Jump to content

"எனது இசையில் உருவாகிய பாடல்கள்:- தமிழ்சூரியன்"


Recommended Posts

அன்பு உறவு தமிழ்சூரியனுக்கும் ஊக்கம் கொடுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். அத்துடன் இன்னொரு சிறு தகவலையும் தாழ்மையுடன் சொல்லவிரும்புகின்றேன் சுருக்கமாக தங்களை இன்னும் ஊக்கப்படுத்துவதற்காக வேண்டி,

1990 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் ஈழத்தின் ஓர் அடர்ந்த காட்டுப்பகுதியின் மத்தியில் இருவருடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் தமிழீழத்தில் புகழ்பரப்பிய தமிழீழ இசைக்குழு. கேள்விஞானத்தில் அடிப்படையில் வளர்ந்த அது ஒரிரு வருடங்களில் எட்டமுடையாத வளர்ச்சியை அடைந்தது அதன் மூலம் என்றுமே அழிக்கமுடியா விடுதலை கானங்களை அது எமக்கு தந்திருக்கின்றது.

காட்டில் பிறந்து அது மழலை மொழி பேசி இனிமை தந்திருந்தாலும், நாட்டுக்குள் வந்து கோண்டாவில் நிலா கலையகத்துக்குள் காலடியெடுத்து வைத்த பின்னரே அது தமிழீழ இசையின் புதிய பரிமானத்தை உணர்த்தி காட்டி நின்றது. பின்னர், உசன், ஒட்டங்குளம், புதுக்குடியிருப்பு என பல இடம்பெயர்வுகளுக்குள்ளும் அதனோடு உட்பட்ட பல நெருக்கடிகளுக்குள்ளும் அது நின்றிருந்தாலும் இன்னும் வளர்ந்து தனது ஆற்றலை வெளிப்படுத்தி நின்றது என்பது வரலாறு. இதன் முக்கிய கூறு என்னவென்றால் அதிலிருந்த பாடகர்கள் முதல் தாளவாத்திய கலைஞர்கள் வரை அனைவருமே இசையை முறைப்படியாக கற்றவர்களில்லை ஆனாலும் காலத்தால் அழிக்கமுடியாத காவியகானங்கள் அதனால் படைக்கப்பட்டது. முயற்சி திருவினையாக்கும்.

இதே போன்று தாங்களும் விடாமுயற்சியுடனும் சலிக்காத உழைப்புடனும் பாடுபடின் வெற்றி நிச்சயம். வாழ்க.. வெல்க.

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் உங்களுக்கு நல்ல இசைத் திறமை உள்ளது பாராட்டுக்கள் இன்னும் நன்றாக முயற்சி செய்தால் இன்னும் உயரலாம்.

கேட்கிறேன் என கோவிக்க வேண்டாம் நீங்கள் ஒரு இசையமைப்பாளார் என்ட படியால் உங்களை கேட்கிறேன்...ஏன் ஈழத்து பாடல்களோ அல்லது தமிழீழ பாடல்களோ கிட்ட தட்ட ஒரே மொட்டில் அமைந்த பாடல்களாக இருக்கின்றது?...ஏன் வித்தியாசமான இசையில் பாடல்கள் அமைக்க முயற்சி செய்வதில்லை?

Link to comment
Share on other sites

[size=5]அன்புள்ள யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்.....

உண்மையில் எனக்கு ஒரு புது உற்சாகம் பிறந்திருக்குது...............என்னையும் என் இசைப்பணியையும்,புத்துயிரூட்டிய ,என்னை உற்சாகப்படுத்திய என் அன்பு உறவுகளாகிய உங்களுக்கு சிரம்தாழ்த்தி பணிவுடன் என் நன்றியை கூறிக்கொள்ளும் இந்த வேளையில்...........சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் என்னிடம் உள்ளது......

உண்மையில் இன்று [12 -08 -2012 ]இந்த பாடலை கேட்டபோது என் கண்களிலேயே நீர் கசிந்தது ............முன்பு இந்தப்பாடலை பல பல முறை நான் கேட்டுள்ள போதும் ஆனால் மனதை கொள்ளை கொள்ளும் ,தாயக நினைவுகளின் நிழல்பட்டுச்செல்லும் பொருத்தமான காட்சிகளுடன் இன்று பார்க்கும்போது தான் இதன் தரம் இரட்டிப்பாக என் கண்களுக்கும்,காதுகளுக்கும் தெரிந்தது.அதற்காக இந்த யாழ் களத்தின் அற்புத உறவு.அன்புத்தம்பி சுபேசுக்கு மீண்டும் மீண்டும் பாராட்டுக்களையும்,நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் .....அத்தோடு பரந்துபட்ட ,தாயக சிந்தனையோடும்,பார்வையுடனும் எனக்கு ஆக்கமும்,ஊக்கமும் தந்துகொண்டிருக்கின்ற இன்னொரு யாழ்கள அற்புத உறவு அன்புச்சகோதரி காதலுக்கும் [துளசி] இந்த வேளையில் நன்றியையும்,பாராட்டையும் கூற கடமைப்பட்டவனாயிருக்கிறேன்....

