Jump to content

ஈலிங் அம்மன் ஆலயத்தில் பிரச்சனை?


Recommended Posts

நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஈலிங் அம்மன் ஆலயத்தில் பூசைக்குப் பின்பு நடைபெற்ற அன்னதானத்தின் போது, உணவுக்கூடத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று சனிக்கிழமை காலை, ஆலயம் காவல் துறையினரால் காவல் காக்கப்பட்டதாம். பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லையாம். யாராவது விஷயம் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோயில் தர்மகார்த்த சபைக்கு பிடிக்காதவரை கோவிலுக்குள் வர முயற்சிக்க தள்ளுமுள்ளுபட்டதில் ஆளை outக்கி விட்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே போல் ஜேர்மனியிலும் ஒரு கோவிலில் பட்டிக்காட்டு நாடகம் நடந்தது நேரமும்,மனமும் இடங்கொடுத்தால் எழுதுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவா உன் பெயரில் இவ்வளவு அட்டுழியமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் தேசங்கள் எங்கும்.. இவர்கள் எல்லோரும்.. அகதி என்ற நிலை மறந்து ஆடினா இது தான் கதி..! :icon_idea:

அண்மையில்.. இந்தக் கோவில் திருவிழாவில்.. உணவு கேட்டுப் போன வேற்றின மக்களுக்கு உணவு தர மறுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இதனை வருபவர்கள் போவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் தேசங்கள் எங்கும்.. இவர்கள் எல்லோரும்.. அகதி என்ற நிலை மறந்து ஆடினா இது தான் கதி..! :icon_idea:

அண்மையில்.. இந்தக் கோவில் திருவிழாவில்.. உணவு கேட்டுப் போன வேற்றின மக்களுக்கு உணவு தர மறுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இதனை வருபவர்கள் போவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மிகவும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்.

இப்படிப் பட்ட அற்ப பிறவிகள், கோயில் பக்கம் போய்... மற்றவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடாது.

சிலருக்கு, பதவி வந்தவுடன் அற்பத்தனமாக நடப்பது, தமிழனில் அதிகம். அதிலும் கோவில்களில், மினக்கெடுபவர்களின் அட்டகாசம்.... புலம்பெயர் தேசமெங்கும்.... பரவலாக நடைபெறுவது கவலைக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோயில் அண்மையில் ஆமிக்கு கணணி வாங்க நிதியுதவி செய்தவையாம் என்று கேள்விப்பட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் தேசங்கள் எங்கும்.. இவர்கள் எல்லோரும்.. அகதி என்ற நிலை மறந்து ஆடினா இது தான் கதி..! :icon_idea:

அண்மையில்.. இந்தக் கோவில் திருவிழாவில்.. உணவு கேட்டுப் போன வேற்றின மக்களுக்கு உணவு தர மறுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இதனை வருபவர்கள் போவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

சாப்பாடு கேட்டு போன இடத்தில் இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்புவது எவ்வளவு அனாகரீகமற்ற செயல்..இதில் இருந்து நம்மவர்களை வேற்று இனத்தவர்கள் என்ன நினைச்சு இருப்பார்கள்..ஆதரவாக இருப்பவர்கள் கூட இப்படியான செயல்பாடுகளால் தான் இன்னுமொரு சந்தர்பத்தில் நம்மைக் கண்டால் ஒதுங்கிப் போகவோ இல்லை, தாங்கள் ஒதுங்கவோ செய்கிறார்கள்,செய்வார்கள்..

Link to comment
Share on other sites

கோவிலுக்குள்ளே வேறின மக்களும் பூசைகளில் கலந்து அன்னதானத்திலும் கலந்து கொள்வதுதான் வழமை.

ஒரு மில்லியன் பவுன்சுக்கு மேல் நாட்டுக்கு அனுப்பிவைத்த ஒரே ஒரு கோவிலும் ஈலிங் அம்மன் கோவில்தான்.

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை விட உண்மைகளை விசாரித்து அறிந்து எழுதுங்கள்.

கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர் திருவிழாவில் அண்ணளவாக 35,000௦௦௦ மக்கள் கலந்துள்ளனர்.

