Jump to content

பிரித்தானியா மேஜர் சிட்டு அரங்கில் சாந்தி வவுனியனின் கவிதை நூல் வெளியீடு.(படங்கள்)


Recommended Posts

[size=6]http://ttnnews.com/35481.html[/size]

பிரித்தானியா மேஜர் சிட்டு அரங்கில் சாந்தி வவுனியனின் கவிதை நூல் வெளியீடு.(படங்கள்)

IMG_4271.jpg

பிரித்தானியாவில் சாந்தி வவுனியனின் ‘கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு’ கவிதைநூல் அறிமுகவிழா இடம் பெற்றது.

மேஜர் சிட்டுவின் 15ம் ஆண்டு நினைவை முன்னிட்டு மேஜர் சிட்டுவுக்கு சமர்ப்பணமாக இக்கவிதைநூல் 04.08.2012 அன்று வெளிவந்துள்ளது.

போரில் உயிரிழந்த மக்களுக்கும் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. லெப்.கேணல் ராதா அவர்களின் தந்தையார் கனகசபாபதி அவர்கள் விளக்கேற்றி வைக்க மேஜர் சிட்டுவின் திருவுருவப்படத்திற்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறந்த பாடகனாகவும் சிறந்த கலைஞனாகவும் வாழ்ந்த போராளி சிட்டுவின் நினைவுகளைத் தாங்கிய நிகழ்வில் நிகழ்வை தலைமையேற்று சிறப்புரையாற்றி நிகழ்வைத் தொகுத்து வழங்கிய சந்திரிக்கா சிட்டுவைப்பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

சிட்டுவுடன் ஒன்றாகப் பயிற்சி முடித்து ஒன்றாக அரசியல் பணி செய்த காலங்களை சந்திரிக்கா தனதுரையில் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையினை ஜெயக்குமார் மகாதேவன் ஆற்றினார்.

கவிதைநூலின் முதல் பிரதியை லெப்.செல்லக்கிளியம்மானின் சகோதரரும் தொழிலதிபருமான சூரி அவர்கள் வெளியிட்டு வைக்க தொழிலதிபர் கண்ணன் அவர்கள் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

சிறப்புப்பிரதிகளை ரமேஷ் வவுனியன் வழங்க மூத்த பெண் போராளிகளில் ஒருவரான சீதா ஜீவன், சுதாஜினி றவி, எல்லாளன் திரைப்பட இயக்குனர் சந்தோஸ், வல்வை நண்பர்கள் சார்பில் உதயணன் ,லெப்.கேணல்.ராதாவின் சகோதரி சகிலா,மானுடவியல் ஆய்வாளர் விசாகன் , மூத்த பெண் போராளி சந்திரிக்கா, தமிழ்த்தகவல்நடுவம் நிறுவனர் வரதகுமார், மற்றும் கணேஸ், திருமலை பாலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூல் மதிப்பீட்டுரையினை நவஜோதி யோகரட்ணம் அவர்கள் வழங்கினார்.

நிகழ்வின் நிறைவாக நூலாசிரியரின் பதிலுரையுடன் நேசக்கரம் மனிதாபிமானப் பணிகள் பற்றிய அறிமுகத்தோடும் தொடர்ந்த தாயக மக்களுக்கான பணிகள் பற்றிய விபரங்களும் பகிரப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.

IMG_4236.jpg

IMG_4245.jpg

IMG_4223.jpg

IMG_4248.jpg

IMG_4278.jpg

[size=6]http://ttnnews.com/35481.html[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அக்கா. :)

Link to comment
Share on other sites

ஒதுங்கி அல்லது ஒதுக்கப்பட்டு இருந்த அனைத்து தமிழ் உணர்வாளர்களையம் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அக்கா. :)

நன்றிகள் நெடுக்கு.

ஒதுங்கி அல்லது ஒதுக்கப்பட்டு இருந்த அனைத்து தமிழ் உணர்வாளர்களையம் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

மாற்றம் என்பது என்னிலிருந்து தொடங்க வேண்டும்.

Link to comment
Share on other sites

ஆக்கபூர்வமான பணியை ஆரவாரம் , வெற்றுவேட்டுகள் , தாரைதப்பட்டைகள் இல்லது நடத்திய உங்கள் தன்னடக்கம் பாராட்டப்படவேண்டியதே . தொடருங்கள் உங்கள் பணியை சாந்தி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா புத்தக வெளீயிடு இனிதே நடந்ததையிட்டு மகிழ்ச்சி...சாத்திரி சொன்ன மாதிரி அனைத்து தமிழ் உணர்வாளர்களையம் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறீர்கள் ஆனாலும் சில நெருடல்கள்;

பார்வையாளர்களை அரங்கில் காணவில்லையே?

