Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சனி, ஆகஸ்ட் 16, 2014 - 00:02 மணி தமிழீழம் | வேந்தன்
கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி வீரவணக்க நாள் இன்றாகும்!
 
கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி .
 
உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.
kaptan%20angaiyakanni.JPG
 
அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.
 
தேசியத்தலைவருடன் , முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
 
“இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்”
 
அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.
 
அங்கயற்கண்ணிக்கு ஆயிரம் .
 
தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.
 
தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
KadarKarumpuli-Kapdan-Angkaiyarkannni.jp
காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.
 
ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.
 
கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.
 
பெண்ணவள் கரும்புலியாகி .
 
ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.
 
லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.
 
‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.
 
‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’
 
என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.
 
கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.
 
எல்லாம் தயார்.
 
கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.
 
அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.
 
இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.
 
என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.
 
1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
 
எல்லோருக்குமே பரபரப்பு.
 
தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.
 
ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.
 
‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.
 
ஆர்பரித்து எழுந்த அலை .
 
சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது.
 
அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.
 
ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.
 
தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.
 
இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.
 
- உயிராயிதத்திலிருந்து.
Link to comment
Share on other sites

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

 

16.08- கிடைக்கப்பெற்ற 20 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

1089.jpg

 

 
மேஜர்
அன்பு (செல்வமுருகன்)
அமிர்தலிங்கம் மதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2001
 
லெப்டினன்ட்
இசைச்செல்வன்
மாதவன் விஜயகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
லெப்டினன்ட்
கார்த்தீபன்
யோகராசா இராஜேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
வீரவேங்கை
கலைச்செல்வி
கனகசபை நானமலர்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
வீரவேங்கை
காந்தரூபி
கணபதிப்பிள்ளை சந்திரமதி
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.2001
 
கப்டன்
அதியன்
திருநாவுக்கரசு சிவகுமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.08.2001
 
துணைப்படை கப்டன்
பாபு
தேவதாஸ் ரவிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.2001
 
கப்டன்
மகேசநாதன்
சேனாதிராசா ஜெயச்சந்திரன்
பொலநறுவை, சிறிலங்கா
வீரச்சாவு: 16.08.1999
 
வீரவேங்கை
கலைச்செல்வன்
கந்தன் சபேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.1998
 
கப்டன்
தமிழ்ப்பிரியா
தேவதாஸ் ராஜினி
வவுனியா
வீரச்சாவு: 16.08.1998
 
வீரவேங்கை
நாவலன்
பாக்கியராசா தங்கரத்தினம்
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.1998
 
வீரவேங்கை
சச்சிதானந்தம்
முருகுப்பிள்ளை இராமலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.08.1997
 
கப்டன்
செஞ்சுடர்
பிரான்சிஸ்குரூஸ் இதயராஜ்
வவுனியா
வீரச்சாவு: 16.08.1997
 
கப்டன்
அரசன் (பூபதி)
முத்துக்குமாரசாமி அஜந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.1997
 
கடற்கரும்புலி கப்டன்
அங்கையக்கண்ணி
துரைசிங்கம் புஸ்பகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.08.1994
 
2ம் லெப்டினன்ட்
ராசன்
இராமநாதன் பத்மநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.1992
 
வீரவேங்கை
வெங்கடேஸ்வரன்
சின்னையா இராமநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.08.1992
 
வீரவேங்கை
ராஜன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
திருகோணமலை
வீரச்சாவு: 16.08.1990
 
வீரவேங்கை
மூர்த்தி
வேதாரணியம் சத்தியமூர்த்தி
ஏறாவூர், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 16.08.1988
 
வீரவேங்கை
யோகன்
சுப்பிரமணியம் தயாநிதி
பாரதிபுரம், வவுனியா.
வீரச்சாவு: 16.08.1987

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

 
Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு என் சிரம் சாய்ந்த வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

17.08- கிடைக்கப்பெற்ற 45 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

1089.jpg

 

 
கப்டன்
சர்வன் (கனவெளி)
கோவிந்தசாமி சண்முகநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 17.08.1999
 
வீரவேங்கை
அன்புவாணன்
கந்தசாமி அமிர்தராஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1998
 
2ம் லெப்டினன்ட்
எழிலன்
சின்னத்துரை விஜயராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1997
 
கப்டன்
சின்னமணி (ஜீவன்)
துரைச்சாமி பாலகிருஸ்ணன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1997
 
