Jump to content

" துகிலுரியும் தேவதைகள் "


Recommended Posts

கவிதையின் கவிதைகள்

love-pain.jpg

love-pain.jpg

அழகிற்கும் மென்மைக்கும் பிறந்த பெண்மைகள்,

உள்ளங்களை வெண்மையாய் உடுத்திக்கொள்ளும்

கள்ளங்களை அறிந்துகொள்ள...

கடந்துபோகும் காலங்களால் மட்டுமே முடிகிறது!

செல்லக் கதைபேசி எண்ணங்கவரும்,

வண்ணத் தேவதைகளின் இதயங்கள் கறுப்புத்தான்!

சிந்தை சிதைக்கும் மடந்தைகளின் எண்ணங்களில்...

ஆடவர் இதயங்கள் விளையாட்டுப் பொருள்தான் போல!?

ஆரம்பம் என்பது அழகாய்த்தான் ஆரம்பிக்கிறது

முடிவுகள் மட்டுமேனோ முடிவுகட்டிச் செல்கிறது!

விடிவுகள் இல்லாத வாழ்வினையும் கண்ணீரையும்

காதல் பரிசாக கொடுத்துவிட்டுச் செல்வார்... நிறம் மாறும் தேவதைகள்!

காதலின் பெயரால் கட்டிப்போடும் தேவதைகள்

கல்லறைக்கான பாதையையும் காட்டிவிட்டுச் செல்வார்!

காரணமில்லாக் காரணங்களுக்காக

காதல் துகிலுரியும் தேவதைகளைவிட...

காசுக்காய் துயில்கொள்ளும் சிவப்பு தேவதைகளிடம்

கொஞ்சந்தன்னும் நேர்மை இருக்கும்!

Link to comment
Share on other sites

மீண்டும் ஒரு கவிதையின் கவிதையை இணைத்ததிற்கு நன்றி.............

ஆனாலும் மற்றைய கவிதைகளுடன் இசைந்த

என் மனம் இதில் மட்டும் இசைவடைய மறுக்கிறது .ஏனனில் காதல் என்பது ஆணினதும், பெண்ணினதும் மனது சம்பந்தமான பிரச்சனை.....காதல் என்னும் அஸ்திவாரம் பலமாக அமைய உண்மை ,நேர்மை கண்ணியம், புரிந்துணர்வு,விட்டுக்கொடுப்பு போன்ற கலவைகளை சேர்த்து கட்டும்போது தான் அது பலமான அஸ்திவாரமாக அமைந்துவிடும்.அதை விட்டு,கவர்ச்சி ,காமம்,அழகு,சுத்துமாத்து இவர்ரைப்போட்டு கட்டும்போது அது உடைந்து விழுந்துவிடும்........இது இரு பாலார்க்கும் பொருந்தும்.ஆகவே இப்படியான முறையில் காதலை அணுகுவோர் கூட நீங்கள் கீழே குறிப்பிட்ட சிவப்பு பெண்களுக்கு நிகரானவர்களாகவே பார்க்கப்படும் [ சிவப்பு பெண் ,ஆண் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் சுய படைப்புக்களை படிப்பவர்களில் நானும் ஒருத்தி...ஆனால் அண்மைய காலங்களில் அவரின் எழுத்தின் கோணம் மாறிப் போய் கொண்டு இருப்பதனால் கவிதையின் கவிதைப் பகுதிக்குள் வர விரும்புவதில்லை..அதுவும் இந்தக் கவிதை பெண்களை துச்சாதனிகளாக,கறுப்பு மனங்களாக,சிவப்பு தேவதைகளாக சித்தரித்து இருப்பது மனதுக்கு சந்தோசத்தை தரவில்லை என்பதை கவிதை நன்கு புரிந்து கொள்ளவேணும்..பெண் என்பவளுக்கு இவற்றில் பங்கு இருக்கிறது என்றால் சரி சமமாக ஆணுக்கும் கண்டிப்பாக இருக்கும்...இருவர் சம்பந்தப்படும் ஒரு வாழ்வு நிலைக்குள் ஒருவரை மட்டும் சாடுவது முறையல்ல...பெண்கள் ஏதோ ஒரு உறவுமுறையுடன் உங்கள் வீடுகளிலும் கண்டிப்பாக இருப்பார்கள்,இருக்க வேண்டும்..அவர்களை ஒருமுறை திரும்பி பார்த்துட்டு இப்படியான எழுத்துக்களை எழுதுங்கள்.....ஒருவர்,இருவர் விடும் பிழைகளுக்காக ஒட்டு மொத்த பெண்களையும் சாடாதீர்கள்..பணத்தையும் வீணான ஆடம்பர வாழ்வையும் செய்து கொடுப்பவர்களும் ஆண்கள் தான்......உண்மையான இதய சுத்தியோடு எந்த தருணத்திலும் ஏமாற்றம் என்ற ஒன்றைக் கொடுக்காமல் வாழ விரும்பும் ஆணோ,பெண்ணோ உயிர் உள்ளவரை தங்களை மாற்றிக் கொள் முயற்சிக்க மாட்டார்கள்..

