Jump to content

தமிழனை எவரும் அடிக்கலாம்!


Recommended Posts

தமிழனை எவரும் அடிக்கலாம்!

தமிழனை சிங்கள இனவெறியர்கள் தான் என்றில்லை தமிழர்களும் அடிக்கிறார்கள்.இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமில்லை.சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் ஒரு மனிதனுக்கு இன்னொருவன் அடித்தல் என்பது அதிகார திமிர் சம்பந்தப்பட்டது. 'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அவர்களுக்கு அடிக்கிறார்கள்' இது உலகெங்கும் நடக்கும் விடயம் தான்.

ஆனால் பசிக்கு உணவுக்காக கையேந்தி நிற்கும் ஒருவனை அடித்து உதைத்து வீதியில் எறிவது நான் அறிந்த வரை தமிழ் சமூகத்திலும் குறிப்பாக இந்தியச் சமூகத்தில் தான் நடந்திருக்கிறது.

எமது தாயகத்தில் தீண்டாமைப் பேய் தாண்டவமாடிய 1970 க்கு முற்பட்ட காலகட்கட்டத்தில் இவ்வான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.1964ம் ஆண்டு துன்னாலை பகுதியைச் சேர்ந்த சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் அடை மழைக்காக வல்லிபுரப்பகுதியில் இருந்த ஓரு பிள்ளையார் கோவில் வாசலில் ஒதுங்கிய போது அவளுடன் வந்த 4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க அவளது மகன் கோவிலுக்குள் சென்று ஒரு வாழைப்பழத்தை எடுத்துவிட்டான்.அதிகார மமதை கொண்டவர்களின் பார்வையில் சொல்வதானால் திருடி விட்டான்.இன்னும் கொஞ்சம் வெறித்தனமான பார்வையில் சொல்வதானோல் சாதி குறைந்த சிறுவன் கோவிலுக்குள் வந்து வாழைப்பழத்தை திருவிட்டான்.ஒரு வாழைப்பழம் தானே அதை எடுத்தது ஒரு சிறுவன் தானே என்ற மனதாபிமான பார்வையை அதிகார திமிர் அழித்துவிட்டது.அந்த அதிகார வெறியர்கள் அந்த சிறுவனை அடித்து உதைத்து வெளியில் இழுத்தெறிய அவர்களிடம் இருந்து தனது மகனை காப்பாற்ற முயன்ற அந்த கர்ப்பணித் தாயையும் அவர்கள் வெறிபிடித்து தள்ளிவிட்டனர். கற்பூரம் எரிக்கும் கல்லுக்கு மேல் பலமாக விழுந்ததில் அவளது கர்ப்;பம் கலைந்தது.

வலியால் கதறி துடித்த அவளுக்கு உதவி செய்வதற்கு பதிலாக அவளை கோவிலுக்கு 50 மீட்டர் தொலைவில் இருந்த மரத்தடியில் கொட்டும் மழைக்கு மத்தியில் கதறக் கதற இழுத்துச் சென்று போட்டனர்.இத்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நானும் எனது நண்பர்களும் ஊருக்குள் ஓடிச் சென்று பெரியவர்களை கூட்டிக் கொண்டு வந்த போது அந்தப் பெண் வறிற்றில் இருந்து வெளியே வந்த குழந்தையுடன் உயிரிழந்து கிடந்தாள்.அவளது மகன் தாய் இறந்து தெரியாமல் அவளருகில் மழையில் நனைந்தவாறு அழுதுகொண்டிருந்தான்.

இந்தச் சம்பவத்துக்கு காரணமான நபர்கள் அந்தப் பெண்னும் அவள் குழந்தையும் இறந்துவிட்டது தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமல் அதற்கு காரணமானவர்கள் தாங்கள் தான் என்ற குற்ற உணர்வே இல்லாமல் பிள்ளையாருக்கு தீட்டாகி விட்டது என்று பரிகார பூசை செய்து கொண்டிருந்தனர்.

பின்னர் காவல்துறையினர் வந்து விசாரித்த போது அந்தப் பெண் மழை வெள்ளத்தில் வழுக்கி விழுந்ததால் குறைப்பிரசவமாகி இறந்துவிட்டள் என்று அவளது அத்தியாயம் முடித்து வைக்கப்பட்டது.அதை தீர விசாரிக்கவும் நடந்த உண்மைக்கு சாட்சியான எங்களிடம் வாக்கு மூலம் பெறவும் யாரும் முயலவில்லை.இன்றைக்கும் அந்தக் கோவிலுக்குஅருகாக செல்லும் போது அந்தப் பெண் அன்றைக்கு எழுப்பிய அவலக்குரலும் தாய் இறந்தது கூடத் தெரியாமல் அழுது கொண்டிருந்த அவளது மகனின் நிலையும் என் நினைவுக்கு வரும்.

