Jump to content

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......


Recommended Posts

கொஞ்சம் முன்னாடி ஒரு பொண்ணு தன்னோட படிச்ச ஒரு நண்பிய ஒரு பையன் ஊரெல்லாம் சுத்திட்டு இப்போ ஏமாத்திட்டானாம்......அதனால தான் அட்வைஸ் பன்னதாம் பாய்ஸ்ச நம்பாத எண்டு

அதுக்கு நான் சொன்ன பதில்......

காதலிக்கிற பெண்ணையே கல்யாணம் கட்டிகிறது எல்லாம் ஓல்ட் பேஷன்

பேசிக்கா பொண்ணுங்க கழட்டி விடுறது தான் ஜாஸ்தி என்ன இந்த பையன் முந்திக்கிட்டான்

அதுக்கு அந்த பொண்ணு சொன்னா அவங்க ஊரெல்லாம் சுத்தினான்களே அதுக்கு என்ன சொல்றேன்னு......

அதுக்கு நான் சொன்னேன்.....

ஊர் சுத்தினதோட விட்டாங்களே எண்டு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் எண்டு....

பொண்ணு ரொம்ப டென்ஷன் ஆகி செருப்ப தூக்காத குறை நான் எஸ்கேப்......

Link to comment
Share on other sites

  • Replies 3.2k
  • Created
  • Last Reply

இந்த பொண்ணுங்க என்னா தான் பசங்கள திட்டினாலும் கடைசில வாழ்க்கைப்பட போறது ஒரு பையன் கிட்ட தானே....

Link to comment
Share on other sites

தனது பிள்ளை களுக்கென இருந்த பசுவின் பாலை அர்ச்சகர் தனது பிள்ளைகளுக்கென கவர்ந்துவிட, கோபமுற்ற பத்திரகாளியம்மை பிரம்மனிடம் சண்டையிட்டுப் பெற்ற கற்பக விருட்சமே பனைமரமும் அதன் பதநீரு மென்ற கிராமியக் கதை வழக்கு உண்டு.

பனையின் தாயகம் ஆப்பிரிக்கா எனப்படுகிறது. இந்தியாவில் எட்டுகோடி பனை மரங்கள் இருப்பதாகவும், அதில் 5 கோடி மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் கணக்கிடப் பட்டுள்ளதாய் சொல்லப்படுகிறது. பல்லாயிரமாண்டு கால தமிழ் பாரம்பரியத்தின் அறிவுக் களஞ்சியத்தை ஓலைச் சுவடிகளில் சுமந்து காத்த பனை மரம்தான் இன்று வேகமாக வெட்டி அழித்து வேரறுக்கப்படும் மரங்களில் முதலிடம் பிடிப் பதாய் சொல்லப்படுகிறது.

இதமான பதநீர், இனிப்பிற்கு பனை வெல்லம், -பனங் கருப்பட்டி + பனஞ்சீனி -பனங்கற்கண்டு, கோடைக்கு நுங்கு, போதைக்கு கள், சுவைக்கப் பனம் பழம், பொங்கலுக்குப் பனங் கிழங்கு, பனங்கொட்டை சீம்பு, வீடுகள் வேய ஓலைகள், கூரைகள் தாங்கும் தூண்கள், உத்திரங்கள், சுண்ணாம்புக் காளவாய்க்கும் செங்கல்சூளைக்கும் எரிபொருள், இலை, தும்பு, ஈர்க்கு, எரிதுரும்பு, நார் -என பனை உண்மையில் ஓர் ஜீவ தரு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்திக்கும் எமக்கான நேரத்துக்கும்  நன்றியப்பா..

