Jump to content

ஒரு சந்தோசமான செய்தி - உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]எனது இரண்டாவது மகனும் தனது உயர்தர விஞ்ஞான பரீட்சையில் சித்தி எய்தி பல்கலைக்கழகம் செல்கிறார்.[/size]

[size=5]வீட்டில் இரண்டாவது பொறியியலாளர் உருவாகிறார்.[/size]

[size=5]எனது அடுத்த கனவும் நிறைவேறுகிறது. :icon_idea: [/size]

Link to comment
Share on other sites

  • Replies 201
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பிள்ளைக்கு. :)

மென்மேலும் பல சாதனைகள் செய்து கல்வியில் உச்சாணிக்கு வர என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழன் என்றால் உலகில் எங்கும் எந்தத்துறையிலும்

முதன்மையான இடத்தில் இருப்பான் என்பதற்கு இன்னுமொரு

உதாரணம்.

அப்படி முதன்மையான இடத்திற்கு பிள்ளைகளை அழைத்துச்

செல்வது பெற்றோரின் முதற்கடமை.

அந்தவகையில் அவரின் பெற்றோருக்கும் அவருடைய

இளைய மகனுக்கும் எமது வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அண்ணா.

பல்கலைகழகத்திலும் சாதனைகள் படைக்கட்டும்

வீட்டுக்கு மட்டுமில்லாது எமது தாய் நாட்டுக்கும் அவரது உயர் படிப்பு கைகொடுக்கட்டும்.

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]விசுகு அவர்களின் மகனுக்கும் குடும்பத்திற்கும் பாராட்டுக்கள்![/size][/size]

[size=4]கல்வி என்ற சொத்தில் முதலீடுகள் செய்யும் எமது வரலாற்று பண்பியல் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தொடரவேண்டும். [/size][size=1]

[size=4]அதற்கு அரும்பாடு படும் பெற்றோர்களுக்கு நன்றிகள். அடுத்த தலைமுறை முன்னேற வேண்டும். [/size][/size]

[size=1]

[size=4]உங்கள் குடும்பம் அதற்கு முன்னுதாரணமாக இருக்கட்டும். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சந்தோசமான செய்தி!

முன்பு வேறு ஒரு திரியில் உங்கள் பிள்ளைகள் இப்படி செய்வார்களா அப்படி செய்வார்களா? என்று உங்களை ஒருவர் சீண்டியிருந்தார். அதற்கு நீங்களும் ஆம் அவர்கள் அப்படி செய்வார்கள் என்று எழுதியிருந்தீர்கள். அது கொஞ்சம் கவலையாக எனக்கு இருந்தது. காரணம் உங்களுடைய அபிலாசைகளை அவர்களுக்குள் திணிக்க போய் இறுதியில் அவர்களுடைய ஆசையையும் நிறைவேறாது போய்விடலாம் என்ற சின்ன ஏக்கம் இருந்தது.

மேலை நாட்டை பொறுத்தவரை (உலகில் எங்கு என்றாலும்) கல்விதான் மிக முக்கியமானதொன்று. அதை பல்லை கடித்துக்கொண்டு முடித்துவிட்டால் பின்பு வாழ்க்கை மிக சுலபமாகிவிடும். அதை தவற விடேல் எதையும் சாதிக்க முடியாது போய்விடும்.

இதில் உங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஒன்று இரண்டு பொறியிலாலர்களை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து உருவாக்கியது. மற்றது உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய நிட்சியதன்மை.

அவர்களுக்குள் உங்களுடைய இரத்தம் இருக்கிறது உங்களுக்குள் என்ன துடிப்பு இருக்கிறது அதை அவர்கள் உணர்வார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் உங்களுடைய ஆசைகளுக்காக அவர்கள் உழைப்பார்கள். "சுவர் இருந்தால்தான் சித்திரம் கீறலாம்" நாங்கள் முக்கி முக்கி செய்யும் சிறு சிறு உதவிகளை அவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றே முடிப்பார்கள். அதற்குரிய வசதி அவர்களிடம் இருக்கும்.

