Jump to content

" கனாக்காணும் கனவுகள் "


Recommended Posts

Sad-Dreams.jpg

Sad-Dreams.jpg

தினமும் என் இராப்பொழுதுகள்

விட்டுச்செல்லும் கனவுகளில்,

ஒரு காலைப்பொழுதும் மாலைப்பொழுதும்

அடிக்கடி கனவில் வரும்!

நிஜமாய் இருந்த பொழுதுகளைவிட

சுகமாய் இருந்தது... கனாக்காட்சிகள்!

சில்லென உணர்ந்த குளிரும் காலையிலும்

சுடுதேநீரின் இனிப்பான மாலையிலும்

என்னருகில் ஒட்டிக்கொண்டிருந்தவளின்

இதமான தேகச்சூடும்,

என் தோளில் பரவிநின்ற

அழகான அவள் கூந்தலும்,

அதனினிய வாசமும்,

எம் புன்சிரிப்பும்...

எம்முன்னே பூத்துச் சிரித்த பூக்களை

பொறாமைப்பட வைத்திருக்கும்!

உதட்டோடு சிரித்துக்கொண்டிருந்தவளை

மனதோடு ரசித்துக்கொண்டிருந்த...

என் இராப்பொழுதுகள் களித்த கனவுகள்,

கழிந்துபோன நாளிகைகளில்...

விடிகின்ற அதிகாலைகள் ஏமாற்றாமல்

உணர்த்துகின்றன... அனைத்தும் கனவுகளென!!

வெறுமைகளாய் தனிமையில் ஆரம்பிக்கும் என் காலைகள்!

இப்பொழுதும் என்முன்னே சிரிக்கின்றன... அதே பூக்கள்!!

[size=5]கவிதையின் கவிதைகள் .[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை..

இதை அனுப்பி விடு

உன் நினைவுகளை சுட்டெரித்துக்கொண்டெரித்துக்கொண்டிருக்கும்

கவிதைக்கு....

புரிந்துகொள்

எறிந்து விளையாடும்

இறப்பர் பந்தல்ல

இதயம்...

உண்மை அன்பை

புரிந்துகொள்ளும் ஒரு

உண்மையான நாளில்

உன் கண்ணீரும்

இப்படித்தான்

உன் கன்னங்களை நனைக்கும்..

அப்பொழுது

தள்ளாடும்

உன் இளமையுடன்

உடலின் ஆட்டம்கள்

தளரும் கணங்களில்

கன்னங்களை கோடிடும்

கண்ணீர்த்துளிகளைப்போல

நீ தொட்டுவிடும்

தூரத்தில் இருக்காது

உன் உயிரைக் காதலித்த

உண்மை அன்பு...

Link to comment
Share on other sites

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

Link to comment
Share on other sites

கவிதை..

இதை அனுப்பி விடு

உன் நினைவுகளை சுட்டெரித்துக்கொண்டெரித்துக்கொண்டிருக்கும்

கவிதைக்கு....

புரிந்துகொள்

எறிந்து விளையாடும்

இறப்பர் பந்தல்ல

இதயம்...

உண்மை அன்பை

புரிந்துகொள்ளும் ஒரு

உண்மையான நாளில்

உன் கண்ணீரும்

இப்படித்தான்

உன் கன்னங்களை நனைக்கும்..

அப்பொழுது

தள்ளாடும்

உன் இளமையுடன்

உடலின் ஆட்டம்கள்

தளரும் கணங்களில்

கன்னங்களை கோடிடும்

கண்ணீர்த்துளிகளைப்போல

நீ தொட்டுவிடும்

தூரத்தில் இருக்காது

உன் உயிரைக் காதலித்த

உணமை அன்பு...

எசப்பாட்டுப் பாடிய சுபேசுக்கு நன்றிகள் .

Link to comment
Share on other sites

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

விரைவில் வீர நடை போட

காத்திருக்கிறது களம் ,

கவிதை வா

வந்து தை !!

எனக்கும் ஏறத்தாள இதே சாரம்சத்தில் மின்னஞ்சல் வந்திருந்தது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

ஊர் போய் வாற எல்லாரும் பயணம் அந்தமாதிரி நாடு அந்த மாதிரி என்று சொல்கிறார்கள் ....ஏன் கவிதைக்கு மட்டும் மாறாக இருக்கிறது ...
Link to comment
Share on other sites

அண்மையில் கவிதையுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது ஆபத்தான பயணத்தின் பாதி இடம் தாண்டியிருக்கிறார் மீதி இடத்தையும் நல்லபடியாக முடித்து யாழ் உறவுகளோடு உறவாடவேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் என்று தெரிவித்திருந்தேன் . விரைவில் கவிதை கவிதையோடு வரவேண்டும்

இந்த ஓட்டை வாய் சாத்துக்குச் சொன்ன கவிதையையும் சொல்லுங்கோவன் :lol:

Link to comment
Share on other sites

ஊர் போய் வாற எல்லாரும் பயணம் அந்தமாதிரி நாடு அந்த மாதிரி என்று சொல்கிறார்கள் ....ஏன் கவிதைக்கு மட்டும் மாறாக இருக்கிறது ...