சிறு சிறு தவறுகள் எங்கும் நடந்து கொண்டே இருக்கும். அதை ஊதி பெரிதாக்குவதால் நடப்பது ஒன்றும் இல்லை.

கோவில் வழமையாக இயங்குகின்றது.

நன்றி.

http://ammanealing.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்குள்ளே வேறின மக்களும் பூசைகளில் கலந்து அன்னதானத்திலும் கலந்து கொள்வதுதான் வழமை.

ஒரு மில்லியன் பவுன்சுக்கு மேல் நாட்டுக்கு அனுப்பிவைத்த ஒரே ஒரு கோவிலும் ஈலிங் அம்மன் கோவில்தான்.

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை விட உண்மைகளை விசாரித்து அறிந்து எழுதுங்கள்.

கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர் திருவிழாவில் அண்ணளவாக 35,000௦௦௦ மக்கள் கலந்துள்ளனர்.

சிறு சிறு தவறுகள் எங்கும் நடந்து கொண்டே இருக்கும். அதை ஊதி பெரிதாக்குவதால் நடப்பது ஒன்றும் இல்லை.

கோவில் வழமையாக இயங்குகின்றது.

நன்றி.

நன்றி தகவலுக்கு.

மற்றவரை மெல்லுவதே எம் பாரம்பரியம்

செயல்

அல்லது கொடை

சீ...

அதுக்கும் எமக்கும் வெகுதூரம்.

யாழிலும் தற்போது இது ஒரு நோய் போல் தொற்றியபடியுள்ளது. பாதிக்கப்படப்போவது மேலும் மேலும் அந்த தாயக மக்களே........ :( :( :(

Link to comment
Share on other sites

வாழும் தேசங்கள் எங்கும்.. இவர்கள் எல்லோரும்.. அகதி என்ற நிலை மறந்து ஆடினா இது தான் கதி..! :icon_idea:

அண்மையில்.. இந்தக் கோவில் திருவிழாவில்.. உணவு கேட்டுப் போன வேற்றின மக்களுக்கு உணவு தர மறுக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் இதனை வருபவர்கள் போவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

தேர் திருவிழா அன்று அன்னதானம் வழங்கியவர்கள் கோவில் நிருவாகத்தினர் அல்ல. சில வியாபார நிறுவனத்தினரும் வெளியர்களுமே அன்னதானம் வழங்கினர்.

நான் சார்ந்த பகுதியினர் (தமிழ் சமுக நிலையம் ) தண்ணீர்ப் பந்தல் அமைத்திருந்தோம்.

கோவிலில் அன்று சேர்ந்த (அருச்சினை தட்டு விற்பனைமூலம்) £24,000௦௦௦ வன்னியிலுள்ள கணவனை இழந்த குடும்பத்தினருக்கு அனுப்பிவைக்கப் படவுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர் திருவிழாவில் அண்ணளவாக 35,000௦௦௦ மக்கள் கலந்துள்ளனர்.

சிறு சிறு தவறுகள் எங்கும் நடந்து கொண்டே இருக்கும். அதை ஊதி பெரிதாக்குவதால் நடப்பது ஒன்றும் இல்லை.

கோவில் வழமையாக இயங்குகின்றது.

நன்றி.

http://ammanealing.com/

சும்மா எல்லாம்.. சைபரை அடிச்சு விடக் கூடாது. 35 மில்லியன் பேர் தேருக்கு வரவும் இல்லை.. அந்த குட்டி பொதுமக்கள் ஓய்விட பூங்காவில்.. இத்தனை பேரை கொள்ளவும் மாட்டுது..! :lol::icon_idea:

தேர் திருவிழா அன்று அன்னதானம் வழங்கியவர்கள் கோவில் நிருவாகத்தினர் அல்ல. சில வியாபார நிறுவனத்தினரும் வெளியர்களுமே அன்னதானம் வழங்கினர்.

நான் சார்ந்த பகுதியினர் (தமிழ் சமுக நிலையம் ) தண்ணீர்ப் பந்தல் அமைத்திருந்தோம்.

கோவிலில் அன்று சேர்ந்த (அருச்சினை தட்டு விற்பனைமூலம்) £24,000௦௦௦ வன்னியிலுள்ள கணவனை இழந்த குடும்பத்தினருக்கு அனுப்பிவைக்கப் படவுள்ளது.

