Jump to content

இஸ்ரேலின் விவசாய நீர்ப்பாசன முறைகள்


Recommended Posts

படம் துளசியும் பார்த்து ரசிப்பதற்கு. :)

:) :) :)

என்னையும் நினைவுகூர்ந்தமைக்கு நன்றி அண்ணா. படம் மட்டுமல்ல, கருத்துகளையும் வாசிக்கிறேன். :)

Link to comment
Share on other sites

.

இனி...

மெல்லிய மண் படைக்கு சில தீர்வுகள்..

1. கீழே படத்தில் உள்ளது போல் அகன்ற கலப்பை மூலம் உழுதது போன்ற கால்வாய்களும் மேடுகளும். இங்கு அடிப்படையில்... கால்வாயின் மண் அள்ளப்பட்டு மேட்டில் குவிக்கப்படுகின்றது. படத்தில் கால்வாயும் மேடும் ஒரே அகலத்தில் உள்ளது. கால்வாயின் அகலம் மேட்டைவிட இரண்டு, மூன்று மடங்காகும் போது மேட்டின் உயரமும் அதற்கேற்ப அதிகரிக்கும். அதாவது பயிரிடப்போகும் இடத்தின் மண்படை தடிக்கும்.

நீளமாக இருக்கும் மேட்டின் இடையிடையே சமதூர இடைவெளியில் குறுக்காக மண்ணை அள்ளி மீண்டும் மேட்டில் போடுவதன் மூலம் மண்படையின் தடிப்பு மேலும் அதிகரிக்கப்படலாம்.இப்போது தொடர்ச்சியான நீள் சதுரங்களாக மேடு காட்சியளிக்கும்.

ready+for+planting.jpg

one-pass-plow-03.jpg

2. உயர்த்தப்பட்ட மண் படுக்கைகள்

ஏறகுறைய முதலாவது முறை போன்றது. ஆனால் பலகைகளால் பலப்படுத்தப்படுகின்றது. மண் அயலில் இருந்து அள்ளப்படுகின்ரது; அல்லது வேறு இடங்களில் இருந்து பெறப்படுகின்றது. இந்த மண்படுக்கையை உயர்த்த மண்ணைவிட‌ பெருமளவில் உக்கல், எரு, வைக்கோல் போன்ற சேதனப் பொருட்கள் பயன்படும்.

bed8.jpg

railway_sleepers_47.jpg

new-sleeper-photos-003large.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஈசன்! நீங்களும் என்னைப்போல் விவசாயகுடும்பத்தில் இருந்து வந்தவரா? நல்ல தகவல்களை இணைக்கின்றீர்கள் நன்றிகள்....தொடரட்டும் உங்கள் பணி..... :wub:

Link to comment
Share on other sites

ஈசன்,

இந்த முறையிலேயே (உயர் படுக்கை) மரக்கறித் தோட்டம் செய்கிறேன். களிமண் உள்ள இடங்களில் பயிர் செய்வதற்குச் சிறந்த முறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

இசை, நெடுக்ஸ், பூங்கையூரன் சொன்னது போல் கறுப்புப் படலத்தின் நன்மைகள்

  1. ஒளி புகாமல் தடுப்பதனால் களைகள் வளராமல் தடுக்கப்படும். இது முதன்மைக் காரணம்.
  2. படலத்தின் கீழ் மண் வெப்பநிலை அதிகரிப்பதால் தீங்கு செய்யும் குடம்பிகள், புழுக்கள், ஃப‌ங்கஸ் என்பன கொல்லப்படும்.
  3. அதிகரித்த மண் வெப்பநிலை வேர் தொழிற்பாட்டை அதிகரிக்கின்றது. இதனால் தாவரம் விரைவாக வளர்கின்றது.
  4. மூடி இருப்பதால் ஆவியாகும் நீர் மீண்டும் ஒடுங்கி தாவரத்திற்கே கிடைக்கிறது.

* * * * * * * *

மேலே இணையவனுக்காக இணைக்கப்பட்ட பிளாஸ்ரிக்கினால் ஆன படியும் பனியை பிடிக்கும் சதுரங்களை டால் யா (Tal - Ya) என்னும் இஸ்ரேலிய கம்பனி தயாரிக்கின்றது. இந்த மிக எளிமையான ஒரு தொழில் நுட்பத்தின் மூலம் பாலவனத்தில் எப்படி திராட்சை காய்த்துக் குழுங்குகின்றது என்பதைப் பாருங்கள்.

படம் துளசியும் பார்த்து ரசிப்பதற்கு. :)

அழகான படங்களிற்கு நன்றி ஜீவா. :)

P8200128.JPG

P8200116.JPG

DSC02282.JPG

DSC03625.JPG

DSC02095.JPG

தகவலுக்கு நன்றி விசுகு அண்ணா. வளி மண்டல ஈரப்பதனை நீராக்கும் உபகரணம் எம் ஊர்களில் மிகவும் வெற்றிகரமாக வேலை செய்யும். ஊர் புழுக்கம் (வியர்வை) ஞாபகம் இருக்கிறது தானே ?