நான் ஏன் மீண்டும்,மீண்டும் நன்றி கூறி அடிக்கடி இந்த இரு சோதரரையும் எழுதுவதயிட்டு உங்களுக்கு ஒரு விடயத்தையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

உண்மையில் நாம் ஒன்று பட்டால் இன்னும் இன்னும் பெரிய பெரிய சாதனைகளை நிலை நாட்டலாம் என்பதற்கு ஓர் சிறு உதாரணமே இன்று இந்தப்பாடலின் சிறப்பான இணைப்பு...........ஆகவே களைதிறமயுள்ள அனைவரும் ஒன்றினைவோம்.........எம் இசையை நாமே ஆளும் நோக்கோடு பல சாதனைகளைப்படைத்து .அவற்றை ஒளிப்பதிவாக்கி [dvd ] அதன் மூலம் அல்லலுறும் எம் தாயக உறவுகளுக்கு நிதி சம்பந்தமாக சிறிய உதவிகள் எதையாவது செய்ய முடியுமா என சிந்திப்போம்..

கலையால் இணைவோம்......கைகளால் சாதிப்போம்........தமிழுக்கும் ,உறவுகளுக்கும் சேவையாற்றும் நல்ல கலஞ்சர்களாக,மனிதர்களாக வாழுவோம்............நன்றி

பணிவுடன் தமிழ்சூரியன்.......[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மிக்க வாழ்த்துக்கள் [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது..உங்கள் முயற்சிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் உங்களுக்கு நல்ல இசைத் திறமை உள்ளது பாராட்டுக்கள் இன்னும் நன்றாக முயற்சி செய்தால் இன்னும் உயரலாம்.

கேட்கிறேன் என கோவிக்க வேண்டாம் நீங்கள் ஒரு இசையமைப்பாளார் என்ட படியால் உங்களை கேட்கிறேன்...ஏன் ஈழத்து பாடல்களோ அல்லது தமிழீழ பாடல்களோ கிட்ட தட்ட ஒரே மொட்டில் அமைந்த பாடல்களாக இருக்கின்றது?...ஏன் வித்தியாசமான இசையில் பாடல்கள் அமைக்க முயற்சி செய்வதில்லை?

நன்றி ரதி அக்கா நீங்கள் எனக்கு தந்த ஊக்கத்திற்கு ................[size=4]அத்துடன் இந்த திரியில் என்னையும் என் அன்புத்தம்பி சுபேசயும் ஊக்குவித்த ,ஊக்குவிக்கப்போகும் அனைவருக்கும் நன்றி சொல்லும் இந்த வேளையில்...........உங்கள் பாராட்டுக்களை இந்த பாடல்களை வெளி வருவதற்கு காரணமாய் இருந்த அத்தனை படைப்பாளர்களும் .......உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றனர். உண்மையில் பல கைகள் சேர்ந்தே இதை சாதித்துள்ளோம் .........இன்னும் சில கைகள் இணைந்தால் இந்த விடயம் முழுமை அடைந்துவிடும்..........ரதி அக்காவின் கேள்வி நியாயமானதோ அல்லது நியாயமில்லையோ என்பதை நான் பகிர்தறிந்து சொல்வது என்பதுக்கப்பால் ............இந்தக்கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் நான் இன்னும் நிறைவான ஓர் இசையமைப்பாளர் இல்லை என்பதால் என்னால் எதையும் கூற முடியவில்லை என்பதை வருத்தத்துடன் கூறுகிறேன் ............மீண்டும் சில வருடங்களின் பின் இதற்கு பதில் கூற விரும்புகிறேன்............நன்றி [/size]

