Jump to content

தமிழனை எவரும் அடிக்கலாம்!


Recommended Posts

தமிழனை எவரும் அடிக்கலாம்!

தமிழனை சிங்கள இனவெறியர்கள் தான் என்றில்லை தமிழர்களும் அடிக்கிறார்கள்.இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமில்லை.சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் ஒரு மனிதனுக்கு இன்னொருவன் அடித்தல் என்பது அதிகார திமிர் சம்பந்தப்பட்டது. 'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அவர்களுக்கு அடிக்கிறார்கள்' இது உலகெங்கும் நடக்கும் விடயம் தான்.

ஆனால் பசிக்கு உணவுக்காக கையேந்தி நிற்கும் ஒருவனை அடித்து உதைத்து வீதியில் எறிவது நான் அறிந்த வரை தமிழ் சமூகத்திலும் குறிப்பாக இந்தியச் சமூகத்தில் தான் நடந்திருக்கிறது.

எமது தாயகத்தில் தீண்டாமைப் பேய் தாண்டவமாடிய 1970 க்கு முற்பட்ட காலகட்கட்டத்தில் இவ்வான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.1964ம் ஆண்டு துன்னாலை பகுதியைச் சேர்ந்த சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் அடை மழைக்காக வல்லிபுரப்பகுதியில் இருந்த ஓரு பிள்ளையார் கோவில் வாசலில் ஒதுங்கிய போது அவளுடன் வந்த 4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க அவளது மகன் கோவிலுக்குள் சென்று ஒரு வாழைப்பழத்தை எடுத்துவிட்டான்.அதிகார மமதை கொண்டவர்களின் பார்வையில் சொல்வதானால் திருடி விட்டான்.இன்னும் கொஞ்சம் வெறித்தனமான பார்வையில் சொல்வதானோல் சாதி குறைந்த சிறுவன் கோவிலுக்குள் வந்து வாழைப்பழத்தை திருவிட்டான்.ஒரு வாழைப்பழம் தானே அதை எடுத்தது ஒரு சிறுவன் தானே என்ற மனதாபிமான பார்வையை அதிகார திமிர் அழித்துவிட்டது.அந்த அதிகார வெறியர்கள் அந்த சிறுவனை அடித்து உதைத்து வெளியில் இழுத்தெறிய அவர்களிடம் இருந்து தனது மகனை காப்பாற்ற முயன்ற அந்த கர்ப்பணித் தாயையும் அவர்கள் வெறிபிடித்து தள்ளிவிட்டனர். கற்பூரம் எரிக்கும் கல்லுக்கு மேல் பலமாக விழுந்ததில் அவளது கர்ப்;பம் கலைந்தது.

வலியால் கதறி துடித்த அவளுக்கு உதவி செய்வதற்கு பதிலாக அவளை கோவிலுக்கு 50 மீட்டர் தொலைவில் இருந்த மரத்தடியில் கொட்டும் மழைக்கு மத்தியில் கதறக் கதற இழுத்துச் சென்று போட்டனர்.இத்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நானும் எனது நண்பர்களும் ஊருக்குள் ஓடிச் சென்று பெரியவர்களை கூட்டிக் கொண்டு வந்த போது அந்தப் பெண் வறிற்றில் இருந்து வெளியே வந்த குழந்தையுடன் உயிரிழந்து கிடந்தாள்.அவளது மகன் தாய் இறந்து தெரியாமல் அவளருகில் மழையில் நனைந்தவாறு அழுதுகொண்டிருந்தான்.

இந்தச் சம்பவத்துக்கு காரணமான நபர்கள் அந்தப் பெண்னும் அவள் குழந்தையும் இறந்துவிட்டது தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமல் அதற்கு காரணமானவர்கள் தாங்கள் தான் என்ற குற்ற உணர்வே இல்லாமல் பிள்ளையாருக்கு தீட்டாகி விட்டது என்று பரிகார பூசை செய்து கொண்டிருந்தனர்.

பின்னர் காவல்துறையினர் வந்து விசாரித்த போது அந்தப் பெண் மழை வெள்ளத்தில் வழுக்கி விழுந்ததால் குறைப்பிரசவமாகி இறந்துவிட்டள் என்று அவளது அத்தியாயம் முடித்து வைக்கப்பட்டது.அதை தீர விசாரிக்கவும் நடந்த உண்மைக்கு சாட்சியான எங்களிடம் வாக்கு மூலம் பெறவும் யாரும் முயலவில்லை.இன்றைக்கும் அந்தக் கோவிலுக்குஅருகாக செல்லும் போது அந்தப் பெண் அன்றைக்கு எழுப்பிய அவலக்குரலும் தாய் இறந்தது கூடத் தெரியாமல் அழுது கொண்டிருந்த அவளது மகனின் நிலையும் என் நினைவுக்கு வரும்.

