Jump to content

உயிரொன்று கரைகிறது.... இளங்கவி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]உயிரொன்று கரைகிறது...[/size]

[size=3]கவிதை - இளங்கவி[/size]

பெயரில் சிவந்தன் - அவன்

தமிழீழத்தின் சிவந்தமண்...

தன் இனம் சிறிது சிறிதாய்

அழிவதைப் பார்க்கமுடியாமல்

தம் உயிரையே உருக்கி

நம் உரிமையை

உரக்கச் சொல்லத் துணிந்தவன்.....

அன்று...

ஆயிரம் மைல்கள் நடந்தான்

அவன் உடலிலன்று

வலுவிருந்தது....

இன்று....

உணவையும் நீரையும்

மட்டும் கொண்டு

இயங்கும் உயிர்க் கோளத்தையே

உருக்கத்துணிந்து விட்டான்

அதை உயிரின் எல்லைவரை

உருக்கியும் விட்டான்...

பெற்றோரை மறந்து...

மணம் கொண்ட

மனையாளை மறந்து....

தன் உயிரணுவில் உதித்த

பிள்ளையையும் மறந்து......

உரிமையை இழந்து தவிக்கும்

உனக்கும் எனக்குமாய்

திலீபன் வழினின்று

தன்னையே

உருக்கிக் கொண்டிருக்கிறான்...

ஆனாலும் நாம்

உடலுக்கு மிஞ்சிய உணவு.....

தமிழ் உணர்வு மழுங்கிய நினைவு.....

அவன் கண்களைப் பார்த்து

ஆறுதல் வார்த்தை கூட

சொல்லவே முடியாத

நிலையா உனக்கு தமிழா....!

எம் உணர்வு செத்துவிட்டால்

நீ எப்படி ஈழம் காண்பாய்....

அவன் ஒற்றைத் தமிழனாய்

இருந்து உனக்குப் போராட....

நீயோ லட்சம் தமிழனாய் இருந்தும்

ஒற்றைவிரல் விட்டு

எண்ணும் எண்ணிக்கையில் கூட

அவனுடன் இல்லாவிட்டால்

எப்படி உன் இனம்

அழிவதைக் காப்பாய்.....

எப்படி உன் உரிமைப் போரை

ஒன்றிணைக்கப் பாடுபடுவாய்....

எப்படி ஒன்று படுவாய்.......

சிந்தியடா தமிழா....!

சிவந்தன் காதுகளில்

உன் உரிமைப் போரில்

நாமும் பங்கெடுப்போம் என்று

சொல்லிவாடா தமிழா...!

வானம் இடிந்து விழுந்தாலும்

பகைவர் கூட்டம்

எம்மை நெரித்தாலும்.....

பன்னாடும் எம்

உரிமைப் போரை மறுத்தாலும்

ஓர் தீலிபனல்ல

நாம் பல லட்சம் திலீபனாய்....

நாம் ஒற்றை

சிவந்தனல்ல..

பல லட்சம் சிவந்தன்களாய்

புற்றீசல் போல் புறப்படுவோமென்று

சொல்லிவாடா தமிழா....!

உயிரைக் கரைக்கும்

உன் இனக் குழந்தயொன்று....

தன் இனமே தன்னை கைவிட்டதே

எனும் நினைவில்

அவன் மனத்தையும் உருக்கிவிடாதே.....

அவன் மாற்றான் பிள்ளையல்ல

நம் மண்ணீன்ற பிள்ளை...

அவன் மனவுறுதி தேவை

என் மண்மீட்புப் போருக்கு.....

இளங்கவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி ஐயா

சிவந்தனை யெனீவா நோக்கிய பயணத்தின்போது 4 தரம் சந்தித்தேன்

மிகவும் துணிச்சலான தமிழருக்கான போராட்டப்பாதையில் ஆணித்தரமான கொள்கைப்பிடிப்புள்ள இளைஞன்.

அவரது முயற்சிகள் வெற்றியடையணும் என்று மனதார வாழ்த்துகின்றேன்.

