Jump to content

தன் பிள்ளை என்றால்..............


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அநேகமானவர்கள் குடும்பத்தவர்தானே. ஒரு சீரியசான விடயத்தை பதிவோம் என விளைகின்றேன்.

திருமணமாகி கனநாளாகி விட்டது. அதற்கு முதலே தெரிந்த மனைவிதானே. அந்த 3 நாட்கள் வந்தால் வயித்தைப்பிடித்தபடி துடிக்கும். சிலவேளை அது ஒரு கிழமையும் எடுக்கும். நமக்கு எப்படி அதன் வலி புரியும். அதைக்குடி இதைச்சாப்பிடு. வைத்தியரைப்போய்ப்பார் என்றதுடன் நமது ஆலோசனையும் நடவடிக்கையும் நின்றுவிடும். ஆனால் அதன்முடிவை மனம் விரும்பும். அது அவரது வலிக்கான முடிவுக்காக அல்லாது எமது தேவைக்கான தேடலாகவே இருக்கும். இது பலவருடங்கள் தொடரும் கதை. இதில் எனக்கும் அவருக்கும் பெரிதாக வில்லங்கங்கள் கிடையாது. இருவருக்கும் இந்த நடைமுறை பழகிப்போனது. (ஆற்றாமைகள் இருந்தாலும்). பல குடும்பங்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன்.

இதேநிலை ஒரு நாள் எனது மகளுக்கு வந்தபோது...........

வயிற்றுக்குள் நோகுது அம்மா என்று அவள் சொன்னபோது......

துடித்துப்போனேன். கண்களில் ரத்தக்கோடுகள்.

லா சப்பலுக்கு ஓடினேன்.

சின்ன வெங்காயம் அதிலும் நல்ல கொழு கொழு என்று சிவந்ததாகப்பார்த்து

(வாழ்நாளில் இப்படி நான் பார்த்து வாங்கியதே இல்லை)

சிறிய கத்தரிக்காய்

திறமான நல்லெண்ணெய்

வயிற்றில் பூச மஞ்சல்

தடவிவிட வேப்பிலை

குடிக்காத நான் வாங்கியது திறமான பிரண்டி...........

எல்லாம் கொண்டுவந்து போட்டதும் மனைவிக்கும் சந்தோசம்.

ஆனால் கண்ணில் கலக்கம்.

என்ப்பா எனக்கேட்டேன்.

நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.

இடிந்து நொருங்கியது நெஞ்சு.

பதில் சொல்ல ஏதுமில்லை.

உண்மை எப்போதும் சுணைக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அலை மோதும் மனித வேட்கைகளுகுள்ளே,

தலையை மறைத்துக் கொள்கிறதா, மனிதம்?

மனம் திறந்த, உங்கள் பகிர்வுக்கு நன்றிகள், விசுகர்!

Link to comment
Share on other sites

இதனை வாசித்ததும் எனக்கு கண்கலங்குகிறது..... இனி எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உங்கள் மனைவியையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

முட்டை, சீரகம் ஆகியவற்றை விட்டு விட்டீர்களே......சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் முட்டையை எடுத்துக்கொள்வதில்லை... பிராண்டியையும் அனைவரும் எடுப்பார்கள் என்றில்லை..

சீரகம் என்பது மிகவும் முக்கியமானது... சில வருடங்கள் கழிந்த நிலையிலும் வயிற்றுவலி இருக்குமானால் இடைக்கிட சீரக கறி (அரைத்த கறி என்றும் சொல்வார்கள்) செய்து உண்டால் வலி குறைவாக இருக்கும். சிலருக்கு அதனை உண்டாலும் வலி குறையாது...

ஆனால் வலிக்காக மருந்துகளை உட்கொள்வது நல்லதல்ல..... சிலர் ponstan மருந்தை எடுப்பார்கள். ஆனால் அதனால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது...

பதிவுக்கு நன்றி..

Link to comment
Share on other sites

சிறிது கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..! குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிட்டீர்கள்..! இந்த மாதிரி கேள்வி வரும்படியாக நடந்துகொள்ளக் கூடாது என மனம் சொல்கிறது..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இடிந்து நொருங்கியது நெஞ்சு.[/size]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள்[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலை மோதும் மனித வேட்கைகளுகுள்ளே,

தலையை மறைத்துக் கொள்கிறதா, மனிதம்?