கடந்த வாரம் இலண்டனில் உள்ள ஒரு பிரபலமான சைவக் கோவிலில் உணவு கேட்டுச் சென்ற தமிழ் இளைஞன் ஒருவன் கோவிலில் இருந்தவர்களால் அடித்து உதைத்து வீதியில் தூக்கி எறிப்பட்டுள்ளார்.இரத்தம் ஒழுக வீதியல் மயங்கிக் கிடந்த அவரை பிரித்தானிய பெண் ஒருவர் கொடுத்த தகவலால் காவல்துறையினர் வந்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவர் கோமா நிலையில் இருப்பதை ஊடகங்கள் வாயிலாகவும் நண்பர்கள் மூலமும் தெரிந்து கொண்ட போது இந்தச் சம்பவமே எனக்கு நினைவுக்கு வந்தது.

பசிக்கு உணவுகேட்ட ஒரு மனிதனை அடித்து உதைப்பது என்பது எவ்வளவு அயோக்கியத் தனமானது?.அவன் குடிகாரனாக இருக்கலாம்,தகாத வார்த்தையில் பேசி இருக்கலாம்.அதற்காக அவனை அடித்து உதைப்பதும் வீதியில் தூக்கி வீசுவதும் அதிகாரத் திமிர் அன்றி வேறு எதுவும் இல்லை.கோவிலில் ஒருவர் தகராறு செய்கிறார் என்றால் காவல்துறையினரை உதவிக்கு அழைத்திருப்பதுதானே முறை? காயம்பட்டு இரத்தம் ஒழுக மயங்கிக் கிடந்த ஒருவனை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற மனிதாபிமானம் இல்லாமல் போனதற்கு அதிகாரத் திமிர் இல்லாமல் வேறென்ன காரணம் இருக்க முடியும்.அகங்காரத்தை ஒழிக்கும் இடம் தான் கோவில் என்று போதனை செய்யும் நபர்களே அகங்காரத்தை மொத்த குத்தகைககு எடுத்தவர்களாக இருப்பது தானே காலகாலமாக தொடர்கிறது.

இந்த ஆலயம் கடந்த காலத்தில் தாயகத்தில் ஏதிலிகளாக இருக்கும் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறது என்பது உண்மைதான்;.அதற்கெல்லாம் கரும்புள்ளி வைப்பது போல் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியது ஏன்?

இந்த ஆலயம் மக்களால் தெரிவு செய்ப்பட்ட நிர்வாகத்தினாலே நிர்வகிக்கப்படுகிறது.கடந்த முறை இந்த நிர்வாகத் தேர்தல் நடந்த போது தமிழக தேர்தல் தோற்றுப் போகும் அளவுக்கு உள்ளக அரசியல் சித்துவிளையாட்டக்கள் அரங்கேறியதாக ஒரு சாரார் அப்போதே குற்றம் சாட்டியிருந்தனர்.

இன்று இந்த சம்பவத்தை அந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது அது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி.

பசித்த ஒருவனுக்கு உணவளிக்க மறுத்த (அவனில் ஆயிரம் பிழைகள் இருந்தாலும் )அவனை அடித்து உதைத்து வீதியில் தூக்கி எறிந்த நபர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று தற்போதைய ஆலய நிர்வாகிகளை உடனடியாக பதவி விலகுமாறு லண்டன் தமிழ் மக்கள் கோரவேண்டும்.

ஆலயங்கள் அகங்காரமும் அதிகாரத் திமிர் பிடித்தவர்களின் கூடாரங்களாக மாறுவதை எத்தனை நாளைக்குத்தான் நாம் அனுமதிக்கப் போகிறோம்?

நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த

நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே!

http://sivasinnapodi...ும்-அடிக்கலாம்/

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

ஒருவரைத் தாக்கியவரை லண்டனிலும் கைது செய்ய மாட்டார்களோ?

சம்பவம் உண்மையாக இருந்தால் - ஆலய நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்திருக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

சம்பவம் உண்மையாக இருந்தால் - ஆலய நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்திருக்க வேண்டும்!

[/quote[size=5]கோயில் நிர்வாகிகள் உட்பட சுமார் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். கோயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். கோயில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்துக்கு, கோயில் நிர்வாகம் இதுவரை எதுவித மன்னிப்பையும் கோரவிலை. மாறாக எதுவும் நடக்காததுபோல கோயிலை மீண்டும் திறந்து பூசைகளை நடத்திவருகின்றனர்.[/size]

Link to comment
Share on other sites

புலத்தில் யாழ்ப்பாணியம் புதிய முகங்களுடன் ஆளமாகவே வேரூன்றியள்ளது என்பதற்கு சிறப்பான உரைகல் வேறு தேடினாலும் கிடைக்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனத்திற்கு, விடுதலை வேண்டிப் போராடியவர்களுக்காக, மவுனமாகக் கண்ணீர் வடிப்பதைத் தவிர, வேறொன்றும் சொல்ல முடியவில்லை, நவத்தார்!

Link to comment
Share on other sites

இந்த இனத்திற்கு, விடுதலை வேண்டிப் போராடியவர்களுக்காக, மவுனமாகக் கண்ணீர் வடிப்பதைத் தவிர, வேறொன்றும் சொல்ல முடியவில்லை, நவத்தார்!