கடந்த வாரம் இலண்டனில் உள்ள ஒரு பிரபலமான சைவக் கோவிலில் உணவு கேட்டுச் சென்ற தமிழ் இளைஞன் ஒருவன் கோவிலில் இருந்தவர்களால் அடித்து உதைத்து வீதியில் தூக்கி எறிப்பட்டுள்ளார்.இரத்தம் ஒழுக வீதியல் மயங்கிக் கிடந்த அவரை பிரித்தானிய பெண் ஒருவர் கொடுத்த தகவலால் காவல்துறையினர் வந்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவர் கோமா நிலையில் இருப்பதை ஊடகங்கள் வாயிலாகவும் நண்பர்கள் மூலமும் தெரிந்து கொண்ட போது இந்தச் சம்பவமே எனக்கு நினைவுக்கு வந்தது.

பசிக்கு உணவுகேட்ட ஒரு மனிதனை அடித்து உதைப்பது என்பது எவ்வளவு அயோக்கியத் தனமானது?.அவன் குடிகாரனாக இருக்கலாம்,தகாத வார்த்தையில் பேசி இருக்கலாம்.அதற்காக அவனை அடித்து உதைப்பதும் வீதியில் தூக்கி வீசுவதும் அதிகாரத் திமிர் அன்றி வேறு எதுவும் இல்லை.கோவிலில் ஒருவர் தகராறு செய்கிறார் என்றால் காவல்துறையினரை உதவிக்கு அழைத்திருப்பதுதானே முறை? காயம்பட்டு இரத்தம் ஒழுக மயங்கிக் கிடந்த ஒருவனை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற மனிதாபிமானம் இல்லாமல் போனதற்கு அதிகாரத் திமிர் இல்லாமல் வேறென்ன காரணம் இருக்க முடியும்.அகங்காரத்தை ஒழிக்கும் இடம் தான் கோவில் என்று போதனை செய்யும் நபர்களே அகங்காரத்தை மொத்த குத்தகைககு எடுத்தவர்களாக இருப்பது தானே காலகாலமாக தொடர்கிறது.

இந்த ஆலயம் கடந்த காலத்தில் தாயகத்தில் ஏதிலிகளாக இருக்கும் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறது என்பது உண்மைதான்;.அதற்கெல்லாம் கரும்புள்ளி வைப்பது போல் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியது ஏன்?

இந்த ஆலயம் மக்களால் தெரிவு செய்ப்பட்ட நிர்வாகத்தினாலே நிர்வகிக்கப்படுகிறது.கடந்த முறை இந்த நிர்வாகத் தேர்தல் நடந்த போது தமிழக தேர்தல் தோற்றுப் போகும் அளவுக்கு உள்ளக அரசியல் சித்துவிளையாட்டக்கள் அரங்கேறியதாக ஒரு சாரார் அப்போதே குற்றம் சாட்டியிருந்தனர்.

இன்று இந்த சம்பவத்தை அந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது அது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி.

பசித்த ஒருவனுக்கு உணவளிக்க மறுத்த (அவனில் ஆயிரம் பிழைகள் இருந்தாலும் )அவனை அடித்து உதைத்து வீதியில் தூக்கி எறிந்த நபர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று தற்போதைய ஆலய நிர்வாகிகளை உடனடியாக பதவி விலகுமாறு லண்டன் தமிழ் மக்கள் கோரவேண்டும்.

ஆலயங்கள் அகங்காரமும் அதிகாரத் திமிர் பிடித்தவர்களின் கூடாரங்களாக மாறுவதை எத்தனை நாளைக்குத்தான் நாம் அனுமதிக்கப் போகிறோம்?

நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த

நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே!

http://sivasinnapodi...ும்-அடிக்கலாம்/

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

ஒருவரைத் தாக்கியவரை லண்டனிலும் கைது செய்ய மாட்டார்களோ?

சம்பவம் உண்மையாக இருந்தால் - ஆலய நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்திருக்க வேண்டும்!

Link to comment
Share on other sites

சம்பவம் உண்மையாக இருந்தால் - ஆலய நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்திருக்க வேண்டும்!

[/quote[size=5]கோயில் நிர்வாகிகள் உட்பட சுமார் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். கோயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். கோயில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்துக்கு, கோயில் நிர்வாகம் இதுவரை எதுவித மன்னிப்பையும் கோரவிலை. மாறாக எதுவும் நடக்காததுபோல கோயிலை மீண்டும் திறந்து பூசைகளை நடத்திவருகின்றனர்.[/size]

Link to comment
Share on other sites

புலத்தில் யாழ்ப்பாணியம் புதிய முகங்களுடன் ஆளமாகவே வேரூன்றியள்ளது என்பதற்கு சிறப்பான உரைகல் வேறு தேடினாலும் கிடைக்காது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனத்திற்கு, விடுதலை வேண்டிப் போராடியவர்களுக்காக, மவுனமாகக் கண்ணீர் வடிப்பதைத் தவிர, வேறொன்றும் சொல்ல முடியவில்லை, நவத்தார்!

Link to comment
Share on other sites

இந்த இனத்திற்கு, விடுதலை வேண்டிப் போராடியவர்களுக்காக, மவுனமாகக் கண்ணீர் வடிப்பதைத் தவிர, வேறொன்றும் சொல்ல முடியவில்லை, நவத்தார்!