மனம் திறந்த, உங்கள் பகிர்வுக்கு நன்றிகள், விசுகர்!

எம்மை நாம் தீட்டவேண்டும்

அதுவே இப்பதிவின் நோக்கம்

அதைப்புரிந்து எழுதியுள்ளீர்

நன்றி ஐயா

இதனை வாசித்ததும் எனக்கு கண்கலங்குகிறது..... இனி எந்த ஒரு விடயமாக இருந்தாலும் உங்கள் மனைவியையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

முட்டை, சீரகம் ஆகியவற்றை விட்டு விட்டீர்களே......சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் முட்டையை எடுத்துக்கொள்வதில்லை... பிராண்டியையும் அனைவரும் எடுப்பார்கள் என்றில்லை..

சீரகம் என்பது மிகவும் முக்கியமானது... சில வருடங்கள் கழிந்த நிலையிலும் வயிற்றுவலி இருக்குமானால் இடைக்கிட சீரக கறி (அரைத்த கறி என்றும் சொல்வார்கள்) செய்து உண்டால் வலி குறைவாக இருக்கும். சிலருக்கு அதனை உண்டாலும் வலி குறையாது...

ஆனால் வலிக்காக மருந்துகளை உட்கொள்வது நல்லதல்ல..... சிலர் ponstan மருந்தை எடுப்பார்கள். ஆனால் அதனால் ஒரு பிரயோசனமும் கிடைக்காது...

பதிவுக்கு நன்றி..

நன்றி துளசி

பெண்கள் இதற்குள் வரமாட்டார்கள் என்று நினைத்தேன்.

முதலிலேயே வந்து ஆறுதலும் தந்துள்ளீர்.

இது ஆண்களைத்தொடவேண்டும் என்பதால் திறந்த திரி.

பார்க்கலாம்

Link to comment
Share on other sites

பதிவுக்கு நன்றி வி அண்ணா ............உண்மையில் இப்படி எத்தனை விடயங்களில் நாங்கள் அயண்டை தனமாக இருக்கிறோம்......எமக்கு துணையாய் வந்தவர்களுடைய அருமையை அறியாமல் இருந்திருக்கிறோம்........இது வேணும் என்று நாம் செய்வதில்லை .ஆனாலும் அதனால்தான் அயண்டையீனமாய் [சரியான தமிழோ தெரியவில்லை] என்று குறிப்பிட்டேன்.

வேலைக்கு போகும்போது காலையில் எனக்கு முன் துயிலேழும்பி தேநீர், ..........வேலையில் சாப்பிடுவதற்கு சண்ட்விச் தயார்.............

வேலைக்குப்போனபின் குழந்தைகளை எழுப்பி அவர்களுடைய காலைக்கடன் முடித்து உணவு கொடுத்து ,பாடசாலைக்கு ஆடையணிந்து அவர்களை குளிரிலும் மழையிலும் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு சென்று கூட்டி வந்து ...........அப்புறம் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட சாப்பாடு தயார்..........இன்னும் எத்தனையோ எத்தனையோ ......இவையெல்லாம்,இந்த மகத்துவம் எல்லாம் எனக்கு அப்போ தெரியவில்லை ...........இந்த கடந்த இரண்டு நாட்களும்தான் அந்த மகத்தான சேவையும்,தேவையும் எனக்கு புரியவைத்தது................இந்தக்கிழமை இங்கே விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பமாகிவிட்டது ...............என் மனைவியும் இந்த நாட்டு பாசையை மேற்கொண்டு படிப்பதற்காக பாடசாலைக்கு செல்ல தொடங்கி விட்டார்............உண்மையில் என்னை ஒரு வெறுமை,ஏக்கம்,[பயம் என்று கூட சொல்லலாம்].........ஆட்கொண்டது ......இந்த இரண்டு நாட்களிலும் தான் அந்த மனைவி எனப்படும் தாயின் தெய்வீகத்தை புரிந்துகொண்டேன்.........நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ஆடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்தும் .............இந்தப்பாடல்தான் எனக்கு நினைவு வருது............