[size=3][size=1][size=4]'அழுவதும் தொழுவதும் அடங்கிக் கிடப்பதும் எமது தலைவிதியல்ல-[/size][/size][/size]

[size=3][size=1][size=4]எழுவதும் எதிர்த்துநிற்பதும் தடைகளை தகர்த்து முன்னேறுவதும் [/size][/size][/size]

[size=3][size=1][size=4]காலம் எமக்கிட்ட கட்டளை'[/size][/size][/size]

Link to comment
Share on other sites

சம்பவம் உண்மையாக இருந்தால் - ஆலய நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்திருக்க வேண்டும்!

[/quote[size=5]கோயில் நிர்வாகிகள் உட்பட சுமார் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். கோயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். கோயில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்துக்கு, கோயில் நிர்வாகம் இதுவரை எதுவித மன்னிப்பையும் கோரவிலை. மாறாக எதுவும் நடக்காததுபோல கோயிலை மீண்டும் திறந்து பூசைகளை நடத்திவருகின்றனர்.[/size]

[size=4]எனவே இங்கிலாந்து நாட்டு சட்டப்படி கோயில் நிர்வாகத்தில் பிழை இல்லை என்றே தோன்றுகின்றது. ஆக பிழை மற்றையவர் மேல் இருக்கலாம் இல்லை 'நடந்தது [/size][size=4]என்ன[/size] [size=4]என்பது முழுமையாக' இந்தக்கட்டுரையில் எழுதப்படவில்லை என்றே எண்ணுகிறேன். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எனவே இங்கிலாந்து நாட்டு சட்டப்படி கோயில் நிர்வாகத்தில் பிழை இல்லை என்றே தோன்றுகின்றது. ஆக பிழை மற்றையவர் மேல் இருக்கலாம் இல்லை 'நடந்தது என என்பது முழுமையாக; இந்தக்கட்டுரையில் எழுதப்படவில்லை என்றே எண்ணுகிறேன். [/size]

சாதியை எழுதாமல் நவத்தாரால் எழுதமுடியாது.

லா சப்பலில் இப்படி ஒரு பதினைந்து பேராவது திரிகிறார்கள். இவர்களுக்கு ஆலயங்களும் சில நல்ல குணம் படைத்த உணவு விடுதிகளுமே சோறு போடுகின்றன.

பல வருடங்களாக சோறு போடும் இவர்கள் ஒரு நாள் தப்பை சுட்டிக்காட்டினால் அதை தொடர்ந்து ஒருத்தர் மீறினால் அதனால் தண்டிக்கப்பட்டால் இங்கு குத்திமுறியும் இவர்களில் எவராவது அவர்களுக்கு ஒரு நாள் சோறு போட்டிருப்பார்களா? போட தயாரா? விலாசம் தருவீர்களா அனுப்பி வைக்கின்றேன்.

உடனே சாதியம் யாழ்ப்பணியம் இந்து என சாட்டை எடுத்து உதவி செய்வோரை வைய்து என்ன காணப்போகின்றோம்?????????

இப்படித்தான் பிரபாகரன் என்பவர் மீது பல சாட்டைகளை வீசி வீழ்த்தினோம்.

தற்போது எதுவுமில்லாமல் கண்டவனிடம் வாங்குகின்றோம். பல்லிளித்து நிற்கின்றோம். :( :( :(

Link to comment
Share on other sites

எனவே இங்கிலாந்து நாட்டு சட்டப்படி கோயில் நிர்வாகத்தில் பிழை இல்லை என்றே தோன்றுகின்றது. ஆக பிழை மற்றையவர் மேல் இருக்கலாம் இல்லை 'நடந்தது என என்பது முழுமையாக; இந்தக்கட்டுரையில் எழுதப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அவர்களுக்கு அடிக்கிறார்கள்'

செய்திகளின் சாரம்சம் இதுதான் . இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் , வல்லிபுரத்துக்கருகில் உள்ள பிள்ளையார்கோயலடி சம்பவம் , இப்போது புலத்தில் நடந்த சம்பவம் என்பன கட்டுரைக்கு ஆதாரமாக வலுசேர்க்கப்படுள்ளன. இந்தக்கால இடைவெளியில் இவ்வளவு இளப்புகளைக் கொடுத்தும் இந்த சமூகம் பன்முகப்படுத்தப்பட்டதா ??????? ( சிவிலைஸ் ) என்பதே இங்குள்ள கேள்வி . ஆம் என்றால் இப்படிப்பட்ட சீழ்களும் துர்நாற்றங்களும் ஆம் என்பதை கேலிக்கூத்தாக்கி தங்கள் கோரமுகங்களை மீண்டும் மீண்டும் ஆளப்பதிக்கின்றன என்றே சொல்வேன் .

