Jump to content

சென்னைக்கு வயது 373!


Recommended Posts

  • Replies 65
  • Created
  • Last Reply

[size=6]சென்னை மறுகண்டுபிடிப்பு[/size]

[size=4]எஸ்.முத்தையா[/size]

[size=3][size=4]சென்னை என்னும் பெயர் எப்படி வந்தது என்னும் ஆதாரக் கேள்வியுடன் ஆரம்பமாகும் இந்தப் புத்தகம், சென்னையின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை மூன்றையும் ஆதாரபூர்வமாகவும் முழுமையாகவும் பதிவு செய்கிறது.[/size][/size]

[size=3][size=4]சென்னையோடு தொடர்புடைய கட்டடங்கள், நிறுவனங்கள், இடங்கள், சம்பவங்கள் மாத்திரமல்ல ஆச்சரியமூட்டும் மனிதர்களும் அவர்களுடைய சுவாரஸ்யமான கதைகளும்கூட இதில் அடங்கியுள்ளன. அந்த வகையில், இது சென்னையின் சரித்திரத்தை மட்டுமல்ல, அந்நகரின் நகமும் [/size][/size]

[size=3][size=4]சதையுமாக விளங்கிய மனிதர்களின் வாழ்க்கையையும் ஒருங்கே சொல்கிறது.[/size][/size]

[size=3][size=4]பிரபலமானவர்கள் மாத்திரமல்ல, அதிகம் அறியப்படாத முக்கிய நபர்களின் பங்களிப்பும் இதில் பதிவாகி உள்ளது. ராபர்ட் கிளைவ், வாரன் ஹேஸ்டிங்ஸ், ஃபிரான்சிஸ் டே, கணித மேதை ராமானுஜன், நோபல் விஞ்ஞானி சுப்ரமணியம் சந்திரசேகர், எஸ்.எஸ். வாசன், ஜே. கிருஷ்ணமூர்த்தி, ருக்மிணி தேவி அருண்டேல், பாரதியார், பச்சையப்பர், பாரி, பின்னி இன்னும் பல.[/size][/size]

[size=3][size=4]சேப்பாக்கம் மைதானம், கவர்னர் மாளிகை, உயர் நீதிமன்றம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, எல்.ஐ.சி. [/size][/size]

[size=3][size=4]கட்டடம், வள்ளுவர் கோட்டம், சாந்தோம் தேவாலயம், துறைமுகம், சென்னையின் முதல் மருத்துவமனை, முதல் ஜாதிக் கலவரம், முதல் பாலியல் பலாத்கார வழக்கு, முதல் அச்சகம், முதல் திரையரங்கம் என்று சென்னையின் கச்சிதமான குறுக்குவெட்டுத் தோற்றம் இதில் இடம்பெற்றுள்ளது.[/size][/size]

[size=3][size=4]இன்னமும் அறியப்படாத, இதுவரை சொல்லப்படாத சென்னையின் பல நூறு ரகசியங்களைக் கொண்டிருக்கும் இந்நூல், இந்நகரை முழுமையாகப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த வரலாற்று வழிகாட்டி. சென்னையின் முறையான வரலாறு எழுதப்படவில்லை என்னும் குறையை எஸ். முத்தையா இதில் தீர்த்து வைக்கிறார்.[/size][/size]

[size=3][size=4]ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/s...8493-234-8.html[/size][/size]

[size=3][size=4]போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களுக்கு நன்றி தப்பிலி, டங்கு, ஜீவா, கிஸ்ஸான், ரதி, நந்தன் மற்றும் அகூதா...

நேரம் கிட்டும்பொழுது சென்னை பற்றிய தகவல்களை அவசியம் இன்னும் பதிகிறேன்... :rolleyes:

அளவுக்கதிகமாக, "சென்னை.... சென்னை" என கூவினால், "போ** ... வெண்ணை..!" என நீங்கள் நினைக்கக் கூடாதல்லவா? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூலகம் சென்னையில் எங்கு உள்ளது?

அம்மணி, இது நூலகமல்ல...! அனைத்து புத்தகங்களும் விற்கும் கடை...

Higginbothams.jpg

2010121950140401.jpg

சென்னை அண்ணா சலையில், 14 மாடி எல்.ஐ.சி கட்டிடத்திற்கு நேர் எதிரேயே அமைந்துள்ளது. இந்நிறுவனத்திற்கு போட்டியாக அதனைச் சுற்றி பல புத்தகக் கடைகள் இப்பொழுது வந்துவிட்டன. ஆனால் "ஹிக்கின் பாதாம்ஸ்" இன்னும் அதே காரத்துடன், சரக்குடன் மிளிர்கிறது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி சென்னையின் பல பகுதிகளின் பெயர்களும் அப்பெயர் வரக் காரணமும் அறிந்து கொள்வோம்..

