Jump to content

வாழை காய் பற்றிஸ்: சமையல் குறிப்பு - 09


Recommended Posts

போர் காலத்தில் , பொருளாதார தடைக்குள் வாழ்ந்தவர்களுக்கு, அனுபவம் இருக்கலாம். பொருளாதார தடைக்குள் உருளை கிழங்கு கிடைக்காத பொது, உள்ளூர் பயிர் செய்கையில் கிடைப்பதும் பங்குனி சித்திரையுடன் முடிந்துவிடும். ஏனைய காலத்தில் உருளை கிழங்கை பாவித்து செய்த ரோல்ஸ் , பற்றிஸ் போன்றவருக்கு மரவள்ளி கிழங்கு , வாழை காய் என்பவை பயன்படுத்த பட்டன. சில உணவகங்களில் கூட வாழை காய் ரோல்ஸ்களை சாப்பிட்டு இருக்கிறேன். யாருக்காவது அந்த அனுபவம் ?

பொருளாதார தடை காலத்தில் எனது பிறந்த நாள் ஒன்றுக்கு என்னுடைய வீட்டில் மரவள்ளி கிழங்கில் பற்றிஸ் செய்து தந்தார்கள்.

கடந்த வாரம் இங்குள்ள தென் கிழக்காசிய கடை ஒன்றுக்கு வல்லாரை வங்க சென்ற பொது எங்களூர் வாழைக்காய் இருந்தது . வாங்கி வந்து வாழைக்காய் பற்றிஸ் செய்து பார்த்தேன். அந்த செய்முறை

தேவையான பொருட்கள்

1 . வாழைக்காய் - எமது ஊர் வாழைகாய் எனில் 3 / ஆபிரிக்க/ கரிபியன் பெரிய வாழை காய் எனில் 1 -1 /2

2 . அவித்த சாதாரண கோதுமை மா - 2 கப் (கப் -250 ml அளவு கரண்டி)

3 . வெங்காயம் - நடுத்தரம் 1

4 . பச்சை மிளகாய் - 2

5 . கடுகு - 1 /2 தே கரண்டி

6 . சீரகம்- 1 /2 தே கரண்டி

7 . கறி தூள்- உங்கள் சுவைக்கு ஏற்ப (அல்லது 1 - 1 / 2 தேகரண்டி )

8 . கறி வேப்பிலை- ஒரு நெட்டு

9 . உப்பு - உங்கள் சுவைக்கு ஏற்ப

நீர்

சுடு நீர்

எண்ணெய் பொரிக்க

செய்முறை

1 . வாழை காயை தோல் சீவி , 1 /2 இஞ்சி தடிப்புடைய சதுரங்கள வெட்டி கொள்ளவும்.

2 . வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

3 . பொருத்தமான் மூடி உடைய சட்டியை அடுப்பில் வைத்து 1 மேசை கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சீரகம் போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

4 . வெங்காயம் வதங்கி , பொன்னிறமாக வந்ததும், வாழை காயை போட்டு , முக்கால் பகுதி நீரில் முழ்கும் வரை நீர் விட்டு, உப்பு , கறி தூளையும் போட்டு மூடியால் மூடி கொதிக்கவிடவும், ஒரு கொதி வந்ததும் பிரட்டி விட்டு, சூட்டை நடுத்தரத்துக்கு குறைத்து அவியவிடவும். 1௦ - 15 நிமிடத்துக்குள் அவித்து விடும். அப்போது கறிவேப்பிலையை போட்டு, அருவல், நோருவலாக மசித்து கொள்ளவும். (mashed potato மாதிரியில்ல, சிறிய துண்டுகள் இருக்க வேண்டும்)

5 . மாவை வாய் அகன்ற பாத்திரத்தில் இட்டு, சுவைக்கு உப்பு போட்டு சுடு நீர் விட்டு இடியப்ப பதத்துக்கு குழைக்கவும். அல்லது உலர்ந்த மா இல்லது போகும் வரை சிறிது சிறிதாக சுடு நீர் சேர்த்து குழைக்காவும். குழைத்த மாவுக்கு 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு குழைத்து மேசைப்பந்து அளவிலான உடுண்டைகாளாக உருட்டி கொள்ளவும்.