[size=3][size=1][size=4]'அழுவதும் தொழுவதும் அடங்கிக் கிடப்பதும் எமது தலைவிதியல்ல-[/size][/size][/size]

[size=3][size=1][size=4]எழுவதும் எதிர்த்துநிற்பதும் தடைகளை தகர்த்து முன்னேறுவதும் [/size][/size][/size]

[size=3][size=1][size=4]காலம் எமக்கிட்ட கட்டளை'[/size][/size][/size]

Link to comment
Share on other sites

சம்பவம் உண்மையாக இருந்தால் - ஆலய நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்திருக்க வேண்டும்!

[/quote[size=5]கோயில் நிர்வாகிகள் உட்பட சுமார் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். கோயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். கோயில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்துக்கு, கோயில் நிர்வாகம் இதுவரை எதுவித மன்னிப்பையும் கோரவிலை. மாறாக எதுவும் நடக்காததுபோல கோயிலை மீண்டும் திறந்து பூசைகளை நடத்திவருகின்றனர்.[/size]

[size=4]எனவே இங்கிலாந்து நாட்டு சட்டப்படி கோயில் நிர்வாகத்தில் பிழை இல்லை என்றே தோன்றுகின்றது. ஆக பிழை மற்றையவர் மேல் இருக்கலாம் இல்லை 'நடந்தது [/size][size=4]என்ன[/size] [size=4]என்பது முழுமையாக' இந்தக்கட்டுரையில் எழுதப்படவில்லை என்றே எண்ணுகிறேன். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எனவே இங்கிலாந்து நாட்டு சட்டப்படி கோயில் நிர்வாகத்தில் பிழை இல்லை என்றே தோன்றுகின்றது. ஆக பிழை மற்றையவர் மேல் இருக்கலாம் இல்லை 'நடந்தது என என்பது முழுமையாக; இந்தக்கட்டுரையில் எழுதப்படவில்லை என்றே எண்ணுகிறேன். [/size]

சாதியை எழுதாமல் நவத்தாரால் எழுதமுடியாது.

லா சப்பலில் இப்படி ஒரு பதினைந்து பேராவது திரிகிறார்கள். இவர்களுக்கு ஆலயங்களும் சில நல்ல குணம் படைத்த உணவு விடுதிகளுமே சோறு போடுகின்றன.

பல வருடங்களாக சோறு போடும் இவர்கள் ஒரு நாள் தப்பை சுட்டிக்காட்டினால் அதை தொடர்ந்து ஒருத்தர் மீறினால் அதனால் தண்டிக்கப்பட்டால் இங்கு குத்திமுறியும் இவர்களில் எவராவது அவர்களுக்கு ஒரு நாள் சோறு போட்டிருப்பார்களா? போட தயாரா? விலாசம் தருவீர்களா அனுப்பி வைக்கின்றேன்.

உடனே சாதியம் யாழ்ப்பணியம் இந்து என சாட்டை எடுத்து உதவி செய்வோரை வைய்து என்ன காணப்போகின்றோம்?????????

இப்படித்தான் பிரபாகரன் என்பவர் மீது பல சாட்டைகளை வீசி வீழ்த்தினோம்.

தற்போது எதுவுமில்லாமல் கண்டவனிடம் வாங்குகின்றோம். பல்லிளித்து நிற்கின்றோம். :( :( :(

Link to comment
Share on other sites

எனவே இங்கிலாந்து நாட்டு சட்டப்படி கோயில் நிர்வாகத்தில் பிழை இல்லை என்றே தோன்றுகின்றது. ஆக பிழை மற்றையவர் மேல் இருக்கலாம் இல்லை 'நடந்தது என என்பது முழுமையாக; இந்தக்கட்டுரையில் எழுதப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அவர்களுக்கு அடிக்கிறார்கள்'

செய்திகளின் சாரம்சம் இதுதான் . இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் , வல்லிபுரத்துக்கருகில் உள்ள பிள்ளையார்கோயலடி சம்பவம் , இப்போது புலத்தில் நடந்த சம்பவம் என்பன கட்டுரைக்கு ஆதாரமாக வலுசேர்க்கப்படுள்ளன. இந்தக்கால இடைவெளியில் இவ்வளவு இளப்புகளைக் கொடுத்தும் இந்த சமூகம் பன்முகப்படுத்தப்பட்டதா ??????? ( சிவிலைஸ் ) என்பதே இங்குள்ள கேள்வி . ஆம் என்றால் இப்படிப்பட்ட சீழ்களும் துர்நாற்றங்களும் ஆம் என்பதை கேலிக்கூத்தாக்கி தங்கள் கோரமுகங்களை மீண்டும் மீண்டும் ஆளப்பதிக்கின்றன என்றே சொல்வேன் .

