Jump to content

சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பணிகள்


Recommended Posts

சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பணிகள்

(சித்தாந்தரத்தினம், கலாநிதி க. கணேசலிங்கம் ஆதீனப்புலவர், இலண்டன் மெய்கண்டார் ஆதீனம்.)

குப்பிழான் மண்ணில் காலத்திற்கு காலம் பல அறிஞர்கள் அவதரிக்கிறார்கள், அந்த வரிசையில் திரு கலாநிதி க.கணேசலிங்கம் அவர்களும் ஒருவர். அவர்கள் தற்போது அவுஸ்ரேலியாவில் வசித்துவருகிறார்கள். உலகெங்கும் நடக்கும் பல சைவ மகாநாடுகளில் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு எமது ஈழத்திரு நாட்டுக்கும், எமது குப்பிழான் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் செந்திநாதையர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து ஆராய்ச்சி செய்த, சைவர்களின் புண்ணிய பூமியான, காசியில் இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் வெள்ளி விழா 2012 ஆகஸ்ட் 6, 7, 8-ந் திகதிகளில் நடைபெற்றது. தமிழகத்து திருப்பனந்தாள் ஆதீனத்தின் அனுசரணையுடன் அவர்களின் குமரகுருபரர் மடத்து மண்டபத்தில் (குமாரசாமி மடம் என்றழைக்கப்படும் காசி மடத்தில்) நடைபெற்ற இவ்விழாவின் இறுதி நாளில் அவர்களின் சொற்பொழிவு இடம் பெற்றது. 'சித்தாந்தம் வளர்த்த ஈழத்து அறிஞர்கள்' என்ற தலைப்பில் அமைந்த அவர்களின் சொற்பொழிவு அந்த அமைப்பின் வெள்ளி விழா மலரில் உள்ளது. இதில் குப்பிளான் அறிஞர் செந்திநாதையர் பணிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

சைவம், தமிழ் ஆகிய இரு துறைகளிலும் ஈழத்தமிழர் அரும்பெரும் பணிகள் ஆற்றியுள்ளனர். சைவசித்தாந்த வளர்ச்சியில் ஈழத்தறிஞரின் பங்களிப்பு கணிசமானது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் பணிகள் சைவத்தையும் அதன் தத்துவத்தையும் அழியாமல் காத்து வளர்த்தன.

இப்பெருமக்கள் அனைவரினது பணிகளையும் இச்சிறு கட்டுரையில் விளக்குதல் இயலாததொன்று. தவத்திரு ஆறுமுகநாவலருக்கு முன்பிருந்த ஞானப்பிகாசர் தொடங்கி அண்மையில் அமரரான பண்டிதர் மு. கந்தையா வரையிலான அறிஞர் சிலரின் பணிகள் விளக்கப்படுகின்றன. இதிலும் சிலரின் பணிகள் மிகவும் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன. பண்டிதரின் பணிகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன.

ஞானப்பிரகாசர்

மெய்கண்ட சாத்திர நூல்களிலே மெய்கண்டார் (கி.பி. 1232) எழுதிய சிவஞானபோதத்தை முதன்மை நூலாகக் கொள்வது மரபு. இதற்குப் பின் வந்த சிவஞானசித்தியார் அதன் விருத்தியுரையாகவும் சிறந்த ஆய்வு நூலாகவும் விளங்குகிறது. சுபக்கம், பரபக்கம் என இரு பகுதிகளாக அமைந்த இந்நூலின் முதற்பகுதிக்கு ஆறு அறிஞர்கள் எழுதிய உரை சிறந்ததாகக் கொள்ளப்பட்டு, அறுவர் உரை எனப் போற்றப்படுகிறது. அவர்களுள் ஒருவரான ஞானப்பிரகாசர் (17-ம் நூற்றாண்டு) யாழ்பாணத்து திருநெல்வேலியில் பிறந்தவர்.

போர்த்துக்கேயர் ஆட்சியில், அவர்களின் கொடூரமான சைவநிந்தனையைச் சகிக்க முடியாதவராக இவர் தமிழ்நாடு சென்று, அங்கிருந்து வடக்கே போய் வடமொழியும் சாத்திரமும் பயின்றார். பின்னர் தமிழ்நாடு திரும்பி, திருவண்ணாமலை ஆதீனத்தில் சேர்ந்தார்.

தமிழிலே சிவஞானசித்தியார் உரையும் வடமொழியிலே ஒன்பது நூல்களும் எழுதியவர் ஞானப்பிரகாசர். அவரின் சித்தியார் உரை அவர் காலத்திலும் பின்னரும் பெரும் புயலைக் கிளப்பியது. சிவஞான சித்தியாரிலே சிவசமவாதக் கொள்கையைக் காண முனைந்துள்ளார் என்று பின்னால் வந்த சிவஞானசுவாமிகளால் (18-ம் நூற்றாண்டு) ஞானப்பிரகாசர் வன்மையாகக் கண்டிக்கப்பட்டார்.

ஞானப்பிரகாசரின் ஆய்வு நோக்கு அவர் காலத்து அறிஞரின் நோக்கிலிருந்து விலகியிருந்ததென்பது பலரின் கருத்து. ஆயினும் அவரின் சிந்தனைத் திறனும் தர்க்கத் திறமையும் பலராலும் போற்றப்படுவது. இது குறித்து சித்தாந்த அறிஞர் டாக்டர் தேவசேனாபதி பின்வருமாறு கூறுகிறார்:

He holds the view that souls at release are equal to Siva in every respect, a view which is interestingly and ably argued but totally in variance with Siddhanta. .................... Though Jnanaprakasar attempts to read sivasamavada in Siddhiyar, he deserves credit for following an Unusual line of thought’. – (Dr. V. A. Devasenapathy, Saiva Siddhanta, University of Madras, 1974).

