Jump to content

பாரிசில் தமிழ் அடையாளம் பறிபோகிறதா?


Recommended Posts

பிரான்சில் சாராசரியாக எவ்வளவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற கணக்கு அண்ணளவாகத் தெரியாது. புதுவைத் தமிழர்கள் 3 இலட்சம் பேரும் ஈழத்தமிழர்கள் ஒரு இலட்சம் பேருமாக 4 இலட்சம் பேர் வாழ்வதாக மதிப்பிடப்படுகிறது.புதுவைத் தமிழர்களில் ஒரு இலட்சத்தக்கு அதிமானோர் பிரான்சின் கடல்கடந்த மாவட்டமான றியூனியன் தீவில் வாழ்கிறார்கள்.புதுவைத் தமிழர்கள் பிரான்சுக்கு வந்து 150 வருடங்கள் ஆகின்றது.ஈழத்தமிழர்கள் வந்து 35 வருடங்கள் ஆகின்றன.

1990 களின் நடுப்பகுதியல் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில்Gare de nord தொடரூந்து நிலைத்துக்கு அண்மையில் பாரிஸ் 10 நிர்வாகப் பிரிவிலுள்ள La Chapelle பகுதி

Quartier Tamoul (தமிழர் பகுதி) என்று அழைக்கப்பட்டு வந்தது.

லண்டனிலே பிரமாண்டமான இந்திய கடைத்தொகுதிகள் இருந்தாலும் அங்கு குஜராத்தி மற்றம் சீக்கியர்கள் என்று வட இந்தியர்கள் பெரும்பான்மையாகவும் தமிழ் கடைகள் சிறுபான்மையாகவுமே இருக்கின்றன.

லா சப்பல் மட்டும் தான் ஐரோப்பாவில் தமிழர்களுடைய பெரிய வணிகப் பகுதியாக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக ஈழத்தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள இடமாக லா சப்பல் திகழ்கிறது.

ஆனால் அண்மைக்காலமாக இந்தப் பகுதியில் பங்களாதேஷ் மற்றும் கேரள மாநிலத்தவர்களின் வணிக முயற்சிகள் அதிகளவுக்கு தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

பாரிசில் மானுடவியல் தொடர்பான ஆய்வு கற்கையை மேற்கொள்ளும் இத்தாலி நாட்டு இளைஞர் ஒருவர் இது பற்றி ஆராய்ந்திருக்கிறார்.அவர் தனது ஆய்வில் இந்த வணிக நிறுவனங்கள் லா சப்பல் பகுதியில் வருவதை ஊக்குவிக்குப்பதில் சிறீலங்கா மற்றும் இந்தியாவை சேர்ந்த அதிகாரிகளின் மறைகரம் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது பாரிசின் முக்கியமான ஒரு பகுதியில் தமிழர்களுக்கான ஒரு வணிக மற்றும் கலாச்சார மையம் இருப்பதை சிறீலங்கா அரசும் இந்திய அரசும் கூட விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் என்னிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக லா சப்பலிலுள்ள வணிகர்கள் சிலரை வினவிய போது அவர்களும் இதை ஏற்றுக் கொண்டார்கள்.

பாரிசிலே எவரும் எந்த இடத்திலும் எவரும் வணிகம் செய்லாம் அதை யாரும் தடுக்க முடியாது. ஆனாலும் சீனர்கள் ஆபிரிக்கர்கள் அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு என்று பாரிசிலே வணிக பகுதிகள் இருக்கின்றன.அது போலவே தமிழர்களுக்கு என்று பிரான்சினுடைய சமத்துவம் சகோதரத்தவம் விடுதலை என்கிற அடிப்படை கோட்பாடுகளுக்கு விரோதமில்லாவகையில் லா சப்பல் பகுதி இருப்பதை தடுக்க முடியாது.

