Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....

Link to comment
Share on other sites

  • Replies 16.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2454

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2053

  • உடையார்

    1543

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
maaveerar.jpg

நவம்பர் மாதம் 23 மதியத்தில் இருந்து 24 காலைவரை யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ள போராளிகள் மருத்துவ விடுதி நிரம்பி வழிந்தது. யாழ் போதனா வைத்திய சாலையும் வைத்தியர்கள், தாதிகள் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ துறை வைத்தியர்கள் மற்றும் மருத்துவ போராளிகளும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

3வைத்திய சாலைக்கு முன்பாக இருந்த பாலம் பணிமனையில் குருதிகொடை செய்வதற்காக மாணவர்கள் சிலரும் வந்து காத்திருந்தனர். அந்தளவு போராளிகள் காயப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

ஆம் மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் 1992 வரையான வரலாற்றில் மிக முக குறுகிய நேரத்தில் நீண்ட காவலரண்களை தாக்கியழித்த சமர் நேற்று நடந்திருந்தது. பலாலி பெரும் கூட்டு படைத்தளத்தின் கிழக்கு பகுதியில் 4.5 கிலோமீற்றர் காவலரண்களை தாக்கி அழித்திருந்தனர். அந்த நடவடிக்கையில் காயப்பட்டோர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அது மட்டுமன்றி வன்னியில் இருந்தும் தென் தமிழீழத்தில் இருந்தும் மன்னாரில் இருந்தும் கடல்வழியாக காயப்பட்ட போராளிகள் வந்த வண்ணம் இருந்தனர். அதே வேளை மாவீரர்களின் வித்துடல்களும் கிளாலி கடல்வழியாக ந்து கொண்டிருந்தன.

இதற்கு காரணம் 1992 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்தின் வட தமிழீழ மிகப்பெரும் படை நடவடிக்கை எடுப்பினை சீர்குலைக்கும் தாக்குதல்களை நடாத்தியதும் தென் தமிழீழத்தில் படை நடவடிக்கைகளை முறியடித்ததும் ஆகும். 1992 ம் ஆண்டினை ஓர் வெற்றி ஆண்டாக தமிழ்ழிழ தேசமும் விடுதலைப்புலிகளின் போராளிகளும் கொண்டாடினர். அந்த வெற்றிக்காக தமது உயிரையும், குருதியினையும்,அங்கங்களையும் கொடுத்த போராளிகளை மக்கள் வாழ்த்தினர். கூடவே மாவீரர் நாளில் அந்த மாவீரர்களுக்காக தமிழீழத்தின் திக்கு திசை எங்கும் மக்கள் தமது இடங்களை அழகு படுத்தி அந்த அழகில் மாவீரர்களை நிறுத்தினர் என்றே சொல்லவேண்டும்.

பலாலி கிழக்கு இராணுவ வேலிகள் தகர்ப்பு தாக்குதல் அப்போது அரச படைகளுக்கும், அரசாங்கத்திற்கும் பெரும் அதிருப்தியினை தோற்றுவித்து இருந்தது ஏனெனில் 1992 ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் குடா நாட்டில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்ள இருந்தது. ஐந்து முனைகளில் இந்த தாக்குதலினை நடாத்த அரச படைகள் தயாராகி கொண்டிருந்தனர். மண்டைதீவு வழியாக , பலாலி ஊடாக,அனையிறவு இயக்கச்சி ஊடாக, கட்டைக்காட்டில் இருந்து வடமராட்சி கிழக்கு ஊடாக, அராலிதுறையூடாக ஆகிய முனைகளில் தயாராகி கொண்டிருந்த வேளையில் தான் தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்ட பல முறியடிப்பு தாக்குதல்களை நடாத்திக்கொண்டிருந்தனர்.