'முத்தியிலே எல்லாவகையிலும் சிவத்துக்கு ஒத்த நிலையில் உயிர்கள் இருக்கும் என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார். இந்தக் கருத்து சிந்தனையைத் தூண்டுவது வாதத் திறமையுடையது. ஆனால் சித்தாந்தத்திற்கு முற்றிலும் வேறுபட்டது. .............. சிவசமவாதத்தை சித்தியாரிலே காண விழைந்தாலும் ஞானப்பிகாசர் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த சிந்தனையைக் கடைப்பிடிப்பது பாராட்டத்தக்கது.

ஞானப்பிரகாசரின் கருத்து சிவசமவாதம் காண்பதுபோல் இருந்தாலும், உண்மையில் அதில் சிவசமவாதம் இல்லை என்பது சித்தாந்திகள் சிலரின் கருத்து. யாழ்ப்பாணத்துச் சைவசித்தாந்த அறிஞர் ஏழாலை பண்டிதர் மு. கந்தையாவும் இதே கருத்தைக் கொண்டுள்ளார்.

ஞானசம்பந்தப் பெருமான் பூம்பாவையை அவரின் எலும்பைக் கொண்டு உயிர்ப்பித்தார் என்பது சிவசமவாதம் அல்ல. சம்பந்தர் செயல் போல் அது இருப்பினும், உண்மையில் அது அவர் மூலம் நிகழ்ந்த சிவன் செயலே, என்று உதாரணம் கூறி ஞானப்பிரகாசர் உரைக்கு அரண் செய்வாரும் உளர்.

எவ்வாறாயினும் சைவசித்தாந்த ஆய்வு மேற்கொள்வோருக்குப் பயன்படும் அறுவர் உரையில் ஒன்று ஞானப்பிரகாசர் உரை. அண்மைக்காலத்தில் இது தமிழகத்துப் பதிப்புக்களில் இடம்பெறாததைக் காணமுடிகிறது. இது வேதனைக்குரியது, தர்க்கத்தின் அடிப்படையிலும் அறிவு பூர்வமாகவும் ஆய்வு நடத்திய ஞானப்பிரகாசரை ஈழத்தில் சித்தாந்த ஆய்வின் முன்னோடி எனலாம்.

ஆறுமுக நாவலர்

சித்தாந்த ஆய்வுக்கு முன்னோடியாக ஞானப்பிரகாசரைக் கொண்டால் ஈழத்தில் சித்தாந்த வளர்ச்சிக்கும், பின் வந்த ஆய்வாளரின் முயற்சிக்கும் உந்து சக்தியாக விளங்கியவர் ஆறுமுகநாவலர் (1822-1879) எனலாம். சைவத்தையும் தமிழையும் அழிவிலிருந்து காப்பாற்ற அவர் மேற்கொண்ட பரந்துபட்ட பணிகளில் சைவசித்தாந்த வளர்ச்சி தொடர்பானவை சிறிதே. ஆயினும் அவரின் வழியிலே ஒரு ஞானபரம்பரை உருவாகி இன்றுவரை சைவத்துக்கும் தமிழுக்கும் ஆக்கம் அளித்து வருகின்றது. நாவலரில் தொடங்கி சபாபதி நாவலர், சங்கர பண்டிதர் சி. வை. தாமோதரம்பிள்ளை, செந்திநாதையர், பொன்னம்பலப்பிள்ளை, குமாரசாமிப்புலவர், சபாரத்தின முதலியார், குமாரசாமிக் குருக்கள், சிவபாதசுந்தரம், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, பண்டிதர் கந்தையா என்று இப்பரம்பரை நீண்டு செல்வதைக் காணலாம். இவர்களின் பணிகள் சைவசித்தாந்த வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றன.

ஒரு பெரிய நிறுவனமே செய்ய முடியாத பணிகளைத் தனிமனிதராக நின்று செய்த ஆறுமுகநாவலரின் நோக்கு சைவசித்தாந்தத்தை மட்டும் வளர்ப்பதோ ஆயவதோ அல்ல. ஆயினும் அவரின் எழுத்துக்கள் சித்தாந்த ஆய்வுகளையும் வளர்ச்சியையும் காணமுடிகிறது.

நாவலர் தன் பெரியபுராணப் பதிப்பில் எழுதிய உபோற்காதமும் சூசனங்கள் என்ற வகையில் அமைந்த பல கட்டுரைகளும் பெரியபுராணத்தின் உள்ளுறையாயுள்ள அதன் சித்தாந்த தத்துவங்களை வெளிப்படுத்துகின்றன. இவற்றை அவர் சைவாகம நூல்களின் சான்றுகளோடும், சைவத் திருமுறைகளுக்கும் சித்தாந்த நூல்களுக்கும் முரணாகாத வகையிலும் ஆய்ந்து எழுதுகிறார்.

சுாந்தோக்கியோபநிடதம் , கைவல்யநவநீதம், முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டி, அவை குறித்த தகரவித்தையையும், அதனை உபாசிக்கும் முறையையும் விளக்கி. சைவர்களுக்கு மிக முக்கயமான கோயிலாக விளங்கும் சிதம்பரத்தையும், அதன் தத்துவத்தையும் விளக்குகிறார். இங்ஙனம் விளக்கி, சிதம்பரம் பூதாகாசம் போல் சடமாகாது, அது சித் என்று நிறுவுகிறார்.

வடமொழி தமிழ்மொழியிலுள்ள பல நூல்களை ஆதாரமாகக் கொண்டு, சிவன் அனந்த நடனமிடும் இடம் உடம்பிலே இடகலைக்கும் பிங்கலைக்கும் நடுவிலுள்ள சுழுமுனை என்று கூறுவதும், அதனைச் சிதம்பரத்துடன் ஒப்புநோக்குவதும் அவரின் தர்க்கத் திறமைக்கும் நூலறிவுக்கும் ஆய்வுத் திறமைக்கும் சான்று பகர்வன.