2ம் லெப்டினன்ட்
பைந்தமிழன்
சுபாம்பிள்ளை சாள்ஸ்வலன்ரைன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர்
பொழிலன் (துசி)
பத்மநாதன் பாலரட்ணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர்
அருள்மணி
செல்லத்துரை சாந்தரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
கப்டன்
மேனன்
இராஜதுரை சுந்தரேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
கப்டன்
கண்ணன் (பாரீஸ்)
கதிரவேல் பத்மசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
கப்டன்
தமிழ்மாறன்
பொன்னுத்துரை ரமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட்
சிறீக்காந்
சந்திரசேகரம் சிறிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட்
ஆதித்தன் (ஆனந்தன்)
முத்தையா சிறீகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட்
சிவச்செல்வன்
கணபதிப்பிள்ளை கமலநாதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
லெப்டினன்ட்
தமிழ்மறவன்
பத்திநாதன் ஜெயசீலன்
மன்னார்
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
நிரோயன்
பெனடிற் சிம்சன்ராஜ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
சின்னத்தம்பி (ரஞ்சன்)
முத்துச்சாமி செல்வா
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
திருவருட்செல்வன்
விஐயன் சதீஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
மாதங்கன்
நவரட்ணராசா செல்வக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
திருவாசன்
தோமஸ் ஜெயராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
ஜனார்த்தனன்
நடராசசிங்கம் சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை
கலியுகன்
பூரணசந்திரன் நவனந்தராஜ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை
கரிகாலன்
பாலசிங்கம் கணேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை
பேரின்பன்
குமாரசாமி தர்மசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை
புத்தூரன்
கந்தசாமி பிரபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர்
றோயல்
சோமசுந்தரம் சோபராசா
திருகோணமலை
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர்
அப்பன்
சின்னத்துரை ரவிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
8790.jpg
லெப்.கேணல்
சிவாஜி
கிருஸ்ணன் சிறிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
2ம் லெப்டினன்ட்
கனிவேந்தன்
இராசு திவாகரன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 17.08.1996
 
வீரவேங்கை
தமிழன்பன்
பீற்றர்இம்மானுவேல் எமில்உதயந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
 
மேஜர்
றுக்மணிதேவன் (அச்சுதன்)
அழகிப்போடி யோகராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
2ம் லெப்டினன்ட்
சிறீக்காந்தன் (பத்தன்)
வைரமுத்து கந்தையா
அம்பாறை
வீரச்சாவு: 17.08.1995
 
2ம் லெப்டினன்ட்
குலம்
கணபதிப்பிள்ளை சிவபாதம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை
கடம்பன்
விநாயகமுர்த்தி திலகராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை
தனுராஜன்
சாமித்தம்பி ஜெயசீலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை
தமிழ்நாதன்
கந்தசாமி சந்திரமோகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
வீரவேங்கை
தங்கத்துரை
காசிநாதன் கணபதிப்பிள்ளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1995
 
லெப்டினன்ட்
காத்தான்
ஜேம்ஸ் இன்பராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.08.1994
 
லெப்டினன்ட்
ரட்ணம் (ரெட்னேஸ்)
சிறிதரன் உமாச்சந்திரன்
மன்னார்
வீரச்சாவு: 17.08.1993
 
2ம் லெப்டினன்ட்
நவநீதன்
பிள்ளையான் பத்மநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1993
 
2ம் லெப்டினன்ட்
ரதீஸ் (நதீஸ்)
தீரக்குட்டி சுதாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 17.08.1992
 
வீரவேங்கை
முதல்வன்(ஞானவேல்)
தேவராசா சிறீராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1992
 
வீரவேங்கை
சுசியன்
சுப்பிரமணியம் செல்வக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.08.1991
 
வீரவேங்கை
மூர்த்தி
விநாயகமூர்த்தி இராஜேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.08.1991
 
வீரவேங்கை
அன்ரன்
செந்தில்நாயகம் மகேந்திரா
கோப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 17.08.1989
 
கப்டன்
சிவா
கணபதிப்பிள்ளை செல்லத்துரை
எழுதுமட்டுவாழ், பளை, கிளிநொச்சி.
வீரச்சாவு: 17.08.1989
 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வீரவணக்கங்கள்

Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

இன்றைய நாளில் தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், மாவீரர்களே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

18.08- கிடைக்கப்பெற்ற 16 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

1089.jpg

 

லெப்டினன்ட்

காவிரிநெஞ்சன்
தில்லைநாயகம் சுதாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.08.2000
 
2ம் லெப்டினன்ட்
அருட்கனி
நடராசா தர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.2000
 
மேஜர்
சிவப்பிரகாசம் (ராஜா)
விநாயகரத்தினம் கெங்காதரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.08.1999
 
2ம் லெப்டினன்ட்
ஜாதவராஜ்
முருகுப்பிள்ளை வைரமுத்து
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.08.1999
 
2ம் லெப்டினன்ட்
இசையமுதன்
அப்பாப்பிள்ளை சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1998
 
வீரவேங்கை
ஜெயந்தன்
கார்த்திகேசு மனோகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1998
 
வீரவேங்கை
கடலரசன்
சுப்பிரமணியம் வரதன்
திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1998
 
வீரவேங்கை
கவியமுதன்
கதிர்காமத்தம்பி தவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1998
 
கப்டன்
செங்கோலன் (மேனன்)
ஜெயராஜா சுந்தரராஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1997
 
கப்டன்
இதயநாதன்
தம்பிராசா திவ்வியராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.08.1997
 
லெப்டினன்ட்
படையரசன்
வேலாயுதப்பிள்ளை விமலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1997
 
2ம் லெப்டினன்ட்
தமிழரசன்
கணேசன் கிரிதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1997
 
கப்டன்
ரகுபதி
நல்லதம்பி தவசீலன்
திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1991
 
கப்டன்
தரன்
வேல்முருகு தவராசா
புலிபாய்ந்தகல், கிரான், மட்டக்களப்பு.
வீரச்சாவு: 18.08.1989
 
வீரவேங்கை
கணேஸ் (சிறில்)
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 18.08.1988
 
லெப்டினன்ட்
அருள்
சபாரட்ணம் சந்திரராஜா
தம்பலகாமம், திருகோணமலை.
வீரச்சாவு: 18.08.1988
 
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 16 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

 

 

இன்னாளில் பலியான  பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

 
Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வணக்கம்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.