இந்தக் கவிதைகளை எழுதி வேறு எங்கோ அனுப்பி,அங்கிருந்து இவ்விடம் வந்து சேருவதும் கதை.கவிதை போன்றவற்றை ரசிக்கும் எம்போன்றவர்களை ஒதுங்கவே செய்கிறது...விரும்பினால் படிக்கலாம்,விருப்பம் இல்லாட்டிக்கு போகலாம் என்று சொல்லவும் கூடும்..ஆனால் இதுவரையில் கவிதையிடம் இருந்து எந்த விதமான காட்டமான எழுத்தையும்,பழகுதலையும் காணாதவள் என்ற காரணத்தினால் என் கருத்தை பதிவிடுகிறேன்...கவிதை என்னும் நட்பு கவிதையாகவே இருக்க வேண்டும் என்று விரும்பிறன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எய்தவனை விடுத்து

அம்பை நொந்து என்ன பலன்.......??? :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேவதை, காரணமில்லாமல், காதலைத் துகிலுரிய முனைந்தால், அதற்கு ஒரு காரணம் கட்டாயம் இருக்கும்!

அதை உங்களுக்கு, அந்தத் தேவதை சொல்லவிரும்பாமல் இருக்கலாம்!

அனேகமாக, நீங்கள் புண் படக்கூடாது, என்பதற்காகக் கூட இருக்கலாம்!

நீங்கள் தேடும் தேவதையை விடவும், உங்களைத் தேடும் தேவதாசியே மேல், என்பது அடியேனின் கருத்து! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன் , யாயினி , விசுகர் , புங்கையூரான் உங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் . உங்கள் கருத்துக்களுக்கான பதில்களை இந்தக் கவியைப் படைத்தவர் நிட்சயம் தருவார் . இதில் எனது பாத்திரம் விசுகர் கூறியது போல வெறும் அம்பு மட்டுமே .

Link to comment
Share on other sites

அழகிற்கும் மென்மைக்கும் பிறந்த பெண்மைகள்,

உள்ளங்களை வெண்மையாய் உடுத்திக்கொள்ளும்

கள்ளங்களை அறிந்துகொள்ள...

கடந்துபோகும் காலங்களால் மட்டுமே முடிகிறது!

செல்லக் கதைபேசி எண்ணங்கவரும்,

வண்ணத் தேவதைகளின் இதயங்கள் கறுப்புத்தான்!

சிந்தை சிதைக்கும் மடந்தைகளின் எண்ணங்களில்...

ஆடவர் இதயங்கள் விளையாட்டுப் பொருள்தான் போல!?

ஆரம்பம் என்பது அழகாய்த்தான் ஆரம்பிக்கிறது

முடிவுகள் மட்டுமேனோ முடிவுகட்டிச் செல்கிறது!

விடிவுகள் இல்லாத வாழ்வினையும் கண்ணீரையும்

காதல் பரிசாக கொடுத்துவிட்டுச் செல்வார்... நிறம் மாறும் தேவதைகள்!

காதலின் பெயரால் கட்டிப்போடும் தேவதைகள்

கல்லறைக்கான பாதையையும் காட்டிவிட்டுச் செல்வார்!

காரணமில்லாக் காரணங்களுக்காக

காதல் துகிலுரியும் தேவதைகளைவிட...

காசுக்காய் துயில்கொள்ளும் சிவப்பு தேவதைகளிடம்

கொஞ்சந்தன்னும் நேர்மை இருக்கும்!

ஒரு தேவதாசுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தேவதைகளா? ஒருவர் எத்தனைபேரை காதலித்துவிட்டு (அல்லது கற்பனை செய்து பார்த்துவிட்டு) இப்படி எழுதுகின்றார்? யாயினி மேலே கூறியதுபோல் ஒருத்தியை வைத்து முழு உலகையே எடைபோடுவது மோசமானது.

காதலில் தோல்வி மிகவும் துயரமான அனுபவம். ஆனால், இரண்டுபக்க தோற்றங்களையும் பார்க்கவேண்டும். ஒருவரின் கதையை மட்டும் கேட்டுவிட்டு மற்றவரைமட்டும் சாடமுடியாது. இந்தக்கவிதைக்கு சம்மந்தப்பட்ட தேவதை பதிற்கவிதை எழுதினால் எப்படியமையும் என்று எண்ணிப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

[size=5]கவிதை, ஏமாற்றும் பெண்களைத் தானே எழுதியிருக்கின்றார்!தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ள வேண்டியது தானே!![/size]

கவிதை வந்து விளக்கமளிப்பார் என்று நம்புகின்றேன்!!

Link to comment
Share on other sites

அவர் தான் ஏமாற்றும் பெண்களை பற்றி மேலே கவிதையில் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளாரா? கவிதை வந்து விளக்கமளிப்பார் என்று நம்புவதாய் கூறியபடி கவிதை எழுதிய கவிதைக்கு நீங்களே விளக்கமும், வியாக்கியானமும் பொழிப்புரையும் வழங்குகின்றீர்கள், நன்றாக உள்ளது.

ஊர்ப்புதினத்தில்தான் மொக்கை செய்திகளை போட்டுவிட்டு அதற்கு ஆதரவு கொடுக்கும் வகையில் கருத்துக்களை எதிர்பார்க்கின்றார்கள் என்று பார்த்தால் ஆக்கற்களத்திற்கும் இந்த நிலைவந்துவிட்டது.

ஒருவர் அனுப்புவதை வாங்கி ஒட்டுவதற்கு ஒருவர்.

ஒட்டப்படுவதற்கு வியாக்கியானமும், பொழிப்புரையும் கொடுப்பதற்கு இன்னொருவர்.

அதற்குள் தொப்பியும், சப்பாத்தும், கோவணமும் என்று உருவகங்களும், உவமானங்கள் வேறு.

யாழ் கருத்துக்களம் நன்றாகத்தான் முன்னேறிச்செல்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.