* * * * * * *

இனி...

இந்த தரவைகளில் காணப்படும் பயிர்ச்செகைக்கு ஒவ்வாத காரணிகள்.

1. மெல்லிய மண் படை

--சில இடங்களில் ஒரு சாண் தடிப்புக் கூட இல்லை. சிறிது கிண்டவே பார் வந்து விடும்.

2. கோடை காலங்களில் உலர்ந்த, வரண்ட‌ மண்.

3. மாரிகாலங்களில் நீர் தேங்கி நிற்றல்.

4. கடலுக்கு அண்மையாகவோ, கடலோடு தொடர்பான ஏரிகளுக்கு அண்மையாகவோ காணப்படுவதால் இந்த தரவைகளில் நிலக்கீழ் நீர் உவர்பானதாகக் காணப்படும்.

5. களித்தன்மையான மண்.

.

இப்படி எல்லாம் பயிர்செய்ய விருப்பம் இங்கிருந்துகொண்டு எப்படி .........? :)

Link to comment
Share on other sites

இப்படி எல்லாம் பயிர்செய்ய விருப்பம் இங்கிருந்துகொண்டு எப்படி .........? :)

தமிழரசு,

இங்கு திராட்சை நன்றாக விளையும். பெரிய கவனிப்பு ஏதும் தேவையில்லை. நானும் வைத்திருக்கிறேன். 'வைன்' இற்கு பாவிப்பது / உண்பதற்குப் பாவிப்பது என இரு வகை உண்டு. அதனடிப்படையில் திராட்சைக் கன்றுவாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும்.

இதனைவிட சிறிய தோட்டம் இருந்தாலும், அதற்கேற்ற மாதிரி நிறைய பயிர்களைப் பயிரிடலாம். முக்கியமாக 'சுழற்சி முறைப் பயிர்ச் செய்கை', 'நட்புத் தாவரங்களை சேர்த்து நடுதல்' (companion planting ) முறைகளில் பயிர் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். ஊரைப் போல இங்கு பயிர்ச் செய்கை கஷ்டமானதல்ல.

உடலிற்கும் பயிற்சியாகிறது. அத்தோடு கிருமிநாசினி பாவிக்காத, ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம். முக்கியமாக மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும். தோட்டத்தில் காய்கறி பறித்துச் சமைப்பது ஒரு உற்சாகமான அனுபவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு,

இங்கு திராட்சை நன்றாக விளையும். பெரிய கவனிப்பு ஏதும் தேவையில்லை. நானும் வைத்திருக்கிறேன். 'வைன்' இற்கு பாவிப்பது / உண்பதற்குப் பாவிப்பது என இரு வகை உண்டு. அதனடிப்படையில் திராட்சைக் கன்றுவாங்கும் பொழுது பார்த்து வாங்க வேண்டும்.

இதனைவிட சிறிய தோட்டம் இருந்தாலும், அதற்கேற்ற மாதிரி நிறைய பயிர்களைப் பயிரிடலாம். முக்கியமாக 'சுழற்சி முறைப் பயிர்ச் செய்கை', 'நட்புத் தாவரங்களை சேர்த்து நடுதல்' (companion planting ) முறைகளில் பயிர் செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும். ஊரைப் போல இங்கு பயிர்ச் செய்கை கஷ்டமானதல்ல.

உடலிற்கும் பயிற்சியாகிறது. அத்தோடு கிருமிநாசினி பாவிக்காத, ஆரோக்கியமான உணவுகளை உண்ணலாம். முக்கியமாக மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும். தோட்டத்தில் காய்கறி பறித்துச் சமைப்பது ஒரு உற்சாகமான அனுபவம்.

தகவலுக்கு நன்றி சகோதரா !

இந்த நாத்து (கன்றுகள்)எங்கு வாங்க முடியும்

நான் பார்த்திருக்கின்றேன் ஹோம் பேசில் முந்திரிச்செடி விலை அதிகமாக இருந்தது வாங்கவில்லை ..

Link to comment
Share on other sites

.

நன்றி தப்பிலி. உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள். :)

இப்படி எல்லாம் பயிர்செய்ய விருப்பம் இங்கிருந்துகொண்டு எப்படி .........? :)

இப்பிடி ஆசைகள் நிறைவேறாமலே மண்டையைப் போட்டு விடுவோமோ என்ற பயம் எனக்கும் உண்டு. :D

Link to comment
Share on other sites

இந்த நாத்து (கன்றுகள்)எங்கு வாங்க முடியும்

நான் பார்த்திருக்கின்றேன் ஹோம் பேசில் முந்திரிச்செடி விலை அதிகமாக இருந்தது வாங்கவில்லை ..

