Jump to content

இவர்களா...? வெளிநாட்டு மாப்பிள்ளை.


Recommended Posts

FIER5CAVUM0CQCA14ZHR9CAF4Z1LACACNYVJFCANZ4OBYCAI8C7LXCAAXC212CAES4FUDCA04PF40CABC1GO1CA46BQ42CANVUXETCAZIQK45CAYAQ8V4CA5VAF3OCASS40NFCAT2FGOBCAP3R0NGCAB3G2LP.jpg

ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன்

என்று பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று

என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன். ஆனால்

இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு

வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை

கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது

மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு.

ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும்

அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு

மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி

முன்பின் தெரியாதவனுக்கு வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காக பொத்தி பொத்தி வளர்த்த அந்த அப்பாவிகளை

அவனுடன் அனுப்பிவைப்பது எந்த வகையில் நியாயம்..!

வெளிநாட்டில் இருக்கிறான் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக

கட்டிக்கொடுத்துவிட்டு அவர்கள் அங்கே நிம்மதியாக! இருந்து விடுகிறார்கள் ஆனால் இந்த அப்பாவிகள் இங்கே படும் பாட்டை

இவர்கள் அறிகிறார்களா..? "பாவம் இவர்கள் அறிவதில்லை" என்ற

ஒரே வசனத்தில் இவர்களை தப்பவிட முடியாது, முன்பு ஒரு

காலத்தில் வேண்டுமானால் இங்கு நடப்பது இவர்களுக்கு

தெரியாமல் இருக்கலாம் ஆனால் இப்போது நிலமை

அப்படி இல்லை எல்லாம் தெரிந்து இருந்தும் இவர்கள்

வெளிநாட்டு மோகம் எல்லாத்தையும் மறைத்து விடுகிறது. இந்த வெளிநாட்டு மோகத்துக்கு எங்கள் குடும்பத்தில் உள்ள

ஒருவருடைய வாழ்க்கையையும் பலி கொடுத்துள்ளோம்.

என் அத்தை. நன்றாக படித்தவர் அழகானவர், எனக்கு தெரிந்தே ஊரில் இவரை நிறைய பேர் பெண் கேட்டு வந்தார்கள் ஆனால் என் தாத்தா கட்டிக்கொடுத்தால் வெளிநாட்டு மாப்பிள்ளைக்குத்தான்

கட்டிக்கொடுப்பேன் என்று பிடிவாதமாய் நின்று புரோக்கர் மூலம்

வந்த ஒரு நோர்வை மாப்பிள்ளையை தெரிவுசெய்து,

அத்தை தாத்தாவுக்கு கடைசி பெண் ஒரே பெண் என்பதால்

அதிக சீதனம் கொடுத்து இந்தியா கூட்டிச்சென்று மிக பிரமாண்டமாக திருமணம் செய்துவைத்து அவனுடன் நோர்வை அனுப்பிவைத்தார். நோர்வை சென்ற சில மாதங்களிலேயே அவன் வண்டவாளங்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியது, எல்லாவற்றுக்கும் உச்சமாக அவனுக்கு நோர்வையில் ஒரு நோர்வைக்காரியுடன் திருமணமாகி (எழுத்தில் இல்லாமல்) இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரிய வந்தது. நியாம் கேட்ட அத்தைக்கு கிடைத்தது அடி உதைதான். யாருடைய ஆதரவும் இன்றி அவனுடன் போராடி விவகாரத்து வேண்டி அத்தை வெளியே வந்த போது அவருடன் வந்த ஒரே சொத்து அவன் கொடுத்த பெண் குழந்தைதான். இனி என் வாழ்க்கையில் திருமணம் என்ற

பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி அந்த பெண் குழந்தையுடன் தனியே வாழ்ந்து வருகிறார் அத்தை. அத்தையின் இந்த நிலைக்கு தான்தான் காரணம் என்று நினைத்து வேதனைபட்டே தாத்தாவும்

இறந்து விட்டார். இதில் அசிங்கம் என்ன வென்றால் எங்கள் தாத்தாவை ஏமாத்திய அந்த அயோக்கியனின் செய்கைகள்

எல்லாத்துக்கு அவன் தாயும் சப்போட் என்பதுதான்.