 

Link to comment
Share on other sites

அழுக்கும், எச்சிலும் கவிந்த, ஓலைக் கீற்றுகளால் மறைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் கள்ளுக்கடைகளில் மட்டும் சாதீயக் கட்டமைப்பின் இறுக்கங்கள் தற்காலிகமாய் தகர்ந்து கரைந்து சிறு நேர சமத்துவம் கோலோச்சும்

அடேல் பாலசிங்கம்

ஹா ஹா ஒரு வெள்ளைக்காரிக்கு தெரிஞ்சிருக்கு நம்ம சமத்துவம்

Link to comment
Share on other sites

ராஜதந்திரத்தில் விட்டு கொடுத்தலும் ஒரு வியூகம் ,பின் வாங்கி முறுக்குதலும் ஒரு வியூகம் , இப்போதய சூழலில் பாகிஸ்தானை விட்டுபிடிப்பதில் தவறில்லை.....தி ஹிந்து//////////////

ஆமாம் அதையும் மீறி பாகிஸ்தான் படையெடுத்தால் சிறப்புத்தளபதி ராம் தலைமையிலான ஹிந்து நிருபர்களை கொண்ட விஷேட படையணி அதனை முறியடிக்கும்.......

போன முறை பிஜேபி ஆட்சியில் இருந்த பொழுது தான் இந்த நவாஸ் ஷெரிப் வால ஆட்டினவர் இந்த முறையும் அதே நிலைமை போல ....

Link to comment
Share on other sites

இனி லைக்கா யாராச்சும் ஒரு நலிந்த தயரிப்பாளர பிடிச்சி அவர பினாமியா வைச்சு கத்திய வெளியிடுவானுங்க......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி லைக்கா யாராச்சும் ஒரு நலிந்த தயரிப்பாளர பிடிச்சி அவர பினாமியா வைச்சு கத்திய வெளியிடுவானுங்க......

 

 

இது  நம்மையே  நாம் தாழ்த்துவது போலிருக்கு சுண்டல்.. :(  :(  :(

தமிழகத்தில்  எமது சொந்தங்கள் உசாராகவே உள்ளார்கள்

பார்த்துக்கொள்வார்கள்...

அவர்களை  நாம் இவ்வாறு கொச்சைப்படுத்தக்கூடாது..

Link to comment
Share on other sites

எனக்கு என்னமோ பெங்களூர் வழக்கில ஜெயலலிதாவ சிக்க வைச்சிட்டு பிஜேபி ரஜினிய 2016 இல் களம் இறக்க போகுது போல தான் இருக்கு......

சுப்ரமணிய சுவாமி தீயாய் வேலை செய்வதாக கேள்வி .....

Link to comment
Share on other sites

இதுவரை நான் இயக்கியதில்,என்

னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ktvi தான்.

இதய வாசலில் 'housefull'போட்டும் அந்த போர்டில்

தொங்கிக்கொண்டு இருக்கிறது ஆயிரம்

பாராட்டு பத்திரங்கள்-நான் மிக நேசிக்கும் இளம்

இயக்குனர்களிடம் இருந்து!

பொறுப்பு அதிகமாகி மீண்டும்

தூக்கங்கெட்டு இப்படியாகி...

நடிகர் , இயக்குனர் பார்த்தீபன்

Link to comment
Share on other sites

நேற்று எது உலகின் மிகப்பெரிய முதலாவது இராணுவம் என்ற பகிரப்பட்ட தகவலோடு இன்று எது உலகின் இரண்டாவது பலமிக்க நாடு என்பதை பார்ப்போம்

ரஷ்யா USSR காலத்தை விட தற்போதைய ரஷ்ய ராணுவம் தான் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. தன் செலவுகளை வருடந்தோறும் அதிகரித்து கொண்டே வரும் ரஷ்யா, தன் கவனத்தை உச்ச சிறப்புமிக்க ராணுவ தொழிநுட்ப ஆராய்ச்சியில் செலுத்தியுள்ளது. உலகத்தில் உள்ள மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது ரஷ்யா. அதே போல மிகப்பெரிய பீரங்கி படையை கொண்டுள்ளது - கிட்டத்தட்ட 15,500 பீரங்கிகளை வைத்துள்ளது. முனைப்புடன் செயல்படும் அதன் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 7,60,000 பேர்கள்.

Link to comment
Share on other sites

இப்பிடியே கத்தி ,புலிப்பார்வை என்று தினமும் எழுதி இணையத்தளங்களையும் முகப்புத்தகங்களையும் நிரப்பிக்கொண்டு ( நான் உற்பட ) அங்கே ஐக்கியநாடுகள் என்ற ஓன்று நடாத்தி வரும் யுத்த குற்ற விசாரணைகளின் செய்திகளை பின் தள்ளுவோம்......சிங்களத்தின் எதிர்பார்ப்பும் அது தானே........