அவர் வேதத்தைப் போற்றினும், அவரின் ஆய்வு முடிவுகளில் வேதத்துக்கு மேலான இடத்தைக் கொடுக்கவில்லை. சைவசித்தாந்த சிந்தனைகளே மேலான இடத்தைப் பெறுகின்றன. முற்கூறிய அவரின் உபோற்காதத்தில் பின்வருமாறு எழுதுகிறார்.

'இதுகாறும் கூறியவற்றால், சைவசித்தாந்தத்தன்றி பரமுத்தி சித்தியாதென்பதும் ....... வேதத்துள் விதித்த வேள்வி முதலியனவெல்லாம் அநித்தியமாகிய காமியங்களைப் பயப்பன என்பதும் பெறப்பட்டன. வேள்வி முதலியன ஞானத்தைப் பயவாமை மாத்திரமேயன்றி, தீவினைபோல் அது நிகழவொட்டாது தடைசெய்து நிற்றலும் உடையனவேயாம்.'

சைவத்தையும் சித்தாந்த தத்துவத்தையும் எளிதாக எல்லோரும் விளங்கிக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு தரத்தினருக்கும் ஏற்ற விதத்தில் படிக்கிரமமாக எழுதப்பட்டவை அவரின் நூல்கள். இதற்கு அவரின் சைவ வினா விடை நூல்கள் நல்ல உதாரணங்கள்.

நாவலர் சித்தாந்தக் கொள்கைகளை ஆய்ந்து நிறுவும்முறை எவரும் மறுக்க முடியாத வகையில் அமைந்தது. ஆய்வு முடிவுகளில் திருமுறைகளுக்கு முரணாகாமால் உண்மைகள் நிறுவப்பட்டு இருக்கும்.

செந்திநாதையர்

ஆறுமுகநாவலருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு, அவரின் பணிகளைத் தொடர்ந்தவர் யாழ்ப்பாணத்துக் குப்பிளான் கிராமத்தில் பிறந்த செந்திநாதையர் (1858 – 1922). காசியில் பத்தாண்டுகள் தங்கி வடமொழி நூல்களை ஆய்ந்தவர் இவர். இதனால் இவர் 'காசிவாசி செந்திநாதையர்என அழைக்கப்படுகிறார். காசி வாழ்க்கைக்குப்பின் தமிழகத்தில் வாழ்ந்த செந்திநாதையர், திருப்பரங்குன்றத்தில் 'வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த வித்தியாசாலை' என்ற பாடசாலையை நிறுவிப் பணி புரிந்தார்.

நாவலர், செந்திநாதையர் ஆகியோர் பணிகளை ஈழத்திலும் பார்க்கக் கூடுதலாக தமிழகம் போற்றிப் பாராட்டியது. தமிழகத்துத் திருவாவடுதுறை ஆதீனம் 'நாவலர்' என்ற பட்டமளித்து ஆறுமுகத்iதை 'ஆறுமுகநாவலர்' ஆக்கிக் கௌரவித்தது. செந்திநாதையருக்கு 'சித்தாந்த சிகாமணி', 'சித்தாந்த பானு' போன்ற பட்டங்களைத் தமிழகம் அளித்து அவரின் சைவப்பணிகள ஊக்குவித்தது. திரு. வி. க.வின் இளமைக்காலக் குருவாகிய யாழ்ப்பாணத்து சதாவதானி கதிரைவேற்பிள்ளைக்கு 'மாயாவாததும்சகோளரி' என்ற பட்டத்தை செந்திநாதையர் கையாற் கொடுத்துப் போற்றியது. இப்படிப் பல ஈழத்தறிஞரை போற்றி அவர்களால் பயனடைந்தது தமிழகம். தமிழகத்தினால் ஈழத்தமிழர் ஆக்கம் பெற்றனர்.

செந்திநாதையர் எழதிய நூல்கள் பல. பழைய கட்டுரைகளிலிருந்து அவை நாற்பத்தியைந்தெனத் தெரியவருகின்றன. அவர் பிறந்த யாழ்ப்பாணத்துக் குப்பிழான் கிராமத்தில் உருவான செந்திநாதையர் ஞாபகார்த்த சபை 1978-ல் வெளியிட்ட 'காசிவாசி செந்திநாதையர்' என்ற மலரில் அவரின் இருபத்தொரு வெளியீடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 'சித்தாந்தப் படம்' என்ற ஒன்று வெளியிட்டு அன்று ஒரு புதுமுறை விளக்கம் அளித்தவர் இந்த அறிஞர்.

வேதாகம நூல்களிலும் தமிழ் நூல்களிலும் ஆழ்ந்த புலமை கொண்ட செந்திநாதையரின் ஆய்வு முடிபுகள் எவராலும் மறுக்க முடியாமல் அமைந்தவை. அத்வைத வேதாந்தமும் விசிட்டாத்வைதமும் ஒரேயொரு பிரம சூத்திரத்துக்கு இருவேறு விளக்கங்களை எப்படிக் காண முடியும் என எண்ணினார். இதன் விளைவாக மூல நூல்களை ஆராய்ந்து, அதன் விளக்கமாக அமைந்த சில கருத்துக்கள் மூல நூலிலுள்ளவற்றை மாற்றியும் திரித்தும் வெளிவந்தவை எனக் கண்டார். இவற்றை விளக்குவதாக இவர் எழுதிய நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளது.

நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆராய்ச்சி முகவுரையாக இரு நீண்ட உபக்கிரக மணிகைகள் எழுதியுள்ளார். ஒன்று உபநிடத உபக்கிரக மணிகை. மற்றையது பிரம சூத்திர உபக்கிரக மணிகை. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு டாக்டர் பட்டம் வழங்கலாம் என பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவரகள் கூறியுள்ளார்கள். தர்க்க முறையிலும் கதைகள் மூலமும் பிரம சூத்திரத்தில் காணும் கருத்து வேறுபாடுகளையும், மயக்கங்களையும் செந்திநாதையர் விளக்குவது அன்றிருந்த வழியிலிருந்து வேறுபட்டிருந்தது.

