Jump to content

இஸ்ரேலின் விவசாய நீர்ப்பாசன முறைகள்


Recommended Posts

.

Drip Irrigation ஐ மிகவும் செவ்வையாகப் பயன்படுத்துவதன் மூலம் பாலைவனங்களை சோலைகளாக்குகின்றார்கள்.

நீர், பசளை என்பன மிகக்குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டு நல்ல விளைச்சல் பெறப்படுகின்றது. நீர், பசளை விரயமாதல் தவிர்க்கப்படுகின்றது.

irigatie-prin-picurare.jpg

drip-architecture.jpg

cleanbiz2.jpg

MW-AO711_Netafi_20120104060542_ME.jpg?uuid=17bbaf18-36c4-11e1-91da-002128040cf6

[media=]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், ஈசன்!

எமது நாட்டுக்கும், வருங்காலத்தில் இந்த முறை பயன்படுத்தப் படலாம்.

அவுஸில்,Hydroponic முறை, பயன்படுத்தப்படும், இடங்களுக்குப் போயிருக்கின்றேன்! குறைந்த இடப்பரப்பில் விளைச்சல் மிகவும் அதிகமாகக் கிடைக்கின்றது! கிருமிநாசினிகள், உபயோகிக்கும் தேவையும் இல்லை! வருடம் முழுவதும், உற்பத்தி செய்கிறார்கள்!

byf2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இணைப்பு.எம்மவருக்கு பயன்படக்கூடியதுமானது. நன்றி ஐயா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், ஈசன்!

எமது நாட்டுக்கும், வருங்காலத்தில் இந்த முறை பயன்படுத்தப் படலாம்.

அவுஸில்,Hydroponic முறை, பயன்படுத்தப்படும், இடங்களுக்குப் போயிருக்கின்றேன்! குறைந்த இடப்பரப்பில் விளைச்சல் மிகவும் அதிகமாகக் கிடைக்கின்றது! கிருமிநாசினிகள், உபயோகிக்கும் தேவையும் இல்லை! வருடம் முழுவதும், உற்பத்தி செய்கிறார்கள்!

byf2.jpg

ஐரோப்பாவின் மரக்கறித்தோட்டங்களான ஸ்பானியாவிலும்.நெதர்லாந்திலும் இதேமுறையில்த்தான் பயிரிடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

.

நானும் Dural, Glenorie போன்ற பகுதிகளில் Hydroponic Green Houses பார்த்திருக்கிறேன் பூங்கையூரன். நிறைய ஆசைகள் இருக்கிறது. பார்க்கலாம். :)

அபராஜிதன், கு.சா மிக்க நன்றிகள்.

தீவுப்பகுதிகளில் / யாழின் ஏனைய பகுதிகளில் இருக்கும் தரவை என்று சொல்லப்படும் மைல்கணக்கான வெட்ட வெளிகளை எப்படி சோலைகளாக்கலாம் என்று சிறு வயது முதலே நிறைய யோசித்து வைத்திருக்கிறேன். அதைப்பற்றி அடுத்ததாக எழுதலாம். அதற்குரிய ஒரு அறிமுகம் தான் இந்த Drip Irrigation.

Link to comment
Share on other sites

ஐரோப்பிய நாடுகளிலும் நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏறத்தாள இதே முறையைத்தான் சில இடங்களில் பாவிக்கின்றனர்.

ஆபிரிக்காவில் இரவில் காற்றில் இருக்கும் ஈரப்பதனை நீராக்கி பகலில் நீர்ப்பாசனம் செய்யும் முறையை எங்கோ பார்த்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளிலும் நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் நீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏறத்தாள இதே முறையைத்தான் சில இடங்களில் பாவிக்கின்றனர்.

ஆபிரிக்காவில் இரவில் காற்றில் இருக்கும் ஈரப்பதனை நீராக்கி பகலில் நீர்ப்பாசனம் செய்யும் முறையை எங்கோ பார்த்துள்ளேன்.

mist-net2.jpg

இணையவனுக்காக, மிகவும் சிரமப்பட்டுத் தேடியெடுத்த படம்! :D

Link to comment
Share on other sites

மிகவும் பயனுள்ள இணைப்பு.

உலக அளவில் நீர்ப்பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இந்த முறையை உபயோகிக்க ஆரம்பிப்பது நல்லது.