[size=4]தேனாம்பேட்டை[/size]:

தேனாம்பேட்டையில், 1800ம் ஆண்டு வரை வேளாண்மையே பிரதான தொழிலாக இருந்து வந்துள்ளது. நெல், வெற்றிலை, வாழை, கரும்பு, காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டன. அருகிலிருந்த ஏரி பாசன வசதி அளித்தது. வேளாளர்களும், பள்ளர்களும் இங்கு வாழ்ந்து வந்தனர். பின்னர் ஆங்கிலோ இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழத்துவங்கினர். கி.பி., 1800க்குப் பின் ஆங்கிலேயரின் வரவு இதன் விரைந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கிறது. 12ம் நூற்றாண்டுக்குப் பின் 'முசல்மான்'கள் நுழைந்திருக்கின்றனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வர சுவாமி கோவில் உள்ள கல்வெட்டு, 1808ம் ஆண்டைச் சேர்ந்தது. அகத்தீஸ்வர சுவாமி, அகிலாண்டீஸ்வரியம்மன் கோவில்களுக்கு தெய்வநாயக முதலியார் நிலம், சத்திரம், தோப்பு ஆகியவற்றை கொடைஅளித்தது பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.

தெய்வநாயக முதலியார் மிகுந்த செல்வமும், செல்வாக்கும் மிக்கவராக இருந்திருக்கிறார். எனவே, தெய்வநாயகத்துக்கு சொந்தமான பகுதிகள், தெய்வநாயகம் பேட்டை என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தேனாம்பேட்டையாக மருவியிருக்க வேண்டும் என, ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

குரோம்பேட்டை:

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொண்டை மண்டலத்தின் ஒரு பகுதியாக இப்பகுதி இருந்துள்ளது. "இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்" நிறுவியவரும், இந்திய இஸ்லாமியர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான "காய்தே மில்லத் இஸ்மாயில் சாகிப்" இங்குதான் இருந்தார்.

1884ல் இந்தியாவிற்கு வந்த ஜார்ஜ் அலெக்சாண்டர் சேம்பர்ஸ்(ஜி.ஏ.சேம்பர்ஸ்) என்பவர் 1903ம் ஆண்டில் தோல் பதனிடும் தொழிலையை துவக்கினார். தொடர்ந்து, பல்லாவரத்தின் தென்பகுதியில், 1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் 'க்ரோம் லெதர்' கம்பெனி என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை ஜி.ஏ.சேம்பர்ஸ் தொடங்கினார். அதனைத் தொடர்ந்தே அப்பகுதிக்கு குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, 1949ல் 20 ஹெக்டர் பரப்பளவில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,) எனும் மாநிலத்தின் சிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியிருப்பு மற்றும் வியாபார கட்டடங்கள் பெருகி தற்போது சென்னை புறநகரப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அங்கம் வகிக்கிறது.

[size=4]நுங்கம்பாக்கம்[/size]:

அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டு 1808ம் ஆண்டைச் சேர்ந்தது என்பதால், அதற்கு முன்பே இங்கு குடியிருப்பு அமைந்திருக்க வேண்டும். நுங்கம்பாக்கம், பொம்மபுரம் என, இரண்டு பெயர்களும் 18ம் நூற்றாண்டுக்கு முந்தையவை.

"நுங்கு+அம்+பாக்கம்" எனப் பிரித்துப் பொருள் கொள்ளலாம்.

சென்னை மாவட்டக் கோயில் வரலாறு நூலாசிரியர் சுப்பிரமணியப் பிள்ளையின் கருத்துப்படி, "நுங்கம்பாக்கத்தின் கிராம தேவதை" சேத்துப்பட்டில் இருக்கும் கருக்காத்த அம்மன்; கருக்களைக் காத்து அருளும் அம்மை'. இதன்படி, நுங்கம்பாக்கம் சேத்துப்பட்டின் ஒருபகுதியாக இருந்திருக்க வேண்டும். சேத்துப்பட்டு முதலில் ஊராக அமைய, அதன் பரந்த பகுதியில், பனைமரங்கள் நெருக்கமாக இருந்த மற்றொரு பகுதி குடியிருப்பாக மாறியிருக்கிறது. அப்பகுதி நுங்கம்பாக்கம் என அழைக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் தெலுங்கர் குடியேற்றம் காரணமாக பொம்மபுரம் என்ற பெயர் வந்தாலும், நுங்கம்பாக்கம் என்ற பெயரே செல்வாக்குடன் நிலைத்திருக்கிறது.

[size=4]சைதாப்பேட்டை[/size]:

செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்த இப்பகுதி, பின் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. பிற்காலத்தில் இப்பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், பன்னெடுங்காலத்துக்கு முன்பே இது குடியிருப்பாக இருந்திருக்கிறது. கி.பி., 1726, 1884, 1896, 1887ம் ஆண்டுகளைச் சேர்ந்த நான்கு கல்வெட்டுகளில் சைதாப்பேட்டையைப் பற்றிய குறிப்புள்ளது. 1884க்கு முன்னரே சைதாப்பேட்டை தாலுகாவாக இருந்துள்ளது. காரணி கிராமம் இதற்கு உட்பட்ட பகுதியாக இருந்திருக்கிறது. காருண்ணிய ஈஸ்வரன் கோவில் இருந்ததால், காருண்ணிய கிராமம் என அழைக்கப்பட்டிருக்கக் கூடும். காரணி என்றால் பார்வதி என்ற பொருளும் உண்டு. சைதாப்பேட்டையின் மற்றொரு பெயர் ரகுநாதபுரம்; இங்கு ராமர் கோவில் இருந்ததாகத் தெரியவருகிறது.

