Jump to content

வாழை பழ கேக்/ பாண்: சமையல் குறிப்பு- 08


Recommended Posts

வீடுகளில் வாழை பழம் வாங்கி அதிகம் பழுத்து, சாப்பிட முடியாது போய்விட்டால் அப்படியான வாழை பழங்களை பயன்படுத்த இலகுவான வாழை பழ கேக் செய்முறை

தேவையான பொருட்கள்

1 . நன்கு பழுத்த பெரிய வாழை பழங்கள்
- 2

2 . சாதாரண கோதுமை மா
- 2 கப்
(500 ml)

3 . சீனி
- 1 கப் ( 250 ml அளவு கரண்டி)

4 . பட்டர் அல்லது மாஜரீன் அல்லது கனோலா எண்ணெய் .
-1 /3 கப் ( 80 ml)

5 . தயிர் (3 % கொழுப்பு yogurt )
-
1 /3 கப் ( 80 ml)

6 . முட்டை
- 2

7 . உப்பு
-1 /2 தே. கரண்டி

8 . பேக்கிங் பவுடர்
-1 /2 தே. கரண்டி

9 . பேக்கிங் சோடா
- 1 /2 தே. கரண்டி

10 . வனிலா
-1 /2 மே கரண்டி

11 . கறுவா தூள்
-1 /2 தே. கரண்டி (விரும்பினால் மட்டும்)

செய்முறை

1 . Oven ஐ 180 பாகை செல்சியசில் சூடாக்கவும்

2 . கேக் தட்டுக்கு மாஜரின்/ பட்டர் பூசி, 2 மேசை கரண்டி சீனியை போட்டு, சீனி முழு உட்பரப்பில் ஒரு சீரான படையை உருவாக்குமாறு செய்யவும் (சீனி மிகுதி இருந்தால் அதை கேக் இனுள் சேர்க்கலாம்)

3 . பட்டர்/ மாஜரீன் ஐ குளிருட்டியில் இருந்து எடுத்து ஒரு பெரிய பத்திரத்தில் இட்டு அறை வெப்பநிலைக்கு வர 15 நிமிடம் வைக்கவும் (கனோலா எண்ணெய் பாவித்தல் இந்த 15 நிமிட காத்திருப்பு தேவையற்றது)

4 . பட்டர்/ மாஜரீன் உள்ள பாத்திரத்தினுள் தயிர், முட்டை, சீனி என்பவற்றை போட்டு நன்கு கலக்கவும் (சாதாரண அகப்பை போதுமானது/ கலக்கும் மின்சார உபகரணம் இருந்தால் பாவிக்கலாம்)

5 . வாழை பழத்தை மசித்து கலவையினுள் கொட்டி கலக்கவும், பின், உப்பு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, வனிலா, கறுவா தூள் என்பன சேர்த்து நன்கு கலக்கவும்.

6 . இறுதியாக கோதுமை மாவை சிறிது சிறிதாக கலந்து, மா கட்டி இல்லாதவாறு கலக்கவும்.

7 கலவையை கேக் தட்டில் ஊற்றி சூடாக்கிய oven இல் வைத்து 35 - 45 நிமிடம் (பல்லு குத்தும் ஈரக்கால் குத்தி வெளியே எடுக்கும் பொது எதுக்கும் ஒட்டாது வரும் வரை) சமைத்தால் சுவையான வாழை பழ கேக் தயார்.

hpim2615.jpg

வாழை பழ- ருபார்ப் ஜாம் கப் கேக்

சிறுவர்களுக்கு கப் கேக் என்றால் பிடிக்கும்

செய்முறை

1 . மேலே சொன்ன முறையில் கேக் கலவையை தயாரிக்கவும்

2 . கப் கேக் ரெயில் கப் கேக் கடதாசிகளை இடவும்

3 . ஒரு மேசை கரண்டி கேக் கலவையை கடதாசி கப்பினுள் இடவும்

4 . 1 தேக்கரண்டி ருபார்ப் ஜாமை (செய்முறை இங்கே:
) கலவையின் நடுவில் இடவும் (கவனம் தேவை ஜாம் கடதாசியில் முட்டாது பார்த்துக் கொள்ளவும்).

5 . மேலும் ஒரு மேசை கரண்டி கேக் கலவையை இடவும்.

6 . செய்முறை படிகள் 3 , 4 , 5 மூலம் ஏனைய கடதாசி கப் களை நிரப்பவும்

7 180 பாகை யில் சூடாக்கிய oven இல் வைத்து 35 - 45 நிமிடம் (பல்லு குத்தும் ஈரக்கால் குத்தி வெளியே எடுக்கும் பொது எதுக்கும் ஒட்டாது வரும் வரை) சமைக்கவும்

hpim2610j.jpg

hpim2612.jpg
Link to comment
Share on other sites

பகிர்விற்கு நன்றி குளம்ஸ்.. முதலில் ஜாம் செய்ய வேண்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்முறைக்கு நன்றி நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து விட்டு என்ன மாதிரி இருந்தது என எழுதுகிறேன்

Link to comment
Share on other sites

குளக்காட்டான் செய்முறைக்கு நன்றி.கறுவாத்தூள் கேக்கின் ருசியை கெடுத்து விடும் என நினைக்கிறேன்.