ஈசன் உங்கள் தொடரை ஆரம்பியுங்கள். நிறையப் பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

உங்கள் தொடரையும் ஆரம்பியுங்கள்

(ஒர்கானிக் farm) பூச்சிகொல்லிகள் இரசாயன உரம்கள் பயன்படுத்தாமல் செய்யபடும் பயிர்செய்கை முறை பற்றி யும் எழுதுங்கள் (உங்களுக்கு தெரிந்தவற்றை)

[media=]

இந்த காணொலியினை பாருங்கள் ஒர்கானிக் ஃபார்ம் பற்றிய அதன் தேவை பற்றி சில தகவல்கள் இருக்கிறது

Link to comment
Share on other sites

.

14.jpg

இணையவன் சொல்லியது இப்படியானதாகத் தான் இருக்க வேண்டும். இரவில் காற்றின் ஈரப்பதன் குளிரிற்கு அதிகரித்து பனியாக ஒடுங்கும் போது பிளாஸ்ரிக் மேற்பரப்பில் விழுந்து தாவரத்தின் தண்டின் அடிப்பகுதிக்குச் செல்கிறது. (மாசிப் பனி மூசிப்பெய்யும் !!)

மற்றொரு முறை குளிரூட்டித் ( Air Condition - AC ) தத்துவத்தினை போன்றது. குளிரூட்டியினுள் நுழைவதற்கு முன் காற்றானது ஈரலிப்பான செங்கல் அடுக்கினூடாகச் செல்லும். இதன் போது காற்றின் வெப்பநிலையும் குறையும். அதன் ஈரலிப்பும் அதிகரிக்கும். (செங்கல் கடல் நீரினால் ஈரலிப்பாக்கப் படுகின்றது.) குளிரூட்டி காற்றின் வெப்பநிலையை மேலும் குறைக்க காற்றின் ஈரப்பதன் நீராக ஒடுங்குகின்றது.

* * * * *

மிக்க நன்றி தப்பிலி. விவசாயம் விருப்பமான தொழில். வஞ்சகமில்லாமல் இங்க எழுதுவோம். :)

* * * * *

"சத்தியமே வெல்லும்" பிற்பாடு பார்த்துச் சொல்கிறேன் அபராஜிதன். நீளமாக இருக்கிறது. 1 மணித்தியாளம்!!

இணைப்பிற்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

தகவல்களுக்கு நன்றி ஈசன்.

நான் குறிப்பிட்டது புங்கையூரன் இணைத்த படம் போன்று நீண்ட வலைத் தொகுதிகளை அமைத்து இரவில் குளிர் காற்றில் உள்ள நீரினை அவற்றில் படியவைத்துச் சேமிப்பதாகும்.

2005 இல் யாழ்ப்பாணம் போனபோது நிலாவரை கிணற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீமெந்தினால் கட்டப்பட்ட சிறு நீர்ப்பாசன கால்வாய்களைக் காண முடிந்தது. அவற்றில் இப்போது நீர்ப்பாசனம் செய்வதில்லை என்றார்கள். கூடுதலான நீரைக் கிணற்றிலிருந்து வெளியேற்றியதால் உப்பு கலந்த நீர் தற்போது அதில் வருவதாகக் கூறினார்கள்.

அதிகரித்து வரும் தேவைக்கேற்ப நவீன உபகரணங்களைப் பாவித்து விவசாயம் செய்ய வேண்டியுள்ள இன்றைய நிலையில் யாழ்ப்பாணத்தின் நீர்க் கொள்ளளவு ஆபத்தான எதிர்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளது. நிலத்தடி நீரைக் கட்டுப்பாடற்ற முறையில் அங்கு பாவிக்கப்படுகின்றது. ஏறத்தாள எல்லாப் பக்கமும் கடலால் சூழப்பட்ட யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரினைப் படிப்படியாக உப்புநீர் ஆகிரமிக்கலாம்.

அரசாங்கம் இதனை அலட்சியமாகவே கையாளும். அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

.

அதுவும் ஒரு வெற்றிகரமான முறை இணையவன். சிலி நாட்டில் வெற்றிகரமாக இயங்கி நாளொன்றுக்கு 15,000 லீட்டர் தண்ணீர்வரை உற்பத்தி செய்ததாக இணையத்தில் போட்டுள்ளார்கள். ஆனால் உயரமான மலைப்பகுதிகளிளேயே இம்முறை வேலை செய்யும். பனிப்புகார் ஏற்படும் அளவிற்கு உயரம் வேண்டும்.