ஆற்காட்டு நவாப் 1730ல் தன் உதவியாளருக்கு நந்தனம், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் பகுதிகளைப் பரிசாகக் கொடுத்துள்ளார். நவாப் தனக்கு ஒரு பகுதியை வைத்துக் கொண்டு, நெசவாளர், வாணிகர், கலைஞர்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ள செய்தி தெரியவருகிறது. பரிசாகக் கொடுக்கப்பட்ட பின், இப்பகுதி சையத்கான் பேட்டை என அழைக்கப்பட்டிருக்கிறது. பின் சையத் பேட்டை எனவும், சைதாப்பேட்டை எனவும் மருவியிருக்கலாம்.

[size=4]சேத்துப்பட்டு[/size]:

திருஒற்றியூரில் உள்ள ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் கல்வெட்டில், "சேற்றுப்பேடு' எனக் குறிக்கப்படுகிறது. புலியூர்க்கோட்டத்தைச் சேர்ந்த துடர் முனியூர்நாட்டில் இது அமைந்திருந்துள்ளது. ஸ்ரீரங்கநாதயாதவராயர் காலத்தில் செயங்கொண்ட சோழமண்டலம் புழல் கோட்டம் என்றும், விக்கிரமசோழ வள நாட்டில் எழுமூர்துடர்முனி நாட்டைச் சேர்ந்ததாகவும்' சேத்துப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. 1823ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு "சேத்துப்பட்டு' எனக் குறிப்பிடுகிறது.

சேறு, நீர்நிலை தொடர்பாக இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

[size=4]சிந்தாதிரிப்பேட்டை[/size]:

பெரியமேட்டுக்குத் தெற்கில், சுங்குராமர் என்ற வணிகருக்குச் சொந்தமான இந்த இடம் கவர்னர் ஜார்ஜ் மார்டன் பிட்டு என்பவரின் காலத்தில் சென்னை மாநகருடன் இணைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் இங்கு நெசவாளர் குடியிருப்பை அமைந்தனர். நெசவாளர்களின் சிறுதறிகள் இங்கே இயங்கியதால், "சின்ன தறிப்பேட்டை" என்ற பெயர் ஏற்பட்டது. நாளடைவில் சிந்தாதிரிப்பேட்டை என மருவி விட்டது.

[size=4]எழும்பூர்[/size]:

'கொடுங்கோளூர் அஞ்சைக் களம் செங்குன்னூர்' எனத்தொடங்கும் அப்பரின் பாடலில், " இடும்பாவனம் எழுமூர், ஏழூர் தோழூர்' என, சிவதலங்கள் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன. அப்பர் குறிப்பிடும் எழுமூர் சென்னை எழுமூரா, தஞ்சை எழுமூரா என்ற இருவேறு கருத்துகள் உள்ளன.

திருவல்லிக்கேணியில் கிடைத்துள்ள 16ம் நூற்றாண்டுக் கல்வெட்டில் "செயங்கொண்ட சோழமண்டலத்தில் புலியூர்க் கோட்டத்தில் எழுமூர் நாட்டில் திருவல்லிக்கேணி.... யசிங்க பெருமாள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு மூலம், எழுமூர் நாடு என்ற தலைமையின் கீழ் இருந்த நாட்டுப்பிரிவுகளுள் திருவல்லிக்கேணியும் ஒன்று எனத்தெரிகிறது. மயிலையின் ஒரு பகுதியாக இருந்து, பின் அதிலிருந்து பிரிந்து தனிக்குடியிருப்பானது எழுமூர். 13ம் நூற்றாண்டுக் கல்வெட்டில், "புலியூர்க் கோட்டத்தில் எழுமூர் நாட்டில் தெள்ளிய சிங்க நாயானர் திருவிடையாட்டமான புதுப்பாக்கத்தில்' என்ற செய்தி காணப்படுகிறது. திருஒற்றியூரில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில், "எழுமூர்த்துடர் முனை நாட்டுக் காட்டுப்பாக்கம்','ஐயங்கொண்ட சோழமண்டலத்து விக்கிரம சோழ வளநாடான புழற்கோட்டத்து எழுமூர் துடர் முனைநாட்டுச் சேற்றுப்பேடு' என்ற வரிகள் காணக்கிடைக்கின்றன.

பல்வேறு கல்வெட்டுகளிலும் எழுமூர் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. ஆங்கிலேயரின் வருகையின் போதே, எழுமூர் சிறப்பான நிலையில் இருந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் கோட்டை கட்டியபின், விரிவாக்கத்துக்காக 1693ல் எழுமூரைப் பெற்றுள்ளனர். எழுமூர், புரசைவாக்கம், தண்டையார்பேட்டை பகுதிகளை ஆங்கிலேயர்கள் "தி போர் ஓல்டு டவுன்ஸ்' எனக்குறிப்பிட்டுள்ளனர்.

