Jump to content

தேர்தலிலிருந்து ஒதுங்கிக் கொள்ள எத்தனை கோடி வேண்டுமென்றார்கள


Recommended Posts

பாவம்..தூயவனுக்கு..தமிழக அரசியல் கொன்ஞ்சம் அப்பிடி இப்பிடி தானே...

கருணாநிதி...இது வரை அவர் போட்டியிட்ட தொகுதிகளில் தோற்றதே இல்லை...

ம்ம் வைகோ பாவம் என்ன செய்வார் எல்லாம் அந்த 40 செய்த வேலை...

துண்ட காணம் துணிய காணம்..அம்மவோட நின்னு சங்க காணம்னு வைகோ பாடவேண்டியது தான்... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அரசியலில் அத்துப்படி என்று எமக்குத் தெரியாதா?? வானொலியில் ஒரு தடவை வைகோவிற்கு ஆதராவாக் கதைத்தனான். ஆனால் அவர் கட்சி மாறியது பிடிக்கவில்லை என்று கட்டையில் போறதுக்கு இப்போது வக்காளத்து வாங்குவது தெரியாதோ?? என்னவோ வைகோ சுண்டல் வீட்டுக்காக அரசியல் நடத்துவது போல நினைக்கின்றியள்!! இவர் ஆதரவு கதைத்ததற்காக வைகோ கருணா நிதியேர்டு நிற்கவேணுமாம். நல்ல நகைச்சுவை கண்ணா! :wink: :P

கருணாநிதி என்ன வெறும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து என்னத்துக்கு போதும்?? குடும்பச் சுமை தாங்குமா? அவர் ஆசைப் படுவது எல்லாம் கட்டையில் போற வரைக்கும் குடும்பத்தை கஸ்டப்படுத்தக் கூடாது என்பது தானே. வாழ்க குடும்ப அரசியல்!! :wink: :P :lol:

முதலில் கையெழுத்தது போடவாவது கையில் பலம் இருக்கோ என்று பாருமோய்!! :P :lol:

Link to comment
Share on other sites

தமிழக சட்டசபைத் தேர்தலில் இதுவரை எந்த அணிக்கும் அனுதாப அலையோ எதிர்ப்பு அலையோ இருப்பதாக தெரியவில்லை

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்தத் தருணத்தில் தமிழக அரசியலின் முக்கிய கூட்டணிகளான தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேறுவதை வழக்கத்திற்கு மாறாக கடுமையாக தடுத்து நிறுத்த தி.மு.க. முயற்சித்ததும், அ.தி.மு.க.வும் கூட்டணிக்காக கதவை திறந்தே வைத்ததும் இந்தத் தேர்தலில் கூட்டணியின் முக்கியத்தை தெளிவுபடுத்துகின்றதும், ஆனால், தமிழக அரசியல் கூட்டணி பலம் தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்கு எத்தனை தூரம் சான்றுகள் தரமுடியுமோ அதே அளவிற்கு கூட்டணி பலத்திற்கும் தேர்தல் வெற்றி தோல்விக்கும் தொடர்பில்லை என்றும் சான்றுகள் தரமுடியும்.

பொதுவாக தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பவைகளாக கருதப்படுவது

1. அனுதாப அலை 2. எதிர்ப்பு அலை 3. கூட்டணி பலம் 4. ஆளும் கட்சியின் மீதான அதிருப்தி. இதுவுரை அனுதாப அலை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலோட்டமாக பார்க்கும் போது எந்தக் கட்சிக்கும் எதிர்ப்பு அலை இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே, மற்றைய காரணிகள் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.

கூட்டணி பலம்

முக்கிய கூட்டணிகளாக வழக்கம் போல தி.மு.க., அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிகளே உள்ளன. விஜயகாந்தின் தே.மு.தி.க., பா.ஜ.க., பார்வர்ட்பிளாக் (கார்த்திக்) போன்றவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.விற்குப் பிறகே வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி சமபலத்தில் இருப்பதாக ஒரு தோற்றம் இருந்த போதிலும் அ.தி.மு.க. கூட்டணியை விட தி.மு.க. கூட்டணி பலமாகவே உள்ளது.