இது ஒர் Passive Method.

Air Condition தத்துவத்தினை போன்ற ( Active Method ) முறை மூலம் வளிமண்டல ஈரப்பதனைப் பிரித்து எடுக்கும் ஆய்வு வேலைகளில் யாருக்காவது ஆர்வம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அதைப்பற்றி கலந்துரையாடலாம்.

* * * * * * * *

இனி.. இது சம்பந்தமாக ஒரு சிறிய கானொலி..

[media=]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதையும் கொஞ்சம் பாருங்கள்..

pivot.jpg

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு நன்றி ஈசன் அண்ணா. :) விவசாயம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நானும் இத்திரியில் இணைந்திருக்கிறேன். படங்கள் அழகாக இருக்கின்றன. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

corn.JPG

Pictured here is corn growing now at Wise Farms. Irrigation pipes are under the plastic to control the water supply to the tender young plants. The plastic also keeps weed growth on the farm to a minimum.

The corn will grow very fast and will be ready early summer. Can't wait!corn+rows.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுவுக்கு ஈசன்

இன்று தான் பார்த்தேன்

தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் ஊரைச்சேர்ந்த எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

(மழை நீரை பாடசாலைகளில் சேமிக்கும் திட்டம் ஒன்றை எமது ஊரில் ஆரம்பித்துள்ளோம். அது சிறிது சிறிதாக வளர்ந்து ஒவ்வொரு வீட்டிலும் ஆந்த முறையை ஏற்படுத்துவதே முதல் திட்டம். அந்தவகையில் அதன் அடுடத்த கட்டமாக இது எமக்கு பயன்படும்)

Link to comment
Share on other sites

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

Link to comment
Share on other sites

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

எனக்கும் இதில் சந்தேகம் இருக்கிறது கருப்பு பிளாஸ்டிக் வெப்பத்தினை உறிஞ்சும் அல்லவா? அதை பயன்படுதுவதால் ஈரலிப்பு உலர்த்தபட்டுபட்டு விடுமல்லவா செடியின் அடிப்பகுதியில் உள்ள?

Link to comment
Share on other sites

எனக்கும் இதில் சந்தேகம் இருக்கிறது கருப்பு பிளாஸ்டிக் வெப்பத்தினை உறிஞ்சும் அல்லவா? அதை பயன்படுதுவதால் ஈரலிப்பு உலர்த்தபட்டுபட்டு விடுமல்லவா செடியின் அடிப்பகுதியில் உள்ள?

இரவில் குளிர் அதிகம் உள்ள பிரதேசங்களில் வேர் உள்ள பகுதி உறைந்துபோகாமல் (Freezing up) தடுக்க உதவும்தானே..

பகலில் வெப்பம் அதிகமாகும்போது நீர் ஆவியானாலும் பிளாஸ்டிக் உறையினால் தடுக்கப்பட்டு பிறகு வெப்பம் தணிந்தவுடன் மீண்டும் நீர் ஆகும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

1. தாவரத்தைச் சுற்றிய பகுதியில் கூடிய அளவு ஈரலிப்பை தக்க வைக்க.

2. தேவையான தாவரத்தை அண்டிய பகுதியில்.. தாவரப் பீடைகளை கட்டுப்படுத்த. இதன் மூலம் இரசாயன பீடை நாசினிகளை தவிர்த்து.. செலவைக் கட்டுப்படுத்தி.. இனவிடை போட்டியை குறைத்து விளைச்சலை கூட்ட முடியும்..!

என்று நினைக்கிறேன். :icon_idea:

ஆனால்.. இதில் பாதகங்களும் உள்ளது. குறிப்பாக.. இந்த ஈரலிப்பான.. இருண்ட சூழல்.. நுண்ணங்கிகளுக்கு.. மற்றும்... பூச்சி வகைகளுக்கு.. சாதமாகலாம். அவை தாவரங்களை தாக்கக் கூடும். மேலும்.. கறுப்பு பிளாஸ்ரிக்.. துளையிடப்படாத நிலையில் பாவிக்கப்படும் நிலையில்.. தாவர வேர்ப்பகுதியில் ஒக்சிசன்.. மற்றும் நீர் பரவல் குறைய வாய்ப்புள்ளது..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு பிளாஸ்டிக்கால் செடியின் அடியை மூடியிருக்கிறார்களே.. வெப்பத்தை தக்க வைப்பதற்கா?