24 மில்லியன் அர்ச்சனை தட்டு மூலம் கிடைச்சதா..???! :lol:

பூங்காவில் அமைத்த அங்காடிகளில் அங்காடிக்கு என்று பொதுவாக 200 பவுனில் இருந்து அறவிட்டார்களே. கிட்டத்தட்ட 25 அங்காடிகளுக்கு மேல் வந்திருக்கும் என்று நினைக்கிறன்.

ஊருக்குப் போகுது என்றினம்.. ஊருக்கு போனது பற்றியும்.. அங்கு செய்யப்பட்ட அபிவிருத்திப் பணிகள்.. நலத்திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு ஏன் பகிரங்கப்படுத்தக் கூடாது..???!

ஊருக்குப் போகுது என்று சொல்லிச் சொல்லி வாங்கித் தான் உங்க நிறையப் பேர் பணக்காரர் ஆகி இருக்கினம்..! அம்மனின் பெயரால் அது செய்யப்படமாட்டாது என்று நம்புவோமாக..! :icon_idea:

Link to comment
Share on other sites

இன்று வெயில் கடுமையாக உள்ளது. எனவே நிறைய தண்ணீர் குடித்துவிட்டு கூலாக வாசியுங்கள். பின்னர் கருத்திடுவது பற்றி யோசிக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..

வழமையா கோவிலில் சாப்பாடு உண்ணும் ஒருவர் (அவர் தமிழர். அசைலம் அடிச்சு.. விசா கிடைக்காதவராம். இதனால் மன நிலை சரியில்லாதவராம். பிள்ளைகளும் கைவிட இதே கோவிலில் தானாம் தினமும் உணவு.) சம்பவ தினத்தன்று உணவு கேட்டு கோவிலுக்குச் சென்றுள்ளார்.

கோவில் நிர்வாகத்தினர் 10 பேர் அளவில் அங்கு நின்றுள்ளனராம். அவர்கள் அந்த அடியாருக்கு உணவு வழங்க மறுக்கவே.. அடியார் கோபத்தில் திட்டி தீர்த்திருக்கிறார். உடனே நிர்வாகிகள்.. தங்கள் வீர தீரச் செயலை காட்டி இருக்கின்றனர். அந்த அடியாரை அடியோ அடி என்று அடித்து விட்டு ரோட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை கண்ணுற்ற அயலவர் காவல்துறைக்கு அறிவிக்க.. பரா மெடிக்சும்.. காவல்துறையும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. அடியாரின் ஆபத்தான நிலை கருதி.. எயார் அம்புலன்ஸும் அழைக்கப்பட்டுள்ளதாம்.

இப்போது அந்த அடியார் மருத்துவமனையில் தேறி வருகிறாராம்.

இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறை கோவிலுக்கு சீல் வைத்திருக்கிறது. பின்னர் கோவில் அறக்கட்டளையினர் பேச்சு நடத்தி கோவில் திறந்துவிடப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

ஆனால் கோவில் நிர்வாகமோ.. பல்வேறு கட்டுக்கதைகளை கட்டி வருவதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்..!

ஒரு அனாதை அடியாருக்கு.. கோவில் இயங்கும் இடத்தில் உணவு வழங்க முடியாதவர்கள் எப்படி தாயகத்துக்கு உதவுவார்கள் என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்..!

இதற்கிடையே சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரை கோவில் அறக்கட்டளை விலக்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இவற்றை ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை..! :icon_idea:

Link to comment
Share on other sites

.

ஒரு மில்லியன் பவுன்சுக்கு மேல் நாட்டுக்கு அனுப்பிவைத்த ஒரே ஒரு கோவிலும் ஈலிங் அம்மன் கோவில்தான்.

சிறு சிறு தவறுகள் எங்கும் நடந்து கொண்டே இருக்கும். அதை ஊதி பெரிதாக்குவதால் நடப்பது ஒன்றும் இல்லை.

நன்றி.

http://ammanealing.com/

அப்ப நீங்கள் எதுவும் செய்யலாமா?