அழைப்பிதழில் தயானந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என போட்டு இருந்தது எங்கே அவரைக் காணவில்லை?

மேஜர் சிட்டு அரங்கம் லண்டனில் எங்கு உள்ளது?

உங்கள் இந்த நூலை இணையத்திலோ அல்லது லண்டனில் எங்கு வாங்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், சாந்தி!

விசாகனை, விசாரித்ததாகச் சொல்லுங்கள்! :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அக்கா..

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் சாந்தி அக்கா அனைத்தும் சிறப்புற இனிப்புற நடைபெற

வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சாந்தி அக்கா. :)

([size=2]எப்படி கல்லா கட்டிச்சுதோ????[/size] :rolleyes:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வாழ்த்துக்கள் சாந்தி ..[/size]

Link to comment
Share on other sites

கருத்திட்ட நெடுக்ஸ், சாத்திரி , கோமகன் , ரதி ,தமிழ்சிறி , புங்கையூரான் , சைக்கலைஞன், சுபேஸ், தமிழ்சூரியன், ஜீவா, தமிழரசு அனைவருக்கும் மிக்க நன்றிகள். புத்தகத்தை பெற்றுக் கொள்ள விரும்புவோர் தொடர்ப கொள்ளுங்கள். ஒரு புத்தகத்தின் விலை 5€. பிரித்தானியாவிலிருந்து புத்தகத்தை பெற விரும்புவோருக்கு பிரித்தானியாவிலிருந்து அனுப்பி வைக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா புத்தக வெளீயிடு இனிதே நடந்ததையிட்டு மகிழ்ச்சி...சாத்திரி சொன்ன மாதிரி அனைத்து தமிழ் உணர்வாளர்களையம் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறீர்கள் ஆனாலும் சில நெருடல்கள்;

பார்வையாளர்களை அரங்கில் காணவில்லையே?

அழைப்பிதழில் தயானந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என போட்டு இருந்தது எங்கே அவரைக் காணவில்லை?

மேஜர் சிட்டு அரங்கம் லண்டனில் எங்கு உள்ளது?

உங்கள் இந்த நூலை இணையத்திலோ அல்லது லண்டனில் எங்கு வாங்கலாம்?

சாந்தி அக்காவின் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது..அதந்த வைகயில் அவருக்கு என் நன்றிகள் எப்போதும் இருக்கும்..எனக்கும் உங்களைப் போல் இதே ஆதங்கம் இருந்தது ரதி..நான் நினைத்து கொண்டு இருந்தது புத்தக வெளியீடு என்றால் ஓரளவுக்கு தன்னும் மக்கள் வந்திருப்பார்கள்,ஆதரவு இருந்திருக்கும் என்று நினைத்தேன்..படங்களை பார்த்துட்டு இவ்வளவு பேர் தானா லண்டன் வாழ் மக்கள் என்று நினைக் தோன்றியது..ஆனாலும் வீட்டில் சும்மா நின்றாலும் எங்களுக்கு நேரம் இல்லை என்று சொல்லி பல நல்ல விடையங்களுக்கு போவதை தவிர்க்கப் பழகிக் கொண்டவர்கள் எங்கள் மக்கன்..யாரை நாம் நோக முடியும்...
Link to comment
Share on other sites

சாந்தி அக்கா புத்தக வெளீயிடு இனிதே நடந்ததையிட்டு மகிழ்ச்சி...சாத்திரி சொன்ன மாதிரி அனைத்து தமிழ் உணர்வாளர்களையம் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறீர்கள் ஆனாலும் சில நெருடல்கள்;

பார்வையாளர்களை அரங்கில் காணவில்லையே?

அழைப்பிதழில் தயானந்தா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என போட்டு இருந்தது எங்கே அவரைக் காணவில்லை?

மேஜர் சிட்டு அரங்கம் லண்டனில் எங்கு உள்ளது?

உங்கள் இந்த நூலை இணையத்திலோ அல்லது லண்டனில் எங்கு வாங்கலாம்?

பார்வையாளர்களை எடுத்த கமராக்களில் தெளிவான படங்கள் இல்லை. அதனால் அவற்றை சேர்க்க முடியாபோய்விட்டது.

