Jump to content

இஸ்ரேலின் விவசாய நீர்ப்பாசன முறைகள்


Recommended Posts

.

Drip Irrigation ஐ மிகவும் செவ்வையாகப் பயன்படுத்துவதன் மூலம் பாலைவனங்களை சோலைகளாக்குகின்றார்கள்.

நீர், பசளை என்பன மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டு நல்ல விளைச்சல் பெறப்படுகின்றது. நீர், பசளை விரயமாதல் தவிர்க்கப்படுகின்றது.

irigatie-prin-picurare.jpg

drip-architecture.jpg

cleanbiz2.jpg

MW-AO711_Netafi_20120104060542_ME.jpg?uuid=17bbaf18-36c4-11e1-91da-002128040cf6

[media=]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், ஈசன்!

எமது நாட்டுக்கும், வருங்காலத்தில் இந்த முறை பயன்படுத்தப் படலாம்.

அவுஸில்,Hydroponic முறை, பயன்படுத்தப்படும், இடங்களுக்குப் போயிருக்கின்றேன்! குறைந்த இடப்பரப்பில் விளைச்சல் மிகவும் அதிகமாகக் கிடைக்கின்றது! கிருமிநாசினிகள், உபயோகிக்கும் தேவையும் இல்லை! வருடம் முழுவதும், உற்பத்தி செய்கிறார்கள்!

byf2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இணைப்பு.எம்மவருக்கு பயன்படக்கூடியதுமானது. நன்றி ஐயா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், ஈசன்!

எமது நாட்டுக்கும், வருங்காலத்தில் இந்த முறை பயன்படுத்தப் படலாம்.

அவுஸில்,Hydroponic முறை, பயன்படுத்தப்படும், இடங்களுக்குப் போயிருக்கின்றேன்! குறைந்த இடப்பரப்பில் விளைச்சல் மிகவும் அதிகமாகக் கிடைக்கின்றது! கிருமிநாசினிகள், உபயோகிக்கும் தேவையும் இல்லை! வருடம் முழுவதும், உற்பத்தி செய்கிறார்கள்!

byf2.jpg

ஐரோப்பாவின் மரக்கறித்தோட்டங்களான ஸ்பானியாவிலும்.நெதர்லாந்திலும் இதேமுறையில்த்தான் பயிரிடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

.

நானும் Dural, Glenorie போன்ற பகுதிகளில் Hydroponic Green Houses பார்த்திருக்கிறேன் பூங்கையூரன். நிறைய ஆசைகள் இருக்கிறது. பார்க்கலாம். :)

அபராஜிதன், கு.சா மிக்க நன்றிகள்.

தீவுப்பகுதிகளில் / யாழின் ஏனைய பகுதிகளில் இருக்கும் தரவை என்று சொல்லப்படும் மைல்கணக்கான வெட்ட வெளிகளை எப்படி சோலைகளாக்கலாம் என்று சிறு வயது முதலே நிறைய யோசித்து வைத்திருக்கிறேன். அதைப்பற்றி அடுத்ததாக எழுதலாம். அதற்குரிய ஒரு அறிமுகம் தான் இந்த Drip Irrigation.

Link to comment
Share on other sites

ஐரோப்பிய நாடுகளிலும் நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏறத்தாள இதே முறையைத்தான் சில இடங்களில் பாவிக்கின்றனர்.

ஆபிரிக்காவில் இரவில் காற்றில் இருக்கும் ஈரப்பதனை நீராக்கி பகலில் நீர்ப்பாசனம் செய்யும் முறையை எங்கோ பார்த்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளிலும் நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏறத்தாள இதே முறையைத்தான் சில இடங்களில் பாவிக்கின்றனர்.

ஆபிரிக்காவில் இரவில் காற்றில் இருக்கும் ஈரப்பதனை நீராக்கி பகலில் நீர்ப்பாசனம் செய்யும் முறையை எங்கோ பார்த்துள்ளேன்.

mist-net2.jpg

இணையவனுக்காக, மிகவும் சிரமப்பட்டுத் தேடியெடுத்த படம்! :D

Link to comment
Share on other sites

மிகவும் பயனுள்ள இணைப்பு.

உலக அளவில் நீர்ப்பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இந்த முறையை உபயோகிக்க ஆரம்பிப்பது நல்லது.

