Jump to content

பாரிசில் தமிழ் அடையாளம் பறிபோகிறதா?


Recommended Posts

பிரான்சில் சாராசரியாக எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற கணக்கு அண்ணளவாகத் தெரியாது. புதுவைத் தமிழர்கள் 3 இலட்சம் பேரும் ஈழத்தமிழர்கள் ஒரு இலட்சம் பேருமாக 4 இலட்சம் பேர் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.புதுவைத் தமிழர்களில் ஒரு இலட்சத்தக்கு அதிமானோர் பிரான்சின் கடல்கடந்த மாவட்டமான றியூனியன் தீவில் வாழ்கிறார்கள்.புதுவைத் தமிழர்கள் பிரான்சுக்கு வந்து 150 வருடங்கள் ஆகின்றது.ஈழத்தமிழர்கள் வந்து 35 வருடங்கள் ஆகின்றன.

1990 களின் நடுப்பகுதியல் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில்Gare de nord தொடரூந்து நிலைத்துக்கு அண்மையில் பாரிஸ் 10 நிர்வாகப் பிரிவிலுள்ள La Chapelle பகுதி

Quartier Tamoul (தமிழர் பகுதி) என்று அழைக்கப்பட்டு வந்தது.

லண்டனிலே பிரமாண்டமான இந்திய கடைத்தொகுதிகள் இருந்தாலும் அங்கு குஜராத்தி மற்றம் சீக்கியர்கள் என்று வட இந்தியர்கள் பெரும்பான்மையாகவும் தமிழ் கடைகள் சிறுபான்மையாகவுமே இருக்கின்றன.

லா சப்பல் மட்டும் தான் ஐரோப்பாவில் தமிழர்களுடைய பெரிய வணிகப் பகுதியாக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள இடமாக லா சப்பல் திகழ்கிறது.

ஆனால் அண்மைக்காலமாக இந்தப் பகுதியில் பங்களாதேஷ் மற்றும் கேரள மாநிலத்தவர்களின் வணிக முயற்சிகள் அதிகளவுக்கு தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

பாரிசில் மானுடவியல் தொடர்பான ஆய்வு கற்கையை மேற்கொள்ளும் இத்தாலி நாட்டு இளைஞர் ஒருவர் இது பற்றி ஆராய்ந்திருக்கிறார்.அவர் தனது ஆய்வில் இந்த வணிக நிறுவனங்கள் லா சப்பல் பகுதியில் வருவதை ஊக்குவிக்குப்பதில் சிறீலங்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகளின் மறைகரம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது பாரிசின் முக்கியமான ஒரு பகுதியில் தமிழர்களுக்கான ஒரு வணிக மற்றும் கலாச்சார மையம் இருப்பதை சிறீலங்கா அரசும் இந்திய அரசும் கூட விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் என்னிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக லா சப்பலிலுள்ள வணிகர்கள் சிலரை வினவிய போது அவர்களும் இதை ஏற்றுக் கொண்டார்கள்.

பாரிசிலே எவரும் எந்த இடத்திலும் எவரும் வணிகம் செய்லாம் அதை யாரும் தடுக்க முடியாது. ஆனாலும் சீனர்கள் ஆபிரிக்கர்கள் அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு என்று பாரிசிலே வணிக பகுதிகள் இருக்கின்றன.அது போலவே தமிழர்களுக்கு என்று பிரான்சினுடைய சமத்துவம் சகோதரத்தவம் விடுதலை என்கிற அடிப்படை கோட்பாடுகளுக்கு விரோதமில்லாவகையில் லா சப்பல் பகுதி இருப்பதை தடுக்க முடியாது.