செய்முறைக்கு நன்றி நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து விட்டு என்ன மாதிரி இருந்தது என எழுதுகிறேன்

நல்லதெனில் ஒரு பார்சல் அனுப்பி விடவும். :) :)

Link to comment
Share on other sites

எந்த உணவு என்றாலும் சீனியை முற்றாகத் தவிர்ப்பது நல்லம். பொலிதீன் எப்படி மண்ணுக்கு கூடாதோ அதே போன்றது தான் சீனி. சீனி செய்யப்படும் முறை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது என்பதால் மேற்கு நாடுகளில் சீனியின் பாதிப்பு பற்றி பரவலாக எழுதி வருகின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சீனி தேநீருக்கோ/கோப்பிக்கோ போடுவதில்லை,போட்டுக் குடிக்க விருப்பமும் இல்லை ஆனால் சொக்கிலேட்,ஜஸ்கிறீம் விருப்பம் ...இப்ப நல்லாய் குறைச்சிட்டன் :(

குளக்காட்டான் செய்முறைக்கு நன்றி.கறுவாத்தூள் கேக்கின் ருசியை கெடுத்து விடும் என நினைக்கிறேன்.

நல்லதெனில் ஒரு பார்சல் அனுப்பி விடவும். :) :)

நுணாவிலான் கேக் வேண்டுமானால் உங்களுக்கு பக்கத்தில் தானே குளக்காட்டான் இருக்கிறார் போய் சாப்பிட வேண்டியது தானே :D ...கறுவாவும்,வாழைப்பழமும் நல்ல கொம்பினேசனாய் இருக்கும்

Link to comment
Share on other sites

வாழை பழத்தில பஞ்சாமிர்தம் கேள்விப்பட்டிருக்கிறன் கேக் கேள்விப்படேல . ஆனா கொஞ்சம் விக்கினமான தீனிமிக்க .நன்றி செய்முறைக்கு குளக்காட்டான் .

Link to comment
Share on other sites

வாழைப்பழப் பணியாரங்களில் 'வாய்ப்பன்'னின் சுவையை அடிக்க ஒன்றும் இல்லை.

நயினாதீவு கோயிலுக்கு நண்பர்களுடன் 2002 இல் போயிருந்த போது, கோயிலுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு மரக்கறி சாப்பாட்டுக் கடை ஒரு சில வாங்குகள் (மேசைகள் போன்றது) கொண்டு இருந்தது. அப்ப கடவுள் நம்பிக்கை நிரம்பி, கோயில் கிட்ட போனால் கை கால்கள் எல்லாம் பதறி பரவசப்படும் முட்டாள் குணத்தில் இருந்த காலம். விடிய இருந்து ஒன்றும் சாப்பிடாமல், தீர்த்தம் தான் முதலில் குடிப்பன் என்று இருந்து கோயிலில் தீர்த்தம் குடித்த பின் இருந்த பெரும் பசியில் கடையைக் கண்டவுடன் ஓடிச் சென்று என்ன இருக்கு என்று பார்த்தன். வாய்ப்பன் சுட்டு வைத்து இருந்தனர். மூன்று நான்கு வாங்கி சாப்பிட்டன்.....அன்று அந்த பசியில் சாப்பிட்ட அந்த வாய்ப்பனின் சுவையை அடிக்க எதுவுமே இல்லை (இப்பவும் அந்தக் கடை இருக்கோ தெரியாது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பன் நல்ல பலகார‌ம. சுடுவதற்குரிய பதம் எல்லோருக்கும் சரி வராது.பதம் பிழைச்சுதோ எண்ணெய் அந்த மாதிரி குடிக்கும்

Link to comment
Share on other sites

வாய்ப்பன் நல்ல பலகார‌ம் வாய்ப்பன். சுடுவதற்குரிய பதம் எல்லோருக்கும் சரி வராது.பதம் பிழைச்சுதோ எண்ணெய் அந்த மாதிரி குடிக்கும்

வாய்ப்பனுக்கு குழைத்து வைத்திருக்கும் மாவை சாப்பிட்டு பார்த்து இருக்கின்றீர்களா? அதுவும் ஒரு தனிச் சுவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப்பனுக்கு குழைத்து வைத்திருக்கும் மாவை சாப்பிட்டு பார்த்து இருக்கின்றீர்களா? அதுவும் ஒரு தனிச் சுவை

இல்லை

Link to comment
Share on other sites

பகிர்விற்கு நன்றி குளம்ஸ்.. முதலில் ஜாம் செய்ய வேண்டும்..

செய்முறைக்கு நன்றி நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்து விட்டு என்ன மாதிரி இருந்தது என எழுதுகிறேன்

சரி .

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

குளக்காட்டான் செய்முறைக்கு நன்றி.கறுவாத்தூள் கேக்கின் ருசியை கெடுத்து விடும் என நினைக்கிறேன்.

