Jump to content

தமிழனை எவரும் அடிக்கலாம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=5] . (நானும் 1990களில் பாரிஸ் நகரத்தில் [/size][size=5]ஒரு சாதி வெறியனின் திமிரால் [/size][size=5]சாப்பாட்டுக்கு வழியில்லாதவனாக ஆக்கப்பட்ட நிலையில் [/size][size=5]பாரிஸ் முத்துமாரி அம்மன் கோவிலில் அன்னதானச் சோறு வாங்கிச் சாப்பிட்டு பசியாறிஇருக்கிறேன்[/size][size=5]) .ஐயா விசுகு [/size]

உங்களது ஆத்திரம் விளங்கிக்கொள்ளக்கூடியதே.

அதை நானும் ஆமோதிக்கின்றேன்

நாங்கள் இங்கே குத்துப்படுகின்றோம்

தற்போது அந்தக்கோயிலுக்கு சென்றீர்களானால் அடித்தவர்கள் பரிமாற அடிவாங்கியவர் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்.

இதைப்புரியாமல் இங்கு வெளியில் நின்று எழுதுபவர்கள் பற்றியே எனது அனுதாபம்.

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னுமொருவன் மேல் கைவைக்கும் அதிகாரத்தை யார் அவர்களுக்கு கொடுத்தது? என்ன பிழைவேண்டுமானாலும் செய்யட்டும் தண்டனை கொடுக்க அந்த நாட்டு அரசாங்கமும் சட்டமும் இருக்கின்றது. தண்டிக்கும் அதிகாரத்தை யார் அல்லது எது கோயில் நிர்வாகத்துக்கு கொடுத்தது? ஏதோ சர்வசாதாரணமாக தண்டிக்கப்பட்டால் என்று எழுதுகின்றீர்கள். திமிர்த்தனமான இவ்வாறான மனோநிலையுடைய அரசியலுடைய ஒவ்வொருவரும் சமூகத்தின் சாபக்கேடு. சாபங்கள் இறுதியில் வெள்ளை பிரட்டிக் கிடக்கும் என்பது நேரில்கண்டது வரலாறு.

தண்டிக்கப்பட்டால் என்ற வார்த்தை தப்பானது

கைகலப்பில் முடிந்தால் என்று வந்திருக்கணும்.

தவறுக்கு வருந்துகின்றேன்.

(எப்ப விழுவான் என்று காத்திருந்து வந்து அடித்த மாதிரி இருக்கு. நன்றிகள் :D )

Link to comment
Share on other sites

முள்ளிவாய்காலின் பின் சிங்கள ஆமி சாப்பாடு போட முகாமில் இருந்த தமிழர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாதிரியா ?

Link to comment
Share on other sites

முள்ளிவாய்காலின் பின் சிங்கள ஆமி சாப்பாடு போட முகாமில் இருந்த தமிழர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாதிரியா ?

[size=4]ஏன் அதற்கு முன்னரும் போட்டர்கள், சாப்பிட்டோம்.[/size]

[size=4]அதற்கு பின்னரும் போடுகிறார்கள், சாப்பிடுகிறோம்.[/size]

Link to comment
Share on other sites

அதுதானே அதற்க்கு முதலும் இலங்கை அரசாங்கம் தானே நிவாரணம் கொடுத்திச்சு :D

Link to comment
Share on other sites

என்னோட கேள்வி இதுக்குள்ள சாதி வெறி எங்க வந்தது?

