Jump to content

இஸ்ரேலின் விவசாய நீர்ப்பாசன முறைகள்


Recommended Posts

படம் துளசியும் பார்த்து ரசிப்பதற்கு. :)

:) :) :)

என்னையும் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி அண்ணா. படம் மட்டுமல்ல, கருத்துகளையும் வாசிக்கிறேன். :)

Link to comment
Share on other sites

.

இனி...

மெல்லிய மண் படைக்கு சில தீர்வுகள்..

1. கீழே படத்தில் உள்ளது போல் அகன்ற கலப்பை மூலம் உழுதது போன்ற கால்வாய்களும் மேடுகளும். இங்கு அடிப்படையில்... கால்வாயின் மண் அள்ளப்பட்டு மேட்டில் குவிக்கப்படுகின்றது. படத்தில் கால்வாயும் மேடும் ஒரே அகலத்தில் உள்ளது. கால்வாயின் அகலம் மேட்டைவிட இரண்டு, மூன்று மடங்காகும் போது மேட்டின் உயரமும் அதற்கேற்ப அதிகரிக்கும். அதாவது பயிரிடப்போகும் இடத்தின் மண்படை தடிக்கும்.

நீளமாக இருக்கும் மேட்டின் இடையிடையே சமதூர இடைவெளியில் குறுக்காக மண்ணை அள்ளி மீண்டும் மேட்டில் போடுவதன் மூலம் மண்படையின் தடிப்பு மேலும் அதிகரிக்கப்படலாம்.இப்போது தொடர்ச்சியான நீள் சதுரங்களாக மேடு காட்சியளிக்கும்.

ready+for+planting.jpg

one-pass-plow-03.jpg

2. உயர்த்தப்பட்ட மண் படுக்கைகள்

ஏறகுறைய முதலாவது முறை போன்றது. ஆனால் பலகைகளால் பலப்படுத்தப்படுகின்றது. மண் அயலில் இருந்து அள்ளப்படுகின்ரது; அல்லது வேறு இடங்களில் இருந்து பெறப்படுகின்றது. இந்த மண்படுக்கையை உயர்த்த மண்ணைவிட‌ பெருமளவில் உக்கல், எரு, வைக்கோல் போன்ற சேதனப் பொருட்கள் பயன்படும்.

bed8.jpg

railway_sleepers_47.jpg

new-sleeper-photos-003large.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஈசன்! நீங்களும் என்னைப்போல் விவசாயகுடும்பத்தில் இருந்து வந்தவரா? நல்ல தகவல்களை இணைக்கின்றீர்கள் நன்றிகள்....தொடரட்டும் உங்கள் பணி..... :wub:

Link to comment
Share on other sites

ஈசன்,

இந்த முறையிலேயே (உயர் படுக்கை) மரக்கறித் தோட்டம் செய்கிறேன். களிமண் உள்ள இடங்களில் பயிர் செய்வதற்குச் சிறந்த முறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இசை, நெடுக்ஸ், பூங்கையூரன் சொன்னது போல் கறுப்புப் படலத்தின் நன்மைகள்

  1. ஒளி புகாமல் தடுப்பதனால் களைகள் வளராமல் தடுக்கப்படும். இது முதன்மைக் காரணம்.
  2. படலத்தின் கீழ் மண் வெப்பநிலை அதிகரிப்பதால் தீங்கு செய்யும் குடம்பிகள், புழுக்கள், ஃப‌ங்கஸ் என்பன கொல்லப்படும்.
  3. அதிகரித்த மண் வெப்பநிலை வேர் தொழிற்பாட்டை அதிகரிக்கின்றது. இதனால் தாவரம் விரைவாக வளர்கின்றது.
  4. மூடி இருப்பதால் ஆவியாகும் நீர் மீண்டும் ஒடுங்கி தாவரத்திற்கே கிடைக்கிறது.

* * * * * * * *

மேலே இணையவனுக்காக இணைக்கப்பட்ட பிளாஸ்ரிக்கினால் ஆன படியும் பனியை பிடிக்கும் சதுரங்களை டால் யா (Tal - Ya) என்னும் இஸ்ரேலிய கம்பனி தயாரிக்கின்றது. இந்த மிக எளிமையான ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் பாலவனத்தில் எப்படி திராட்சை காய்த்துக் குழுங்குகின்றது என்பதைப் பாருங்கள்.

படம் துளசியும் பார்த்து ரசிப்பதற்கு. :)

அழகான படங்களிற்கு நன்றி ஜீவா. :)

P8200128.JPG

P8200116.JPG

DSC02282.JPG

DSC03625.JPG

DSC02095.JPG

தகவலுக்கு நன்றி விசுகு அண்ணா. வளி மண்டல ஈரப்பதனை நீராக்கும் உபகரணம் எம் ஊர்களில் மிகவும் வெற்றிகரமாக வேலை செய்யும். ஊர் புழுக்கம் (வியர்வை) ஞாபகம் இருக்கிறது தானே ?