மன்னிக்கவும் வி. அண்ணா உங்களால் ஓர் படிப்பினையாக கொடுக்கப்பட்ட இந்த திரிக்குள் நான் இவற்றை எழுதியதற்கு ...........இப்போ எனக்கு எழுதக்கூட நேரமில்லை .........அந்த சூழ்நிலையில் இருந்து கொண்டும் இதை இங்கே எழுத வேண்டும் என்று மனம் உறுத்தியதாலேயே எழுதினேன் ...........நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாரோ பெத்த பெண் என்பதை உணர்கின்றேன் என்றாள்.

இடிந்து நொருங்கியது நெஞ்சு.

உங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தான். :(

வெளிய சொல்ல முடியவில்லை.....

நிச்சயமாக இது ஒரு நல்ல படிப்பினையாக எமக்கு இருக்கும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயுமானவன்

உண்மைதான் நந்தன்.

அதுவும் அடக்கம்.

நன்றிகள் கருத்துக்கும் நேரத்திற்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் வெளில சொல்கிற செய்தியா....... :lol: பச்சை இல்லாமல் போச்சு...இருவருக்கு போட பச்சை வேணும்...இன்று இரவு 12 க்கு மேல் வந்து போடுறன்...நல்லவேளை பெண்களின் உணர்வுகளைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் இயற்றையான மாற்றங்கள் பற்றி ஒரு ஆண் எடுத்து வந்ததால் நிறைய கருத்துக்களை ஆண்களே வந்து எழுதுகிறார்கள்..

இதையே பெண்களாகிய நாங்கள் எடுத்து வந்தால் சொல்ல வேண்டியதில்லை...பெண்கள் என்றால் மெசின் போன்று வேலை செய்பவர்கள் என்ற உணர்வுகளே அனேகரின் மனங்களில் உண்டு...ஆனால் அவற்றையும் கடந்து பெண் என்பளுக்குள்ளும் பல வித சொல்லிக் கொள்ள முடியாது ஏக்கங்கள் இருக்கிறது என்பதை இனிமேல் காலத்திலவாது ஆண்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்பிறன்..இந்த கருத்தை எனக்காக மட்டும் சொல்ல இல்லை...நான் பெற்றோருடன் இருக்கும் பிள்ளை..என் உணர்வுகள் வேறு பட்டதாக இருக்கும்..சில பிள்ளைகள் வளர்ந்து தன் அறிவு என்று வந்த பின் வெளியில் எல்லா விடையங்களையும் சொல்ல விரும்ப மாட்டார்கள்...ஆனால் ஒரு திருமணம் செய்த பெண்ணின் உணர்வுகள் விச்சு அண்ணா பகிர்ந்து கொண்டது போல் வேறு பட்டதாக இருக்கும்....நான் நிறைய,நிறைய எழுதிக் கொள்ள விரும்ப இல்லை...அனைத்து ஆண்களும் உங்கள் வீடுகளில் உள்ள பெண்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பீர்கள் என்று நம்பிறன்..

Link to comment
Share on other sites

உண்மையில் எனக்கு இது ஆச்சரியமான விடயமாக தெரியவில்லை. பிள்ளைப் பாசத்துக்கும், துணையுடனான அன்புக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள். மனைவி மீது வைப்பது அன்பு , பிள்ளைகள் மீது வைப்பது பாசம். பாசம் என்றுமே வலிமை கூடியது.

பொதுவாக மனைவிகள் கூட கணவனுக்கு ஒரு வலி வரும் போது துடிப்பதை விட பிள்ளைக்கு வரும் போது மிகவும் துடிப்பார்கள். வாழ்வில் எமக்கு இருக்கும் அனுபவங்களினூடாக வலியை பழகியிருப்போம் என்ற நம்பிக்கைதான் கரிசனை காட்டுவதில் வேறுபாடுகளை உருவாக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்பிள்ளை என்றால் என்ற தலைப்பிற்குள் விசுகு அண்ணா என்னதான் எழுதியிருக்கிறார் என்று வந்து எட்டிப்பார்த்தேன். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் அனுபவமும் வயதும் இவற்றை பொதுத்தளத்தில் எழுதும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. நன்றியுடன் மனந்திறந்து எழுதியதற்குப் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

Link to comment
Share on other sites

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

யாழ்போதனா வைத்தியசாலையில் இதற்கு மருத்துவ உதவியை நாடினால் பனடோல் தான் கொடுப்பார்கள். தனியார் மருத்துவர்களிடம் போனால் அவர்கள் வழங்குவது சாதாரணமாக அனைத்து வலிகளுக்கும் வலி நிவாரணியாக இருக்கும் ponstan. (இது ஒரு antibiotic). இதனை பயன்படுத்துவதால் வலி குறைவடையாது.