ஆனால் தமிழர்களுக்கென்று அப்படி ஒரு பகுதி இருக்க கூடாது என்ற அடிப்படையில் சிறீலங்கா இந்திய அதிகாரிகள் காய் நகர்த்தினால் அது பிரெஞ்சு அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு முறியடிக்கப்படவேண்டும்

Share this:

Link to comment
Share on other sites

தமிழர்கள் இப்பிடியானவர்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

[size=3]பிரான்சில் இனவாத அடிப்படையில் ஒரு இனம் அல்லது சமூகம் செயற்பட முடியாது என்பது உண்;மை.ஆனால் பிரெஞ்சுக் குடியரசின் சட்டங்களின் கீழ் தன்னுடை அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பேணுவதற்கு தடையில்லை.[/size]

[size=3]பிரச்சனை என்ன வென்றால் சிறீலங்கா அரசு இந்த தமிழர் மையத்தை சிதைக்க முயல்வதும் அதற்பு இந்திய அதிகாரிகள் துணை போவதும் ஒரு அரசில் வேலைத் திட்டத்தின் கீழ் நடக்கிறதா? ஏன்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விடமாக இருக்கிறது?பிரெஞ்சு பொருளதாரத்திற்கு தழிழர்களுடைய பங்களிப்பு என்ன? என்பதில் தான் எங்களுடைய இருப்பு பேரம் பேசும் பலம் என்பன அமையமுடியும்.[/size]

[size=3]தமிழர்களுடைய முலதனத் திரட்சியை ஒருங்கிணைக்க விடாதபடி சிதைப்பதும் திசை திருப்பிவிடுவதும் தான் எதிரிகளின் குறிக்கோளாக இருக்கிறது.[/size]

[size=3]ஆனால் நமது இனம் கீரைக்கடைக்கு எதிர்கடை போடுவதிலும் அடுத்தவனை கவிழ்த்து விழுத்துவதிலும் தான் குறியாக இருக்கிறது.[/size]

Link to comment
Share on other sites

[size=4]இது பற்றி பாரிசில் உள்ள தமிழர்கள் விவாதித்தி விழிப்படைய வேண்டும். இதை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என திட்டங்களை தீட்ட வேண்டும். [/size]

[size=4]இந்த கேரளா மற்றும் வங்கதேச மக்கள் சட்டரீதியாக உள்ளனரா? இவர்கள் என்ன பொருட்களை யாரை குறிவைத்து விற்கிறார்கள்? [/size]

[size=4]அதாவது பாரிசின் முக்கியமான ஒரு பகுதியில் தமிழர்களுக்கான ஒரு வணிக மற்றும் கலாச்சார மையம் இருப்பதை சிறீலங்கா அரசும் இந்திய அரசும் கூட விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் என்னிடம் தெரிவித்தார்.
[/size]

[size=4]ஏன் இந்திய அரசு விரும்பவில்லை? இந்த ஏன் தமிழர்களை தேடி தேடி அழிக்கின்றது? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் தமிழரின் போராட்ட பின்னடைவுடன் சம்பந்தப்பட்டதுதான்.

ஆனால் அவ்வளவு சுலபமாக வேற்று இனத்ததவரால் லா சப்பலை கைப்பற்றிவிட முடியும் என கணிக்கமுடியாது. அதன் பெறுமதி மிக மிக அதிகம். சிங்களவர்களும் முயற்சித்த தோற்றுள்ளனர்.

அதனால்தான் அரசுகள் தற்போது முயல்கின்றன.

ஆனால் வியாபாரமாக கருதினால் அதில் நிற்கமாட்டார்கள். அரசியலாக கருதினால் தமிழர்கள் பலத்த இழப்புக்களுடன் போராடவேண்டிவரும். வெல்ல வேண்டுமானால் தமிழ்களிடையே எவரிடம் பொருட்களை வாங்கவேண்டும் என்ற தீர்மானம் வேண்டும்.

நான் மக்கள் கடை தவிர்ந்த எங்கும் இதுவரை பொருட்களை வாங்கியதில்லை. லூன் தவிர்ந்து எங்கும் இதுவரை சீடிக்களை வாங்கியதில்லை. அதுபோல் மற்றவர்களும் தாயக உணர்வுள்ளவர்களிடம் அல்லது தமிழர்களிடம் பொருட்களை வாங்குவதை முடிவாக்குவார்களாயின் எவரும் எம்மை அசைத்திடமுடியாது.

