இணையத் தளமொன்றின், முகப்பானது மிகவும் பெறுமதி வாய்ந்தது! ஊர்ப்புதினத்தில் அதிக பதிவுகள், பொதுவாக இடப்படுகின்றன! இவையும் புதிய பதிவுகளில், திரும்பவும் தோன்றுவதால், ஏறத்தாள ஒரே பதிவுகள், ஊர்ப்புதினம் பகுதியிலும், புதிய பதிவுகள் பகுதியிலும் தோன்றுகின்றன! அதாவது, ஒரே பதிவுகள், இரண்டிலும் தோன்றுகின்றன போல உள்ளது!

இதை நிர்வாகம், கவனித்தால் நல்லது!

யாழ் நங்கையின் அழகு, மேலும் மிருகு பெற வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

யாழ் அழகு.யாழிற்கென்றே தனித்துவமான ஒரு எழுத்துருவை தெரிவு செய்தால் நல்லாயிருக்கும்.

என்ன புங்கையூரன் ,யாழை பெண்ணாக்கிவிட்டீர்கள்? அளவுக்கதிகமாக முகப்பூச்சு செய்து நிற்கப்போகிறாள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.