[size=4]பொதுவாக சாதி வெறி என்று கூறப்பட்டாலும் இது பொருளாதார அடிப்படையில் உருவான சமூக பிரச்சனை. அவ்வாறு பொருளாதார வளம் மிக்கவர்கள் தமது வளத்தை தக்க வைக்க வைத்துக்கொண்ட பெயர் தான் - சாதி.[/size]

[size=4]இது எல்லா சமூகங்களிலும் நாடுகளிலும் உள்ளது. ஆனா[/size][size=4]ல் எமது மத்தியில், குறிப்பாக தாயகத்தில் கூடுதலாக உள்ளது.[/size]

[size=4]முக்கிய காரணம், சட்டம். சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் ஆர்வம் இல்லாமை. காரணம், ஆட்சி. ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த நோய் நீடிப்பதை விரும்புவர்கள்.[/size]

[size=4]மேற்குலகில் வறுமையை ஒழிக்க சமூக கொடுப்பனவுகள், சட்டத்தை ஒப்பீட்டளவில் அமுல்படுத்தல் என்பன உள்ளமையால் இங்கு நடுத்தர வர்க்கம் வரை சாதி என்ற பொருளாதார பிரிவுகள் பெரிதளவில் தெரிவதில்லை.[/size]

[size=4]இலண்டன் கோயிலில் நடந்த நிகழ்வுக்கு காரணமாக எழுத்தாளர் வைத்த காரணம் - சாதி. ஆனால் அதற்கு அதாவது அவர் 'சாதி குறைந்தவர்' என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால், அவர் நிச்சயம் வறுமை மற்றும் பொருளாதார நலிவு பெற்றவர். எனவே அவர் 'சாதி குறைந்தவர்' என்ற அனுகூலம் வைக்கப்பட்டுள்ளது.[/size]

Link to comment
Share on other sites

[size=4]பொதுவாக சாதி வெறி என்று கூறப்பட்டாலும் இது பொருளாதார அடிப்படையில் உருவான சமூக பிரச்சனை. அவ்வாறு பொருளாதார வளம் மிக்கவர்கள் தமது வளத்தை தக்க வைக்க வைத்துக்கொண்ட பெயர் தான் - சாதி.[/size]

[size=4]இது எல்லா சமூகங்களிலும் நாடுகளிலும் உள்ளது. ஆனா[/size][size=4]ல் எமது மத்தியில், குறிப்பாக தாயகத்தில் கூடுதலாக உள்ளது.[/size]

[size=4]முக்கிய காரணம், சட்டம். சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் ஆர்வம் இல்லாமை. காரணம், ஆட்சி. ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த நோய் நீடிப்பதை விரும்புவர்கள்.[/size]

[size=4]மேற்குலகில் வறுமையை ஒழிக்க சமூக கொடுப்பனவுகள், சட்டத்தை ஒப்பீட்டளவில் அமுல்படுத்தல் என்பன உள்ளமையால் இங்கு நடுத்தர வர்க்கம் வரை சாதி என்ற பொருளாதார பிரிவுகள் பெரிதளவில் தெரிவதில்லை.[/size]

[size=4]இலண்டன் கோயிலில் நடந்த நிகழ்வுக்கு காரணமாக எழுத்தாளர் வைத்த காரணம் - சாதி. ஆனால் அதற்கு அதாவது அவர் 'சாதி குறைந்தவர்' என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால், அவர் நிச்சயம் வறுமை மற்றும் பொருளாதார நலிவு பெற்றவர். எனவே அவர் 'சாதி குறைந்தவர்' என்ற அனுகூலம் வைக்கப்பட்டுள்ளது.[/size]

ஐயா நீங்கள் தான் தவறாக விளக்க கொடுக்க முற்படுகிறீர்கள்

நான் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்

1964 ல் நடந்த சம்பவத்துக்கும் இப்போது நடந்த சம்பத்துக்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம்.ஆனால் இரண்டுக்கும் அடிப்படை என்ன?அதிகாரத் திமிர் என்பது தானே! என்று.

ஈலிங் அம்மன் கோவில் நடந்ததை சாதிப் பிரச்சனை என்று நான் குறிப்பிவில்லை.அங்கே சாதி என்ற பிரச்சனையும் எழவில்லை..நான் ஒப்பிட்டு குறிப்பிட்டது கோவிலக்குள் உள்ள அதிகாரத்திமிர் பற்றிய பிரச்சனையை தான்.