Link to comment
Share on other sites

'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அவர்களுக்கு அடிக்கிறார்கள்'

செய்திகளின் சாரம்சம் இதுதான் . இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் , வல்லிபுரத்துக்கருகில் உள்ள பிள்ளையார்கோயலடி சம்பவம் , இப்போது புலத்தில் நடந்த சம்பவம் என்பன கட்டுரைக்கு ஆதாரமாக வலுசேர்க்கப்படுள்ளன. இந்தக்கால இடைவெளியில் இவ்வளவு இளப்புகளைக் கொடுத்தும் இந்த சமூகம் பன்முகப்படுத்தப்பட்டதா ??????? ( சிவிலைஸ் ) என்பதே இங்குள்ள கேள்வி . ஆம் என்றால் இப்படிப்பட்ட சீழ்களும் துர்நாற்றங்களும் ஆம் என்பதை கேலிக்கூத்தாக்கி தங்கள் கோரமுகங்களை மீண்டும் மீண்டும் ஆளப்பதிக்கின்றன என்றே சொல்வேன் .

[size=1][size=4]இங்கே [/size][/size][size=4]முழுமையாக[/size] செய்தி இல்லை.

[size=1][size=4]ஒரு சம்வத்தை வைத்து ஒருவர் தனது விளக்கத்தையும் சில வலுச்சேர்ப்புக்களையும் செய்துள்ளார்.[/size][/size]

[size=4]இது இணைக்கப்படவேண்டிய இடமும் இது இல்லை, அநேகமாக சமூக சாராளம் பகுதியில் இணைத்து விவாதிக்கப்பட வேண்டிய விடயம். [/size]

Link to comment
Share on other sites

[size=1][size=4]இங்கே [/size][/size][size=4]முழுமையாக[/size] செய்தி இல்லை.

[size=1][size=4]ஒரு சம்வத்தை வைத்து ஒருவர் தனது விளக்கத்தையும் சில வலுச்சேர்ப்புக்களையும் செய்துள்ளார்.[/size][/size]

இது இணைக்கப்படவேண்டிய இடமும் இது இல்லை, அநேகமாக சமூக சாராளம் பகுதியில் இணைத்து விவாதிக்கப்பட வேண்டிய விடயம்.

இதுதானே கூடாது .......... ஆக சொல்லவந்த செய்தி உங்களுக்கு இஞ்சி சாப்பிட்டமாதிரி இருக்கின்றது . நவம் போட்ட இடம் பிழை . நல்லாயிருக்கு அகூதா .

Link to comment
Share on other sites

சிட்னி முருகன் கோயில்லயும் இந்த விளையாட்டு இருக்கு சாப்பாடு போய் நிக்குற ஆக்கள ஒருமையில பேசுறது.... மதிக்கிறது இல்லை.... நிர்வாகத்துக்குள் அரசியல் உள்குத்துகள் etc etc

Link to comment
Share on other sites

இதுதானே கூடாது .......... ஆக சொல்லவந்த செய்தி உங்களுக்கு இஞ்சி சாப்பிட்டமாதிரி இருக்கின்றது . நவம் போட்ட இடம் பிழை . நல்லாயிருக்கு அகூதா .

[size=4]சொல்லவந்தது செய்தி அல்ல என மேலே சொல்லியுள்ளேன். இது ஒருவரின் அரைகுறை விளக்கமும் அவரின் கருத்தும் - அது உங்களுக்கு செய்தியாக இருந்தால் நான் என்ன செய்வது ?[/size]

[size=4]இன்னொரு திரியை சமூக சாரளத்தில் ஆரம்பியுங்கள், அதில் விவாதிப்போம். [/size]

Link to comment
Share on other sites

சாதியை எழுதாமல் நவத்தாரால் எழுதமுடியாது.

லா சப்பலில் இப்படி ஒரு பதினைந்து பேராவது திரிகிறார்கள். இவர்களுக்கு ஆலயங்களும் சில நல்ல குணம் படைத்த உணவு விடுதிகளுமே சோறு போடுகின்றன.

பல வருடங்களாக சோறு போடும் இவர்கள் ஒரு நாள் தப்பை சுட்டிக்காட்டினால் அதை தொடர்ந்து ஒருத்தர் மீறினால் அதனால் தண்டிக்கப்பட்டால் இங்கு குத்திமுறியும் இவர்களில் எவராவது அவர்களுக்கு ஒரு நாள் சோறு போட்டிருப்பார்களா? போட தயாரா? விலாசம் தருவீர்களா அனுப்பி வைக்கின்றேன்.

உடனே சாதியம் யாழ்ப்பணியம் இந்து என சாட்டை எடுத்து உதவி செய்வோரை வைய்து என்ன காணப்போகின்றோம்?????????

இப்படித்தான் பிரபாகரன் என்பவர் மீது பல சாட்டைகளை வீசி வீழ்த்தினோம்.

தற்போது எதுவுமில்லாமல் கண்டவனிடம் வாங்குகின்றோம். பல்லிளித்து நிற்கின்றோம். :( :( :(

எங்களுக்கு இணையங்களில் அதைசெய்தோம் இதைசெய்தோம் என்று இலவச விளம்பரம் தேடி தமுக்கடிச்சு பழக்கம் இல்லை .

