Jump to content

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......


Recommended Posts

வெள்ளைக்கார கிழவன் ஒராள பிடிச்சு கேட்டன் எப்பிடி காதலர் தினம் போகுது என்று ....

அதுக்கு அவர் I "m too old for that எண்டார்.... நான் சொன்னன் காதலுக்கு எதுக்கு வயசெல்லாம் எண்டு....

அதுக்கு அவர் எல்லாத்துக்கும் காலம் நேரம் என்ட ஓன்று இருக்காம் என்றிட்டு போறார்.....

அந்த காலத்தில கிழவன் எத்தினை பொண்ணுங்கள சுழட்டி இருக்கும் இப்ப இப்பிடி சொல்லிட்டு போறார்

Link to comment
Share on other sites

  • Replies 3.2k
  • Created
  • Last Reply

நிஜங்களை தேடி

வெறுத்துபோகும் நாளில்

சகித்துக்கொள்ளவும்

பக்குவப்பட்டு விடும் ஆழ்மனம்..

அன்று புரிந்துகொள்வோம்

ஊரோடு சேர்ந்து வாழலாம் இல்லை

உணர்வோடு புதைந்து போகலாம் என்று.

-------------------------------------------------

கழுதைக்கும், நாய்க்கும் கல்யாணம்- காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 65 இந்து முன்னணியினர் கைது///

அடேய் நிஜமான காதல் ஜோடிகளா பிடிச்சு கல்யாணம் பண்ணி வைப்பம்னு சொல்லிட்டு கழுதைக்கும் நாய்க்கும் கல்யாணம் பண்ணி வைச்சிட்டு திரியிறீங்களேடா ......உங்களை நம்பி எத்தினை ஜோடிங்க இன்னைக்கு செலவில்லாம கல்யாணம் பண்ணலாம்னு இருந்தாங்க......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுதையும் நாயும் ஜாதி விட்டு ஜாதி காதலிச்சால் அவங்கள்தான் என்ன செய்வாங்க... இதுகளாவது கிடைச்சுதே என்று கல்யாணம் பண்ணி வச்சால் இது ஒரு தப்பா...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது...

கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது...

மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...

கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது...

நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது...

கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...

காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது...

சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது....

உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....

 

 

இவை  அனைத்துக்கும் தானே முதன்மை என்று கீதை கோடிடுகிறது.

அது தான் உண்மையும் கூட..

காரணம் ரொம்ப  சுலபம்

கடவுள் என்றால்

மதம் என்றால் தன்னைப்பற்றியோ

தன் சார்ந்தவர்கள் பற்றியோ பேசக்கூடாது...

Link to comment
Share on other sites

1 நிமி. ·

அமலாபால் துணிகளை துவைக்கும் கணவர் ஏஎல்.விஜய்////

அமலாபால் இம்புட்டு சம்பாரிச்சு என்ன பிரயோசனம் ஒரு வாஷிங் மெஷின் வாங்கிக்க முடியல்லியே....

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய வழி: பொன்.இராதாகிருஷ்ணன்////

எல்லாரும் தீர்வு கண்டு முடிஞ்சு அடுத்து இவர் கெளம்பிட்டாரு.....

Link to comment
Share on other sites

தமிழர்கள் பிரச்னைக்கு 13+ தீர்வாகுமா என்று விவாதித்துக்கொண்டு இருக்காமல் கிடைக்கிறதை வாங்கிக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியது தான், இப்பொழுது தமிழர் தரப்பு மிக கடுமையாக பலவீனமடைந்து காணப்படும் இந்த சூழலில் அது தான் பொருத்தமாகவும் இருக்கும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் பிரச்னைக்கு 13+ தீர்வாகுமா என்று விவாதித்துக்கொண்டு இருக்காமல் கிடைக்கிறதை வாங்கிக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியது தான், இப்பொழுது தமிழர் தரப்பு மிக கடுமையாக பலவீனமடைந்து காணப்படும் இந்த சூழலில் அது தான் பொருத்தமாகவும் இருக்கும்......

 

 

இதைத்தான் நானும்  சொல்கின்றேன் சுண்டல்

13 ஐ ஆவது சம்பந்தர் வாங்கிவிட்டால் அது இன்றையநிலையில் பெரியவிடயம்...

அப்படி வாங்கிவிட்டால்

சம்பந்தர் சாணக்கியர் என்பதை ஒத்துக்கொள்ளலாம்..

Link to comment
Share on other sites

ஹ்ம்ம் இப்ப அதுவும் கிடைக்குமோ தெரியா பாப்பம்....

Link to comment
Share on other sites

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மோதலில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து ஆஸ்திரேலியா சிட்னி பகுதியில் கிளப் ஒன்றில் ஆட்டத்தை பார்த்துகொண்டிருந்தவர்களில் 40பேர் அளவில் மோதலில் இறங்கியதில் 4 பேர் காயமடைந்திருக்கின்றார்கள் .......மோதலில் ஈடுபட்ட அனைவரையும் சிட்னி போலீஸ் உங்கள் கதவுகளில் வந்து தட்டுவதற்கு முன்னாள்.....அவர்களாகவே தங்களிடம் வருவது நல்லது என்று sydney போலீஸ் அறிவித்து இருக்கின்றது.......

அடப்பாவிங்களா பாகிஸ்தான் இந்தியா மோதல சிட்னி வரைக்கும் கொண்டு வந்து இப்பிடி பண்ணிட்டீங்களே டா.....