லண்டனில் உள்ள தோழியொருவர் தனது கமராவில் எடுத்திருந்த படங்களில் சபையோரின் படங்கள் தெளிவாக வந்திருப்பதாக சொன்னாள். ஆயினும் உரிய நேரத்தில் படங்கள் வந்து கிடைக்காமையால் செய்தியில் இணைக்க முடியாது போய்விட்டது.

தயானந்தா அவர்களுக்கு நிகழ்வு நேரத்துக்கு தயானந்தாவால் வரமுடியாதென தெரிவித்திருந்தார். வேலையிடத்தில் கட்டாயம் அன்று பணியில் இருக்க வேண்டியிருந்தமையால் தயானந்தா குறித்த நேரத்துக்க வருகைதரமுடியாது போனது.

ஆயினும் சந்திரிக்கா தலைமையேற்றது நிகழ்வுக்கு பொருத்தமாகவும் அமைந்திருந்தது.

புத்தகத்தை வடலியில் வாங்கலாம். அல்லது பிரித்தானியாவில் தமிழ்த்தகவல்நடுவத்தில் பெற்றுக் கொள்ளலாம்.அல்லது தபாலில் அனுப்பிவைக்க முடியும்.

மேஜர் சிட்டு அரங்கம் லண்டனில் எங்கு உள்ளது?

நிகழ்வு நடக்கும் அரங்கத்தை ஒவ்வொருவரரின் பெயரில் நடத்த முடியும். அந்த வகையில் இந்தக் கவிதைநூல் மேஜர் சிட்டுவிற்கு சமர்ப்பணமாக அவரது 15ம் ஆண்டு நினைவு ஆண்டில் வெளியிட்டமையால் நிகழ்வு அரங்கத்தை சிட்டு அரங்கமாக்கி நிகழ்வை நடாத்தினோம். மற்றும்படி யாராவது பிரித்தானியாவில் அப்படியொரு அரங்கத்தை வைத்திருக்கிறார்களா என்ற விபரம் எனக்குத் தெரியாது ரதி. இந்த அரங்கம் தொடர்பான விளக்கத்தை யாராவது அறிஞர்கள் தான் விளக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதத் திறமை இருந்தாலும் அதற்கு நேரம் கிடைக்க வேண்டும்.

அப்படி எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு நூலாக்குவது இன்னும் கடினம்.

அதையும் சாதித்து அந்த நூலை வெளியீடு செய்த சாந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்..

படம் எல்லாம் போட்டு இருக்கிறீர்கள், சந்தோசம்.

ஜெர்மனியில் ஹாய் சாந்தி! என்று ஒரு குரல் கேட்டால் அது என்னுடையதாகவும் இருக்கலாம் :D ஜெர்மனிக்கு வந்தால் :icon_idea:

Link to comment
Share on other sites

வடலியில் கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு கவிதை நூலை பெற்றுக்கொள்ள கீழ் வரும் இணைப்பில் அழுத்துங்கள்.

[size=6]http://vadaly.com/shop/?page_id=231&category=36&product_id=175[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சாந்தியக்கா நீங்கள் ஊர் வந்த்தவுடன் தொடர்பு கொள்கிறேன் .

Link to comment
Share on other sites

நூலை வெளியீடு செய்த சாந்தி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

நன்றிகள் வாத்தியார்.

வாழ்த்துக்கள்..

படம் எல்லாம் போட்டு இருக்கிறீர்கள், சந்தோசம்.

ஜெர்மனியில் ஹாய் சாந்தி! என்று ஒரு குரல் கேட்டால் அது என்னுடையதாகவும் இருக்கலாம் :D ஜெர்மனிக்கு வந்தால் :icon_idea:

யேர்மனி உங்களை வரவேற்கிறது. வாங்கோVolcano.

வாழ்த்துக்கள் சாந்தி. உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.

மிக்க நன்றிகள் பகலவன்.

வாழ்த்துக்கள் சாந்தியக்கா நீங்கள் ஊர் வந்த்தவுடன் தொடர்பு கொள்கிறேன் .

மிக்க நன்றிகள். ஊருக்கு வந்திட்டம்.

வாழ்த்துக்கள்.

மிக்க நன்றிகள் குமாரசாமி.

[size=4]வாழ்த்துக்கள் சாந்தி. [/size]

மிக்க நன்றிகள் கறுப்பி.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சாந்தி.

புத்தகம் வாங்குவதற்கான இணைப்பையும் தரவும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.