அன்றைக்கு கோவிலுக்குள் நுழைந்ததற்காவும் அந்த சிறுவன் போல் வாழைப்பழத்தை திருடியதற்காகவும் அடித்தீர்கள்.இன்று உணவு கேட்டதற்காக அல்லது கோவிலுக்குள் எதிர்த்துப் பேசிதற்காக அடிக்கிறீர்கள்.

இரண்டிற்கும் அடிப்படையாக இருப்பது இந்த அதிகாரத் திமிர்தான் என்னுடைய வாதம்.

Link to comment
Share on other sites

சில விடயங்களில் அதிகார திமிரும் சாதி திமிரும் இருக்குறதில தப்பே இல்லை :D

அதுக்காக அடிதடியில் இறங்குவது தப்பு..

Link to comment
Share on other sites

உங்களது ஆத்திரம் விளங்கிக்கொள்ளக்கூடியதே.

அதை நானும் ஆமோதிக்கின்றேன் ( இதுதான் அத்தர் பல்டி )

நாங்கள் இங்கே குத்துப்படுகின்றோம்

தற்போது அந்தக்கோயிலுக்கு சென்றீர்களானால் அடித்தவர்கள் பரிமாற அடிவாங்கியவர் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்.

இதைப்புரியாமல் இங்கு வெளியில் நின்று எழுதுபவர்கள் பற்றியே எனது அனுதாபம்.

ஆக பங்காளியள்தான் இதிலை கருத்து எழுதலாம் . மற்றவை வாயுக்கை சூதர் வைச்சுக் கொண்டு பார்த்துக்கொண்டு நிக்கவேணும் . இந்த கருத்துகளத்தில எல்லாரும் சுதந்திரமா தங்கடை கருத்தை எழுதலாம் எண்டு நான்தான் பிழையா விளங்கிபோட்டன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எனவே இங்கிலாந்து நாட்டு சட்டப்படி கோயில் நிர்வாகத்தில் பிழை இல்லை என்றே தோன்றுகின்றது. ஆக பிழை மற்றையவர் மேல் இருக்கலாம் இல்லை 'நடந்தது [/size][size=4]என்ன[/size] [size=4]என்பது முழுமையாக' இந்தக்கட்டுரையில் எழுதப்படவில்லை என்றே எண்ணுகிறேன். [/size]

சில நேரத்தில் அகூதா கூட சின்ன பிள்ளைத் தனமாக எழுதுகிறார் என அர்ஜீன் அண்ணா சொன்னதில் ஒரு தப்பும் இல்லை...அகூதா கனடாவில் யாராவது ஒருவர் பிழை செய்தால் அவரை தண்டிக்கும் அதிகாரம் உங்களுக்கு தரப்பட்டு இருக்கா?...இங்கே இந்த இளைஞர் செய்தது சரி என ஒருவரும் சொல்லவில்லை ஆனால் அவ்விளைஞரை தண்டிக்கும் அதிகாரத்தை கோயில் நிர்வாகத்திற்கு கொடுத்தது யார்?...பணமும்,அதிகாரமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?...சிங்களவன் வன்முறையாளன் என அவனுக்கு எதிராகப் போராடிக் கொண்டு நாங்களும் கடைசியில் அதையே தான் செய்கிறோம்...இதையே மாற்றுக் கருத்தாளார் நட‌த்திற கோயில் என்டால் வரிந்து கட்டிக் கொண்டு இருப்பார்கள் இங்கு கிழிப்பதற்கு...இப்படி எல்லாத்திற்கும் ஆமாம் போட்டுக் கொண்டு இருப்பததால் தான் உண்மை தெரிஞ்ச‌ மக்கள் கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மாக விலகிப் போகிறார்கள்.

யார் பசி என வந்து கேட்டாலும் அவன் எதிரியாய்,துரோகியாய் இருந்தால் கூட‌ அவர்கள் கேட்டவுட‌ன் பசி தீர்ப்பது தான் தமிழனின் மர‌பு...செய்த பிழைக்கு மன்னிப்பு கேட்காமல் அதை விட‌ அவர்கள் செய்தது சரியென வக்காலத்து வாங்கவென ஒரு பணத் திமிர் பிடித்த கூட்ட‌மும் யாழில் இருப்பது தான் வேதனை.