எதிரிகளைத் தடுப்பதற்கு விழிப்பறை(கண்காணிப்புக் கோபுரம்) கட்டத் தகுதியான மேடான இடம் எழும்பூரில் அமைந்திருப்பதாக ஆங்கிலேய அதிகாரி, தன் அரசுக்குத் தெரிவித்து இருக்கிறார். ஜெர்மானியர்கள் "எக்கிமோர்' என, அழைத்திருக்கின்றனர்.

ஏழு ஊர்களால் ஆனது எழும்பூர்; மேடான பகுதியில் அமைந்த ஊர் என்ற கருத்துகள் எழும்பூர் என்பதற்கான பெயர்க் காரணமாகச் சொல்லப்படுகின்றன. மேடான குடியிருப்பு என்ற காரணம் ஏற்புடையதாக இருக்கிறது.

[size=4]திருவல்லிக்கேணி[/size]:

சென்னையின் புராதனக் குடியிருப்புகளுள் இதுவும் ஒன்று. மயிலாப்பூரின் குடியிருப்புகள் தனித்தனி ஊராகின. அதில், முதலில் பிரிந்தது திருவல்லிக்கேணி. பேயாழ்வார் "ஒரு வல்லித்தாமரையாளர் ஒன்றிய சீர்மார்வன் திருவல்லிக்கேணியான்' என்றும், திருமழிசை ஆழ்வார் "நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்' என்றும் குறிப்பிடுகின்றனர். மயிலாப்பூர் சிவதலம்; எனவே, வைணவர்கள் திருமாலுக்குக்குத் தனிக் கோவில் கட்டி, கோவிலைச் சுற்றிவாழத்துவங்கிய பின், திருவல்லிக்கேணி என அழைக்கப்பட்டிருக்கக்கூடும். பல்லவன் தந்திவர்மன் காலத்துக்கு (கி.பி., 778-825) முன்பே இக்கோவில் புகழ்பெற்றிருக்க வேண்டும்.

இங்குள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் 91 கல்வெட்டுகள் உள்ளன. இதில் தந்திவர்மன் கல்வெட்டு பழமையானது. மயிலையின் ஒரு பகுதியாகஇருந்து பின், தனிக்குடியிருப்பான திருவல்லிக்கேணி, அரசியல் நிர்வாகத்துக்கு ஏற்ப ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பகுதியின் கீழ் இருந்ததற்கு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

கி.பி., 1808ம் ஆண்டு தந்திவர்மன் கல்வெட்டில் திருல்லிக்கேணி எனக் குறிப்பிடப்படுகிறது. கி.பி., 1309ம் ஆண்டுக் கல்வெட்டில், "புலியூர்க் கோட்டத்தில் எழுமூர் நாட்டில் தெள்ளிய சிங்கநாயனார் திருவிடையாட்டமான புதுப்பாக்கத்தில்' எனச் சொல்லப்படுகிறது. புதுப்பாக்கம் திருவல்லிக்கேணியுடன் எழுமூர் நாட்டின் ஒரு பகுதியாக இருந்திருக்கக்கூடும். கி.பி., 1793ம் ஆண்டு ஈக்காட்டுத்தாங்கல் கல்வெட்டில், "சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி' எனக்குறிப்பிடுவதால், அப்போதே சென்னையின் ஒருபகுதியாகத் திகழத்தொடங்கியது அறியவருகிறது. புனிதஜார்ஜ் கோட்டையுடன் கி.பி., 1672ல் சேர்க்கப்பட்டதை சென்னையின் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

மயிலையின் ஒரு பகுதியான மாவல்லிக்கேணி; அல்லி நிறைந்த நீர்நிலை அருகே அமைந்த குடியிருப்பு ஆகையால், திருவல்லிக்கேணி என அழைக்கப்பட்டிருக்கிறது.

[size=4]மயிலாப்பூர்: [/size]

பழமையும் சிறப்பும் வாய்ந்த ஊராக மயிலாப்பூர் விளங்குகிறது. தொண்டை நாட்டுப்பகுதியாகவும், பல்லவர்கள், சோழர்களால் ஆளப்பட்ட பகுதியாகவும் விளங்கியிருக்கிறது. தேவாரப்பாடல்களில் இவ்வூரின் சிறப்புக் கூறப்பட்டுள்ளது. வேல் செய்யும் வல்லவர்கள் வாழ்ந்தபகுதி என அறியலாகிறது. திருவல்லிக்கேணி, சாந்தோம் பகுதிகள் இதனில் இருந்து பிரிந்தவை. தாலமி "மலியர்பா' எனக்குறிப்பிடுவது மயிலாப்பூரைத்தான் என்பது வரலாற்றாசிரியர்கள் கருத்து.

மாமயிலை, தொன்மயிலை, மயிலாபுரி, மயிலாப்பில், திருமயிலை, தென்மயிலாபுரி, திருமயிலாப்பூர் என பாடல்களும், கல்வெட்டுகளும் பல பெயரில் குறிக்கின்றன. மார்க்கோபோலோ மயில்கள் நிறைந்த பகுதி எனக்குறிப்பிடுகிறார். ஜான்டி மரிசு நோலி "மைரா போலிஸ்' எனவும், டூரேட் பார் போஸா "மைலாபூரா' எனவும் குறித்துள்ளனர்.

