Jump to content

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினத்தில் ஜோடிகளாக திரிபவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் -இந்து முன்னனி////

ஏனுங்க ரோடுல ஜோடியா போற ஆடு மாடு நாய் பூனை இதுங்களையும் பிடிச்சி கல்யாணம் கட்டி வைப்பீங்களா அன்னைக்கி...

 

 

அதுக்கு எதற்காக இத்தனை பதட்டம் சுண்டல்... :wub:

ஒன்றா?

இரண்டா....?? :lol:  :D

Link to comment
Share on other sites

  • Replies 3.2k
  • Created
  • Last Reply

கனடாவில் அரசியல்வாதி ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.///

அப்ப இதுகள என்ன செய்ய ?

Link to comment
Share on other sites

எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் அதி மேதகு அதி உயர்..... திரு சுமந்திரன் அவர்கள் தன்னுடைய நியமன பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினமா

செய்து முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாக்கு அந்த இடத்தை விட்டு கொடுத்தால் தேசிய இணக்க அரசியல் செய்ய வசதியா இருக்கும் அப்புறம் சிங்களவனும் தமிழனும் ஒண்ணுக்க ஒன்னு ஆகிடலாம்........

இப்பிடிக்கு இணக்க அரசியலில் புதிதாக இணைந்திருக்கும்

முன்னாள் தமிழ் தேசிய வாதி.....

Link to comment
Share on other sites

செவ்வாய்கிழமை கூட இருக்கும் ஆஸ்திரேலியா லிபரல் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் அனேகமாக ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் நீக்க படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது....... அவரின் தலைமையில் கட்சிக்கான மக்கள் ஆதரவு கடுமையாக குறைந்திருப்பதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி கூட்டத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இருக்கின்றார்கள்...... தீர்மானம் வெற்றி பெற்றால் இவர் வீட்டுக்கு செல்ல வேண்டியது தான்......

அரோகரா .....

Link to comment
Share on other sites

வடிவேலுவின் மிக பிரபலமான காமடிகளில் ஒன்றான இதில் வடிவேலோடு இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் செல்லத்துரை அவர்கள் இன்று மரணமடைந்தார்.........அஞ்சலிகள்.....

Link to comment
Share on other sites

தமிழர்களை கைவிடுகின்றதா அமெரிக்கா...?////

என்னைக்கு தமிழர்களின் கைய பிடிச்சிருக்கு அமெரிக்கா? இனி கைய விட?

Link to comment
Share on other sites

தனுஷ்... படத்துக்குப் படம் பிரமிப்பைத் தருகிறார். வேலையில்லாப் பட்டதாரியில் பார்த்த தனுஷ் சுண்டக் காய்ச்சிய பட்டை சாராயம் என்றால், இந்த ஷமிதாப்பில் அவர் ராயல் ஸ்காட்ச் மாதிரி அத்தனை க்ளாஸிக்

தனுஷின் தோற்றம், ஸ்டைல், குரலற்ற ஆவேச வாயசைப்பு... தான் ஒன்று சொல்ல முயல... அதற்கு நேரெதிராக அமிதாப் பேசி மாட்டிவிடும் காட்சியில் அவர் முகத்தில் காட்டும் ஆத்திரம், இயலாமை... சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நூறு சதவீதம் தகுதியான கலைஞன். தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துவிட்டார்

Link to comment
Share on other sites

வேர்ல்ட் கப் கிரிக்கெட் தொடங்க போகுது......எந்த மேட்ச் போய் பாக்கிறதெண்டு தான் தெரியல்ல.....

இலங்கை அணி விளையாடுற மேட்ச் பாக்க போனா அப்புறம் நம்மள துரோகி ஆக்கிடுவாங்க......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேர்ல்ட் கப் கிரிக்கெட் தொடங்க போகுது......எந்த மேட்ச் போய் பாக்கிறதெண்டு தான் தெரியல்ல.....

இலங்கை அணி விளையாடுற மேட்ச் பாக்க போனா அப்புறம் நம்மள துரோகி ஆக்கிடுவாங்க......

 

 

ஒன்றை  கொடுத்துத்தான் இன்னொன்றை  வாங்கணும் சுண்டல்..

 

சிங்களத்தை ஆதரிப்பது  மட்டும் தான்

எதையும் கொடுக்காமல்

எதையும் பெறாமல் நடக்குது

கலந்து கொள்ளுங்கள்

சங்கமமாகுங்கள்...

Link to comment
Share on other sites

டெல்லியில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி......

புதிய வரலாறு எழுதுகிறது ஆம் ஆத்மி.....

