Jump to content

சோத்து சுந்தரி....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]சோத்து சுந்தரி....[/size]

நானாக யோசிக்கவில்லை...

அம்மாவும் அப்பாவும் ஊட்டி ஊட்டி வளர்த்து எனக்கு இலண்டனுக்கு வருமுன்னரே உடம்பு கொஞ்சம் ஊதித்தான் இருந்திச்சு. இதில அடிக்கடி நொட்டைத்தீன் சாப்பிட்டு வயிறும் வைச்சிருந்தால் சொல்லவே வேணும்! இப்ப கொஞ்ச நாளா காலில நகம் வெட்டலாம் எண்டு குனிஞ்சு நகம்வெட்டியால் வெட்ட வெளிக்கிட்டால் நெஞ்சுக்கும் முழங்காலுக்கும் இடையில ஏதோ பெரிசாக ஒண்டு (பிழையாக யோசிக்காதேயுங்கோ) நிக்குது எண்டு பாத்தால், அது எந்த வஞ்சனையுமில்லாமல் வளந்து முட்டுக்காய் இளநீ மாதிரிக் கிடக்கும் வயிறுதான்.

இவர் இப்ப பிள்ளைபெற வேண்டாம் எண்டு கவனமாக இருந்தும் ஏதாவது பிசகிச் சிலவேளை வயித்தில பூச்சி, புழு ஏதாச்சும் வந்திட்டுதோ எண்ட பயத்தில சோதிச்சுப் பார்த்தால் கடவுளேயெண்டு அப்படி ஒண்டுமில்லை. பிள்ளத்தாச்சியாக இல்லாமல் பெரிய வயித்தோட நிண்டால் தெரிஞ்சவை ஒண்டில் விடுப்புக் கேட்பாளவை இல்லாட்டி பின்னால நிண்டு நெளிப்பாளவை. அதோட இதை இப்படியே விட்டால் என்ரை செருப்பு, சப்பாத்தை நானாகவே போடமுடியாமல் போயிடும் எண்டு பயம் வேற வந்திட்டுது. இப்ப அக்கா எண்டு கூப்பிடுறவையும் நாளைக்கு குண்டக்கா, குண்டம்மா எண்டு சொல்லவெளிக்கிட்டால் ஒண்டும் சொல்லேலாமல் வெருளிச் சிரிப்புடன் பேசாமல் போகவேண்டிவந்துவிடுமே எண்ட கவலையும் தொத்திக்கொண்டது. அதைப்போல வேற மானக்கேடு ஏதும் இருக்கே இந்த உலகத்தில.

உடம்பு பெருத்த கவலையை மறக்க இவர் தமிழ்க்கடையில எனக்கெண்டு ஆசையா வாங்கிக் கொண்டு பிரிட்ஜில் வைச்சிருந்த அல்வாவில் ஒரு துண்டை வெட்டி வாயில் கடித்துக்கொண்டே வீட்டில வாடகைக்குக் குடியிருந்து யூனிவேசியிட்டியில படிக்கும் இவற்றை சொந்தக்காரப் பொடியனட்டை கதைச்சுப் பாப்பம் எண்டு அவனின்ரை அறைப்பக்கம் போனன். பொடியன் பாக்கிறதுக்கு வத்தலும் தொத்தலுமாக காஞ்ச பயித்தங்காய மாதிரி இருப்பான். எப்ப பாத்தாலும் படிப்பு எண்டு காலில சில்லுக் கட்டின மாதிரி ஓடிக்கொண்டிருப்பான், இல்லாட்டி கொம்பியூட்டரை வைத்து "டொக்..டொக்..டொக் எண்டு நடுச்சாமத்தில கூட தட்டிக் கொண்டிருப்பான். சில நேரம் நித்திரை குழம்பிச் சினம் வந்தாலும், பொடியனுக்கு யூனிவேசியிட்டியல கனக்கப் படிக்கக் குடுக்கிறாங்களாக்கும் எண்டு பொறுத்திடுவன். என்னை எப்ப கண்டாலும் ஒண்டில தலையை அண்ணாந்து சீலிங்கைப் பாத்துக் கதைப்பான், இல்லாட்டி தலையைக் கொஞ்சம் குனிஞ்சு கீழ்க்கண்ணால்தான் பாத்துத்தான் கதைப்பான். என்ரை தடிச்ச தோற்றத்தை பாக்கிறதுக்கு விருப்பமில்லையாக்கும் எண்டு மனதில கவலை வந்தாலும், படிக்கிற பொடியன் பெம்பிளையளையோடு பவ்வியமாகப் பழகிறானாக்கும் எண்டு மனதைச் சமாதானப்படுத்திவிடுவன்.

தட்டின கதவைத் திறந்தவனைப் பார்த்தால் ஏதோ முக்கியமான சோதினைக்கு படிச்சுக்கொண்டிருந்தவன் மாதிரி இருந்தது. எண்டாலும் பணிவோடை தலையைக் சாதுவாகக் குனிஞ்சு என்ரை கவலையான முகத்தைப் கீழ்க்கண்ணால பார்த்துக்கொண்டு

"அக்கா, எதுவும் பிரச்சினையே? உதவி எதுவும் வேண்டுமெண்டால் யோசிக்காமல் சொல்லுங்கோ" எண்டான்.

உடம்பு வைச்ச கவலையை இளம் பொடியனிட்ட சொல்ல கொஞ்சம் கூச்சமும் தயக்கமும் வந்ததால் எங்கை, எப்படித் தொடங்கலாம் எண்டு யோசிக்க ஒரு சொல்லும் வாயில இருந்து வரேயில்லை. பொடியன் ஏதும் வித்தியாசமாக நினைச்சாலும் எண்ட பயம் வேறு வந்தவுடன் டக்கெண்டு உடம்பு வைச்சுக்கொண்டு போவதால் வந்த மனக்கவலையைச் சொல்லி, "கெதியாகத் தேகம் மெலிய ஏதாவது மருந்து இருக்கோ எண்டு கேட்க வந்தன்" எண்டன்.