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் அண்ணா இதுக்குள்ள ஏன் யாழ்ப்பாணியம் வந்ததெண்டு அறியலாமோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் அண்ணா இதுக்குள்ள ஏன் யாழ்ப்பாணியம் வந்ததெண்டு அறியலாமோ? :D

இலவசமாக பெற்ற வைத்த ஆயுதங்களை ஏன் இங்கு பாவிக்கக்கூடாது. வந்தால் மலை போனால் ......??? :lol::D :D

எங்களுக்கு இணையங்களில் அதைசெய்தோம் இதைசெய்தோம் என்று இலவச விளம்பரம் தேடி தமுக்கடிச்சு பழக்கம் இல்லை .

கிளிஞ்சுது போ........

இப்படி எத்தனை பேரைப்பார்த்திட்டம்.

வாய்ச்சொல்லில் வீரரடி................கிளியே :D :D

Link to comment
Share on other sites

இலவசமாக பெற்ற வைத்த ஆயுதங்களை ஏன் இங்கு பாவிக்கக்கூடாது. வந்தால் மலை போனால் ......??? :lol::D :D

கிளிஞ்சுது போ........

இப்படி எத்தனை பேரைப்பார்த்திட்டம்.

வாய்ச்சொல்லில் வீரரடி................கிளியே :D :D

நாங்களும் யாழ் இணையத்திலை பாத்துக்கொண்டுதான் இருக்கிறம் இந்த வாய்சொல்வீரர்களின்ரை கூத்துகளை :lol: :lol: :D:icon_idea: :icon_idea: .

Link to comment
Share on other sites

ஐயோ ஏன் France உறவுகள் 2 பேரும் சண்டை பிடிகிறிங்க? அதுவும் ஒண்டா எல்லாம் மீட் பண்ணி கபே எல்லாம் குடிச்சிட்டு

Come on guys lets be friends :D

Link to comment
Share on other sites

மிகவும் பிற்போக்கான சிந்தனைகளில் தான் எம்மில் இன்றும் பலர் ,இவர்களெல்லாம் வெளிநாடுவந்தும் மாறவில்லை ,அவர்கள் உலகமே ஒரு சிறிய வட்டம் தான் .

நேற்று பி.பி.சி யில் இந்த செய்தியை கேட்கும் போது ஒரு வெட்கி தலை குனியவேண்டிய இனமாக இருந்தது எம் இனம் .ஒரு செல்டரில் வசிக்கும் ஒருவரை,ஒரு சுகமில்லாதவரை உணவு கேட்டதற்கு இப்படி அடித்து வெளியில் தூக்கி போட்டிருக்கின்றார்கள் என்றால் மீண்டும் எங்களை ஒரு காட்டுமிராண்டிகளாக காட்டும் ஒரு நிகழ்வே இது .

அவர் குடித்திருக்கலாம்,தகாத வார்த்தைகள் பேசி இருக்கலாம் ஆனால் அதற்கு சட்டத்தை தமது கைகளில் எடுப்பது என்பது அவர்களின் அறிவின் அளவை காட்டுகின்றது .

இதற்குள் பல சமூக விசகிருமிகள் தேசியதற்கு ஆதரவான் கோவில் ,அன்னதானம் செய்யும் கோவில் என்று அவர்களா செய்ததை நியாயபடுத்த நினைப்பது அதைவிட கேவலம் .

Link to comment
Share on other sites

இது அதிர்வு இணையத்தில் வந்த செய்தி.

[size=4]லண்டனில் உள்ள ஒரு பெயர்போன கோவிலில், சாப்பாடு கேட்டுச் சென்ற தமிழன் ஒருவனைத் தாக்கி வெளியே கொண்டு வந்துபோட்டுள்ளனர் நிர்வாகத்தில் இருக்கும் சிலர். இதற்கு அக்கோயிலில் உள்ள குருக்களும் துணைபோன சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை(17) இடம்பெற்றுள்ளது. அட பேர்போன கோயில் என்று ஏன் எழுதவேனும் ? அது ஈலிங் அம்மன் கோவில் தான் ! அடிவாங்கிய இளைஞன் கோமா நிலையில் உள்ளார், கோவில் சீல் வைக்கப்பட்டது ! சுமார் 11 பேர்கைதாகி பின்னர் விடுதலையானார்கள் ! அப்ப என்ன தான் அங்கே நடந்தது ? வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

லண்டனில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு, பேர்போன பழைய கோவில்களில் ஒன்று ஈலிங் அம்மன் கோவில் ஆகும். இக்கோயில் நிர்வாகிகள், ஊரில் உள்ள தமிழ் மக்களுக்கு பல உதவிகளைச் செய்துள்ளனர். பல ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப்பு, விதவைகள் மறுவாழ்வு என்று பல நல்ல காரியங்களைச் செய்துள்ளனர். அதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால் இவ்வளவு ஆண்டுகளாக இவர்கள் செய்து வந்த நற்பணிகள் எல்லாம் ஒரே நிமிடத்தில் கலைந்துபோய்விட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் ஈலிங் அம்மன் கோவிலுக்குச் சென்று, உணவு உள்ளதா என்று கேட்டுள்ளார். குறிப்பிட்ட இந்த இளைஞர் வல்வெட்டித்துறைச் சேர்ந்தவர் என்றும், அவர் வீடற்ற நிலையில் ஒரு அகதியாக, வாழ்ந்து வருகிறார் என்றும் அதிர்வு இணையம் அறிகிறது.