கவிதை ஊர் போனது எண்டு யாரக்கா சொன்னது?

Link to comment
Share on other sites

ஊர் போய் வாற எல்லாரும் பயணம் அந்தமாதிரி நாடு அந்த மாதிரி என்று சொல்கிறார்கள் .

என்னதான் சொல்லமாட்டார்கள்!!

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பதிந்த குமாரசாமி அண்ணை , நந்தன்26 , அலைமகள் , யாயினி , தும்பளையான் ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

Link to comment
Share on other sites

இந்த ஓட்டை வாய் சாத்துக்குச் சொன்ன கவிதையையும் சொல்லுங்கோவன் :lol:

இந்த பட்டம் ஓட்டைவாய் சாத்து ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டார்கள் எனவே இது செல்லாது... செல்லாது.. :lol:

Link to comment
Share on other sites

இந்த பட்டம் ஓட்டைவாய் சாத்து ஏற்கனவே எனக்கு கொடுத்து விட்டார்கள் எனவே இது செல்லாது... செல்லாது.. :lol:

அப்ப வீரகேசரி எண்டு மாத்தி போடுவமே :lol::D:lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை ஊர் போனது எண்டு யாரக்கா சொன்னது?

தற்போது எல்லோரும் ஊருக்குத் தானே முண்டியடித்துக்கொண்டு போய் வருகிறார்கள் அதுதான் ஊர் என்று எழுதினேன்..மற்றப்படி ஒன்றும் இல்லை.
Link to comment
Share on other sites

தற்போது எல்லோரும் ஊருக்குத் தானே முண்டியடித்துக்கொண்டு போய் வருகிறார்கள் அதுதான் ஊர் என்று எழுதினேன்..மற்றப்படி ஒன்றும் இல்லை.

ஒரு ஊகத்தில எப்பிடிப் பிள்ளை சொல்லுவியள் ?? இது மற்றவையளுக்கு சீனி சாப்பிட்ட மாதிரியல்லோ இருக்கப்போகுது ??

Link to comment
Share on other sites

அப்ப வீரகேசரி எண்டு மாத்தி போடுவமே :lol::D:lol: .

வீரகேசரியும் சில விடயங்களைத் தணிக்கை செய்வார்கள்.

[size=6]"சுபேஸ், ஜீவா and தமிழினி like this "[/size]

[size=5] [/size][size=6]பச்சை கவிதைக்குச் சேர வேண்டியது, ஆனால் நீங்கள் போடுவது கோவுக்கல்லவா!! :rolleyes: [/size]

Link to comment
Share on other sites

வீரகேசரியும் சில விடயங்களைத் தணிக்கை செய்வார்கள்.

[size=6]"சுபேஸ், ஜீவா and தமிழினி like this "[/size]

[size=6]பச்சை கவிதைக்குச் சேர வேண்டியது, ஆனால் நீங்கள் போடுவது கோவுக்கல்லவா!! :rolleyes: [/size]

உங்கள் முகக்குறி எனக்கு விளங்கவில்லை அலை . கோ வைப்பற்றிய புரிந்துணர்வு இவ்வளவுதானா :( :( ?

Link to comment
Share on other sites

[size=4]கவிதை அழகான கனவுகள் கனவினில் வளர்க்கிறார். கனவுகள் நனவாக எனது வாழ்த்துக்கள்.

கோமகன், கவிதையை மிகவும் கேட்டதாகச் சொல்லுங்கள். நான் யாழில் வருவது மிகக் குறைவென்றாலும் உங்கள் அனைவருடைய படைப்புக்களைத் தவறாமல் வாசிப்பேன்.[/size]

[size=4]ஏன் நான் எழுதுவது இப்படி வருகிறது.?[/size]

Link to comment
Share on other sites

உங்கள் முகக்குறி எனக்கு விளங்கவில்லை அலை . கோ வைப்பற்றிய புரிந்துணர்வு இவ்வளவுதானா :( :( ?

:lol: :lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.