Jump to content

கம்ப்யூட்டரைப் பார்த்து கழுத்து தேய்கிறது...எஸ்.எம்.எஸ். அடித்து எலும்பு வலிக்கிறது...


Recommended Posts

d377ea6b-1e82-4689-96c8-aab85559a810_S_secvpf.gif

பரந்து கிடக்கும் இந்த உலகம் சுருண்டு இன்றைய இளைய தலைமுறையினரின் கைக்குள் வந்து விட்டது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல இன்றைய வளர்கின்ற, வளர்ச்சி அடைந்துள்ள இளைய சமுதாயம் அதற்காக தரவேண்டியவை- இழக்க வேண்டியவை ஏராளம்.

வளர்ந்து விட்ட நாகரீகமும், அறிவியலும் பல புதிய அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. நோய் தீர்க்கும் பல அருமருந்துகளும், நோய்களை கண்டறியும் பல கருவிகள் புரியும் ஜாலங்களும் இன்றைய சமுதாயம் பெற்ற வரம். ஆனால், அதற்காக அவர்கள் தருகின்ற விலை மிக அதிகம்.

சுற்றி நடக்கும் பரபரப்பான உலகத்தின் வேகத்திற்கு தன்னை தயார் செய்து கொள்கிறது இன்றைய இளைய தலைமுறை. இந்த தயார் ஓட்டம் பள்ளி பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. அதிக மதிப்பெண் வாங்க வேண்டும், பெரிய வேலையில் அமரவேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு வெறி பிஞ்சு வயதிலேயே நஞ்சாக பதிக்கப்பட்டு விடுகிறது.

ஒரு விளையாட்டு கிடையாது, வேடிக்கை கிடையாது, உறவினர்களின் உறவாடல் கிடையாது. உச்சத்தின் உச்சியை தொட்டு விடவேண்டும் என்ற வேட்கையில் சகலத்தையும் இழக்க தயார் செய்து கொள்கிறான். மெல்ல மெல்ல பதற்றம் அவனை அணைத்துக் கொள்கிறது. பதற்றம் மன அழுத்தத்தையும், மன சோர்வையும் விளைவிக்கிறது.

அவைகளே பல வியாதிகளுக்கு வித்தாகிறது. ஒவ்வொரு மாணவனும் தன் வீட்டு கலாசாரத்தை மறந்து, பள்ளிகளிலும், கல்லூரி களிலும் இருக்கின்ற மாறுபட்ட கலாசாரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்கிறான். `என் மகனான நீ எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்' என்ற பெற்றோர்களின் நிர்ப்பந்தம் நினைத்தாலே இனிக்கும் பள்ளிப்பருவத்தையும், கல்லூரி வாழ்க்கையையும் ஒரு சுமையாக, கசப்பான அனுபவமாக மாற்றி விட்டது.

பெரிய அளவில் பணத்தைக் கொட்டி கல்வி நிறுவனங்களில் பெற்றோர்கள் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் தன்னுடைய மகனோ, மகளோ படும் துன்பங்களை சிந்திக்க மறுக்கிறார்கள். பிள்ளைகளுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி வீடு நிறைய வைத்து விடுகிறார்கள். இதுவே ஒரு சாபமாக மாறுகிறது. தன்னை தயார் செய்து கொள்ள கணினியை முதலில் நாடுகிறான்.

கணினியினால் பல நன்மைகள் இருந்தாலும் இன்றைய இளைஞர்கள் அதை பேஸ் புக், டுவிட்டர், சாட்டிங் இதற்காகத்தான் அதிகம் உபயோகிக்கிறார்கள். தொடர்ந்து கணினியை உபயோகப்படுத்துவதால் கழுத்து எலும்பு தேய்கிறது.

இடுப்பு எலும்பு உராய்கிறது. இதனால் கை, கால்கள் மரத்து போகுதல், தோள்களில் வலி, தலைசுற்றல், கண்பார்வை கோளாறுகள் ஆகிய வியாதிகள் வருகின்றன. தொடர்ந்து கணினி திரையை பார்ப்பதால் கண்களில் பார்வை கோளாறு ஏற்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு 14 முறை துடிக்க வேண்டிய கண் இமைகள், கூர்ந்து பார்த்து கொண்டே இருப்பதால் 4 முறைதான் துடிக்கின்றன.

இதனால் வெள்ளை விழிகளின் நீர்ப்பசை குறைந்து எரிச்சல் உண்டாகிறது. இன்றைய இளைஞர்களின் உணவு முறை முற்றிலும் மாறுபட்டு விட்டது. காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டிய காரணத்தினால் 90 சதவீதம் இளைஞர்கள் காலை உணவை வீட்டில் சாப்பிடுவதில்லை, இதை சரிசெய்ய நண்பர்களுடன் பாஸ்ட் புட், ஜங்க் புட் இவற்றை நாடுகிறார்கள்.

சாப்பிடுபவர்களை கவர்வதற்காகவும், சுவையை கூட்டுவதற்காகவும் மோனோசோடியம் ஹைட்ரேட் என்ற தாது உப்பை சேர்க்கிறார்கள். இது உடலுக்கு மிகவும் கெடுதல். கண்ணை கவரும் வண்ணங்களுக்காக கலர்களை, வெகுநாட்கள் வைத்திருக்க தேவையான ரசாயனங்களை (preservative) சேர்க்கிறார்கள். இவை அனைத்தும் உடலுக்கு கெடுதி. ஜீரண கோளாறுகள் கண்டிப்பாக வரும்.