இஞ்சி தேநீர் குடித்தோ அல்லது சுட்ட உள்ளி சாப்பிட்டோ எதுவும் ஆகாது.

வெளிநாடுகளில் பல மருந்துகள் உள்ளன. இல்லை என்று கூறவில்லை. ponstan ஐ விட சிறந்தவை. ஆனால் அவை கூட போட்டவுடன் வலியை குறைக்காது. சிறிது நேரத்தில் வலி குறைவது போல் இருக்கும். பின்னர் குறிப்பிட்ட மணித்தியாலத்தின் பின் மீண்டும் வலிக்கும். மருந்தை பயன்படுத்தாமல் விட்டால் ஒரு நாளில் வலி போய்விடுமாக இருப்பவர்களுக்கு மருந்தை பயன்படுத்தினால் விட்டு விட்டு 3 நாளுக்கு கூட தொடரலாம். அது கூட பல மருந்துகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். (சிலருக்கு இப்படி நடப்பதில்லை...)

மருந்து எடுப்பதால் நிச்சயம் பக்க விளைவுகள் உருவாகும். எடுப்பவர்களுக்கு குறைவாக பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அவர்களின் பிள்ளைகளுக்கு பக்க விளைவுகள் அதிகளவில் உருவாகும்.

உடற்பயிற்சி தொடர்ச்சியாக எடுத்து வருபவர்களுக்கு வலிக்காது என்பது பற்றி தெரியாது.

வெள்ளைக்காரிகளுக்கு பெரிதாக வலிப்பதில்லை. காரணம் அவர்கள் குறிப்பிட்ட வயதிலிருந்து தொடர்ச்சியாக வைன் குடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு வலிக்காது அல்லது வலி தெரியாது...

Link to comment
Share on other sites

நன்றி விசுகு அண்ணா, அன்பு உணர்வுகளுக்குள் பாகுபாடு கூடாது என்பதற்கான இன்னுமொரு அனுபவபகிர்வு.

இன்றைக்காவது நாங்கள் திருந்த ஒரு பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

உங்கள் இந்த பதிவிற்கு பிறகு அவளுக்கு வலிக்கும் நாட்கள் இனி எங்களுக்கும் வலிக்கும் (மனசில்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி இந்த வலி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை அத்தோடு வலிக்காதவர்கள் எல்லோரும் வைன் அருந்துவதில்லை. உங்களுடைய விட்டுக் கொடுக்காமல் ஆடும் வாதாட்டத்தை மிகவும் இரசிக்கிறேன். சில சமயங்களில் உங்களுடைய குழந்தைத்தனம் அதிகமாக வெளிப்படுகிறது. கவனத்தில் கொள்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது கண்கலங்க வைத்துவிட்டீர்கள்..! குற்ற உணர்வையும் ஏற்படுத்திவிட்டீர்கள்..! இந்த மாதிரி கேள்வி வரும்படியாக நடந்துகொள்ளக் கூடாது என மனம் சொல்கிறது..!!

இதை எழுதும் போது நான் என்ன நினைத்தேனோ அது தங்கள் கருத்தில் இருக்கு இசை.

இதைத்தான் நான் எதிர் பார்த்தேன்.

உங்களுக்கு விழுந்து கொண்டிருக்கும் விருப்பு வாக்குகளும் அதைத்தான் சொல்கின்றன.

கண்ணுக்குத்தெரியாத உறவுகளுக்காகவே பரிதவிப்போர் நாம்.

எம்மில் பாதியாகிய துணையை விட்டுவிடுவோமா?

ஆனாலும் எம்மை அறியாது விட்டுள்ளது உறைத்தது.

