Jump to content

சதீஸ் செத்துக் கொண்டிருக்கிறான்....காப்பாற்றுங்கள்...


Recommended Posts

சதீசின் மகனின் படிப்புக்கான உதவியைப்பொறுப்பை கள உறவு நிழலியும் அவரது மனைவியும் பொறுப்பேற்றுள்ளனர். சாகித்தியன் சாதiனாயளனாக வேண்டுமென்ற சதீசின் கனவு மெய்ப்பட அவனது குழந்தையின் கல்விக்கான உதவியை செய்ய முன்வந்த நிழலிக்கும் அவரு மனைவிக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

fp070606-38.jpg

Link to comment
Share on other sites

சதீசின் மகனின் படிப்புக்கான உதவியைப்பொறுப்பை கள உறவு நிழலியும் அவரது மனைவியும் பொறுப்பேற்றுள்ளனர். சாகித்தியன் சாதiனாயளனாக வேண்டுமென்ற சதீசின் கனவு மெய்ப்பட அவனது குழந்தையின் கல்விக்கான உதவியை செய்ய முன்வந்த நிழலிக்கும் அவரு மனைவிக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

fp070606-38.jpg

என் மனைவிக்கும் நன்றி சொல்லியிருக்கின்றதைப் பார்த்து என் மனைவியின் கண்ணில் ஆனந்தக் கண்ணீரே வந்துட்டுது... இன்று வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படி விடியவே சந்தோசப்படுத்தியாச்சு ஆளை. :)

Link to comment
Share on other sites

என் மனைவிக்கும் நன்றி சொல்லியிருக்கின்றதைப் பார்த்து என் மனைவியின் கண்ணில் ஆனந்தக் கண்ணீரே வந்துட்டுது... இன்று வெள்ளிக்கிழமை அதுவுமா இப்படி விடியவே சந்தோசப்படுத்தியாச்சு ஆளை. :)

நல்லவற்றை வாழ்த்துவோம் நல்வர்களையும் வாழ்த்துவோம். அவர்கள் பலரை வாழ வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

[size=4][size=6]எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..![/size]

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, September 5, 2012[/size]

[size=4]காலம் எழுதிய வெற்றிகளில்

நெருப்பாய் இயங்கிய வரலாறு.

இருளும் கடினமும் இயற்கையின் சீற்றமும்

அசையாத இரும்பின் இருதயம்

உனக்காய் படைக்கப்பட்டிருந்தது.

ஒருகாலம் உனக்கான விலை

உலகத்தாலும் கொடுக்க முடியாத பெறுமதி.

கையுக்குள் வளர்த்து கடமைக்கு விடைதந்த

காவியத்தின் கண்ணில் தெரிந்த ஒளியின் வெளியில்

ஓர்மத்தை விதைத்து விடைபெற்ற வீரன்.

‘செயலின் பின் சொல்’

அதிகாரியாய் , பணியாளனாய்

இலட்சியப் போராளியாய் – நீ

இயங்கிய தளங்கள் தந்த அனுபவங்களிலிருந்து

இன்னோர் உலகின் மூலத்தைக் கண்ட முழுமுதலான்.

தடைகளகற்றித் தனிதேசம் அமைக்க

ஓயாதலைந்த பெருநெருப்பு.

எமக்காகவே எரியும் நாள் தேடியலைந்த எரிமலை.

ஏற்றிருந்த இலட்சியக் கனவோடலைந்த இரும்பு

வழியனுப்பியோர் கனவில் விளைந்த [/size]

[size=4]வெற்றிகளை அள்ளித் தந்து

விலாசங்கள் விசிலடிக்க [/size]

[size=4]வழிகாட்டிய வெளிவராத அதிசயம்…..

23.08.2012 ,

கடைசியாய் கதைபேசி

கண்ணீரோடு விடைபெற்ற போதும்

மீண்டும் கனவுகள் விதைத்துத்தானே

கண்ணுறங்கிப் போனாய் !