Link to comment
Share on other sites

இதுவரை என்னை வாழ்த்தி ஊக்கம் தந்த என் இனிய யாழ் உறவுகளுக்கும் ,யாழ் உறவு இல்லாமல் உணர்வுடன் என்னை உங்கள் மனத்தால் ஊக்கம் தந்த என் இனிய தமிழ் உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ளும் இந்த வேளையில்........என் இசையில் உருவான பாடல்களை இங்கே பிரசுரிப்பதை நிறுத்தியுள்ளேன் .....யாருடைய திணிப்பும் இல்லை ஆனால் பலருடைய வேண்டுதலுக்கமைய இந்தப்பாடல்களை தாயக மண்ணில் வாழ்க்கைப்பிரச்சனையை எதிர்நோக்கும் எம் இனிய உறவுகளுக்கு உதவும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன் .......இதற்கு என்றும் உங்கள் ஆதரவு எமக்கு இருக்கும் என எதிர்பார்க்கிறேன்...........நன்றி .......ஆனால் இனிய பொழுது என்னும் திரியின் ஊடு உங்களோடு இசை ஊடாக என்றும் இணைந்திருப்பேன் என்று மகிழ்ச்சியாக கூறிக்கொள்கிறேன் ......பணிவுடன் தமிழ்சூரியன் :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இசையின் மூலம், தாயகமக்கள் பலன் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச்சூரியனுக்கு பாரட்டுக்கள்.

Link to comment
Share on other sites

[size=5]வாழ்த்துக்கள் தமிழ்சூரியன். [/size]

super super super

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன் இந்தப்பதிவை நீங்கள் திறந்த காலத்திலேயே பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது ஆனால் பாடலைக் கேட்கும் வசதி இல்லாமல் இருந்தது சில நாட்கள் யாழுக்கு வந்தாலும் பாடலை பொறுமையாக கேட்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இன்றுதான் உங்களுடைய பாடல்களை கேட்டேன் பழைய நினைவுகளை மீட்டிபார்க்க வைக்கிறது. 2005 ல் தாயகத்தில் எங்களூரில் நடந்த ஆலயத் திருவிழா ஒன்றில் நடாத்தப்பட்ட இசைக்கச்சேரிக்கு பாடகர் சாந்தன் வந்து பல பாடல்களைப்பாடினார் அப்போது என்னுடைய சகோதரர்களின் அவாவினால் நான் பாடல் எழுதவேண்டிய நிரபந்தம் ஒன்று ஏற்பட்டது அதனை பாடகர் சாந்தன் அவ்விடத்திலேயே இசையமைத்து பாடினார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் அந்தப்பாடல் ஆலய விசேட நாட்களில் அங்கு ஒலித்தபடியே இருக்கிறது. பாடகர் சாந்தன் நான் எழுதிய பாடலை பாடியதறிந்து தாயகக் கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள் என்னை விடுதலைப்பாடல் எழுதும்படி கூறினார். முதன்முதல் இசையமைப்பதற்காக விடுதலை வேண்டி எழுதிய பாடலை அங்கு அனுப்பிவிட்டு தொடர்பு கொண்டபோது தாயகக் கவிஞர் இறுகிப்போயிருந்தார் பேச முடியாமல் மௌனித்துக் கொண்டார். அந்த விடிகாலை தமிழ்செல்வன் அண்ணாவை விழுங்கியிருந்தது. இந்தச் சம்பவத்தை எந்தக்காலத்திலும் என்னால் மறக்கமுடியாது.

தமிழ் சூரியன் உங்களுடைய பாடலைக் கேட்கும்போது மீண்டும் நாங்கள் அந்ந தருணத்தில் நிற்பதுபோன்ற பிரமை ஏற்படுகிறது. காலம் மாறி கலைஞர்களின் வழிகள் மாறி விடுதலை இசைத்த குயில்கள் விலகி ஓடி மறைந்திட்ட இன்றைய பொழுதில் இந்த உயிர்ப்புடன் அந்த ஈர்ப்புடன் கேட்ட இசையின் பிரசவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்களைப்போன்றோர்தான் இக்காலத்தில் கொஞ்சமேனும் இறுக மூடிய இதயங்களை திறக்க வைக்கமுடியும். தொடர்ந்து இசையமையுங்கள் பாடுங்கள். உங்களால் முடியும் என்பதை இணைத்த திரியில் பதிவிட்ட பாடல்களே அடையாளங்காட்டியுள்ளன. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா...

