Jump to content

இரண்டு மூக்கிலும் மூக்குத்தி


Recommended Posts

நான் சில காலத்திற்கு முன்னர் எனது நண்பி ஒருவர் இந்தியாவில் செட்டியார் (காரைகுடி)திருமணம் செய்தது பற்றி (அந்த பதிவை பார்க்க முடியவில்லை) குறிப்பிட்டு இருந்தேன், அதற்காக அவர் தனது ஆடை அணிகலண்கள், வாழ்வியல் முறைகளில் பல மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தது. அதில் ஒரு அம்சம் தான் அவர் அவரது இரண்டு மூக்குகளிலும் பெரிய மூக்குத்தி அணியுமாறு வேண்டப்பட்டார், உண்மையில் அவரது படங்களை யாழில் பிரசுரித்து கள உறுப்பினர்களின் கருத்தை அறியலாம் என இருந்தேன் ஆனால் எனது நண்பி அதை பிரசுரிக்க வேண்டாம் என்று கூறினார், ஆனால் அண்மையில் தொலைகாட்சி விளம்பரஙக்லில் அவர் திருமணம் செய்த சமூகத்தவர் சம்ப்ந்தமான ஒரு திருமண காட்சி இடம் பெறுவதாக கூறி தான் அணித்து இருப்பது போல் மூக்குத்தி அணிந்த பெண்ணின் புகைபடத்தை அனுப்பி இருந்தார். அவர் திருமணம் செய்த்து காரைக்குடியில் செட்டியார் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், அதி பிரசுரிக்கிறேன், எந்து நண்பிக்கும் இதே மாதிரியான 2 மூக்குத்திகள் தான் அணிவிக்கப்பட்டன, அவர் எவ்வள்வோ ம்றுத்தும் அவர்Hஅள்து கடுமையான உத்தரவு என்பதால் அதை அணிந்து வருகிறார்.

என்னுடைய கேள்வி என்னவென்ரால் தற்கால நவீன யுகத்தில் இப்படி பழைய வழியில் ஆடை அணிந்தால் ஒரு பெண்ணுக்கு (1981இல் பிறந்தவர்) எப்பெடி இருக்கும், வெளியில் போக அவமானமாக/வெட்கமாக இருக்காதா ???

ns2.th.png

ns1oo.th.png

Link to comment
Share on other sites

என்னுடைய கேள்வி என்னவென்ரால் தற்கால நவீன யுகத்தில் இப்படி பழைய வழியில் ஆடை அணிந்தால் ஒரு பெண்ணுக்கு (1981இல் பிறந்தவர்) எப்பெடி இருக்கும், வெளியில் போக அவமானமாக/வெட்கமாக இருக்காதா ???

ஆபிரிக்கப் பெண்கள் குறிப்பாக கொங்கோ , செனகல் , மாலி , தான்சானியா நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் பாரம்பரியங்களைத்தானே புலத்திலும் பேணுகின்றார்கள் . எங்கடையாக்கள் மாதிரி வெக்கப்படுக்கொண்டா இருக்கிறார்கள் ? உதாரணமாக தான்சானியப் பாரம்பரியம்

PCU7083.jpg

PCU7083.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவ[ர்]காதலித்துத் கல்யாணம் செய்தவர் என முந்தி ஒரு பதிவில் நீங்கள் எழுதின ஞாபகம் அவவுக்கு கணவர் குடும்பத்திற்கு போக முன்னரே அவர்களது குடும்பத்தை பற்றி தெரிந்து கொண்டு தானே போய் இருப்பார்...ஒன்று அக் குடும்பத்தோடு சேர்ந்து நடக்க வேண்டும்[அக் குடும்ப சம்பிரதாயங்களை பின் பற்ற வேண்டும்] இல்லா விட்டால் அவவுக்கு மூக்குத்தி போன்ற பல விசயங்கள் பிடிக்கா விட்டால் கணவரைக் கூட்டிக் கொண்டு தனிக் குடித்தனம் போகலாம் இர‌ண்டுக்கும் நடுவில் இருந்து அல்லாட‌க் கூடாது :D

Link to comment
Share on other sites

இப்பவெல்லாம் தொப்புளில் இரண்டு மூன்று குத்தும் காலத்தில் மூக்கில் இரண்டு குத்தினால் என்ன (ஆனாலும் belly button ஆபரணங்கள் வடிவு தான்)