போர்ச்சுக்கீசியர்கள் மெலியபூர் என்றும், கி.பி., 17ம் நூற்றாண்டில் மயிலாப்பூர் எனவும், பிரம்மாண்டபுராணத்தில் மயூரபுரி, மயூரநகரி எனவும், ஆங்கிலேயர்களால் மைலாப்பூர் எனவும் பல்வேறு திரிபுகளாக வழங்கி வந்திருக்கிறது.மயில்கள் கூட்டமாக திரிந்து அகவிய இடம் என்று பொருள் கொள்ளலாம். இப்பகுதியை ஆண்ட பழைய குலத்தவரின் மரபுரைச் சின்னமாக மயில் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை.

மயிலையின் பிற பெயர்களாக, புன்னைவனம், வேதநகர், சுக்கிரபுரி, பிரமபுரம், கந்தபுரி, கபாலீச்சுரம், கபாலி மாநகர் என்பன போன்றவை சுட்டப்படுகின்றன. புன்னை மரங்கள் நிறைந்த பகுதியாதலால் புன்னை வனம் எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும். ஐயடிகள் காடவர் கோன், "மயிலைத் திருப்புன்னையங்கானல்' எனக்குறிப்பிடுகிறார். மயிலையின் ஒரு பகுதி புன்னை வனமாகவும் இருந்திருக்கக் கூடும். கபாலீச்சுரம், சைவத்தின் ஒரு பகுதியான கபாலிகர்கள் வணங்கிய சிவன் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பிற பெயர்கள் வடமொழித் தொடர்பைச் சுட்டுகின்றன.

பழமை மிக்க இவ்வூர் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், மயிலாப்பூர் என்பதே செல்வாக்கு மிக்கதாக விளங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கோடம்பாக்கம்:[/size]

தென்னிந்தியாவின் ஹாலிவுட் எனப் புகழப்படும் கோடம்பாக்கம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இல்லை. முன்பு கோடம்பாக்கம் இருக்கும் பகுதி புலியூர் என வழங்கி வந்திருக்கிறது. தொண்டை மண்டலத்தின் பலபிரிவுகளில் ஒன்று புலியூர் நாடு. அதனுள் குன்றத்தூர், போரூர், மாங்காடு, அமரூர், கோட்டூர் போன்ற ஊர்கள் இருந்தன. இன்றும் கோடம்பாக்கத்தின் சில பகுதிகளுக்கு புலியூர் என்ற பெயர் உள்ளது. புலிகள் அதிகம் இருந்த காட்டுப்பகுதி என்ற பொருளில் இது அழைக்கப்பட்டிருக்கக்கூடும். வியாக்கிரபுரீசுவரர் கோவில் பற்றிய தகவல்களும் இதற்கு வலுச் சேர்க்கின்றன. வியாக்கிரம்-புலி, வேங்கை எனப்பொருள்படுவது போல்,வியாக்கிரம் பூசித்திருந்த ஊர் வியாக்கிரபுரி. புலி பசித்திருந்த இடம் புலியூர். வேங்கை பூசித்த ஈசர் வேங்கீசர் என்பது போன்ற தகவல்களின் அடிப்படையில் புலியூருக்கு காரணப் பெயர் கற்பிக்கப்படுகிறது.

ஆற்காட்டு நவாப்பின் குதிரை லாயங்கள் இங்கிருந்துள்ளன. இந்தியில் 'கோட்பாக்' என்பது மருவி, கோடம்பாக்கம் ஆனது என்ற கருத்தும் உள்ளது.

[size=4]ஆழ்வார்பேட்டை: [/size]

மயிலாப்பூரின் மேற்குப் பகுதிக்குடியிருப்பு ஆழ்வார்பேட்டை. மயிலையின் ஒரு பகுதியாக இருந்து பின்னர் தனிக்குடியிருப்பாக வளர்ந்துள்ளது. முதலாழ்வார் மூவருள் ஒருவரான பேயாழ்வார் பிறந்த இடம் என்பதால் இப்பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பேயாழ்வார் கோவிலுக்கு உரிய நிலங்கள் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது. பேயாழ்வார் பிறந்த இடம் மயிலாப்பூர். அவரின் பாடல்களில், திருவல்லிக்கேணி பற்றிய குறிப்பு இருக்கிறதே தவிர, இப்பெயர் குறித்து எதுவும் இல்லை. அவர் காலத்துக்குப் பின், மக்கள் இப்பெயர் சூட்டியிருக்கலாம் எனக் கருதலாம். பேட்டை என்பது இடைக்காலத்தைச் சேர்ந்தது என்பதால், இக்கருத்துக்கு மேலும் வலுசேர்க்கிறது.