இப்போது அவனுக்கு மீண்டும் திருமணம் பேசுபடுதாம் பாவம் எந்த அப்பாவி பெண்ணின் வாழ்க்கை சீரழியப்படப்போகுதோ..

ஊரில் இருப்பவர்களின் வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தை இங்குள்ளவர்களும் அழகாக பயன் படுத்திக்கொள்கிறார்கள். அங்கிருப்பவர்களிடம் ஏதோ சொர்க்கத்துக்கே அதிபதிபோல் காட்டிக்கொள்ளும் இவர்களின் உண்மை நிலை இங்கிருக்கும் எங்களுக்குத்தானே வெளிச்சம். இப்படியான இவர்களின் பந்தாவைக்கூட ஓரளவு சகித்துக்கொள்ளலாம் ஆனால் ஊரில் தங்களுக்கு பெண் பாப்பவர்களிடம் பொண்ணு த்ரிஷா மாதிரி மெல்லிசா இருக்கனும்

தமணா கலரில் இருக்கனும் என்று சொல்லுவது இருக்கே..

கடவுளே, இந்த ஆணழகன்கள் தங்கள் முகத்தை கண்ணாடியில் பாப்பதே இல்லைப்போல் இவர்களைப்போலவே அந்த பெண்களும் எங்களுக்கு வரும் மாப்பிள்ளைமார் சூர்யா மாதிரியோ ஆர்யா மாதிரியோதான் இருக்கணும் என்றாள் இவர்களுக்கு எல்லாம் எப்படி கல்யாணம் ஆகிறதாம்! அண்மையில் கூட இப்படிப்பட்ட ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளையின் கூத்தைப்பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே எனக்கு தெரியாமல் போச்சு. அவர் என் அண்ணாவின் ப்ரண்ட் இங்கே தனியேதான் இருக்காரு அவரின் அப்பா செத்து மூன்றே மாதங்கள் ஆன நிலையில்

நானும் அண்ணாவும் அவர் வீட்டுக்கு போய் இருந்தோம். எங்களை வரவேற்று பேசிக்கொண்டு இருந்தவர் தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சொன்னபோது அண்ணா பொண்ணு யாரு

எங்க இருக்கா எப்படி தெரியும் என்று விசாரித்த போதுதான் அந்த வெக்கம்கெட்ட செயலை கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் அவர் சொன்னார். தன்னுடைய தந்தையின் இறந்தவீட்டை தான் வீடியோ எல்லாம் எடுத்து பெருசாக செய்ததாவும் அந்த வீடியோ கொப்பி தனக்கு அனுப்பட்டபோது அதில் ஒரு அழகான பொண்ணு ஒடியாடி வேலை செய்துகொண்டு இருந்ததாகவும், தன் தாயிடம் போன் பண்ணி அது யார் என்று கேட்ட போது அது பக்கத்துவீட்டு பொண்ணு என்று விவரம் சொன்னதும் அவளை தனக்கு புடித்து இருப்பதாக சொல்லி பொண்ணு கேட்க்க சொன்னாராம், தந்தை இறந்து சில வாரங்களே ஆனதால் இப்போது போய் பெண்கேட்டால் அவர்கள் தன்னை தப்பா நினைப்பார்கள் என்று அந்த தாய் மறுத்துவிட அதை இவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம் ஏனெனில் அந்த அழகான பெண்ணை அதர்குள் யாராவது கொத்திப்போய் விடுவார்களாம். பின் ஒரு வழியாகா தாயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம். இப்போது எல்லாம் ஓக்கே ஆகி அந்த பெண்ணுடன் போனில் பேசுவதாகவும் அவர் சொன்ன போது என் எதிரே இருந்த அவரை நிமிர்ந்து பார்த்தேன். சத்தியமாக என் கண்ணுக்கு அவர் ஒரு மனிதப்பிறப்பாகவே தெரியவில்லை ஒரு அருவருக்கத்தக்க புளுவாகவே கண்ணுக்கு தெரிந்தார். தங்களுக்கு மாப்பிள்ளையாக வருபவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தால் மட்டும் போதும் என் ஊரில் இருப்பவர்கள் நினைப்பதும், தங்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் ஒரு தகுதியே போதும் ஜஸ்வர்யாராயைக்கூட

