Jump to content

தமிழகம் தஞ்சை மாவட்டத்திற்கு வந்த 184 சிங்களவர்கள் விரட்டியடிப்பு! (படங்கள் )


Recommended Posts

இலங்கை சேர்ந்த 184 சிங்களவர்கள் தஞ்சை மாவட்டம், பூண்டி மாதா திருக்கோயிலுக்கு பயணமாக 03.09.2012 அன்று வந்தனர். இதையறிந்த நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் , தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி தோழர்கள் சுமார் 100க்கு மேற்பட்டோர் பூண்டி மாதா திருக்கோயிலை முற்றுகையிட்டனர். இதை சற்றும் எதிர்பாரத சிங்களவர்களை அழைத்துவந்த பேருந்து ஓட்டுனர் சிங்களவர்களை விட்டு ஓடினார்.

முற்றுகைப் போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமைவகித்தார், நாம்தமிழர் கட்சி மாநில ஒருகிணைப்பாளர் வழக்கறிஞர் நல்லதுரை , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விவேகான்ந்தன் உட்பட 100க்கு மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

IMG_41722-1024x682.jpgIMG_4163-copy-1024x682.jpg

http://thaaitamil.com/?p=31149

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களை திருப்பி அனுப்புவதற்காக போராடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் .....

சிங்களவர்களை சிறிலங்காவிற்குள் எங்கும் செல்லாது முடக்கப்படவேண்டும், அப்போதுதான் அவன் ஆதரவு அளித்து ஆட்சியில் இருக்கும் அரசு தமிழர்களை கொன்றொளித்த போது தடுக்க குரல் கொடுக்காது மௌனியாக இருந்த சிங்களவன் தான் செய்த தவறை உணர்வான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களை திருப்பி அனுப்புவதற்காக போராடிய அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் .....

உலகில் எங்கும் போகமுடியாமை வரணும்

தமிழருக்கு நடந்த அநீதிகளை சிங்கள மக்கள் உணரணும்.

இதனால் தமிழருக்கான தீர்வை சிங்களமக்களே அரசிடம் கேட்கும் நிலை வரணும்.

Link to comment
Share on other sites

[size=4]உறவுகளின் தொடர் போராட்டங்களுக்கு நன்றிகள். [/size]

[size=1]

[size=4]இதன் மூலம் இந்திய நடுவண் அரசு சிங்கள அரசுக்கு அழத்தங்களை பிரயோகித்து ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வழிசமையட்டும். [/size][/size]

[size=1]

[size=4]சிங்களமும் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை கொடுக்கவேண்டும் என்ற நிலையை உணரவேண்டும். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட வந்த சிங்ளவரை திருப்பி அனுப்பியது சரியான முடிவு அல்ல: கருணாநிதி

Link to comment
Share on other sites

சிறப்பு விமானம் ஏற திருச்சி ஏர்போர்ட்டுக்கு வந்த சிங்கள யாத்ரீகர்கள் மீது தாக்குதல்!

தஞ்சாவூர் & திருச்சி: வேளாங்கண்ணி மற்றும் தஞ்சை பூண்டி மாதா ஆலயத்திற்கு வழிபடுவதற்காக வந்த சிங்கள யாத்ரீகர்கள் தாக்கப்பட்டனர்.

இன்று மாலையில் சிறப்பு விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்குப் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டவர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வழிமறித்து சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பூண்டி மாதா ஆலயத்தில் நடைபெற்று வரும் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவில் பங்கேற்க நேற்று இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த சிங்களர்கள் அங்கிருந்து பஸ்களில் பூண்டி வந்தனர். பூண்டி மாதா ஆலயத்தில் உள்ள விடுதிகளில் தங்கி இருந்தனர்.