எதற்கும் கொஞ்சம் மனிததன்மை ஆகவும் நடப்பது நல்லது.

Link to comment
Share on other sites

கோயில் நிருவாகமும் ஜயரும் சேர்ந்தே சம்பந்த பட்டவரை அடித்திருந்தார்கள். கோயில் நிருவாகத்தினரை காவல்த்துறையினர் கைது செய்து ஒரு நாள் காவலில் வைத்திருந்து வழக்கு பதிவு செய்துவிட்டு விடுவித்துள்ளனர். இது பற்றி வேல் தர்மா அவர்களது பதிவு இங்கு இணைத்துள்ளேன்

http://veltharma.blo...4.html?spref=fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லா சப்பலில்

சிலர் இது போன்று குடும்பம் எதுவுமில்லாது திரிகிறார்கள். இதைப்பார்த்த உணவு விடுதி வைத்திருக்கும் எனது நண்பர் தனது உணவு விடுதியில் 3 நேர சாப்பாடும் தங்களுக்கு தரச்சொல்கின்றேன். இன்ன இன்ன நேரத்தில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என பல நாளாக கொடுத்து வந்தார். ஆனால் அவர்கள் தாங்கள் நினைத்த நேரங்களில் வருவதும் வந்த வாடிக்கையாளர்களுக்கு முன்னர் தங்களுக்கு தரவேண்டும் என்று சத்தம் போடுவதுடன் வேலையாட்களை தூசணத்தில் பேசவும் செய்தனர். இதனைக்கண்ட அவரது பங்காளி இதில் ஒருவருக்கு சாத்தி அனுப்பிவிட்டார்.

இதனைப்பாத்தவர்களுக்கும் அந்த கோயிலில் நடந்தது போல்தான் கதைக்கத்தோன்றும்.

ஆனால் உண்மை வேறு...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா இரண்டு சம்பவங்களுமே நியாயப்படுத்தல்களுக்கு அப்பாற்பட்டவை.

இந்த நினைச்சபடிக்கு சாத்துறது.. ஊரில சரி வரலாம். புலம்பெயர் நாடுகளில் அவை தண்டனைக்குரிய குற்றங்கள்.

உணவை வழங்கிறவை.. அதற்குரிய சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமே தவிர தனிமனிதர்களை தாக்கி துன்புறுத்த எவருக்கும் உரிமை அளிக்கப்படவில்லை.

பிரான்ஸில் செய்யப்பட்டதும் குற்றம்.. ஈலிங்கில் நடந்ததும் குற்றமே..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறைகளை புலம்பெயர் தேசம்வரை காவிவரச்செய்தது,அவற்றுக்கு இங்கும் இடம்கொடுப்பது எங்களின் பிற்போக்குதனமான சமூகக்கட்டமைப்புக்கள் என்பதற்க்கு இதுவும் இங்கு எழுதப்பட சில கருத்துக்களும் சாட்சி..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில காலம் செல்ல கோயில்களில் மல்யுத்தம் குத்துச்சண்டை வாள்வீச்சு எல்லாம்

நடக்கும். நாங்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளக்கூடாது :)

Link to comment
Share on other sites

குடித்துவிட்டு கோவிலில் வந்து கலாட்டா செய்தவரை கட்டிபிடித்து முத்தம் குடுக்கவில்லை என்பது பெரிய பிழை தான்,

மன்னித்து விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஊரில கடவுளையே தும்புத்தடியால் அடித்த ஜயரே இருக்கும்போது . இதையெல்லாம் பெரிசுபடுத்தக்கூடாது . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடித்துவிட்டு கோவிலில் வந்து கலாட்டா செய்தவரை கட்டிபிடித்து முத்தம் குடுக்கவில்லை என்பது பெரிய பிழை தான்,

மன்னித்து விடுங்கள்.

காவற்துறை கோவிலுக்கு மிக அருகாமையிலேயே இருந்திருக்கும்.ஒரு தொலைபேசி அழைப்புடன் காவற்துறை வந்து குடித்துவிட்டு கலாட்டா செய்திருந்தால் அவரைஅங்கிருந்து அகற்றியிருப்பார்கள்.இதற்கெல்லாம் முத்தம் கொடுக்கலாமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.