பொண்ணு கேட்கலாம் என இங்கு இருப்பவர்கள் நினைப்பதும் கொடுமையின் உச்சம். சிந்திப்பார்களா இவர்கள்..?

http://www.thusyanth.../blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. ஊரில படிக்காட்டி.. ஒரு உருப்படியான வேலை கிடைக்காது. ஊரில படிக்காதவனுக்கு எல்லாம்.. வெளிநாட்டில வேலை கிடைக்குதுன்னா... அது எப்படிப்பட்ட வேலையா இருக்கும் என்று நினைக்கனும் முதலில...!

2. வெளிநாட்டில.. அரச உதவிப் பெறுபவர்கள்.. ஏழ்மையானவர்கள் வருமானம் அற்றவர்கள் என்ற வரையறைக்குள் தான் வைக்கப்பட்டுள்ளனர். இதையே ஊரில் பிச்சை சம்பளம் என்பார்கள். யாராவது பிச்சை சம்பளம் எடுக்கிறவனுக்கு பொண்ணை கட்டிக் கொடுப்பீங்களா.. அப்படின்னா வெளிநாட்டில கட்டிக் கொடுங்க..!!

3. ஊரில பெட்டிக்கடை வைச்சிருக்கிறவனுக்கு என்ன வருமானம்.. அதே தான் வெளிநாட்டில அநேக மூலைக்கடை வைச்சிருக்கின்றவனின் நிலையும்..(பெரு வியாபாரிகள் என்றால் கடன் தொகை எகிறி இருக்கும்... மாப்பிள்ளை பார்க்க முதல்.. வங்கிக் கடனைப் பாருங்க).. ஊரில என்றாலும் சொந்தமா வீடு இருக்கும்.. இங்க எல்லாமே கடன். கடன் கட்டாட்டி.. வீட்டை பிடிங்கிட்டு போயிடும் வங்கி..! இந்த நிலையில்.. உழைப்பே இல்லாமல் கள்ளமா ஆவணங்கள் செய்து.. காட்டி வாங்கின வீட்டுக் கடன் சரியா கட்டல்லைன்னா...என்ன கதி..????!

4.வெளிநாடு ஒன்றும் வேறுக்கிரகத்தில இல்ல. நம்ம பூமிப் பந்து மேல தான் இருக்குது. உழைக்கும் மக்களின் வரி.. வட்டி... இதில மேனி மினுக்கின வீதிகளும்.. கட்டடங்களும்.. பார்வைக்கு அழகா இருக்கென்பதற்காக.. வெளிநாடு திறம் என்று நினைக்கப்படாது. அந்த மினுக்கின கட்டிடங்களுக்குள்ள இருக்கிற அசிங்கம் வெளில தெரிவதில்லை. மேலும்.. கார்..வசதி.. வெளிநாட்டில.. கார் என்பது ஊரில சைக்கிள் போல. ஆனால் ஊரில சைக்கிள் வைச்சிருந்தா ஒரு செலவு தான். வெளிநாட்டில கார் வைச்சிருந்தா பல செலவு..! அதுக்கும் சேர்த்து உழைச்சு அரசாங்கத்துக்கு வருமானம் சேர்ப்பது தான் காரின் வரவுகளை வரவேற்க ஒரு காரணம். அதுமட்டுமன்றி.. இந்தக் காரால.. கால் நடை மறந்தோர் பலர். அதனால் உடலும்.. உள்ளமும் பெருத்திக்கிட்டு.. போகுது. நோய்களுக்கும் குறைவில்ல..!