பின்வந்த உபநிடதங்களே வேதாந்தம் என்று பலர் கூறுவர். இது காரணப் பெயராக வந்தது. வேதம் காட்டும் ஆத்மானந்த அனுபவமே வேதாந்தம் என்பதன் பொருள், அது காரண இடுகுறிப் பெயராக வந்தது, என்பது செந்திநாதையரின் கருத்து. அவரின் 'சைவ வேதாந்தம்' என்னும் நூல் இதனை விளக்குகிறது. வேதங்களிலுள்ள கருத்துக்களையும் தேவாரத்திலுள்ள கருத்துக்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து, அவற்றுக்கிடையில் உடன்பாடு கண்டு எழுதப்பட்ட நூல் 'தேவாரம் வேதசாரம்'.

யாழ்ப்பாணக் கலாச்சாரத்தை 'கந்தபுராணக் கலாச்சாரம்' என்று ஈழத்துப் பேரறிஞர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை குறிப்பிடுவதுண்டு. கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் போன்ற நூல்களை, மக்கள் தேவை கருதி, எளிமையான வசனநடையில் எழுதியவர் ஆறுமுகநாவலர். அவற்றின் உள்ளார்ந்த சித்தாந்தக் கருத்துக்களையும் கொள்கைகளையும் விளக்கும் நோக்குடன் எழுதியவர் செந்திநாதையர். இந்த வகையில் எழுதப்பட்ட ஒரு நூல் 'கந்தபுராண நவநீதம்'. சைவ அறிஞருலகைப் பெரிதும் கவர்ந்த நூல் இது.

சிவஞானபோதத்துக்கு உரையாக அமைந்தவை சிவஞானமுனிவரின் சிற்றுரையும் பேருரையாகிய பாடியமும். இவை எல்லோராலும் எளிதில் விளங்க இயலாதவை. சிவஞானபோதத்தை எளிதில் விளக்கும் நோக்கில் செந்திநாதையர் எழுதிய உரைநூல் 'சிவஞானபோத வசனாலங்கார தீபம்'. ஆயினும் இன்றுள்ளவருக்கு இதனை விளங்குவதும் எளிதாக இல்லையென்றே கூறவேண்டியுள்ளது. 1917-ல் வெளிவந்த இந்நூலின் முன்னுரையில், 'யாம் பெரும்பான்மையும் மாதவச் சிவஞான யோகிகள் உரைத்தருளிய உரையைத் தொடர்ந்தே இதனை எழுதினோம்' என்று செந்திநாதையர் குறிப்பிடுகிறார்:

ஆறுமுகநாவலர் கொள்கை அடிப்படையில் வேதக்கருத்துக்களிலும் பார்க்க தமிழ்த் திருமுறைகளுக்கும் சாத்திர நூல்களிலுள்ள கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கு ஆகம நூல்களைத் துணையாகக் கொள்கிறார். செந்திநாதையர் அவற்றுக்கிடையில் உடன்பாடு கண்டு சித்தாந்த சைவத்தை வளர்க்கும் பணியில் ஈடுபடுவதைக் காணலாம்.

சிவபாதசுந்தரம்

சைவப் பெரியார் சிவபாதசுந்தரம் (1878 - 1957) ஆசிரியராகப் பணி புரிந்தவர். பள்ளிக்கூடப் பாடநூற் திட்டத்துக்காக சமய நூல்கள் எழுதத் தொடங்கியவர். இதனால் அவரின் நூல்களில் எளிமையும் விளக்கமும் இருப்பது இயல்பு. இத்தகைய ஒரு நூல் அவரின் விளக்கவுரையுடன் வெளிவந்த திருவருட்பயன். இது இலங்கையிலுள்ள பாடசாலைகளுக்காகப் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலிலுள்ள விசேடவுரை சிவஞானபோதம், சிவஞானசித்தியார் ஆகியவற்றின் கருத்துக்களையும் அவற்றின் பேருரைகளையும் துணையாகக் கொண்டு எழுதப்பட்டது. மாணவருக்கன்றி அறிஞருக்கும் பயன்படும் சிறந்த சித்தாந்த நூல் இது.

தர்க்க முறையிலும் தெளிவாகவும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு நூல் ‘The Saiva School of Hinduism’. இதனை இங்கிலாந்திலுள்ள ‘George Allen and Unwin Ltd’ என்னும் புகழ்பெற்ற பிரசுர நிறுவனம் 1934-ல் பதிப்பித்தது. சைவசமய, சைவசித்தாந்த அறிவை அனைவருக்கும், குறிப்பாக ஆங்கில அறிவு மிக்கவருக்கு, எளிமையாகப் புகட்டுவது இந்நூல்.

நாவலரின் சைவ வினாவிடை மாணவரின் தரத்துக்கேற்ப முதலாம் புத்தகம், இரண்டாம் புத்தகம் என்று இரு நூல்களாக எழுதப்பட்டுள்ளன. சிவபாதசுந்தரம் எழுதிய சைவபோதம் நூலும் முதலாம் புத்தகம், இரண்டாம் புத்தகம் என இரண்டாக உள்ளன. ஆரம்ப நிலையிலுள்ள மாணவருக்கும் அறிவு மிகுந்த மாணவருக்குமாக இவை அமைந்துள்ளன.

நாவலரும் அவர் வழியில் பணி செய்தவர்களும் போல் சிவபாதசுந்தரமும் அன்னிய மதத்தினரின் சைவத்துக்கு முரணானன கருத்துக்களையும் பிரசாரங்களையும் மறுப்பதற்காக எழுதியவை பல. வயலெற் பரஞ்சோதி என்ற கிறித்தவப் பெண்மணி முனைவர் பட்டத்துக்காகச் செய்த ஆய்வு நூல் சைவ சித்தாந்தம் பற்றியது. அதில் பல தவறான, சித்தாந்தத்துக்கு முரணான, கருத்துக்கள் இருந்தன.