இதன்படி குடா நாட்டை கைப்பற்றுவதற்கான படை நடைவடிக்கையினை வழி நடாத்தவிருந்த சிங்கள தளபதிகளான டென்சில் கொப்பேகடுவ, விஜய விமலரட்ன, ஜெயமகா உட்பட 09 அதிகாரிகள் அராலியில் கண்ணீவெடி தாக்குதலில் 1992.08.08 அன்று கொல்லப்பட்டனர். மேஜர் கார்வண்ணன் இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடாத்தினார். அதன் பின்னர் கட்டைக்காட்டில் உள்ள படை நடவடிக்கைக்கான ஆயுத கிடங்கின் மீது 1/10/1992 ம் ஆண்டு அதிகாலை விடுதலைப்புலிகளின் இம்ரான் பாண்டியன் படையணி, கடற்புலிகள், மகளிர்படையணி ஆகியன இணைந்து தாக்குதலை மேற்கொண்டனர். இதில் இயக்க வரலாற்றில் (1992வரை) முதன் முறையாக பெரும் தொகையாக ஆயுதங்கள் மீட்கப்பட்ட சமராக அப்போது அமைந்தது. இந்த சமரில் மேஜர் கார்வண்ணன் வீரச்சாவு அடைந்தது பேரிழப்பாக இருந்தது.

இதே நேரம் தென் தமிழீழத்தில் இலங்கை அரசாங்கம் தமது தோல்விகளை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஜயபார இராணுவ நடவடிக்கையானதும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டது. இதில் இலங்கை அரசாங்கம் உலங்கு வானூர்தி ஒன்றினையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் தான் பூனகரி இராணுவ முகாமின் இராணுவ வேலிகளும் தாக்கி அழிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்ட வரலாற்றில் 1992 ம் ஆண்டினை வெற்றியாண்டாக பதிவு செய்துள்ளனர். காரணம் போருக்கு தேவையான பெரும் தொகையான ஆயுத வெடிப்பொருட்களை எதிரியிடம் இருந்து மீட்ட ஆண்டு, வட தமிழீழ மிகப்பெரும் படையெடுப்பினை முறியடித்து அதன் தளபதிகளையே கொன்றொழித்த ஆண்டு. இவ்வாறாக நமது வெற்றிக்கு உயிர் கொடுத்தது மட்டுமன்றி எதிர்கால போராட்டத்திற்கே உயிர்கொடுத்து ஆயுதங்களை பெற்று தந்த அந்த மாவீரர்களை போற்றுவோம்.

அதே நேரம் உயிர்கொடுத்து பெற்ற ஆயுதங்கள் இன்று எதிரி கைக்கு போவதனை நினைக்கும் ஒவ்வொரு கணமும் எங்கள் மனம் கனக்கின்றது என்றாலும் இந்த நேரத்தில் ஒரு ஆயுதத்தை கொடுத்து பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றால் சில வேளை எங்கள் மாவீரர்கள் மன்னிப்பார்கள். ஏனென்றால் நாட்டின் மீது கொண்ட அதே பாசம் மக்கள் மீதும் போராளிகள் மீதும் அவர்களுக்கு இருந்தது.

கொடிய போர்கள் நடந்த ஜயசிக்குறு காலப்பகுதியில் எமது ஒரு நேர சாப்பாட்டை நிறுத்தி பட்டிணி கிடக்கும் மக்களுக்கு கொடுங்கள் என்று சொன்ன ஒரு மாவீரனை இந்த நேரத்தில் நினைவு கூருகின்றேன். அந்த மாவீரனின் சகோதரன் இந்த வருடம் இரணைப்பாலை ஆனந்த புரம் சண்டையில் படுகாயமடைந்து தற்போது இராணுவத்தின் சிறையில் இருக்கின்றான்.

தாயகத்தில் யாரும் யாருக்காக ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தமது பிள்ளைகளுக்கு தமது வீட்டில்கூட நினைவு கூர முடியாத நிலையில் இருக்கின்றது தமிழீழம். வெற்றி ஒலிகளில் மாவீரர்களை போற்றிய தமிழீழம் இன்று வேதனை ஒலிகளாலும் வலிகளாலும் தளர்வுற்று காணப்படுகின்றது. என்றாலும் எப்போ ஒரு நாள் நிமிரும் எம் தேசம் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கின்றது.