[size=4]தங்கசாலை: [/size]

வடசென்னையில் நீண்ட தெருவின் வட கோடியில் நாணயங்கள் அச்சடிப்பதற்காக கட்டப்பட்ட கட்டடம் காரணமாக இப்பெயர் உருவானது. ஏற்கனவே அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றினை அகற்றி விட்டு, தங்கநாணயத் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் துவங்கின. கி.பி., 1807ல் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது; இயந்திரங்கள் 1841ல் தான் பொருத்தப்பட்டன. ஆனாலும், இங்கு நாணயங்கள் அச்சடிக்கப்படவே இல்லை. இருந்தபோதிலும், இம்முயற்சிகளே தங்கசாலை எனப் பெயர் பெறக் காரணமாக அமைந்து விட்டன.

[size=4]புரசைவாக்கம்: [/size]

இங்குள்ள கங்காதரேசுவரர் கோவில் கிடைக்கும் கல்வெட்டுகள் 13ம் நூற்றாண்டு, 16ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்ததாயினும், இவ்வூர் பற்றிய தெளிவான குறிப்புகளை அவை தரவில்லை. சுந்தரர் பாடிய பாடலில் "புரிசை' எனக்குறிப்பிடுவது இவ்வூரைப் பற்றியது என்பது குறித்து மாற்றுக்கருத்துகள் உள்ளன. கடற்கரைப்பகுதியான இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், புரசவாக்கம் எனப்பெயர் பெற்றுப் பின் புரசைவாக்கம் என மருவியிருக்கக்கூடும் என்ற கருத்தும் உள்ளது.

[size=4]அமிஞ்சிக்கரை:[/size]

அம்+இஞ்சி+கரை எனப்பிரித்தால் அழகிய கோட்டைக் கரை எனப் பொருள்படுகிறது. ஆனால், இங்கு கோட்டை இருந்ததற்கான சுவடுகள் எதுவும் இல்லை. அமைந்தகரை என்பதே மருவி அமிஞ்சிக்கரை ஆகி இருக்கலாம் என்ற கருத்து உண்டு.

ஏரிக்கரையில் உருவாகிய குடியிருப்பு என்ற நோக்கில் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பெயர்தான். "கூவம் ஆறு" இவ்வழியாக ஓடி வருகிறது. அதன் வடகிழக்குப்பகுதியில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. 'கூவம் ஆற்றுக்கும், பெரிய குளத்துக்கும் நடுவில் இயல்பாக அமைந்த கரை என்பதால் அமைந்தகரை என்று பெயர் பெற்றிருக்கிறது' என்று சென்னை மாவட்டக் கோயில் வரலாறு நூல் தெரிவிக்கிறது. நீர்நிலை, கரை தொடர்பாக இப்பெயர் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால், ஒருவகையில் பொருத்தமாகவே இருக்கிறது.

[size=4]திருமங்கலம்: [/size]

நான்கு வேதங்கள் தெரிந்த பிராமணர்கள் குடியிருக்கும் பகுதி, அக்காலத்தில் சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது. சதுர்வேதி மங்கலத்தின் சுருக்கம் மங்கலம். பக்தி இலக்கிய காலகட்டத்தில் "திரு' எனும் அடைமொழி பரவலாக வழங்கப்பட்டது. எனவே, இடைக்காலத்தில் திருமங்கலம் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

[size=4]முகப்பேர்: [/size]

முகப்பு ஏரி- முகப்பேரி எனப்பிரித்துப் பொருள் கொள்ளலாம். ஏரியின் முகப்புப் பகுதியில் உள்ள ஊர் என்பது பொருள். இதன் அருகே ஏரி இன்றும் காணப்படுகிறது. அம்பத்தூரைப் பற்றிய கல்வெட்டு ஒன்றில் "ஏரி கீழ் நாட்டு அம்பத்தூர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பெயர்க்காரணம் பொருத்தமானதாகவே இருக்கிறது. சாதாரண ஊரான இப்பகுதி அண்ணா நகர் விரிவாக்கத்தால், பெருவளர்ச்சி பெற்று வருகிறது.

[size=4]அருகம்பாக்கம்: [/size]

சென்னையில் சமணம் பரவியிருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. மயிலாப்பூரில் சமணம் மதத்தொடர்பு இருந்ததை அறிஞர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். புழல் சமணக்கோவில் பற்றிய ஒரு குறிப்பும் உண்டு. வில்லிவாக்கத்திற்கும் சமணத்திற்கும் தொடர்பு உண்டு. அடையாறில் ஒரு பள்ளிப்பட்டு காணப்படுகிறது. அருகந்துறை, அருகங்குளம் என்பவை, அருகன்துறை, அருகன்குளம் என்பவற்றின் திரிபுகளாக இருக்ககூடும். எனவே, அருகன்பாக்கம் என்பதே, அருகம்பாக்கமாக மருவியிருக்க வேண்டும்.

[size=4]அயனாவரம்:[/size]

சென்னையின் மேற்குப்பகுதியில் உள்ள இக்குடியிருப்பு பற்றி இடைக்காலக் கல்வெட்டு "அயன்புரம்' எனக்குறிப்பிடுகிறது. "ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டமான விக்கிரம சோழ வளநாட்டுத்துடர் முள்ளி நாட்டு அயன்புரத்து அயன்புரங்கிழவன் தெள்ளியானான செழியதரையனும் அரையன் நின்ற நம்பி என்பவரும்' என்ற கல்வெட்டுவரிகள், தெள்ளிய சிங்க நாயனார்க்கு நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிக்கின்றன.