எமக்காக தன்னை உருக்கும் அந்த இளைஞனுடன் இறைவன் துணையிருக்கணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இழந்த உயிர்கள் போதும்,இனிமேலும் உயிர் இளப்பு போராட்டங்கள் வேணாமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் வேறை காலம் நேரம் தெரியாமல், நாங்கள் இப்ப சமர் ஹோலிடேயிலை கசூரினா பீச்சிலை பியர் அடிச்சு,உருண்டு பிரண்டு நல்லூர் திருவிழாவிலை பிகர்பார்த்து நயினை நாக பூசனி அம்மன் கோயில்லை சோத்து ஆன்டிகளின் சைஸ்(இடுப்பு ^_^ ) பார்த்து பிறவிப்பயனை அடைஞ்சு கொண்டு இருக்கும் போது உவனுக்கு வேலையில்லாமல் சும்மா உண்ணாவிர்தம்,கிண்ணாவிரதம் எண்டுகொண்டு. :unsure:

ஒரு வேளை உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டால் கூட தியாகிகள்,வீரவேங்கைகள் பட்டியலில் பத்தோடை பதினொன்டா படம் வச்சு,மாலை போடுவம், முடிஞ்சால் ஒருசில வருடங்களுக்கு ஆண்டுக்கொரு கவிதை வடிக்கிறதோடை எங்கண்டை தேசியக்கடமை முடிஞ்சிடும். அப்புறம் என்ன????? <_<^_^

டிஸ்கி: நல்ல ஆக்சன் படம் போடுங்கப்பா வந்து விசிலடிக்கிறம். :o:wub::icon_idea:

[size=3](திருத்தம்: இறுதி வசனம் சேர்க்கப்பட்டுள்ளது.)[/size]

Link to comment
Share on other sites

சிவந்தன் அண்ணாவை பற்றிய உங்கள் கவிதைக்கு நன்றி. ILC வானொலியில் கதைக்கும் போது மிகவும் சோர்வாக கதைத்தார்.

யாயினி அக்கா கூறியது போல் உயிரிழப்பு போராட்டங்களை நானும் விரும்பவில்லை.

காரணம் மனிதனின் உயிரை மதிப்பவர்கள் தான் உண்ணாவிரதத்திற்கும் மதிப்பு கொடுப்பார்கள். ஆனால் இன்றைய நிலையில் உண்ணாவிரதம் இருப்பவர் இறந்தாலும் பரவாயில்லை என்று கண்டும் காணாமலும் இருக்கும் உலகின் மத்தியில் உண்ணாவிரதத்தை மேற்கொள்வதால் எந்த பிரயோசனமும் கிடைக்க போவதில்லை.

இவர் தனது உண்ணாவிரதத்தால் ஈழத்தமிழரின் போராட்டத்தை உலகத்திற்கு மேலும் பரப்புரை செய்யலாம். ஆனால் இவர் இறந்தால் கூட இவர் போராடியதற்கு பலனாக எவரும் உரிமையை மீட்டுத்தர போவதில்லை. உண்ணாவிரதம் இருந்து உயிரை இழப்பதிலும் பார்க்க உயிருடன் இருந்து வேறு பல போராட்டங்களை செய்வது மேல்.

ஆனாலும் நிச்சயம் தமிழீழ பற்றுடன் இருக்கும் சிவந்தன் அண்ணாவுக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள், இளங்கவி!

எமது, உள்ளக்குமுறல்களை, இந்த உண்ணாவிரதங்கள் மூலம் வெளிக்காட்ட முயல்கிறோம்!

ஆனாலும், உயிரை உருக்குபவர் சிலர்!

உருகிப் போன உயிர்களை விலை பேசுபவர் பலர், என்ற நிலையில், சாணேற முழம் சறுக்குகின்றது!

இந்த உண்ணாவிரதங்கள், எமதினத்தை ஒன்று படுத்துமேனின், அது எமக்கு வெற்றியே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி இளங்கவி

ஆயுதப் போராட்டம், அகிம்சைப் போராட்டம், இதையெல்லாம் விடுத்து

அறிவியல் போராட்டம் என ஒன்றை நாங்கள் ஆரம்பித்தால் என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதைக்கு நன்றி ஐயா

சிவந்தனை யெனீவா நோக்கிய பயணத்தின்போது 4 தரம் சந்தித்தேன்

மிகவும் துணிச்சலான தமிழருக்கான போராட்டப்பாதையில் ஆணித்தரமான கொள்கைப்பிடிப்புள்ள இளைஞன்.

அவரது முயற்சிகள் வெற்றியடையணும் என்று மனதார வாழ்த்துகின்றேன்.

எமக்காக தன்னை உருக்கும் அந்த இளைஞனுடன் இறைவன் துணையிருக்கணும்.

