Jump to content

பதட்டத்தை எவ்வாறு குறைக்கலாம்


Recommended Posts

ஒரு வீதி விளக்கை கடக்கும் போது அது மஞ்சளுக்கு மாறி அடுத்தது சிவப்பு வருகிற நேரம் நான் நிறுத்தி விட்டேன் அதிலை துவிச்சக்கர வண்டி பாதையும் நடை பாதையும் இருந்தது முன்னுக்கு துவிச்சக்கர வண்டி பாதை.நான் திடீரென நிறுத்தியதால் முன் சில்லு சிறிய தூரம் நான் நினைக்கிறான் ஒரு மூன்று அங்குலம் நிறுத்தல் கோட்டை தாண்டி விட்டது.இது தான் தீவிரமான பிழையாக பரீட்சகரால் சொல்லப்பட்டது.

வாகனம் ஓடும் போது உங்கள் பார்வை குறுகிய வீச்சுள்ள பார்வையாக இல்லாமல் நீண்ட வீச்சுள்ள பரந்த பார்வையாக (long range) காணப்படவேண்டும். சந்திகளில் உள்ள ஒளி சமிக்ஞ்சைகளுக்கு சந்தியை அண்மிக்கும் போது இல்லாமல் அதற்கு முன்னதாகவே உங்களை தயார்படுத்த வேண்டும். முன்கூட்டியே judgement செய்து ஓட பழகினால் இப்படியான பிரச்சனை இனி வராது.

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ம்........... மனதை தைரியப்படுத்துங்கள். யோகா தியானம் செய்து மனதை பதட்டப்படாமல் வைத்திருங்கள். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றி கிட்டும்.

Link to comment
Share on other sites

[size=4]சிம்பிளாக நினையுங்கள் ..........பெரிதாக ஜோசிக்க கூடாது ...............என்னால் முடியும் ,என்னால் முடியும் என்ற தாரக மந்திரத்தால் மனதை நிரப்புங்கள் ......உங்களால் முடியும் ................

டிஸ்கி ..........அப்படியும் முடியவில்லை என்றால் இரண்டு பக் எடுங்கள் ..........விஷயம் கிளீனாக நடக்கும் :D :D :icon_idea: [/size]

Link to comment
Share on other sites

போக்குவரத்து கூறியதுபோல குறுகிய பார்வை வேண்டாம்.. இதற்கு கொஞ்சம் பயிற்சி தேவை.. பரவலாகப் பார்த்து ஓடும்போது முன்னராகவே தீர்மானித்துவிடலாம்.. இப்படியாக ஓடுவதுதான் பாதுகாப்பானதும்கூட.. எல்லாம் நன்மைக்கே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.ஆக மூன்று சிறிய பிழைகள் தான்.ஒரு வீதி விளக்கை கடக்கும் போது அது மஞ்சளுக்கு மாறி அடுத்தது சிவப்பு வருகிற நேரம் நான் நிறுத்தி விட்டேன் அதிலை துவிச்சக்கர வண்டி பாதையும் நடை பாதையும் இருந்தது

இங்கு போக்குவரத்து விதிகளை கற்பிக்கும்.... போது, மேற்கூறியதை, திரும்ப... திரும்ப சொல்லித் தருவார்கள்.

அதாவது... நீங்கள் ஒரு சமிக்ஞை விளக்கை அண்மித்துக் கொண்டிருக்கும் போது...

அது, பச்சையில் இருந்தால்... அடுத்து மஞ்சள், சிவப்புக்கு வரும் என்பதால்... சரியான தருணத்தில்... பிறேக் பிடிக்க தயாராக இருக்க வேண்டும்.

சரி... நடந்தது, நடந்து... போச்சுது. மனதை தளரவிடாமல்... அடுத்த இரண்டு கிழமையில்... அடுத்த சோதனைக்கு தயாராகுங்கள்.

தாமதிக்கும் ஒவ்வொரு நாட்களும்... படித்தவற்றை மறந்து போவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளுக்கு மற்றும் போக்குவரத்து அண்ணாவின் ஆலோசனைகளுக்கு.எப்பிடியும் சித்தியடைந்துதான் மிச்ச வேலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான் நீங்கள் பரிட்சை எடுக்கும் நிலையத்தை மாத்திப் பாருங்கோ