இந்த ஆய்வு நூலுக்கு ஒரு மறுப்பெழுதி உண்மையை விளக்குவதற்குத் தகுந்த அறிஞர் சிவபாதசுந்தரமே என்று தமிழகத்திலுள்ள தருமபுர ஆதீனம் கருதியது. அவ்வாதீனத்தின் வேண்டுகோளின்படி அவர் எழுதிய நூல் ‘An Outlinline of Sivagnanabodham with a Rejoinder to a Christian Critic’. இந்நூல், ஆய்வு நூலின் பொருத்தமற்ற கருத்துக்களை மறுப்பதோடு, சிவஞானபோத நூற்பாக்களுக்கு சிறந்த விளக்கம் அளிப்பதாகவும் உள்ளது. இதுவும் அவரின் பிற நூல்களும் கட்டுரைகளும் பல நூல்களை ஆய்ந்து சிந்தனைத் தெளிவுடன் எழுதப்பட்டவை.

புராணங்கள் சமய உண்மையை உணர்த்த வந்த கதைகள் என்பதை வலியுறுத்துபவர் சிவபாதசுந்தரம் அவர்கள். அவரின் 'கந்தபுராண உண்மை' என்ற நூல் புராண பாத்திரங்களும், தொடர்புடைய கதைகளும் உணர்த்தும் சித்தாந்தம் சார்ந்த உள்ளார்ந்த கருத்துக்களை வெளிக்கொணர்ந்து விளக்குகிறது. அத்தகைய ஒரு நூலை ஈழத்து நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் எழுதியுள்ளார். அதன் பெயர், 'கந்தபுராணக் கதைகளும் அவை உணர்த்தும் உண்மைநூற் கருத்தும்' என்பதாகும்.

பண்டிதர் மு. கந்தையா

செந்திநாதையர் பிறந்த குப்பிளானுக்கு அயற்கிராமமான ஏழாலையில் பிறந்தவர் பண்டிதர் மு. கந்தையா அவர்கள் (1917 - 2002). இதனால் அவர் ஏழாலை பண்டிதர் கந்தையா என்று பொதுவாக அழைக்கப்படுவதுண்டு. சித்தாந்தத் தெளிவும் மும்மொழிப் புலமையும் கொண்ட தமிழ்ப் பண்டிதரான கந்தையாவுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலக்கிய கலாநிதி என்னும் பட்டம் அளித்துக் கௌரவித்தது.

சைவத்தையும் அதன் தத்தவத்தையும் பேணி வளர்ப்பதில் தன் வாழ்நாளைக் கழித்த பெருமகன் பண்டிதர். முப்பதுக்கு மேற்பட்ட அரிய நூல்களும் பல ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவை அனைத்தும் சைவத்துக்கும் சித்தாந்த வளர்ச்சிக்கும் அரண்செய்வன.

சைவ சமயக் கருத்துக்களைக் கூறும் பலர், அவை வேதங்களில் உள்ளன, ஆகமங்களில் உள்ளன என்று கூறுவதுண்டு. எந்த வேத நூலையும் ஆகம நூலையும் குறிப்பிட்டுச் சொல்வதரிது. பண்டிதர் தான் மேற்கோள் காட்டும் வேதாகமக் கருத்துக்களை குறிப்பிட்ட நூல்களின் பெயர்களைக் கூறி விளக்குவதைக் காணலாம். சைவசித்தாந்த நூற்கருத்துக்களை, வேதாகம நூற்கருத்துக்களை ஆதாரமாகக் காட்டி விளக்குவது இவரின் தனித்திறமை. இத்திறமையை இன்றைய அறிஞர் பலரிடம் காண்பதரிது.

வேதாகமங்களை ஆதாரமாகக் காட்டினாலும், சைவசித்தாந்த நூல்கள் தமிழ்மொழியிலே இருப்பதால், அதன் விளக்கத்துக்கு தமிழ்மொழி விளக்கம் இன்றியமையாதது என்பது அவர் கருத்து. 'சித்தாந்தச் செழும் புதையல்கள்' என்ற அவரின் நூலிலுள்ள பின்வரும் வரிகள் ஒரு உதாரணம்.

'சைவசித்தாந்த சாஸ்திரங்கள் தமிழ் மொழியிலேயே வாய்த்துள்ளன. இவையனத்தையும் ஒரு கூட்டாக எண்ணுவார்க்கு, தமிழ்க் கலாசாரப் பின்னணியிலே சைவ சித்தாந்தக் கலை சோபிப்பது புலனாகும். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், திருமுறைகள் முதலிய அனைத்து நூல்களிலும் சைவசித்தாந்தக் கருத்துக்கள் செறிந்து கிடக்கும் நிலையும் சுவாரஸ்யமானதொன்று. ஆதலால் சைவசித்தாந்த விளக்கம் தமிழ்மொழி விளக்கத்தை இன்றியமையாதென்பது சொல்லாமலேயமையும். இதனால் உயர் தமிழ் இலக்கிய இலக்கண மரபு வழிப்பாடான தமிழ் அறிவுநிலை சைவசித்தாந்த விளக்கத்துக்கு ஒரு அடிப்படைத் தேவை என்பதை நாம் கருத்திற் கொள்ள வேண்டும்.'