ஆனால் தமிழர்களுக்கென்று அப்படி ஒரு பகுதி இருக்க கூடாது என்ற அடிப்படையில் சிறீலங்கா இந்திய அதிகாரிகள் காய் நகர்த்தினால் அது பிரெஞ்சு அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு முறியடிக்கப்படவேண்டும்

Share this:

Link to comment
Share on other sites

தமிழர்கள் இப்பிடியானவர்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

[size=3]பிரான்சில் இனவாத அடிப்படையில் ஒரு இனம் அல்லது சமூகம் செயற்பட முடியாது என்பது உண்;மை.ஆனால் பிரெஞ்சுக் குடியரசின் சட்டங்களின் கீழ் தன்னுடை அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பேணுவதற்கு தடையில்லை.[/size]

[size=3]பிரச்சனை என்ன வென்றால் சிறீலங்கா அரசு இந்த தமிழர் மையத்தை சிதைக்க முயல்வதும் அதற்பு இந்திய அதிகாரிகள் துணை போவதும் ஒரு அரசில் வேலைத் திட்டத்தின் கீழ் நடக்கிறதா? ஏன்பது தான் கவனிக்கப்பட வேண்டிய விடமாக இருக்கிறது?பிரெஞ்சு பொருளதாரத்திற்கு தழிழர்களுடைய பங்களிப்பு என்ன? என்பதில் தான் எங்களுடைய இருப்பு பேரம் பேசும் பலம் என்பன அமையமுடியும்.[/size]

[size=3]தமிழர்களுடைய முலதனத் திரட்சியை ஒருங்கிணைக்க விடாதபடி சிதைப்பதும் திசை திருப்பிவிடுவதும் தான் எதிரிகளின் குறிக்கோளாக இருக்கிறது.[/size]

[size=3]ஆனால் நமது இனம் கீரைக்கடைக்கு எதிர்கடை போடுவதிலும் அடுத்தவனை கவிழ்த்து விழுத்துவதிலும் தான் குறியாக இருக்கிறது.[/size]

Link to comment
Share on other sites

[size=4]இது பற்றி பாரிசில் உள்ள தமிழர்கள் விவாதித்தி விழிப்படைய வேண்டும். இதை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என திட்டங்களை தீட்ட வேண்டும். [/size]

[size=4]இந்த கேரளா மற்றும் வங்கதேச மக்கள் சட்டரீதியாக உள்ளனரா? இவர்கள் என்ன பொருட்களை யாரை குறிவைத்து விற்கிறார்கள்? [/size]

[size=4]அதாவது பாரிசின் முக்கியமான ஒரு பகுதியில் தமிழர்களுக்கான ஒரு வணிக மற்றும் கலாச்சார மையம் இருப்பதை சிறீலங்கா அரசும் இந்திய அரசும் கூட விரும்பவில்லை என்றும் அந்த இளைஞர் என்னிடம் தெரிவித்தார்.
[/size]

[size=4]ஏன் இந்திய அரசு விரும்பவில்லை? இந்த ஏன் தமிழர்களை தேடி தேடி அழிக்கின்றது? [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் தமிழரின் போராட்ட பின்னடைவுடன் சம்பந்தப்பட்டதுதான்.

ஆனால் அவ்வளவு சுலபமாக வேற்று இனத்ததவரால் லா சப்பலை கைப்பற்றிவிட முடியும் என கணிக்கமுடியாது. அதன் பெறுமதி மிக மிக அதிகம். சிங்களவர்களும் முயற்சித்த தோற்றுள்ளனர்.

அதனால்தான் அரசுகள் தற்போது முயல்கின்றன.

ஆனால் வியாபாரமாக கருதினால் அதில் நிற்கமாட்டார்கள். அரசியலாக கருதினால் தமிழர்கள் பலத்த இழப்புக்களுடன் போராடவேண்டிவரும். வெல்ல வேண்டுமானால் தமிழ்களிடையே எவரிடம் பொருட்களை வாங்கவேண்டும் என்ற தீர்மானம் வேண்டும்.

நான் மக்கள் கடை தவிர்ந்த எங்கும் இதுவரை பொருட்களை வாங்கியதில்லை. லூன் தவிர்ந்து எங்கும் இதுவரை சீடிக்களை வாங்கியதில்லை. அதுபோல் மற்றவர்களும் தாயக உணர்வுள்ளவர்களிடம் அல்லது தமிழர்களிடம் பொருட்களை வாங்குவதை முடிவாக்குவார்களாயின் எவரும் எம்மை அசைத்திடமுடியாது.