வட மாவட்டங்களில் கட்சிகளின் செல்வாக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., பா.ஜ.க. என்ற வரிசைப்படியே உள்ளது. புற சென்னை, செங்கல்பட்டு , கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில் கட்சிகளின் வாக்கு விழுக்காடு சற்றேறக்குறைய கீழ்க் கண்டவாறே முந்தைய தேர்தல்களில் இருந்துள்ளது. தி.மு.க. - 30- 35% அ.தி.மு.க. - 25- 30% பா.ம.க. - 12- 15% காங்கிரஸ் - 10- 12% விடுதலை சிறுத்தைகள் - 5% ம.தி.மு.க. - 2% இரு கம்யூனிஸ்ட்கள் - 3% `தொகுதிக்கு தொகுதி இந்த புள்ளி விபரத்தில் சிறிய அளவில் மாறுபாடு இருக்கும்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., காங்கிரஸ் இருப்பதால் வட மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை வெற்றி கொள்ள இயலும். விடுதலைச் சிறுத்தைகளின் வாக்கு அ.தி.மு.க. கூட்டணிக்கு உதவினாலும் அ.தி.மு.க.வினால் விடுதலைச் சிறுத்தைகளின் பலத்தால் தி.மு.க.வை மட்டுமே சமன் செய்ய முடியும். அதனோடு பா.ம.க.வும், காங்கிரஸ் வாக்குகளும் சேரும் போது அ.தி.மு.க. கூட்டணி வட மாவட்டங்களில் பெருத்த சரிவை சந்திக்கும் நிலை உள்ளது. ம.தி.மு.க.வினால் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எந்த பலனும் இல்லை. வட மாவட்டங்களில் சில தொகுதிகளில் ம.தி.மு.க. பெற்ற கணிசமான வாக்குகள் ம.தி.மு.க.விற்காக அல்ல, ம.தி.மு.க.வின் வேட்பாளர்களின் சொந்த செல்வாக்குக்காக. இந்த வாக்குகள் அந்த வேட்பாளர் போட்டியிலிருந்தால் மட்டுமே விழும் வாக்குகள். இதற்கு உதாரணமாக கடலூர் மாவட்டத்தின் மற்றைய தொகுதிகள் 2,000 வாக்குகள் மட்டுமே பெற்ற ம.தி.மு.க. கடலூர் சட்டமன்ற தொகுதியில் 7,000 க்கும் கூடுதலான வாக்குகள் பெற்றது ம.தி.மு.க. வேட்பாளர் சௌ.பத்மனாபனால், இவர் 1989 இல் சுயேச்சையாக போட்டியிட்டு 5,000 க்கும் கூடுதலான வாக்குகள் பெற்றார். இதேபோன்றே நெல்லிக்குப்பம் தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி ம.தி.மு.க. சார்பாக நின்றபோது கிடைத்த கணிசமான வாக்குகள் 2001 சட்டமன்ற தேர்தலில் வெகுவாக குறைந்து 2,000 வாக்குகள் மட்டுமே ம.தி.மு.க.விற்கு கிடைத்தது. 2001 தேர்தலில் 10,000 வாக்குகளுக்கு மேல் பெற்ற 36 தொகுதிகளில் 8 தொகுதிகள். மட்டுமே வடமாவட்ட தொகுதிகள் அதிலும் சென்னை புறநகர் தொகுதிகள் 3 (பூந்தமல்லி, தாம்பரம், ஆலந்தூர்). மற்றவைகளும் வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் கணிசமான வாக்குகள் வாங்கியது. (செங்கல்பட்டு- மல்லை சத்யா, செஞ்சி- மாசிலாமணி, மேல் மலையனூர்- ஏ.கே.எம். என அழைக்கப்படும் ஏ.கே.மணி, ரிஷிவந்தியம்- மருதூர் துரை).