இதையறிந்த தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமார் 100 பேர் பூண்டி மாதா திருக்கோயில் விடுதியை இன்று காலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

இதைத் தொடர்ந்து பூண்டி மாதா கோவிலில் போலீஸ் டி.எஸ்.பி.க்கள் இளம்பரிதி, காஜா மைதீன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தஞ்சை உதவி கலெக்டர் காளிதாஸ் தலைமையிலான அதிகாரிகள் தமிழர் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதை தமிழ் அமைப்புகள் ஏற்கவில்லை. இவர்கள் அனைவரும் பூண்டி பேராலய அறையை முற்றுகையிட்டும், கீழே அமர்ந்தும் ராஜபக்சேவுக்கு எதிராகவும், பூண்டி மாதா கோவிலில் தங்கியுள்ள சிங்களர்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந் நிலையில் மக்கள் உரிமை இயக்கத்தினர் செயலாளர் பழ.ராஜ்குமார் தலைமையிலும், விடுதலை தமிழப்புலிகள் கட்சியினர் ஒன்றிய செயலாளர் இளங்கோ தலைமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை பூண்டி மாதா ஆலயத்தில் தங்கியிருந்த 184 சிங்களர்களும் பஸ்கள் மூலம் போலீஸ் பாதுகாப்போடு வேளாங்கண்ணி அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கும் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் வேன்கள் மூலம் போலீஸ் பாதுகாப்போடு திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருவாரூர் பைபாஸ் சாலையில் வந்தபோது மதிமுகவினர் அவர்களை வழிமறித்தனர். திருவாரூர் மாவட்டச் செயலாளர் ரயில் பாஸ்கர் தலைமையில் மதிமுகவினர் சிங்களர்கள் வந்த வேன்கள் மீது சரமாரியாக செருப்புகளை வீசினர்.

மேலும் வந்த பக்தர்கள்-விமான நிலையத்திலேயே நிறுத்தி வைப்பு:

இந் நிலையில் இன்று காலையும் இலங்கையில் இருந்து 134 சிங்கள பக்தர்கள் திருச்சி வந்தனர். தமிழகத்தில் உள்ள எதிர்ப்புகளை சுட்டிக்காட்டி, அவர்களை திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேற விடாமல் போலீசார் தங்க வைத்தனர்.

பூண்டி மாதா கோவிலில் இருந்து வரும் இலங்கை பக்தர்களுடன் இவர்களையும் சேர்த்து இலங்கை விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.

இந் நிலையில் விரட்டப்பட்ட சிங்களவரை மீட்க சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தது இலங்கை அரசு. இந்த இன்று மாலையில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.

முன்னதாக திருச்சி காட்டூர் அருகே சிலர், சிங்களர்கள் வந்த வேன்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் வாகனத்தின் கண்ணாடி உடைந்தது. சிலர் உள்ளே இருந்தவர்களை கம்புகளாலும், கைகளாலும் சரமாரியாகத் தாக்கினர்.

இதையடுத்து உடனடியாக போலீஸார் தலையிட்டு தாக்குதல் நடத்தியவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டிக் கலைத்தனர்.

பின்னர் சிங்களர்களின் பாதுகாப்புக் கருதி அவர்கள் அருகில் இருந்த கல்யாண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு நிலைமை சீரடைந்ததும் மிகுந்த பாதுகாப்புடன் அவர்களை திருச்சி விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

http://tamil.oneindia.in

Link to comment
Share on other sites

யாரோ உண்டியலை தூசு தட்டும் சத்தம் கேட்குது.

[size=5]இன்னும் நிரம்பவில்லை, கை கொடுக்கலாம். நன்றிகள். [/size]

[size=5]http://www.tnaglobal.org/[/size]

Link to comment
Share on other sites

இது ஏதோ ஒரு பெரிய பிரச்சனைக்கு இட்டுச் செல்லப் போகிறது.

Sri Lankan tourists face fresh attacks in Tamil Nadu

CHENNAI: Over 175 Sri Lankan tourists faced fresh protest when their convoy was attacked by a pro-LTTE group in Trichy. The Lankan tourists were on a tour to Velankanni Church, around 320 km from here.

The tourists were safely escorted by police to Tamil Nadu's Tiruchirapalli (Trichy) airport.

http://in.news.yahoo.com/sri-lankan-tourists-face-fresh-attacks-in-tamil-nadu.html

விரட்டியடித்தவர்களைப் புலி ஆதரவாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

30 பேர் கொண்ட குழு எவ்வாறு பொது இடத்தில் தாக்க முடியும் ?