6 . உருட்டு கட்டையில் எண்ணெய் பூசி மெல்லிதாக, 3 இஞ்சி விட்டத்திலும் சிறிது பெரிதாக்க உருட்டி கொள்ளவும்.

hpim2627.jpg

7 . உருட்டிய மாவை அச்சில் போட்டு , 1 தே. கரண்டி கறியை நிரப்பவும் (ஆசிய கடைகளில் டம்பிளிங் அச்சு , அல்லது தமிழ் கடைகளில் பற்றிஸ் அச்சு கிடைக்கும்)

hpim2626m.jpg

yarlpatti.jpg

8 . அச்சை மூடி வெளியே வந்த மாவை எடுத்துவிட்டு, அச்சை திறந்து பற்ரிசை வெளியே எடுக்கவும்.

9 . அதே போல மிகுதியை செய்து முடிக்கவும்.

10 . எண்ணெயை சூடாக்கி பொன்னிறமாக வரும்வரை பொரித்து எடுக்கவும்.

yarlpatti4.jpg

12 . 20 - 22 பற்றிஸ் செய்யலாம்

குறிப்பு : பற்றிஸ் ஐ தமிழினி திணிப்பு ரோட்டி என தமிழ் பெயர் கொடுத்திருந்தார். இப்போது தமிழினி என்ற பெயரில் யாழ் களத்துக்கு வருவதில்லை. புதிய பெயரில் வந்தால் தெரியாது.

மா - அவித்த மாவில் செய்ததுக்கு கரணம், வீட்டில் பற்றிஸ் அச்சு இருக்கவில்லை, எனவே அவித்த மாவில் மோதகம், கொழுக்கட்டை செய்யும் பொது மா குழைப்பது போல் குழைத்து, உருட்டு கட்டையால் உருட்டாது, கொழுக்கட்டை பிடிக்கும் முறையில் செய்தார்கள். அந்த அவித்த மா சுவைக்காக நானும் அவித்த மாவில் செய்தேன். பச்சை மாவிலும் செய்யமுடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்காய் பற்றிஸ் இதுவரை... சாப்பிட்டுப் பார்க்கவில்லை.

பற்றிஸ் படங்களைப் பார்க்க.... ஆசையக உள்ளது. செய்முறையும் இலகுவாக உள்ளதால், வாறகிழமை செய்ய உத்தேசம்.

இணைப்பிற்கு நன்றி குளக்காட்டான். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்காய் பற்றிஸ் இதுவரை சாப்பிட்டுப் பார்க்கவில்லை வாழைக்காய் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் குறிப்பாக பொரியல் அதிலும் சாம்பல் வாழைக்காய் மிகவும் சுவையாக இருக்கும் .. :wub:

இணைப்பிற்கு நன்றி குளக்காட்டான். :)

பி கு; என்னிடம் தற்போது பச்சை இல்லை நாளை வந்து குத்துவேன்.

Link to comment
Share on other sites

தமிழ் சிறி. தமிழரசு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழைக்காயில் பற்றிஸ் வித்தியாசமான சுவையாக இருக்குமென நினைக்கின்றேன். இருந்தாலும் மரவள்ளிக்கிழங்கில் செய்த பற்றிஸ் இன்னும் நல்ல சுவையாக இருக்கும்.நினைவூட்டியதற்கு நன்றி குளக்காடன்.

Link to comment
Share on other sites

செய்முறைக்கு நன்றி குளம்ஸ் அண்ணா. வாழைக்காய் பற்றீஸ் சாப்பிட்டதில்லை ஆனால் எங்கள் கல்லூரி கன்டீனில் மரவள்ளிக் கிழங்கு போண்டா நல்ல பேமஸ், இடைக்கிடை கிழங்கின் நார் கடிபடுவது தான் பிடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

இரண்டு பற்றீசை ஓஸிக்கு அனுப்பி இருக்கலாமே.?!

:))

Link to comment
Share on other sites

ம்... ம்... வாழைக்காயில் பற்றிஸ் வித்தியாசமான சுவையாக இருக்குமென நினைக்கின்றேன். பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாளை நாடு முழுவதும் அதிக வெப்பநிலை! மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, நாளை (20) முழுவதும் நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் சில இடங்களில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/296333
    • கற்பனைக் கதை தானே அண்ணை?!
    • நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
    • முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
    • தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.