Link to comment
Share on other sites

தேர்தல் தோல்விக்குப் பின்னர் அழகிரியின் முக்கியத்துவம், அவர் மீண்டும் கட்சிக்கு வர வேண்டியதன் அவசியத்தை அவரது குடும்பத்தினர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்த ஆரம்பித்தனர். ஸ்டாலினை மட்டும் நம்பியிருந்தால் திமுகவின் நிலை கவலைக்கிடமாகி விடும் என்றும் கருணாநிதிக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்காம்.......

Link to comment
Share on other sites

துளசி, கார்த்திகா, லட்சுமிமேனன் நடிக்க தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

நீதியை நேர்மையான முறையில் வழங்கி எங்கள் நெஞ்சங்களில் பால் வார்த்த உயர்நீதிமன்றத்தை கோவிலாக நினைத்து வணங்குகின்றோம்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே கத்தி ,புலிப்பார்வை என்று தினமும் எழுதி இணையத்தளங்களையும் முகப்புத்தகங்களையும் நிரப்பிக்கொண்டு ( நான் உற்பட ) அங்கே ஐக்கியநாடுகள் என்ற ஓன்று நடாத்தி வரும் யுத்த குற்ற விசாரணைகளின் செய்திகளை பின் தள்ளுவோம்......சிங்களத்தின் எதிர்பார்ப்பும் அது தானே........

 

ஆரம்பத்திலேயே

இதை நான் குறிப்பிட்டேன்

 

இப்ப பாருங்கள்

ஆளுக்கொருவர் மாறி  மாறி  பதிலளித்து

இதே கதையைக்கட்டி  காசு பறிப்பவர்களுக்கு பேட்டி கொடுத்து

எல்லா நேரமும் மண்ணாகிப்போகுது.........

சிறீலங்கா அரசுக்கு எல்லாம் சுலபமாகுது... :(  :(  :(

Link to comment
Share on other sites

எல்லாம் நல்லூர் முருகனோட அதிசியம் யாழ்ப்பாணத்தில நல்ல மழை பெய்யுதாம் பல மாதங்களுக்கு பிறகு

அரோகரா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா.... 

நான்  அவன் பக்தன்..... :D 

Link to comment
Share on other sites

அடி சக்கை அம்மன் கோயில் புக்கை எண்டானாம்...

என்ற வாரத்தையை பயன்படுத்திய கடைசித்தலைமுறை நாங்க தான்

Link to comment
Share on other sites

முல்லை பெரியாறு பிரச்சினை உருவானதே 1979-ம் ஆண்டு அதிமுக அரசால்தான்: ஜெ.வுக்கு திமுக பதிலடி......

சரி தலிவரே......நீங்களும் மதுரைக்கு போய் பஞ்சாயத்த கூட்டினா.......பைய்சல் பண்ணி வைக்க நமக்கு வசதியா இருக்கும்.....

டேய் தம்பி எட்றா அந்த செம்ப....

Link to comment
Share on other sites

பாரதிராஜாவின் அடுத்த படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா..........

அப்பிடியே வைரமுத்துவும் பாட்டெழுதினா புரியாணி விருந்தொட ஜோதில ஐக்கியமாகிடலாம்.....

Link to comment
Share on other sites

என்ன செய்வது புலிகள் இருக்கும்வரை சோறு போட்டார்கள் இப்பொழுது இல்லை அதனால் அவர்களை தூற்றி எழுதுவதன் மூலம் மூன்று வேளையும் சோறு கிடைக்கின்றது ஆகவே பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே கருணாகரன் போன்றார்களை மன்னித்து அருள்வீராகா.....