Link to comment
Share on other sites

[size=4]ஆம் [/size][size=4]விசுகு[/size][size=4] அண்ணா,[/size]

[size=1][size=4]நாம் எமது கடைகளில் வாங்க வேண்டும். அதேவேளை எமது கடைகளை நடாத்துபவர்களும் தரமான பொருட்களை மலிவான விலையில் கொடுக்கவேண்டும். அதற்கு அவர்களிடம் உயர்ந்த வாங்குதிறன் (purchasing capacity) இருக்கவேண்டும், அதாவது அதிகளவில் வியாபாரம் (revenue) நடக்கவேண்டும். [/size][/size]

[size=1][size=4]மேலும் புதிய தொழில்நுட்பங்களை அணுகுமுறைகளை பாவித்து செலவுகளை குறைக்கவேண்டும். [/size][/size]

[size=1][size=4]கனடாவில் பரந்துபட்டு டொராண்டோ பெரும்பாகத்தில் எம்மவர்கள் வியாபாரம் செய்கின்றனர். அத்துடன் எம்மவர்கள் மத்தியிலேயே இரசீது [/size][size=4]தொழில்நுட்பம் (Touch screen billing system) உள்ளது (எனக்கு தெரிந்தவர்). அடுத்து பல கடைகள் புள்ளிகள் சேகரிக்கும் (point system) திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதுவும் நுகர்வோரை கவருகின்றது. அத்துடன் நகருக்கு வெளிப்புறத்தே மலிவான களஞ்சிய வசதிகளை கொண்டுள்ளனர். .....[/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]சந்தைப்படுத்தல்:[/size]

[size=5]http://www.groupon.fr/deals/paris[/size]

[size=4]மேலே கூறப்பட்டுள்ள புதுவித சந்தைப்படுத்தல் இப்பொழுது வட அமெரிக்காவில் பிரபல்யம் பெற்று வருகின்றது.[/size]

[size=4]இவ்வாறு புதுவித சந்தைப்படுத்தல் முறைகளை நாமும் கையாளவேண்டும்.[/size]

Link to comment
Share on other sites

கனடாவில் 90 களில் வந்துகொண்டிருந்த தமிழர்களுடன் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இப்போ வருபவர்களின் அளவு பத்து வீதமும் இல்லை .டொராண்டோவில் முதலில் தமிழர்கள் குவிந்த இடம் வெலஸ்லி பார்லிமென்ட் பகுதிதான் .அது ஒரு குட்டி யாழ்ப்பாணமாக இருந்தது.எத்தனயோ எம்மவர் வியாபார நிலையங்கள் அங்கு இருந்தது .வசதி ,குடும்ப உறுப்பினர்கள் பெருக பெரும்பாலோனோர் ஸ்கபோறோ நோக்கி நகர்ந்து அங்கும் பல வியாபார நிலையங்களை தொடங்கினார்கள் .இப்போ அங்கிருந்தும் பலர் மார்க்கம் ,பிராம்டன் என்று போக தொடங்கிவிட்டார்கள் .இதனால் குட்டி யாழ்ப்பாணங்களும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றது .

முன்னர் தமிழர் குவிந்திருந்த இடங்கள் இப்போ பங்களாதேசிகளாலும்,குஜராத்திகளாலும் நிரம்பி வழிகின்றது .

இப்போ எம்மவர் பரந்து பட்டு சொந்த கட்டடங்கள் வாங்கியும் கட்டியும் வியாபாரத்தில் கொடிபறக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

அதும் அண்ணாத்த இருக்கிற இடத்தில :wub:

Link to comment
Share on other sites

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

[size=4]உலகம் வெப்பம் அடைந்துவரும் நிலையில், கனடாவில் குளிர் குறைந்துகொண்டே செல்லுகின்றது :D [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Canadala வந்து மனுஷன் இருப்பானா? அதுவும் அந்த குளிருக்குள்ள?

அதான் இப்ப எல்லாரும் Aussie க்கு வாறங்க

தம்பி சுண்டல்;

இன்னும் பிரென்ஷ் படிக்கேல்ல போல கிடக்குது..எழுதினதையே திருப்பி பாருங்கோ "la" என்றால் என்ன....சொல்லுங்கோ பார்ப்பம்...