பொடியன் வழமையான விட்டத்தை இல்லாட்டி நிலத்தைப் பாக்கிற பார்வையை விட்டிட்டு ஒருக்கால் மேலும் கீழும் என்னைத் தன் பார்வையால் அளந்தான். கொஞ்சம் உடம்பு கூசிக் காதில் குளிர்ந்தது.. பொடியன் ஆய்வுகூடத்தில இருக்கிற பெருத்த எலியைப் பார்ப்பது மாதிரி பார்வையை மாத்தி

"உடம்பு மெலிய மருந்துகள் இருந்தால் காசு வைச்சிருக்கிற எல்லாரும் கஸ்டப்படாமல் உலக அழகுராணிகள் மாதிரியெல்லே வந்திருப்பினம். இதெல்லாம் ஈஸியான விஷயம் இல்லை. நிறையப் பொறுமையும் மனக்கட்டுப்பாடும் வேணும்" என்றான்.

"விடியக் காலமை வெறும் வயித்தில இளஞ்சூட்டுத் தண்ணியில தேனைக் கலந்து குடிச்சால் கொழுப்புக் கரைஞ்சு உடம்பு மெலியும் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன். அது சரிவராதோ?" எண்டு கேட்டன்.

பொடியன் "உதெல்லாம் வாசிக்க நல்லா இருக்கும், ஆனா உடம்பு குறையாது. மெலியவேணுமெண்டால் இரண்டு விசயத்தில கட்டுப்பாடா இருக்கோணும். ஒண்டு, சாப்பாட்டை முக்கியமா சோத்தை நல்லாக் குறைச்சுச் சாப்பிட வேணும். பிறகு நல்லதா ஒரு ஜிம்மில சேந்து ஓடுறது, நீந்திறது மாதிரியான கார்டியோ எக்ஸசைஸ் செய்யவேணும். இது இரண்டையும் ரெகுலராகச் செய்தால் உடம்பு தானாக வத்திவிடும்" என்றான்.

இது இரண்டும் ஈஸியான வழியள் மாதிரி இல்லையே எண்டு கேக்க நினைச்சாலும், அறிவுரை சொல்றாக்களை அதிகம் கேள்விகேட்டால் அவைக்கு பிடிக்காமல் போய்விடலாம் எண்டதால் நன்றி சொல்லி வந்திட்டன்.

சரி முதல்ல சாப்பாட்டைக் குறைப்பதில் தொடங்குவோம் எண்டு இவர் வேலையால வந்தவுடன

"இனி வீட்டில காலைச் சாப்பாடு, ராத்திரிச் சாப்பாடு எல்லாம் சமைக்கேலாது, மத்தியானம் மட்டும்தான் சமையல்" எண்டன்.

அவரோ "மனிசன் கஷ்டப்பட்டு வேலைக்குப் போய்வந்தால் சாப்பாடுகூடச் சமைச்சுத் தராமல் என்ன கிழிக்கப் போகின்றாய்?" எண்டு கொதிச்ச எண்ணைச் சட்டியில விழுந்த கடுகு மாதிரி வெடிக்கத் தொடங்கினார்.

"இப்பவே விடிய எழும்பி மனுசனுக்கு ஒரு தேத்தண்ணி வைச்சுத் தாறதுக்குப் பஞ்சி. சமையலும் இல்லாட்டி நல்ல சோக்கா நித்திரை கொண்டு எழும்பி இஞ்சை இருக்கிற வேலையில்லாத பெண்டுகளோட வம்பளந்து கொண்டல்லே இருப்பாய்" எண்டு இன்னமும் சொல்லிக்கொண்டு போக,

ஏன் நான் மெலியிறதுக்கு உழைக்கிற மனுசனைப் பட்டினி போடவேண்டும் எண்டு அழுகிற மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு "எனக்கு உடம்பு பலூன் கணக்கா ஊதிப் போட்டுதெண்டு மற்றவை நெளிக்கினம். அதுக்குத்தான் சாப்பாட்டைக் குறைப்பம் எண்டு நினைச்சன்.. சரி. இனிமேல் எனக்கில்லாமல் உங்களுக்கு மட்டும்தான் சமையல்" எண்டன்.

தலையைத் திருப்பி ஒரு மாதிரி புதினமாய்ப் பார்த்த இவர் " எல்லாத் தமிழ்ப் பெட்டையளையும் மாதிரி வடிவாத்தானே இருக்கிறாய். பட்டினி கிடந்து இக்கணம் அல்சர் கில்சர் வந்தாலும்" எண்டார்.

"அதெல்லாம் சரிவராது. நான் முடிவெடுத்திட்டன்.. நீங்கள் எனக்கு ஒரு ஜிம்முக்குப் போறதுக்கும் ஏற்பாடு செய்யவேணும்"

"ஜிம் வேறயோ" எண்டு தொடங்கினவர் என்ரை கவலையான முகத்தைப் பாத்ததும் குழைவான பார்வைக்கு மாறி வேற ஒரு வார்த்தையும் சொல்லாமல் 'ஓம்' என்ற மாதிரி தலையாட்டிவிட்டுப் போனார்.

சாப்பாட்டைக் குறைக்கிறதெண்டால் என்ன லேசுப்பட்ட வேலையே? எதுக்கும் படிச்ச பொடியன் வீட்டில வசதியா வீட்டில இருக்கிறதால திரும்பவும் விளக்கங்கள் கேக்கப் போனன்.