Link to comment
Share on other sites

'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அவர்களுக்கு அடிக்கிறார்கள்'

செய்திகளின் சாரம்சம் இதுதான் . இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் , வல்லிபுரத்துக்கருகில் உள்ள பிள்ளையார்கோயலடி சம்பவம் , இப்போது புலத்தில் நடந்த சம்பவம் என்பன கட்டுரைக்கு ஆதாரமாக வலுசேர்க்கப்படுள்ளன. இந்தக்கால இடைவெளியில் இவ்வளவு இளப்புகளைக் கொடுத்தும் இந்த சமூகம் பன்முகப்படுத்தப்பட்டதா ??????? ( சிவிலைஸ் ) என்பதே இங்குள்ள கேள்வி . ஆம் என்றால் இப்படிப்பட்ட சீழ்களும் துர்நாற்றங்களும் ஆம் என்பதை கேலிக்கூத்தாக்கி தங்கள் கோரமுகங்களை மீண்டும் மீண்டும் ஆளப்பதிக்கின்றன என்றே சொல்வேன் .

[size=1][size=4]இங்கே [/size][/size][size=4]முழுமையாக[/size] செய்தி இல்லை.

[size=1][size=4]ஒரு சம்வத்தை வைத்து ஒருவர் தனது விளக்கத்தையும் சில வலுச்சேர்ப்புக்களையும் செய்துள்ளார்.[/size][/size]

[size=4]இது இணைக்கப்படவேண்டிய இடமும் இது இல்லை, அநேகமாக சமூக சாராளம் பகுதியில் இணைத்து விவாதிக்கப்பட வேண்டிய விடயம். [/size]

Link to comment
Share on other sites

[size=1][size=4]இங்கே [/size][/size][size=4]முழுமையாக[/size] செய்தி இல்லை.

[size=1][size=4]ஒரு சம்வத்தை வைத்து ஒருவர் தனது விளக்கத்தையும் சில வலுச்சேர்ப்புக்களையும் செய்துள்ளார்.[/size][/size]

இது இணைக்கப்படவேண்டிய இடமும் இது இல்லை, அநேகமாக சமூக சாராளம் பகுதியில் இணைத்து விவாதிக்கப்பட வேண்டிய விடயம்.

இதுதானே கூடாது .......... ஆக சொல்லவந்த செய்தி உங்களுக்கு இஞ்சி சாப்பிட்டமாதிரி இருக்கின்றது . நவம் போட்ட இடம் பிழை . நல்லாயிருக்கு அகூதா .

Link to comment
Share on other sites

சிட்னி முருகன் கோயில்லயும் இந்த விளையாட்டு இருக்கு சாப்பாடு போய் நிக்குற ஆக்கள ஒருமையில பேசுறது.... மதிக்கிறது இல்லை.... நிர்வாகத்துக்குள் அரசியல் உள்குத்துகள் etc etc

Link to comment
Share on other sites

இதுதானே கூடாது .......... ஆக சொல்லவந்த செய்தி உங்களுக்கு இஞ்சி சாப்பிட்டமாதிரி இருக்கின்றது . நவம் போட்ட இடம் பிழை . நல்லாயிருக்கு அகூதா .

[size=4]சொல்லவந்தது செய்தி அல்ல என மேலே சொல்லியுள்ளேன். இது ஒருவரின் அரைகுறை விளக்கமும் அவரின் கருத்தும் - அது உங்களுக்கு செய்தியாக இருந்தால் நான் என்ன செய்வது ?[/size]

[size=4]இன்னொரு திரியை சமூக சாரளத்தில் ஆரம்பியுங்கள், அதில் விவாதிப்போம். [/size]

Link to comment
Share on other sites

சாதியை எழுதாமல் நவத்தாரால் எழுதமுடியாது.

லா சப்பலில் இப்படி ஒரு பதினைந்து பேராவது திரிகிறார்கள். இவர்களுக்கு ஆலயங்களும் சில நல்ல குணம் படைத்த உணவு விடுதிகளுமே சோறு போடுகின்றன.

பல வருடங்களாக சோறு போடும் இவர்கள் ஒரு நாள் தப்பை சுட்டிக்காட்டினால் அதை தொடர்ந்து ஒருத்தர் மீறினால் அதனால் தண்டிக்கப்பட்டால் இங்கு குத்திமுறியும் இவர்களில் எவராவது அவர்களுக்கு ஒரு நாள் சோறு போட்டிருப்பார்களா? போட தயாரா? விலாசம் தருவீர்களா அனுப்பி வைக்கின்றேன்.

உடனே சாதியம் யாழ்ப்பணியம் இந்து என சாட்டை எடுத்து உதவி செய்வோரை வைய்து என்ன காணப்போகின்றோம்?????????

இப்படித்தான் பிரபாகரன் என்பவர் மீது பல சாட்டைகளை வீசி வீழ்த்தினோம்.

தற்போது எதுவுமில்லாமல் கண்டவனிடம் வாங்குகின்றோம். பல்லிளித்து நிற்கின்றோம். :( :( :(

எங்களுக்கு இணையங்களில் அதைசெய்தோம் இதைசெய்தோம் என்று இலவச விளம்பரம் தேடி தமுக்கடிச்சு பழக்கம் இல்லை .