ஈசன் உங்கள் தொடரை ஆரம்பியுங்கள். நிறையப் பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

உங்கள் தொடரையும் ஆரம்பியுங்கள்

(ஒர்கானிக் farm) பூச்சிகொல்லிகள் இரசாயன உரம்கள் பயன்படுத்தாமல் செய்யபடும் பயிர்செய்கை முறை பற்றி யும் எழுதுங்கள் (உங்களுக்கு தெரிந்தவற்றை)

[media=]

இந்த காணொலியினை பாருங்கள் ஒர்கானிக் ஃபார்ம் பற்றிய அதன் தேவை பற்றி சில தகவல்கள் இருக்கிறது

Link to comment
Share on other sites

.

14.jpg

இணையவன் சொல்லியது இப்படியானதாகத் தான் இருக்க வேண்டும். இரவில் காற்றின் ஈரப்பதன் குளிரிற்கு அதிகரித்து பனியாக ஒடுங்கும் போது பிளாஸ்ரிக் மேற்பரப்பில் விழுந்து தாவரத்தின் தண்டின் அடிப்பகுதிக்குச் செல்கிறது. (மாசிப் பனி மூசிப்பெய்யும் !!)

மற்றொரு முறை குளிரூட்டித் ( Air Condition - AC ) தத்துவத்தினை போன்றது. குளிரூட்டியினுள் நுழைவதற்கு முன் காற்றானது ஈரலிப்பான செங்கல் அடுக்கினூடாகச் செல்லும். இதன் போது காற்றின் வெப்பநிலையும் குறையும். அதன் ஈரலிப்பும் அதிகரிக்கும். (செங்கல் கடல் நீரினால் ஈரலிப்பாக்கப் படுகின்றது.) குளிரூட்டி காற்றின் வெப்பநிலையை மேலும் குறைக்க காற்றின் ஈரப்பதன் நீராக ஒடுங்குகின்றது.

* * * * *

மிக்க நன்றி தப்பிலி. விவசாயம் விருப்பமான தொழில். வஞ்சகமில்லாமல் இங்க எழுதுவோம். :)

* * * * *

"சத்தியமே வெல்லும்" பிற்பாடு பார்த்துச் சொல்கிறேன் அபராஜிதன். நீளமாக இருக்கிறது. 1 மணித்தியாளம்!!

இணைப்பிற்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

தகவல்களுக்கு நன்றி ஈசன்.

நான் குறிப்பிட்டது புங்கையூரன் இணைத்த படம் போன்று நீண்ட வலைத் தொகுதிகளை அமைத்து இரவில் குளிர் காற்றில் உள்ள நீரினை அவற்றில் படியவைத்துச் சேமிப்பதாகும்.

2005 இல் யாழ்ப்பாணம் போனபோது நிலாவரை கிணற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீமெந்தினால் கட்டப்பட்ட சிறு நீர்ப்பாசன கால்வாய்களைக் காண முடிந்தது. அவற்றில் இப்போது நீர்ப்பாசனம் செய்வதில்லை என்றார்கள். கூடுதலான நீரைக் கிணற்றிலிருந்து வெளியேற்றியதால் உப்பு கலந்த நீர் தற்போது அதில் வருவதாகக் கூறினார்கள்.

அதிகரித்து வரும் தேவைக்கேற்ப நவீன உபகரணங்களைப் பாவித்து விவசாயம் செய்ய வேண்டியுள்ள இன்றைய நிலையில் யாழ்ப்பாணத்தின் நீர்க் கொள்ளளவு ஆபத்தான எதிர்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. நிலத்தடி நீரைக் கட்டுப்பாடற்ற முறையில் அங்கு பாவிக்கப்படுகின்றது. ஏறத்தாள எல்லாப் பக்கமும் கடலால் சூழப்பட்ட யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரினைப் படிப்படியாக உப்புநீர் ஆகிரமிக்கலாம்.

அரசாங்கம் இதனை அலட்சியமாகவே கையாளும். அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

.

அதுவும் ஒரு வெற்றிகரமான முறை இணையவன். சிலி நாட்டில் வெற்றிகரமாக இயங்கி நாளொன்றுக்கு 15,000 லீட்டர் தண்ணீர்வரை உற்பத்தி செய்ததாக இணையத்தில் போட்டுள்ளார்கள். ஆனால் உயரமான மலைப்பகுதிகளிளேயே இம்முறை வேலை செய்யும். பனிப்புகார் ஏற்படும் அளவிற்கு உயரம் வேண்டும்.