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

maaveerar.jpg&key=93cfa4934f789a2f12d585

மண்ணுக்காய் உயிரீந்து
மலருக்குள் முகம் காட்டி
மானத்தை காத்த எம் வீரரே
ஒருநாளும் மறவோமே வீரரே!
வலியோடு வாழ்ந்தாலும்
வழியொன்று காண்போமே வீரரே!
மாவீரரே  மாவீரரே மாவீரரே!

Edited by nochchi
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு  வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
shankar.jpg

எந்த சூழலிலும் பதட்டப்படாத ஒரு கெரில்லா வீரனுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்ட சங்கர் எனும் சத்திய நாதன் 19.08.1961 அன்று பிறந்தார் 27.11.1982 அன்று தமிழ் நாட்டில் வீரச்சாவு அடைந்தார். சங்கர் அவர்கள் வீரச்சாவு அடையும் போது தமிழீழ தேசிய தலைவர் மேதகு திரு வே பிரபாகரன் அவர்கள் உடன் இருந்தார்.

அவர் வீரச்சாவு அடையும் போது “ ஒரு உண்மை மனிதனின் கதை” என்ற இரஷ்சிய நாவலை படித்து கொண்டிருந்தார் ஆனால் படித்து முடிவதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்தது. ஆனால் இன்னொரு உண்மை மனிதனின் கதை பிறந்தது.

1982 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கை பொலிசார் வலை விரித்து தேடும் நேரம். சங்கர் எனும் முதல் மவீரனும் தலைவர் பிரபாகரன் அவர்களின் அரசியல், இராணுவ செயற்பாடுகளை முழுமையாக வரித்துக்கொண்டு இயக்கத்தின் இராணுவ பிரிவில் தனது கடமைகளை செய்ய தொடங்கினார். தனது 20 வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையினை மேற்கொண்ட கெரில்லா வீரனாக, இயக்கத்தின் தாக்குதல் தலைவனாக குடா நாடு முழுவதும் சுற்றி திரிந்த அதிரடிப்புலிதான் சங்கர்.

சங்கர் விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்வதற்கான முயற்சிகள் கூட ஒரு போராட்டமாகவே இருந்தது எனலாம். 1977ஆம் ஆண்டு. வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரைக் கூர்ந்து நோக்கினார். இளைஞன் ஆனால் தோற்றத்தில் சிறியவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா?

தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன். ‘ஏதோ அறியாதவன். சில நாட்கள் சுற்றி விட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்” என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப் பயிற்சி பெறத் தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்று விடுகிறான்.

1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன் சங்கராக விடுதலைப் புலியாக மாறினான். சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதி பெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும்இ திட்டங்கள் தீட்டுவதும்இ விவாதிப்பதுமாக… சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.

இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப் பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது.

அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்புஇ தினசரி துப்பரவாக்கப் பட்டு பளபளத்தது ரிவோல்வர். 1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசுஇ விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்து விட்டது. அவனும் தேடப் பட்டான். 1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப் பட்டது. சங்கர் தாக்குதல் படைப் பிரிவில் ஒருவனானான்.

1982ஆடி 2ஆம் நாள் முதல் முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப் போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் எழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர், வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம். முதலில் எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமான தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப் பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புக்களுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.

1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப் பாதுகாவலர்கள் தெரிவு செய்யப் படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவு செய்யப் பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுத வரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடம் இருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப் படுகின்றது. இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர் இதை மோப்பம் பிடித்து விடுகிறது கூலிப்படை…. வீடு முற்றுகை இடப்படுகிறது. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்து விடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்து விடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்து விட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக் கொள்கிறார்கள்.

முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவி விட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கி விடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்ல முடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை இந்தியா கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரை சேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாத நிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.

27-11-1982 அன்று விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளைத் தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான். தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி ‘தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான். தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே இந்தியாவில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவு கூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப் படுத்தப்பட்டது.