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் அண்ணா இதுக்குள்ள ஏன் யாழ்ப்பாணியம் வந்ததெண்டு அறியலாமோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் அண்ணா இதுக்குள்ள ஏன் யாழ்ப்பாணியம் வந்ததெண்டு அறியலாமோ? :D

இலவசமாக பெற்ற வைத்த ஆயுதங்களை ஏன் இங்கு பாவிக்கக்கூடாது. வந்தால் மலை போனால் ......??? :lol::D :D

எங்களுக்கு இணையங்களில் அதைசெய்தோம் இதைசெய்தோம் என்று இலவச விளம்பரம் தேடி தமுக்கடிச்சு பழக்கம் இல்லை .

கிளிஞ்சுது போ........

இப்படி எத்தனை பேரைப்பார்த்திட்டம்.

வாய்ச்சொல்லில் வீரரடி................கிளியே :D :D

Link to comment
Share on other sites

இலவசமாக பெற்ற வைத்த ஆயுதங்களை ஏன் இங்கு பாவிக்கக்கூடாது. வந்தால் மலை போனால் ......??? :lol::D :D

கிளிஞ்சுது போ........

இப்படி எத்தனை பேரைப்பார்த்திட்டம்.

வாய்ச்சொல்லில் வீரரடி................கிளியே :D :D

நாங்களும் யாழ் இணையத்திலை பாத்துக்கொண்டுதான் இருக்கிறம் இந்த வாய்சொல்வீரர்களின்ரை கூத்துகளை :lol: :lol: :D:icon_idea: :icon_idea: .

Link to comment
Share on other sites

ஐயோ ஏன் France உறவுகள் 2 பேரும் சண்டை பிடிகிறிங்க? அதுவும் ஒண்டா எல்லாம் மீட் பண்ணி கபே எல்லாம் குடிச்சிட்டு

Come on guys lets be friends :D

Link to comment
Share on other sites

மிகவும் பிற்போக்கான சிந்தனைகளில் தான் எம்மில் இன்றும் பலர் ,இவர்களெல்லாம் வெளிநாடுவந்தும் மாறவில்லை ,அவர்கள் உலகமே ஒரு சிறிய வட்டம் தான் .

நேற்று பி.பி.சி யில் இந்த செய்தியை கேட்கும் போது ஒரு வெட்கி தலை குனியவேண்டிய இனமாக இருந்தது எம் இனம் .ஒரு செல்டரில் வசிக்கும் ஒருவரை,ஒரு சுகமில்லாதவரை உணவு கேட்டதற்கு இப்படி அடித்து வெளியில் தூக்கி போட்டிருக்கின்றார்கள் என்றால் மீண்டும் எங்களை ஒரு காட்டுமிராண்டிகளாக காட்டும் ஒரு நிகழ்வே இது .

அவர் குடித்திருக்கலாம்,தகாத வார்த்தைகள் பேசி இருக்கலாம் ஆனால் அதற்கு சட்டத்தை தமது கைகளில் எடுப்பது என்பது அவர்களின் அறிவின் அளவை காட்டுகின்றது .

இதற்குள் பல சமூக விசகிருமிகள் தேசியதற்கு ஆதரவான் கோவில் ,அன்னதானம் செய்யும் கோவில் என்று அவர்களா செய்ததை நியாயபடுத்த நினைப்பது அதைவிட கேவலம் .

Link to comment
Share on other sites

இது அதிர்வு இணையத்தில் வந்த செய்தி.

[size=4]லண்டனில் உள்ள ஒரு பெயர்போன கோவிலில், சாப்பாடு கேட்டுச் சென்ற தமிழன் ஒருவனைத் தாக்கி வெளியே கொண்டு வந்துபோட்டுள்ளனர் நிர்வாகத்தில் இருக்கும் சிலர். இதற்கு அக்கோயிலில் உள்ள குருக்களும் துணைபோன சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை(17) இடம்பெற்றுள்ளது. அட பேர்போன கோயில் என்று ஏன் எழுதவேனும் ? அது ஈலிங் அம்மன் கோவில் தான் ! அடிவாங்கிய இளைஞன் கோமா நிலையில் உள்ளார், கோவில் சீல் வைக்கப்பட்டது ! சுமார் 11 பேர்கைதாகி பின்னர் விடுதலையானார்கள் ! அப்ப என்ன தான் அங்கே நடந்தது ? வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

லண்டனில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு, பேர்போன பழைய கோவில்களில் ஒன்று ஈலிங் அம்மன் கோவில் ஆகும். இக்கோயில் நிர்வாகிகள், ஊரில் உள்ள தமிழ் மக்களுக்கு பல உதவிகளைச் செய்துள்ளனர். பல ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப்பு, விதவைகள் மறுவாழ்வு என்று பல நல்ல காரியங்களைச் செய்துள்ளனர். அதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால் இவ்வளவு ஆண்டுகளாக இவர்கள் செய்து வந்த நற்பணிகள் எல்லாம் ஒரே நிமிடத்தில் கலைந்துபோய்விட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் ஈலிங் அம்மன் கோவிலுக்குச் சென்று, உணவு உள்ளதா என்று கேட்டுள்ளார். குறிப்பிட்ட இந்த இளைஞர் வல்வெட்டித்துறைச் சேர்ந்தவர் என்றும், அவர் வீடற்ற நிலையில் ஒரு அகதியாக, வாழ்ந்து வருகிறார் என்றும் அதிர்வு இணையம் அறிகிறது.