இது ஒர் Passive Method.

Air Condition தத்துவத்தினை போன்ற ( Active Method ) முறை மூலம் வளிமண்டல ஈரப்பதனைப் பிரித்து எடுக்கும் ஆய்வு வேலைகளில் யாருக்காவது ஆர்வம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அதைப்பற்றி கலந்துரையாடலாம்.

* * * * * * * *

இனி.. இது சம்பந்தமாக ஒரு சிறிய கானொலி..

[media=]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் கொஞ்சம் பாருங்கள்..

pivot.jpg

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி ஈசன் அண்ணா. :) விவசாயம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நானும் இத்திரியில் இணைந்திருக்கிறேன். படங்கள் அழகாக இருக்கின்றன. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

corn.JPG

Pictured here is corn growing now at Wise Farms. Irrigation pipes are under the plastic to control the water supply to the tender young plants. The plastic also keeps weed growth on the farm to a minimum.

The corn will grow very fast and will be ready early summer. Can't wait!corn+rows.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுவுக்கு ஈசன்

இன்று தான் பார்த்தேன்

தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் ஊரைச்சேர்ந்த எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

(மழை நீரை பாடசாலைகளில் சேமிக்கும் திட்டம் ஒன்றை எமது ஊரில் ஆரம்பித்துள்ளோம். அது சிறிது சிறிதாக வளர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் ஆந்த முறையை ஏற்படுத்துவதே முதல் திட்டம். அந்தவகையில் அதன் அடுடத்த கட்டமாக இது எமக்கு பயன்படும்)

Link to comment
Share on other sites

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

Link to comment
Share on other sites

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

எனக்கும் இதில் சந்தேகம் இருக்கிறது கருப்பு பிளாஸ்டிக் வெப்பத்தினை உறிஞ்சும் அல்லவா? அதை பயன்படுதுவதால் ஈரலிப்பு உலர்த்தபட்டுபட்டு விடுமல்லவா செடியின் அடிப்பகுதியில் உள்ள?

Link to comment
Share on other sites

எனக்கும் இதில் சந்தேகம் இருக்கிறது கருப்பு பிளாஸ்டிக் வெப்பத்தினை உறிஞ்சும் அல்லவா? அதை பயன்படுதுவதால் ஈரலிப்பு உலர்த்தபட்டுபட்டு விடுமல்லவா செடியின் அடிப்பகுதியில் உள்ள?

இரவில் குளிர் அதிகம் உள்ள பிரதேசங்களில் வேர் உள்ள பகுதி உறைந்துபோகாமல் (Freezing up) தடுக்க உதவும்தானே..

பகலில் வெப்பம் அதிகமாகும்போது நீர் ஆவியானாலும் பிளாஸ்டிக் உறையினால் தடுக்கப்பட்டு பிறகு வெப்பம் தணிந்தவுடன் மீண்டும் நீர் ஆகும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

1. தாவரத்தைச் சுற்றிய பகுதியில் கூடிய அளவு ஈரலிப்பை தக்க வைக்க.

2. தேவையான தாவரத்தை அண்டிய பகுதியில்.. தாவரப் பீடைகளை கட்டுப்படுத்த. இதன் மூலம் இரசாயன பீடை நாசினிகளை தவிர்த்து.. செலவைக் கட்டுப்படுத்தி.. இனவிடை போட்டியை குறைத்து விளைச்சலை கூட்ட முடியும்..!

என்று நினைக்கிறேன். :icon_idea:

ஆனால்.. இதில் பாதகங்களும் உள்ளது. குறிப்பாக.. இந்த ஈரலிப்பான.. இருண்ட சூழல்.. நுண்ணங்கிகளுக்கு.. மற்றும்... பூச்சி வகைகளுக்கு.. சாதமாகலாம். அவை தாவரங்களை தாக்கக் கூடும். மேலும்.. கறுப்பு பிளாஸ்ரிக்.. துளையிடப்படாத நிலையில் பாவிக்கப்படும் நிலையில்.. தாவர வேர்ப்பகுதியில் ஒக்சிசன்.. மற்றும் நீர் பரவல் குறைய வாய்ப்புள்ளது..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

அவுஸ்திரேலியா ஒரு வெப்பநிலை கூடிய நாடு, இசை!