இவ்வாறு எழுதும் இம்மேதையின் உயர் தமிழ்ப் புலமை சித்தாந்த விளக்கங்களில் காணும் மயக்கங்களையும் முரண்பாடுகளையும் களைந்தன. உண்மைவிளக்கம் எனும் சித்தாந்த நூலின் ஒரு பாடல் முத்தியில் பேரின்பத்தை அனுபவிப்பது ஆன்மா, அந்த இன்பத்தைக் கொடுப்பவன் இறைவன் என்று கூறுகிறது. இது எல்லோருக்கும் ஒத்த கருத்தே. ஆனால், இக்கருத்தைத் தொடர்ந்து 'இத்தை விளைவித்தல் மலம்' (இதனை விளைவிப்பது ஆணவமலம்) என்று கூறுகிறது. இது விளங்க முடியாததாக, மயக்கம் தருவதாக உள்ளது. ஆணவத்திலிருந்து விடுபட்ட நிலையே முத்தி நிலை. இந்த நிலையில் ஆணவம் எப்படி ஆன்மாவுக்கு இன்பத்தை விளைவிக்கும்? விளங்க முடியாத இத்தொடருக்கு அறிஞர்கள் வெவ்வேறு விளக்கங்கள் அளித்துள்ளனர். 'முத்தியில் ஆணவம் திருந்திய நிலையிலுள்ளது', 'முத்தியிலும் ஆணவம் உண்டு. ஆனால் செயற்படுவதில்லை' போன்ற விளக்கங்கள் தரப்பட்டன. இவை சரியான விளக்கங்களாக அமையவில்லை என்பதைப் பண்டிதர் உணர்ந்தார்.

ஆகமக் கருத்துக்களைக் கொண்டவை சித்தாந்த நூல்கள் என்றாலும், அவை தமிழ்ச்செய்யுள் நூல்களே. தமிழிலுள்ள சாத்திர நூல்களுக்குப் பொருள் காண்கையில் செய்யுள் உத்தி முறைகளைத் தழுவியே பொருள் காணவேண்டும். இது நூலாசிரியர்களின் உள்ளக்கிடக்கை என்பது பண்டிதரின் கருத்து. சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய இலக்கண நுட்பங்களிலும் தர்க்க விதிகளிலும் பயிற்சியின்றி சித்தாந்தச் செய்யுட்களை விளங்குதல் இயலாதென்பதும் அவரின் கருத்து. எனவே 'இத்தை விளைவித்தல் மலம்' என்ற தொடருக்கு விளக்கம் காண தமிழ்க் கவிதை உத்திகளை உதாரணத்துக்கு எடுக்கிறார்.

'கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை', என்பது திருக்குறள். 'கெடுப்பதூஉம்' என்ற சொல்லுக்கு பரிமேலழகர் 'பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதும்' என்று உரை காண்கிறார். இதனை எடுத்துக் கொண்டு பண்டிதர் குறிப்பிட்ட பாடலை விளக்குகிறார். 'பெய்யாமை' என்ற எதிர்மறை கெடுதலுக்குக் காரணமாயிருப்பதால் 'மழை' காரணமென்று கூறப்படுகிறது. இதுபோல் மறையாமை என்ற எதிர்மறை இன்ப விளைவுக்குக் காரணமாயிருப்பதால் 'மலம்' காரணமென்று கூறப்படுகிறது. ஆகவே 'இத்தை விளைவித்தல் மலம்' என்ற தொடரில் 'மலம்' என்பது 'ஆணவமலம் உயிரை மறையாமை'என்றே பொருள் கொள்ள வேண்டும். இது போன்ற பண்டிதரின் விளக்கங்கள் சித்தாந்த வளரச்சிக்கு ஆக்கமளித்தன.

இந்து சமயம் என்பது இந்திய சமயங்கள் பலவற்றைக் குறிக்கும் ஒரு பொதுப்பெயர். அது ஒரு தனிச்சமயம் அல்ல. விவேகானந்தர் போன்ற ஞானிகளும் இதனைக் கூறியுள்ளனர். இந்து சமயம் என்ற பெயரால் உடன்பாடற்ற தத்துவ விளக்கங்களும் வழிபாடுகளும் சைவத்துள் புகுந்துள்ளன. சங்கரரின் அத்வைத வேதாந்தம் இவற்றில் ஒன்று. நாவலர் பிறந்த யாழ்ப்பாணத்தில், ஸ்மார்தராகத் தம்மைக்காட்ட முயலும் சைவக் குருமாரினால், செல்வாக்கு மிக்க சிலரின் உதவியுடன் கட்டப்பட்ட ஆஞ்சனேயர் கோயில் இன்னொன்று. இவை போன்ற சைவத்தைச் சிதைக்கும் ஊடுருவல்களைக் கண்டித்துப் பண்டிதர் எழுதிய கட்டுரைகள் பல. இவற்றில் முக்கியமானதொன்று 'சைவமண்ணில் சைவம் சிதைக்கப்படுகிறது! உள்ளிருந்தே கொல்லும் பகை'. இன்னொன்று, 'ஆஞ்சநேயர் சைவர் வழிபாட்டுத் தெய்வமல்ல'.

பதி, பசு, பாசம் மூன்றும் என்றுமுள்ள அனாதிப் பொருட்கள் என்பது சைவசித்தாந்தக் கொள்கை. 'பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போல் பசுபாசம் அனாதி' என்ற திருமந்திரப் பாடல் இதனை விளக்குகிறது. இதில் வரும் கடைசியடி பதியணுகிற் பசுபாசம் நிலாவே' என்று வருகிறது. இதன் பொருள் 'பதியாகிய இறைக்கு முன்னால் பசுவைப் பற்றிய பாசம் நில்லாது நீங்கும்' என்பது இது சித்தாந்த உண்மை. ஹவாய் ஆதீனத்தின் சித்தாந்தம் தொடர்பான வெளியீட்டில், இறைவனை அணுகினால் பசுவாகிய ஆன்மாவும் பாசப்பொருட்களும் இருக்கமாட்டா என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. கடவுள் ஒன்றே மெய்ப்பொருள், உயிர் உட்பட்ட மற்றவை அதன் பரிணாமங்கள் அல்லது தோற்றங்கள் என்ற வேதாந்தக் கருத்துக்கு இவ்வெளியீடு துணை செய்கிறது. இவ்வாதீனத்தின் ‘Monism and Pluralism in Saiva Siddhanta’ என்ற நூலிலும் தவறான கருத்துக்கள் சித்தாந்தக் கொள்கையாகக் காட்டப்பட்டுள்ளன. பொருத்தமற்ற இக்கருத்துக்களை மறுப்பதாக அமைந்தது பண்டிதரின் 'சைவசித்தாந்தத்தில் மாயை உண்மை' என்ற நூல்.