அதை என் தம்பிகளும் உறவுகளும் கவனிக்கணும் என்பதற்காகவே இந்தப்பதிவு.

உங்கள் கருத்து இனி இந்தக்கேள்வி எம்மை நோக்கி வராது என்ற உறுதி தருகிறது.

அதுவே இந்தத்திரியின் நோக்கம்.

நன்றி சகோதரா.

நேரத்துக்கும் கருத்துக்கும் உறுதிக்கும்.

[size=4]இடிந்து நொருங்கியது நெஞ்சு.[/size]

[size=4]பகிர்வுக்கு நன்றிகள்[/size]

உங்களுக்குமா?

நன்றி

நேரத்திற்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி வி அண்ணா ............உண்மையில் இப்படி எத்தனை விடயங்களில் நாங்கள் அயண்டை தனமாக இருக்கிறோம்......எமக்கு துணையாய் வந்தவர்களுடைய அருமையை அறியாமல் இருந்திருக்கிறோம்........இது வேணும் என்று நாம் செய்வதில்லை .ஆனாலும் அதனால்தான் அயண்டையீனமாய் [சரியான தமிழோ தெரியவில்லை] என்று குறிப்பிட்டேன்.

வேலைக்கு போகும்போது காலையில் எனக்கு முன் துயிலேழும்பி தேநீர், ..........வேலையில் சாப்பிடுவதற்கு சண்ட்விச் தயார்.............

வேலைக்குப்போனபின் குழந்தைகளை எழுப்பி அவர்களுடைய காலைக்கடன் முடித்து உணவு கொடுத்து ,பாடசாலைக்கு ஆடையணிந்து அவர்களை குளிரிலும் மழையிலும் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு சென்று கூட்டி வந்து ...........அப்புறம் நான் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட சாப்பாடு தயார்..........இன்னும் எத்தனையோ எத்தனையோ ......இவையெல்லாம்,இந்த மகத்துவம் எல்லாம் எனக்கு அப்போ தெரியவில்லை ...........இந்த கடந்த இரண்டு நாட்களும்தான் அந்த மகத்தான சேவையும்,தேவையும் எனக்கு புரியவைத்தது................இந்தக்கிழமை இங்கே விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பமாகிவிட்டது ...............என் மனைவியும் இந்த நாட்டு பாசையை மேற்கொண்டு படிப்பதற்காக பாடசாலைக்கு செல்ல தொடங்கி விட்டார்............உண்மையில் என்னை ஒரு வெறுமை,ஏக்கம்,[பயம் என்று கூட சொல்லலாம்].........ஆட்கொண்டது ......இந்த இரண்டு நாட்களிலும் தான் அந்த மனைவி எனப்படும் தாயின் தெய்வீகத்தை புரிந்துகொண்டேன்.........நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து ஆடை பட்ட கடன் எதுவுமில்லை ஆயிரம் இருந்தும் .............இந்தப்பாடல்தான் எனக்கு நினைவு வருது............

மன்னிக்கவும் வி. அண்ணா உங்களால் ஓர் படிப்பினையாக கொடுக்கப்பட்ட இந்த திரிக்குள் நான் இவற்றை எழுதியதற்கு ...........இப்போ எனக்கு எழுதக்கூட நேரமில்லை .........அந்த சூழ்நிலையில் இருந்து கொண்டும் இதை இங்கே எழுத வேண்டும் என்று மனம் உறுத்தியதாலேயே எழுதினேன் ...........நன்றி

உண்மைதான் தம்பி தமிழ் சூரியன்

உப்பை எவரும் கணக்கெடுப்பதில்லை.

அது இல்லாதபோது...............???

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும்..........

உங்களுக்கு மட்டுமல்ல எமக்கும் தான். :(

வெளிய சொல்ல முடியவில்லை.....

நிச்சயமாக இது ஒரு நல்ல படிப்பினையாக எமக்கு இருக்கும். :icon_idea:

இது தான் வேண்டும்.

நன்றி தம்பி

நேரத்துக்கும் கருத்துக்கும் உறுதிக்கும்....

எமது ஆட்கள் இதற்கு மருத்துவத்தை நாடுவதில்லை ஏதும் பக்க விளைவு வருமோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

ஏதும் இல்லாத இடங்களில் இஞ்சி தேநீர் என்பன சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போ மேலை நாடுகளில் இவை தேவையானதா தெரியவில்லை.