Link to comment
Share on other sites

[size=4]ஆம் [/size][size=4]விசுகு[/size][size=4] அண்ணா,[/size]

[size=1][size=4]நாம் எமது கடைகளில் வாங்க வேண்டும். அதேவேளை எமது கடைகளை நடாத்துபவர்களும் தரமான பொருட்களை மலிவான விலையில் கொடுக்கவேண்டும். அதற்கு அவர்களிடம் உயர்ந்த வாங்குதிறன் (purchasing capacity) இருக்கவேண்டும், அதாவது அதிகளவில் வியாபாரம் (revenue) நடக்கவேண்டும். [/size][/size]

[size=1][size=4]மேலும் புதிய தொழில்நுட்பங்களை அணுகுமுறைகளை பாவித்து செலவுகளை குறைக்கவேண்டும். [/size][/size]

[size=1][size=4]கனடாவில் பரந்துபட்டு டொராண்டோ பெரும்பாகத்தில் எம்மவர்கள் வியாபாரம் செய்கின்றனர். அத்துடன் எம்மவர்கள் மத்தியிலேயே இரசீது [/size][size=4]தொழில்நுட்பம் (Touch screen billing system) உள்ளது (எனக்கு தெரிந்தவர்). அடுத்து பல கடைகள் புள்ளிகள் சேகரிக்கும் (point system) திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதுவும் நுகர்வோரை கவருகின்றது. அத்துடன் நகருக்கு வெளிப்புறத்தே மலிவான களஞ்சிய வசதிகளை கொண்டுள்ளனர். .....[/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]சந்தைப்படுத்தல்:[/size]

[size=5]http://www.groupon.fr/deals/paris[/size]

[size=4]மேலே கூறப்பட்டுள்ள புதுவித சந்தைப்படுத்தல் இப்பொழுது வட அமெரிக்காவில் பிரபல்யம் பெற்று வருகின்றது.[/size]

[size=4]இவ்வாறு புதுவித சந்தைப்படுத்தல் முறைகளை நாமும் கையாளவேண்டும்.[/size]

Link to comment
Share on other sites

கனடாவில் 90 களில் வந்துகொண்டிருந்த தமிழர்களுடன் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இப்போ வருபவர்களின் அளவு பத்து வீதமும் இல்லை .டொராண்டோவில் முதலில் தமிழர்கள் குவிந்த இடம் வெலஸ்லி பார்லிமென்ட் பகுதிதான் .அது ஒரு குட்டி யாழ்ப்பாணமாக இருந்தது.எத்தனயோ எம்மவர் வியாபார நிலையங்கள் அங்கு இருந்தது .வசதி ,குடும்ப உறுப்பினர்கள் பெருக பெரும்பாலோனோர் ஸ்கபோறோ நோக்கி நகர்ந்து அங்கும் பல வியாபார நிலையங்களை தொடங்கினார்கள் .இப்போ அங்கிருந்தும் பலர் மார்க்கம் ,பிராம்டன் என்று போக தொடங்கிவிட்டார்கள் .இதனால் குட்டி யாழ்ப்பாணங்களும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றது .

முன்னர் தமிழர் குவிந்திருந்த இடங்கள் இப்போ பங்களாதேசிகளாலும்,குஜராத்திகளாலும் நிரம்பி வழிகின்றது .

இப்போ எம்மவர் பரந்து பட்டு சொந்த கட்டடங்கள் வாங்கியும் கட்டியும் வியாபாரத்தில் கொடிபறக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

அதும் அண்ணாத்த இருக்கிற இடத்தில :wub:

Link to comment
Share on other sites

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

[size=4]உலகம் வெப்பம் அடைந்துவரும் நிலையில், கனடாவில் குளிர் குறைந்துகொண்டே செல்லுகின்றது :D [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

தம்பி சுண்டல்;

இன்னும் பிரென்ஷ் படிக்கேல்ல போல கிடக்குது..எழுதினதையே திருப்பி பாருங்கோ "la" என்றால் என்ன....சொல்லுங்கோ பார்ப்பம்...