ஆறுமுக நாவலர் அவர்கள் தனது பெரியபுராணப் பதிப்பில், ஒவ்வொரு நாயனார் சரிதையின் முடிவிலும், சூசனம் என்ற பெயரில் ஒவ்வொரு கட்டுரை எழுதி வெளியிட்டார். சைவசிந்தாந்தக் கருத்துக்களுடன் சைவம் குறித்த அரிய விளக்கங்கள் கொண்டவை இச்சூசனங்கள். இருபத்து மூன்று நாயன்மார்களுக்கு மட்டுமே அவை எழுதப்பட்டன. பரந்துபட்ட அவரின் பணிகளுக்கிடையில் அவற்றை நிறைவு செய்ய அவருக்கு நேரம் கிடையாமல் இருந்திருக்கலாம். மற்றைய நாற்பது நாயன்மாருக்கும் சூசனம் எழதி, நாவலரின் பணியை நிறைவு செய்யும் தகுதி பண்டிதருக்கே உண்டென மலேசியா சைவசித்தாந்த நிலையம் உணர்ந்தது. அதன் வேண்டுகோளுக்கிசைந்து பண்டிதர் எழுதி நிறைவு செய்தார்.

திருமுறைகளுக்கு சித்தாந்த விளக்கமளித்த பண்டிதர், சைவக்கிரியைகளுக்கும் அவ்வாறே செய்தார். அவரின் 'சித்தாந்த விளக்கிற் சைவக்கிரியைகள்' என்ற நூல் இத்தகையது. 'சித்தியார்த் திறவுகோல்', 'சித்தாந்த நோக்கில் கைலாசபதி ஸ்மிருதி' போன்ற அவரின் பிற நூல்களும் சைவசித்தாந்த அறிவுக்கும் ஆய்வுக்கும் துணைசெய்வன. அவரின் இன்னொரு சிறந்த நூல் 'சித்தாந்தச் செழும்புதையல்கள்'. அவரின் வேண்டுகோளின்படி இந்நூல் ஆங்கிலத்தில் என்னால் மொழி பெயர்க்கப்பட்டு ‘Treaure Trove of Siddhanta’ என்ற பெயரில் வெளிவந்தது.

சித்தாந்த மாணவரையும் அறிஞரையும் ஆய்வாளரையும் ஊக்குவிப்பதும், தேவையெனில் திருத்துவதும் பண்டிதரின் பண்பு. அவருடன் நான் (இக்கட்டுரை ஆசிரியர்) நேரில் கண்டு கலந்துரையாடினது மிகமிகக் குறைவு. ஆனால் கடிதத் தொடர்பு நீண்டகாலம் இருந்தது. சென்னை சைவசித்தாந்த மன்றத்தின் 'சித்தாந்தம்' இதழில் வந்த எனது முதற் கட்டுரை 'அகரம் போல் நிற்கும் இறை' என்பது. அப்பொழுது நான் சென்னையிலே வாழ்ந்தேன். அக்கட்டுரையை வாசித்த பண்டிதர் அவர்கள் அதனைப் பாராட்டி, அது செந்திநாதையர் பிறந்த ஊரின் (எனது ஊரின்) வாசனையால் வந்ததென்றும் தொடர்ந்தும் நான் எழுத வேண்டுமென்றும் வேண்டிக் கடிதம் எழுதியிருந்தார். இது அவர் எனக்கெழுதிய முதற் கடிதம்.

மேலை நாட்டுத் தத்துவங்களில் காணப்படுபவை சில சித்தாந்தம் உள்ளிட்ட இந்திய தத்துவங்களில் நேராகப் பேசப்படுவதில்லை. இவற்றில் ஒன்று Freewill என்பது. தமிழ் நூல்களில் இதற்கு நேரான சொல்லைக் காண்பதரிது. உலக சைவப் பேரவையின் 'சைவ உலகம்' இதழில் நான் ஆங்கிலத்தில் எழுதிவந்த தொடர் கட்டுரைகளில் ஒன்று Freewill . இதனைப் படித்த பண்டிதர், Freewill ஆய்வு முக்கியமான ஒரு விடயம். அதை நல்ல முறையில் கையாண்டிருக்கிறீர்கள்', என்று எழுதினார். இச்சொல்லுக்கு 'தற்றுணிபு' என்பது தமிழ்ப்பெயர் என்று கூறி, அதனைச் சைவசித்தாந்த உண்மைகளுடன் தொடர்பு படுத்தி விளக்கியிருந்தார். அவரின் இந்த விளக்கம் 'சைவ உலகம்' இதழில் பின்னர் வெளிவந்தது. அவர் எழதிய இத்தகைய விளக்கங்கள் பல. அவை சித்தாந்த வளர்ச்சிக்குப் பெரிதும் துணைசெய்வன. சைவத்தைச் சிதையாமற் காப்பதற்காக 'சைவத்தமிழ் அறிவியற் பணபாட்டியக்கம்' என்ற பெயரில் பிரசுரங்களையும் அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பிற அறிஞர்கள்

சபாபதி நாவலர் (1844 – 1903) எழுதிய நூல்கள் பதினான்கு என்று அறியப்படகிறது. இவருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் 'நாவலர்' என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது. ஆறுமுக நாவலர் வேண்டுகோளுக்கிணங்கி அவர் சிதம்பரத்தில் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலையில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். சென்னையில் சித்தாந்த வித்தியானுபாலன யந்திரசாலை என்ற அச்சகத்தை நிறுவி, 'ஞானாமிர்தம்' என்ற பத்திரிகையையும் நடத்தி வந்தார்.