பொடியனும் தலையைக் குனியுறதும் மேல திருப்பிறதுமாய்க் கொஞ்ச நேரம் யோசித்தாப் பிறகு

"காலமையில பால்க்கஞ்சி மாதிரி இருக்கும் porridge மட்டும்தான் சாப்பாடவேணும். கனக்கச் சாப்பிடாமல் கட்டுப்பாடோட இருக்கவேணுமெண்டால் கடைகளில் சரைகளில் விற்கும் பக்கற்றை வாங்குங்கோ" எண்டு சொல்லி பொரிட்ஜ் கஞ்சியை எப்படிச் செய்யலாம் எண்டு விளக்கமும் தந்தான்.

"மத்தியானச் சாப்பாட்டை மாத்தவேணுமெண்டில்ல. ஆனா, இப்ப சாப்பிடுறதில இருந்து நாலில் ஒன்றாக் குறைக்க வேணும்" எண்டு சொல்ல மனதிற்குள் இரண்டு கோப்பைச் சோறு அரைக் கோப்பையா மாறுகிறமாதிரி படம் ஓட முகத்தில வேர்த்தது!

"இரவைக்கு சோறு, புட்டு, இடியப்பம், தோசை மாதிரி மாச்சத்து சாப்பிட்டால் அவை கொழுப்பாக மாறி அங்கங்க தேங்கிவிடும். அதனால இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு துண்டு தவிட்டுப் பாண் மட்டும் சாப்பிடவேணும். அதுகளை விரும்பிற கறியோட சாப்பிடலாம். எண்டாலும் கறியின்ற அளவில கட்டுப்பாடு இல்லாட்டி ஒரு பிரயோசனமுமில்ல" எண்டு நல்ல அறிவுரை தந்தான்.

பொடியன் சாப்பாடு விஷயத்தில் மிகவும் விவரமாக இருக்கின்றான் என்பது ஆச்சரியமாக இருந்தாலும், இந்த சாப்பாட்டுக் காசை மிச்சம் பிடித்து ஒரு நல்ல சாறி அல்லது நகை வாங்கலாம் என்ற எண்ணமும் ஓடியது. மெலிந்த உடலுடன் நல்ல சாறி, நகை போட்டு, ரீவியல நகைக்கடை விளம்பரத்தில வாறவையள் மாதிரி என்னைக் கற்பனை செய்து பார்க்க முகம் சிவந்துவிட்டது. கீழ்க்கண்ணால என்ர சிவந்த முகத்தைப் பாத்த பொடியனும் நிலைமை அந்தரமாகப் போகப்போகின்றதோ என நினைத்து "படிக்கக் கனக்கக் கிடக்கு" என்று அறைக்குள் திரும்பிவிட்டான்.

சோத்தை சாப்பிடாமல் வெறும் சப்பாத்தியை எப்படித்தான் சாப்பிடுறாங்களோ இந்த ஹிந்திக்காரர் எண்டு யோசிச்சுப் பார்த்தன். சரி வேற வழியில்ல என்பதால் இரவைக்கு சப்பாத்தியை எப்படி செய்யிறது எண்டு விளங்காத எல்லாச் சாப்பாட்டையும் செய்யிற சினேகிதி ஒருத்திக்கு போனடிச்சு விவரத்தைக் குறிச்சு வைச்சன்.

மத்தியானச் சாப்பாட்டை மாத்தவேண்டாமெண்டு பொடியன் சொன்னதால், வழமையான கறிகளைச் சமைத்து சோத்தைக் குக்கரில குறைச்சுப் போட்டன். எப்பவும் இரண்டு கோப்பை சோத்தைப் பரப்பி நாலைஞ்சு கறிகளை அள்ளிவிட்டு ஆற அமந்து சாப்பிட்டிவிட்டு இரண்டு மணிக்கு ஒரு "நாப்" எடுத்துப் பழகின எனக்கு இண்டைக்கு அரைக்கோப்பை சோத்தோட கொஞ்சமாக் கறியளையும் பாக்கேக்க விரதத்துக்கு சனிக்குப் படைச்ச மாதிரித் தெரிஞ்சுது. என்ன செய்யிறது.. மேயிற ஆட்டைச் சாப்பிட்ட அனகொண்டா பாம்பு மாதிரி இருக்கிற வயித்தைப் பாத்தால் இனிச் சனிபகவான் மாதிரி குறைச்சுத்தான் சாப்பிடவேணும் எண்டு அடக்கிக்கொண்டு இரண்டாம் தரம் போட்டுச் சாப்பிடலேல்ல. இப்பிடி இரண்டுநாள் போச்சுது. நாலு மணிக்கு வயிறு புகையிறமாதிரி இருக்கேக்கை பச்சைத்தண்ணியக் குடிச்சு புகைச்சலை அடக்கினன். பிரிட்ஜில இருந்த அல்வா என்னைப் பார்த்துச் சிரிச்ச மாதிரி இருந்திச்சு!

வேலையாக வந்த இவர், ஜிம்மில பதிந்ததாச் சொன்னார். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரை ஆக்கினைப்படுத்தி "ஸ்போர்ட்ஸ்" கடைக்குப் போய் ஜிம்முக்கு உடுப்புகள் வாங்கினேன். உடம்பு குறையும் எண்டு நம்பிக்கை வந்ததால என்ரை சைசில் இருந்து இரண்டு குறைச்சுத்தான் வாங்கினன். இல்லையெண்டால் மெலிஞ்சாப் பிறகு தொளதொளவெண்டு உடுப்பைப் போட அது இறங்கி மானம் போடுமெல்லே..