Link to comment
Share on other sites

கனடாவில் 90 களில் வந்துகொண்டிருந்த தமிழர்களுடன் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இப்போ வருபவர்களின் அளவு பத்து வீதமும் இல்லை .டொராண்டோவில் முதலில் தமிழர்கள் குவிந்த இடம் வெலஸ்லி பார்லிமென்ட் பகுதிதான் .அது ஒரு குட்டி யாழ்ப்பாணமாக இருந்தது.எத்தனயோ எம்மவர் வியாபார நிலையங்கள் அங்கு இருந்தது .வசதி ,குடும்ப உறுப்பினர்கள் பெருக பெரும்பாலோனோர் ஸ்கபோறோ நோக்கி நகர்ந்து அங்கும் பல வியாபார நிலையங்களை தொடங்கினார்கள் .இப்போ அங்கிருந்தும் பலர் மார்க்கம் ,பிராம்டன் என்று போக தொடங்கிவிட்டார்கள் .இதனால் குட்டி யாழ்ப்பாணங்களும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றது .

முன்னர் தமிழர் குவிந்திருந்த இடங்கள் இப்போ பங்களாதேசிகளாலும்,குஜராத்திகளாலும் நிரம்பி வழிகின்றது .

இப்போ எம்மவர் பரந்து பட்டு சொந்த கட்டடங்கள் வாங்கியும் கட்டியும் வியாபாரத்தில் கொடிபறக்கின்றார்கள்.

[size=4]ஆம் அர்யுன் அண்ணா, உண்மை.[/size]

[size=4]நீங்கள் கூறிய இடங்கள் டொராண்டோ பெரும்பாகத்தில் வளர்ச்சி கண்டு வரும் நகரங்கள். இங்கே இடமும் வேலைவாய்ப்புக்களும் அத்துடன் எமது தமிழ் வீட்டு முகவர்கள் காரணமாயும் எம்மவர்கள் முன்னேற முடிகின்றது. [/size]

[size=4]கனடா (டொராண்டோ) பிரான்சுடன் (பரிசுடன்) ஒப்பிடும்பொழுது புதிய நாடு (நகரம்). [/size]

[size=4]இங்குள்ள பல தெரிவுகள் அங்குள்ளவர்களுக்கு இல்லை. [/size]

Link to comment
Share on other sites

சுண்டல் ,கனடாவில மனுசர் என்ன ரோட்டிலேயா நிற்கினம் ,வீட்டில கீட்டர் இருக்குத் தானே ?

தம்பி நந்தன் -பயங்கரவாதிகள் இல்லாத இடத்தில இருக்க பயம் போல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ,கனடாவில மனுசர் என்ன ரோட்டிலேயா நிற்கினம் ,வீட்டில கீட்டர் இருக்குத் தானே ?

தம்பி நந்தன் -பயங்கரவாதிகள் இல்லாத இடத்தில இருக்க பயம் போல .

இல்ல அண்ண கூடுதலாக அவங்கலோடேயே இருந்த்துட்டதால பயம் இல்ல ஆனா ஜனநாயகவாதிகளைக் கண்டால்த்தான் பயமா இருக்கு :(

Link to comment
Share on other sites

சுண்டல் ,கனடாவில மனுசர் என்ன ரோட்டிலேயா நிற்கினம் ,வீட்டில கீட்டர் இருக்குத் தானே ?

தம்பி நந்தன் -பயங்கரவாதிகள் இல்லாத இடத்தில இருக்க பயம் போல .

நீங்களும் ஆயுதம் தூக்கினிங்க தானே அப்போ நீங்க பயங்கர வியாதி I mean வாதி இல்லியோ?

இடையில விட்டிட்டு ஓடின நீங்கள் எல்லாம் சுத்த ஆன்மிக வாதிங்க கடைசி வரைக்கும் நின்டு தன்னோட குடும்பத்தையும் தன்னையும் இழந்தவங்க எல்லாம் பயங்கர வாதிங்க.....

நீங்க ஏன்னா தான் காட்டு கத்து கத்தினாலும் இன்றைய தலைமுறையிடம் புலிகள் பற்றிய உயர்வான மதிப்பு தான் இருக்கு இருக்கும்

அத ஒவொரு நாட்டில் இருக்கும் TYO உங்களுக்கு சொல்லும்

நான் தெரியாம தான் கேக்கிறன் நீங்கள்

சார்ந்த அமைப்புக்கும் இல்லை தமிழ் ஈழ விடுதலைக்காக போராட புறப்பட்டு தடம்புரண்ட

அமைப்புகளுக்கும் அடுத்த தலை முறைய கொண்ட அமைப்புகள் இருக்கா?