Link to comment
Share on other sites

[size=4].. ஒற்றைக்கல் மூக்குத்தி ... அன்று யாழ்-அச்சுவேலி-ஆவரங்கால்-பருத்தித்துறை பஸ்ஸில் தொலைத்தது ... அதன் அழகே [/size][size=1][size=4]அழகுதான்! ... இங்கு ஒன்றுக்கு இரண்டு என்றால், வாவ்வ் ... உங்கள் நண்பிக்கு சொல்லுங்கள், "நீ கொடுத்த வைத்தவர் என்று"[/size](இல்லை, ஏறு மாறாக சொல்லி குடும்பத்தையா உடைப்பது?)[/size]

Link to comment
Share on other sites

மேற்கத்திய பெண்கள் உடலின் பல இடங்களில் ஆபரணங்களை அணிகிறார்கள். இப்போ இது ஒரு பாஷன். மூக்குத்தி பெண்களுக்கு அழகாக இருக்கும்.

அந்தப் பெண்தான் தனது விருப்பு வெறுப்புக்கேற்ப முடிவெடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

P1.jpg

மூக்கு குத்துவது..!

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காற்றை) வெளியேற்றுவதற்கு.

கைரேகை, சோதிடம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம்,பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

64623_453154102472_7245800_a.jpg

மூக்குத்தி அணிந்த பெண்களை, மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும்.

அதனால்... அவமானம் இல்லை. அழகு மேலும் கூடுகின்றது.

ஆனால்... இரண்டு பக்கமும், பெரிய மூக்குத்தி அணிவது கொஞ்சம் அதிகம்.

Link to comment
Share on other sites

என்னுடைய கேள்வி என்னவென்ரால் தற்கால நவீன யுகத்தில் இப்படி பழைய வழியில் ஆடை அணிந்தால் ஒரு பெண்ணுக்கு (1981இல் பிறந்தவர்) எப்பெடி இருக்கும், வெளியில் போக அவமானமாக/வெட்கமாக இருக்காதா ???

பச்சை குத்துதல், மூக்கு குத்துதல் என்பன எமது மூதாதயர் காலத்தில் இருந்தது. இப்போது இது தான் fashon . பல நாட்டு இளம் வயதினர் மூக்கு குத்தியுள்ளார்கள்.மூக்கில் மட்டுமல்ல உடலின் sensitive partல் கூட குத்தியுள்ளார்கள்.

மேற்படி பெண் அவரின் கணவரின் வீட்டுக்காரரின் விருப்பப்படி மூக்குத்தி போட்டுக்கொள்ளலாம்.ஆனால் எந்த அளவில் போடவேண்டும் என்று கட்டாயப்படுத்தாத வரை சிறிய மூக்குத்திகளை அணியலாம்.அழகாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லையென்றால்

இரண்டு அல்ல ஒன்று குத்துவதே தப்புத்தான்.

அது அவளுக்கு சுமைதான்.

இதை விளங்கப்படுடுத்தி தனது நியாயத்தை கூறமுடியாதது அவரது பலவீனத்தையே காட்டுகிறது.

அப்புறம் எப்படி அவர் இந்தக்காலப்பெண் என்ற நிலையை எடுக்கிறார் என்பதும் கேள்விக்குரியது...........

பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக தாங்கள்தான் போராடணும்

மற்றவர் கொண்டு வந்து தருவார் என்றால்..........???

அது விடுதலை அல்ல.

இன்னொருவரது உழைப்பு.

அவரது நியாயங்களும் அதிலிருக்கும்.

Link to comment
Share on other sites

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நீங்கள் கூறிய மொத்தமான தாலிக்கொடி அணிந்ததும் இந்தப்பெண்தானோ? சாதி, இனம், மதம், சம்பிரதாயம் ஆதி, அந்தம் எல்லாம் அறிந்து அறிந்துதானே திருமணம் செய்கின்றார்கள். புது யுகம், பழைய யுகம், வெட்கம், துக்கம் எல்லாம் திருமணம் செய்யமுன்னர் யோசித்திருக்கவேண்டும். இப்போது காலம் தாழ்த்தி கதவு இடுப்பில் இடிக்கின்றது, கூரை தலையில் முட்டுகின்றது என்று பொல்லாப்பு சொன்னால் என்னமாதிரி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்கள் பெண்கள் இரண்டு பக்கமும் மூக்குத்தி குத்தியிருப்பதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இருவாரங்களுக்கு முன்பே நான் இரண்டு காதுகளிலும் கடுக்கண் போட்டிருக்கிறேன். எனது தந்தையின் நினைவாக.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.