தலைப்பை பணமும்,அதிகார‌மும் இருந்தால் அது இல்லாவனுக்கு அடிக்கலாம் என மாற்றுங்கோ

Link to comment
Share on other sites

ஐயா நீங்கள் தான் தவறாக விளக்க கொடுக்க முற்படுகிறீர்கள்

நான் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்

1964 ல் நடந்த சம்பவத்துக்கும் இப்போது நடந்த சம்பத்துக்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம்.ஆனால் இரண்டுக்கும் அடிப்படை என்ன?அதிகாரத் திமிர் என்பது தானே! என்று.

ஈலிங் அம்மன் கோவில் நடந்ததை சாதிப் பிரச்சனை என்று நான் குறிப்பிவில்லை.அங்கே சாதி என்ற பிரச்சனையும் எழவில்லை..நான் ஒப்பிட்டு குறிப்பிட்டது கோவிலக்குள் உள்ள அதிகாரத்திமிர் பற்றிய பிரச்சனையை தான்.

அன்றைக்கு கோவிலுக்குள் நுழைந்ததற்காவும் அந்த சிறுவன் போல் வாழைப்பழத்தை திருடியதற்காகவும் அடித்தீர்கள்.இன்று உணவு கேட்டதற்காக அல்லது கோவிலுக்குள் எதிர்த்துப் பேசிதற்காக அடிக்கிறீர்கள்.

இரண்டிற்கும் அடிப்படையாக இருப்பது இந்த அதிகாரத் திமிர்தான் என்னுடைய வாதம்.

[size=4]இரண்டு விடயமும் பழங்கள் தான், ஆனால் ஒன்று வாழைப்பழம் மற்றையது ஆப்பிள்.[/size]

[size=4]ஊரில்(வாழைப்பழம்) நடப்பதற்கு அடிப்படை காரணம் ஆட்சி, சட்டங்களை அமுலாக்கும் பண்பு இல்லாமை.[/size]

[size=4]புலத்தில்(ஆப்பிள்) நடப்பதற்கு அடிப்படை காரணம் அறியாமை, அதாவது அந்த நாட்டு சடங்களை மதிக்கும் பண்பு இல்லாமை. [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது ஆத்திரம் விளங்கிக்கொள்ளக்கூடியதே.

அதை நானும் ஆமோதிக்கின்றேன்

நாங்கள் இங்கே குத்துப்படுகின்றோம்

தற்போது அந்தக்கோயிலுக்கு சென்றீர்களானால் அடித்தவர்கள் பரிமாற அடிவாங்கியவர் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்.

இதைப்புரியாமல் இங்கு வெளியில் நின்று எழுதுபவர்கள் பற்றியே எனது அனுதாபம்.

அங்கே அடி வாங்கியவன் கோமாவில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறான் சில நேர‌ம் அவர் தப்பினார் என்டால் கோயில் நிர்வாகம் காசை கொடுத்து கேசை இல்லாமல் செய்யலாம்... அதை உங்கள மாதிரி பணக்கார‌,தேசியவாசிகள் செய்யலாம் அப்படி செய்தால் அது தப்பில்லை ஆனால் மற்றவர் செய்ய விட‌ மாட்டோம்

Link to comment
Share on other sites

சரி சரி விடுங்க எதோ சின்ன பசங்க தெரியாதனமா அடிச்சிட்டாங்க அவங்க நாளைக்கு ஒட்டு இதுக்குள்ள ஏன் நாங்க தேவைல்லாம போய்கிட்டு