Link to comment
Share on other sites

கனடாவில் 90 களில் வந்துகொண்டிருந்த தமிழர்களுடன் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இப்போ வருபவர்களின் அளவு பத்து வீதமும் இல்லை .டொராண்டோவில் முதலில் தமிழர்கள் குவிந்த இடம் வெலஸ்லி பார்லிமென்ட் பகுதிதான் .அது ஒரு குட்டி யாழ்ப்பாணமாக இருந்தது.எத்தனயோ எம்மவர் வியாபார நிலையங்கள் அங்கு இருந்தது .வசதி ,குடும்ப உறுப்பினர்கள் பெருக பெரும்பாலோனோர் ஸ்கபோறோ நோக்கி நகர்ந்து அங்கும் பல வியாபார நிலையங்களை தொடங்கினார்கள் .இப்போ அங்கிருந்தும் பலர் மார்க்கம் ,பிராம்டன் என்று போக தொடங்கிவிட்டார்கள் .இதனால் குட்டி யாழ்ப்பாணங்களும் இடம் மாறிக்கொண்டே இருக்கின்றது .

முன்னர் தமிழர் குவிந்திருந்த இடங்கள் இப்போ பங்களாதேசிகளாலும்,குஜராத்திகளாலும் நிரம்பி வழிகின்றது .

இப்போ எம்மவர் பரந்து பட்டு சொந்த கட்டடங்கள் வாங்கியும் கட்டியும் வியாபாரத்தில் கொடிபறக்கின்றார்கள்.

[size=4]ஆம் அர்யுன் அண்ணா, உண்மை.[/size]

[size=4]நீங்கள் கூறிய இடங்கள் டொராண்டோ பெரும்பாகத்தில் வளர்ச்சி கண்டு வரும் நகரங்கள். இங்கே இடமும் வேலைவாய்ப்புக்களும் அத்துடன் எமது தமிழ் வீட்டு முகவர்கள் காரணமாயும் எம்மவர்கள் முன்னேற முடிகின்றது. [/size]

[size=4]கனடா (டொராண்டோ) பிரான்சுடன் (பரிசுடன்) ஒப்பிடும்பொழுது புதிய நாடு (நகரம்). [/size]

[size=4]இங்குள்ள பல தெரிவுகள் அங்குள்ளவர்களுக்கு இல்லை. [/size]

Link to comment
Share on other sites

சுண்டல் ,கனடாவில மனுசர் என்ன ரோட்டிலேயா நிற்கினம் ,வீட்டில கீட்டர் இருக்குத் தானே ?

தம்பி நந்தன் -பயங்கரவாதிகள் இல்லாத இடத்தில இருக்க பயம் போல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ,கனடாவில மனுசர் என்ன ரோட்டிலேயா நிற்கினம் ,வீட்டில கீட்டர் இருக்குத் தானே ?

தம்பி நந்தன் -பயங்கரவாதிகள் இல்லாத இடத்தில இருக்க பயம் போல .

இல்ல அண்ண கூடுதலாக அவங்கலோடேயே இருந்த்துட்டதால பயம் இல்ல ஆனா ஜனநாயகவாதிகளைக் கண்டால்த்தான் பயமா இருக்கு :(

Link to comment
Share on other sites

சுண்டல் ,கனடாவில மனுசர் என்ன ரோட்டிலேயா நிற்கினம் ,வீட்டில கீட்டர் இருக்குத் தானே ?

தம்பி நந்தன் -பயங்கரவாதிகள் இல்லாத இடத்தில இருக்க பயம் போல .

நீங்களும் ஆயுதம் தூக்கினிங்க தானே அப்போ நீங்க பயங்கர வியாதி I mean வாதி இல்லியோ?

இடையில விட்டிட்டு ஓடின நீங்கள் எல்லாம் சுத்த ஆன்மிக வாதிங்க கடைசி வரைக்கும் நின்டு தன்னோட குடும்பத்தையும் தன்னையும் இழந்தவங்க எல்லாம் பயங்கர வாதிங்க.....

நீங்க ஏன்னா தான் காட்டு கத்து கத்தினாலும் இன்றைய தலைமுறையிடம் புலிகள் பற்றிய உயர்வான மதிப்பு தான் இருக்கு இருக்கும்

அத ஒவொரு நாட்டில் இருக்கும் TYO உங்களுக்கு சொல்லும்

நான் தெரியாம தான் கேக்கிறன் நீங்கள்

சார்ந்த அமைப்புக்கும் இல்லை தமிழ் ஈழ விடுதலைக்காக போராட புறப்பட்டு தடம்புரண்ட

அமைப்புகளுக்கும் அடுத்த தலை முறைய கொண்ட அமைப்புகள் இருக்கா?