* * * * * * *

இனி...

இந்த தரவைகளில் காணப்படும் பயிர்ச்செகைக்கு ஒவ்வாத காரணிகள்.

1. மெல்லிய மண் படை

--சில இடங்களில் ஒரு சாண் தடிப்புக் கூட இல்லை. சிறிது கிண்டவே பார் வந்து விடும்.

2. கோடை காலங்களில் உலர்ந்த, வரண்ட‌ மண்.

3. மாரிகாலங்களில் நீர் தேங்கி நிற்றல்.

4. கடலுக்கு அண்மையாகவோ, கடலோடு தொடர்பான ஏரிகளுக்கு அண்மையாகவோ காணப்படுவதால் இந்த தரவைகளில் நிலக்கீழ் நீர் உவர்பானதாகக் காணப்படும்.

5. களித்தன்மையான மண்.

.

இப்படி எல்லாம் பயிர்செய்ய விருப்பம் இங்கிருந்துகொண்டு எப்படி .........? :)

Link to comment
Share on other sites

இப்படி எல்லாம் பயிர்செய்ய விருப்பம் இங்கிருந்துகொண்டு எப்படி .........? :)

தமிழரசு,

இங்கு திராட்சை நன்றாக விளையும். பெரிய கவனிப்பு ஏதும் தேவையில்லை. நானும் வைத்திருக்கிறேன். 'வைன்' இற்கு பாவிப்பது / உண்பதற்குப் பாவிப்பது என இரு வகை உண்டு. அதனடிப்படையில் திராட்சைக் கன்றுவாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும்.

இதனைவிட சிறிய தோட்டம் இருந்தாலும், அதற்கேற்ற மாதிரி நிறைய பயிர்களைப் பயிரிடலாம். முக்கியமாக 'சுழற்சி முறைப் பயிர்ச் செய்கை', 'நட்புத் தாவரங்களை சேர்த்து நடுதல்' (companion planting ) முறைகளில் பயிர் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். ஊரைப் போல இங்கு பயிர்ச் செய்கை கஷ்டமானதல்ல.

உடலிற்கும் பயிற்சியாகிறது. அத்தோடு கிருமிநாசினி பாவிக்காத, ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம். முக்கியமாக மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும். தோட்டத்தில் காய்கறி பறித்துச் சமைப்பது ஒரு உற்சாகமான அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு,

இங்கு திராட்சை நன்றாக விளையும். பெரிய கவனிப்பு ஏதும் தேவையில்லை. நானும் வைத்திருக்கிறேன். 'வைன்' இற்கு பாவிப்பது / உண்பதற்குப் பாவிப்பது என இரு வகை உண்டு. அதனடிப்படையில் திராட்சைக் கன்றுவாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும்.

இதனைவிட சிறிய தோட்டம் இருந்தாலும், அதற்கேற்ற மாதிரி நிறைய பயிர்களைப் பயிரிடலாம். முக்கியமாக 'சுழற்சி முறைப் பயிர்ச் செய்கை', 'நட்புத் தாவரங்களை சேர்த்து நடுதல்' (companion planting ) முறைகளில் பயிர் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். ஊரைப் போல இங்கு பயிர்ச் செய்கை கஷ்டமானதல்ல.

உடலிற்கும் பயிற்சியாகிறது. அத்தோடு கிருமிநாசினி பாவிக்காத, ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம். முக்கியமாக மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும். தோட்டத்தில் காய்கறி பறித்துச் சமைப்பது ஒரு உற்சாகமான அனுபவம்.

தகவலுக்கு நன்றி சகோதரா !

இந்த நாத்து (கன்றுகள்)எங்கு வாங்க முடியும்

நான் பார்த்திருக்கின்றேன் ஹோம் பேசில் முந்திரிச்செடி விலை அதிகமாக இருந்தது வாங்கவில்லை ..

Link to comment
Share on other sites

.

நன்றி தப்பிலி. உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள். :)

இப்படி எல்லாம் பயிர்செய்ய விருப்பம் இங்கிருந்துகொண்டு எப்படி .........? :)

இப்பிடி ஆசைகள் நிறைவேறாமலே மண்டையைப் போட்டு விடுவோமோ என்ற பயம் எனக்கும் உண்டு. :D

Link to comment
Share on other sites

இந்த நாத்து (கன்றுகள்)எங்கு வாங்க முடியும்

நான் பார்த்திருக்கின்றேன் ஹோம் பேசில் முந்திரிச்செடி விலை அதிகமாக இருந்தது வாங்கவில்லை ..