அஞ்சாறு மணிக்கு போனால் இஞ்சை இருக்கிற தமிழ்ப்பொடியள் ஆரும் கண்டாலும் எண்டபடியால் ஜிம்முக்கு நாலு மணியளவில அடுத்தநாள் போனன். போய்ப் புதுசா வாங்கின உடுப்பைக் கஸ்டப்பட்டு ஒருமாதிரிப் போட்டுமுடிக்க உடம்மை இறுக்கின இறுக்கில ஜிம்மில ஓடாமலேயே உடம்பு வத்திவிடும் மாதிரி இருந்தது. கண்ணாடியில பாத்தால் எக்ஸசைஸ் செய்யாமலேயே வீட்டுக்கு போகவேண்டி வந்திடும் என்பதால் மனதைத் தைரியப்படுத்தி எக்ஸசைஸ் ரூமுக்குள்ள போனன். போய்ப்பாத்த அடுத்த நிமிசமே தலை லேசாச் சுத்திச்சுது. திரும்பின எல்லாப் பக்கத்திலயும் ஒரே எக்ஸசைஸ் மெசினா இருக்குது. எனக்கு வீட்டில இருக்கிற எக்ஸசைஸ் சைக்கிளை விட்டால் ஒண்டையும் தெரியாது.

சரி,, முதல்ல எக்ஸசைஸ் சைக்கிளில் ஓடுவம் எண்டு அதில ஏறிப் பத்து நிமிஷம் சில்லுகளை உருட்டினன். வேகமாக ஓடினால் மூச்சிரைக்கும் என்பதால் மெதுவாகவே சைக்கிள் ஓடினேன். பக்கத்தில இருந்த “டிரெட் மில்” இல ஒருத்தன் நாய் கலைச்சா ஓடுறது மாதிரி ஓடுறதைப் பார்த்தால் தெம்பும் தைரியமும் கூடவே பயமும் வந்தது. சரி, அவனை மாதிரி ஓடாவிட்டாலும், நானும் ஏறி ஓடிப் பாத்திட்டுத்தான் வீட்டை போறது எண்டு ஏறி ஓட வெளிக்கிட்டேன். அவசரத்தில வேகத்தைச் சரியாப் பாக்காம ஓட வெளிக்கிட்டதால் கால் சிக்குப்பட்டு விழப்போறன் எண்டு பயந்துகொண்டே ஓடிக்கொண்டிருந்தன். இரண்டு நிமிஷத்தில் எனக்கே தெரியாமல் மூச்சு இரைக்கத் தொடங்க, வாயால சத்தம் வேற வரத்தொடங்கீட்டுது. அங்கால நிண்டவன் என்ரை முனகலை ரசிக்கிறமாதிரி இருக்கு. எனக்கு ஆராவது வந்து இந்த இழவு மெசினை நிப்பாட்ட உதவினால்க் காணும் எண்ட நிலை. எண்டாலும் தொடர்ந்து இன்னும் இரண்டொரு நிமிஷங்கள் ஓடிக்கொண்டிருந்தேன். கண்கள் கிறுகிறுக்க ஏதோ சிவப்பாய்த் தெரிய அதைக் கையால் அமத்திப் பிடிக்க மெசின் டப்பெண்டு நிண்டிடுத்து. நான் மயங்கி விழாத குறை. எதுவும் நடக்காத மாதிரி மூச்சை இறுக்கிப் பிடித்து, மெதுவாக நடந்து கொண்டு வந்த தண்ணியை மடக் மடக் எண்டு குடித்து முடித்தேன். கனக்கத் தண்ணி குடித்ததால் வயிற்றைப் பிரட்டிச் சத்தி வருமாப் போல இருந்திச்சு. 'இண்டைக்கு இவ்வளவு எக்ஸசைஸும் காணும்' என்று மனதிற்குள் சொல்லியவாறே வீட்டுக்கு வெளிக்கிட்டன்.

வீட்டை வந்து ஒரு குளியல் போட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்துவிட்டு இரவுச் சாப்பாட்டு அலுவலைப் பார்ப்பம் எண்டு படுத்தால் கண்ணுறங்கினதே தெரியாமல் நித்திரை வந்துவிட்டது. எழும்பிப் பார்த்தால் மணி நடுச்சாமம் 12:30 எண்டு காட்டுது. இவர் கட்டிலில நித்திரை. அட மனுசன் இரவுச் சாப்பாடும் இல்லாமல் பட்டினியாப் படுக்கிறாரே எண்டு கவலை வந்தது. கிச்சினுக்குப் போவம் எண்ட கட்டிலால இறங்கினால் காலைத் தூக்கி அங்கால இங்கால வைக்க ஏலாமக் கிடக்கு, ஆரோ இரும்பு கம்பியால காலில அடிச்ச மாதிரி சுள்சுள்ளெண்டு குத்திக் குத்தி வலிச்சுது. ஒருமாதிரி பல்லைக் கடிச்சுக் கொண்டு ஆடி அசைந்து கிச்சினுக்குள்ள போய் தண்ணியைக் குடிச்சன். திரும்பி பிரிட்ஜைத் திறந்தால் பாதி சாப்பிட்ட மட்டன் பிரியாணிப் பார்சல் உள்ளே இருந்தது. மனுசன் வேலையால வந்து என்னை எழுப்பாமல் வெளியால போய்ச் சாப்பாடு எடுத்திருக்கிறார் எண்டு தெரிஞ்சது. வேலைக் களைப்பில வந்த மனுசனைக் கவனிக்காதது என்ரை பிழைதானே எண்டு மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு படுக்கப் போகலாம் என்று திரும்பினால், வயிறு புகையிறமாதிரி இருந்திச்சு.