சிங்களவர் வந்ததையும் பின்னர் எந்த விமானத்தில் அவர்கள் திருப்பி அனுப்பப் படுகிறார்கள் என்பதனையும் எவ்வாறு அறிந்து கொண்டனர் ?

போலீசாரின் நடவடிக்கையைப் பார்த்தால் அரசுடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

யாரோ உண்டியலை தூசு தட்டும் சத்தம் கேட்குது.

இல்லை அர்ஜுன், யாரோ சோத்துப்பார்ச்சல் கட்டும் சத்தம் கேட்குது .... ஒன் யுவர் மார்க் ... கெட் செட் ... ...

Link to comment
Share on other sites

இது ஏதோ ஒரு பெரிய பிரச்சனைக்கு இட்டுச் செல்லப் போகிறது.

பெரிய பிரச்சினை இல்லை அனேகமாக மத்திய அரசு இராணுவப் பயிற்ச்சியை நிப்பாட்டும்.

Link to comment
Share on other sites

ஆங்கிலச் செய்தி வைகோ எதிர்ப்புக்காக திரிக்கபட்டிருக்கிறது.

இன்று மாலையில் சிறப்பு விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்குப் பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டவர்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் வழிமறித்து சரமாரியாக அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த தமிழ்த தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமார் 100 பேர் பூண்டி மாதா திருக்கோயில் விடுதியை இன்று காலை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

http://tamil.oneindia.in

Sri Lankan tourists face fresh attacks in Tamil Nadu

CHENNAI: Over 175 Sri Lankan tourists faced fresh protest when their convoy was attacked by a pro-LTTE group in Trichy. The Lankan tourists were on a tour to Velankanni Church, around 320 km from here.

விரட்டியடித்தவர்களைப் புலி ஆதரவாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

30 பேர் கொண்ட குழு எவ்வாறு பொது இடத்தில் தாக்க முடியும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/aV8I20yqYvw

Link to comment
Share on other sites

பெரிய பிரச்சினை இல்லை அனேகமாக மத்திய அரசு இராணுவப் பயிற்ச்சியை நிப்பாட்டும்.

[size=6]

[size=6]Govt Not to Stop Training of Lankan Military Personnel[/size][/size][size=1]

[size=5]Notwithstanding pressure from Tamil political parties, government has no immediate plan to stop training Sri Lankan military personnel in India but joint exercises are expected to be put on hold for the time-being.

Training of Sri Lankan defence personnel at different training establishments will continue as there is no plan to end the military cooperation programme with Sri Lanka, sources told PTI here.

More than 450 personnel from Sri Lankan armed forces are undergoing training at the defence ministry establishments in India including in Bangalore, Kannur and Belgaum.

However, a number of joint exercises between the two sides are likely to be put on hold for the time being, they said.[/size][/size]

http://news.outlookindia.com/items.aspx?artid=774172

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும் தெலுங்குகாரன் அடிக்கின்றான் ,கன்னடகாரன் அடிக்கின்றான் ,மலையாளி அடிக்கின்றான் என கத்திவிட்டு தமிழ்நாட்டில் இருக்கும் அவர்கள் எவரிலும் கை வைக்க வக்கில்லை ,இலங்கையில் இருந்து வந்த நாலு சிங்களவனில சண்டித்தனத்தை காட்டுகின்றான் வீரத்தமிழன்.

முல்லிவாய்காய்கால் அழிவின் போது (யுத்தம் வேறு ஒரு வருடம் நடந்தது ) ஆறு கோடி தமிழன் கூப்பிடு தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தவன் இப்ப காட்டுகின்றான் சண்டித்தனம் .

இதைத்தான் காலம் காலமாக தமிழ் படங்களில் காட்டுவார்கள் தர்மாடி என்று நகைச்சுவையாக .

வீரமிருந்தால் சிறிலங்கா ஹைக் கொமிசனை போய் உடைக்கின்றது அங்கு தான் சிங்கள அரசு அதிகாரிகள் இருக்கின்றார்கள் .

உதுகளெல்லாம் கொமடி பீசுகளேன்று இலங்கை அரசிற்கு எப்பவோ தெரியும் .

