Jump to content

கந்தப்புவின் துணிகரசெயலால் இரு உயிர்கள் காப்பாற்றபட்டன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு அண்ணையின் பணிக்கு வாழ்த்துக்கள்

மற்றது

துரோகி, ஐஸ்கிறிம் இன்னும் கிடைக்கவில்லை பிள்ளை. எப்ப அனுப்பினனிங்கள்

கந்தப்பு அண்ணை!!

ஜஸ்கிறிமுக்கு தமிழ் சொல் குளிர்களியாம்!! அதையும் தமிழில் மாத்தி விடுங்கள்!! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் மதன், தூயவன்.

குளிர்களி என்று தமிழில் மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு தூயவனுக்கு மீண்டும் நன்றிகள்

Link to comment
Share on other sites

கந்தப்பு தாத்தா

ஜஸ்கிறீம(;குளிர்களி) அனுப்பினேன்;;;. ஆனால் திருப்பி அந்தப் பாசல் என் முகவரிக்கே திரும்பி வந்தது. நீங்கள் வீட்டை நில்லாமல் இப்படி புூங்காக்கள்;;;; நீர்நிலைகள் சினிமாவென்று வயது போன காலத்தில் திரிந்தால் நான் எப்படி பாசல்களை உங்களுக்கு அனுப்புவது.

சந்தோசமாக வாழ்க்கையை அனுபவியுங்கள். எனக்;கு பொறாமையாகவிருக்கு.

என்ன பொலிஸ் நிலையங்களுக்கு மாறி மாறித் திரியிறீங்களாம். என்ன சங்கதி?? வழக்குப் போட்டு விட்டார்களா? அல்லது மனைவிதான் 'டைவோஸ்" ற்கு எழுதிக் கொடுத்திட்டாவா? உங்களது ஆக்கினை தாங்காமல்........

:P :lol: :idea:

Link to comment
Share on other sites

கந்தப்பு தாத்தா எழுதியது:

"வணக்கம் துரோகி. யாரப்பா உமக்கு பொய் வதந்திகள் பரப்பினவை?" :P

வித்தியாசமானவள் கண்ணுக்கு எல்லாம் வித்தியாசமானதாகவே தெரியும்.....அதுதான் இந்த வித்தியாசமாக, வித்தியாசமானவளால் வித்தியாசமாக பதில் அடி தருகின்றேன்......என்ன குழப்புகின்றேனா?? அது தான் வித்தியாசமானவள்!

:idea:

Link to comment
Share on other sites

  • 2 years later...

எப்பவோ நடந்த சம்பவம் என்றாலும் நான் அண்மையிலதான் இந்தப் பதிவை பார்த்தன். கந்தப்புவை பாராட்டாமல் இருக்கமுடிய இல்லை. அதனால் பழைய பதிவை திரும்பவும் தூசுதட்டி இதில போடுறன். பாராட்டுக்கள் கந்தப்பு! கந்தப்புவின் துணிகரமான செயலை எல்லாராலும் அந்த குறிப்பிட்ட ஆபத்துக்காலத்தில செய்யமுடியாது. கந்தப்புவிற்கு வாழ்த்துகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூசு தட்டிய முரளிக்கும் நன்றி.

மீண்டும் வாசிக்க கிடைத்தில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழத்துக்கள் அப்பு ஆச்சிதான் என்னசெய்யிறதுஎன்டு தெரியாமல் முழிச்சிருக்கும்

Link to comment
Share on other sites

காலம் கடந்தாலும் , வாழ்த்துக்கள் கந்தப்பு . உங்கள் துணிவு யாருக்கு வரும்.?

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் கந்தப்பு. உங்களைப் போன்ற ஒருவரினால் தான் நான் இன்று உயிருடன் இருக்கிறேன். எனக்கு 7 வயதில் கிணற்றில் முழ்கிவிட்டேன். தம்பிக்கு 5 வயது. அவன் தான் நான் கிணற்றில் விழுந்ததை பார்த்தான். அவனுக்கு விசயம் விளங்கமால் கொஞ்ச நேரம் கழித்துதான் அம்மாவிடம் கூறியிருந்தான். அப்ப வீட்டில் தேங்காய் பறிப்பதற்கு வந்த அண்ணை தான் உடனே கிணற்றில் குதித்து காப்பறினார். எல்லோரும் நான் இறந்துவிட்டதாக முதலில் எண்ணிவிட்டார்கள். பின்புதான் மூச்சு இருக்குது என்று வைத்தியசாலை கொண்டுசென்று காப்பற்றினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு உயிரைகாப்பாற்றிய கந்தப்புவுக்கு வாழ்த்துக்கள் .

Link to comment
Share on other sites

இரு உயிரைகாப்பாற்றிய கந்தப்புவுக்கு வாழ்த்துக்கள் .