இண்டைக்கு ஜிம்மில ஓடின ஓட்டத்துக்கு இந்த பாதிப் பிரியாணி ஒண்டும் உடம்பைக்கூட்டாது எண்டு மூளை சொன்னதும் ஒரு செக்கனும் யோசிக்காமால் உடனேயே பிரியாணியை சூடுகூடக் காட்டாமல் சாப்பிடத் தொடங்கிவிட்டேன். சாப்பிடும்போதே, பொடியன் சொன்ன மாதிரி நாளையிலிருந்து சாப்பாட்டில கட்டுப்பாடா இருக்கவேணும். ஜிம்முக்கு போகவேணும் எண்டு சபதம் எடுத்துக்கொண்டன். சாப்பிட்டுவிட்டு மீண்டும் தண்ணியைக் குடிச்சாப் பிறகு வயித்தை தொட்டு பாத்தால் வயித்துக்குள்ள சோத்தோட ஆட்டுக்குட்டி இருக்கிற மாதிரி ஒரு பிரமை ..அப்படியே குமுறிக் குமுறி அழுகையா வந்திச்சுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிருபன் இது நீங்கள் எழுதினதோ, அல்லது ??/

நல்ல கதை, பதில் சொல்லவேண்டியவர்களும் சொன்னால் களை கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]மிகவும் நன்றாக இருக்கிறது [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித மனம் ஒரு குரங்கு, என்பதை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள், கிருபன்!

கொஞ்ச நாளாக் களம், முழுவதும் ஒரே சோத்து ஆண்டிகளாய்க் கிடக்கு! :D

Link to comment
Share on other sites

[size="6"]..[/size] சாப்பிட்டுவிட்டு மீண்டும் தண்ணியைக் குடிச்சாப் பிறகு வயித்தை தொட்டு பாத்தால் வயித்துக்குள்ள சோத்தோட ஆட்டுக்குட்டி இருக்கிற மாதிரி ஒரு பிரமை ..அப்படியே குமுறிக் குமுறி அழுகையா வந்திச்சுது.

கிட்டத்தட்ட சிந்துபைரவி படத்தில் சங்கீதம் படிக்கவெளிக்கிட்ட பைரபி பாத்திரத்தின் எபெக்ட் உங்கள் கதாநாயகியிலும் வெளிப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் பார்வையில் சொல்லப்பட்ட கதை பேசவேண்டியதை அலட்டாது சொல்லியிருக்கிறது. குறிப்பாக இந்த வசனம் சிறப்பாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

[size=4]அழகான பதிவு மூலம் நல்ல விடயத்தை கூறியுள்ளீர்கள். [/size]

[size=4]எமது ஆண்களுக்கு பிள்ளையார் வண்டி இல்லாவிட்டால் ஏதோ பணக்கஸ்டம் என எண்ணுபவர்களும் உள்ளனர். [/size]

[size=4]ஆம், உணவில் கவனமும் உடற்பயிற்சியும் முக்கியமானவை. புலம்பெயர் நாடுகளில் உடம்பு இலகுவாக வைக்கும் ஆனால், வைத்த கொழுப்பை கரைப்பது இலகுவானது அல்ல. [/size]

[size=4]தனியாக இருந்து சாப்பிடாமல் பலருடன் சேர்ந்து கதைத்து சாப்பிடால் அதிகம் உண்ணமாட்டோம். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோத்து ஆன்ரிகளைப் பற்றிய திரியில் அலசப்பட்டட/அலட்டப்பட்ட/கடிக்கப்பட்ட விடயங்களை வைத்து கதைமாதிரி ஒன்றை ஒரே மூச்சில் "டைப்" பண்ணினேன். நினைத்ததை விட நேரம் கூட எடுத்துவிட்டது!

பந்தி பந்தியா எழுதுகின்றவர்களை நினைத்தால் வியப்பு கலந்த பொறாமை வருகின்றது!!!

கிருபன் இது நீங்கள் எழுதினதோ, அல்லது ??/

நல்ல கதை, பதில் சொல்லவேண்டியவர்களும் சொன்னால் களை கட்டும்

எழுதினது நான்தான்.. ஆனால் சுயமாக யோசிக்கவில்லை. :icon_mrgreen:

மனித மனம் ஒரு குரங்கு, என்பதை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள், கிருபன்!

கொஞ்ச நாளாக் களம், முழுவதும் ஒரே சோத்து ஆண்டிகளாய்க் கிடக்கு! :D

அப்படியா! ஆண்டிகள் கூடி மடம் கட்டுவதுதானே நடக்கின்றது! :lol:

கிட்டத்தட்ட சிந்துபைரவி படத்தில் சங்கீதம் படிக்கவெளிக்கிட்ட பைரபி பாத்திரத்தின் எபெக்ட் உங்கள் கதாநாயகியிலும் வெளிப்படுகிறது. பாதிக்கப்பட்டவரின் பார்வையில் சொல்லப்பட்ட கதை பேசவேண்டியதை அலட்டாது சொல்லியிருக்கிறது. குறிப்பாக இந்த வசனம் சிறப்பாக இருக்கிறது.

நிறைய அலட்டியிருக்கலாம். கையுளைந்துவிட்டதால் விட்டுவிட்டேன்!