நெடுமாறன் படகில ஏறி இந்தா போறான் என்று சூழுரைக்க போக விட்டுவிட்டார்கள் ,போகாமல் கைது பண்ணுங்கோ என்று நின்ற கதை சிங்களவனுக்கு தெரியும் .

ஆக மிச்சம் ஒரு பிரியாணி பாசல் காணும் .

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும் தெலுங்குகாரன் அடிக்கின்றான் ,கன்னடகாரன் அடிக்கின்றான் ,மலையாளி அடிக்கின்றான் என கத்திவிட்டு தமிழ்நாட்டில் இருக்கும் அவர்கள் எவரிலும் கை வைக்க வக்கில்லை ,இலங்கையில் இருந்து வந்த நாலு சிங்களவனில சண்டித்தனத்தை காட்டுகின்றான் வீரத்தமிழன்.

முல்லிவாய்காய்கால் அழிவின் போது (யுத்தம் வேறு ஒரு வருடம் நடந்தது ) ஆறு கோடி தமிழன் கூப்பிடு தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தவன் இப்ப காட்டுகின்றான் சண்டித்தனம் .

இதைத்தான் காலம் காலமாக தமிழ் படங்களில் காட்டுவார்கள் தர்மாடி என்று நகைச்சுவையாக .

வீரமிருந்தால் சிறிலங்கா ஹைக் கொமிசனை போய் உடைக்கின்றது அங்கு தான் சிங்கள அரசு அதிகாரிகள் இருக்கின்றார்கள் .

அர்சுன் எவ்வளவு முக்கி காட்டினாலும் எண்ணை ஊத்தி குச்சிதட்டி எறிகிறிய கலை அவருக்கு தெரியாது. கறையான் அரிச்ச புத்தகங்களுக்கு தூசி தட்டத்தான் தெரியும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு காலமும் தெலுங்குகாரன் அடிக்கின்றான் ,கன்னடகாரன் அடிக்கின்றான் ,மலையாளி அடிக்கின்றான் என கத்திவிட்டு தமிழ்நாட்டில் இருக்கும் அவர்கள் எவரிலும் கை வைக்க வக்கில்லை ,இலங்கையில் இருந்து வந்த நாலு சிங்களவனில சண்டித்தனத்தை காட்டுகின்றான் வீரத்தமிழன்.

முல்லிவாய்காய்கால் அழிவின் போது (யுத்தம் வேறு ஒரு வருடம் நடந்தது ) ஆறு கோடி தமிழன் கூப்பிடு தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்தவன் இப்ப காட்டுகின்றான் சண்டித்தனம் .

இதைத்தான் காலம் காலமாக தமிழ் படங்களில் காட்டுவார்கள் தர்மாடி என்று நகைச்சுவையாக .

வீரமிருந்தால் சிறிலங்கா ஹைக் கொமிசனை போய் உடைக்கின்றது அங்கு தான் சிங்கள அரசு அதிகாரிகள் இருக்கின்றார்கள் .

உதுகளெல்லாம் கொமடி பீசுகளேன்று இலங்கை அரசிற்கு எப்பவோ தெரியும் .

நெடுமாறன் படகில ஏறி இந்தா போறான் என்று சூழுரைக்க போக விட்டுவிட்டார்கள் ,போகாமல் கைது பண்ணுங்கோ என்று நின்ற கதை சிங்களவனுக்கு தெரியும் .

ஆக மிச்சம் ஒரு பிரியாணி பாசல் காணும் .