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் முந்தைய முக்கிய தலைவர் திருவள்ளுவன் தே.மு.தி.க.விற்கு ஆதரவளிப்பது விடுதலைச் சிறுத்தைகள் வாக்கு வங்கியின் சில இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர எல்லா கட்சிகளின் வாக்கு வங்கியிலும் தே.மு.தி.க. கைவைக்கின்றது. குறிப்பாக முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள மத்தியிலும் கிராமங்களிலும் தே.மு.தி.க. விற்கு ஆதரவு இருப்பது போல தெரிகின்றது, இந்த தேர்தலின் முடிவில் தான் தே.மு.தி.க.வின் பலம் தெரியும் என்றாலும் இராமச்சந்திரனின் தனிப்பட்ட செல்வாக்கினால் பண்ருட்டி தொகுதியிலும் விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி தவிர்த்து தே.மு.தி.க. கருணாநிதி அவர்கள் கூற்றுப்படி ஹார்ம்லெஸ் என்ற நிலைதான் இது வரை. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிற்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம். குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இருந்த தவறான இமேஜ் மாறி தற்போது தலித் அல்லாத மக்களும் விடுதலை சிறுத்தைகளின் மீது கரிசனத்தோடு ( குறிப்பாக திருமாவின் மீது) இருக்கின்றனர். இதற்கு சான்றாக 2004 பாராளுமன்ற தேர்தலில் திருமா சிதம்பரம் தொகுதியில் பெற்ற வாக்குகள் , அதற்கு முந்தைய தேர்தலில் பெற்றதை விட 30,000 வாக்குகள் அதிகம். தலித் வாக்குகளையும் தாண்டி பிற சாதி மக்களின் வாக்கு வங்கியில் ஊடுருவியிருப்பது தெளிவாகின்றது. தலித்கள் மட்டுமல்லாமல் வன்னியர்களும் விடுதலை சிறுத்தை அமைப்புகளில் சேரத் தொடங்கியுள்ளனர். பாண்டிச்சேரி நாடாளுமன்ற வேட்பாளராக விடுதலை சிறுத்தை அமைப்பின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஒரு வன்னியர். ஆனாலும், கடலூர் , விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்கள் தவிர்த்து பிற இடங்களில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினால் அ.தி.மு.க. கூட்டணிக்கு பயன் எதுவும் இல்லை.

ஏறக்குறைய 60 தொகுதிகளில் முடிவை நிர்ணயிக்கும் பா.ம.க. வட மாவட்டத்தின் அரசியலை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1996 தேர்தலில் செல்வி ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் 60 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பத்தாயிரத்திற்கும் கூடுதலான வாக்குகள், 4 தொகுதிகளில் வெற்றி, 9 தொகுதிகளில் இரண்டாமிடம், 1991 தேர்தலில் ராஜீவ் காந்தி மரண அலையிலும் இதேபோல் பல தொகுதிகளில் 10,000 க்கும் மேற்பட்ட வாக்குகள். 1989 பாராளுமன்ற தேர்தலிலும் 5.5% வாக்குகள் ( இதை வட மாவட்டங்களில் மட்டும் என கணக்கிடும்போது ஏறக்குறைய 15%) பெற்றது. ஆனால், பா.ம.க.வின் வளர்ச்சி தற்போது தேக்க நிலைக்கு வந்துவிட்டது. இதற்கு மேல் பா.ம.க. வளர்வதும் கடினம். அதே போல் அதன் சரிவும் குறைவாகவே இருக்கும். solid Vote Bank என கூறப்படும் நிச்சய வாக்கு வங்கியே அதன் சரிவு மிகக்குறைவாக இருக்கக் காரணம். 1996 தேர்தல் தவிர்த்து பா.ம.க. கூட்டணியின்றி போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் அதன் வாக்கு வங்கி ஒரே மாதிரியாகவே உள்ளது. தேர்தலுக்கு தேர்தல் பா.ம.க. பெற்றுள்ள சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியதால் பா.ம.க. வாக்கு வங்கி வளர்ந்துவிட்டதாக கூறமுடியாது . பா.ம.க. வாக்கு வங்கி அதன் நிறுவனர் ராமதாஸால் அரசியல் கணக்கோடு பயன்படுத்தப்பட்டதே அதன் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குக் காரணம்.விடுதலை சிறுத்தைகள் அமைப்போடு பா.ம.க. கைகோர்த்தது சாதி, கட்சி பாகுபாடின்றி வடமாவட்ட மக்கள் பலரை ஆசுவாசப்படுத்தியது. எதிர் முகாம்களில் தற்போது இருக்கும் போதும் எந்த விதமான அறிக்கை தாக்குதல்களிலும் ஈடுபடாமல் இன்று வரை நட்புமுறையில் இருவரும் இருப்பதும் தேர்தலுக்குப் பிறகு இணைந்து செயல்படுவோம் என்ற பேச்சுகளும் எதிர் எதிர் அணியில் தேர்தலை சந்தித்தாலும் கடந்த கால தேர்தல்களில் நடைபெற்றதைப் போன்ற வன்முறைகள் நடைபெறாது என்ற நம்பிக்கையுடன் உள்ளது வட மாவட்ட தேர்தல்களம்.