beg-for-life.jpgகுறிப்பிட்ட இளைஞர் விரக்தியில், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், சம்பவ தினத்தன்று அவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உணவு கேட்ட இளைஞருக்கு, கோவில் நிர்வாகிகள் கூறிய பதில் ஆத்திரமூட்டியுள்ளது. ஒரு கொஞ்ச சாப்பாடு கூட இல்லையா என்று அவர் கேட்டுள்ளார். ஆனால் உணவு முடிந்துவிட்டதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதனை அடுத்து ஏற்பட்ட வாய் தர்கத்தில், கோயிலுக்கு உள்ளேயே வைத்து அவ்விளைஞர் பலமாகாத் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை அப்படியே தூக்கிவந்து வெளியே போட்டுள்ளனர் சிலர். இவர்கள் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள் பொலிசார். இதனிடையே பொலிசாருக்கு அடித்துச் சொல்லிவிடலாம் என, ஒருவர் தனது மோபைல்போனைத் தூக்க, அங்கே நின்றிருந்த ஐயர் ஒருவர் பொலிசுக்கு போன் பண்ணவேண்டாம் ! இது பொலிஸ் கேஸ் ஆகிவிடும் என்று பகிரங்கமாக உரக்க கூறியுள்ளார் என்றால் பாருங்களேன் ! குடித்துவிட்டு ரோட்டில் விழுந்துவிட்டதாக பொலிசார் நினைக்கட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.

பசி என்று வந்தால், எதிரி என்றாலும் உணவுகொடுக்கும் மரபில் வந்தவர்கள் தமிழர்கள். அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! கோயில்..... ஒரு திருப்பணி புரியும் புனிதஸ்தலம் ! தெய்வாதீனம் மிக்க இடம் .... அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! ஒரு ஈழத் தமிழன் அதுவும் வீடு இல்லாதான ஒரு எதிலி ! அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! சரி அடிக்காமல் அவரை அப்படியே பிடித்து வெளியே கொண்டுபோய் விட்டிருக்கலாம் அல்லவா ? படு மோசமாக அடித்து கோமா நிலைக்கு அவரைத் தள்ளி, பின்னர் பொலிசையும் அழைக்காமல் விடுவது எந்தவகையில் ஞாயம் ? இதனைப் பார்த்த வேற்றினப் பெண்(ஆங்கிலப் பெண்மணி) ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்தபொலிசார், குறிப்பிட்ட 30 வயது இளைஞன் பிழைக்கமாட்டார் எனக் கருதி ஏல்-அம்பூலன்சை(உலங்கு வானூர்தி மருத்துவப் பிரிவை) வரவழைத்துள்ளனர். கோயில் நிர்வாகிகள் உட்பட சுமார் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். கோயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். கோயில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்துக்கு, கோயில் நிர்வாகம் இதுவரை எதுவித மன்னிப்பையும் கோரவிலை. மாறாக எதுவும் நடக்காததுபோல கோயிலை மீண்டும் திறந்து பூசைகளை நடத்திவருகின்றனர். பாதிக்கப்பாட்ட இளைஞனுக்கு என்ன உதவிகளைச் செய்தார்கள் என்று கோயில் நிர்வாகத்திடம் அதிர்வு இணையம் கேட்டது, இது நீதிமன்றில் உள்ள வளக்கு இதுகுறித்து எதுவித கருத்தையும் நான் கூறமுடியாது என்கிறார்கள். கேள்விக்கு கோயில் நிர்வாகம் எந்தப் பதிலையும் கூறவில்லை. நடந்த இச் சம்பவத்தை தமிழ் ஊடகங்கள் வெளியே கொண்டுவரக்கூடாது என்பதில் மட்டும் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவர் விடையங்களில் அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை ! இதுவே ஒரு தமிழ் இளைஞன் லண்டனில் உள்ள புத்த விகாரை ஒன்றுக்குச் சென்று உணவுகேட்டபோது, அவர் தாக்கப்பட்டிருந்தால், தமிழர்கள் அந்த புத்தவிகாரை நிர்வாகிகளை சும்மா விட்டிருப்பார்களா ? இல்லையேல் கிறீஸ்த்தவ மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் வழிபாட்டுஸ்தலங்களில் இவ்வாறு சம்பவங்கள் ஏதாவது நடந்துதான் உள்ளதா ? கோவிலில் என்ன நடந்தாலும் குற்றமில்லையா ? இதனை தமிழர்கள் தட்டிக்கேட்க்கமாட்டார்களா ?