ஆனால் புலிகளுக்கும் புலிகள் சார்ந்த அமைப்புகளுக்கும் அடுத்த தலைமுறை. கொண்ட அமைப்புகள் இருக்கு இன்னும் ஒரு 40 வருஷத்துக்கு எங்களுக்கு போராட்டத்த கொண்டு நடத்த முடியும் நடத்துவம் எங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் வரை

உங்களை போல வயசு போண கேஸ் எல்லாம் weekend பார்ட்டி க்கு போய் நல்லா தண்ணி அடிச்சு போட்டு புலிகள பயங்கரவாதிகள் அது இதுன்னு கேவலமா கதைச்சு போட்டு நிக்க பொண்டாட்டி மார் கார்ல கொண்டு வந்து வீட்ட விடுவினம் படுத்து கொண்டு புலம்ப வேண்டியது தான் கனவில அடியாட புடியாட எண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லாச்சப்பலில் தமிழ்கடைக்குப் போனால் நிற்கிறதிற்கு இட‌மில்லை பத்தாததற்கு பொருட்களும் அறா விலை சனம் என்ன செய்யும் எங்கே மலிவாகக் கிடைக்குதோ அங்கே போகும்.

Link to comment
Share on other sites

அப்ப இனி லா சப்பெல்லுக்கு போனா தமிழ் பொண்ணுகளோட குஜு பொண்ணுங்களையும் பஞ்சாபி பொண்ணுகளையும் பாக்கலாம் :D

Link to comment
Share on other sites

முப்பதுவருடமாக நாட்டில போராடி முடிந்து இனி ஒரு நாப்பது வருடம் புலத்தில போராட போகின்றீர்கள் போல கிடக்கு ,தமிழனுக்கு விடிவு கிடைத்த மாதிரித்தான் .

வெல்வதற்குத்தான் வீரம் கொல்வதற்கு இல்லை .

வயது போனாலும் இப்பவும் அலைந்து திரிவது பிழையாக வழிகாட்டப்பட்ட எமது இளைஞர்களை உரிய வழி க்கு கொண்டுவரவே ,

அது ஓரளவிற்கு வெற்றியில் தான் போய்கொண்டிருக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முப்பதுவருடமாக நாட்டில போராடி முடிந்து இனி ஒரு நாப்பது வருடம் புலத்தில போராட போகின்றீர்கள் போல கிடக்கு ,தமிழனுக்கு விடிவு கிடைத்த மாதிரித்தான் .

வெல்வதற்குத்தான் வீரம் கொல்வதற்கு இல்லை .

வயது போனாலும் இப்பவும் அலைந்து திரிவது பிழையாக வழிகாட்டப்பட்ட எமது இளைஞர்களை உரிய வழி க்கு கொண்டுவரவே ,

அது ஓரளவிற்கு வெற்றியில் தான் போய்கொண்டிருக்குது .

எனக்குத்தெரிய இவையள் சின்னமடுவில் ஒரு பெரிய தாக்குதல் நடாத்தி தோழர்களை மீட்டவர்கள் . அதுக்கு நீங்களே தலைமை தாங்கினது :(

Link to comment
Share on other sites

இப்போ புலத்தில எப்பிடி சிங்களவனுக்கு சலாம் போடுவது எப்பிடி யாழ் பாணத்துக்கு போய் கள்ளு குடிப்பது இது தான் சுதந்திரம் என்டு வழி காட்டப்போறிங்களா?

கொலைகள் இல்லாமல் சுதந்திரம் கிடைக்காது

காடிக்கொடுதவங்களையும் கூட்டிக்கொடுதவங்களையும் போடாமல் மடில வைச்சு கொஞ்சவா முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அடையாளம் பறிபோகாது பாதுகாக்க எங்கள் ஏரியா பொறுப்பாளர் விசுகு ஏதாவது செய்வார் :D

அவருடன் சேர்த்து மற்ற கள சகோதரர்களும் அதற்காக உழைக்க வேண்டும் அதற்க்கு எப்போது எமது ஆதரவு உண்டு ..... :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.