Link to comment
Share on other sites

வட இந்தியருக்கும், பாகிஸ்தானியருக்கும் இடையில் உள்ள பிரச்சினையில் தமிழகம் வீணாக மாட்டிக்கொள்ளக் கூடாது. இது வட இந்தியரின் வேலை என நம்புவோமாக..!

Link to comment
Share on other sites

தமிழகத்தில் கூட்டணி கட்சிகளை மதிக்க தெரியாத பா ஜ க விற்கு இந்த படுதோல்வி அவசியமான ஒன்றே..... இனியாவது இந்த ராஜா போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கணும்.....

Link to comment
Share on other sites

ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல் முடிவுகள் சொல்லி நிற்கும் செய்தி தமிழகத்தை பொருத்தவரை எப்பொழுதும் தி மு க , அ தி மு க தான்..... மற்றும்படி வேறு கட்சிகள் எழுவது கஷ்ட்டம்......

தேர்தல் முடிவுகளில் ஆளும் அ தி மு க வென்றதொன்றும் பெரிய விடையமே இல்லை.... ஆளும் கட்சி +ஜெயலலிதாவின் தொகுதி

Link to comment
Share on other sites

எதையும் எடுத்து வரவில்லை என்றாலும்

நினைவுகள் வகையாய் நம்முள்ளே ....

நினைவுகளில் உயிருள்ளவை

உயிரற்றவை என்பதெல்லாம்

போகும் போது

அறிய வாய்ப்பில்லை .....

Link to comment
Share on other sites

2002ல் காரை ஏற்றி கொன்றபோது சல்மான் கானிடம் டிரைவிங் லைசென்ஸே இல்லை///

2002 ஆம் ஆண்டு திகதியை போட்டு சொறிலங்காவின் சர்வதேச licence கொடுத்து உதவ சல்மான் கானின் உற்ற நண்பர் மகிந்தாவும் பதவியில் இல்லை அப்போ கண்டிப்பா கம்பி தான் சல்லுவுக்கு.....

Link to comment
Share on other sites

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியால் மற்றகட்சிகள் எல்லாம் அரண்டு போயிருக்கிறது எச்.ராஜா///

ஆமாம் நீங்கள் 5000 ஒட்டு வாங்கினதை பார்த்து அரண்டு இல்லை மிரண்டு போய் நிக்குறானுங்க எங்கே ஆட்சியை அடுத்து நீங்கள் கைப்பற்றி விடுவீர்களோ என்று....

Link to comment
Share on other sites

2016 இல் அதிமுகவுக்கு பதில் கொடுக்கப்படும்-தமிழிசை////

எக்கோய் அ தி மு க க்கு பதில் சொல்லுறது இருக்கட்டும் சிவனே என்று தன்பாட்டில பிசினஸ் பண்ணிட்டு இருந்த சுப்பிரமனியன தேர்தல்ல நிக்க வைச்சு டெபொசிட் போக பண்ணி கடனாளி ஆக்கின அவருக்கு முதல்ல பதில சொல்லுங்க

Link to comment
Share on other sites

முருகனே தனி நாடு கேட்ட போராளிதானே... சீமான் "பகீர்" தகவல்////

ஹா ஹா சரி, முருகனே தனி நாடு கேட்டும் கிடைக்கல்ல என்றது தானே இங்க ஹை லைட்

Link to comment
Share on other sites

முருகன் கூட இரண்டு திருமணம் செய்ததால் நானும் இரண்டு திருமணம் செய்யலாம் என்று இருக்கிறேன் நாம் தமிழர் தம்பிகளே.....

அண்ணன் சீமானிடம் இருந்து வெகுவிரைவில் இப்பிடி ஒரு அறிக்கை வந்தாலும் வரும்.....

Link to comment
Share on other sites

பேரு தான் ஆப்கானிஸ்தான் பட் கிரிக்கெட் விளையாடுறது எல்லாம் பாகிஸ்தான் பெடியங்கள் எண்டு ஒரு ஆப்கானி சொல்லிட்டு போறார்.....

Link to comment
Share on other sites

தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு மந்திரி பதவி: இளங்கோவன் பேச்சு////

இல்லாம் காங்கிரஸ் இனி தமிழகத்தில் ஆட்சிக்கே வர முடியாது என்ற நம்பிக்கையில தான் அண்ணன் இப்பிடி எல்லாம் பேசுறாரு..... விடுங்கப்பா

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்க கழக சமூகம் நாளை (24.02.2015) ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை விரைவுபடுத்த வலியுறுத்தி நடாத்த இருக்கும் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது.///

விசாரணையை தள்ளிப்போட வைத்ததே உங்கள் கூட்டமைப்பை சேர்ந்த சம்மந்தர் சுமந்திரன் கும்பல் தானே, மாணவர்களுக்கு எப்பிடி போராட்டத்தை முன்னெடுக்கனும் எண்டு தெரியும் நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்

Link to comment
Share on other sites

ஹா ஹா முடியல்ல .... இன்னா அறிவு....,

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, குழம்பி போயுள்ளதுடன் தனது ஊடக நண்பர்களை தொடர்பு கொண்டு சஷி வீரவன்ஸ தொடர்பான செய்திகளை பிரசுரிக்கும் போது தனது மனைவி என குறிப்பிட வேண்டாம் என கேட்டுள்ளார். விமல் வீரவன்ஸவின் பிள்ளைகளின் தாய் என குறிப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலை,யாழை விட்டு துரத்தியாச்சோ?????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலை,யாழை விட்டு துரத்தியாச்சோ?????????????????

 

இப்ப கொஞ்சக்காலமாய்  அதுதானே நடக்குதடி.... :D  :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.