ஈழத்தில் தமிழர்களை யாராவது அடித்தால் மட்டும் தானா நாம் குரல்கொடுப்போம் ? வேறு இடங்களில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நாம் தட்டிக்கேட்க்க மாட்டோமா ?[/size]

http://www.athirvu.c...ments=1&id=3375

[size=5]என்னுடைய கேள்வி என்னவென்றால் அந்த இளைஞன் தவறு செய்திருந்தால் காவல்துறையை அழைக்க வேண்டியது தானே? அவனை அடித்து உதைக்கு காயப்படுத்தி தூக்கி வீதிவது எறிவது இங்கே சிலருக்கு நியாமாகப்படுகிறது.கோவிலுக்குள்ள வந்து சத்தம் போட்டால் அடித்து உதைத்து தூக்கி எறிவோம் என்பது தான் உயரிய தமிழ் மரபா? இதைத்தானே அன்றில் இருந்து இன்றவரை செய்து வருகின்றீர்கள்.[/size]

[size=5]ஒருவர் ஆபத்தில் இருந்தால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது ஐரோப்பிய சட்டம்.[/size]

[size=5]பிரித்தானிய வெள்ளை இனப் பெண்ணுக்கு இருந்த மனிதாபிமானம் ஏன் நம்முடைய உயர் திரு கனவான்களுக்கு இல்லாமல் போனது?[/size]

[size=5]இந்த சம்பவத்தை விசாரித்து அறிந்த போது எனக்கு 1964 ல் நடந்த அந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது அடக்க முடியாது கோபம் வந்தது . (நானும் 1990களில் பாரிஸ் நகரத்தில் ஒரு சாதி வெறியனின் திமிரால் சாப்பாட்டுக்கு வழியில்லாதவனாக ஆக்கப்பட்ட நிலையில் பாரிஸ் முத்துமாரி அம்மன் கோவிலில் அன்னதானச் சோறு வாங்கிச் சாப்பிட்டு பசியாறிஇருக்கிறேன்) .ஐயா விசுகு தமிழனுக்கு சிங்களவன் அடித்தால் நீங்கள் 1958ல் இருந்து வரலாற்றை தோண்டி எடுக்கலாம் நாங்கள் எங்களைப் பாதித்த சம்பங்களை சொல்லக் கூடாது.இது தான் உங்களது மேன்மை தங்கிய நியாயமோ?[/size]

[size=5]1964 ல் நடந்த சம்பவத்துக்கும் இப்போது நடந்த சம்பத்துக்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம்.ஆனால் இரண்டுக்கும் அடிப்படை என்ன?அதிகாரத் திமிர் என்பது தானே![/size]

[size=5]என்னைப் பொறுத்தவரை இனவாதியான சிங்களவனை விட இனவாதமா? இலங்கையில் அது இல்லை.அதெல்லாம் முன்னர் இருந்தது இப்போது தமிழர்களும் நாங்களும் சமாதானமாக வாழ்கிறோம் என்று உலகத்துக்கு சொல்லும் சிங்கள போலி ஜனநாயக வாதிகள் எப்படி ஆபத்தானவர்களோ அப்படி( முள்ளிவாக்காலுக்குப் பின்னும் சாதி வெறியால் போராளிக் குடும்பங்களினதும் பெண் பொராளிகள் பலரினது தற்கொலைகளுக்கும் மன உழைச்சல்களுக்கும் காரணமாக இருந்த) சாதி வெறியர்களை விட சாதி இல்லை அது ஒழிந்துவிட்டது என்று பம்மாத்து விடுபவர்களே ஆபத்தானவர்கள்.[/size]

[size=5]எனது ஊரான வல்லிபுரத்திலே எனது சொந்த மைத்துனனின் மகளுக்கு உப தபாலதிபர் பதவி கிடைத்தது. அந்த உப தபால் நிலையம் ஒரு மேட்டுக்குடி கனவானின் வீட்டில் இருந்தது. தன்னுடைய வீட்டுக்குள் எனது மருமகள் அதாவது உப தபால் அதிபர் வரக்கூடாது என்று அவர் சொல்லிவிட்டார்.உயர் தபால் அதிகாரிகளின் துணையோடு அவள் முதல் நாள் கடமையை பொறுப்பெடுக்கச் சென்றபோது அந்தக் கனவான் அவளை தள்ளி விழுத்தி வீட்டுக்குள் விடாமல் துரத்தியதுடன் அதிகாரிகள் முன்னிலையிலே தபால் நிலைய சாமான்களை தூக்கி வீதியில் வீசிவிட்டார்.[/size]

[size=5]அரசு நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அவரை யாரும் தண்டிக்கவில்லை.[/size]

[size=5]இப்போது அந்த தபால் நிலையம் எனது உறவினர் ஒருவரின் வீட்டில் இயங்கிவருகிறது.[/size]

[size=5]இது நடந்தது 1950 திலே 60 திலோ இல்லை. 2010 ல் நடந்தது.[/size]

[size=5]இறுதியாக அடிப்படையில் கருத்தியல் ரீதியாக நாங்கள் இன்னமும் சாதியச் சமூகமாக இருப்பதினாலேயே அதற்கான முதல் கொடுப்பனவாக மாநிடத்தை தொலைக்கிறோம். மாநிடம் தொலைந்த பிறகு சுயநலம் சந்தர்ப்பவாதம் பிழைப்புவாதம் முதலான ஒட்டு மொத்த பிற்போக்குத் தனங்களின் இருப்பிடமாக நமது சமூகம் இருப்பதில் ஆச்சரிமில்லை.தொலைந்து போன அந்த மாநிடத்தை தேடி கண்டுபிடிக்க முயலும் நாங்கள் பைத்தியக்காரர்களே? என்று பல தடவை நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன் [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவையும் சொல்லத் துணிந்த நீங்கள் (கட்டுரையாளர்).. கோவிலை சொல்லாமல் இனங்காட்டாமல் மறைப்பது ஏனோ..???! உங்களுக்கும் அதிகார வர்க்கத்தின் மீது அச்சமோ..????! அல்லது அம்மாளாச்சி சபிச்சிடுவா என்ற பயமோ..???!