இந்தியாவிலும். இலங்கையிலும் மேலை நாட்டு ஜனனாயகத்தின் நிலைக்கு நிகரான ஒன்றாய் இருந்திருந்தால் மகிந்தாவின் மண்டையில் மக்கள் சக்தியின் வலிமையைக் காட்டி இருப்பார்கள். நாயின் வாய்க்குள் கையைவைத்து காட்டு வீரம் என்று ஒரு கோழைப் புத்தி கேட்கின்ற வகையும் இருந்திருக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துத் தமிழனின் இனவுணர்வை மததிக்கிறேன். ஆனால் 2009 இல் நடந்த அழிவையெல்லாம் இவர்களால் தடுக்க முடியவில்லையே?? அர்ஜுன் சொன்னதுபோல முடிந்தால் சிங்களத் தூதரகத்தைத் தாக்கலாமே?? அப்போது சிங்களவனும் பயந்திருப்பான். வெறும் சுற்றுலாப் பயணிகளையும், மத வழிபாட்டு யாத்திரீகர்களையும் தாக்கினால் அவர்கள் மேல் அனுதாபம் அல்லவா ஏற்பபடப்போகிறது? இது சிங்கள அரசுக்கு சாதகமான சூழலை அல்லவா ஏற்படுத்தும்?

தமிழகம் என்னதான் செய்தாலும், இந்திய மத்தியரசு தொடர்ந்தும் சிங்கள தேசத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்துத்தான் வருகிறது. முடிந்தால் அதைத் தடுத்து நிறுத்துங்கள்.

முடிந்தால் சிங்களத் தலைவர்களும், அவனது தூதுவராலயங்களையும், இராணுவ வீரர்களையும் தாக்குங்கள்.

Link to comment
Share on other sites

தமிழகத்துத் தமிழனின் இனவுணர்வை மததிக்கிறேன். ஆனால் 2009 இல் நடந்த அழிவையெல்லாம் இவர்களால் தடுக்க முடியவில்லையே?? அர்ஜுன் சொன்னதுபோல முடிந்தால் சிங்களத் தூதரகத்தைத் தாக்கலாமே?? அப்போது சிங்களவனும் பயந்திருப்பான். வெறும் சுற்றுலாப் பயணிகளையும், மத வழிபாட்டு யாத்திரீகர்களையும் தாக்கினால் அவர்கள் மேல் அனுதாபம் அல்லவா ஏற்பபடப்போகிறது? இது சிங்கள அரசுக்கு சாதகமான சூழலை அல்லவா ஏற்படுத்தும்?

தமிழகம் என்னதான் செய்தாலும், இந்திய மத்தியரசு தொடர்ந்தும் சிங்கள தேசத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்துத்தான் வருகிறது. முடிந்தால் அதைத் தடுத்து நிறுத்துங்கள்.

முடிந்தால் சிங்களத் தலைவர்களும், அவனது தூதுவராலயங்களையும், இராணுவ வீரர்களையும் தாக்குங்கள்.

சில கீழ்த்தரமான இலக்குகள். அவை தவிர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தேசியவாதம் தலை எடுத்திருப்பதால் பிருத்தானியா தனது பிரஜைகள் தேடித் தாக்கப்படுவார்கள் என்று அறிக்கை விடத்தக்க அளவுக்கு இலங்கையில் பிருத்தானிய சுற்றுலாப்பயணிகள் தாக்கப்படிருக்கிறார்கள். ஆனாலும் பிருத்தானிய தூதரகம் இலங்கைக்காடைகளால் தாக்கப்படவில்லை.

தமிழகத்தார் மகிந்தாவை கலைத்து மிரட்டியிருக்கிறார்கள். நடேசனை தாக்கியிருக்கிறார்கள். http://www.deccanchronicle.com/channels/nation/south/mahinda-rajapaksa-kin-escapes-attack-699. இன்று பாதுகாப்பு காரணமாக இலங்கை அதிகாரிகள் தமிழ்நாடுபோவதானால் முதலமைச்சருக்கு அறிவிக்க வேண்டிய நிலைவரை இட்டு சென்றிருக்கிறார்கள். இவர்களால் இராணுவ கூட்டு பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. மன்மோகன் சிங் தமிழ் நாடு குழம்புவதாலேயே ஐ.நா.பிரேரணையை ஆதரித்ததாக கூறி மன்னிப்பு கேட்டு மகிந்தாவுக்கு கடிதம் எழுதினார். இவற்றையெல்லாம் அர்சுன்னையோ, சபேசனையோ ஆலோசனை கேட்க தொடங்க முதலிலேயே செய்து முடித்துவிட்டார்கள்.