அதிக கொழுப்புள்ள பொருட்களை சாப்பிடுவதால் உடல் பருத்து விடுகிறது. உடற்பயிற்சி இல்லாததால் எடை கூடுகிறது. எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம், ஈடுபாடு இல்லாத தன்மை ஏற்படுகிறது. இப்போது டீன் ஏஜ் பெண்கள் ஒழுங்காக மாதவிலக்கு வராமல் சிரமப்படுகின்றனர். 70 சதவீதம் டீன் ஏஜ் பெண்கள் pcod (poly cystic ovrian disease) என்ற நோயினால் தாக்கப்படுகின்றனர்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணம் உடல் பருமன் தான். அலட்சிய மனப்போக்கு, ஈடுபாடு இல்லாத தன்மையினால் ஒரு சிலர் தோல்வியை சந்திக்கின்றனர். தோல்வி தரும் மன வேதனையை, மன சுமையை, மன உளைச்சலில் இருந்து மீண்டு வர அவர்கள் மதுவை தேடுகிறார்கள். மது அருந்து வது நாட்டிற்கும், வீட்டிற்கும் கெடுதல் என்று அறிவித்து இருந்தும் இன்றைய நிலவரப்படி சுமார் 50 லட்சம் இளைஞர்கள் தினமும் தமிழ்நாட்டில் குடிக்கிறார்கள்.

குடியினால் வரும் தீமை அனை வரும் அறிந்ததே. சுகமான வாழ்வைத் தேடி, கடைசியில் சுமையான வாழ்க்கையை வந்தடைகிறார்கள். இதில் பல பருவ கோளாறுகளும் சேர்கின்றன. ஆண், பெண் சமத்துவம் என்பதை ஆடைகளிலும் மற்ற வக்கிர செயல்களில்தான் வெளிப்படுத்துகிறார்கள். இனக் கவர்ச்சியால் உணர்ச்சிவசப்பட்டு எத்தனையோ பள்ளி மாணவ, மாணவிகள் சீரழிகிறார்கள், எத்தனையோ குடும்பங்கள் தலைகுனிந்து போகின்றன.

நாகரீகத்தின் இன்றைய சாபக்கேடு செல்போன். இன்றைய இளைஞர்கள் பலரின் உடலின் ஒரு அங்கமாக செல்போன் மாறிவிட்டது. சாப்பிடும்போது, குளிக்கும்போது, ஏன் தூங்கும் போது கூட, தலையணை அடியில் தஞ்சம் புகுந்திருக்கிறது, இந்த கைபேசி. ஒரு ஆராய்ச்சியாளரின் அதிர்ச்சி தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தொடர்ந்து எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்திகள்) அனுப்பிக்கொண்டே இருப்பதால், பல இளைஞர்களின் கட்டை விரல், அதற்கு பக்கத்தில் இருக்கும் விரல்களின் எலும்புகள் தேய்ந்து, எலும்பை சுற்றி இருக்கும் தசை நார்கள் இறுகிபோய் தீராவலி உண்டாகிறது. பலருக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் பழக்கம் இருக்கிறது.

அல்லது பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கின்ற பழக்கம் இருக்கிறது. இதனால் கைபேசியில் இருந்து வரும் ரேடியோ அலைகளினால் காது கேட்கும் திறன் குறைந்து, செவிட்டுத்தன்மை விரைந்து வந்து விடுகிறது- இவை ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் உண்மை. இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் கைபேசியில் இருந்து வரும் அலைகளினால் புற்றுநோய் வரும்.

அந்த அலைகள் எச்சில் சுரப்பிகளை தாக்கும் என்றெல்லாம் கூறுகிறார்கள். குடிப்பழக்கத்திற்கு ஒரு படி மேலோங்கி இன்றைய இளைஞர்களிடையே இருப்பது புகை பிடிப்பது. இதனால் எவ்வளவு தீங்கு வரும் என தெரிந்தே இதற்கு அடிமை யாகிறார்கள். ``நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் தேவை'' என ஆசைப்பட்டான் முண்டாசு கவி பாரதி.

இரும்பென தசைகளும், `எக்கு'வென நரம்புகளையும் கொண்ட 100 இளைஞர் களை என்னிடம் தாருங்கள், இந்தியாவின் தலை எழுத்தை மாற்றி காட்டுகிறேன்'' என்று விழைந்தார் வித்தகர் விவேகானந்தர். ஆனால் இன்றைய இளைய தலை முறையோ கூன் விழுந்த முதுகு, பார்வை குறைந்த கண்கள், தடிமனான ஊளைச் தசை கொண்ட உடல், எதிலும் நாட்டமில்லாத எண்ணம், தன்னம்பிக்கை இல்லாத சிந்தனை யுடன் இருந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவேண்டும். அதற்காக விஞ்ஞான வளர்ச்சியின் நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டு அழிவுப்பாதையில் செல்லாமல் ஆக்கப்பூர்வமான, ஆரோக்கியமான பாதையில் செல்லவேண்டும்.

-டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்,

(மகப்பேறு துறை நிபுணர்) சென்னை.

http://cinema.maalai...k-pain-sms.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தேய்ஞ்சும்.. வலிச்சும் என்ன பயன்.. ஒரு சப்ப பிகரு கூட மாட்ட மாட்டேன்னு.. எத்தினை பேரு கவலைல.. மண்டையே பிழைச்சுப் போயிருக்காங்களோ.. என்னவோ..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.