beg-for-life.jpgகுறிப்பிட்ட இளைஞர் விரக்தியில், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், சம்பவ தினத்தன்று அவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உணவு கேட்ட இளைஞருக்கு, கோவில் நிர்வாகிகள் கூறிய பதில் ஆத்திரமூட்டியுள்ளது. ஒரு கொஞ்ச சாப்பாடு கூட இல்லையா என்று அவர் கேட்டுள்ளார். ஆனால் உணவு முடிந்துவிட்டதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதனை அடுத்து ஏற்பட்ட வாய் தர்கத்தில், கோயிலுக்கு உள்ளேயே வைத்து அவ்விளைஞர் பலமாகாத் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை அப்படியே தூக்கிவந்து வெளியே போட்டுள்ளனர் சிலர். இவர்கள் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள் பொலிசார். இதனிடையே பொலிசாருக்கு அடித்துச் சொல்லிவிடலாம் என, ஒருவர் தனது மோபைல்போனைத் தூக்க, அங்கே நின்றிருந்த ஐயர் ஒருவர் பொலிசுக்கு போன் பண்ணவேண்டாம் ! இது பொலிஸ் கேஸ் ஆகிவிடும் என்று பகிரங்கமாக உரக்க கூறியுள்ளார் என்றால் பாருங்களேன் ! குடித்துவிட்டு ரோட்டில் விழுந்துவிட்டதாக பொலிசார் நினைக்கட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.

பசி என்று வந்தால், எதிரி என்றாலும் உணவுகொடுக்கும் மரபில் வந்தவர்கள் தமிழர்கள். அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! கோயில்..... ஒரு திருப்பணி புரியும் புனிதஸ்தலம் ! தெய்வாதீனம் மிக்க இடம் .... அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! ஒரு ஈழத் தமிழன் அதுவும் வீடு இல்லாதான ஒரு எதிலி ! அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! சரி அடிக்காமல் அவரை அப்படியே பிடித்து வெளியே கொண்டுபோய் விட்டிருக்கலாம் அல்லவா ? படு மோசமாக அடித்து கோமா நிலைக்கு அவரைத் தள்ளி, பின்னர் பொலிசையும் அழைக்காமல் விடுவது எந்தவகையில் ஞாயம் ? இதனைப் பார்த்த வேற்றினப் பெண்(ஆங்கிலப் பெண்மணி) ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்தபொலிசார், குறிப்பிட்ட 30 வயது இளைஞன் பிழைக்கமாட்டார் எனக் கருதி ஏல்-அம்பூலன்சை(உலங்கு வானூர்தி மருத்துவப் பிரிவை) வரவழைத்துள்ளனர். கோயில் நிர்வாகிகள் உட்பட சுமார் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். கோயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். கோயில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்துக்கு, கோயில் நிர்வாகம் இதுவரை எதுவித மன்னிப்பையும் கோரவிலை. மாறாக எதுவும் நடக்காததுபோல கோயிலை மீண்டும் திறந்து பூசைகளை நடத்திவருகின்றனர். பாதிக்கப்பாட்ட இளைஞனுக்கு என்ன உதவிகளைச் செய்தார்கள் என்று கோயில் நிர்வாகத்திடம் அதிர்வு இணையம் கேட்டது, இது நீதிமன்றில் உள்ள வளக்கு இதுகுறித்து எதுவித கருத்தையும் நான் கூறமுடியாது என்கிறார்கள். கேள்விக்கு கோயில் நிர்வாகம் எந்தப் பதிலையும் கூறவில்லை. நடந்த இச் சம்பவத்தை தமிழ் ஊடகங்கள் வெளியே கொண்டுவரக்கூடாது என்பதில் மட்டும் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவர் விடையங்களில் அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை ! இதுவே ஒரு தமிழ் இளைஞன் லண்டனில் உள்ள புத்த விகாரை ஒன்றுக்குச் சென்று உணவுகேட்டபோது, அவர் தாக்கப்பட்டிருந்தால், தமிழர்கள் அந்த புத்தவிகாரை நிர்வாகிகளை சும்மா விட்டிருப்பார்களா ? இல்லையேல் கிறீஸ்த்தவ மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் வழிபாட்டுஸ்தலங்களில் இவ்வாறு சம்பவங்கள் ஏதாவது நடந்துதான் உள்ளதா ? கோவிலில் என்ன நடந்தாலும் குற்றமில்லையா ? இதனை தமிழர்கள் தட்டிக்கேட்க்கமாட்டார்களா ?