[size=4]Homebase இல் உள்ளது 100 தொடக்கம் 150 பவுண்ட்கள் போகும் (பல வருடத் தாவரம்). அந்த விலைக்கு வாங்கி நட்டாலும் நிறைய இரசாயனங்கள் பாவித்திருப்பார்கள். அதைவிட அவர்கள் சில குறிப்பிட்ட வகை திராட்சைகளையே விற்கிறார்கள். பயிர் வியாபார நிலையங்களில் மலிவு (10 - 20 பவுண்ட்கள்) விலையில் வாங்கலாம். 2 ,3 வருடத்துக் கன்றுகளை விற்கிறார்கள். சிலர் இப்பொழுது விற்கிறார்கள். அல்லது ஆவணி தொடக்கம் கார்த்திகை மாதங்களில் வாங்கலாம். [/size]

[size=4]'வைன்' செய்யும் கொடி முந்திரியைத் தவிர்த்து உ[/size][size=4]ண்ணும் கொடி முந்திரியை ( Dessert grapes ) பார்த்தோம் என்றால் அதிலும் இருவகையுண்டு. [/size]

[size=4]1. கண்ணாடிக் கூண்டுக்குள் (Green house) வளர்பவை. [/size]

[size=4]இவையே அதிகம் Supermarket இல் விற்பனை செய்யப்படுகிறது. [/size]

[size=4] [/size]

[size=4]2. வெளியில் வளர்பவை. [/size]

[size=4]அதிலும் விதையுடன் கூடிய / விதை இல்லாத வகைகளும் உண்டு. [/size]

[size=4]விதையில்லாத (Seedless) கொடிமுந்திரி [/size]

[size=4]பழுப்பதற்கு நீண்ட காலம் (வெப்பம் கூடிய) தே[/size][size=4]வைப்படுவதால் கண்ணாடிக் கூண்டில் வளர்ப்பதே உகந்தது. சில வகை வெளியில் வளர்க்கலாம். அதுவும் வீட்டுச் சுவரின் மேல் (சுவரில் இருந்து வரும் வெப்பத்தைப் பெறுவதற்காக) படர விட்டால் நல்ல பயன் கிடைக்கும். [/size]

[size=4]அந்த வகைகள்.[/size]

[size=4]Lakemont seedless [/size]

[size=4]http://www.grovesnur...ert-10102.aspx[/size]

[size=4]Reliance seedless[/size]

[size=4]http://www.silktree....rapevines.html[/size]

[size=4]http://www.readsnurs...e-Reliance.html[/size]

[size=4]விதையுள்ள கொடிமுந்திரி வகை [/size]

[size=4]இவை வெளித் தோட்டத்தில் வளர்க்கக் கூடியவை. பல வகைகள் இருந்தாலும் இங்கு குறிப்பிடும் வகைகள் மிக இலகுவாக வளரக் கூடியன. [/size]

[size=4]Boskoop Glory [/size]

[size=4]http://www.silktree....rapevines.html[/size]

[size=4]http://www.pomonafru...-grown?cPath=61[/size]

[size=4]Regent [/size]

[size=4]http://www.pomonafru...grown?cPath=61[/size]

[size=4]http://www.crosscomm...regent--/c-990/[/size]

[size=4]Muscat Bleu [/size]

[size=4]http://www.kenmuir.c...&product_id=310[/size]

[size=4]http://www.pomonafru...-grown?cPath=18 [/size]

[size=4]நீங்கள் லண்டனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்பவர் என எடுத்துக் கொண்டே, அதற்கேற்ப குறிப்பிட்டுள்ள திராட்சைகள் வகைகளைக் கூறியுள்ளேன். வேறு இடமென்றால் அதற்கேற்ப முந்திரி வகைகளைத் தருகிறேன். [/size]

[size=4]இட வசதிக்கேற்ப கொடியாகப் படர விடலாம் அல்லது மரம் மாதிரி (Homebase உள்ளது) வளர்க்கலாம். பராமரிப்பென்று பெரிதாக ஒன்றுமில்லை. முக்கியமானது உரிய நேரத்திற்குக் கத்தரிப்பது. இதனை குளிர் காலங்களில் (கிறிஸ்மஸ் இற்குப் பிறகு) செய்ய வேண்டும். ஆரம்ப காலங்களில் இதனை ஒழுங்காகச் செய்ய வேண்டியது அவசியம். கொடிமுந்திரி வளர்க்கப் போகின்றீர்கள் என்றால் அதனைப் பற்றி அறியத் தருகிறேன். [/size]

[size=4] [/size]

[size=4]இங்கு ஒழுங்கான காலநிலை இங்கு இல்லாததால் விதையுடன் கூடிய கொடிமுந்திரி வளர்ப்பது நல்லது. [/size]

Link to comment
Share on other sites

.

இனி..

எனக்கு நன்கு பரீட்சையமான இரண்டு தரவைகள்..

முதலாவது கல்லுண்டாய் வெளி.

மற்றது காரைநகரின் வடபகுதியில் உள்ள தரவை. ( சிவப்பு வட்டம் ஈழத்துச் சிதம்பரம்)

இரண்டிலும் மொத்தம் 1000 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பு இருக்கிறது.

kalundai.jpg

karainorth2.jpg

* * தகவலுக்கு நன்றி தப்பிலி. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.