எத்தனை நக்கல்கள்...எவ்வளவு இழிவான பேச்சுக்கள்......எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து சாதித்தது அரவிந்த் கேஜ்ரிவால் அணி.......

பழம்பெரும் இரண்டு கட்சிகளையும் பின்னகர்த்தி புதிய ஒரு கட்சிக்கு வாய்ப்பளித்து அரசியல் வரலாற்றில் புதிய பக்கத்தை எழுதுகின்றார்கள் டெல்லி மக்கள்......

Link to comment
Share on other sites

அது சரி மக்களே இந்தியாவில் காங்கிரஸ் என்ற கட்சி இன்னும் இருக்கா?

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் இருந்து குஷ்பூ அக்காவும் இளங்கோவன் மாமாவும் டெல்லி தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றதால் தான் அங்கே காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது என்பதனை சொல்ல கடைமைப்பட்டு இருக்கின்றேன்.......

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டிலும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அந்த இரண்டு கட்சிகளையும் தவிர்த்து டெல்லி மக்கள் மாதிரி புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க மக்கள் முன்வரவேண்டும்......

Link to comment
Share on other sites

அதொண்ணும் இல்லை கிளீன் இந்தியா திட்டம் மோடி அறிவிச்சார் இல்லையா அதான் டெல்லி மக்கள் ஆம் ஆத்மியின் தொடப்பத்தால ஒரே அடியா கிளீன் பண்ணிட்டாங்கோ.....

Link to comment
Share on other sites

சரி விடுங்க மக்காஸ் எந்த அணி வெற்றி பெறுதோ அந்த பக்கம் தாவிக்கிறது நம்ம மக்களோட பழக்கம் அது அரசியலில் இருந்து விளையாட்டு வரை பொருந்தும்.... கடந்த காலங்களில் கேஜ்ரிவாலை ஒரு கோமாளி மாதிரி நையாண்டி பண்ணிய முக நூல் போராலிங்க எல்லாம் கேஜ்ரிவால் புகழ் பாடிட்டு இருக்காங்க.....

அட முகநூளில் இதெல்லாம் சாதரணமப்பா.....

Link to comment
Share on other sites

என்கூட வேலை செய்யிற பங்களாதேஷ் பெடியன் கேட்டான் நாங்க எல்லாம் melborune க்கு உலகோப்பை கிரிக்கெட் இலங்கை எதிர் பங்களாதேஷ் ஆட்டம் பாக்க போறம் உனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் போடவா எண்டு? நான் சொன்னன் ஆஸ்திரேலியால கிட்டத்தட்ட 40,000 சிங்கள மக்கள் இருக்கிற இடம் மெல்பேர்ன்..... அதிகமா அவிங்க தான் வருவாங்க ..... அப்புறம் சிங்கள பொண்ணுங்களின் எழுச்சி அலையில் நாம சிக்கி சின்னாபின்னப்பட்டு சிங்க கொடியையும் நம்ம கையில தந்திடுவாங்க அப்புறம் அதை எவனாச்சும் படமெடுத்து போட தமிழ் தேசியம் பேசிட்டு திரிந்தவர் சிங்க கொடியுடன் MCG மைதானத்தில் நின்ற அதிசியம் பாரிரீர் என்று கோர்த்து விட்டிடுவாங்க .... அதனால நீங்களே போயிட்டு வாங்க டா என்று சொல்லிட்டன்....

சின்ன தகவல்

ஆஸ்திரேலியாவை பொருத்தவரை கூடிய சிங்களவர்கள் வாழும் இடமாக melbourne கிட்டத்தட்ட 40000 க்கு மேல் கூடிய தமிழர்கள் வாழும் இடமாக சிட்னி கிட்டத்தட்ட 60000 மக்கள் ...

Link to comment
Share on other sites

4 வது காதலும் புஸ்: முதல் காதலரையே மணக்கும் நடிகை..../

இத தாய்யா சொல்லுறது வாழ்க்கை ஒரு வட்டம்னு......

Link to comment
Share on other sites

செய்ததற்காக ஜோர்டானிய விமானப்படைகள் ஒரு வாரத்தில் 7000 ISIS கிளர்ச்சியாளர்களை கொன்றிருப்பதாகவும்............இப்பொழுது ஜோர்தானிய துருப்புகள் தரைவழி தாக்குதல் ஒன்றுக்காக ஈராக்கிய எல்லையில் 1000 கணக்கில் குவிக்க படுவதாகவும்.......மறு முனையில் ஈராக்கும் ISIS மீது மிகப்பெரும் தரை வழி தாக்குதலுக்கு தயாராவதாகவும் கூறப்படுகின்றது.......