Link to comment
Share on other sites

சில நேரத்தில் அகூதா கூட சின்ன பிள்ளைத் தனமாக எழுதுகிறார் என அர்ஜீன் அண்ணா சொன்னதில் ஒரு தப்பும் இல்லை...அகூதா கனடாவில் யாராவது ஒருவர் பிழை செய்தால் அவரை தண்டிக்கும் அதிகாரம் உங்களுக்கு தரப்பட்டு இருக்கா?...இங்கே இந்த இளைஞர் செய்தது சரி என ஒருவரும் சொல்லவில்லை ஆனால் அவ்விளைஞரை தண்டிக்கும் அதிகாரத்தை கோயில் நிர்வாகத்திற்கு கொடுத்தது யார்?...பணமும்,அதிகாரமும் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?...சிங்களவன் வன்முறையாளன் என அவனுக்கு எதிராகப் போராடிக் கொண்டு நாங்களும் கடைசியில் அதையே தான் செய்கிறோம்...இதையே மாற்றுக் கருத்தாளார் நட‌த்திற கோயில் என்டால் வரிந்து கட்டிக் கொண்டு இருப்பார்கள் இங்கு கிழிப்பதற்கு...இப்படி எல்லாத்திற்கும் ஆமாம் போட்டுக் கொண்டு இருப்பததால் தான் உண்மை தெரிஞ்ச‌ மக்கள் கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மாக விலகிப் போகிறார்கள்.

யார் பசி என வந்து கேட்டாலும் அவன் எதிரியாய்,துரோகியாய் இருந்தால் கூட‌ அவர்கள் கேட்டவுட‌ன் பசி தீர்ப்பது தான் தமிழனின் மர‌பு...செய்த பிழைக்கு மன்னிப்பு கேட்காமல் அதை விட‌ அவர்கள் செய்தது சரியென வக்காலத்து வாங்கவென ஒரு பணத் திமிர் பிடித்த கூட்ட‌மும் யாழில் இருப்பது தான் வேதனை.

தலைப்பை பணமும்,அதிகார‌மும் இருந்தால் அது இல்லாவனுக்கு அடிக்கலாம் என மாற்றுங்கோ

[size=4]எழுதிய கருத்தையும் பலதடவை வாசியுங்கள். உங்களால் முடிந்தால் கருத்தை வையுங்கள், அதற்கு இன்னொருவரின் கருத்தை சேர்த்து பலம் சேர்க்காதீர்கள். [/size]

நான் சொன்னது இங்கிலாந்து சட்டப்படி கோயில் நிர்வாகத்தை காவல்துறை விசாரித்துள்ளது எனவும் அதன்பின்னர் நிர்வாகிகளும் கோயிலும் சட்டத்திற்கு முகம் கொடுத்துள்ளார்கள் என்பதே. யாரில் பிழை என்பதை பிரித்தானிய சட்டம் முடிவு செய்யும் என்பதே எனதுவாதம்.

Link to comment
Share on other sites

[size=4]இரண்டு விடயமும் பழங்கள் தான், ஆனால் ஒன்று வாழைப்பழம் மற்றையது ஆப்பிள்.[/size]

[size=4]ஊரில்(வாழைப்பழம்) நடப்பதற்கு அடிப்படை காரணம் ஆட்சி, சட்டங்களை அமுலாக்கும் பண்பு இல்லாமை.[/size]

[size=4]புலத்தில்(ஆப்பிள்) நடப்பதற்கு அடிப்படை காரணம் அறியாமை, அதாவது அந்த நாட்டு சடங்களை மதிக்கும் பண்பு இல்லாமை. [/size]

ஒரு பழத்தில் இந்தப் பதிவின் போக்கையே மாற்றியமைத்த அகூதா வாழ்க :lol::D . அதிகாரம் என்ற பழம் வேறை வேறை சுவயையா தரப்போகுது :unsure: :unsure: ???ஐ மீன் வாழைப்பழம் ஆப்பிள் பழம் :lol::icon_idea: .

Link to comment
Share on other sites

ஒரு பழத்தில் இந்தப் பதிவின் போக்கையே மாற்றியமைத்த அகூதா வாழ்க :lol::D . அதிகாரம் என்ற பழம் வேறை வேறை சுவயையா தரப்போகுது :unsure: :unsure: ???ஐ மீன் வாழைப்பழம் ஆப்பிள் பழம் :lol::icon_idea: .