ஈழத்தில் தமிழர்களை யாராவது அடித்தால் மட்டும் தானா நாம் குரல்கொடுப்போம் ? வேறு இடங்களில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நாம் தட்டிக்கேட்க்க மாட்டோமா ?[/size]

http://www.athirvu.c...ments=1&id=3375

[size=5]என்னுடைய கேள்வி என்னவென்றால் அந்த இளைஞன் தவறு செய்திருந்தால் காவல்துறையை அழைக்க வேண்டியது தானே? அவனை அடித்து உதைக்கு காயப்படுத்தி தூக்கி வீதிவது எறிவது இங்கே சிலருக்கு நியாமாகப்படுகிறது.கோவிலுக்குள்ள வந்து சத்தம் போட்டால் அடித்து உதைத்து தூக்கி எறிவோம் என்பது தான் உயரிய தமிழ் மரபா? இதைத்தானே அன்றில் இருந்து இன்றவரை செய்து வருகின்றீர்கள்.[/size]

[size=5]ஒருவர் ஆபத்தில் இருந்தால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது ஐரோப்பிய சட்டம்.[/size]

[size=5]பிரித்தானிய வெள்ளை இனப் பெண்ணுக்கு இருந்த மனிதாபிமானம் ஏன் நம்முடைய உயர் திரு கனவான்களுக்கு இல்லாமல் போனது?[/size]

[size=5]இந்த சம்பவத்தை விசாரித்து அறிந்த போது எனக்கு 1964 ல் நடந்த அந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது அடக்க முடியாது கோபம் வந்தது . (நானும் 1990களில் பாரிஸ் நகரத்தில் ஒரு சாதி வெறியனின் திமிரால் சாப்பாட்டுக்கு வழியில்லாதவனாக ஆக்கப்பட்ட நிலையில் பாரிஸ் முத்துமாரி அம்மன் கோவிலில் அன்னதானச் சோறு வாங்கிச் சாப்பிட்டு பசியாறிஇருக்கிறேன்) .ஐயா விசுகு தமிழனுக்கு சிங்களவன் அடித்தால் நீங்கள் 1958ல் இருந்து வரலாற்றை தோண்டி எடுக்கலாம் நாங்கள் எங்களைப் பாதித்த சம்பங்களை சொல்லக் கூடாது.இது தான் உங்களது மேன்மை தங்கிய நியாயமோ?[/size]

[size=5]1964 ல் நடந்த சம்பவத்துக்கும் இப்போது நடந்த சம்பத்துக்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம்.ஆனால் இரண்டுக்கும் அடிப்படை என்ன?அதிகாரத் திமிர் என்பது தானே![/size]

[size=5]என்னைப் பொறுத்தவரை இனவாதியான சிங்களவனை விட இனவாதமா? இலங்கையில் அது இல்லை.அதெல்லாம் முன்னர் இருந்தது இப்போது தமிழர்களும் நாங்களும் சமாதானமாக வாழ்கிறோம் என்று உலகத்துக்கு சொல்லும் சிங்கள போலி ஜனநாயக வாதிகள் எப்படி ஆபத்தானவர்களோ அப்படி( முள்ளிவாக்காலுக்குப் பின்னும் சாதி வெறியால் போராளிக் குடும்பங்களினதும் பெண் பொராளிகள் பலரினது தற்கொலைகளுக்கும் மன உழைச்சல்களுக்கும் காரணமாக இருந்த) சாதி வெறியர்களை விட சாதி இல்லை அது ஒழிந்துவிட்டது என்று பம்மாத்து விடுபவர்களே ஆபத்தானவர்கள்.[/size]

[size=5]எனது ஊரான வல்லிபுரத்திலே எனது சொந்த மைத்துனனின் மகளுக்கு உப தபாலதிபர் பதவி கிடைத்தது. அந்த உப தபால் நிலையம் ஒரு மேட்டுக்குடி கனவானின் வீட்டில் இருந்தது. தன்னுடைய வீட்டுக்குள் எனது மருமகள் அதாவது உப தபால் அதிபர் வரக்கூடாது என்று அவர் சொல்லிவிட்டார்.உயர் தபால் அதிகாரிகளின் துணையோடு அவள் முதல் நாள் கடமையை பொறுப்பெடுக்கச் சென்றபோது அந்தக் கனவான் அவளை தள்ளி விழுத்தி வீட்டுக்குள் விடாமல் துரத்தியதுடன் அதிகாரிகள் முன்னிலையிலே தபால் நிலைய சாமான்களை தூக்கி வீதியில் வீசிவிட்டார்.[/size]

[size=5]அரசு நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அவரை யாரும் தண்டிக்கவில்லை.[/size]

[size=5]இப்போது அந்த தபால் நிலையம் எனது உறவினர் ஒருவரின் வீட்டில் இயங்கிவருகிறது.[/size]

[size=5]இது நடந்தது 1950 திலே 60 திலோ இல்லை. 2010 ல் நடந்தது.[/size]

[size=5]இறுதியாக அடிப்படையில் கருத்தியல் ரீதியாக நாங்கள் இன்னமும் சாதியச் சமூகமாக இருப்பதினாலேயே அதற்கான முதல் கொடுப்பனவாக மாநிடத்தை தொலைக்கிறோம். மாநிடம் தொலைந்த பிறகு சுயநலம் சந்தர்ப்பவாதம் பிழைப்புவாதம் முதலான ஒட்டு மொத்த பிற்போக்குத் தனங்களின் இருப்பிடமாக நமது சமூகம் இருப்பதில் ஆச்சரிமில்லை.தொலைந்து போன அந்த மாநிடத்தை தேடி கண்டுபிடிக்க முயலும் நாங்கள் பைத்தியக்காரர்களே? என்று பல தடவை நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன் [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவையும் சொல்லத் துணிந்த நீங்கள் (கட்டுரையாளர்).. கோவிலை சொல்லாமல் இனங்காட்டாமல் மறைப்பது ஏனோ..???! உங்களுக்கும் அதிகார வர்க்கத்தின் மீது அச்சமோ..????! அல்லது அம்மாளாச்சி சபிச்சிடுவா என்ற பயமோ..???!