வட மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் தோழர்கள் பணம் காசு எதிர்பார்க்காமல் தேர்தல் வேலை செய்வார்கள் என்பதைத் தவிர்த்து தி.மு.க. கூட்டணிக்கு நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி தர்மபுரி மாவட்டத்தின் சில தொகுதிகள் தவிர வேறெந்த தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட்களால் பெரிய அளவில் இலாபமில்லை.

தி.மு.க.வின் கோட்டையாக வட மாவட்டங்கள் கருதப்பட்டாலும் இந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு மிக முக்கியமானதாக கருதப்படும். 2001 தேர்தலில் மிகப் பெரும் வெற்றி பெற்றதற்கான காரணங்களில் ஒன்று வேட்பாளர் தேர்வு. மிகப் பெரும்பாலானவர்கள் புதுமுகங்கள். ஏற்கனவே கெட்ட பெயர் எடுத்தவர்கள் முற்றிலும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். ஆனால், இது மாதிரி தி.மு.க.வில் செய்வது கடினம். ஒவ்வொரு தேர்தலின்போதும் தி.மு.க.வின் அதே குட்டி மன்னர்களையே வேட்பாளர்களாக பார்க்கின்றனர். புதுமுகங்கள் நிறுத்தப்பட்டால் குட்டி மன்னர்களே அவர்களுக்கு எதிராக வேலை செய்து கவிழ்த்துவிடுகின்றனர். பழைய வேட்பாளர்களையே பார்த்தால் மக்களுக்கு எரிச்சல். புது முகங்கள் போட்டியிட்டால் குட்டி மன்னர்களின் உள்ளடி வேலைகள் என தி.மு.க.விற்கு வேட்பாளர் தேர்வு இந்த முறையும் தலைவலி தான்.

பொதுவாகவே அ.தி.மு.க. சற்று பலம் குறைந்த வட மாவட்டங்களில் வெள்ள நிவாரணத்திற்கு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபா கொடுத்து கிடைத்த நல்லபெயரும் மகளிர் சுய உதவி குழுக்களின் செயற்பாடுகள் அதில் புழங்கும் பணம், தி.மு.க. வெற்றிபெற்றால் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்ற பிரசாரம், வழக்கமான வாக்கு வங்கி இவை தவிர்த்து அ.தி.மு.க.விற்கு சொல்லிக் கொள்ளும் படியான பலம் எதுவும் இல்லை. இதை கணித்தே அ.தி.மு.க.வும் முடிந்த அளவிற்கு வட மாவட்டங்களில் போட்டியிடுவதை தவிர்த்து ம.தி.மு.க., விசிகளுக்கு தொகுதிகளை இங்கு அளித்துள்ளது. ராசிபுரம், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர் போன்ற இடங்களில் சில தொகுதிகளை சொந்தமாகவும், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தின் சில தொகுதிகளை விடுதலை சிறுத்தைகளின் பலத்தினாலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படும் வட மாவட்டங்களில் பலமிகுந்த பா.ம.க.வும் கணிசமான வாக்கு வங்கியுள்ள காங்கிரஸும் கூட்டணியில் இருப்பது வட மாவட்ட தொகுதிகளை தி.மு.க. கூட்டணி எளிதாக வெற்றி பெறும் நிலையிலிருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் சில தொகுதிகள் கைவிட்டும், சில தொகுதிகள் இழுபறி நிலைக்கும் சென்றுவிட்டது. சிறிய அளவிலான சேதாரத்துடன் தி.மு.க. கூட்டணி வட மாவட்ட தொகுதிகளை தக்கவைத்துக் கொள்ளும்.

தஞ்சாவூர் மாவட்டம் பொதுவாகவே தி.மு.க.விற்கு எந்த சூழலிலும் கை கொடுக்கும் மாவட்டம். தமிழகமெங்கும் தி.மு.க., த.ம.க. கூட்டணி 1998 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற போதும் தஞ்சையில் சுனாபானா என செல்லமாக அழைக்கப்படும் சு.பழனிமாணிக்கம் வெற்றி பெற்றார். தஞ்சையின் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி சொந்த பலத்தில் தான் மோதிக் கொள்ள வேண்டும். கூட்டணிக் கட்சிகளுக்கு செல்வாக்கில்லாத தொகுதிகளாதலால் இங்கும் தி.மு.க.வுக்கு சாதகமான நிலை.