Link to comment
Share on other sites

உங்கள் பிள்ளைக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து விடுங்கள் அண்ணா. :) அவர்களை முன்னேற்றிய உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் பாராட்டுகள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு வழிகாட்டிகளாக இருக்கும் உங்களுக்கும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்..! :icon_idea:

Link to comment
Share on other sites

[size=5] கனவை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நல் வாழ்த்துக்களும் அந்தப் பிள்ளையை சென்றடையட்டும்..எனக்கும் மிகவும் பிடித்தமான விடையம் புலம் பெயர்ந்த மண்ணில் பிள்ளைகள் தங்களால் முடிந்த மட்டுக்கு கல்வி ரீதியாக முன்னேற்றிக் கொள்வது..நான் யாருடைய பிள்ளையைக் காணும்போதும் முதலில் கேட்பது என்ன படிக்கிறீங்கள்,எப்படிப் போகிறது என்பதே..அதிகமாக எனது ஊக்குவிப்புக்கள் கூட கல்விகற்றுக் கொண்டு இருக்கும் பிள்ளைகளுக்கு தான்..

Link to comment
Share on other sites

உங்கள் கனவை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள் விசு அண்ணா .

[size=5]கனவை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்.[/size]

எல்லாரும் கல்யாண நினைப்போட தான் இருக்கிறீங்கள். :lol: :lol: விசுகு அண்ணா தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது சொல்லுவார். அவசரப்பட வேண்டாம். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். பெற்றோருக்கு என் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே

எல்லோரது வாழ்த்துக்களையும் வாசித்தேன்

கனக்க எழுதணும்.

பின்னர் எழுதுகின்றேன்.

நன்றி தங்களது வாழ்த்துக்கும் கரிசனைக்கும் நேரத்திற்கும்.

ஒன்று மட்டும் சொல்லமுடியும்

தாயகம் சார்ந்து அது அப்பனை அம்மாவை வெல்லும். :icon_idea:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அண்ணா!

எமது இரண்டாம் தலைமுறைகள் இந்த நாட்டில் கொடி கட்டிப் பறக்க வேண்டும்.

அதற்காக பல தியாகங்களுடன் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் விசுகு அண்ணா உள்ளிட்டஅனைத்துப் பெற்றோருக்கும் பாராட்டுக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு, உங்களது மகிழ்ச்சியில்... நானும் பங்கு கொள்கின்றேன் :) .

எனது வாழ்த்துக்களையும்... உங்கள் மகனுக்கு தெரிவித்து விடுங்கள்.

எனது மகனும்... இந்த முறை Abitur எடுத்து எல்லாப் பாடங்களிலும் முதலாவது புள்ளி எடுத்து, பாடசாலையிலேயே... முதலாவது மாணவனாக தேறியுள்ளார். அவருக்கு, மருத்துவத் துறையில் தான் படிக்க ஆர்வமாக... உள்ளது. அதனால்.. மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும், சில பொறியியல் பலகலைக்கழகத்திற்கும் விண்ணப்பித்து விட்டு... பதிலை எதிர்பார்த்துக் கொண்டுள்ளார், இங்கு... ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தான்... பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

உங்கள் மகனுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். அவரின் எதிர்காலம் நல்லதாக அமையட்டும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]மனம் நிறைந்த வாழ்த்துக்கள் [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கனவை நனவாக்கிய உங்கள் பிள்ளைகளுக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள் !