இருந்தாலும் ரஜீவை அடித்தவர் இலங்கையில் பா.உ. ஆக வந்துவிட்டார். அது கீழத்தரம். ஆனாலும் இந்தியாவால் அதை தட்டிகேடக முடியாதது. இனிமேல் கூட வருபவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்ற உறுதியை இந்தியவால் பெற்றுக்கொள்ள முடியாது. அதனால்த்தான் ஜெயலலிதா பயணத்தை தவிர்த்தார்.

Link to comment
Share on other sites

தமிழகத்துத் தமிழனின் இனவுணர்வை மததிக்கிறேன். ஆனால் 2009 இல் நடந்த அழிவையெல்லாம் இவர்களால் தடுக்க முடியவில்லையே?? அர்ஜுன் சொன்னதுபோல முடிந்தால் சிங்களத் தூதரகத்தைத் தாக்கலாமே?? அப்போது சிங்களவனும் பயந்திருப்பான். வெறும் சுற்றுலாப் பயணிகளையும், மத வழிபாட்டு யாத்திரீகர்களையும் தாக்கினால் அவர்கள் மேல் அனுதாபம் அல்லவா ஏற்பபடப்போகிறது? இது சிங்கள அரசுக்கு சாதகமான சூழலை அல்லவா ஏற்படுத்தும்?

தமிழகம் என்னதான் செய்தாலும், இந்திய மத்தியரசு தொடர்ந்தும் சிங்கள தேசத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்துத்தான் வருகிறது. முடிந்தால் அதைத் தடுத்து நிறுத்துங்கள்.

முடிந்தால் சிங்களத் தலைவர்களும், அவனது தூதுவராலயங்களையும், இராணுவ வீரர்களையும் தாக்குங்கள்.

ஆக்க பூர்வமான கருத்து. இந்த தாக்குதல்கள் இலங்கையில் நிச்சயம் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

Link to comment
Share on other sites

[size=4]யார் பின்னணியில் உள்ளார்கள் ? : நடுவண் அரசாக இருக்கலாம் [/size]

[size=1]

[size=4]அவர்கள் சிங்களத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தி.மு.க. ஊடாக டெசொவை புதுப்பித்தனர். அடுத்து அந்த தீர்மானத்தை ஐ.நா. வரை கொண்டு செல்ல விரும்புகிறார்கள். சிங்களத்திற்கு ஐ.நா.வில் நெருக்கடி கொடுக்க விரும்புகிறார்கள். [/size][/size]

[size=1]

[size=4]இதில் முதலமைச்சரும் தி.மு.க. மக்களின் ஆதரவை பெறாமல் இருக்க சில நடவடிக்கைகளை செய்துள்ளார். அதையும் மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. காரணம், அது தானே தி.மு.க. பின்னணியில் உள்ளதை காட்டிவிட்டுவிடும்.[/size][/size]

[size=1]

[size=4]இந்த விளையாட்டு நீடிக்கும் சாத்தியங்கள் அதிகம். [/size][/size]

Link to comment
Share on other sites

ஆக்க பூர்வமான கருத்து. இந்த தாக்குதல்கள் இலங்கையில் நிச்சயம் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

[size=1]

[size=4]என்ன மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்?[/size][/size][size=1]

[size=4]ஏற்கனவே டெல்லி எதிர்விளைவுகளை சந்தித்தவண்ணமே உள்ளது. இந்தியாவை விட்டு சீனாவின் பக்கம் பலமாக சாய்ந்துவருகின்றது சிங்களம். [/size][/size]

Link to comment
Share on other sites

[size=1][size=4]என்ன மாதிரியான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்?[/size][/size]

[size=1][size=4]ஏற்கனவே டெல்லி எதிர்விளைவுகளை சந்தித்தவண்ணமே உள்ளது. இந்தியாவை விட்டு சீனாவின் பக்கம் பலமாக சாய்ந்துவருகின்றது சிங்களம். [/size][/size]

ஊரிலிருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் அடி விழலாம். இனவாதத்திற்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமையும். இந்தியாவே ஒரு கேவலங்கெட்ட நாடு அத்துடன் அநேக தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கடும் சுயநலக் காரர்கள். நாங்கள் இளிச்ச வாயர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.