இந்தத் தலைப்பிலும்.. இந்த தலைப்போடு சம்பந்தப்பட்ட விடயங்கள் பகிரப்பட்டுள்ளன.

ஈலிங் அம்மன் ஆலயத்தில் பிரச்சனை?

http://www.yarl.com/...howtopic=106658

Link to comment
Share on other sites

மிகவும் பிற்போக்கான சிந்தனைகளில் தான் எம்மில் இன்றும் பலர் ,இவர்களெல்லாம் வெளிநாடுவந்தும் மாறவில்லை ,அவர்கள் உலகமே ஒரு சிறிய வட்டம் தான் .

நேற்று பி.பி.சி யில் இந்த செய்தியை கேட்கும் போது ஒரு வெட்கி தலை குனியவேண்டிய இனமாக இருந்தது எம் இனம் .ஒரு செல்டரில் வசிக்கும் ஒருவரை,ஒரு சுகமில்லாதவரை உணவு கேட்டதற்கு இப்படி அடித்து வெளியில் தூக்கி போட்டிருக்கின்றார்கள் என்றால் மீண்டும் எங்களை ஒரு காட்டுமிராண்டிகளாக காட்டும் ஒரு நிகழ்வே இது .

அவர் குடித்திருக்கலாம்,தகாத வார்த்தைகள் பேசி இருக்கலாம் ஆனால் அதற்கு சட்டத்தை தமது கைகளில் எடுப்பது என்பது அவர்களின் அறிவின் அளவை காட்டுகின்றது .

இதற்குள் பல சமூக விசகிருமிகள் தேசியதற்கு ஆதரவான் கோவில் ,அன்னதானம் செய்யும் கோவில் என்று அவர்களா செய்ததை நியாயபடுத்த நினைப்பது அதைவிட கேவலம் .

உண்மையான கருத்து....

Link to comment
Share on other sites

[size=4]

இறுதியாக அடிப்படையில் கருத்தியல் ரீதியாக நாங்கள் இன்னமும் சாதியச் சமூகமாக இருப்பதினாலேயே அதற்கான முதல் கொடுப்பனவாக மாநிடத்தை தொலைக்கிறோம். மாநிடம் தொலைந்த பிறகு சுயநலம் சந்தர்ப்பவாதம் பிழைப்புவாதம் முதலான ஒட்டு மொத்த பிற்போக்குத் தனங்களின் இருப்பிடமாக நமது சமூகம் இருப்பதில் ஆச்சரிமில்லை.தொலைந்து போன அந்த மாநிடத்தை தேடி கண்டுபிடிக்க முயலும் நாங்கள் பைத்தியக்காரர்களே? என்று பல தடவை நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

[/size]

[size=4]உங்கள் கருத்தும் ஆதங்கமும் ஒரு கேள்வியை கேட்க வைக்கின்றது. நீங்கள் நாங்கள் இருப்பது தேவலோகம் என்றா நீங்கள் எண்ணுகிறீர்கள்? [/size]

Link to comment
Share on other sites

பல வருடங்களாக சோறு போடும் இவர்கள் ஒரு நாள் தப்பை சுட்டிக்காட்டினால் அதை தொடர்ந்து ஒருத்தர் மீறினால் அதனால் தண்டிக்கப்பட்டால் இங்கு குத்திமுறியும் இவர்களில் எவராவது அவர்களுக்கு ஒரு நாள் சோறு போட்டிருப்பார்களா? போட தயாரா? விலாசம் தருவீர்களா அனுப்பி வைக்கின்றேன்.

என்னுமொருவன் மேல் கைவைக்கும் அதிகாரத்தை யார் அவர்களுக்கு கொடுத்தது? என்ன பிழைவேண்டுமானாலும் செய்யட்டும் தண்டனை கொடுக்க அந்த நாட்டு அரசாங்கமும் சட்டமும் இருக்கின்றது. தண்டிக்கும் அதிகாரத்தை யார் அல்லது எது கோயில் நிர்வாகத்துக்கு கொடுத்தது? ஏதோ சர்வசாதாரணமாக தண்டிக்கப்பட்டால் என்று எழுதுகின்றீர்கள். திமிர்த்தனமான இவ்வாறான மனோநிலையுடைய அரசியலுடைய ஒவ்வொருவரும் சமூகத்தின் சாபக்கேடு. சாபங்கள் இறுதியில் வெள்ளை பிரட்டிக் கிடக்கும் என்பது நேரில்கண்டது வரலாறு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.