இங்கு அனேகமாக வீட்டுத் தோட்டங்களில் கூட, இந்தக் கறுப்புப் பிளாஸ்டிக் போடுவதுண்டு!

முதல் காரணம் 'புற்கள்!, இரண்டாவது காரணம், நீர் ஆவியாக வெளியேறுவதைத் தடுத்தல்! இங்கு வளரும், உள்ளூர்ப் புல்லின் பெயர், கைக் கியூ, என அழைக்கப் படும்! அத்துடன் பற்றி ஏரிகள்! முளைத்து மூன்று நாட்களில், உங்கள் முழங்காலைத் தடவி 'ஹாய்' சொல்லக் கூடியவை!

மத்திய அவுஸ்திரேலியாவில், உள்ள நகரமொன்றின், வீதிக்கரையில் முட்டை ஒன்று,, சூரிய வெப்பத்தில் பொரிக்கப் படுகின்றது!

egg-frying-on-sidewalk-photo.jpg

Link to comment
Share on other sites

ஸ்ஸ்ஸப்பா.. இதுக்கு கனடா பரவாயில்லை.. :D

Link to comment
Share on other sites

.

இசை, நெடுக்ஸ், பூங்கையூரன் சொன்னது போல் கறுப்புப் படலத்தின் நன்மைகள்

  1. ஒளி புகாமல் தடுப்பதனால் களைகள் வளராமல் தடுக்கப்படும். இது முதன்மைக் காரணம்.
  2. படலத்தின் கீழ் மண் வெப்பநிலை அதிகரிப்பதால் தீங்கு செய்யும் குடம்பிகள், புழுக்கள், ஃப‌ங்கஸ் என்பன கொல்லப்படும்.
  3. அதிகரித்த மண் வெப்பநிலை வேர் தொழிற்பாட்டை அதிகரிக்கின்றது. இதனால் தாவரம் விரைவாக வளர்கின்றது.
  4. மூடி இருப்பதால் ஆவியாகும் நீர் மீண்டும் ஒடுங்கி தாவரத்திற்கே கிடைக்கிறது.

* * * * * * * *

மேலே இணையவனுக்காக இணைக்கப்பட்ட பிளாஸ்ரிக்கினால் ஆன படியும் பனியை பிடிக்கும் சதுரங்களை டால் யா (Tal - Ya) என்னும் இஸ்ரேலிய கம்பனி தயாரிக்கின்றது. இந்த மிக எளிமையான ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் பாலவனத்தில் எப்படி திராட்சை காய்த்துக் குழுங்குகின்றது என்பதைப் பாருங்கள்.

படம் துளசியும் பார்த்து ரசிப்பதற்கு. :)

அழகான படங்களிற்கு நன்றி ஜீவா. :)

P8200128.JPG

P8200116.JPG

DSC02282.JPG

DSC03625.JPG

DSC02095.JPG

தகவலுக்கு நன்றி விசுகு அண்ணா. வளி மண்டல ஈரப்பதனை நீராக்கும் உபகரணம் எம் ஊர்களில் மிகவும் வெற்றிகரமாக வேலை செய்யும். ஊர் புழுக்கம் (வியர்வை) ஞாபகம் இருக்கிறது தானே ?

* * * * * * *

இனி...

இந்த தரவைகளில் காணப்படும் பயிர்ச்செகைக்கு ஒவ்வாத காரணிகள்.

1. மெல்லிய மண் படை

--சில இடங்களில் ஒரு சாண் தடிப்புக் கூட இல்லை. சிறிது கிண்டவே பார் வந்து விடும்.

2. கோடை காலங்களில் உலர்ந்த, வரண்ட‌ மண்.

3. மாரிகாலங்களில் நீர் தேங்கி நிற்றல்.

4. கடலுக்கு அண்மையாகவோ, கடலோடு தொடர்பான ஏரிகளுக்கு அண்மையாகவோ காணப்படுவதால் இந்த தரவைகளில் நிலக்கீழ் நீர் உவர்பானதாகக் காணப்படும்.

5. களித்தன்மையான மண்.

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.