விசுகு அண்ணா

சிவந்தனைப் பார்த்தபோது அவன் உடல்தான் சோர்ந்துபோயுள்ளதே தவிர அவன் உள்ளம் சோர்ந்ததாகத் தெரியவில்லை, அப்படியொரு மனத்திடமுள்ளவனாகத் தான் தெரிகிறான்...

அவன்முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை இழந்த உயிர்கள் போதும்,இனிமேலும் உயிர் இளப்பு போராட்டங்கள் வேணாமே....

யாயினி

உலகம் அகிம்சை போராட்டத்துக்கும் கூட தற்போது மதிப்பளிக்காத இந்தக் காலகட்டத்தில் ஒரு இளைஞன் தனதுயிரைப் பணயம் வைத்து ஒரு போராட்டத்தில் ஈடுபாடிருக்கிறான என்பது அவன் தாய்மண்ணில் வைத்திருக்கும் பற்றையும் அவன் மனவுறுதியையும் காட்டுகிறது.

எந்தவொரு உயிரும் அநியாயமாகப் பிரியக்கூடாது என்பதுதான் எல்லோருடைய விருப்பமும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உயிரொன்று கரைகிறது...[/size]

[size=3]கவிதை - இளங்கவி[/size]

வானம் இடிந்து விழுந்தாலும்

பகைவர் கூட்டம்

எம்மை நெரித்தாலும்.....

பன்னாடும் எம்

உரிமைப் போரை மறுத்தாலும்

ஓர் தீலிபனல்ல

நாம் பல லட்சம் திலீபனாய்....

நாம் ஒற்றை

சிவந்தனல்ல..

பல லட்சம் சிவந்தன்களாய்

புற்றீசல் போல் புறப்படுவோமென்று

சொல்லிவாடா தமிழா....!

உயிரைக் கரைக்கும்

உன் இனக் குழந்தயொன்று....

தன் இனமே தன்னை கைவிட்டதே

எனும் நினைவில்

அவன் மனத்தையும் உருக்கிவிடாதே.....

அவன் மாற்றான் பிள்ளையல்ல

நம் மண்ணீன்ற பிள்ளை...

அவன் மனவுறுதி தேவை

என் மண்மீட்புப் போருக்கு.....

இளங்கவி

படைப்பிற்குப் பாராட்டுகள்!

வரிகள் மனங்களில் நிறையட்டும்

மண்மீட்க என்ன செய்வோம்

என்றனைவரும் சிந்தை கொண்டெழுகவே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா

சிவந்தனைப் பார்த்தபோது அவன் உடல்தான் சோர்ந்துபோயுள்ளதே தவிர அவன் உள்ளம் சோர்ந்ததாகத் தெரியவில்லை, அப்படியொரு மனத்திடமுள்ளவனாகத் தான் தெரிகிறான்...

அவன்முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்...

உண்மைதான்.

இங்கு அவன் நடந்து வந்தநேரம் நாம் பல கூறுகளாக நின்றிருந்தோம். அது அவனையும் பாதித்திருந்ததை அறிந்து அவனுக்கு அந்த குறை தெரியாமல் பார்த்துக்கொண்டோம்.

(எமது ஊர்ச்சங்கம் ஊடாக).

தேவையான சகலதும் செய்த கொடுத்தோம்.

கடைசியாக பரிசிலிருந்து 150 கிலோமீற்றர் சென்ற பின்பும் தேவையான பொருட்களுடன் போய்ச்சந்தித்து வழியனுப்பியபோது அண்ணா யெனீவாவில் உங்களை நான் தேடுவேன் என்றான். யெனீவாவில் என்னைக்கண்டதும் தோழில் சாய்ந்தான். கண்கள் பனித்திருந்தன.

அவனது கொள்கைப்பிடிப்பும் தேசியம் மீதான பற்றும் எல்லோருடனும் அன்பாக பேசும் தன்மையும் மிகவும் என்னைக்கவர்ந்தன. அந்தவகையில் அவனை எம் சொத்தாகவே பார்க்கின்றேன். இவர்களை நாம் இழந்துவிடக்கூடாது என்பதே எனது வேண்டுதல். ஆனாலும் அவர்கள் தானே இவற்றையும் செய்யவேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]கவிதைக்கு பாராட்டுகளும் நன்றிகளும் இளங்கவி . [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.