அவுஸ்திரேலியா ஒரு வெப்பநிலை கூடிய நாடு, இசை!

இங்கு அனேகமாக வீட்டுத் தோட்டங்களில் கூட, இந்தக் கறுப்புப் பிளாஸ்டிக் போடுவதுண்டு!

முதல் காரணம் 'புற்கள்!, இரண்டாவது காரணம், நீர் ஆவியாக வெளியேறுவதைத் தடுத்தல்! இங்கு வளரும், உள்ளூர்ப் புல்லின் பெயர், கைக் கியூ, என அழைக்கப் படும்! அத்துடன் பற்றி ஏரிகள்! முளைத்து மூன்று நாட்களில், உங்கள் முழங்காலைத் தடவி 'ஹாய்' சொல்லக் கூடியவை!

மத்திய அவுஸ்திரேலியாவில், உள்ள நகரமொன்றின், வீதிக்கரையில் முட்டை ஒன்று,, சூரிய வெப்பத்தில் பொரிக்கப் படுகின்றது!

egg-frying-on-sidewalk-photo.jpg

Link to comment
Share on other sites

ஸ்ஸ்ஸப்பா.. இதுக்கு கனடா பரவாயில்லை.. :D

Link to comment
Share on other sites

.

இசை, நெடுக்ஸ், பூங்கையூரன் சொன்னது போல் கறுப்புப் படலத்தின் நன்மைகள்

  1. ஒளி புகாமல் தடுப்பதனால் களைகள் வளராமல் தடுக்கப்படும். இது முதன்மைக் காரணம்.
  2. படலத்தின் கீழ் மண் வெப்பநிலை அதிகரிப்பதால் தீங்கு செய்யும் குடம்பிகள், புழுக்கள், ஃப‌ங்கஸ் என்பன கொல்லப்படும்.
  3. அதிகரித்த மண் வெப்பநிலை வேர் தொழிற்பாட்டை அதிகரிக்கின்றது. இதனால் தாவரம் விரைவாக வளர்கின்றது.
  4. மூடி இருப்பதால் ஆவியாகும் நீர் மீண்டும் ஒடுங்கி தாவரத்திற்கே கிடைக்கிறது.

* * * * * * * *

மேலே இணையவனுக்காக இணைக்கப்பட்ட பிளாஸ்ரிக்கினால் ஆன படியும் பனியை பிடிக்கும் சதுரங்களை டால் யா (Tal - Ya) என்னும் இஸ்ரேலிய கம்பனி தயாரிக்கின்றது. இந்த மிக எளிமையான ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் பாலவனத்தில் எப்படி திராட்சை காய்த்துக் குழுங்குகின்றது என்பதைப் பாருங்கள்.

படம் துளசியும் பார்த்து ரசிப்பதற்கு. :)

அழகான படங்களிற்கு நன்றி ஜீவா. :)

P8200128.JPG

P8200116.JPG

DSC02282.JPG

DSC03625.JPG

DSC02095.JPG

தகவலுக்கு நன்றி விசுகு அண்ணா. வளி மண்டல ஈரப்பதனை நீராக்கும் உபகரணம் எம் ஊர்களில் மிகவும் வெற்றிகரமாக வேலை செய்யும். ஊர் புழுக்கம் (வியர்வை) ஞாபகம் இருக்கிறது தானே ?

* * * * * * *

இனி...

இந்த தரவைகளில் காணப்படும் பயிர்ச்செகைக்கு ஒவ்வாத காரணிகள்.

1. மெல்லிய மண் படை

--சில இடங்களில் ஒரு சாண் தடிப்புக் கூட இல்லை. சிறிது கிண்டவே பார் வந்து விடும்.

2. கோடை காலங்களில் உலர்ந்த, வரண்ட‌ மண்.

3. மாரிகாலங்களில் நீர் தேங்கி நிற்றல்.

4. கடலுக்கு அண்மையாகவோ, கடலோடு தொடர்பான ஏரிகளுக்கு அண்மையாகவோ காணப்படுவதால் இந்த தரவைகளில் நிலக்கீழ் நீர் உவர்பானதாகக் காணப்படும்.

5. களித்தன்மையான மண்.

.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.