[size=4]விளங்கினா சரி :D[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எழுதிய கருத்தையும் பலதடவை வாசியுங்கள். உங்களால் முடிந்தால் கருத்தை வையுங்கள், அதற்கு இன்னொருவரின் கருத்தை சேர்த்து பலம் சேர்க்காதீர்கள். [/size]

நான் சொன்னது இங்கிலாந்து சட்டப்படி கோயில் நிர்வாகத்தை காவல்துறை விசாரித்துள்ளது எனவும் அதன்பின்னர் நிர்வாகிகளும் கோயிலும் சட்டத்திற்கு முகம் கொடுத்துள்ளார்கள் என்பதே. யாரில் பிழை என்பதை பிரித்தானிய சட்டம் முடிவு செய்யும் என்பதே எனதுவாதம்.

நான் வடிவாக வாசித்துத் தான் என் கருத்தை எழுதினேன் ...//நிர்வாகத்தில் பிழை இல்லை மற்றவர் மேல் பிழை இருக்கலாம் என்ட‌ உங்கள் கருத்தின் நோக்கம் என்ன?//

நிர்வாகத்தில் பிழை இல்லை என்று நீங்கள் எப்படி உறுதியாக சொல்வீர்கள்?

சரி அந்த இளைஞனில் தான் முழுப் பிழை என்டாலும் நிர்வாகம் அடித்தது சரியா?

அந்த இளைஞன் இன்னும் வாக்கு மூலம் கொடுக்கவில்லை அவர் கொடுத்த பிறகு தான் வழக்கு இன்னும் தீவிர‌மாகும்...இதில் கருத்து எழுதின ஒருத்தரும் இளைஞர் செய்தது சரி என எழுதவில்லை...நிர்வாகம் செய்தது பிழை என்பது தான் கருத்து...இதை இப்படியே விட்டால் நாளைக்கு புலத்தில் இருக்கும் எல்லாக் கோயில்களிலும் இது தான் நட‌க்கும்

Link to comment
Share on other sites

நான் வடிவாக வாசித்துத் தான் என் கருத்தை எழுதினேன் ...//நிர்வாகத்தில் பிழை இல்லை மற்றவர் மேல் பிழை இருக்கலாம் என்ட‌ உங்கள் கருத்தின் நோக்கம் என்ன?//

நிர்வாகத்தில் பிழை இல்லை என்று நீங்கள் எப்படி உறுதியாக சொல்வீர்கள்?

சரி அந்த இளைஞனில் தான் முழுப் பிழை என்டாலும் நிர்வாகம் அடித்தது சரியா?

அந்த இளைஞன் இன்னும் வாக்கு மூலம் கொடுக்கவில்லை அவர் கொடுத்த பிறகு தான் வழக்கு இன்னும் தீவிர‌மாகும்...இதில் கருத்து எழுதின ஒருத்தரும் இளைஞர் செய்தது சரி என எழுதவில்லை...நிர்வாகம் செய்தது பிழை என்பது தான் கருத்து...இதை இப்படியே விட்டால் நாளைக்கு புலத்தில் இருக்கும் எல்லாக் கோயில்களிலும் இது தான் நட‌க்கும்

[size=4]நான் சொல்லுவது சட்டம் பிழை என்று கூற இன்னும் ஆதாரம் இல்லை, இருந்தால் இணைக்கவும். எனவே பிழை யாரில் உள்ளது என்பது எமக்கு நூறு வீதம் தெரியாது. [/size]

[size=4]இதுவரை இணைக்கப்பட்ட ஆதாரம் நிர்வாகத்தில் உள்ள பிழையை கூறுகின்றது, அதை எல்லோரும் ஏற்கிறோம். ஆனால், சம்பந்தப்பட்ட மறுதரப்பில் பிழை இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். அதை தெளிவாக புரிந்தவர்கள் காவல்துறையாக மட்டுமே இதுவரை உள்ளார்கள்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலின் பின் சிங்கள ஆமி சாப்பாடு போட முகாமில் இருந்த தமிழர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த மாதிரியா ?