[size=4]Homebase இல் உள்ளது 100 தொடக்கம் 150 பவுண்ட்கள் போகும் (பல வருடத் தாவரம்). அந்த விலைக்கு வாங்கி நட்டாலும் நிறைய இரசாயனங்கள் பாவித்திருப்பார்கள். அதைவிட அவர்கள் சில குறிப்பிட்ட வகை திராட்சைகளையே விற்கிறார்கள். பயிர் வியாபார நிலையங்களில் மலிவு (10 - 20 பவுண்ட்கள்) விலையில் வாங்கலாம். 2 ,3 வருடத்துக் கன்றுகளை விற்கிறார்கள். சிலர் இப்பொழுது விற்கிறார்கள். அல்லது ஆவணி தொடக்கம் கார்த்திகை மாதங்களில் வாங்கலாம். [/size]

[size=4]'வைன்' செய்யும் கொடி முந்திரியைத் தவிர்த்து உ[/size][size=4]ண்ணும் கொடி முந்திரியை ( Dessert grapes ) பார்த்தோம் என்றால் அதிலும் இருவகையுண்டு. [/size]

[size=4]1. கண்ணாடிக் கூண்டுக்குள் (Green house) வளர்பவை. [/size]

[size=4]இவையே அதிகம் Supermarket இல் விற்பனை செய்யப்படுகிறது. [/size]

[size=4] [/size]

[size=4]2. வெளியில் வளர்பவை. [/size]

[size=4]அதிலும் விதையுடன் கூடிய / விதை இல்லாத வகைகளும் உண்டு. [/size]

[size=4]விதையில்லாத (Seedless) கொடிமுந்திரி [/size]

[size=4]பழுப்பதற்கு நீண்ட காலம் (வெப்பம் கூடிய) தே[/size][size=4]வைப்படுவதால் கண்ணாடிக் கூண்டில் வளர்ப்பதே உகந்தது. சில வகை வெளியில் வளர்க்கலாம். அதுவும் வீட்டுச் சுவரின் மேல் (சுவரில் இருந்து வரும் வெப்பத்தைப் பெறுவதற்காக) படர விட்டால் நல்ல பயன் கிடைக்கும். [/size]

[size=4]அந்த வகைகள்.[/size]

[size=4]Lakemont seedless [/size]

[size=4]http://www.grovesnur...ert-10102.aspx[/size]

[size=4]Reliance seedless[/size]

[size=4]http://www.silktree....rapevines.html[/size]

[size=4]http://www.readsnurs...e-Reliance.html[/size]

[size=4]விதையுள்ள கொடிமுந்திரி வகை [/size]

[size=4]இவை வெளித் தோட்டத்தில் வளர்க்கக் கூடியவை. பல வகைகள் இருந்தாலும் இங்கு குறிப்பிடும் வகைகள் மிக இலகுவாக வளரக் கூடியன. [/size]

[size=4]Boskoop Glory [/size]

[size=4]http://www.silktree....rapevines.html[/size]

[size=4]http://www.pomonafru...-grown?cPath=61[/size]

[size=4]Regent [/size]

[size=4]http://www.pomonafru...grown?cPath=61[/size]

[size=4]http://www.crosscomm...regent--/c-990/[/size]

[size=4]Muscat Bleu [/size]

[size=4]http://www.kenmuir.c...&product_id=310[/size]

[size=4]http://www.pomonafru...-grown?cPath=18 [/size]

[size=4]நீங்கள் லண்டனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்பவர் என எடுத்துக் கொண்டே, அதற்கேற்ப குறிப்பிட்டுள்ள திராட்சைகள் வகைகளைக் கூறியுள்ளேன். வேறு இடமென்றால் அதற்கேற்ப முந்திரி வகைகளைத் தருகிறேன். [/size]

[size=4]இட வசதிக்கேற்ப கொடியாகப் படர விடலாம் அல்லது மரம் மாதிரி (Homebase உள்ளது) வளர்க்கலாம். பராமரிப்பென்று பெரிதாக ஒன்றுமில்லை. முக்கியமானது உரிய நேரத்திற்குக் கத்தரிப்பது. இதனை குளிர் காலங்களில் (கிறிஸ்மஸ் இற்குப் பிறகு) செய்ய வேண்டும். ஆரம்ப காலங்களில் இதனை ஒழுங்காகச் செய்ய வேண்டியது அவசியம். கொடிமுந்திரி வளர்க்கப் போகின்றீர்கள் என்றால் அதனைப் பற்றி அறியத் தருகிறேன். [/size]

[size=4] [/size]

[size=4]இங்கு ஒழுங்கான காலநிலை இங்கு இல்லாததால் விதையுடன் கூடிய கொடிமுந்திரி வளர்ப்பது நல்லது. [/size]

Link to comment
Share on other sites

.

இனி..

எனக்கு நன்கு பரீட்சையமான இரண்டு தரவைகள்..

முதலாவது கல்லுண்டாய் வெளி.

மற்றது காரைநகரின் வடபகுதியில் உள்ள தரவை. ( சிவப்பு வட்டம் ஈழத்துச் சிதம்பரம்)

இரண்டிலும் மொத்தம் 1000 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பு இருக்கிறது.

kalundai.jpg

karainorth2.jpg

* * தகவலுக்கு நன்றி தப்பிலி. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.