அதற்கு ஏற்றால் போல் பல மருத்துவம் உண்டு.

உடட்பயிட்சி கொஞ்சம் கைகொடுப்பதாக சொல்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு சிலருக்கு என்றாலும் உதவலாம்.

எனக்கு நெருக்கமான இருபெண்களுக்கு இதை வாங்கி கொடுத்திருக்கிறேன் மிகவும் நல்லது என்று சொன்னார்கள்.

அவர்களும் மருந்து என்றவுடன் பக்கவிளைவை பற்றியே பயப்பிட்டார்கள். தவிர பெண்கள் இன்றால் இதனோடு போராட வேண்டும் என்ற ஒரு மரபு ரீதியான சிந்தனைக்குள் சிக்கியிருந்தார்கள். இருவரையும் கலூரியில்தான் தெரியும் அந்த நாட்களில் மிகவும் கச்ற்றவடுவதை பார்த்துதான் இதை வாங்கி கொடுத்தேன்.

மற்றவர்களும் ஒருமுறை எடுத்து பார்க்கலாம். பெரிதாக பக்க விளைவு ஏதும் இல்லை என்றே நினைக்கிறேன்.

தலைப்பு வேறுபட்டதுதான்! தகவல் தேவையானது என கருதுவதால் எழுதுகிறேன்.

www.mydol.com

நன்றி தங்களது கருத்துக்கும் நேரத்திற்கும் ஆலோசனைக்கும்.

எவருக்காவது பிரயோசனப்பட்டால் மிக மிகச்சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் வெளில சொல்கிற செய்தியா....... :lol: பச்சை இல்லாமல் போச்சு...இருவருக்கு போட பச்சை வேணும்...இன்று இரவு 12 க்கு மேல் வந்து போடுறன்...நல்லவேளை பெண்களின் உணர்வுகளைப் பற்றி அவர்களுக்கு ஏற்படும் இயற்றையான மாற்றங்கள் பற்றி ஒரு ஆண் எடுத்து வந்ததால் நிறைய கருத்துக்களை ஆண்களே வந்து எழுதுகிறார்கள்..

இதையே பெண்களாகிய நாங்கள் எடுத்து வந்தால் சொல்ல வேண்டியதில்லை...

சாதாரணமாக எழுதினாலும்

இந்த திரியில் நான் எதிர் பார்த்ததை பதிந்துள்ளீர்கள்.

அதற்காகத்தான் நான்(ஆண்) இதை இங்கு கொண்டு வந்தேன்.

வெளியில் சொல்லும் செய்தியா இது என நீங்கள் பகிடியாக எழுதினாலும்..........

அதை என் போன்றவர்களால்தான் சொல்ல முடியும் என்பதும்

யாழ் கள உறவுகளுடன் கன நாட்களாக பழகுபவன் என்ற முறையில் அவர்கள் எதில் விளையாடுவார்கள் எதில் விளையாட மாடட்டார்கள் என்பதை அறிவேன். இந்த திரி அதற்கு சான்றாக அமையும். அமைந்துள்ளது.

Link to comment
Share on other sites

துளசி இந்த வலி எல்லோருக்கும் ஏற்படுவதில்லை அத்தோடு வலிக்காதவர்கள் எல்லோரும் வைன் அருந்துவதில்லை. உங்களுடைய விட்டுக் கொடுக்காமல் ஆடும் வாதாட்டத்தை மிகவும் இரசிக்கிறேன். சில சமயங்களில் உங்களுடைய குழந்தைத்தனம் அதிகமாக வெளிப்படுகிறது. கவனத்தில் கொள்க.

இல்லை. வலி ஏற்படுவோரை பற்றி தான் கருத்து எழுதியிருக்கிறேன். :D

அத்துடன் வைன் குடிக்கும் வெள்ளைக்காரிகளை பற்றி மட்டும் தான் எழுதியிருக்கிறேன். எம்மவர்களை எழுதவில்லை. :D

இப்பவும் குழந்தைப்பிள்ளை மாதிரி இருக்கா.... :D:):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்கு இது ஆச்சரியமான விடயமாக தெரியவில்லை. பிள்ளைப் பாசத்துக்கும், துணையுடனான அன்புக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள். மனைவி மீது வைப்பது அன்பு , பிள்ளைகள் மீது வைப்பது பாசம். பாசம் என்றுமே வலிமை கூடியது.