சபாரத்தின முதலியார் (1858 - 1922) தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆறு அரிய நூல்கள் எழுதியவர். பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் பரவிய கடவுள் மறுப்புக் கொள்கையை எதிர்த்து அவர் எழுதிய நூல் ஈசுர நிச்சம். பிற மதத்தவரின் சைவ நிந்தனையையும், அவதூறுகளையும் பொய்யுரைகளையும் எதிர்த்து அறிவியல் நோக்கில் எழுதப்பட்ட சிறந்த ஒரு நூல்‘Essentials of Hinduism in the Light of Saiva Siddhanta’.

மு. திருவிளங்கம் (1859 – 1922) சித்தியார், சிவப்பிரகாசம், கந்தரலங்காரம் ஆகிய நூல்களுக்கு அரிய உரைகள் எழுதியுள்ளார். தெளிவும் எளிமையும் மிக்கவை இவரின் உரைகள். சிவப்பிரகாசத்துக்கு இவர் உரைபோல் சிறப்பான உரை இதுவரை வெளிவந்ததில்லை.

வேலணை வி. கந்தப்பிள்ளை அவர்கள் தத்துவப்பிரகாசர் செய்த தத்துவப்பிரகாசம் நூலை ஆராய்ந்து, தெளிவுரையும் விளக்கவுரையும் எழுதி அச்சில் முதலில் வெளியிட்டவர். இவர் நாவலரின் மாணாக்கராக இருந்தவர்.

திக்கம் செல்லையாபிள்ளை எனப் பெயர் கொண்ட அச்சுவேலி ஈசான சிவனார் சீகாழிச் சிற்றம்பல நாடிகள் அருளிச் செய்த துகளறுபோதம் நூலுக்கு முழுமையான உரை எழுதியவர். துகளறுபோதம் பதினான்கு சைவ சித்தாந்த நூல்களில் ஒன்றில்லை எனினும், அது பதினைந்தாவதாகக் கொள்ளத் தக்க தகுதி வாய்ந்ததென்று கருதுபவருமுண்டு.

சைவசித்தாந்தத்தையும் சிவநடனத்தையும் உலகறியச் செய்த பெருமை ஈழத்துக் கலாயோகி ஆனந்தா குமாரசாமியைச் சாரும். உண்மை விளக்கம் என்ற சைவசித்தாந்த நூலின் பாடலொன்றைக் கருவாகக் கொண்டு அவரின் புகழ் பெற்ற 'சிவநடனம்' (Dance of Siva) என்ற நூலில் 'சிவநடனம்' என்ற கட்டுரை அமைந்துள்ளது.

அச்சுவேலி குமாரசாமிக் குருக்கள் சைவசித்தாந்தம், சைவக்கிரியைகள் குறித்த அரிய நூல்களை அளித்தவர். இவரின் 'முப்பொருள் விளக்கம்' என்ற நூல் சைவசித்தாந்தப் பொருளை விரித்துக் கூறும் சிறந்த நூல். 'சிவபூசை விளக்கம்' என்ற நூல் ஆகமம், சித்தாந்தம், திருமுறைகள் ஆகியவற்றின் பின்னணியில் சிறந்த விளக்கங்களைத் தருகின்றது. இவர் வேறு நூல்களும் ஆக்கியுள்ளார். .

'ஒரு விஞ்ஞானப் பட்டதாரி '(A Science Graduate) என்ற பெயரில் நூல்களும் கட்டுரைகளும் எழுதியவர் அ. விஸ்வநாதன். சிவஞானபோதம், சிவஞான சித்தியார், திருமந்திரம், ஆகமங்கள் பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இந்துசாதனத்தில் தொடர் கட்டுரைகளாக இவர் எழுதியவை பின்னர் நூலுருவாக வந்தன. இங்ஙனம் வந்த ஒரு சிறந்த நூல் ‘The Elements of Saiva Siddhanta’ என்பது. இது சித்தியார்ப் பொருளைப் பிரதிபலிப்பதாகவுள்ளது.

ஈழத்தில் பிறந்த சிவநந்தி அடிகள் இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தையும் அதன் செயல் அங்கமான உலக சைவப் பேரவையையும் தோற்றுவித்து அரும் பணிகள் செய்தவர். ஞானசூரியன் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் தமிழ், சைவம், சித்தாந்தம் ஆகிய துறைகளில் பத்துக்கு மேற்பட்ட நூல்களும் பல அரிய கட்டரைகளும் எழுதியுள்ளார்.

மேற்கண்ட அறிஞர் வரிசையில், தென்புலோலியூர் ந. கதிரைவேற்பிள்ளை, உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, நவாலியூர் சோமசுந்தரப்பலவர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை என்று மேலும் பலரைக் குறிப்பிடலாம். இவர்கள் எல்லோரும் ஈழத்தில் சைவமும் அதன் தத்துவமான சித்தாந்தமும் சிதையாமல் வளர ஆக்கமிகு பணிசெய்த பெருமக்களாவர்.

(இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் வெள்ளிவிழா காசியிலுள்ள திருப்பனந்தாள் ஆதீனத்தின் 'குமரகுருபரர் மடத்து' (காசி மடம் - குமாரசாமி மடம்) மண்டபத்தில் ஆகஸ்ட் 6, 7, 8-ம் நாட்கள் நடைபெற்றது. அதில் இறுதிநாள் இடம் பெற்ற சொற்பொழிவு)

www.kuppilanweb.com

www.swissthamilsangam.blogspot.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இந்த பரம்பரையில் வந்த வாரிசுகள் தமிழையும் மறந்து சைவத்தையும் மறந்து இந்துவாக ஆங்கிலம் பேசுகின்றன...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.