ஓய்ய்ய் என்ன ம..........................பா :):lol::lol::o:o

Link to comment
Share on other sites

கந்தப்பு கலக்குறீங்கள்!! :)

தூசி தட்டிய முரளிக்கு நன்றி :o

சின்னப்பு ஏன் பெரிய எழுத்தில எழுதிறீங்கள்? உங்களுக்கு கண்ணு தெரியேல்லையா? :lol::lol::o

Link to comment
Share on other sites

அட..டா.. கந்தப்பு பழைய கதாநாயகனா???

உங்கள் பொதுச்சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போதுதான் நானும் பார்த்தேன் பாராட்டுகள்.

எனக்குப் பத்து வயதாக இருந்தபோது நானும் ஒருமுறை எமது கிணற்றினுள் தண்ணீர் அள்ளும்போது தவறி விழுந்துவிட்டேன். அருகிலே இருந்த அம்மா கூக்குரலிட்டபடி ஓடிவந்து துலாக்கொடியில் கட்டியிருந்த வாளியை நான் தண்ணீரில் அமிழ்ந்து மேலே வந்தபோது என் கைகளின் அருகே நீட்ட நான் எப்படியோ பிடித்துக்கொண்டேன். அம்மா போட்ட கூக்குரலைக்கேட்டு ஓடிவந்த மற்றையவர்கள் எல்லோருமாகச்சேர்ந்து என்னைக் காப்பாற்றிவிட்டார்கள்.

இந்த வேளையில் எனது அம்மாவையும் நினைவுகூர வைத்த கந்தப்பு அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவிலிருந்து காப்பாற்றியவருக்கு 'சாகசத்திலகம்" எனும் பட்டம் பொருத்தமாகத்தான் இருக்கும்.

நன்றி குருஜி இணைப்புக்கு!!!

Link to comment
Share on other sites

சாவிலிருந்து காப்பாற்றியவருக்கு 'சாகசத்திலகம்" எனும் பட்டம் பொருத்தமாகத்தான் இருக்கும்.

நன்றி குருஜி இணைப்புக்கு!!!

சுவியண்ணா நீங்கள் அப்புவுக்குக் குடுத்தபட்டத்தை நான் வழிமொழிகிறேன். ஆச்சியிட்டை வாங்கிக்கட்டிறது அப்புவைப்பொறுத்தது: :lol:

சாகசத்திலகம் சண்டியன் அப்பு வாழ்க. :lol:

Link to comment
Share on other sites

கந்தப்பு ஏதோ எனக்கெண்டா சந்தேகம் தான்?? உண்மையை தயவு செய்து சொல்லனும் இப்ப, அந்த குழந்தையை தள்ளிவிட்டு குழந்தை கையில் வைச்சிருந்த ஐஸ்கிரீமை சாறி குளிர்களியை புடுங்கினது யாரு?? :lol::( வேண்டாம் நான் அதை ஒருத்தருக்கும் சொல்லமாட்டன்.... மறந்திடுவம் என்ன.... :lol:

அப்புறம் நானும் உப்படித்தான் உமை 40 வயசில கிணற்றுக்க விழுந்தன், நல்ல காலம் ஒருத்தருமே காப்பாற்றல்ல.... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தி! நீங்கள் 'சாகசத்திலகம்" பட்டத்தை வழிமொழிந்ததற்கு. ஆனாலும் ஆச்சி அவரில நல்ல வாரப்பாடு. அவர் எங்க போய் எப்படித்தான் தவழ்ந்து உருண்டு பிரண்டு வந்தாலும் சரி, என்ன நேரமானாலும் முழிச்சிருந்து கிணத்தடியில இழுத்துப் போட்டு நாலு வாளி தண்ணியள்ளி தலையில ஊத்தி துடைத்துவிட்டு சுடச்சுட குழல் புட்டும், விளக்கின நல்லெண்ணையில வதக்கின றால்போட்ட பிஞ்சுக் கத்தரிக்காய்ப் பொரியலும் போட்டுப் பிரட்டி, திட்டித் திட்டி, இடிச்சு இடிச்சுதான் தீத்தி விடுகிறவ.

பி. கு: உவருக்கு ஏதாவதொன்டு ஆச்சுதென்டால் பிறகு தான் நெற்றி நிறைய பென்னாம்பெரிய பொட்டும் போட்டுக்கொண்டு,கழுத்துநிறைய தாலிக்கொடி,பதக்கங்சங்கிலி, கல்அட்டியலும் போட்டு, முழங்கை வரைக்கும் விதம்விதமான டிசையினில காப்புகளும் அடுக்கிக் கொண்டு, விரலுக்கொன்றாய் எட்டு மோதிரமும் போட்டுக்கொண்டு கோயில்குளங்கள், கலியாணவீடுகள் என்டு போகமுடியாதெல்லே சாந்தி! அந்தப் பயமாகவும் இருக்கலாம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது "வீரசிங்கம்" கந்தப்பு வாழ்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.