நிறைய போடுவதில்லை தானே. எல்லாருக்கும் சுவை பிடிக்காது என்பதால் தான் விரும்பினால் மட்டும் என போட்டேன்.

நான் பொதுவாக சமைக்கும் பொது ஒவ்வொரு முறையும் சமையல் குறிப்பு / சமையலுக்கு சேர்க்கும் பொருட்களில் சிறிய மாற்றங்களை செய்து பார்ப்பேன். எந்த சுவை பிடிக்கிறதோ அதை பின்னர் பயன்படுத்துவேன்.

முன்னர் இதே கேக் ஐ செய்யும் பொது கறுவா தூள் மற்றும் சாதிக்காய் தூள் உம சேர்த்து பார்த்தேன். சாதிகாயின் சுவை பெரிதாக பிடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

எந்த உணவு என்றாலும் சீனியை முற்றாகத் தவிர்ப்பது நல்லம். பொலிதீன் எப்படி மண்ணுக்கு கூடாதோ அதே போன்றது தான் சீனி. சீனி செய்யப்படும் முறை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது என்பதால் மேற்கு நாடுகளில் சீனியின் பாதிப்பு பற்றி பரவலாக எழுதி வருகின்றனர்

உங்களின் கருத்து முக்கியமானது. ஆனால் சீனி என்பது நஞ்சு போன்ற தொனிப்பட உங்கள் கருத்து இருக்கிறது. எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான்.

ஆனால் சீனியின் அளவை கட்டுபடுத்த மேற்கு நாடுகளில் பிரச்சரப்படுத்துவதை அப்படியே எல்லாருக்கும் எல்லா இடத்திலும் பாவிக்க முடியாது.

ஒவ்வொருவரதும்/ ஒவ்வொரு இன மக்களதும் உணவு பழக்கத்திலேயே தங்கியுள்ளது.

இங்கு இப்படி பிரச்சாரம் செய்ய முக்கிய கரணங்கள், காலை உணவில் பாவிக்கும் pan cake, waffle என்பவை கொண்டிருக்கும் சீனிக்கு மேலதிகமாக சீனி பணி (maple syrup/ corn syrup) என்பவற்றை சேர்ப்பது, அத்துடன் அதிக அளவான இனிப்பு வகை, donuts இன்னும் பல இனிப்பு உணவு வகைகள், அத்துடன் சோடா பான வகைகளில் இருக்கும் அளவுக்கு அதிகமான சீனி, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

அத்துடன் ஒருவருக்கு சலரோகம்/ நீரிழிவு இருக்கிறதா, இதய வருத்தம் இருக்கிறதா, உடற்பயிற்சி செய்கிறிர்களா? வேலை எப்படி ? என்பவற்றையும் பொறுத்தது.

எனது உணவு பழக்கத்தை எடுத்து கொண்டால், நான் சோடாக்கள் குடிப்பது ஏதாவது விசேட நிகழ்வில், அல்லது ஒன்று கூடல்களில் மட்டும். காலை உணவுக்கு வீட்டில் syrup பாவிப்பதில்லை. சீனியை அதிகம் கொண்ட cereal வகை பாவிப்பதில்லை. நாளாந்தம் அருந்தும் 3 கோப்பை தேநீருக்கு சீனி சேர்ப்பதில்லை . இனிப்பு வகைகளை நாளாந்தம் தவிர்ப்பது, விசேட நிகழ்வுகளில் / விசேட தினங்களில் மட்டுமே சாப்பிடுவது உண்டு.

வீட்டில் கேக் செய்தால் கேக் ஒன்று / அல்லது இரண்டு துண்டுகளுக்கு மேல் ஒரு நாளில் சாப்பிடுவதில்லை. விழாக்களில் ஒரு துண்டுக்கு மேல் சாப்பிடுவதில்லை.

ஒரு சிலருக்கு குருதியில் குளுக்கோஸின் அளவு மிக விரைவாக குறைவது (Hypoglycemia )

காரணமாக அவர்கள் அடிக்கடி சீனி உள்ள அல்லது மாச்சத்து உள்ள உணவுகளை உண்ண வேண்டிய தேவையும் இருக்கிறது. இந்த குறைபாடு சிலருக்கு பிறப்பில் இருந்தே இருக்கலாம் அல்லது சலரோக மருத்துவத்தால் / வேறு நோய்களிற்கான மருத்துவத்தால் வரலாம். சலரோகத்தை கேள்விப்பட்ட அளவுக்கு இந்த நோயை பற்றி எல்லாரும் கேள்விபட்டிருக்க மாட்டார்கள்,

எனக்கு இந்நோய் பற்றிய அறிமுகம் எனக்கு கற்பித்த பேராசிரியர் மூலம் கிடைத்தது. அவருக்கு இந்நோய் இருந்த காரணத்தால் சில நேரங்களில் இனிப்புக்களை (Toffee) அடிக்கடி உண்பார்.

http://en.wikipedia....ki/Hypoglycemia

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.