Link to comment
Share on other sites

வாதவூரான் நீங்கள் பரிட்சை எடுக்கும் நிலையத்தை மாத்திப் பாருங்கோ

பரீட்சை நிலையங்களின் அமைவிடம் பரீட்சையில் சித்தி பெறும் சாத்தியத்தில் பங்கு வகிக்கிறது என்பதும் உண்மை. சில பரீட்சை நிலையங்களின் அமைவிடம், அந்த சூழலில் பரீட்சகருக்கு வாகனத்தை ஓடி காட்டுவதில் சிரமத்தை ஏற்படுத்தலாம், இவ்வாறே வேறு சில பரீட்சை நிலையங்களின் அமைவிடம் அந்த சூழலில் பரீட்சகருக்கு வாகனத்தை ஓடி காட்டுவதில் சற்று இலகுவாக அமையலாம். எம்மிடம் வரும் மாணவர்களையும் அவர்களது ஆற்றல்களை பொறுத்து நாம் வெவ்வேறு பரீட்சை நிலையங்களுக்கு அழைத்து செல்வோம். எப்படி இருப்பினும், முதலில் முறையாக முழுமையாக வாகனத்தை ஓட கற்று கொள்வதே முக்கியம். அடிப்படை விடயங்கள் தெரியாமல் பரீட்சையில் சித்தி பெற்று பின்னர் வீதி விபத்துக்களில் சிக்குவதையும், காவல்துறையிடம் டிக்கெட் வாங்குவதையும் விட பல தடவைகள் சித்தி அடையாவிட்டாலும், முறையாக அனைத்தையும் அறிந்த பின்னர் சித்தி அடைவதே சிறந்தது.

Link to comment
Share on other sites

வாதவூரான், நீங்கள் பரீட்சைக்குச் செல்வதற்கு முன்னர், பரீட்சை நடைபெறும் இடத்தைச் சுற்றி கார் ஓட்டிப் பழகுங்கள். முடிந்தால் பரீட்சை அன்றும் ஓரிரண்டு மணித்தியாலங்கள் ஓடிப் பழகுங்கள். முடிந்தவரை நீங்களே காரை ஓட்டுங்கள். அப்படி முடியாவிட்டால், உங்கள் நண்பர்களை ஓடவிட்டு நீங்கள் பக்கத்தில் அமர்ந்து இடங்களை நன்றாக அவதானியுங்கள். பரீட்சை அன்று நன்றாகச் சாப்பிட்டு தண்ணீரும் அளவாகக் குடியுங்கள். அதோடு பரீட்சைக்குச் சற்று முன்னர் காற்று நன்றாக வரும் இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். (பரீட்சைக்காக காரில் அமர்ந்திருக்கும் போது, ஜன்னல்களை நன்றாகத் திறந்து விட்டு அமர்ந்து கொள்ளலாம் - பரீட்சை மேர்பார்வiயாளர் வந்ததும் பூட்டிக் கொள்ள மறக்காதீர்கள்).

Link to comment
Share on other sites

பரீட்சை நிலையம் அமைந்துள்ள சுற்றாடலில் வாகனத்தை ஓடி பழகுவதும் நல்லதொரு யோசனை. ஏற்கனவே பரீட்சையின் போது சென்ற பாதை ஊடாக மீண்டும் ஓடி பயிற்சி செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி போக்குவரத்து அண்ணா மற்றும் அனைவருக்கும்.நான் நிறைய தடவை பரீட்சை நிலைய சுற்றாடலில் பயிற்சி எடுத்து விட்டேன்.வாகனம் ஓட்டுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.ஆனால் முதல் இரண்டு தடவையும் பதட்டத்தின் காரணமாக பிழை விட்டுவிட்டேன்.இந்த முறை எந்த பதட்டமும் இல்லை.ஆனால் நீங்கள் சொல்லுவது போல் நீண்ட தூரம் அவதானிக்கிற தன்மை குறைவாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

இதுக்கு தான் சொல்லுறதுபொண்ணுங்களா பாக்காம போற றோட பாக்கணும்னு car ஓடும் போது அழகான பொண்ணுங்க போவாங்க தான் அதுக்காக அவங்கள பாத்திட்டே ஓட முடியுமா?