5. ஊரில வருமானம் இன்றி கஸ்டப்பட்டவைக்கு வெளிநாடு திறமா இருக்கலாம். மேலும் உண்மையிலையே ஊரில வாழ முடியாத அரசியல் காரணம் கொண்டவைக்கு வெளிநாடு ஒரு வித தற்காலிக பாதுகாப்பை வழங்கலாம். ஊரில சிங்களவன் அடிச்சா வெளில தெரியும். ஆனால் வெளிநாட்டில வெள்ளைக்காரனும் கறுப்பனும் அடிச்சா கூட.. அது தெரியாது. சிங்களவன்.. வெட்டி இருக்கிறான்.. கொன்றிருக்கிறான்.. எத்தனையோ கொடுமைகள் செய்திருக்கிறான். பறத்தமிழன் என்று திட்டியும் இருப்பான். ஆனால் அவனின் சித்திரவதையை விட.. வெளிநாடுகளில் உள்ள racism கொடுமையானது. தினம் தினம் மெளனமாக இருந்து மனிதர்களின் வாழ்வியலை சிறுகச் சிறுக பாதிக்கச் செய்வதே வெளிநாட்டு racism. அதை அனுபவிக்கிறவைக்குத் தான் தெரியும் அதன் வலியும் வேதனையும்.

6. ஊரில நல்ல பள்ளி கிடைச்சா படிக்க வசதி இருக்கும். இலவசக் கல்வி. ஆனால் வெளிநாடுகளில் பள்ளிகள் பெற்றோரை போட்டு வாட்டி எடுக்கிற எடுப்புக்கு.. நம்ம ஊர் ஆம்பிளைகள் முன்னே தள்ளிவிடுவது அவையிட மொழி தெரியாத மனைவிமாரை. அதுமட்டுமன்றி பிள்ளைகள் மீது உயர்கல்விக் கடன். அது அவர்களின் வாழ் நாள் சுமை..! ஊரில இந்தக் கஸ்டம் இல்லை..!

7. மேலும்.. அநேக வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஊரில இருந்து ஏன் பெண்ணெடுக்கினம் என்றால் தங்கட வெருட்டலுக்கு.. உறுத்தலுக்கு அடங்கி வேலை செய்யக் கூடிய வீட்டுக்கு ஒரு வேலைக்காரி அவசியம் என்று தான். அதோட பிள்ளை பெத்துக்க ஒரு இயந்திரம் வேணும் என்று தான். ஏன் அதையே வெளிநாட்டு பெண்களிடம் பெற முடியாது. அவளவை உதுகளுக்கு எல்லாம் தயார் இல்லை. அதனால தான்.. இவை அங்க ஓடி வரினம்..!

8. வெளிநாட்டில.. அநேக தமிழர்கள் செய்வது கூலி வேலை. ஊரில கடையில நிற்கிறது என்பினமே அதை தான் இங்க சுப்பர் மார்க்கெட்டில் வேலை என்பது. ஊரில் சாப்பாட்டுக் கடையில சமைக்கிறது என்பது தான் இங்க.. மக்டொனால்ட்.. கே எவ் சி வேலை. ஊரில ஓ எல் பாஸ் பண்ணாட்டி என்ன வேலை கிடைக்கும்.. அதே ஆள் வெளிநாட்டுக்கு வந்திட்டா மட்டும்.. வைட் கொலர்.. வேலையா கொடுப்பாங்க..???! அந்த வகையில் வேலைக்கேற்ற கூலி தான் கிடைக்கும். அதுக்குள்ள தான் குடும்பத்தை கொண்டு ஓடனும். இதில வெட்டி பந்தா பாட்டிகள்.. நிகழ்ச்சிகள் வேற நடத்தனும். கடனட்டை அடிச்சு ஊருக்கு நாலு கொலிடே போகனும்.. அப்ப தான் நீங்க வெளிநாட்டில மாப்பிள்ளை எடுத்ததன்.. உண்மையான தார்ப்பரியத்தை ஊருக்கு பறைசாற்றலாம். அதெல்லாம் சும்மா இல்ல... தலைமேல இடியா உங்க பொண்ணு மேல தான் வந்து விழும்.

9. அநேக வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு சரியான மன உழைச்சல். வேலைக் களைப்பு. அதைப் போக்க.. அவை தியானம் பண்ணுறதில்ல. சோமபானமே அருந்துகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு பியர் கான் என்றாலும் வேணும். அல்லது ஊத நாலு சிகரெட் வேணும். இதெல்லாம் இங்க சகஜம் ஏனென்னா... ஊரில கூலி வேலை செய்திட்டு களைப்புப் போக்க.. கள்ளுக் குடிக்க போவினமே ஆக்கள் அப்படித்தான் இங்கையும்..!