எமது வாழ்விடங்களை அழித்து

செய்த தொழில்களை அழித்து

உற்றார் உறவினரை அழித்து

எமது மண்ணை கைப்பற்றி

எம்மை வீதிக்கு கொண்டுவந்து கூண்டுக்குள் அடைத்து வைத்து

சிங்களத்திடம் எம் மக்கள் கையேந்துவதையும்

வெளிநாட்டுக்கு வந்து உழைத்து சாப்பிட மற்றும் அரச பணம் இருந்தும் பிச்சையெடுக்கும் ஒருவரையும் ஒப்பிடும் உங்கள் போராட்ட பாதையை மெச்சுகின்றேன்.

அதுதானே அதற்க்கு முதலும் இலங்கை அரசாங்கம் தானே நிவாரணம் கொடுத்திச்சு :D

நீங்களுமா???? :(

Link to comment
Share on other sites

இல்லை அண்ணா அவர் சொனார் எதோ முள்ளி வாய்களுக்கு பிறகு தான் நாங்கள் சாப்பாட்டுக்கு கை எந்தினான்கால் எண்டு அனால் அதற்க்கு முதலும் அரசு நிவாரணம் கொடுத்ததை சொல்ல வந்தேன்

[size=4]ஏன் அதற்கு முன்னரும் போட்டர்கள், சாப்பிட்டோம்.[/size]

[size=4]அதற்கு பின்னரும் போடுகிறார்கள், சாப்பிடுகிறோம்.[/size]

இதற்கான பதில் தான் அது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே அடி வாங்கியவன் கோமாவில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறான் சில நேர‌ம் அவர் தப்பினார் என்டால் கோயில் நிர்வாகம் காசை கொடுத்து கேசை இல்லாமல் செய்யலாம்... அதை உங்கள மாதிரி பணக்கார‌,தேசியவாசிகள் செய்யலாம் அப்படி செய்தால் அது தப்பில்லை ஆனால் மற்றவர் செய்ய விட‌ மாட்டோம்

அடித்தவரை

அடி வாங்கியவரை

பற்றியதல்ல எனது வாதம்

நிர்வாகம் நடாத்துவதென்பது அவ்வளவு எளிதல்ல என்பதே எனது ஆதங்கம்.

ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு சமைச்சு பரிமாறும் இடங்களில் பார்த்த அனுபவத்தின் படி சொல்கின்றேன்.

எனக்கு ஏற்பட்ட அனுபவம்

ஊரிலே படித்த பணக்கார பெரும் சாதியில் பிறந்த ஒருவர் என்னுடன் ஊரில் படித்தவர்.

இப்படித்தான் இங்கு பிச்சை எடுத்தபடி றோட்டிலே படத்தபடி திரிகின்றார்.

பல முயற்சிகள் செய்தோம். வீடு வேலை சாப்பாடு உறவுகள் என. எதுவுமே விழலுக்கிறைத்த நீராகி கைவிட்டுவிட்டோம்.

என்னைக்கண்டால் மட்டும் பயப்படுவார். (கை வைப்பேன் என்பதால்).

சில மாதங்களுக்கு முன் லா சப்பல் போயிருந்தபோது ஒரு மூலையில் வைத்து அடித்துவிடுவேன் என்:பதற்காக எனது இரு கைகளையும் பிடித்தபடி அழ ஆரம்பித்துவிட்டார்.

முகத்துக்கு நேரே மிக அருகில் நிற்கின்றார். நாற்றம் தாங்கமுடியவில்லை. ஆனால் ஆட்கள் நிற்கிறார்கள். என்ன வேண்டும் என்று கேட்கின்றேன். பக்கத்தில் ஒட்டியிருக்கும் மரண அறிவித்தல் படத்தை காட்டி மச்சான் உன்மை மாதிரயே இருந்துதடா. பயந்திட்டன். பக்கத்தில போய்ப்பார்த்து திரும்பிறன் நீ வாறாய் மச்சான் என்று அழுகின்றார். சரி விடயத்துக்கு வா ஆட்கள் பார்க்கிறார்கள் கையை விடு என்கின்றேன். கையை விட்டால் நீ அடிப்பாய் மச்சான். பசிக்குதடா 2 ஈரோ தா என்கிறார். கையை விடுவித்து 2 ஈரோக்களை கொடுத்துவிட்டு உன்னை மாதிரி ஆட்களுக்கு நான் பிச்சை போடுவதில்லை. இனிமேல் இப்படி என்னை மறித்து கையைப்பிடித்தால் காரிலே ஏற்றி காட்டுக்குள்ள வெட்டிப்புதைத்திடுவன் என்றுவிட்டு வந்துவிட்டேன்.