Link to comment
Share on other sites

வாதவூரான், ஆத்தமுறை நிச்சயமாகக் கிடைக்கும், அதற்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள். பலரும் சொன்ன மாதிரி நீண்ட தூரம் அவதானித்து ஓடுங்கள். அடுத்தது நீங்கள் ஓட்டுவது Auto/Manual வாகனமா? எனது மனைவி இங்கு வந்த போது ஆரம்பத்தில் நான்தான் பழக்கினேன், ஆனால் ஒவொருநாளும் சண்டை அடி பிடியில் தான் முடியும். இப்பிடியே போனால் குடும்பம் பிரிந்து விடும் எண்டு ஒரு சாரதிப் பயிற்சி நிலையத்தில் இணைத்து விட்டேன். கொஞ்சம் செலவான வேலை தான் ஆனால் முறைப்படி பழக்குவார்கள். நீங்கள் யாரிடம் பழகினீர்கள்/பழகுகிறீர்கள்? உங்களிடம்/ உங்களுக்கு தெரிந்தவர்களிடம் வாகனம் இருந்தால் சட்டதிட்டங்களுக்கு அமைய (காப்புறுதி எடுக்க மறக்க வேண்டாம்!) L plate ஐ கொழுவி விட்டு வாகனப் போக்குவரத்து குறைந்த இரவு நேரங்களில் நன்கு பயிற்சி எடுங்கள். (முழுமையான சாரதி அனுமதிப் பத்திரம் இருப்பவர் உங்கள் முன் பயணி ஆசனத்தில் இருக்க வேண்டும் என்பது அவுஸ் சட்டம்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் அண்ணா நான் ஓட்டுவது Auto வாகனம்.சாரதி பயிற்சி நிலையத்தில் தான் பழகுகிறேன்.நான் நினைக்கிறன் எல்லாம் நேரம் தான். ஆனால் நான் ஒன்று செய்ய நினைத்தால் எப்பிடியும் அதை அடைந்தே தீருவேன்.எத்தனையாவது முறை என்றாலும் சித்தியடைந்து தான் தீருவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...அப்படித் தான் இருக்க வேணும்.வாழ்த்துக்கள் வாதவூரன்.எதையும் பொறுமையாக கவனித்து செயல்படுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாதவூரன்;

மீண்டும் சித்தியடையாதர்ற்காய் கவலைப்படுகிறேன். ஆனால் திருப்பவும் டரியல் காட்டி சித்தியடைய வாழ்த்துகள்

குறிப்பு; உங்களுக்கு இருந்த பிரச்சனை எனக்கும் இருந்தது. எக்கச்சக்கமாக சிவப்பில் நிறுத்துவது, அல்லது சிவப்பிலேயே ஓட வேண்டி வருவது...

1 . எப்பொதும் சிக்னலில் குறிந்த வேகத்தில் ஓடுங்கள்

2 . சிக்னல்குள்ளுள் வந்தவுடன், காலை பெடலில் இருந்து எடுங்கள், முக்கியம் ரேஸ் பண்ணக்கூடாது.

3 . பாதசாரிகள் கடவையில் உள்ள சிக்னல்லை பாருங்கள். அது இடத்து இடம் மாறினாலும் மகவும் பிரஎசனமானது, சில நேரங்களில் நேரம் குறைந்து கொண்டு போகும், சில வேளைகளில் பாதசாரி கடக்கும் சைன் இருக்கும், சிலவேளைகளில் ஸ்டாப் சைன் இருக்கும், இங்கே கனடாவில் சில இடங்களில் ஒரு கை (ஸ்டாப் சைன்) வந்து வந்து போகும். தொடக்கத்தில் 1 செக்கனுக்கு ஒருக்கா வந்து பிறகு வேகமாக வரத்தொடங்கும். வேகமாக வரத்தொடன்கினால் பிரதானமானm வாகனஞகினது- நிற்க போகிறது என்று அர்த்தம். மிகவும் பிரயோசனனமாது.

மேலதிக குறிப்புகள் அறிய முழு நேர மாணவனாக சேர வேண்டும் :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள் அனைவருக்கும் நன்றி இன்று காலையில் ஒரு சந்தோசமான செய்தி நான் சித்தியடைந்துவிட்டேன் .

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் வாதவூரான்.. முயற்சியே வெற்றிக்கு வழிசமைக்கும்..!! :)

Link to comment
Share on other sites

சாரதி அனுமதி பரீட்சையில் சித்தியடைவது முக்கியம் இல்லை. நீங்கள் நீண்ட பல வருட காலங்களுக்கு கவனமாக வாகனத்தை ஓடி, வாகனம் மூலம் நல்ல பயன்களை பெற்று வாழ்க்கையில் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் பெற்று கொள்ள வேண்டும். நல்ல சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் வாதவூரான்!

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி போக்குவரத்து அண்ணா அறிவுரைக்கு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்த இசை அண்ணா தப்பிலி அண்ணா மற்றும் தமிழச்சி அக்கா ஆகியோருக்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாதவூரான்..... :)

உங்களுக்கு விருப்பமான கார் எது? அதுக்காக வாங்கித்தரப்போறியோ எண்டு கேட்கப்படாது :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.