10. ஊரில விபச்சாரின்னா ஊர் காறித்துப்பும். அங்க போற வாறவனை ஊர் தூர வைச்சிடும். வெளிநாட்டில அப்படி இல்ல. விபச்சாரம் தொழில். அவளவை வருமானத்திற்கு அலைய அவளைவைய தேடி கார்களில்.. இணையங்களில் அலையினம்.. உங்கட வருங்கால மாப்பிள்ளைமார். இதில இன்னொன்று.. அண்மையில் ஒருத்தர் வந்தார்.. அவருக்கு வேலை இணையத்தில் ஆபாசப்படம் பார்த்து சுய இன்பம் காண்பது. அதுவே எல்லை மீறிப் போய்.. இப்போ ஆண்மை இழந்து நிற்கிறார். இப்படியான ஆக்களுக்கும் ஊரில தான் பொம்பிளை எடுக்கப் போகினம். அவர் இங்கு டாக்டரிடம் கேட்டது.. டாக்டர் நான் ஊர் போய் கலியாணம் கட்டப் போறன்.. வயக்கரா பாவிக்க முடியுமோன்னு..! எனவே வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் குடி.. போதை.. புகை.. மாது.. ஆபாசம் போன்ற விவவாகரங்களால்.. ஆண்மை இழந்தவைக்கு.. உங்க பொண்ணுங்களை கட்டி அனுப்ப முன்.. வயக்கரா வாங்க சீதனத்தையும் கூட்டி கட்டி.. அனுப்பி வையுங்க..!

இந்த உண்மைகளை தெரிஞ்சு கொண்டும்.. நீங்க என்ன தான் சொல்லுங்க.. எங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தான் வேணுன்னா.. வடிவா கட்டி அனுப்பி வையுங்கோ.. உங்க பொண்ணு.. நல்ல விலை மலிஞ்ச ரோபாவா இங்க வாழும்..! :):icon_idea:

Link to comment
Share on other sites

நானும் பலவிதமான கதைகளைக் கேள்விப்பட்டுள்ளேன்.

1) கல்யாணம் செய்த பின் பெண்ணைக் கூப்பிட மறுப்பது.

2) பெண்ணைக் கூப்பிடத்தேவையான சம்பளம், வீட்டு வசதி போன்றவை இல்லாமல் வீசா கிடைப்பதில் சிக்கல்.

3) கல்யாணம் கட்ட என்று போய், பின்பு தனக்கு இதில் விருப்பம் இல்லை என்று கல்யாணத்தை நிறுத்துவது - இது கொஞ்சம் பரவாயில்லை, பெண் சிறு அவமானத்தோடு தப்பிவிடலாம், மொத்த வாழ்க்கையையே தொலைக்க வேண்டியதில்லை.

ஊரில் உள்ள எம்மவர்கள் கொஞ்சம் அவதானமாக செயல்பட வேண்டியது அவசியமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவைக் கொண்டு வந்து இணைத்து 40 நிமிசத்துக்குள் இன்னொருவரால் இவ்வளவு பெரிய கட்டுரை எழுத முடியும் என்டால் மனதிற்குள் எவ்வளவு பெரிய ஆதங்கம் இருந்திருக்கும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றாடம் சமூகத்தில்.. தரிசிக்கிறதை எழுதிறதுக்கு ஆதங்கம் படத் தேவையில்லை..! அது தன்பாட்டில வரும்..! என்ன சிலருக்கு தாங்க இங்க வெளிநாட்டில.. ஊரிக்குத் தெரியாமல் மறைச்சு வெட்டி பெருமை அளக்கிறதை இவன் பாவி அவிட்டு விடுறானே என்ற ஆதங்கம் மட்டும் இருக்குது..! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சமூகத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் தங்கள்பகிர்வுக்கு என் பாராட்டுக்கள். [/size]

Link to comment
Share on other sites

இதென்ன பெரிய வேலை ??? இந்தியாவை திட்டி பாருங்கள் நாலே நிமிடங்களில் மொத்த யாழ் களமும் நாரி போகும் அளவுக்கு பெரிய கட்டுரை என்னால் எழுத முடியும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.