பொதுவாக மனைவிகள் கூட கணவனுக்கு ஒரு வலி வரும் போது துடிப்பதை விட பிள்ளைக்கு வரும் போது மிகவும் துடிப்பார்கள். வாழ்வில் எமக்கு இருக்கும் அனுபவங்களினூடாக வலியை பழகியிருப்போம் என்ற நம்பிக்கைதான் கரிசனை காட்டுவதில் வேறுபாடுகளை உருவாக்கின்றது.

கிட்டத்தட்ட

உங்கள் நிலையே எனதும்.

ஆனால் அவர் சொன்னது உண்மை. அதுவே சுட்டது.

அது எனக்கு என் மாமனாரை ஞாபகப்படுத்தியது. இன்னொருவரின் பிள்ளையை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற பரிதவிப்பு எனக்கு. என் பிள்ளை என் பிள்ளை என்பது இன்னொருவரை காயப்படுத்துவது புரிந்தது.

நீங்கள் அடுத்த வீட்டுப்பிள்ளைக்கு இனிப்புக்கொடுத்தநிலைதான் இதுவும்.

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்பிள்ளை என்றால் என்ற தலைப்பிற்குள் விசுகு அண்ணா என்னதான் எழுதியிருக்கிறார் என்று வந்து எட்டிப்பார்த்தேன். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள் அனுபவமும் வயதும் இவற்றை பொதுத்தளத்தில் எழுதும் பக்குவத்தைத் தந்திருக்கிறது. நன்றியுடன் மனந்திறந்து எழுதியதற்குப் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்

உங்களைப்போன்றோர் இருக்கும் பொதுத்தளத்தில் எழுத எனக்கென்ன அச்சம்?

தங்களது நன்றியும் பாராட்டும் பெரும் வெகுமதி எனக்கும் இந்த திரிக்கும்.

நன்றி சகோதரி.

எதைச்செய்தாலும் நாலு பேர் நன்மையடையக்கடவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரிகளுக்கு பெரிதாக வலிப்பதில்லை. காரணம் அவர்கள் குறிப்பிட்ட வயதிலிருந்து தொடர்ச்சியாக வைன் குடித்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு வலிக்காது அல்லது வலி தெரியாது...

வெள்ளை காரிகளுக்கு வலியில்லாததன் காரணம் வைன் இல்லை.

அவர்கள் சிறு வயதில் இருந்தே கற்பத்தடை மருந்துகளை பாவிக்கிறார்கள்.

வாயிற்று வலி என்று இவர்கள் மருத்துவரை நாடியதும் அவர்கள் கருத்தடை மாத்திரைகளையே பரிந்துரைக்கிறார்கள். அவை பின்பு பக்க விளைவுகளை கொடுக்கலாம். கருத்தடை மாத்திரைகளை பாவித்தால் வயிற்றுவலி இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு அண்ணா, அன்பு உணர்வுகளுக்குள் பாகுபாடு கூடாது என்பதற்கான இன்னுமொரு அனுபவபகிர்வு.

இன்றைக்காவது நாங்கள் திருந்த ஒரு பதிவை தந்தமைக்கு மீண்டும் நன்றிகள்.

உங்கள் இந்த பதிவிற்கு பிறகு அவளுக்கு வலிக்கும் நாட்கள் இனி எங்களுக்கும் வலிக்கும் (மனசில்).

நன்றி தம்பி பகலவன்

இதை எழுதியதன் வெற்றி இந்த வரிகள்.

நாங்கள் எவரும் கெட்டவர்கள் கிடையாது. ரொம்ப நல்லவர்கள்.

சந்தோசமாக

அன்பாக

பண்பாக

ஆசையாக

குடும்பம் நடாத்தும் ......

எம்மைப்போன்று கணவன்மார் கூட அறியாமல் செய்யும் பிழையையே இங்கு கொண்டு வந்தேன்.

நன்றி கருத்துக்கும் நேரத்திற்கும் உறுதிக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.