தனது 19 வயதிலேயே வெடிகுண்டு தயாரிக்கும் திறமையினை பெற்றிருந்த சங்கர் தாக்குதலிற்கான வெடிகுண்டுகளை தய்யரித்து மற்றவர்களுக்கு பயிற்சியும் வழங்குவான். ஆயுதங்களோடு எதிரியிடம் பிடிபடுவதனை எந்த காலத்திலும் விரும்பாத சங்கர் அவ்வாறு யாரும் பிடிபடும் வேளை உள்ளம் குமுறுவான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்பதில் எக்காலத்திலும் மாற்று கருத்துக்கு இடமில்லாமல் தனது பயணத்தினை தொடர்ந்தவன்.

அதனால் தான் தனித்து தன்னை சுற்றி துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்க தயாராக இருந்த இலங்கை அதிரடி பொலிஸ் படை மீது தாக்குதல் நடாத்திய வாறே தப்பி சென்றான். காயப்பட்ட உடலுடன் கைத்துப்பாகியை கைவிடாது மதில்கள் வேலிகள் தாண்டி இறுதி வரை தான் பாதுகாப்பாக வந்தடையும் வரை துப்பாக்கியிபை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தான் சங்கர் என்ற மாவீரன்.

தெற்கில் இருந்து சாரணர்களை அனுப்பி புலிகளை அடக்குவேன் என அப்போதைய அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் கூறிய சில தினங்களில் நெல்லியடியில் சிறிலங்கா பொலிஸ் படையின் ஜீப் ஒன்றின் தனது கைத்துப்பாக்கியால் சுட்டான் அதன் பின்னர் அந்த சாரதியினை ஒருகையால் இழுத்து வெளியே விட்டு கொண்டு மற்றவர்களுக்கும் தனி ஒருவனாய் கைத்துப்பாகியால் தாக்கினான். அந்த காலத்தில் சிங்கள அரசாங்கத்திற்கு இது ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதல்தான்.

மாவீரன் சீலன் அவர்களின் வழினடத்தலில் இடம்பெற்ற சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதல் நடவடிக்கையிலும் சங்கர் கணிசமான பங்களிப்பினை வழங்கினான். அதேவேளை பொன்னாலை கண்ணிவெடிதாக்குதல் நடவடிகையிலும் சங்கரின் பங்களிப்பு கணிசமானது. இதே வேளை ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் தம்பாபிள்ளை அவர்கள் மீதான் இயக்க நடவடிக்கைக்கும் சங்கர் அவரே பொறுப்பெடுத்தார்.

எந்த சூழலிலும் பதட்டப்படாத ஒரு கெரில்லா வீரனுக்குரிய அனைத்து அம்சங்களையும் கொண்ட சங்கர் எனும் சத்திய நாதன் 19.08.1961 அன்று பிறந்தார் 27.11.1982 அன்று தமிழ் நாட்டில் வீரச்சாவு அடைந்தார். சங்கர் அவர்கள் வீரச்சாவு அடையும் போது தமிழீழ தேசிய தலைவர் மேதகு திரு வே பிரபாகரன் அவர்கள் உடன் இருந்தார். அவர் வீரச்சாவு அடையும் போது “ ஒரு உண்மை மனிதனின் கதை” என்ற இரஷ்சிய நாவலை படித்து கொண்டிருந்தார் ஆனால் படித்து முடிவதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்தது. ஆனால் இன்னொரு உண்மை மனிதனின் கதை பிறந்தது.

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு  வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். 

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கங்கள்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கும் , ஈழப்போரில் நாட்டுக்காக உயிரிழந்த மக்களுக்கும் , காணாமல் ஆக்கப்படட   உயிர்களுக்கும் என் வீர வணக்கம்  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு  வீரவணக்கங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Himmel und im Freien

தாயகக்  கனவுடன் சாவினை தழுவிய,  சந்தன பேழைகளே... வீர வணக்கங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Image may contain: 1 person, text
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.