[size=4]அழகான பதிவு மூலம் நல்ல விடயத்தை கூறியுள்ளீர்கள். [/size]

[size=4]எமது ஆண்களுக்கு பிள்ளையார் வண்டி இல்லாவிட்டால் ஏதோ பணக்கஸ்டம் என எண்ணுபவர்களும் உள்ளனர். [/size]

[size=4]ஆம், உணவில் கவனமும் உடற்பயிற்சியும் முக்கியமானவை. புலம்பெயர் நாடுகளில் உடம்பு இலகுவாக வைக்கும் ஆனால், வைத்த கொழுப்பை கரைப்பது இலகுவானது அல்ல. [/size]

[size=4]தனியாக இருந்து சாப்பிடாமல் பலருடன் சேர்ந்து கதைத்து சாப்பிடால் அதிகம் உண்ணமாட்டோம். [/size]

பங்கிறைச்சிக் கறியும், வறுத்த ஈரலும் இல்லாமல் இப்ப பிள்ளைகளே சாப்பாடு வேண்டாம் என்ற நிலை இருக்கின்றது. அத்தோடு பெற்றோர் பிள்ளைகளின் படிப்பில் காட்டுகின்ற அக்கறையை விளையாட்டில் காட்டுவதில்லை. அடுத்த அடுத்த தலைமுறை தாயகம் போனால் தனித்துத் தெரிவார்கள்!

Link to comment
Share on other sites

கிருபன், நீங்களாக யோசிக்காட்டிலும் கதை சொல்லியாக நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

நீண்டநாளாய் எழுதிறன் எழுதிறன் எண்டு சொல்லிக்கொண்டேயிருந்தீங்கள். ஆனால் இப்படி ஒரு அசத்தல் பதிவு வரும் என்று நினைக்கவில்லை.. அடுத்த பதிவு எப்போது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

அஞ்சாறு மணிக்கு போனால் இஞ்சை இருக்கிற தமிழ்ப்பொடியள் ஆரும் கண்டாலும் எண்டபடியால் ஜிம்முக்கு நாலு மணியளவில அடுத்தநாள் போனன்.

சரி,, முதல்ல எக்ஸசைஸ் சைக்கிளில் ஓடுவம் எண்டு அதில ஏறிப் பத்து நிமிஷம் சில்லுகளை உருட்டினன். வேகமாக ஓடினால் மூச்சிரைக்கும் என்பதால் மெதுவாகவே சைக்கிள் ஓடினேன். பக்கத்தில இருந்த “டிரெட் மில்” இல ஒருத்தன் நாய் கலைச்சா ஓடுறது மாதிரி ஓடுறதைப் பார்த்தால் தெம்பும் தைரியமும் கூடவே பயமும் வந்தது. சரி, அவனை மாதிரி ஓடாவிட்டாலும், நானும் ஏறி ஓடிப் பாத்திட்டுத்தான் வீட்டை போறது எண்டு ஏறி ஓட வெளிக்கிட்டேன். அவசரத்தில வேகத்தைச் சரியாப் பாக்காம ஓட வெளிக்கிட்டதால் கால் சிக்குப்பட்டு விழப்போறன் எண்டு பயந்துகொண்டே ஓடிக்கொண்டிருந்தன். இரண்டு நிமிஷத்தில் எனக்கே தெரியாமல் மூச்சு இரைக்கத் தொடங்க, வாயால சத்தம் வேற வரத்தொடங்கீட்டுது. அங்கால நிண்டவன் என்ரை முனகலை ரசிக்கிறமாதிரி இருக்கு. எனக்கு ஆராவது வந்து இந்த இழவு மெசினை நிப்பாட்ட உதவினால்க் காணும் எண்ட நிலை. எண்டாலும் தொடர்ந்து இன்னும் இரண்டொரு நிமிஷங்கள் ஓடிக்கொண்டிருந்தேன். கண்கள் கிறுகிறுக்க ஏதோ சிவப்பாய்த் தெரிய அதைக் கையால் அமத்திப் பிடிக்க மெசின் டப்பெண்டு நிண்டிடுத்து. நான் மயங்கி விழாத குறை. எதுவும் நடக்காத மாதிரி மூச்சை இறுக்கிப் பிடித்து, மெதுவாக நடந்து கொண்டு வந்த தண்ணியை மடக் மடக் எண்டு குடித்து முடித்தேன். கனக்கத் தண்ணி குடித்ததால் வயிற்றைப் பிரட்டிச் சத்தி வருமாப் போல இருந்திச்சு. 'இண்டைக்கு இவ்வளவு எக்ஸசைஸும் காணும்' என்று மனதிற்குள் சொல்லியவாறே வீட்டுக்கு வெளிக்கிட்டன்.

வீட்டை வந்து ஒரு குளியல் போட்டுவிட்டு கொஞ்ச நேரம் படுத்துவிட்டு இரவுச் சாப்பாட்டு அலுவலைப் பார்ப்பம் எண்டு படுத்தால் கண்ணுறங்கினதே தெரியாமல் நித்திரை வந்துவிட்டது. எழும்பிப் பார்த்தால் மணி நடுச்சாமம் 12:30 எண்டு காட்டுது. இவர் கட்டிலில நித்திரை. அட மனுசன் இரவுச் சாப்பாடும் இல்லாமல் பட்டினியாப் படுக்கிறாரே எண்டு கவலை வந்தது. கிச்சினுக்குப் போவம் எண்ட கட்டிலால இறங்கினால் காலைத் தூக்கி அங்கால இங்கால வைக்க ஏலாமக் கிடக்கு, ஆரோ இரும்பு கம்பியால காலில அடிச்ச மாதிரி சுள்சுள்ளெண்டு குத்திக் குத்தி வலிச்சுது. ஒருமாதிரி பல்லைக் கடிச்சுக் கொண்டு ஆடி அசைந்து கிச்சினுக்குள்ள போய் தண்ணியைக் குடிச்சன். திரும்பி பிரிட்ஜைத் திறந்தால் பாதி சாப்பிட்ட மட்டன் பிரியாணிப் பார்சல் உள்ளே இருந்தது. மனுசன் வேலையால வந்து என்னை எழுப்பாமல் வெளியால போய்ச் சாப்பாடு எடுத்திருக்கிறார் எண்டு தெரிஞ்சது. வேலைக் களைப்பில வந்த மனுசனைக் கவனிக்காதது என்ரை பிழைதானே எண்டு மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு படுக்கப் போகலாம் என்று திரும்பினால், வயிறு புகையிறமாதிரி இருந்திச்சு.