Link to comment
Share on other sites

தமிழ் சூரியன் இந்தப்பதிவை நீங்கள் திறந்த காலத்திலேயே பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது ஆனால் பாடலைக் கேட்கும் வசதி இல்லாமல் இருந்தது சில நாட்கள் யாழுக்கு வந்தாலும் பாடலை பொறுமையாக கேட்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இன்றுதான் உங்களுடைய பாடல்களை கேட்டேன் பழைய நினைவுகளை மீட்டிபார்க்க வைக்கிறது. 2005 ல் தாயகத்தில் எங்களூரில் நடந்த ஆலயத் திருவிழா ஒன்றில் நடாத்தப்பட்ட இசைக்கச்சேரிக்கு பாடகர் சாந்தன் வந்து பல பாடல்களைப்பாடினார் அப்போது என்னுடைய சகோதரர்களின் அவாவினால் நான் பாடல் எழுதவேண்டிய நிரபந்தம் ஒன்று ஏற்பட்டது அதனை பாடகர் சாந்தன் அவ்விடத்திலேயே இசையமைத்து பாடினார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் அந்தப்பாடல் ஆலய விசேட நாட்களில் அங்கு ஒலித்தபடியே இருக்கிறது. பாடகர் சாந்தன் நான் எழுதிய பாடலை பாடியதறிந்து தாயகக் கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள் என்னை விடுதலைப்பாடல் எழுதும்படி கூறினார். முதன்முதல் இசையமைப்பதற்காக விடுதலை வேண்டி எழுதிய பாடலை அங்கு அனுப்பிவிட்டு தொடர்பு கொண்டபோது தாயகக் கவிஞர் இறுகிப்போயிருந்தார் பேச முடியாமல் மௌனித்துக் கொண்டார். அந்த விடிகாலை தமிழ்செல்வன் அண்ணாவை விழுங்கியிருந்தது. இந்தச் சம்பவத்தை எந்தக்காலத்திலும் என்னால் மறக்கமுடியாது.

தமிழ் சூரியன் உங்களுடைய பாடலைக் கேட்கும்போது மீண்டும் நாங்கள் அந்ந தருணத்தில் நிற்பதுபோன்ற பிரமை ஏற்படுகிறது. காலம் மாறி கலைஞர்களின் வழிகள் மாறி விடுதலை இசைத்த குயில்கள் விலகி ஓடி மறைந்திட்ட இன்றைய பொழுதில் இந்த உயிர்ப்புடன் அந்த ஈர்ப்புடன் கேட்ட இசையின் பிரசவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்களைப்போன்றோர்தான் இக்காலத்தில் கொஞ்சமேனும் இறுக மூடிய இதயங்களை திறக்க வைக்கமுடியும். தொடர்ந்து இசையமையுங்கள் பாடுங்கள். உங்களால் முடியும் என்பதை இணைத்த திரியில் பதிவிட்ட பாடல்களே அடையாளங்காட்டியுள்ளன. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

வணக்கம் சாகாறா அக்கா ............

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் .எனக்கு ஊக்கம் தந்ததிற்கும்........

உங்கள் கவிதை வரிகளை பலமுறை நான் கேட்டு உங்களின் மகத்தான திறமையை

என் மனதில் போட்டு வைத்திருந்தேன் .........நேரம் வரும்போது பேசலாம் என்று காத்திருந்தேன் .அதற்குரிய நேரம் கனிந்துவிட்டபடியால் பேசுகிறேன் .............எம் தாயக கவி மதிப்புக்குரிய புதுவையின் பாராட்டை பெற்ற நீங்கள் உங்கள் ஆக்கத்தை பாடலாக உருவாக்க முடியாத அந்த சூழல் வருந்ததக்கது....அன்று அந்த சம்பவம் தமிழர்களுக்கு காலத்தின் கொடுமையான காலம் .........உங்கள் அற்புதமான வரிகளுக்கு இந்த அடியேன் இசை வடிவம் கொடுக்க விரும்புகிறேன் ........உங்களுக்கு இதில் ஏதாவது ஆட்சேபனையும் இல்லாவிட்டால் உங்கள் வரிகளை எனக்கு அனுப்பலாம் .........முழு மூச்சாக முயற்சிக்கிறேன் ..... [size="2"]எமது திறமைகளை [/size] நாம் ஒன்றிணைந்து வளர்த்து அதன்மூலம் எம் தமிழுக்கு நாம் பெருமை சேர்ப்போம். நன்றி

வாழ்த்துக்கள் அண்ணா...

வணக்கம் பையா 26 ............

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் .எனக்கு ஊக்கம் தந்ததிற்கும்........

Link to comment
Share on other sites

  • 2 years later...

பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவின் நினைவாக 7 வருடங்களுக்கு முன் எம்மால் உருவாக்கப்பட்ட இந்த நினைவுப்பாடலை இங்கே அவருக்கு அஞ்சலியாக சமர்ப்பிக்கிறோம் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.