அன்று அவரை நான் தள்ளி விட்டாலும் இப்படித்தான் எழுதியிருப்பார்கள்.

இதைத்தான் தப்பு என்று எழுதுகின்றேன். நிர்வாகமோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளோ உண்மையை எழுதட்டுமே.

சாதி பற்றி நான் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்

சாதி இங்கு பிரச்சினையில்லை என்பதற்காகவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே.

அடுத்தவன் உடம்பில் கை வைக்க யாருக்கும் உரிமையில்லை.

சொந்தப் பிள்ளைகளுக்குப் பெற்றோர் அடித்தாலே

அடுத்த நாள் காவற்துறை வாசலில் நிற்கும் மேற்குலகில்

கோவிலில் மதுபோதையில் நிதானம் இழந்த நிலையில்

உணவு கேட்ட ஒருவரை அடித்து வீதியில் வீசிய செயல்

அவர்களுடைய மிருகத்தனத்தைக் காட்டி நிற்கின்றது.

லண்டன் காவற்துறையினர் இந்த ஈனச்செயலைப் புரிந்தவர்கள் மீது

சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன் கிடைத்த தகவலின் படி அந்த இளைஞர் வேற்று இனத்தவர் என்றும்[வெள்ளை] இறந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது...பொலீஸ் சீசிரீவி கமராவை நிர்வாகத்திடம் கேட்க அந்த குறிப்பிட்ட பகுதி அழிக்கப்பட்டு இருந்ததாம்.

அவர் இறந்தது பற்றி ஏயார் அம்புலன்ஸ் இணையத்தில் போட்டு இருக்கிறார்களாம்.

Link to comment
Share on other sites

சற்று முன் கிடைத்த தகவலின் படி அந்த இளைஞர் வேற்று இனத்தவர் என்றும்[வெள்ளை] இறந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது...பொலீஸ் சீசிரீவி கமராவை நிர்வாகத்திடம் கேட்க அந்த குறிப்பிட்ட பகுதி அழிக்கப்பட்டு இருந்ததாம்.

அவர் இறந்தது பற்றி ஏயார் அம்புலன்ஸ் இணையத்தில் போட்டு இருக்கிறார்களாம்.

[size=4]நன்றி தகவலுக்கு.[/size]

[size=4]எனவே நடந்தது கொலை? அப்படி என்றால் எவ்வாறு அவரை தாக்கியவர்களை இங்கிலாந்து சட்டம் சுதந்திரமாக வெளியில் விட்டுள்ளது? [/size]

[size=4]இல்லை தாக்கியவர்கள் சிறையிலா? [/size]

[size=4] [/size]

[size=4]இல்லை அவர் வேறு விதமாக இறந்தாரா?[/size]

[size=4] [/size]

[size=4]இங்கிலாந்து சட்டம் தெரிந்தவர்கள் கூறுங்கள். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன் கிடைத்த தகவலின் படி அந்த இளைஞர் வேற்று இனத்தவர் என்றும்[வெள்ளை] இறந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது...பொலீஸ் சீசிரீவி கமராவை நிர்வாகத்திடம் கேட்க அந்த குறிப்பிட்ட பகுதி அழிக்கப்பட்டு இருந்ததாம்.

அவர் இறந்தது பற்றி ஏயார் அம்புலன்ஸ் இணையத்தில் போட்டு இருக்கிறார்களாம்.

:o:o:o

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.