அவருக்கு வழிகாட்டிகளாக இருக்கும் உங்களுக்கும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா உங்கள் மகனிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்[அவர் தமிழ் வாசிப்பாரா?]...அதே போல தமிழ்சிறியின் மகனுக்கும் எதிர் பார்த்த வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

எனது மகனும்... இந்த முறை Abitur எடுத்து எல்லாப் பாடங்களிலும் முதலாவது புள்ளி எடுத்து, பாடசாலையிலேயே... முதலாவது மாணவனாக தேறியுள்ளார். அவருக்கு, மருத்துவத் துறையில் தான் படிக்க ஆர்வமாக... உள்ளது. அதனால்.. மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும், சில பொறியியல் பலகலைக்கழகத்திற்கும் விண்ணப்பித்து விட்டு... பதிலை எதிர்பார்த்துக் கொண்டுள்ளார், இங்கு... ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தான்... பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கும்.

பாடசாலையிலேயே முதலாவது மாணவனாக வருவது பெரிய விடயம். உங்கள் மகனின் எண்ணம் நிறைவேறட்டும்.

சிறி, அவரிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

Link to comment
Share on other sites

ம்... வெளிப்படையாகச்சொன்னால் கேட்பதற்கு எரிச்சலாக உள்ளது. தாயகப்போராட்டத்தை காட்டி அசைலம் அடித்த, கோப்பை கழுவுகின்ற அசைலிகளின் பிள்ளைகள் படித்து முன்னுக்குவருவதை அறிய சற்றுச்சங்கடமாகவே உள்ளது.

வாழ்த்துக்கள் விசுகு, உங்களது மகிழ்ச்சியில்... நானும் பங்கு கொள்கின்றேன் :) .

எனது வாழ்த்துக்களையும்... உங்கள் மகனுக்கு தெரிவித்து விடுங்கள்.

எனது மகனும்... இந்த முறை Abitur எடுத்து எல்லாப் பாடங்களிலும் முதலாவது புள்ளி எடுத்து, பாடசாலையிலேயே... முதலாவது மாணவனாக தேறியுள்ளார். அவருக்கு, மருத்துவத் துறையில் தான் படிக்க ஆர்வமாக... உள்ளது. அதனால்.. மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும், சில பொறியியல் பலகலைக்கழகத்திற்கும் விண்ணப்பித்து விட்டு... பதிலை எதிர்பார்த்துக் கொண்டுள்ளார், இங்கு... ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தான்... பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கும்.

உங்களுக்கு இந்த வயதில் ஒரு புதல்வர் உள்ளாரா? நம்பமுடியவில்லை.

கனடாவில் என்றால் மருத்துவராக வருவது என்பது மிகுந்த சவாலான விடயம், பெரிய சாதனை என்றும் கூறலாம். யூகே போல் அல்ல கனடா. ஆனால், பொறியியலாளராக வருவது ஒப்பீட்டளவில் இலகுவானது.

Link to comment
Share on other sites

எனது மகனும்... இந்த முறை Abitur எடுத்து எல்லாப் பாடங்களிலும் முதலாவது புள்ளி எடுத்து, பாடசாலையிலேயே... முதலாவது மாணவனாக தேறியுள்ளார். அவருக்கு, மருத்துவத் துறையில் தான் படிக்க ஆர்வமாக... உள்ளது. அதனால்.. மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும், சில பொறியியல் பலகலைக்கழகத்திற்கும் விண்ணப்பித்து விட்டு... பதிலை எதிர்பார்த்துக் கொண்டுள்ளார், இங்கு... ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தான்... பல்கலைக்கழகத்திலிருந்து பதில் கிடைக்கும்.

அடடா....

தமிழ்சிறி அண்ணா, உங்கள் மகனுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து விடுங்கள். அதற்கான பெருமை பெற்றோர்களாகிய உங்களை சாரும். அவர்களை ஊக்கப்படுத்தி வளர்த்த உங்களுக்கு என் வாழ்த்துகள். :)

(உங்கள் மகன் யாழில் உறுப்பினரானால் உங்களை போல் பொண்ணுங்களை பற்றிய திரியில் தான் நிற்பாரோ? :lol::icon_idea: - ஜோக்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.