Jump to content

கனடாவில் எதிர்ப்பு


Recommended Posts

கனடாவில் புலிகள் தடை-உடன் சட்ட உதவி அல்லது ஆலோசனை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது கனடாவில் விதிக்கப்பட்டுள்ள தடையும் அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள சட்டமும் கனடியத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதிக்காது பார்த்துக்கொள்ளும் வகையில் ஒரு சட்டக்குழுவின் உதவியை நாடியுள்ளோம்.

அதன் பிரகாரம் பின்வரும் விடயங்களை எம் மக்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

நீங்கள் எவராவது விசாரணை ஒன்றின் நிமிர்த்தம் பாதுகாப்புத் துறையினரால் அணுகப்படுமிடத்து, உடனடியாகப் பேசுவதை நீங்கள் தவிர்க்கும் உரிமை உங்களிற்கு உண்டு. ஒரு வழக்கறிஞருடன் பேசி அவர் முன்னால் பேசுவதை நீங்கள் விரும்புவதாகக் கூறலாம்.

நீங்கள் எவராவது சார்ந்த இடமொன்றை சோதனையிட முனைந்தால், அதற்கான சட்ட ஆவணம் இருக்க வேண்டும். அவ்வாறு யாராவது பாதுகாப்புத் துறையினர் முனைந்தால், அவ்வாநான சட்ட ஆவணம் உண்டா என்பதை உறுதி செய்யவும். அதில் விபரங்கள் சரியாக உள்ளனவா என்று பார்ப்பதுடன் சட்ட ஆவணம் அற்ற சோதனைகளுக்கு உங்கள் ஆட்சேபனையைத் தெரிவிக்கும் உரிமையும் உங்களுக்குண்டு.

நீங்கள் எவராவது மேற்கண்டவாறு சூழ்நிலைகளையோ அல்லது எச்சந்தர்ப்பத்திலாவது வேறொருவிதமான சூழ்நிலைகளுக்கோ உட்பட நேர்ந்தால், உடன் சட்ட உதவி அல்லது சட்ட ஆலோசனை தேவைப்பட்டால் தாமதமின்றி கீழேயுள்ள தொலையேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். அது குறித்த உதவிகளை நாம் மேற்கொள்வதற்குக் தயாராக உள்ளோம்.

தொடர்புகளுக்கு:

தொலைபேசி: 416-335-0622

ஆதார இணைப்பு

உலகத்தமிழ் ஊடகம் - World Tamil Press

Link to comment
Share on other sites

பேராசிரியர் சிவத்தம்பி தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் 1 வருடபூர்த்தி ஒட்டி நடந்த சிறப்பு நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அவர் பங்கு பற்றிய ஆய்வு 2 பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டது. அதன் போதும் lobbying எமது பலவீனமானது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

களத்தில் வேறொரு பகுதியில் ஒருவர் குறைப்பட்டிருந்தார் (அல்லது ஒரு வகையில் திருப்த்திப்பட்டுக் கொண்டார்) "ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் அதன் முன்னாள் காலணித்துவ நாடுகளிலும் தான் புலிகள் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்று.

உண்மைதான் இலங்கை அரசாங்கத்தின் lobbying ஆங்கிலம் பேசும் நாடுகளில் தான் மும்மரமாக இருக்கிறது. படித்த சிங்கள மக்கள் புலம் பெயர்ந்து பெருமளவில் இருப்பதும் அவுஸ்ரேலியா, பிரித்தானியா, அமொரிக்கா, கனடா, நியூஸ்லாந்து போன்ற இடங்களில். நோர்வேயில் சிங்களவர்களின் lobbying கடந்த 2...3 வருடங்களாக அதிகரிகத்து கொண்டு வருகிறது. நோர்வே சமூகத்தோடு அடிமட்ட உறவுகளை உருவாக்கி பலமாக்கி வருகிறார்கள்.

ஆங்கிலம் பேசும் நாடுகளில் புலிகளிற்கு தடைக்கு காரணம் அவர்களிற்கு தமிழ்மொழியிலை இருக்கிற பொறாமையால் இல்லை. அங்கு எமது பரப்புரை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் மற்ற நாடுகளில் பொதுவாக uncontested ஆக இருக்கிறம், ஆனால் அது மாறிக் கொண்டு வருகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேராசிரியர் சிவத்தம்பி தமிழ்த் தேசிய தொலைக்காட்சியின் 1 வருடபூர்த்தி ஒட்டி நடந்த சிறப்பு நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். அவர் பங்கு பற்றிய ஆய்வு 2 பகுதிகளாக ஒளிபரப்பப்பட்டது. அதன் போதும் lobbying எமது பலவீனமானது என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்.