இந்தத் தலைப்பிலும்.. இந்த தலைப்போடு சம்பந்தப்பட்ட விடயங்கள் பகிரப்பட்டுள்ளன.

ஈலிங் அம்மன் ஆலயத்தில் பிரச்சனை?

http://www.yarl.com/...howtopic=106658

Link to comment
Share on other sites

மிகவும் பிற்போக்கான சிந்தனைகளில் தான் எம்மில் இன்றும் பலர் ,இவர்களெல்லாம் வெளிநாடுவந்தும் மாறவில்லை ,அவர்கள் உலகமே ஒரு சிறிய வட்டம் தான் .

நேற்று பி.பி.சி யில் இந்த செய்தியை கேட்கும் போது ஒரு வெட்கி தலை குனியவேண்டிய இனமாக இருந்தது எம் இனம் .ஒரு செல்டரில் வசிக்கும் ஒருவரை,ஒரு சுகமில்லாதவரை உணவு கேட்டதற்கு இப்படி அடித்து வெளியில் தூக்கி போட்டிருக்கின்றார்கள் என்றால் மீண்டும் எங்களை ஒரு காட்டுமிராண்டிகளாக காட்டும் ஒரு நிகழ்வே இது .

அவர் குடித்திருக்கலாம்,தகாத வார்த்தைகள் பேசி இருக்கலாம் ஆனால் அதற்கு சட்டத்தை தமது கைகளில் எடுப்பது என்பது அவர்களின் அறிவின் அளவை காட்டுகின்றது .

இதற்குள் பல சமூக விசகிருமிகள் தேசியதற்கு ஆதரவான் கோவில் ,அன்னதானம் செய்யும் கோவில் என்று அவர்களா செய்ததை நியாயபடுத்த நினைப்பது அதைவிட கேவலம் .

உண்மையான கருத்து....

Link to comment
Share on other sites

[size=4]

இறுதியாக அடிப்படையில் கருத்தியல் ரீதியாக நாங்கள் இன்னமும் சாதியச் சமூகமாக இருப்பதினாலேயே அதற்கான முதல் கொடுப்பனவாக மாநிடத்தை தொலைக்கிறோம். மாநிடம் தொலைந்த பிறகு சுயநலம் சந்தர்ப்பவாதம் பிழைப்புவாதம் முதலான ஒட்டு மொத்த பிற்போக்குத் தனங்களின் இருப்பிடமாக நமது சமூகம் இருப்பதில் ஆச்சரிமில்லை.தொலைந்து போன அந்த மாநிடத்தை தேடி கண்டுபிடிக்க முயலும் நாங்கள் பைத்தியக்காரர்களே? என்று பல தடவை நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

[/size]

[size=4]உங்கள் கருத்தும் ஆதங்கமும் ஒரு கேள்வியை கேட்க வைக்கின்றது. நீங்கள் நாங்கள் இருப்பது தேவலோகம் என்றா நீங்கள் எண்ணுகிறீர்கள்? [/size]

Link to comment
Share on other sites

பல வருடங்களாக சோறு போடும் இவர்கள் ஒரு நாள் தப்பை சுட்டிக்காட்டினால் அதை தொடர்ந்து ஒருத்தர் மீறினால் அதனால் தண்டிக்கப்பட்டால் இங்கு குத்திமுறியும் இவர்களில் எவராவது அவர்களுக்கு ஒரு நாள் சோறு போட்டிருப்பார்களா? போட தயாரா? விலாசம் தருவீர்களா அனுப்பி வைக்கின்றேன்.

என்னுமொருவன் மேல் கைவைக்கும் அதிகாரத்தை யார் அவர்களுக்கு கொடுத்தது? என்ன பிழைவேண்டுமானாலும் செய்யட்டும் தண்டனை கொடுக்க அந்த நாட்டு அரசாங்கமும் சட்டமும் இருக்கின்றது. தண்டிக்கும் அதிகாரத்தை யார் அல்லது எது கோயில் நிர்வாகத்துக்கு கொடுத்தது? ஏதோ சர்வசாதாரணமாக தண்டிக்கப்பட்டால் என்று எழுதுகின்றீர்கள். திமிர்த்தனமான இவ்வாறான மனோநிலையுடைய அரசியலுடைய ஒவ்வொருவரும் சமூகத்தின் சாபக்கேடு. சாபங்கள் இறுதியில் வெள்ளை பிரட்டிக் கிடக்கும் என்பது நேரில்கண்டது வரலாறு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.