Link to comment
Share on other sites

எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனை பார்த்தீபன் தன்னுடைய பட வெற்றி விழாவிற்கு அழைத்தது சில அ தி மு க நலன் விரும்பிகள் விரும்பவில்லை என்பது அவர்களுடைய முகப்புத்தக கருத்துகளில் இருந்து அறிய கூடியதாக இருக்கின்றது ஆனால்

அவருடைய அரசியல் கருத்துக்களை தாண்டி அவரை ஒரு படைப்பாளியாக ஒரு எழுத்தாளனாக பார்த்தீபன் அழைத்தது தப்பில்லை தானே....இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனுஷ் அவர்கள் பார்த்தீபனுடைய ஒரு நண்பராக நலன் விரும்பியாக பல சந்தர்பங்களில் உதவி செய்தவராக இருக்கலாம் தானே... தோல்விகளை தழுவும் போது ஓடாமல் கூட இருப்பவர்களை வெற்றி விழாக்களில் மேடை ஏற்றி அழகுபடுத்துவதாக கூட இருக்கலாம் இல்லியா....

Link to comment
Share on other sites

இன்றைக்கு நல்லூர் முருகன் கோயில் தேர் எல்லாம் வல்ல முருகப்பெருமானோட அருளால நம்ம பசங்க எத நினைச்சு இம்புட்டு நாளும் பய பக்தியோட கோயில சுத்தி சுத்தி வந்தாங்களோ அதெல்லாம் நிறைவேறனும்....

Link to comment
Share on other sites

எத்துனை ஆறுச்சாமி அன்புச்செல்வன் ஷக்தி தொரைசிங்கம் மற்றும் விநாயக்குகள் வந்தாலும் கேப்டனை போலீஸ் வேடத்தில் மிஞ்சுவதற்கில்லை. அதனால்தான்யா அவர் கேப்டன். அவர் போலீஸாக நடித்த படங்கள் மட்டும் மொத்தம் எத்தனை என்று எண்ணிக்கொள்ளுங்கள்.

நியாயமாகப் பார்த்தால் காவலர்களை கௌரவப்படுத்தும் வகையில் இவ்வளவு படங்கள் தொடர்ந்து நடித்த கேப்டனுக்கு போலீஸ் தரப்பிலிருந்து ஒரு பெரிய பாராட்டுவிழாவே நடத்தி முடித்திருக்கவெண்டும். ஆங்கிலம்தான் கேப்டனுக்கு வராதே தவிர அவர் தமிழ் டயலாக் டெலிவரியில் ஒரு குறையுமில்லை. யூட்யூபில் சகட்டுமேனிக்கு கிண்டலடிக்கப்படும் விஷயகாந்த்தும் தெலுங்கு பாலகிருஷ்ணாவும் டயலாக் டெலிவரியில் மற்ற ஹீரோக்களை மிஞ்சியிருக்கிறார்கள். நிறுத்தி நிதானமாக வசனத்தை தெளிவாக இயல்பாக இம்மி பிசகாமல் உச்சரிப்பதில் இவர்கள் வல்லவர்கள். அதனால்தான் அவர்கள் இவ்வளவு பிரபலமடைந்திருக்கிறார்கள். அதை மதிப்பாரில்லை.

மூப்புதான் ஒருவரை சமகாலத்திற்கு பொருந்தாதவராய் கிண்டலுக்குரியவராய் மாற்றுகிறதே தவிர்த்து ஒருவர் இளவயதில் ஏற்படுத்திச் சென்றிருக்கும் அவரது பிம்பம் காலதிற்கும் அழியாமல் கம்பீரமாய் நிற்கிறது. இது கேப்டனுக்கு மட்டுமின்றி சாதித்தவர்கள் பலருக்கும் பொருந்தும்.

இன்றுவரை காவலர் உடை தமிழ்ப்படங்களில் விஜயகாந்துக்காக மட்டும்தான் கனகச்சிதமாக தைக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு அது தொளதொளவென்று பொருந்தாமல் தொக்கிநிற்கிறது.

தேங்க்ஸ் டு

Sivakumar Venkatachalam

Link to comment
Share on other sites

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திற்கு சில காட்டுப் பகுதிகளை தேர்வு செய்துள்ளார்களாம்

..........

அப்பிடியே காட்டுக்குள்ளையே விட்டிட்டு வந்திடுங்க சிம்பு சார்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.