நாகை மாவட்டம் கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்று கூறப்பட்டாலும் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. என ஏதேனும் ஒரு கூட்டணியில் இருந்தால் மட்டுமே எளிதாக வெற்றி பெறுவார்கள். தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள் என்ற வரிசையில் கட்சிகளின் பலம் இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் சமீப காலமாக கம்யூனிஸ்ட்களின் வாக்கு வங்கியில் ஓட்டை ஏற்படுத்தியுள்ளனர். கம்யூனிஸ்ட்களின் பலத்தால் தி.மு.க. கூட்டணியின் கை ஓங்கினாலும் சீர்காழி, மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிமுகம் காணலாம்.

திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தம் சுயபலத்தில் மட்டுமே மோதிக் கொள்ள வேண்டும். வேறு எந்தக் கட்சிகளுக்கும் எந்த பலமுமில்லாததால் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் வெற்றி தோல்வி முழுக்க முழுக்க தி.மு.க., அ.தி.மு.க.வை பொறுத்ததே, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் கணிசமாக தி.மு.க.வும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கணிசமாக அ.தி.மு.க.வும் வெற்றிபெறும்.

மதுரையும் அதைத் தாண்டிய தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் வலுவான வாக்கு வங்கியும், சிவகாசி, கோவில்பட்டி, குளச்சல், பொள்ளாச்சி, சாத்தூர் போன்ற முப்பதிற்கும் மேற்பட்ட தென்மாவட்ட தொகுதிகளில் ம.தி.மு.க. பலமாக உள்ளது. (2001 தேர்தலில் 10,000 வாக்குகளுக்கு மேல் வாங்கிய 36 தொகுதிகளில் 28 தென்மாவட்டங்களைச் சேர்ந்தது - 5,000 வாக்குகளுக்கு மேல் வாங்கிய 33 தொகுதிகளில் பலவும் தென்மாவட்டங்களை சேர்ந்ததே) வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 5,000 க்கும் குறைவாக இருக்குமாயின் ம.தி.மு.க.வின் கூட்டணி அ.தி.மு.க.விற்கு மிகப்பெரும் வெற்றியைத் தரும். ஆனால், பழைய புள்ளிவிபரங்கள் எத்தனை நெருக்கமான போட்டியிலும் 5,000 க்கும் குறைவான வெற்றி வாக்கு வித்தியாசம் மிக சில தொகுதிகளில் மட்டுமே. மதுரை மற்றும் தென் மாவட்ட தி.மு.க.வின் உட்கட்சி பூசல்கள் அ.தி.&#

-தினக்குரல்

Link to comment
Share on other sites

பாவம் தூயவன் என்ன தான் சொல் வித்தை காட்டினாலும்..வைகோ விற்க்கு தமிழ்மக்கள் தமிழகத்தில அளித்த ஆதரவு இப்பொ இல்லை என்றது கான் நிஜம் என்ன பன்ன வைகோ சென்ஞது பிழை தான் அதுக்காக எதிராகவா பேசமுடியும் என்று உங்களோட feelings புரிது தூயவன் அண்ணா... :lol::lol:

better luck next time vaiko ku... :lol::lol:

Link to comment
Share on other sites

வைகோட மகன் வையாபுரிமட்டும்..கட்சி வேலை பாக்க வில்லையாக்கும்..ம.தி.மு.க வில. வையாபுரி சொல்வது தானே நடக்கிது..அ.தி.மு.க வுடன் கூட்டனி சேரட்டுமான்னு தன் தாயாரை போய் கேட்டவர் தானே இந்த வைகோ..இங்கே தொண்டருக்காக தான் கட்சி நடத்தினாராக்கும்...இது குடும்ப அரசியல் இல்லையாக்கும்..ஏற்கனவே பொடாவில கைதாகி பெயில்ல திரிர அவருக்கு தன் மீதான வழக்குகழை வாபஸ் வாங்க வக்கில்லை இதுக்குள்..மற்ற கட்சிகள பற்றி விமர்சனம் வேற....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர், நடிகர் விசுவும் அ.தி.மு.கவில் இணைந்துவிட்டார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அரட்டை அரங்கம் இனிமேல் ஜெயா தொலைக்காட்சிக்குப் போகவுள்ளது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.