ஆனால் புலிகளுக்கும் புலிகள் சார்ந்த அமைப்புகளுக்கும் அடுத்த தலைமுறை. கொண்ட அமைப்புகள் இருக்கு இன்னும் ஒரு 40 வருஷத்துக்கு எங்களுக்கு போராட்டத்த கொண்டு நடத்த முடியும் நடத்துவம் எங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் வரை

உங்களை போல வயசு போண கேஸ் எல்லாம் weekend பார்ட்டி க்கு போய் நல்லா தண்ணி அடிச்சு போட்டு புலிகள பயங்கரவாதிகள் அது இதுன்னு கேவலமா கதைச்சு போட்டு நிக்க பொண்டாட்டி மார் கார்ல கொண்டு வந்து வீட்ட விடுவினம் படுத்து கொண்டு புலம்ப வேண்டியது தான் கனவில அடியாட புடியாட எண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லாச்சப்பலில் தமிழ்கடைக்குப் போனால் நிற்கிறதிற்கு இட‌மில்லை பத்தாததற்கு பொருட்களும் அறா விலை சனம் என்ன செய்யும் எங்கே மலிவாகக் கிடைக்குதோ அங்கே போகும்.

Link to comment
Share on other sites

அப்ப இனி லா சப்பெல்லுக்கு போனா தமிழ் பொண்ணுகளோட குஜு பொண்ணுங்களையும் பஞ்சாபி பொண்ணுகளையும் பாக்கலாம் :D

Link to comment
Share on other sites

முப்பதுவருடமாக நாட்டில போராடி முடிந்து இனி ஒரு நாப்பது வருடம் புலத்தில போராட போகின்றீர்கள் போல கிடக்கு ,தமிழனுக்கு விடிவு கிடைத்த மாதிரித்தான் .

வெல்வதற்குத்தான் வீரம் கொல்வதற்கு இல்லை .

வயது போனாலும் இப்பவும் அலைந்து திரிவது பிழையாக வழிகாட்டப்பட்ட எமது இளைஞர்களை உரிய வழி க்கு கொண்டுவரவே ,

அது ஓரளவிற்கு வெற்றியில் தான் போய்கொண்டிருக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பதுவருடமாக நாட்டில போராடி முடிந்து இனி ஒரு நாப்பது வருடம் புலத்தில போராட போகின்றீர்கள் போல கிடக்கு ,தமிழனுக்கு விடிவு கிடைத்த மாதிரித்தான் .

வெல்வதற்குத்தான் வீரம் கொல்வதற்கு இல்லை .

வயது போனாலும் இப்பவும் அலைந்து திரிவது பிழையாக வழிகாட்டப்பட்ட எமது இளைஞர்களை உரிய வழி க்கு கொண்டுவரவே ,

அது ஓரளவிற்கு வெற்றியில் தான் போய்கொண்டிருக்குது .

எனக்குத்தெரிய இவையள் சின்னமடுவில் ஒரு பெரிய தாக்குதல் நடாத்தி தோழர்களை மீட்டவர்கள் . அதுக்கு நீங்களே தலைமை தாங்கினது :(

Link to comment
Share on other sites

இப்போ புலத்தில எப்பிடி சிங்களவனுக்கு சலாம் போடுவது எப்பிடி யாழ் பாணத்துக்கு போய் கள்ளு குடிப்பது இது தான் சுதந்திரம் என்டு வழி காட்டப்போறிங்களா?

கொலைகள் இல்லாமல் சுதந்திரம் கிடைக்காது

காடிக்கொடுதவங்களையும் கூட்டிக்கொடுதவங்களையும் போடாமல் மடில வைச்சு கொஞ்சவா முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அடையாளம் பறிபோகாது பாதுகாக்க எங்கள் ஏரியா பொறுப்பாளர் விசுகு ஏதாவது செய்வார் :D

அவருடன் சேர்த்து மற்ற கள சகோதரர்களும் அதற்காக உழைக்க வேண்டும் அதற்க்கு எப்போது எமது ஆதரவு உண்டு ..... :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.