இண்டைக்கு ஜிம்மில ஓடின ஓட்டத்துக்கு இந்த பாதிப் பிரியாணி ஒண்டும் உடம்பைக்கூட்டாது எண்டு மூளை சொன்னதும் ஒரு செக்கனும் யோசிக்காமால் உடனேயே பிரியாணியை சூடுகூடக் காட்டாமல் சாப்பிடத் தொடங்கிவிட்டேன். சாப்பிடும்போதே, பொடியன் சொன்ன மாதிரி நாளையிலிருந்து சாப்பாட்டில கட்டுப்பாடா இருக்கவேணும். ஜிம்முக்கு போகவேணும் எண்டு சபதம் எடுத்துக்கொண்டன். சாப்பிட்டுவிட்டு மீண்டும் தண்ணியைக் குடிச்சாப் பிறகு வயித்தை தொட்டு பாத்தால் வயித்துக்குள்ள சோத்தோட ஆட்டுக்குட்டி இருக்கிற மாதிரி ஒரு பிரமை ..அப்படியே குமுறிக் குமுறி அழுகையா வந்திச்சுது.

ஆகா... சூப்பர், கிருபன் :rolleyes: .

நல்ல நகைச்சுவைக் கதை.

நீங்கள் நன்றாக கதை வாசிப்பீர்கள் என்று, தெரியும்.

ஆனால், இது சொந்தக்கதை போல்... உள்ளது. :D:icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்ர பிகரை வைச்சே கதை எழுதிற துணிவு.. எல்லாருக்கும் வராது. கிருபண்ணாக்கு வந்திருக்குது. கதை அசத்தல் கிருபண்ணா..!

ஆனா.. என்ன எங்களை கடிச்ச மாதிரி தெரியுது.. இருங்க இருங்க.. நமக்கு சந்தர்ப்பம் வருமில்ல..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

எழுத்துநடை நன்றாக இருக்கிறது. எங்கட சோத்துச் சுந்தரிகளின் மனநிலையையும் செயல்களையும் அப்படியே பதிவு செய்துள்ளீர்கள்.

இதில் பல வட்டார வழக்குகளில் கலந்து எழுதுயிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்ர பிகரை வைச்சே கதை எழுதிற துணிவு.. எல்லாருக்கும் வராது. கிருபண்ணாக்கு வந்திருக்குது. கதை அசத்தல் கிருபண்ணா..!

ஆனா.. என்ன எங்களை கடிச்ச மாதிரி தெரியுது.. இருங்க இருங்க.. நமக்கு சந்தர்ப்பம் வருமில்ல..! :lol::icon_idea:

யோவ்... நெடுக்ஸ்,

மனுசியை... ஃபிகர் என்று சொல்லி, கொச்சைப்படுத்தாதீங்கப்பா.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், நீங்களாக யோசிக்காட்டிலும் கதை சொல்லியாக நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

கதை சொல்லியாக ஆவது இலகுவான விடயம் இல்லை. இது ஒரு சிலரைக் "கடி"க்கக் கிறுக்கினது!

நீண்டநாளாய் எழுதிறன் எழுதிறன் எண்டு சொல்லிக்கொண்டேயிருந்தீங்கள். ஆனால் இப்படி ஒரு அசத்தல் பதிவு வரும் என்று நினைக்கவில்லை.. அடுத்த பதிவு எப்போது??

இதெல்லாம் அசத்தல் என்று சாத்திரியார் சொல்லக்கூடாது! சும்மா கிறுக்கவே 3-4 மணித்தியாலம் போயிட்டுது. அடுத்த பதிவு நான் வேலையை விட்டாப் பிறகுதான்!

ஆகா... சூப்பர், கிருபன் :rolleyes: .

நல்ல நகைச்சுவைக் கதை.

நீங்கள் நன்றாக கதை வாசிப்பீர்கள் என்று, தெரியும்.

ஆனால், இது சொந்தக்கதை போல்... உள்ளது. :D:icon_idea::lol:

சொந்தக்கதை இல்லை. இரவல் கதைதான்.. :icon_mrgreen:

தன்ர பிகரை வைச்சே கதை எழுதிற துணிவு.. எல்லாருக்கும் வராது. கிருபண்ணாக்கு வந்திருக்குது. கதை அசத்தல் கிருபண்ணா..!

ஆனா.. என்ன எங்களை கடிச்ச மாதிரி தெரியுது.. இருங்க இருங்க.. நமக்கு சந்தர்ப்பம் வருமில்ல..! :lol::icon_idea:

நெடுக்ஸைக் கடிக்க முடியுமா என்னா! நேராப் பாத்திருந்தால் ஃபிகர் இந்தக் கதையில வந்தமாதிரி இல்லை என்று தெரிந்திருக்கும் :icon_mrgreen:

எழுத்துநடை நன்றாக இருக்கிறது. எங்கட சோத்துச் சுந்தரிகளின் மனநிலையையும் செயல்களையும் அப்படியே பதிவு செய்துள்ளீர்கள்.

இதில் பல வட்டார வழக்குகளில் கலந்து எழுதுயிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

வட்டார வழக்கில்லாமல் இரண்டு பந்தி எழுதினன். எனக்கே பிடிக்கவில்லை! பிறகுதான் வட்டார வழக்கில் எழுத முயன்றேன். சரியா வந்திருக்கின்றதா என்று தெரியவில்லை!