கி.பி., 1309ம் ஆண்டைச் சார்ந்த இக்கல்வெட்டின் மூலம் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தின் பல்வேறு பிரிவுகளில் ஒன்றான புழற்கோட்டம் பற்றியும்; விக்கிரம சோழ வளநாடு எனவும் அழைக்கப்பட்டது பற்றியும் தெரியவருகிறது. இக்கோட்டத்தில் துடர் முள்ளிநாடு ஒரு பிரிவு, அந்நாட்டின் ஊர்களில் அயன்புரமும் ஒன்று எனத்தெரிய வருகிறது.

14ம் நூற்றாண்டுக்கு முன்னரே இக்குடியிருப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். கி.பி., 19ம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில், அயனவரம் என்கிற சொத்திரிய கிராமம்' எனச் சொல்லப்பட்டிருப்பதாக, நடனகாசிநாதன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அயம்புரமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. அயம் எனில், நீர்நிலை, சுனை, குளம் என்ற பொருள்கள் உண்டு. நீர்நிலை அடிப்படையில் இப்பெயர் பெற்று; அயன்புரமாக மருவி, அயனாபுரமாகி இருக்கக்கூடும். அயனாபுரம், மக்கள் வழக்கில் அயனாவரமாகி இருக்கலாம் என்ற கருத்தே பரவலாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

[size=4]திருவான்மியூர்: [/size]

ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரிநாதரின் திருவான்மியூர் தலபுராணம், திருப்புகழ், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் குமரகுருதான சுவாமிகள், அருட்கவி சேதுராமன் பாடல்கள் இவ்வூரைப்பற்றிய செய்திகளைத் தருகின்றன. வான்மீகியுடன் தொடர்புடையது என்ற கர்ணபரம்பரைக் கதை ஒன்று <உலவுகிறது. திருவான்மியூர் தலபுராணத்தில் சொல்லப்படுபவை நம்பத்தகுந்ததாக இல்லை என்பதே பலரின் கருத்தும். சைவக்குரவர்களின் பாடல்களில் சொல்லப்பட்டுள்ள இறைச்சிறப்பு, கடல்வளம், வாணிபம், மக்கள் மாளிகையில் வசித்தது, மதில்சூழ்ந்த ஊர் போன்ற திருவான்மியூரின் சிறப்புகள் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.நெடுங்கோபுரம், சுற்றுப்பகுதி, உள்ளே கோவில் என தெளிவாக கோவிலின் வடிவமைப்புப் பற்றி பாடியுள்ளனர்.

திருவான்மியூரில் அம்மன் கருவறையின் புறச்சுவர்களில் சோழர்கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆனால், சிவன் கருவறையைச் சுற்றி ஒரு கல்வெட்டு கூட இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

"அஞ்சி நாண்மலர் தூவி அழுதீரேல் வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே', "நாண்மலர் தூவி வலஞ்செயில் வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே' என்ற நாவுக்கரசரின் பாடல் வரிகளில் திருவான்மியூர் சிவனின் பெருமைகள் சுட்டப்பட்டுள்ளன. தேவாரத்தில் சுட்டப்படுவதற்கு முன்னரே, இவ்வூர் பெருமையும், பழமையும் வாய்ந்ததாக இருந்திருக்கிறது. வான்மியூர் என்பதே இவ்வூர்ப்பெயராக இருந்திருக்க வேண்டும். "திரு' என்ற அடைமொழி பக்தி இயக்க காலத்தில் சேர்ந்திருக்க வேண்டும். மரங்கள் அடர்ந்த பகுதி என்ற பொருளும் கொள்ளலாம். சோலைகள் சூழ்ந்த, கடற்கரைத் தலம் என்ற குறிப்புகள் உள்ளன. வான்மிகம் என்றால் புற்று என்று ஒரு பொருள் உண்டு. புற்றுகள் நிறைந்த பகுதியாக இது அறியப்படுகிறது. அருகில் உள்ள ஒற்றியூர், கோடகன்பாக்கமாகிய கோடம்பாக்கம் போன்ற ஊர்ப்பெயர்கள் புற்றோடு தொடர்புடையன. அதேபோல், புற்றுடன் தொடர்புடையதாக வான்மியூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என, ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

[size=4]கோட்டூர்:[/size]

கி.பி., 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த மயிலாப்பூர் கல்வெட்டுகளில், கோட்டூர் பற்றிய குறிப்பு உள்ளது. கோட்டூர் என்பது ஒரு நாட்டுப்பிரிவு என்பதைக் கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன. ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் புலியூர்க் கோட்டத்துள் அடங்கிய நாட்டுப்பிரிவாக கோட்டூர் நாடு இருந்திருக்கிறது. கோட்டூர் நாட்டுள் அடங்கிய ஊராக திருவான்மியூர் இருந்துள்ளது.