களத்தில் வேறொரு பகுதியில் ஒருவர் குறைப்பட்டிருந்தார் (அல்லது ஒரு வகையில் திருப்த்திப்பட்டுக் கொண்டார்) "ஆங்கிலம் பேசும் நாடுகளிலும் அதன் முன்னாள் காலணித்துவ நாடுகளிலும் தான் புலிகள் தடை செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்று.

உண்மைதான் இலங்கை அரசாங்கத்தின் lobbying ஆங்கிலம் பேசும் நாடுகளில் தான் மும்மரமாக இருக்கிறது. படித்த சிங்கள மக்கள் புலம் பெயர்ந்து பெருமளவில் இருப்பதும் அவுஸ்ரேலியா, பிரித்தானியா, அமொரிக்கா, கனடா, நியூஸ்லாந்து போன்ற இடங்களில். நோர்வேயில் சிங்களவர்களின் lobbying கடந்த 2...3 வருடங்களாக அதிகரிகத்து கொண்டு வருகிறது. நோர்வே சமூகத்தோடு அடிமட்ட உறவுகளை உருவாக்கி பலமாக்கி வருகிறார்கள்.

ஆங்கிலம் பேசும் நாடுகளில் புலிகளிற்கு தடைக்கு காரணம் அவர்களிற்கு தமிழ்மொழியிலை இருக்கிற பொறாமையால் இல்லை. அங்கு எமது பரப்புரை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் மற்ற நாடுகளில் பொதுவாக uncontested ஆக இருக்கிறம், ஆனால் அது மாறிக் கொண்டு வருகுது.

சிங்களவர்களை விட கனடாவில் தமிழர்கள் அதிகம் படிப்பறிவு கூடிய மிக பெரும் பதிவிகளில் இருந்தாலும் அவர்கள் எங்கள் சமூதாயத்தோடு ஒன்றித்து இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஒன்றில் தமிழன் வெல்ல வேண்டும் என்று நினைக்க வேண்டிய நேரத்தில்.. என் பக்க ஆள் தான் வெல்ல வேண்டும் என்று ஒரே பதிவிக்கு இரு தமிழர்கள் போட்டியிட்ட காலமும் கனடாவில் இருத்தது என்பது வருத்த மான செயலாகும். அனால் இதை கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பரில் வந்த 'தன்மானமும் கனடியத்தமிழரும்'

http://www.orupaper.com/issue45/pages_K__7.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

:cry: மூன்று இலட்சம் கனேடியத்தமிழரை நினைத்து வெட்கித்தலை குனியுங்கள். பொறுப்பில்லா ஊடகங்களும், இலக்கற்ற பத்திரிகைகளும் உணர்வு செத்த தமிழரும் மலிந்தபுூமி தமிழினத்தின் அல்லலிலே வாழ்வெடுத்து வந்தவர்கள் இன்று வந்தவழி மறந்து வாயிருந்தும் ஊமையாகி ஊனமுற்றுக்

கிடக்கின்றர். விடுதலையைப் பேசிப்பேசி விளம்பரம் தேடியோர் விடுகதைகள் வடிவெடுக்க விலகிப்போய் நிற்கின்றர்.

எழுதுகோல்முனை உரச நெருப்புப் பொறித்தவர் பழுதடைந்த

பனாட்டுப்போல் பிசுபிசுத்துக்கொள்கின்றர். :shock:

கேளுங்கள்!

ஓர்மமுள்ள குரல்வளைகள் ஒடுங்கிக் கிடப்பதேன்?

கூர்மையுள்ள எழுதுகோல்கள் குறிதவறி செல்வதேன்?

உயிர் துடிக்கும் உணர்வுக்கோலம் உறைத்திருப்பதேன்?

வாய் உரிமைமிகு கருத்துரைக்காது ஊமையாய் நடிப்பதேன்?

இணைய நண்பர்களே!

வடமேற்குப் புலம் வாழும் தமிழரை நோக்கி வினா தொடுத்து

உயிர் கொடுங்கள். :idea:

தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள்

சமுத்திரம் கடந்ததனால் சதை செத்துப்போயிற்றோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.