யோவ்... நெடுக்ஸ்,

மனுசியை... ஃபிகர் என்று சொல்லி, கொச்சைப்படுத்தாதீங்கப்பா.... :icon_mrgreen:

நெடுக்ஸ் என்னைக் கடைசியாய்ப் பார்த்தபோது நான் ஃபிகருடன்தான் நின்றிருந்தேன். ஆனால் அவர் வடிவாகப் பார்க்கவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் என்னைக் கடைசியாய்ப் பார்த்தபோது நான் ஃபிகருடன்தான் நின்றிருந்தேன். ஆனால் அவர் வடிவாகப் பார்க்கவில்லை!

அட அதுவா உங்க பிகரு.. நான் நினைச்சன்... உங்க பக்கத்து வீட்டு சோத்து ஆன்ரியாக்கும் என்று..! என்னத்தைச் சொன்னாலும்.. உங்களுக்கு அந்த பிகரு செற்றாகவே இல்ல கிருபண்ணா. எதுக்கும் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிங்க. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட அதுவா உங்க பிகரு.. நான் நினைச்சன்... உங்க பக்கத்து வீட்டு சோத்து ஆன்ரியாக்கும் என்று..! என்னத்தைச் சொன்னாலும்.. உங்களுக்கு அந்த பிகரு செற்றாகவே இல்ல கிருபண்ணா. எதுக்கும் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிங்க. :lol::D

அது செற்றாகவில்லைத்தான்.. நீங்க யோசிக்க முதலே நான் யோசித்து எல்லாத்தையும் மாத்திவிட்டேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது செற்றாகவில்லைத்தான்.. நீங்க யோசிக்க முதலே நான் யோசித்து எல்லாத்தையும் மாத்திவிட்டேன்!

பின்ன.. கிருபண்ணா.. கிளவரில்ல....(கிழவரல்ல.. கிளவர்) :lol::D

Link to comment
Share on other sites

இண்டைக்கு ஜிம்மில ஓடின ஓட்டத்துக்கு இந்த பாதிப் பிரியாணி ஒண்டும் உடம்பைக்கூட்டாது எண்டு மூளை சொன்னதும் ஒரு செக்கனும் யோசிக்காமால் உடனேயே பிரியாணியை சூடுகூடக் காட்டாமல் சாப்பிடத் தொடங்கிவிட்டேன்.

மனம் ஒரு குரங்கு........ நான் நெடுக கிருபனிடம் திண்ணையில் சண்டைபிடிப்பதுண்டு எழுதுங்கோ என்று . வளக்கமான நொண்டிச் சாட்டுகள்தான் கிருபனிடம் இருந்து வரும் . இப்பொழுது தன்னை நிரூபித்து இருக்கின்றார் கிருபன் தன்னால் விமர்சிக்கவும் முடியும் எழுதவும் முடியுமென்று . ஒன்றுடன் இல்லாது தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே எனது விருப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமா எனக்கு இந்த கதைய நெடுக்ஸ் அண்ணையோட கவிதையோட காம்பினேஷனா வாசிக்க

சிரிப்பு சிரிப்பா வருதப்பா.. பூந்து விளையாடியிருக்கிறியள், எழுத்து நடை சூப்பரண்ணா..

கலக்கிட்டிங்க பாஸ்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் கதை அந்த மாதிரி இருக்கு ....தொடர்ந்து பல பிகர் கதைகள் எழுதுங்கோ:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் ஒரு குரங்கு........ நான் நெடுக கிருபனிடம் திண்ணையில் சண்டைபிடிப்பதுண்டு எழுதுங்கோ என்று . வளக்கமான நொண்டிச் சாட்டுகள்தான் கிருபனிடம் இருந்து வரும் . இப்பொழுது தன்னை நிரூபித்து இருக்கின்றார் கிருபன் தன்னால் விமர்சிக்கவும் முடியும் எழுதவும் முடியுமென்று . ஒன்றுடன் இல்லாது தொடர்ந்து எழுதவேண்டும் என்பதே எனது விருப்பம் .

இப்போதைக்கு இது ஒன்றுதான்! யாழில் நல்ல "கரு" வந்தால் வளர்த்துப் பொரிச்சிடலாம்!

சத்தியமா எனக்கு இந்த கதைய நெடுக்ஸ் அண்ணையோட கவிதையோட காம்பினேஷனா வாசிக்க

சிரிப்பு சிரிப்பா வருதப்பா.. பூந்து விளையாடியிருக்கிறியள், எழுத்து நடை சூப்பரண்ணா..

கலக்கிட்டிங்க பாஸ்.. :D

:icon_mrgreen: எழுத்துநடை உங்கள் ஊரினது என்றுதான் நினைக்கின்றேன்!

சுபெர்ப் கிருபண்ணா

:)

கிருபன் கதை அந்த மாதிரி இருக்கு ....தொடர்ந்து பல பிகர் கதைகள் எழுதுங்கோ :D

ஃபிகருகளைக் கேட்டுத்தான் ஃபிகர் கதைகளை எழுதலாம். பார்ப்போம்!

Link to comment
Share on other sites

  • 1 year later...

உங்களுக்கு நான் like போட்டு விட்டு "சோத்து சுந்தரி" என தலைப்பு வைத்தமைக்காக அதை மீளப்பெற்று விட்டேன். :D ஆனால் உடம்பு வைப்பதும் பின்னர் டயட் பண்ணுவம் என்று வெளிக்கிட்டிட்டு அதை பின்பற்றாமல் மீளவும் உண்பது பற்றியும் அழகாக கூறியுள்ளீர்கள். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.