"கோட்டூர் நாட்டு சண்டேசுவர நாயனார்க்கு' என்பன போன்ற கல்வெட்டு வரிகள் மூலம் கி.பி., 12ம் நூற்றாண்டுக்கு முந்தையது இக்குடியிருப்புப் பகுதி எனத்தெரியவருகிறது. கோடு என்றால் வளைவு என்று ஒரு பொருள் உண்டு. அடையாறு ஆறு, சைதாப்பேட்டையில் இருந்து, கோட்டூர் வழியாக அடையாறு சென்று, கடலில் கலக்கிறது. கோட்டூர் அருகே வளைந்து பின் செல்கிறது. ஆற்றங்கரையில் வளைவில் இருக்கும் ஊர் என்ற பொருளில் கோட்டூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

[size=3]நன்றி: தினமலர்.('சென்னை நாள்' மலர்)[/size]

Link to comment
Share on other sites

சூப்பர் அண்ணா நான் வடபழனியில் ஒரு 3 வாரம் என் விடுமுறைய இனிமையாக அனுபவிச்சனான்

வெளிநாடு என்ன வெளிநாடு சென்னை லைப் எவ்ளவு சுபெர்ப் தெரியுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...நான் வடபழனியில் ஒரு 3 வாரம் என் விடுமுறைய 'இனிமை'யாக அனுபவிச்சனான்.

வெளிநாடு என்ன வெளிநாடு சென்னை லைப் எவ்ளவு சுபெர்ப் தெரியுமா?

வட பழனியா? அது கோடம்பாக்கத்துக்கு ரொம்ப ரொம்ப பக்கமாச்சே? அங்கே சுண்டல் இருந்தாரெனில்...?

ஏதாவது படம், கிடம்...? பிசிறுதே...! :lol:

smiley3869.gif

Link to comment
Share on other sites

வட பழனியா? அது கோடம்பாக்கத்துக்கு ரொம்ப ரொம்ப பக்கமாச்சே? அங்கே சுண்டல் இருந்தாரெனில்...?

ஏதாவது படம், கிடம்...? பிசிறுதே...! :lol:

smiley3869.gif

சுண்டலின் லீலைகள் என்று ஒரு காணொளி இணையத்தில் உலாவுதே.. பார்த்ததில்லையா??!! :wub::lol:

Link to comment
Share on other sites

சுண்டலின் லீலைகள் என்று ஒரு காணொளி இணையத்தில் உலாவுதே.. பார்த்ததில்லையா??!! :wub::lol:

:D

ஓ அதுக்கு இது பதிலடியா?

ம் ராஜவன்னியன் அண்ணா குமரன் காலனில தான் இருந்தன் நல்ல அழகான மலையாள மற்றும் தமிழ் பொண்ணுங்கல்லாம் அந்த areala நிறைய இருக்காங்க

:D

Link to comment
Share on other sites

அது சரி ராஜவன்னியன் , நீங்கள் காதலிக்கிற பெண் பெயர் வெரோனிக்காவா ? (என்ன ஒரு வில்லத்தனம்?) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி ராஜவன்னியன் , நீங்கள் காதலிக்கிற பெண் பெயர் வெரோனிக்காவா ? (என்ன ஒரு வில்லத்தனம்?) :lol:

யாரது, "வெறும் ஆணி அக்கா..?" smiley3817.gif

Link to comment
Share on other sites

யாரது, "வெறும் ஆணி அக்கா..?" smiley3817.gif

நீங்கள் இணைத்த சில படங்கள் எனது உலவியில் இப்படி தோன்றின.

post-7179-0-37472500-1345996132_thumb.jp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்த சில படங்கள் எனது உலவியில் இப்படி தோன்றின.

post-7179-0-37472500-1345996132_thumb.jp

ஓ...சாரி...

நீங்கள் இப்பொழுது சொன்ன பிறகுதான் எனக்கு புரிகிறது...ஆனால் எனது மடி கணணியில் இன்றும் தெரிகிறது...Cache லிருந்து தோன்றக் கூடும்...வேறு தளத்திற்கு படத்தை மாற்றி பின்னர் இணைக்கிறேன்.

பிழையை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி, கிஸ்ஸான்.

Link to comment
Share on other sites

இன்று தான் முற்றாக வாசிக்க முடிந்தது.சென்னையை நேரடியாக பார்த்த ஒரு பிரமையையை ஏற்படுத்தியது.வன்னியனின் வர்ணனை அருமை.தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்த சில படங்கள் எனது உலவியில் இப்படி தோன்றின.

post-7179-0-37472500-1345996132_thumb.jp

மாற்றம் செய்துள்ளேன். இந்த "வெரோனிக்கா" இனி வரமாட்டாள் என நினைக்கிறேன் கிஸ்ஸான். :rolleyes:

இன்று தான் முற்றாக வாசிக்க முடிந்தது.சென்னையை நேரடியாக பார்த்த ஒரு பிரமையையை ஏற்படுத்தியது.வன்னியனின் வர்ணனை அருமை.தொடருங்கள்.

ஊக்கத்திற்கு நன்றி நுணா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.