வாழ்ந்த போது உனக்கு விலையில்லை

வரலாறுகள் நீ படைத்த போதுன்

பெயருக்கு விலாசமில்லை….!

அன்றைய வீரன் !

காய்ந்து போன உதட்டின் உணர்வையோ

உயிரின் வலியையோ உணர முடியாப் பிணமாய்

இன்று வீழ்ந்து கிடக்கிறாய்

விழிகளில் ஈரம் எதையோ சொல்லத் துடிக்கிறது

விளங்கிக் கொள்ள முடியவில்லை……!

‘வீழ்வதெல்லாம் எழுவதற்கே’

இன்னும் வீரமாய் உன்னை விற்பனைக்கா(சா)ட்சியாக்கி

விற்றுக் கொண்டிருக்கிறது தேசிய உணர்வு….!

நீ செத்துக் கொண்டிருக்கிறாய்.

அப்பாவின் குரலுக்காய் சாகித்யன்

கணவனின் மீட்சிக்காய் கவிதா

தோழனின் உயிர்காப்புக்காய் நாங்கள்

உன்னைக் காக்க மட்டுமே இறைஞ்சுகிறோம்….!

கண்ணில் தெரியாக்கடவுளே

முன்னால் வாழ்கிற தமிழர்களே

எங்கள் தோழனை உயிர்காத்துத் தாருங்கள்…..! [/size]

[size=4]எந்நாளும் உங்களுக்கு நன்றியுடனிருப்போம்.

01.09.2012[/size]

[size=5]http://mullaimann.blogspot.de/2012/09/blog-post.html[/size]

[size=5]http://kavithai.blog.com/2012/09/05/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/[/size]

Link to comment
Share on other sites

  • 1 month later...

சதீசின் மகனின் படிப்புக்கான உதவியைப்பொறுப்பை கள உறவு நிழலியும் அவரது மனைவியும் பொறுப்பேற்றுள்ளனர். சாகித்தியன் சாதiனாயளனாக வேண்டுமென்ற சதீசின் கனவு மெய்ப்பட அவனது குழந்தையின் கல்விக்கான உதவியை செய்ய முன்வந்த நிழலிக்கும் அவரு மனைவிக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

சொன்ன மாதிரி என்னால் சில பிரச்சனைகளாலும் திடீர் செலவுகளாலும் செப்ரம்பரில் இருந்து உதவி செய்ய முடியவில்லை. இது பற்றி உங்களுக்கு சொல்லவும் மறந்து விட்டேன். இந்த மாதத்தில் இருந்தே அனுப்ப முடிகின்றது.

இன்று நேசக்கரம் மூலம் பணம் அனுப்பிவிட்டு தாமதத்துக்கு வருத்தம் தெரிவிக்க இதனை எழுதுகின்றேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 years later...

இன்று இந்தத் திரியை எதேச்சையாகப் பார்க்கக் கிடைத்தது நிழலி, உங்களுக்கும் மனைவிக்கும் பெரு நன்றிகள்.

Link to comment
Share on other sites

இன்று இந்தத் திரியை எதேச்சையாகப் பார்க்கக் கிடைத்தது நிழலி, உங்களுக்கும் மனைவிக்கும் பெரு நன்றிகள்.

 

இந்த செய்திக்குரிய சதீஸ் சிறையில் இறந்துவிட்டான் ஆதவன்.

Link to comment
Share on other sites

சதீஸ் உடலம் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது. அவனை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்வதை தவிர எதையும் செய்ய முடியாதுள்ளது.
 

நாட்டுக்காக போய் தன் வாழ்வை சிறையில் கழித்து இறந்து போன சதீசின் குழந்தைக்கும் குடும்பத்திற்கும் உதவ முடிந்தவர்கள் உதவுங்கள். அவனது ஆசை தன் மகன் படித்து நல்வாழ்வு வாழ வேணுமென்பது. அதையேனும் செய்வோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.