Link to comment
Share on other sites

அடுத்த நூற்றாண்டில், ஆப்ரிக்காவில் தான், இளைஞர்கள் அதிக அளவில் இருப்பர் என, 'யூனிசெப்' நிறுவன ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி, இப்படியே போனால், 2100ல் உலகில், 18 வயதுக்குட்பட்டவர்கள் பாதி பேர் ஆப்ரிக்காவில் தான் இருப்பர். மனிதகுலத்தின் வருங்காலம் ஆப்ரிக்காவில் தான் இருக்கிறது என்று ஆப்ரிக்கா பற்றி ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர்........ஏதோ அப்பவாவது ஆபிரிக்கா முன்னேறினால் சரி....அனைத்து வளங்கள் இருந்தும் சரியான அரசியல் தலைமைகளும் இவர்களுக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தி இவர்களின் வளங்களை சுரண்டுபவர்களும் இருப்பதனால் இன்று வரை இருண்ட கண்டமாகவே இருக்கு......

Link to comment
Share on other sites

சுவிஸ்ல ஒரு தமிழ் பொண்ணு முதல் முதல் டாக்டர் ஆகிட்டுதாம் அத பெருமையா நம்ம சுவிஸ் வாழ் தமிழர்கள் கொண்டாடுகின்றார்கள்.......சுவிஸ் பக்கம் தமிழர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்தது 1980 களில் என்று வைத்தாலும் 2015 ஆம் ஆண்டுவரை காலம் எடுத்திருக்கு சுவிஸ் தமிழர்களுக்கு ஒரு டாக்டரை உருவாக்க....ஆனால் இதே காலபகுதியில் புலம்பெயர்ந்த ஆஸ்திரேலியா,கனடா,லண்டன்,ஜெர்மனி,பிரான்ஸ் தமிழர்கள் பல நூற்றுகணக்கான மருத்துவர்களை உருவாக்கி அவர்கள் மருத்துவ உலகில் பெரும் சாதனைகளையும் படைத்தும் ,படைத்துக்கொண்டும் இருக்கின்றார்கள்........ஆக சுவிஸ் மக்களே இதுகெல்லாம் போய் பெருமைப்பட்டிட்டு இருக்காதீங்க.......

எது எப்பிடி இருப்பினும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

பொதுவாக சில தமிழ் திரைப்படங்கள் வெளிவரும் வரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வந்த உடன அட இம்புட்டு தானா என்று இருக்கும்.... இப்ப அப்பிடி ஒரு நிலமையில ஹாலிவுட் திரைப்படமான Fifty Shades Of Grey இருக்காமே..... வெளிவர முதல் உலகமெங்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி...... வெளிவந்த பின்னர் அட இவ்வளவு தானா என்று இருப்பதாக விமர்சகர்கள் சொல்கின்றார்கள்.....

Link to comment
Share on other sites

அ.தி.மு.க.வினருக்கு கத்திக்குத்து தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் 2 பேர் கைது////

ஹா ஹா எல்லாம் தலைவர் பாசரையில வளர்ந்ததுங்கடா .... ஒவ்வொனையும் கிடா மாதிரி வளர்த்து வைச்சிருக்கிறம் .... யாருகிட்ட ....

Link to comment
Share on other sites

காதலர் தினம் என்னமோ வருஷா வருஷம் வந்து போகுது.. ஆனா பெரும்பாலான நம்ம பசங்க வாழ்க்கை தான் அதே காதலி அதே ஆத்துக்காரி என்று போயிட்டு இருக்கு....

என்ன வாழ்க்கைடா...

Link to comment
Share on other sites

இஸ்லாமியனாய் இரு என குரான் சொல்கிறது...

கிறிஸ்துவனாய் இரு என பைபிள் சொல்கிறது...

மனிதனாய் இரு என கீதை சொல்கிறது...

கடவுள் ஏழாவது வானத்தில் இருக்கிறார் என குரான் சொல்கிறது...

நாலாவது வானத்தில் இருக்கிறார் என பைபிள் சொல்கிறது...

கடவுள் உன்னுள்ளே தான் இருக்கிறார் என கீதை சொல்கிறது...

காபிர்களை (இசுலாமியர்கள் அல்லாதவர்களை) கொல் என குரான் சொல்கிறது...

சிலை வழிபாடு செய்பவர்களை தண்டி என பைபிள் சொல்கிறது....

உலகமே உன் குடும்பம் தான் என கீதை சொல்கிறது.....

Link to comment
Share on other sites

அம் ஆத் மி

கெஜ்ரிவால் முதல் அதிரடி ::

அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் அரசு பணி ரத்து..////

அரசு ஊழியர்கள பகைச்சுக்கிட்டு மீண்டும் ஆட்சிக்கு வார ஐடியா இல்லைப்போல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.